புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிவின் தகவலும், வல்லுனர்கலின் எச்சரிக்கையும்....
Page 1 of 1 •
எலும்புறுக்கி நோயை உருவாக்கும் விட்டமின்-டி குறைபாடு!
ஆரோக்கியமாக உள்ள பெரும்பாலான குழந்தைகளும், இளைஞர்களும் விட்டமின்-டி குறைபாடுடன் இருப்பதாகவும், விட்டமின்-டி ரிக்கட்ஸ் போன்ற எலும்பு நோய்கள் தாக்காதவண்ணம் நம்மைப் பாதுகாக்கின்றன. எனவே விட்டமின்-டி தேவை இன்றியமையாதது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பிலடெல்ஃபியா மாகாணத்தைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் பாபிட்டி ஜமீல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் 6 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 382 ஆரோக்கியமான குழந்தைகளை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு விட்டமின்-டி குறைவாக இருப்பது தெரிய வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் சாப்பிடும் உணவு உள்ளிட்ட சாப்பாட்டு வகைகளில் இருந்து பெறப்படும் விட்டமின்-டி யின் அளவு, உடல் எடை ஆகியவற்றை சோதனை செய்துள்ளனர்.
இதில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளின் இரத்தத்தில் உள்ள விட்டமின்-டி அளவானது குறைந்து காணப்பட்டதாகவும், அதாவது 55 விழுக்காடு குழந்தைகளின் இரத்தத்தில் விட்டமின்-டி அளவு குறைந்து இருந்ததாகவும், ஒட்டு மொத்தத்தில் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 68 விழுக்காடு குழந்தைகள், இளைஞர்களின் இரத்தத்தில் உள்ள விட்டமின்-டியின் அளவு குளிர் காலங்களில் மிகக் குறைவாக இருப்பது தெரியவந்ததாக ஜமீல் தெரிவித்துள்ளார்.
விட்டமின்-டி நிலையைத் தெரிந்து கொள்வதற்கு சிறந்த வழி ஒருவரின் இரத்தத்தில் உள்ள விட்டமின்-டி மூலக்கூறில் ஒன்றான 25- ஹைட்ராக்ஸி விட்டமின்-டி அளவு மூலம் தெரிந்து கொள்ளவதுதான் எளிது.
மொத்தத்தில் விட்டமின்-டி குறைபாடுகளுக்கு மருத்துவ சிகிச்சை முறைகளில் அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றுகூறியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த குறைபாடு எந்த வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து இன்றும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்றும் பாபிட்டி ஜமீல் தெரிவித்துள்ளார். எலும்புக் கூட்டின் தசை நார் ஆரோக்கியத்திற்கு விட்டமின்-டி யின் பங்குபணி இன்றியமையாதது.
நமது உடலுக்குத் தேவையான விட்டமின்-டி பால் மூலம் கிடைக்கிறது. ஆனால் விட்டமின்-டியை அதிகரிக்க மிகச் சிறந்த வழி நமது உடலில் சூரிய ஒளி அதிக அளவில் படும்படி பார்த்துக் கொள்வது மூலம்தான் என்று தெரிவித்துள்ளனர்.
கடுமையான விட்டமின்-டி பற்றாக்குறை தசைகளை வலுவிலக்கச் செய்வதுடன், எலும்புகளின் தாதுக்களை பாதிப்படையச் செய்வதுடன் எலும்பு நோய்களை உருவாக்குகினறன. இதனைத் தவிர நோய் எதிர்ப்பு நடைமுறைகளிலும் இவை முக்கிய பணியாற்றுகின்றன.
இரத்தத்தில் விட்டமின் அளவு குறைந்தால் அது இரத்த அழுத்தம், புற்றுநோய், பன்முக அணும உள்ளரிக் காழ்ப்பு (Multiple selorisis), முதல் வகை சர்க்கரை நோய் முதலிய நோய்கள் வர காரணமாக அமைந்துவிடும். இரத்தத்தில் உள்ள விட்டமின்-டி அளவுக் குறைபாட்டிற்கும், தொப்பைக்கும் தொடர்பு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் தேவையென்றும், குழந்தைகளுக்கு இரத்தத்தில் உள்ள விட்டமின்-டி அளவு எந்த அளவு இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், விட்டமின் உட்கொள்ளும் தற்போதைய பரிந்துறையை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்றும் ஜமீல் வலியுறுத்தியுள்ளார்.
ஆரோக்கியமாக உள்ள பெரும்பாலான குழந்தைகளும், இளைஞர்களும் விட்டமின்-டி குறைபாடுடன் இருப்பதாகவும், விட்டமின்-டி ரிக்கட்ஸ் போன்ற எலும்பு நோய்கள் தாக்காதவண்ணம் நம்மைப் பாதுகாக்கின்றன. எனவே விட்டமின்-டி தேவை இன்றியமையாதது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பிலடெல்ஃபியா மாகாணத்தைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் பாபிட்டி ஜமீல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் 6 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 382 ஆரோக்கியமான குழந்தைகளை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு விட்டமின்-டி குறைவாக இருப்பது தெரிய வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் சாப்பிடும் உணவு உள்ளிட்ட சாப்பாட்டு வகைகளில் இருந்து பெறப்படும் விட்டமின்-டி யின் அளவு, உடல் எடை ஆகியவற்றை சோதனை செய்துள்ளனர்.
இதில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளின் இரத்தத்தில் உள்ள விட்டமின்-டி அளவானது குறைந்து காணப்பட்டதாகவும், அதாவது 55 விழுக்காடு குழந்தைகளின் இரத்தத்தில் விட்டமின்-டி அளவு குறைந்து இருந்ததாகவும், ஒட்டு மொத்தத்தில் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 68 விழுக்காடு குழந்தைகள், இளைஞர்களின் இரத்தத்தில் உள்ள விட்டமின்-டியின் அளவு குளிர் காலங்களில் மிகக் குறைவாக இருப்பது தெரியவந்ததாக ஜமீல் தெரிவித்துள்ளார்.
விட்டமின்-டி நிலையைத் தெரிந்து கொள்வதற்கு சிறந்த வழி ஒருவரின் இரத்தத்தில் உள்ள விட்டமின்-டி மூலக்கூறில் ஒன்றான 25- ஹைட்ராக்ஸி விட்டமின்-டி அளவு மூலம் தெரிந்து கொள்ளவதுதான் எளிது.
மொத்தத்தில் விட்டமின்-டி குறைபாடுகளுக்கு மருத்துவ சிகிச்சை முறைகளில் அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றுகூறியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த குறைபாடு எந்த வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து இன்றும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்றும் பாபிட்டி ஜமீல் தெரிவித்துள்ளார். எலும்புக் கூட்டின் தசை நார் ஆரோக்கியத்திற்கு விட்டமின்-டி யின் பங்குபணி இன்றியமையாதது.
நமது உடலுக்குத் தேவையான விட்டமின்-டி பால் மூலம் கிடைக்கிறது. ஆனால் விட்டமின்-டியை அதிகரிக்க மிகச் சிறந்த வழி நமது உடலில் சூரிய ஒளி அதிக அளவில் படும்படி பார்த்துக் கொள்வது மூலம்தான் என்று தெரிவித்துள்ளனர்.
கடுமையான விட்டமின்-டி பற்றாக்குறை தசைகளை வலுவிலக்கச் செய்வதுடன், எலும்புகளின் தாதுக்களை பாதிப்படையச் செய்வதுடன் எலும்பு நோய்களை உருவாக்குகினறன. இதனைத் தவிர நோய் எதிர்ப்பு நடைமுறைகளிலும் இவை முக்கிய பணியாற்றுகின்றன.
இரத்தத்தில் விட்டமின் அளவு குறைந்தால் அது இரத்த அழுத்தம், புற்றுநோய், பன்முக அணும உள்ளரிக் காழ்ப்பு (Multiple selorisis), முதல் வகை சர்க்கரை நோய் முதலிய நோய்கள் வர காரணமாக அமைந்துவிடும். இரத்தத்தில் உள்ள விட்டமின்-டி அளவுக் குறைபாட்டிற்கும், தொப்பைக்கும் தொடர்பு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் தேவையென்றும், குழந்தைகளுக்கு இரத்தத்தில் உள்ள விட்டமின்-டி அளவு எந்த அளவு இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், விட்டமின் உட்கொள்ளும் தற்போதைய பரிந்துறையை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்றும் ஜமீல் வலியுறுத்தியுள்ளார்.
காஃபி, வாசனைத் திரவியங்களால் புற்று நோய் வருவதில்லை- ஆய்வு!
வாசனைத் திரவியங்கள், காஃபி, மார்பக சீரமைத்தல் ஆகியவற்றால் புற்று நோய் ஏற்படும் என்பது அடிப்படையற்றது என்றும், புற்று நோய் உருவாவதற்கான உயிர்மங்களே (carcinogenic) இந்நோய் வருவதற்கான முழுக்காரணம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலக புற்றுநோய் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஆஸ்ட்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் புற்றுநோய் உருவாகக் காரணமான 50 புற்றுநோய் உருவாக்கும் உயிர்மங்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.
புற்றுநோயை உருவாக்கும் உயிர்மங்களை விஞ்ஞானிகள் ஐந்து பிரிவுகளாக இனம் கண்டுள்ளனர். அவை உயிர்மங்களின் பிறப்பிடம், நோய் கிருமிகளை உருவாக்க கூடிய திறன் உள்ளவை, புற்றுநோயை உருவாக்க கூடியவை என்று அனுமானிக்கப்படும் உயிர்மங்கள், புலப்படாதவை, தீங்கு இழைக்காதவை என ஐந்தாக வகைப்படுத்தியுள்ளனர்.
இனிப்பூட்டும் பண்புகள் கொண்ட பொருட்கள், காஃபி, வாசனைத் திரவியங்கள், பல் அடைப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துப் பொருட்கள், மார்பக சீரமைப்பு, பழவகைச் சார்ந்த பானங்கள் போன்ற புற்றுநோய் வருவதற்கான காரணிகளாய் கூறப்படுவதை இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான என்.எஸ்.டபிள்யு. பல்கலைகழகத்தின் பேராசிரியர் பெர்னார்ட் ஸ்டிவாட் மறுத்துள்ளார்.
புகைப் பிடித்தல், மது அருந்துவது, சூரிய ஒளி பற்றாக்குறை, சில புற்றுநோய் மருந்துகள் ஆகியவை புற்று நோயை தோற்றுவிக்கும் அல்லது பிறப்பிடம் என்ற வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் தூக்கத்தை இழப்பது மற்றும் அவரின் நடை உடை பாவனைகளில் மாற்றம் உருவாவது போன்றவை இந்த காரணிகளால் பெரிய அளவில் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மாரிஜூனா புகைத்தல், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகம் சாப்பிடுவதால் சோலாரியம் உடலில் உருவாதல், குப்பைக் கொட்டும் இடம் அருகில் வாழ்தல் போன்றவையும் புற்றுநோய் வருவதற்கு சாத்தியமானவையாக இனம் கண்டறியப் பட்டுள்ளதாவும் பெர்னார்ட் தெரிவித்துள்ளார்.
தலை மயிருக்கு பயன்படுத்தப்படும் சாயங்கள், மின்சார கம்பிகளுக்கு அருகில் வசிப்பது இந்நோய் தாக்க குறைவான சாத்தியக் கூறுகளைக் கொண்டிருப்பதாகவும், செல்போன்கள், அழகு சாதனப் பொருட்கள், உணவுச் சுவையை கூட்டுகின்ற பொருட்களால் புற்று நோய் ஏற்படுவதற்கான காரணங்களுக்க உரிய வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் பேராசிரியர் பெர்னார்ட் ஸ்டிவாட் தெரிவித்துள்ளார்.
வாசனைத் திரவியங்கள், காஃபி, மார்பக சீரமைத்தல் ஆகியவற்றால் புற்று நோய் ஏற்படும் என்பது அடிப்படையற்றது என்றும், புற்று நோய் உருவாவதற்கான உயிர்மங்களே (carcinogenic) இந்நோய் வருவதற்கான முழுக்காரணம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலக புற்றுநோய் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஆஸ்ட்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் புற்றுநோய் உருவாகக் காரணமான 50 புற்றுநோய் உருவாக்கும் உயிர்மங்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.
புற்றுநோயை உருவாக்கும் உயிர்மங்களை விஞ்ஞானிகள் ஐந்து பிரிவுகளாக இனம் கண்டுள்ளனர். அவை உயிர்மங்களின் பிறப்பிடம், நோய் கிருமிகளை உருவாக்க கூடிய திறன் உள்ளவை, புற்றுநோயை உருவாக்க கூடியவை என்று அனுமானிக்கப்படும் உயிர்மங்கள், புலப்படாதவை, தீங்கு இழைக்காதவை என ஐந்தாக வகைப்படுத்தியுள்ளனர்.
இனிப்பூட்டும் பண்புகள் கொண்ட பொருட்கள், காஃபி, வாசனைத் திரவியங்கள், பல் அடைப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துப் பொருட்கள், மார்பக சீரமைப்பு, பழவகைச் சார்ந்த பானங்கள் போன்ற புற்றுநோய் வருவதற்கான காரணிகளாய் கூறப்படுவதை இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான என்.எஸ்.டபிள்யு. பல்கலைகழகத்தின் பேராசிரியர் பெர்னார்ட் ஸ்டிவாட் மறுத்துள்ளார்.
புகைப் பிடித்தல், மது அருந்துவது, சூரிய ஒளி பற்றாக்குறை, சில புற்றுநோய் மருந்துகள் ஆகியவை புற்று நோயை தோற்றுவிக்கும் அல்லது பிறப்பிடம் என்ற வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் தூக்கத்தை இழப்பது மற்றும் அவரின் நடை உடை பாவனைகளில் மாற்றம் உருவாவது போன்றவை இந்த காரணிகளால் பெரிய அளவில் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மாரிஜூனா புகைத்தல், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகம் சாப்பிடுவதால் சோலாரியம் உடலில் உருவாதல், குப்பைக் கொட்டும் இடம் அருகில் வாழ்தல் போன்றவையும் புற்றுநோய் வருவதற்கு சாத்தியமானவையாக இனம் கண்டறியப் பட்டுள்ளதாவும் பெர்னார்ட் தெரிவித்துள்ளார்.
தலை மயிருக்கு பயன்படுத்தப்படும் சாயங்கள், மின்சார கம்பிகளுக்கு அருகில் வசிப்பது இந்நோய் தாக்க குறைவான சாத்தியக் கூறுகளைக் கொண்டிருப்பதாகவும், செல்போன்கள், அழகு சாதனப் பொருட்கள், உணவுச் சுவையை கூட்டுகின்ற பொருட்களால் புற்று நோய் ஏற்படுவதற்கான காரணங்களுக்க உரிய வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் பேராசிரியர் பெர்னார்ட் ஸ்டிவாட் தெரிவித்துள்ளார்.
மேலைநாட்டு உணவுப் பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்!
மேலைநாட்டு உணவுப் பழக்கம் வளரும் நாடுகளில் புற்றுநோய்க்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகிறது என்று அமெரிக்க புற்று நோய் அறக்கட்டளை மருத்துவ நிபுணர் அகமதின் ஜமால் எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் நடப்பாண்டில் நாள் ஒன்றுக்கு 20,000 பேர் புற்றுநோய்க்கு பலியாகியுள்ளதாக அமெரிக்க புற்றுநோய் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. நடப்பு 2007 -ம் ஆண்டில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் புற்று நோயால் தாக்கப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் புற்று நோய்க்கு பலியாகி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளைச் சேர்ந்தவர்களில் 54 லட்சம் பேரும், வளரும் நாடுகளைச் சேர்ந்த 67 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புற்று நோயால் இறந்தவர்களில் 29 லட்சம் பேர் வளர்ச்சியடைந்த நாடுகளையும், 47 லட்சம் பேர் வளரும் நாடுகளையும் சேர்ந்தவர்கள் என்பது சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பின் (International Agency for Research on Cancer) குளோபோகேன்-2002 புள்ளி விவரங்களில் இருந்து தொகுக்கப்பட்டது ஆகும்.
புற்றுநோய் தாக்கியவர்களைத் சோதனைச் செய்து பார்த்ததில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பொதுவாக ஆண்களை குதம், நுரையீரல், பெருஞ்சுரப்பிகளிலும், பெண்களை குதம், மார்பகம், நுரையிரல் ஆகிய உறுப்புகளில் வருவது தெரிய வந்துள்ளது. வளரும் நாடுகளைப் பொறுத்த மட்டில் ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, ஈரற்குலை மற்றும் பெண்களுக்கு வயிற்றுப்பகுதி, மார்பகம், கருப்பையின் தலைப்பகுதி ஆகிய உறுப்புக்களையும் பெரும்பாலும் தாக்குவது தெரிய வந்துள்ளது. இவைதான் பெரும்பாலும் மரணத்துக்கு வழிவகுக்கின்றன.
வளரும் நாடுகளில் புற்றுநோய் தாக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது போன்ற நாடுகளில் தொற்றுநோய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ள நிலையிலும் புற்று நோய் தாக்கம் அதிகரித்து வந்தால் எப்படி முதுமை நிலையை எட்ட வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவ நிபுணர் அகமதின் ஜமால் கேள்வி எழுப்பியுள்ளார்.
வளரும் நாடுகளில் புற்றுநோய் அதிகரிப்புக்கு காரணம் புகை பிடிப்பது, பதப்படுத்தப்பட்ட கொழுப்புச் சத்து உள்ள உணவுப் பண்டங்களையும், கலோரிச் சத்து அதிகம் உள்ள ஊட்டச் சத்துக்களை அதிகம் உட்கொள்ளும் நிலையில் உடல் பயிற்சி, பிற இயங்கு நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது என்றும் அகமதின் ஜமால் தெரிவித்துள்ளார்.
மேலைநாட்டு உணவுப் பழக்கம் வளரும் நாடுகளில் புற்றுநோய்க்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகிறது என்று அமெரிக்க புற்று நோய் அறக்கட்டளை மருத்துவ நிபுணர் அகமதின் ஜமால் எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் நடப்பாண்டில் நாள் ஒன்றுக்கு 20,000 பேர் புற்றுநோய்க்கு பலியாகியுள்ளதாக அமெரிக்க புற்றுநோய் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. நடப்பு 2007 -ம் ஆண்டில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் புற்று நோயால் தாக்கப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் புற்று நோய்க்கு பலியாகி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளைச் சேர்ந்தவர்களில் 54 லட்சம் பேரும், வளரும் நாடுகளைச் சேர்ந்த 67 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புற்று நோயால் இறந்தவர்களில் 29 லட்சம் பேர் வளர்ச்சியடைந்த நாடுகளையும், 47 லட்சம் பேர் வளரும் நாடுகளையும் சேர்ந்தவர்கள் என்பது சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பின் (International Agency for Research on Cancer) குளோபோகேன்-2002 புள்ளி விவரங்களில் இருந்து தொகுக்கப்பட்டது ஆகும்.
புற்றுநோய் தாக்கியவர்களைத் சோதனைச் செய்து பார்த்ததில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பொதுவாக ஆண்களை குதம், நுரையீரல், பெருஞ்சுரப்பிகளிலும், பெண்களை குதம், மார்பகம், நுரையிரல் ஆகிய உறுப்புகளில் வருவது தெரிய வந்துள்ளது. வளரும் நாடுகளைப் பொறுத்த மட்டில் ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, ஈரற்குலை மற்றும் பெண்களுக்கு வயிற்றுப்பகுதி, மார்பகம், கருப்பையின் தலைப்பகுதி ஆகிய உறுப்புக்களையும் பெரும்பாலும் தாக்குவது தெரிய வந்துள்ளது. இவைதான் பெரும்பாலும் மரணத்துக்கு வழிவகுக்கின்றன.
வளரும் நாடுகளில் புற்றுநோய் தாக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது போன்ற நாடுகளில் தொற்றுநோய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ள நிலையிலும் புற்று நோய் தாக்கம் அதிகரித்து வந்தால் எப்படி முதுமை நிலையை எட்ட வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவ நிபுணர் அகமதின் ஜமால் கேள்வி எழுப்பியுள்ளார்.
வளரும் நாடுகளில் புற்றுநோய் அதிகரிப்புக்கு காரணம் புகை பிடிப்பது, பதப்படுத்தப்பட்ட கொழுப்புச் சத்து உள்ள உணவுப் பண்டங்களையும், கலோரிச் சத்து அதிகம் உள்ள ஊட்டச் சத்துக்களை அதிகம் உட்கொள்ளும் நிலையில் உடல் பயிற்சி, பிற இயங்கு நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது என்றும் அகமதின் ஜமால் தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கும் வரும் மார்பகப் புற்று நோய்: மருத்துவர்கள் எச்சரிக்கை!
மார்பகப் புற்றுநோய் என்றாலே அது பெண்களுக்குத்தான் வரும் என்று ஆண்கள் நினைக்க வேண்டாம். அவர்களிடமும் மார்பகப் புற்று நோயை உருவாக்குவதற்கான ஜீன்கள் உள்ளன என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தோல், சுரப்பிகள், எழும்புகள் ஆகிவற்றில் உருவாகும் புற்றுநோய்கள் மட்டுமே ஆண்களை அதிகம் தாக்குவதால், அவர்கள் மார்பகப் புற்றுநோய் பற்றிக் கவலைப்படுவதில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மார்பகப் புற்றுநோயை உருவாக்கும் ஜீன்கள் பெரும்பாலும் ஆண்களின் உடலில் இருந்துதான், அவர்களின் பெண் குழந்தைகளுக்குப் பரவுகிறது என்கிறார் அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாகாணத்தில் உள்ள ஃபாக்ஸ் புற்றுநோய் ஆய்வு மையத்தின் மருத்துவர் மேரி டெலி.
பெரும்பாலான ஆண்கள் தங்களிடம் மார்பகப் புற்றுக்கான ஜீன்கள் உள்ளனவா என்பதை சோதனை மூலம் தெரிந்துகொள்ள முன்வருவதில்லை என்று கூறும் அவர், பாதிக்கப்பட்ட பெண்களின் சகோதரர்கள், கணவர், தந்தை ஆகியோரை சோதனை செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் மார்பகப் புற்றுநோய் என்பது சாதாரண விடயமாகிவிட்டது. இந்த ஆண்டு 1,78.000 பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 40,000 பேர் இறந்து விடுவார்கள் என்று கருதப்படுகிறது.
அதேநேரத்தில் 2,030 ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது ஒட்டுமொத்த புற்றுநோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 1 விழுக்காட்டிற்கும் குறைவு என்பதால் யாரும் கவலைப்படுவது இல்லை.
ஆண்களின் உடலில் உள்ள BRCA-1 அல்லது BRCA-2 ஆகிய ஜீன்கள் மார்பகப் புற்று நோய்க்குக் காரணமாக உள்ளன. இந்த ஜீன்கள் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தையிடமிருந்து கடத்தப்படுகிறது.
இதைப்பற்றி மருத்துவர் டெலி கூறுகையில், "ஏற்கெனவே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ள குடும்பங்களில், சிறு குழந்தைகளின் தந்தைகள் கண்டிப்பாக ஜீன் சோதனை செய்து கொள்வது நல்லது என்றார்.
மார்பகப் புற்றுநோய் என்றாலே அது பெண்களுக்குத்தான் வரும் என்று ஆண்கள் நினைக்க வேண்டாம். அவர்களிடமும் மார்பகப் புற்று நோயை உருவாக்குவதற்கான ஜீன்கள் உள்ளன என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தோல், சுரப்பிகள், எழும்புகள் ஆகிவற்றில் உருவாகும் புற்றுநோய்கள் மட்டுமே ஆண்களை அதிகம் தாக்குவதால், அவர்கள் மார்பகப் புற்றுநோய் பற்றிக் கவலைப்படுவதில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மார்பகப் புற்றுநோயை உருவாக்கும் ஜீன்கள் பெரும்பாலும் ஆண்களின் உடலில் இருந்துதான், அவர்களின் பெண் குழந்தைகளுக்குப் பரவுகிறது என்கிறார் அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாகாணத்தில் உள்ள ஃபாக்ஸ் புற்றுநோய் ஆய்வு மையத்தின் மருத்துவர் மேரி டெலி.
பெரும்பாலான ஆண்கள் தங்களிடம் மார்பகப் புற்றுக்கான ஜீன்கள் உள்ளனவா என்பதை சோதனை மூலம் தெரிந்துகொள்ள முன்வருவதில்லை என்று கூறும் அவர், பாதிக்கப்பட்ட பெண்களின் சகோதரர்கள், கணவர், தந்தை ஆகியோரை சோதனை செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் மார்பகப் புற்றுநோய் என்பது சாதாரண விடயமாகிவிட்டது. இந்த ஆண்டு 1,78.000 பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 40,000 பேர் இறந்து விடுவார்கள் என்று கருதப்படுகிறது.
அதேநேரத்தில் 2,030 ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது ஒட்டுமொத்த புற்றுநோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 1 விழுக்காட்டிற்கும் குறைவு என்பதால் யாரும் கவலைப்படுவது இல்லை.
ஆண்களின் உடலில் உள்ள BRCA-1 அல்லது BRCA-2 ஆகிய ஜீன்கள் மார்பகப் புற்று நோய்க்குக் காரணமாக உள்ளன. இந்த ஜீன்கள் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தையிடமிருந்து கடத்தப்படுகிறது.
இதைப்பற்றி மருத்துவர் டெலி கூறுகையில், "ஏற்கெனவே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ள குடும்பங்களில், சிறு குழந்தைகளின் தந்தைகள் கண்டிப்பாக ஜீன் சோதனை செய்து கொள்வது நல்லது என்றார்.
நாள் தவறும் மாதவிடாய்கள்!
மாதவிடாய் சுழற்சி பெண்ணுக்கு பெண் மாறுபடும் தன்மை கொண்டது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியிலோ, குறைந்தோ அல்லது நாள் தவறியோ மாதவிடாய் ஏற்படலாம். குறைந்தது 21 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது அதிகபட்சமாக 35 நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படுவது சகஜம். இது நார்மல் என்று கருதப்படுகிறது.
மாதவிடாய் ரத்தப்போக்கு 3 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். சாதாரணமாக ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும் தினத்திலிருந்து 5 அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஏற்படவில்லை எனில் தாமதமான மாதவிடாய் என்று அர்த்தம். இதுவே 6 வாரங்களுக்கு நீடித்தால் மாதவிடாய் தவறியது என்று பொருள்.
காரணம் என்ன?
1. கருத்தரிப்பு : கருத்தரித்திருந்தால் மாதவிடாய்த் தவறும். பல மாதங்களுக்கு முன் பாதுகாப்பற்ற செக்ஸ் வைத்திருந்தீர்களானால், உங்கள் மருத்துவரை அணுகி கர்ப்பம் தரித்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொண்டு மாதவிடாய் தவறியதற்கான மற்ற காரணங்களை பரிந்துரை செய்யலாம்.
2. கவலை : மனக்கவலையோ, அழுத்தமோ இருந்தால் மாதவிடாய் தாமதமாவதற்கும் தவறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இன்றைய இளம் பெண்களுக்கு இது சகஜமாக ஏற்படுகிறது. இது உணர்ச்சிவசப்படுவதாலோ அல்லது மன நெருக்கடியாலோ, கவலையாலோ ஏற்படலாம். அல்லது கடுமையான காய்ச்சல், பாலியல் உறவால் ஏற்பட்ட கிருமியின் தாக்குதல், கடுமையான உடல் எடையிழப்பு அல்லது எடை கூடுதல், கடுமையான உடற்பயிற்சி இவைகளாலும், விரதம் போன்றவற்றாலும் கூட மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும். சில சமயங்களில் ஊருக்குச் செல்லுதலால் கூட மாதவிடாய் தாமதப்படலாம்.
3. சாதாரண நடைமுறை : மாதவிடாய் ஏற்படத்துவங்கிய முதல் 2 ஆண்டுகளுக்கு நாள் தவறிய தாமதமான மாதவிடாய் சுழற்சியே இளம் பெண்களுக்கு இருந்து வரும். இந்தக் காலக் கட்டங்களில் உடலின் ஹார்மோன்கள் மாதவிடாய் மாறுதல்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளாத நிலையில் இருக்கும், இதனால் சூலகத்திலிருந்து மாதமொருமுறை கரு முட்டையை வெளியேற்ற தாமதமாகும்.
இதனால் மாதவிடாய் சுழற்சி முறையற்றதாக இருக்கும். அதாவது 2 வாரங்களிலிருந்து 3 மாதங்கள் வரை முறையற்ற மாதவிடாய் இருந்து வரும்.
4. ஹார்மோன் சமச்சீரின்மை : தவறும் மாதவிடாய்க்கு ஹார்மோன்களின் சமச்சீரின்மை அரிதாகவே ஏற்படும் ஒரு காரணமாகும். பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம் இளம் பெண்களிடையே மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் ஒரு ஹார்மோன் சமச்சீரின்மை நோய்க்கூறாகும். பாலிசிஸ்டிக் ஓவரிஸ் முறையற்ற மாதவிடாய்ச் சுழற்சியையும், உடலில் அதிகமாக முடி முளைப்பதையும், எடை அதிகரிப்பையும் பரு முதலியவற்றையும் தோற்றுவிக்கிறது. சில சமயங்களில் கருத்தடை மாத்திரைகளை நிறுத்தியிருந்தீர்களானால் தற்காலிகமாக ஹார்மோன்கள் சமன்நிலை குலையும். இதனால் மாதவிடாய் தவறும், தைராய்டு சுரப்பி கபச் சுரப்பு, அட்ரினல் சுரப்பிகள் மற்றும் கருசூலகம் ஆகிய பிரச்சினைகளால் அரிதாக மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படலாம்.
எப்போது சரியாகும்?
மனக்கவலை, உடற்சோர்வு ஆகியவை காரணமாக இருந்தால் விரைவில் மாதவிடாய் சுழற்சி நார்மலாகிவிடும். சாதாரண நடைமுறைகளின்படி இளம்பெண்களின் ஹார்மோன்கள் அளவு முதிர்ந்த நிலையிலும், ஒத்திசைவு கொண்டு இருப்பதாலும் மாதவிடாய் சுழற்சி சகஜமான நிலையில் இருந்து வரும்.
மருத்துவர்கள் பொதுவாக சமச்சீரற்ற ஹார்மோன்களுக்கே சிகிச்சை செய்கின்றனர். இவையெல்லாம் இல்லாத வேறு புதிரான காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை. எனினும் வேறு அபாயகரமான காரணம் இருக்கிறதா என்பதை அறிய உங்கள் மருத்துவரை உடனடியாக அணுகுவது சிறந்தது.
மாதவிடாய் சுழற்சி பெண்ணுக்கு பெண் மாறுபடும் தன்மை கொண்டது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியிலோ, குறைந்தோ அல்லது நாள் தவறியோ மாதவிடாய் ஏற்படலாம். குறைந்தது 21 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது அதிகபட்சமாக 35 நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படுவது சகஜம். இது நார்மல் என்று கருதப்படுகிறது.
மாதவிடாய் ரத்தப்போக்கு 3 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். சாதாரணமாக ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும் தினத்திலிருந்து 5 அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஏற்படவில்லை எனில் தாமதமான மாதவிடாய் என்று அர்த்தம். இதுவே 6 வாரங்களுக்கு நீடித்தால் மாதவிடாய் தவறியது என்று பொருள்.
காரணம் என்ன?
1. கருத்தரிப்பு : கருத்தரித்திருந்தால் மாதவிடாய்த் தவறும். பல மாதங்களுக்கு முன் பாதுகாப்பற்ற செக்ஸ் வைத்திருந்தீர்களானால், உங்கள் மருத்துவரை அணுகி கர்ப்பம் தரித்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொண்டு மாதவிடாய் தவறியதற்கான மற்ற காரணங்களை பரிந்துரை செய்யலாம்.
2. கவலை : மனக்கவலையோ, அழுத்தமோ இருந்தால் மாதவிடாய் தாமதமாவதற்கும் தவறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இன்றைய இளம் பெண்களுக்கு இது சகஜமாக ஏற்படுகிறது. இது உணர்ச்சிவசப்படுவதாலோ அல்லது மன நெருக்கடியாலோ, கவலையாலோ ஏற்படலாம். அல்லது கடுமையான காய்ச்சல், பாலியல் உறவால் ஏற்பட்ட கிருமியின் தாக்குதல், கடுமையான உடல் எடையிழப்பு அல்லது எடை கூடுதல், கடுமையான உடற்பயிற்சி இவைகளாலும், விரதம் போன்றவற்றாலும் கூட மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும். சில சமயங்களில் ஊருக்குச் செல்லுதலால் கூட மாதவிடாய் தாமதப்படலாம்.
3. சாதாரண நடைமுறை : மாதவிடாய் ஏற்படத்துவங்கிய முதல் 2 ஆண்டுகளுக்கு நாள் தவறிய தாமதமான மாதவிடாய் சுழற்சியே இளம் பெண்களுக்கு இருந்து வரும். இந்தக் காலக் கட்டங்களில் உடலின் ஹார்மோன்கள் மாதவிடாய் மாறுதல்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளாத நிலையில் இருக்கும், இதனால் சூலகத்திலிருந்து மாதமொருமுறை கரு முட்டையை வெளியேற்ற தாமதமாகும்.
இதனால் மாதவிடாய் சுழற்சி முறையற்றதாக இருக்கும். அதாவது 2 வாரங்களிலிருந்து 3 மாதங்கள் வரை முறையற்ற மாதவிடாய் இருந்து வரும்.
4. ஹார்மோன் சமச்சீரின்மை : தவறும் மாதவிடாய்க்கு ஹார்மோன்களின் சமச்சீரின்மை அரிதாகவே ஏற்படும் ஒரு காரணமாகும். பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம் இளம் பெண்களிடையே மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் ஒரு ஹார்மோன் சமச்சீரின்மை நோய்க்கூறாகும். பாலிசிஸ்டிக் ஓவரிஸ் முறையற்ற மாதவிடாய்ச் சுழற்சியையும், உடலில் அதிகமாக முடி முளைப்பதையும், எடை அதிகரிப்பையும் பரு முதலியவற்றையும் தோற்றுவிக்கிறது. சில சமயங்களில் கருத்தடை மாத்திரைகளை நிறுத்தியிருந்தீர்களானால் தற்காலிகமாக ஹார்மோன்கள் சமன்நிலை குலையும். இதனால் மாதவிடாய் தவறும், தைராய்டு சுரப்பி கபச் சுரப்பு, அட்ரினல் சுரப்பிகள் மற்றும் கருசூலகம் ஆகிய பிரச்சினைகளால் அரிதாக மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படலாம்.
எப்போது சரியாகும்?
மனக்கவலை, உடற்சோர்வு ஆகியவை காரணமாக இருந்தால் விரைவில் மாதவிடாய் சுழற்சி நார்மலாகிவிடும். சாதாரண நடைமுறைகளின்படி இளம்பெண்களின் ஹார்மோன்கள் அளவு முதிர்ந்த நிலையிலும், ஒத்திசைவு கொண்டு இருப்பதாலும் மாதவிடாய் சுழற்சி சகஜமான நிலையில் இருந்து வரும்.
மருத்துவர்கள் பொதுவாக சமச்சீரற்ற ஹார்மோன்களுக்கே சிகிச்சை செய்கின்றனர். இவையெல்லாம் இல்லாத வேறு புதிரான காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை. எனினும் வேறு அபாயகரமான காரணம் இருக்கிறதா என்பதை அறிய உங்கள் மருத்துவரை உடனடியாக அணுகுவது சிறந்தது.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஹோர்மோன் குளறுபடி செய்யாம இருந்தாலே..நாம் ஆரோக்கியம் ஆனவர்களே..
நல்ல தகவல்..
வளரும் நாடுகளில் புற்றுநோய் அதிகரிப்புக்கு காரணம் புகை பிடிப்பது, பதப்படுத்தப்பட்ட கொழுப்புச் சத்து உள்ள உணவுப் பண்டங்களையும், கலோரிச் சத்து அதிகம் உள்ள ஊட்டச் சத்துக்களை அதிகம் உட்கொள்ளும் நிலையில் உடல் பயிற்சி, பிற இயங்கு நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது Yes..Yes..
நல்ல தகவல்..
வளரும் நாடுகளில் புற்றுநோய் அதிகரிப்புக்கு காரணம் புகை பிடிப்பது, பதப்படுத்தப்பட்ட கொழுப்புச் சத்து உள்ள உணவுப் பண்டங்களையும், கலோரிச் சத்து அதிகம் உள்ள ஊட்டச் சத்துக்களை அதிகம் உட்கொள்ளும் நிலையில் உடல் பயிற்சி, பிற இயங்கு நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது Yes..Yes..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|