புதிய பதிவுகள்
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Today at 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
11 Posts - 44%
ayyasamy ram
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
9 Posts - 36%
Guna.D
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
1 Post - 4%
mruthun
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
1 Post - 4%
Rathinavelu
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
86 Posts - 51%
ayyasamy ram
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
54 Posts - 32%
mohamed nizamudeen
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
2 Posts - 1%
manikavi
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
2 Posts - 1%
mruthun
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அரிசி Poll_c10அரிசி Poll_m10அரிசி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிசி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 3:24 am



கிச்சடி, ஆர்க்காடு, வாடன் சம்பா, பூவன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, புழுதிபெரட்டி, தூயமல்லி, குள்ளக்கால் என்று பல வகை நெல் வகைகள் 1950-60-ம் ஆண்டுகளில் இருந்தன. அதன்பின் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளில் பல்வேறு புதுவகையான நெல் வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஐ.ஆர்.8, ஐ.ஆர்.10 என்று பல வகைகள். மானாவாரி நிலத்தில் விளையும் நெல் விதைகள் ஒரிசா மாநில கட்டாக் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அப்படிப்பட்ட பாரம்பரிய வகை பழைய நெல் விதைகள் இன்றைக்குக் காணாமல் போய்விட்டன.

அரிசி என்ற சொல்லே "ரைஸ்' என ஆங்கிலத்தில் மருவி உள்ளது. மாவீரர் அலெக்ஸôண்டர் மூலமாக அரிசி பயிரிடும் முறை மேலை நாடுகளுக்குச் சென்றது. உணவுத் தொழிலைத் திட்டமிட்டு முதன்முதலில் உலகில் நடத்தியது தமிழர்கள்தான் என்று மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார்.

பெரும்பாணாற்றுப் படையில், 2-ம் நூற்றாண்டில் ஏர் மற்றும் பயிர்த் தொழில் பற்றிப் பாடப்பட்டுள்ளது. ஒற்றை நாற்று நடவு முறை மிகவும் பழமையானது. அது தமிழர்களின் அடையாளமாகும். மட்கும் எருவைப் பயன்படுத்தியதை அகநானூறு குறிப்பிடுகின்றது.

பீகாரில் பயிர் செய்யப்படும் பெளியா நெல், வெள்ளம் பாய்ந்தாலும் தாக்குப்பிடித்து வளரக் கூடியது. ஜார்க்கண்டில் மேட்டு நிலங்களில் கோடா நெல் வகை வறட்சிக் காலங்களிலும் விளையும். உத்தரப் பிரதேசத்தின் ஆற்றுப் படுகைகளில் போரா வகை நெல் பயிரிடப்படுகிறது. ஒரிசாவில் விளையும் கோரா பூட், காளி மூரி போன்றவை விலங்குகளிடமிருந்து தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வகையாகும்.

இது போன்றே துல்லபூடியா வகை நெல், வெள்ளத்தில் பல நாட்கள் மூழ்கிக் கிடந்தாலும் பின்னர் தழைத்து வளரக்கூடிய தன்மை கொண்டதாகும்.

கர்ஹைனி, துன்சி மாசா, மைனா பாங்கி, காளிமோரி போன்ற பாரம்பரியமிக்க நெல் வகைகள் இந்தியாவில் பல மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகின்றன. வறட்சிக்கும் வெள்ளத்துக்கும் ஈடுகொடுக்கும் நெல் விதைகள் ஒரு காலத்தில் நம் நாட்டில் இருந்தன.

ஒரு பக்கத்தில் அதிக உற்பத்தி கிடைக்கின்றது என்பதற்காகக் கலப்பு வகை நெல்லை விவசாயிகள் பயிரிட்டாலும், சில இடங்களில் விவசாயிகள் பண்டைய கால அபரிமிதமான நெல் வகைகளைப் பாதுகாத்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த நெல் வகைகள் இன்றைக்கும் பாதுகாக்கப்படுகின்றன.

பாரம்பரிய விதைகள் நிலத்தின் தன்மையையும் நீராதாரத்தையும் கொண்டு பயிர் செய்யப்படுகின்றன. பாரம்பரிய விதைகளைப் பயன்படுத்தும்பொழுது விவசாயிகள் விதைக்காக அலைய வேண்டியது இல்லை.

இந்த வகை விதைகள் தட்பவெப்ப நிலையையும் பாதுகாத்துக் கொள்ளும். இரசாயன பூச்சிக் கொல்லிகள் இதற்குத் தேவையில்லை. இந்த நெல் வகைகளில் உள்ள கார்போ ஹைட்ரேட் எளிதில் கரையும். இதனால் எளிதில் ஜீரணமடையும்.

ஆனால் கலப்பு ரக, புதுரக விதைகளால் நிலத்தின் வளம் பாதிக்கப்படுகின்றது.

இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றைக் கொண்டே கலப்பு ரக விதைப் பயிர்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.

உற்பத்திதான் அதிகமாக இருக்குமே தவிர, இந்த நெல்லிலிருந்து வரும் அரிசியில் சுவை இருப்பதில்லை.

மேலும் கலப்பு ரக விதைகளைப் பயிரிடுவதற்கு அதிக உழைப்பைக் கொடுக்க வேண்டியுள்ளது.

கலப்பு ரக நெல் விதைகளுக்கு ஆர்வம் காட்டுவது போன்று, பாரம்பரிய நெல் விதைகளின் உற்பத்தியிலும் ஆர்வம் காட்ட வேண்டிய முனைப்பும், அவசியமும் எதிர்காலத்தில் நிச்சயம் வரும்.



அரிசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 20, 2013 8:38 am

மீண்டும் இயற்கை உரத்தை பயன்படுத்தி பழைய முறையில் விவசாயம் செய்தால் மீதி உள்ள நிலங்களும் காக்கப்படும். அருமையான தகவல்.

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 20, 2013 12:38 pm

ஆனால் நாம் மக்கள் தான் செயற்கை உரத்தை பயன்படுதி பழகி விட்டார்கள் இனிமேல் பழைய நிலைக்கு செல்வது என்பது சந்தேகமான ஒன்று சோகம் சோகம் சோகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon May 20, 2013 1:07 pm

விவசாயம் பற்றிய விரிவான பதிவு ...


பூவன் சம்பா,

இப்படி கூட அரிசி உள்ளதா ?

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon May 20, 2013 1:11 pm

பூவன் wrote:விவசாயம் பற்றிய விரிவான பதிவு ...


பூவன் சம்பா,

இப்படி கூட அரிசி உள்ளதா ?
பாத்து அண்ணா,,, சோகம் நாம் இனியவன் ராஜு அண்ணா மோசமானவங்க உங்கள துக்கிட்டு போய் இடிசுற போறாங்க இடிச்சு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 20, 2013 7:01 pm

அரியின் வகை பற்றிய பதிவு நன்று




அரிசி Mஅரிசி Uஅரிசி Tஅரிசி Hஅரிசி Uஅரிசி Mஅரிசி Oஅரிசி Hஅரிசி Aஅரிசி Mஅரிசி Eஅரிசி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Mon May 20, 2013 11:35 pm

தற்போது உழவர்கள் செயற்க்கை உரம் பயன்படுத்துகிறார்கள்; பூச்சிக் கொல்லி பயன்படுத்துகிறார்கள்; கலப்பு ரக விதைகள் பயன்படுத்துகிறார்கள்; உணவில் ருசி இல்லை; சத்து இல்லை; நோய் வருகிறது என்று எல்லாரும் முனுமுனுக்கிறார்கள்..

இயற்க்கை உரம் பயன்படுத்தினால் மீதம் உள்ளவையாவது பாதுகாக்கப்படும்.. பாரம்பரிய விதைகள் பயன்படுத்த வேண்டும் (விளைச்சல் குறைவு என்றாலும்).. பூச்சிக் கொல்லி பயன்படுத்தக் கூடாது.. எல்லாம் சரி தான்..

ஆனால் இன்றைய நிலை என்ன????

உண்ணும் உணவை உற்பத்தி செய்து உயிரூட்டும் உழவனின் இன்றைய நிலை என்ன?

இயற்கை உரத்தைப் பயன்படுத்தும் முறை முழுமையாக ஒழிந்து விடவில்லை. இன்றும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிக விளைச்சல் வேண்டி செயற்கை உரமும், பூச்சிக் கொல்லிகளும் பயன்படுத்தப்படுகிறன. உழவர்கள் இப்படி மாறியதன் காரணம் என்ன?

அவர்கள் விளைவிக்கும் பொருள்களுக்கு சரியான விலை அவர்களுக்கு கிடைக்கிறதா?? இடைத் தரகர்களும், வியாபாரிகளும் தான் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். வெயிலில் வெந்து, புழுதியில் புதைந்து, மண்ணோடு மாயும் உழவனுக்கு சொற்ப விலை தான்.

பின், அவர்கள் மாறாமல் என்ன செய்வார்கள். ஜெட் வேகத்தில் உயரும் விலைவாசிகளை சமாலிக்க அவர்கள் அதிக விலைச்சல் பெறுவதைத் தவிர உழவே தொழிலாய்க் கொண்ட இவர்களுக்கு வேறு வழி இல்லை.

இவை ஒரு புறம் என்றால்... மறுபுறம்...

முப்போகம் கண்ட பூமி கூட இன்று வானம் பார்த்த பூமியாய் மாறி நிற்கிறது.. விதைத்த பயிர் நீரின்றி மண்ணோடு காய்வது கண்டு, மனமெல்லாம் நொந்து, பழைய கஞ்சி கூட குடிக்க மனமில்லாமல் பசியோடு, தொண்டை அடைக்கும் துக்கத்தோடு, வானத்தைப் பார்த்து படுத்துக்கொண்டு, நடுநிசி வரை தூக்கமின்றி , துக்கத்தில் வடியும் கண்ணீரைத் துடைத்து கொண்டு, நாளையாவது விடியுமா மழை வருமா செத்துக் கொண்டிருக்கும் பயிர் தப்பிப் பிழைத்து விடுமா என ஏங்கும் பாவப்பட்ட உழவர்களின் பரிதாப நிலை எத்துனை பேருக்குத் தெரியும்...????


உழவர்களுக்கு அவர்கள் விலைவிக்கும் பொருள்களுக்கு உரிய விலை அவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டியது யார் கடமை?

உரிய, குறைந்த விலையில் இயற்கை உரங்களும், பாரம்பரிய நடவு முறைகளுக்குத் தேவையான ஆட்களும் இன்று உண்டா??

விவசாயம், விவசாயி, விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் மாணவி/ மாணவன் என்றால் எல்லாருக்கும் தோன்றுவது... "பட்டிக்காடு".. 'ஏளனம்'.... 'பரிகாசம்'...

"உழவன் அவன் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாம் இங்கே சோற்றில் கை வைக்க முடியாது" என்பதை எத்துனை பேர் உணர்ந்துள்ளனர்??

வெள்ளை சொக்கா வேலை னா புருவத்த உயர்த்துறாங்க.. விவசாயம் னா மனசுக்குள்ள சிரிக்கிறாங்க..

மாற்றம் வருமா னு வருசம் முழுசா ஏங்கிகிட்டு இருப்பது உழவனின் பொழப்பாய்ப் போச்சு..!! அவன் தயாரிப்பதை வாங்கித் தின்று கொண்டு அவனையே கேவலமாய்ப் பார்ப்பதும், அவனைக் குறை சொல்வதும் மற்றவரின் பொழப்பாய்ப் போச்சு..!!

"என்று விடியும் இவர்கள் வாழ்க்கை..! என்று உயரும் உழவர் தம் கை..!"




நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக