புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழக்கொழிந்துவிடுமோ நம் நற்றாய்மொழி?
Page 1 of 1 •
தாய்மொழி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் பெற்று வளர்த்த தாய்க்கு இணையானது. அது ஓர் இனத்தின் அடையாளம்; ஒரு தேசத்தின் நாகரிகக் குறியீடு; மக்களின் அறிவுசார்ந்த ஓர் ஒப்பற்ற போர்க்கருவி; மக்களை ஒருங்கிணைத்துப் பாதுகாக்கும் கவசம்; இதனால்தான் "தாய்மொழி தினம்' உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் பல்லாயிரம் மொழிகள் பயன்படுத்தப்பட்டாலும் உயர்தனிச் செம்மொழிகள் மிகச்சிலவே; கால்டுவெல் போன்ற மேல்நாட்டு மொழியியல் அறிஞர்கள் இலக்கண, இலக்கியங்களை ஆய்ந்து பார்த்து தமிழையும் "உயர்தனிச் செம்மொழி' என்று அறிவித்தனர்; பரிதிமாற் கலைஞர் முதலிய தமிழறிஞர்களும், தமிழ்ச்சங்கங்களும் இடைவிடாமல் பரப்புரையும், தீர்மானங்களும் நிறைவேற்றின. இப்போது இந்திய அரசும் தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டுவிட்டது.
செம்மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழிகளில் சீனமும், தமிழும்தான் இப்போதும் மக்களிடம் வழங்கிக் கொண்டிருக்கின்றன. "அறிவியல் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாத பல மொழிகள் நாள்தோறும் மறைந்து கொண்டிருக்கின்றன' என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ எச்சரிக்கை செய்துள்ளது. "அதில் தமிழ் மொழியும் ஒன்றாகிவிடக் கூடாது' என்பதில் தமிழ் கூறு நல்லுலகம் கவலை கொண்டுள்ளது.
""மெல்லத் தமிழ்இனிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்''
என்றந்த பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசைஎனக் கெய்திட லாமோ?
என்று பாரதி, "தமிழ்த் தாய்' குரலில் பாடினார்.
அன்று ஒரு பேதை உரைத்தது கேட்டு பாரதி ஆத்திரம் கொண்டார். "இன்று அது உண்மையாகிவிடக் கூடாது' என்று அக்கறையோடு உரைப்பவர்களையும் உழைப்பவர்களையும் பாராட்ட வேண்டும். உலகத் தமிழ் அமைப்புகளை ஒன்று கூட்டி, தமிழ் வளர்க்கும் பெரியோர்களை ஊக்குவிக்க வேண்டும்.
உலகம் முழுவதும் பல்லாயிரம் மொழிகள் பயன்படுத்தப்பட்டாலும் உயர்தனிச் செம்மொழிகள் மிகச்சிலவே; கால்டுவெல் போன்ற மேல்நாட்டு மொழியியல் அறிஞர்கள் இலக்கண, இலக்கியங்களை ஆய்ந்து பார்த்து தமிழையும் "உயர்தனிச் செம்மொழி' என்று அறிவித்தனர்; பரிதிமாற் கலைஞர் முதலிய தமிழறிஞர்களும், தமிழ்ச்சங்கங்களும் இடைவிடாமல் பரப்புரையும், தீர்மானங்களும் நிறைவேற்றின. இப்போது இந்திய அரசும் தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டுவிட்டது.
செம்மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழிகளில் சீனமும், தமிழும்தான் இப்போதும் மக்களிடம் வழங்கிக் கொண்டிருக்கின்றன. "அறிவியல் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாத பல மொழிகள் நாள்தோறும் மறைந்து கொண்டிருக்கின்றன' என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ எச்சரிக்கை செய்துள்ளது. "அதில் தமிழ் மொழியும் ஒன்றாகிவிடக் கூடாது' என்பதில் தமிழ் கூறு நல்லுலகம் கவலை கொண்டுள்ளது.
""மெல்லத் தமிழ்இனிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்''
என்றந்த பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசைஎனக் கெய்திட லாமோ?
என்று பாரதி, "தமிழ்த் தாய்' குரலில் பாடினார்.
அன்று ஒரு பேதை உரைத்தது கேட்டு பாரதி ஆத்திரம் கொண்டார். "இன்று அது உண்மையாகிவிடக் கூடாது' என்று அக்கறையோடு உரைப்பவர்களையும் உழைப்பவர்களையும் பாராட்ட வேண்டும். உலகத் தமிழ் அமைப்புகளை ஒன்று கூட்டி, தமிழ் வளர்க்கும் பெரியோர்களை ஊக்குவிக்க வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
தமிழ்நாடு அரசு "தமிழ்' தொடர்பாக இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த இரண்டு அறிவிப்புகளுமே இப்போது பரபரப்புக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்கின்றன. தமிழ் ஆர்வலர்கள் இடையே இருவித மனநிலையை உருவாக்கியுள்ளன.
தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப்பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் ஊராட்சி ஒன்றிய, தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 1, 6-ஆம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழிப்பிரிவுகள் வீதம் மொத்தம் 640 பிரிவுகள் தொடங்க அரசு அனுமதியளித்தது.
மொத்தம் 320 பள்ளிகளில் இந்தப் பிரிவுகள் தொடங்கப்பட்டு 22 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றபோது, இந்த விவாதத்துக்குப் பதிலளிக்கும்போது அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது கடந்த மே 10 அன்று வெளியிடப்பட்டது.
அண்மைக்காலமாகக் கல்வி வணிகமயமாகிவிட்டது. இந்த நிலையில் தனியார் மெட்ரிகுலேஷன் என்னும் ஆங்கில வழிப் பள்ளிகள் புற்றீசல்கள்போல புறப்பட்டுவிட்டன. அப்போதும் அரசுப் பள்ளிகள் மட்டுமே அன்று முதல் இன்றுவரை ஆரவாரமின்றி அமைதியாக தமிழ் வழியில் நடத்தி தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன.
இன்று மேல்நிலையில் இருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் / அறிவியல் மேதை அப்துல் கலாம் முதல், பல்கலைக்கழக வேந்தர்கள் வரை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள். இதை அவர்களே வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழை வளர்க்க வேண்டிய தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தைக் கொண்டு வருவதன் மூலம் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்ற எண்ணமே தமிழ் ஆர்வலர் இடையே ஏற்பட்டுள்ளது. இது தமிழுக்குள்ள கொஞ்சநஞ்ச இடத்தையும் பறித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். தமிழுக்கு மறுபடியும் ஒரு தடங்கல் ஏற்படுவதை மாநில அரசு அனுமதிக்கவே கூடாது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கில மொழியைப் புகுத்துவதன் மூலமே இந்தியர்களை அடிமைகளாக்க முடியும் என்று அவர்கள் திட்டமிட்டனர். மெக்காலே அந்தக் கல்வித் திட்டத்தை முன்மொழிந்தார். அதை அக்கால விடுதலைப் போராட்ட வீரர்கள் கடுமையாக எதிர்த்தனர். "பள்ளிகளில் தாய்மொழியிலேயே கல்வி கற்றுத்தரல் வேண்டும்' என்ற கருத்தை விடுதலை வீரர் சத்தியமூர்த்தி 1920-ஆம் ஆண்டிலேயே வலியுறுத்திப் பேசியுள்ளார்.
"மெக்காலே' போட்ட திட்டமே இறுதியில் வெற்றிபெற்றது. அக்காலத்தில் ஆங்கிலம் படித்த பலர் உடல் நிறத்தால் கறுப்பராகவும், உள்ளத்தின் நிறத்தால் வெள்ளையராகவும் மாறிப் போனார்கள். விடுதலை பெற்ற பின்னரும் அந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிமொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்றுவரை அரசுப் பொறுப்புகளில் தமிழ்மொழி அமரவும் இல்லை; ஆட்சி செய்யவும் இல்லை. "ஓரடி முன்னால் ஈரடி பின்னால்' என்பதுதான் இதுவரை இருந்துவரும் நிலை; மற்ற இடங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
""தமிழன் காது தோல் காது இல்லை; இரும்புக் காது. எனவேதான் பிறமொழி இசையை இன்னும் இங்கே கேட்டுக் கொண்டிருக்கிறான்...'' என்று பாரதி மனம் வெதும்பிக் குமுறிய அவல நிலை இன்னும் இங்கே மாறவில்லை.
""மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை?
தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை'' என்று பாரதிதாசன் புலம்பிய நிலை இன்னும் போகவில்லை.
ஆலயங்களில், "இங்கு தமிழிலும் அருச்சனை செய்யப்படும்' என்ற பெயர்ப்பலகைகள் மட்டுமே ஒட்டடை படிந்து, தூசியோடு காணப்படுகின்றன. செயல்பாடுகள் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. இவற்றை மாற்றியமைக்க ஆன்மிக தமிழ் இயக்கங்கள் எடுத்த நடவடிக்கைகளும் தீவிரமாக இல்லை.
இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழ் இருக்கும் நிலையில் தமிழக அரசின் மற்றுமொரு அறிவிப்புதான், மதுரையில் ரூ. 100 கோடி செலவில் தமிழ்த்தாய் சிலை வைக்கப்படும் என்பதாகும். ஒரு பக்கம் தமிழ் இருந்த இடத்தில் ஆங்கிலத்தை அமர்த்திவிட்டு, மறுபக்கம் தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பது என்பது தமிழ் ஆர்வலர்களுக்கு நெருடலாகவே இருக்கிறது.
அமெரிக்க நாட்டின் பெருமையையும், புகழையும் உலக அளவில் பரப்பும் வகையில், சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது. அதேபோன்று தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத்திறன் ஆகியவற்றை உலகுக்குக் காட்டும் வகையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும்.
மேலும் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த்தாய் பூங்கா உருவாக்கப்படும்.
இத்துடன் அயல்நாட்டுத் தமிழறிஞரான ஜி.யு. போப், இஸ்லாமியப் பெரும்புலவர் உமறுப்புலவர் மற்றும் கணினித் தமிழ் விருது எனப் புதிய விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அத்துடன் திருப்பதி திருவேங்கடன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட தமிழ்த்துறை பொன்விழா காண்பதை முன்னிட்டு மூன்று உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படுவதையும், தில்லி தமிழ்ச்சங்க கோரிக்கையை ஏற்று தோரணவாயில் கட்டுவதற்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படுவதையும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியத்தின் பெயரால் ஆய்விருக்கை ஏற்படுத்திட ரூ. 50 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்படும் என்ற அறிவிப்புகளை தமிழ் அமைப்புகள் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.
இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைக்க வேண்டுமானால் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ள ஆங்கில வழி அறிவிப்பினை அகற்றி, எப்போதும்போல தமிழ் வழியில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
உயர்நிலைக் கல்வி என்பது இன்று ஏழை நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. யாரோ சிலருக்காக எல்லோரும் இந்த ஆங்கிலத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டுமா? அதை ஒரு பாடமாகப் படிக்கட்டும்.
தமிழ்நாட்டில் சமத்துவ சமுதாயம் அமைவதற்கு உண்மையான சமச்சீர் கல்வியே தேவை என்றும், அந்த உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதே இந்த அரசின் நோக்கம் என்றும் தமிழக முதல்வர் பலமுறை அறிவித்துள்ளார். சிறந்த தனியார் பள்ளிகளைப்போல அரசுப் பள்ளிகளிலும் கட்டமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
எங்கெங்கு தமிழ் வளர்ச்சிக்குத் தடைகள் இருக்கின்றனவோ அவற்றைக் கண்டு களைய வேண்டும். உலகம் எங்கும் பரவியுள்ள தமிழர்களுக்குத் தமிழை எடுத்துச்செல்ல வழிவகை காண வேண்டும். அதற்குமுன் நமது நீதிமன்றங்களில் வழக்கு மொழியாகச் செயல்படுவதற்கு மத்திய அரசு தடையாக இருந்தால் இதுபற்றிக் கடிதம் எழுதி விரைவாக அனுமதி பெற வேண்டும்.
தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் தமிழ் ஆட்சி செலுத்தும்படி சட்டம் இருந்தும் செயல்படவில்லை. அரசுத்துறையில் பணிபுரியும் அனைவரும் தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று அண்ணா முதல்வராக இருந்தபோதே ஆணையிடப்பட்டது; இன்றுவரை இது செயல்படுத்தப்படாததற்குக் காரணம் கேட்க வேண்டாமா?
எச்.ஜி. வெல்ஸ், "நான் எதிர்நோக்குவன' என்ற நூல் எழுதியபோது, பிரெஞ்சு மொழியே உலக மொழியாக விளங்கும் என்று எழுதினார். அவர் காலத்திலேயே அது பொய்யாகி விட்டது. ஐரோப்பிய அரசியலில் பிரெஞ்சுக்காரர் செல்வாக்கு பெறக் கூடும் என்றும், அதன் வாயிலாக உலக அரசியலிலும் செல்வாக்கு பெறக் கூடும் என்றும் அவர் எதிர்பார்த்தார். அதற்கு மாறாக உலகில் பல நாடுகளைக் கட்டியாண்ட ஆங்கிலேயரின் ஆங்கில மொழியே உலக மொழியாக விளங்குகிறது.
எனவே அரசாங்கத்தின் துணையில்லாமல் ஒரு மொழி வாழவும் முடியாது, வளர்ச்சியடையவும் முடியாது; தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய்க்குச் சிலை வைக்கட்டும்; விருதுகள் வழங்கட்டும்; உதவித் தொகைகள் அளிக்கட்டும்; அத்துடன் அரசுப் பள்ளிகளில் தாய்த் தமிழே கல்வி மொழியாகத் தொடரட்டும்.
நன்றி - தினமணி / உதயை மு. வீரையன் - கட்டுரையாளர்: பணி நிறைவுபெற்ற தமிழாசிரியர்.
தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப்பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் ஊராட்சி ஒன்றிய, தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 1, 6-ஆம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழிப்பிரிவுகள் வீதம் மொத்தம் 640 பிரிவுகள் தொடங்க அரசு அனுமதியளித்தது.
மொத்தம் 320 பள்ளிகளில் இந்தப் பிரிவுகள் தொடங்கப்பட்டு 22 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றபோது, இந்த விவாதத்துக்குப் பதிலளிக்கும்போது அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது கடந்த மே 10 அன்று வெளியிடப்பட்டது.
அண்மைக்காலமாகக் கல்வி வணிகமயமாகிவிட்டது. இந்த நிலையில் தனியார் மெட்ரிகுலேஷன் என்னும் ஆங்கில வழிப் பள்ளிகள் புற்றீசல்கள்போல புறப்பட்டுவிட்டன. அப்போதும் அரசுப் பள்ளிகள் மட்டுமே அன்று முதல் இன்றுவரை ஆரவாரமின்றி அமைதியாக தமிழ் வழியில் நடத்தி தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன.
இன்று மேல்நிலையில் இருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் / அறிவியல் மேதை அப்துல் கலாம் முதல், பல்கலைக்கழக வேந்தர்கள் வரை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள். இதை அவர்களே வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழை வளர்க்க வேண்டிய தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தைக் கொண்டு வருவதன் மூலம் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்ற எண்ணமே தமிழ் ஆர்வலர் இடையே ஏற்பட்டுள்ளது. இது தமிழுக்குள்ள கொஞ்சநஞ்ச இடத்தையும் பறித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். தமிழுக்கு மறுபடியும் ஒரு தடங்கல் ஏற்படுவதை மாநில அரசு அனுமதிக்கவே கூடாது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கில மொழியைப் புகுத்துவதன் மூலமே இந்தியர்களை அடிமைகளாக்க முடியும் என்று அவர்கள் திட்டமிட்டனர். மெக்காலே அந்தக் கல்வித் திட்டத்தை முன்மொழிந்தார். அதை அக்கால விடுதலைப் போராட்ட வீரர்கள் கடுமையாக எதிர்த்தனர். "பள்ளிகளில் தாய்மொழியிலேயே கல்வி கற்றுத்தரல் வேண்டும்' என்ற கருத்தை விடுதலை வீரர் சத்தியமூர்த்தி 1920-ஆம் ஆண்டிலேயே வலியுறுத்திப் பேசியுள்ளார்.
"மெக்காலே' போட்ட திட்டமே இறுதியில் வெற்றிபெற்றது. அக்காலத்தில் ஆங்கிலம் படித்த பலர் உடல் நிறத்தால் கறுப்பராகவும், உள்ளத்தின் நிறத்தால் வெள்ளையராகவும் மாறிப் போனார்கள். விடுதலை பெற்ற பின்னரும் அந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிமொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்றுவரை அரசுப் பொறுப்புகளில் தமிழ்மொழி அமரவும் இல்லை; ஆட்சி செய்யவும் இல்லை. "ஓரடி முன்னால் ஈரடி பின்னால்' என்பதுதான் இதுவரை இருந்துவரும் நிலை; மற்ற இடங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
""தமிழன் காது தோல் காது இல்லை; இரும்புக் காது. எனவேதான் பிறமொழி இசையை இன்னும் இங்கே கேட்டுக் கொண்டிருக்கிறான்...'' என்று பாரதி மனம் வெதும்பிக் குமுறிய அவல நிலை இன்னும் இங்கே மாறவில்லை.
""மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை?
தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை'' என்று பாரதிதாசன் புலம்பிய நிலை இன்னும் போகவில்லை.
ஆலயங்களில், "இங்கு தமிழிலும் அருச்சனை செய்யப்படும்' என்ற பெயர்ப்பலகைகள் மட்டுமே ஒட்டடை படிந்து, தூசியோடு காணப்படுகின்றன. செயல்பாடுகள் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. இவற்றை மாற்றியமைக்க ஆன்மிக தமிழ் இயக்கங்கள் எடுத்த நடவடிக்கைகளும் தீவிரமாக இல்லை.
இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழ் இருக்கும் நிலையில் தமிழக அரசின் மற்றுமொரு அறிவிப்புதான், மதுரையில் ரூ. 100 கோடி செலவில் தமிழ்த்தாய் சிலை வைக்கப்படும் என்பதாகும். ஒரு பக்கம் தமிழ் இருந்த இடத்தில் ஆங்கிலத்தை அமர்த்திவிட்டு, மறுபக்கம் தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பது என்பது தமிழ் ஆர்வலர்களுக்கு நெருடலாகவே இருக்கிறது.
அமெரிக்க நாட்டின் பெருமையையும், புகழையும் உலக அளவில் பரப்பும் வகையில், சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது. அதேபோன்று தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத்திறன் ஆகியவற்றை உலகுக்குக் காட்டும் வகையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும்.
மேலும் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த்தாய் பூங்கா உருவாக்கப்படும்.
இத்துடன் அயல்நாட்டுத் தமிழறிஞரான ஜி.யு. போப், இஸ்லாமியப் பெரும்புலவர் உமறுப்புலவர் மற்றும் கணினித் தமிழ் விருது எனப் புதிய விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அத்துடன் திருப்பதி திருவேங்கடன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட தமிழ்த்துறை பொன்விழா காண்பதை முன்னிட்டு மூன்று உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படுவதையும், தில்லி தமிழ்ச்சங்க கோரிக்கையை ஏற்று தோரணவாயில் கட்டுவதற்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படுவதையும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியத்தின் பெயரால் ஆய்விருக்கை ஏற்படுத்திட ரூ. 50 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்படும் என்ற அறிவிப்புகளை தமிழ் அமைப்புகள் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.
இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைக்க வேண்டுமானால் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ள ஆங்கில வழி அறிவிப்பினை அகற்றி, எப்போதும்போல தமிழ் வழியில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
உயர்நிலைக் கல்வி என்பது இன்று ஏழை நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. யாரோ சிலருக்காக எல்லோரும் இந்த ஆங்கிலத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டுமா? அதை ஒரு பாடமாகப் படிக்கட்டும்.
தமிழ்நாட்டில் சமத்துவ சமுதாயம் அமைவதற்கு உண்மையான சமச்சீர் கல்வியே தேவை என்றும், அந்த உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதே இந்த அரசின் நோக்கம் என்றும் தமிழக முதல்வர் பலமுறை அறிவித்துள்ளார். சிறந்த தனியார் பள்ளிகளைப்போல அரசுப் பள்ளிகளிலும் கட்டமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
எங்கெங்கு தமிழ் வளர்ச்சிக்குத் தடைகள் இருக்கின்றனவோ அவற்றைக் கண்டு களைய வேண்டும். உலகம் எங்கும் பரவியுள்ள தமிழர்களுக்குத் தமிழை எடுத்துச்செல்ல வழிவகை காண வேண்டும். அதற்குமுன் நமது நீதிமன்றங்களில் வழக்கு மொழியாகச் செயல்படுவதற்கு மத்திய அரசு தடையாக இருந்தால் இதுபற்றிக் கடிதம் எழுதி விரைவாக அனுமதி பெற வேண்டும்.
தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் தமிழ் ஆட்சி செலுத்தும்படி சட்டம் இருந்தும் செயல்படவில்லை. அரசுத்துறையில் பணிபுரியும் அனைவரும் தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று அண்ணா முதல்வராக இருந்தபோதே ஆணையிடப்பட்டது; இன்றுவரை இது செயல்படுத்தப்படாததற்குக் காரணம் கேட்க வேண்டாமா?
எச்.ஜி. வெல்ஸ், "நான் எதிர்நோக்குவன' என்ற நூல் எழுதியபோது, பிரெஞ்சு மொழியே உலக மொழியாக விளங்கும் என்று எழுதினார். அவர் காலத்திலேயே அது பொய்யாகி விட்டது. ஐரோப்பிய அரசியலில் பிரெஞ்சுக்காரர் செல்வாக்கு பெறக் கூடும் என்றும், அதன் வாயிலாக உலக அரசியலிலும் செல்வாக்கு பெறக் கூடும் என்றும் அவர் எதிர்பார்த்தார். அதற்கு மாறாக உலகில் பல நாடுகளைக் கட்டியாண்ட ஆங்கிலேயரின் ஆங்கில மொழியே உலக மொழியாக விளங்குகிறது.
எனவே அரசாங்கத்தின் துணையில்லாமல் ஒரு மொழி வாழவும் முடியாது, வளர்ச்சியடையவும் முடியாது; தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய்க்குச் சிலை வைக்கட்டும்; விருதுகள் வழங்கட்டும்; உதவித் தொகைகள் அளிக்கட்டும்; அத்துடன் அரசுப் பள்ளிகளில் தாய்த் தமிழே கல்வி மொழியாகத் தொடரட்டும்.
நன்றி - தினமணி / உதயை மு. வீரையன் - கட்டுரையாளர்: பணி நிறைவுபெற்ற தமிழாசிரியர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
தமிழ்நாடு அரசு "தமிழ்' தொடர்பாக இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த இரண்டு அறிவிப்புகளுமே இப்போது பரபரப்புக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்கின்றன. தமிழ் ஆர்வலர்கள் இடையே இருவித மனநிலையை உருவாக்கியுள்ளன.
தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப்பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் ஊராட்சி ஒன்றிய, தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 1, 6-ஆம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழிப்பிரிவுகள் வீதம் மொத்தம் 640 பிரிவுகள் தொடங்க அரசு அனுமதியளித்தது.
மொத்தம் 320 பள்ளிகளில் இந்தப் பிரிவுகள் தொடங்கப்பட்டு 22 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றபோது, இந்த விவாதத்துக்குப் பதிலளிக்கும்போது அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது கடந்த மே 10 அன்று வெளியிடப்பட்டது.
அண்மைக்காலமாகக் கல்வி வணிகமயமாகிவிட்டது. இந்த நிலையில் தனியார் மெட்ரிகுலேஷன் என்னும் ஆங்கில வழிப் பள்ளிகள் புற்றீசல்கள்போல புறப்பட்டுவிட்டன. அப்போதும் அரசுப் பள்ளிகள் மட்டுமே அன்று முதல் இன்றுவரை ஆரவாரமின்றி அமைதியாக தமிழ் வழியில் நடத்தி தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன.
இன்று மேல்நிலையில் இருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் / அறிவியல் மேதை அப்துல் கலாம் முதல், பல்கலைக்கழக வேந்தர்கள் வரை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள். இதை அவர்களே வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழை வளர்க்க வேண்டிய தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தைக் கொண்டு வருவதன் மூலம் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்ற எண்ணமே தமிழ் ஆர்வலர் இடையே ஏற்பட்டுள்ளது. இது தமிழுக்குள்ள கொஞ்சநஞ்ச இடத்தையும் பறித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். தமிழுக்கு மறுபடியும் ஒரு தடங்கல் ஏற்படுவதை மாநில அரசு அனுமதிக்கவே கூடாது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கில மொழியைப் புகுத்துவதன் மூலமே இந்தியர்களை அடிமைகளாக்க முடியும் என்று அவர்கள் திட்டமிட்டனர். மெக்காலே அந்தக் கல்வித் திட்டத்தை முன்மொழிந்தார். அதை அக்கால விடுதலைப் போராட்ட வீரர்கள் கடுமையாக எதிர்த்தனர். "பள்ளிகளில் தாய்மொழியிலேயே கல்வி கற்றுத்தரல் வேண்டும்' என்ற கருத்தை விடுதலை வீரர் சத்தியமூர்த்தி 1920-ஆம் ஆண்டிலேயே வலியுறுத்திப் பேசியுள்ளார்.
"மெக்காலே' போட்ட திட்டமே இறுதியில் வெற்றிபெற்றது. அக்காலத்தில் ஆங்கிலம் படித்த பலர் உடல் நிறத்தால் கறுப்பராகவும், உள்ளத்தின் நிறத்தால் வெள்ளையராகவும் மாறிப் போனார்கள். விடுதலை பெற்ற பின்னரும் அந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிமொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்றுவரை அரசுப் பொறுப்புகளில் தமிழ்மொழி அமரவும் இல்லை; ஆட்சி செய்யவும் இல்லை. "ஓரடி முன்னால் ஈரடி பின்னால்' என்பதுதான் இதுவரை இருந்துவரும் நிலை; மற்ற இடங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
""தமிழன் காது தோல் காது இல்லை; இரும்புக் காது. எனவேதான் பிறமொழி இசையை இன்னும் இங்கே கேட்டுக் கொண்டிருக்கிறான்...'' என்று பாரதி மனம் வெதும்பிக் குமுறிய அவல நிலை இன்னும் இங்கே மாறவில்லை.
""மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை?
தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை'' என்று பாரதிதாசன் புலம்பிய நிலை இன்னும் போகவில்லை.
ஆலயங்களில், "இங்கு தமிழிலும் அருச்சனை செய்யப்படும்' என்ற பெயர்ப்பலகைகள் மட்டுமே ஒட்டடை படிந்து, தூசியோடு காணப்படுகின்றன. செயல்பாடுகள் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. இவற்றை மாற்றியமைக்க ஆன்மிக தமிழ் இயக்கங்கள் எடுத்த நடவடிக்கைகளும் தீவிரமாக இல்லை.
இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழ் இருக்கும் நிலையில் தமிழக அரசின் மற்றுமொரு அறிவிப்புதான், மதுரையில் ரூ. 100 கோடி செலவில் தமிழ்த்தாய் சிலை வைக்கப்படும் என்பதாகும். ஒரு பக்கம் தமிழ் இருந்த இடத்தில் ஆங்கிலத்தை அமர்த்திவிட்டு, மறுபக்கம் தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பது என்பது தமிழ் ஆர்வலர்களுக்கு நெருடலாகவே இருக்கிறது.
அமெரிக்க நாட்டின் பெருமையையும், புகழையும் உலக அளவில் பரப்பும் வகையில், சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது. அதேபோன்று தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத்திறன் ஆகியவற்றை உலகுக்குக் காட்டும் வகையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும்.
மேலும் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த்தாய் பூங்கா உருவாக்கப்படும்.
இத்துடன் அயல்நாட்டுத் தமிழறிஞரான ஜி.யு. போப், இஸ்லாமியப் பெரும்புலவர் உமறுப்புலவர் மற்றும் கணினித் தமிழ் விருது எனப் புதிய விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அத்துடன் திருப்பதி திருவேங்கடன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட தமிழ்த்துறை பொன்விழா காண்பதை முன்னிட்டு மூன்று உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படுவதையும், தில்லி தமிழ்ச்சங்க கோரிக்கையை ஏற்று தோரணவாயில் கட்டுவதற்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படுவதையும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியத்தின் பெயரால் ஆய்விருக்கை ஏற்படுத்திட ரூ. 50 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்படும் என்ற அறிவிப்புகளை தமிழ் அமைப்புகள் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.
இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைக்க வேண்டுமானால் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ள ஆங்கில வழி அறிவிப்பினை அகற்றி, எப்போதும்போல தமிழ் வழியில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
உயர்நிலைக் கல்வி என்பது இன்று ஏழை நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. யாரோ சிலருக்காக எல்லோரும் இந்த ஆங்கிலத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டுமா? அதை ஒரு பாடமாகப் படிக்கட்டும்.
தமிழ்நாட்டில் சமத்துவ சமுதாயம் அமைவதற்கு உண்மையான சமச்சீர் கல்வியே தேவை என்றும், அந்த உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதே இந்த அரசின் நோக்கம் என்றும் தமிழக முதல்வர் பலமுறை அறிவித்துள்ளார். சிறந்த தனியார் பள்ளிகளைப்போல அரசுப் பள்ளிகளிலும் கட்டமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
எங்கெங்கு தமிழ் வளர்ச்சிக்குத் தடைகள் இருக்கின்றனவோ அவற்றைக் கண்டு களைய வேண்டும். உலகம் எங்கும் பரவியுள்ள தமிழர்களுக்குத் தமிழை எடுத்துச்செல்ல வழிவகை காண வேண்டும். அதற்குமுன் நமது நீதிமன்றங்களில் வழக்கு மொழியாகச் செயல்படுவதற்கு மத்திய அரசு தடையாக இருந்தால் இதுபற்றிக் கடிதம் எழுதி விரைவாக அனுமதி பெற வேண்டும்.
தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் தமிழ் ஆட்சி செலுத்தும்படி சட்டம் இருந்தும் செயல்படவில்லை. அரசுத்துறையில் பணிபுரியும் அனைவரும் தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று அண்ணா முதல்வராக இருந்தபோதே ஆணையிடப்பட்டது; இன்றுவரை இது செயல்படுத்தப்படாததற்குக் காரணம் கேட்க வேண்டாமா?
எச்.ஜி. வெல்ஸ், "நான் எதிர்நோக்குவன' என்ற நூல் எழுதியபோது, பிரெஞ்சு மொழியே உலக மொழியாக விளங்கும் என்று எழுதினார். அவர் காலத்திலேயே அது பொய்யாகி விட்டது. ஐரோப்பிய அரசியலில் பிரெஞ்சுக்காரர் செல்வாக்கு பெறக் கூடும் என்றும், அதன் வாயிலாக உலக அரசியலிலும் செல்வாக்கு பெறக் கூடும் என்றும் அவர் எதிர்பார்த்தார். அதற்கு மாறாக உலகில் பல நாடுகளைக் கட்டியாண்ட ஆங்கிலேயரின் ஆங்கில மொழியே உலக மொழியாக விளங்குகிறது.
எனவே அரசாங்கத்தின் துணையில்லாமல் ஒரு மொழி வாழவும் முடியாது, வளர்ச்சியடையவும் முடியாது; தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய்க்குச் சிலை வைக்கட்டும்; விருதுகள் வழங்கட்டும்; உதவித் தொகைகள் அளிக்கட்டும்; அத்துடன் அரசுப் பள்ளிகளில் தாய்த் தமிழே கல்வி மொழியாகத் தொடரட்டும்.
கட்டுரையாளர்:
பணி நிறைவுபெற்ற தமிழாசிரியர்.
தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப்பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் ஊராட்சி ஒன்றிய, தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 1, 6-ஆம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழிப்பிரிவுகள் வீதம் மொத்தம் 640 பிரிவுகள் தொடங்க அரசு அனுமதியளித்தது.
மொத்தம் 320 பள்ளிகளில் இந்தப் பிரிவுகள் தொடங்கப்பட்டு 22 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றபோது, இந்த விவாதத்துக்குப் பதிலளிக்கும்போது அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது கடந்த மே 10 அன்று வெளியிடப்பட்டது.
அண்மைக்காலமாகக் கல்வி வணிகமயமாகிவிட்டது. இந்த நிலையில் தனியார் மெட்ரிகுலேஷன் என்னும் ஆங்கில வழிப் பள்ளிகள் புற்றீசல்கள்போல புறப்பட்டுவிட்டன. அப்போதும் அரசுப் பள்ளிகள் மட்டுமே அன்று முதல் இன்றுவரை ஆரவாரமின்றி அமைதியாக தமிழ் வழியில் நடத்தி தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன.
இன்று மேல்நிலையில் இருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் / அறிவியல் மேதை அப்துல் கலாம் முதல், பல்கலைக்கழக வேந்தர்கள் வரை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள். இதை அவர்களே வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழை வளர்க்க வேண்டிய தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தைக் கொண்டு வருவதன் மூலம் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்ற எண்ணமே தமிழ் ஆர்வலர் இடையே ஏற்பட்டுள்ளது. இது தமிழுக்குள்ள கொஞ்சநஞ்ச இடத்தையும் பறித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். தமிழுக்கு மறுபடியும் ஒரு தடங்கல் ஏற்படுவதை மாநில அரசு அனுமதிக்கவே கூடாது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கில மொழியைப் புகுத்துவதன் மூலமே இந்தியர்களை அடிமைகளாக்க முடியும் என்று அவர்கள் திட்டமிட்டனர். மெக்காலே அந்தக் கல்வித் திட்டத்தை முன்மொழிந்தார். அதை அக்கால விடுதலைப் போராட்ட வீரர்கள் கடுமையாக எதிர்த்தனர். "பள்ளிகளில் தாய்மொழியிலேயே கல்வி கற்றுத்தரல் வேண்டும்' என்ற கருத்தை விடுதலை வீரர் சத்தியமூர்த்தி 1920-ஆம் ஆண்டிலேயே வலியுறுத்திப் பேசியுள்ளார்.
"மெக்காலே' போட்ட திட்டமே இறுதியில் வெற்றிபெற்றது. அக்காலத்தில் ஆங்கிலம் படித்த பலர் உடல் நிறத்தால் கறுப்பராகவும், உள்ளத்தின் நிறத்தால் வெள்ளையராகவும் மாறிப் போனார்கள். விடுதலை பெற்ற பின்னரும் அந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிமொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்றுவரை அரசுப் பொறுப்புகளில் தமிழ்மொழி அமரவும் இல்லை; ஆட்சி செய்யவும் இல்லை. "ஓரடி முன்னால் ஈரடி பின்னால்' என்பதுதான் இதுவரை இருந்துவரும் நிலை; மற்ற இடங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
""தமிழன் காது தோல் காது இல்லை; இரும்புக் காது. எனவேதான் பிறமொழி இசையை இன்னும் இங்கே கேட்டுக் கொண்டிருக்கிறான்...'' என்று பாரதி மனம் வெதும்பிக் குமுறிய அவல நிலை இன்னும் இங்கே மாறவில்லை.
""மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை?
தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை'' என்று பாரதிதாசன் புலம்பிய நிலை இன்னும் போகவில்லை.
ஆலயங்களில், "இங்கு தமிழிலும் அருச்சனை செய்யப்படும்' என்ற பெயர்ப்பலகைகள் மட்டுமே ஒட்டடை படிந்து, தூசியோடு காணப்படுகின்றன. செயல்பாடுகள் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. இவற்றை மாற்றியமைக்க ஆன்மிக தமிழ் இயக்கங்கள் எடுத்த நடவடிக்கைகளும் தீவிரமாக இல்லை.
இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழ் இருக்கும் நிலையில் தமிழக அரசின் மற்றுமொரு அறிவிப்புதான், மதுரையில் ரூ. 100 கோடி செலவில் தமிழ்த்தாய் சிலை வைக்கப்படும் என்பதாகும். ஒரு பக்கம் தமிழ் இருந்த இடத்தில் ஆங்கிலத்தை அமர்த்திவிட்டு, மறுபக்கம் தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பது என்பது தமிழ் ஆர்வலர்களுக்கு நெருடலாகவே இருக்கிறது.
அமெரிக்க நாட்டின் பெருமையையும், புகழையும் உலக அளவில் பரப்பும் வகையில், சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது. அதேபோன்று தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத்திறன் ஆகியவற்றை உலகுக்குக் காட்டும் வகையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும்.
மேலும் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த்தாய் பூங்கா உருவாக்கப்படும்.
இத்துடன் அயல்நாட்டுத் தமிழறிஞரான ஜி.யு. போப், இஸ்லாமியப் பெரும்புலவர் உமறுப்புலவர் மற்றும் கணினித் தமிழ் விருது எனப் புதிய விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அத்துடன் திருப்பதி திருவேங்கடன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட தமிழ்த்துறை பொன்விழா காண்பதை முன்னிட்டு மூன்று உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படுவதையும், தில்லி தமிழ்ச்சங்க கோரிக்கையை ஏற்று தோரணவாயில் கட்டுவதற்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படுவதையும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியத்தின் பெயரால் ஆய்விருக்கை ஏற்படுத்திட ரூ. 50 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்படும் என்ற அறிவிப்புகளை தமிழ் அமைப்புகள் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.
இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைக்க வேண்டுமானால் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ள ஆங்கில வழி அறிவிப்பினை அகற்றி, எப்போதும்போல தமிழ் வழியில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
உயர்நிலைக் கல்வி என்பது இன்று ஏழை நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. யாரோ சிலருக்காக எல்லோரும் இந்த ஆங்கிலத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டுமா? அதை ஒரு பாடமாகப் படிக்கட்டும்.
தமிழ்நாட்டில் சமத்துவ சமுதாயம் அமைவதற்கு உண்மையான சமச்சீர் கல்வியே தேவை என்றும், அந்த உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதே இந்த அரசின் நோக்கம் என்றும் தமிழக முதல்வர் பலமுறை அறிவித்துள்ளார். சிறந்த தனியார் பள்ளிகளைப்போல அரசுப் பள்ளிகளிலும் கட்டமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
எங்கெங்கு தமிழ் வளர்ச்சிக்குத் தடைகள் இருக்கின்றனவோ அவற்றைக் கண்டு களைய வேண்டும். உலகம் எங்கும் பரவியுள்ள தமிழர்களுக்குத் தமிழை எடுத்துச்செல்ல வழிவகை காண வேண்டும். அதற்குமுன் நமது நீதிமன்றங்களில் வழக்கு மொழியாகச் செயல்படுவதற்கு மத்திய அரசு தடையாக இருந்தால் இதுபற்றிக் கடிதம் எழுதி விரைவாக அனுமதி பெற வேண்டும்.
தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் தமிழ் ஆட்சி செலுத்தும்படி சட்டம் இருந்தும் செயல்படவில்லை. அரசுத்துறையில் பணிபுரியும் அனைவரும் தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று அண்ணா முதல்வராக இருந்தபோதே ஆணையிடப்பட்டது; இன்றுவரை இது செயல்படுத்தப்படாததற்குக் காரணம் கேட்க வேண்டாமா?
எச்.ஜி. வெல்ஸ், "நான் எதிர்நோக்குவன' என்ற நூல் எழுதியபோது, பிரெஞ்சு மொழியே உலக மொழியாக விளங்கும் என்று எழுதினார். அவர் காலத்திலேயே அது பொய்யாகி விட்டது. ஐரோப்பிய அரசியலில் பிரெஞ்சுக்காரர் செல்வாக்கு பெறக் கூடும் என்றும், அதன் வாயிலாக உலக அரசியலிலும் செல்வாக்கு பெறக் கூடும் என்றும் அவர் எதிர்பார்த்தார். அதற்கு மாறாக உலகில் பல நாடுகளைக் கட்டியாண்ட ஆங்கிலேயரின் ஆங்கில மொழியே உலக மொழியாக விளங்குகிறது.
எனவே அரசாங்கத்தின் துணையில்லாமல் ஒரு மொழி வாழவும் முடியாது, வளர்ச்சியடையவும் முடியாது; தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய்க்குச் சிலை வைக்கட்டும்; விருதுகள் வழங்கட்டும்; உதவித் தொகைகள் அளிக்கட்டும்; அத்துடன் அரசுப் பள்ளிகளில் தாய்த் தமிழே கல்வி மொழியாகத் தொடரட்டும்.
கட்டுரையாளர்:
பணி நிறைவுபெற்ற தமிழாசிரியர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|