புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
1 என்னுடைய பசி இந்தியாவின் பசி
காந்திஜி வங்காளத்திலுள்ள சோதேபூரில் தங்கியிருந்தார். பலதரப்பட்ட மக்கள் இடைவிடாது அங்கு வந்து சந்தித்து அடிகளின் இயக்கத்திற்கு நன்கொடை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் விடுதலை இயக்கத்தைப் பற்றியும், சிற்சில சமயம் தீண்டாமை ஒழிப்பு சம்பந்தமாகவும் மற்றும் சில நேரங்களில் கதர்ப்பிரச்சாரம் சம்பந்தமாகவும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்று கல்கத்தாவிலுள்ள பாகீரத்கனோடியா குடும்பத்திலுள்ள சில பெண்மணிகள் அவரைத் தரிசிக்க வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் காந்திஜிக்கு வணக்கம் செலுத்தினார்கள். பின், கொஞ்சம் பணத்தை கையில் எடுத்து அவருடைய காலடியில் சமர்ப்பித்தார்கள். காந்திஜி அப்பணத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்தி விட்டு ”இவ்வளவுதானா” என்றார்.
அனைவருக்கும் நன்கு அறிமுகமான சமூகத்தொண்டர் திரு. சீதாராம் ஸக்கஸேரியா, அந்தச் சமயம் அங்கேயே பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். காந்திஜி கூறிய வார்த்தைகளைக் கேட்டு ”பாபு, நன்றாகப் பாருங்களேன். இவ்வளவு ரூபாய் குறைவாகவா தோன்றுகிறது? உங்களுடைய பசி அடங்குவதில்லையே!” எனக்கூறினார்.
உண்மையிலேயே அதில் போதுமான பணம் இருந்தது. ஆனால் காந்திஜி உடனே ‘நீ சரியாகவே சொன்னாய். என்னுடைய பசி எப்படி அடங்கும்? எனது பசி இந்தியாவின் பசி ஆயிற்றே” என்று பெருமிதத்துடன் கூறினார்.
1 என்னுடைய பசி இந்தியாவின் பசி
காந்திஜி வங்காளத்திலுள்ள சோதேபூரில் தங்கியிருந்தார். பலதரப்பட்ட மக்கள் இடைவிடாது அங்கு வந்து சந்தித்து அடிகளின் இயக்கத்திற்கு நன்கொடை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் விடுதலை இயக்கத்தைப் பற்றியும், சிற்சில சமயம் தீண்டாமை ஒழிப்பு சம்பந்தமாகவும் மற்றும் சில நேரங்களில் கதர்ப்பிரச்சாரம் சம்பந்தமாகவும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்று கல்கத்தாவிலுள்ள பாகீரத்கனோடியா குடும்பத்திலுள்ள சில பெண்மணிகள் அவரைத் தரிசிக்க வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் காந்திஜிக்கு வணக்கம் செலுத்தினார்கள். பின், கொஞ்சம் பணத்தை கையில் எடுத்து அவருடைய காலடியில் சமர்ப்பித்தார்கள். காந்திஜி அப்பணத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்தி விட்டு ”இவ்வளவுதானா” என்றார்.
அனைவருக்கும் நன்கு அறிமுகமான சமூகத்தொண்டர் திரு. சீதாராம் ஸக்கஸேரியா, அந்தச் சமயம் அங்கேயே பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். காந்திஜி கூறிய வார்த்தைகளைக் கேட்டு ”பாபு, நன்றாகப் பாருங்களேன். இவ்வளவு ரூபாய் குறைவாகவா தோன்றுகிறது? உங்களுடைய பசி அடங்குவதில்லையே!” எனக்கூறினார்.
உண்மையிலேயே அதில் போதுமான பணம் இருந்தது. ஆனால் காந்திஜி உடனே ‘நீ சரியாகவே சொன்னாய். என்னுடைய பசி எப்படி அடங்கும்? எனது பசி இந்தியாவின் பசி ஆயிற்றே” என்று பெருமிதத்துடன் கூறினார்.
32. இப்போது செல்ஃப் சரியாகியிருக்குமே?
எத்தன்முறை காந்திஜி இந்தியா முழுவதும் சுற்றினார் என்று தெரியாது. ஒரு சமயம் ஹரிஜன நிதிக்குப் பொருள் சேர்ப்பதற்காக தேராடூன் வந்து கொண்டிருந்தார். அங்கு பிரம்மச்சாரி என்ற பெயருள்ள டிரைவர் ஒருவர் இருந்தார். மிகப் பழைய ‘டாக்ஸி’ ஒன்றை அவர் வைத்து ஓட்டிக்கொண்டிருந்தார். ”மகாத்மா காந்தியை என் டாக்ஸியில் அமர வையுங்கள்” என்று மகாவீர் தியாகியிடம் அவர் கூறினார்.
ஆனால் மகாவீர் தியாகி ஒத்துக்கொள்ளவில்லை. பிரம்மச்சாரி நேராகவே காந்திஜிக்கு கடிதம் எழுதிவிட்டார். அவர் முன்பு ஒரு தடவை காந்திஜி ஆசிரமத்தில் தங்கியிருந்தார்; அந்தப் பழக்கம் தான். அவருடைய வண்டியில் தான் உட்காருவதாக அடிகளிடமிருந்து பதிலும் வந்துவிட்டது.
காந்திஜியை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக ஜனங்கள் கூட்டம் கூட்டமாக ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தனர். ‘சிக்னலும’ கீழே இறங்கியது. வண்டி பிளாட்பாரத்திற்கு வந்து நின்றதும், பீ…..பீ…… என்ற சத்தத்துடன் ஃபோர்டு கார் ஒன்றை பிம்மச்சாரி ஓட்டிக்கொண்டு காந்தியடிகளின் பெட்டிக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார். வண்டி ஒரே கதர் மயமாக இருந்தது; வெண்ணிற கதர் துணியைப் போர்த்தியிருந்தார் வண்டியின்மீது.
ஊர்வலம் நகர் பக்கமாகச் சென்றது. தியாகிஜி யார் யாருக்கு என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தாரோ தெரியாது. முதலில் ரயிலடியிலேயே சுமை கூலிகள் 51 ரூபாய் பணமுடிப்பைக் காந்திஜியிடம் அளித்தனர். பின் குதிரை வண்டிக்கார்ர்கள் 100 ரூபாய் பண முடிப்பு அளித்தனர். காந்திஜி மிக்க மகிழ்ச்சியடைந்தார். ‘நீ கொடுப்பதாக வாக்களித்த அந்த ஆயிரத்து ஐநூறு ரூபாயில் சேர்க்கப்பட மாட்டது. ஏனென்றால் டேராடூன் இன்னும் வரவில்லை. இப்போது நாம் இருப்பதோ கிழக்கிந்திய ரயில்வேயில் என்று மகாவீர் தியாகியிடம் காந்திஜி சொன்னார்.
இவ்வாறு சிரித்தும் சிரிக்க வைத்த்உக் கொண்டும் பண முடிப்புகளைப் பெற்றுகொண்டும் பண முடிப்பகளைப் பெற்றுக்கொண்டே, நகரத்தை நோக்கிச் சென்றார் திறந்த கார், இருமருங்களிலும் ஜனத்திரள். கடைத் தெருவிலுள்ள லாலாமித்ரசேன் என்பவர் காந்திஜியின் வண்டி இரண்டு நிமிடங்கள் தன் கடைக்கு முன் நிற்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஐநூறு ரூபாய் பணமுடிப்புக் கொடுக்க வாக்களித்திருந்தார்.
உத்திரப் பிரதேச யத்திரைக்காக ஆச்சாரிய கிருபாளனி ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். அவர் நிபந்தனையை ஒத்துக் கொள்ளவில்லை.
மகாத்மாஜி இதைப்பற்றிக் கேள்விப்பட்ட போது சிரித்தார், ஆனால் அந்தக் கடைக்கு முன்னால் வந்ததோ இல்லையோ, வண்டி நின்றுவிட்டது. ‘என்ன ஆனது’ என வினவினார் காந்திஜி.
‘ஒன்றுமில்லை சிறிது பெட்ரோல் அடைத்துவிட்டது’ என்று விடையளித்தார் டிரைவர் பிரம்மச்சாரி. இதைச்சொல்லி விட்ட டிரைவர் கீழே இறங்கி சர்…பர்…. என்ற சப்த்த்தை உண்டாக்கினார். அவ்வமயம் லாலாமித்ரசேன் மா விளக்கு பொருத்திக்கொண்டிருந்தார். காந்திஜி ‘அடே, செலஃப் போட்டு ஓட்டுவது தானே’ என்றார்.
‘ஐயா! ‘செல்ஃப் கூடச் சரியாக இல்லாதிருக்கிறது’ என்றார் பிரம்மச்சாரி.
இதைப்பார்த்துக் கிருபளானிக்குக்கோபம் தாங்கவில்லை. மாவிளக்குப் பொருத்தம் வேலை முடிந்ததும் லாலா தட்டுடன் வெளியே வந்து 500 ரூபாய் பணமுடிப்பு ஒன்றைக் காந்திஜியிடம் சமர்ப்பித்தரா. சிரித்துக்கொண்டே காந்திஜி பிரம்மச்சாரியிடம், ‘இப்பொழுது ‘செல்ஃப் சரியாகியிருக்குமே’ என்றார்.
பிரம்மச்சாரி இதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்; உடனே வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டினார். ‘பா’ வும் பாபூவும் இதைப் பார்த்து விழுந்து-விழுந்து சிரித்தனர். கிருபாளனிக்கும் கடுகடுப்பு மாறி மகிழ்ச்சியேற்பட்டது. சிரிப்பை அடக்கிக்கொண்டு, என் செய்வது, உ.பி.குண்டர்களின் நடுவில் சிக்கிக் கொண்டுவிட்டோம்!’ என்றார்.
எத்தன்முறை காந்திஜி இந்தியா முழுவதும் சுற்றினார் என்று தெரியாது. ஒரு சமயம் ஹரிஜன நிதிக்குப் பொருள் சேர்ப்பதற்காக தேராடூன் வந்து கொண்டிருந்தார். அங்கு பிரம்மச்சாரி என்ற பெயருள்ள டிரைவர் ஒருவர் இருந்தார். மிகப் பழைய ‘டாக்ஸி’ ஒன்றை அவர் வைத்து ஓட்டிக்கொண்டிருந்தார். ”மகாத்மா காந்தியை என் டாக்ஸியில் அமர வையுங்கள்” என்று மகாவீர் தியாகியிடம் அவர் கூறினார்.
ஆனால் மகாவீர் தியாகி ஒத்துக்கொள்ளவில்லை. பிரம்மச்சாரி நேராகவே காந்திஜிக்கு கடிதம் எழுதிவிட்டார். அவர் முன்பு ஒரு தடவை காந்திஜி ஆசிரமத்தில் தங்கியிருந்தார்; அந்தப் பழக்கம் தான். அவருடைய வண்டியில் தான் உட்காருவதாக அடிகளிடமிருந்து பதிலும் வந்துவிட்டது.
காந்திஜியை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக ஜனங்கள் கூட்டம் கூட்டமாக ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தனர். ‘சிக்னலும’ கீழே இறங்கியது. வண்டி பிளாட்பாரத்திற்கு வந்து நின்றதும், பீ…..பீ…… என்ற சத்தத்துடன் ஃபோர்டு கார் ஒன்றை பிம்மச்சாரி ஓட்டிக்கொண்டு காந்தியடிகளின் பெட்டிக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார். வண்டி ஒரே கதர் மயமாக இருந்தது; வெண்ணிற கதர் துணியைப் போர்த்தியிருந்தார் வண்டியின்மீது.
ஊர்வலம் நகர் பக்கமாகச் சென்றது. தியாகிஜி யார் யாருக்கு என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தாரோ தெரியாது. முதலில் ரயிலடியிலேயே சுமை கூலிகள் 51 ரூபாய் பணமுடிப்பைக் காந்திஜியிடம் அளித்தனர். பின் குதிரை வண்டிக்கார்ர்கள் 100 ரூபாய் பண முடிப்பு அளித்தனர். காந்திஜி மிக்க மகிழ்ச்சியடைந்தார். ‘நீ கொடுப்பதாக வாக்களித்த அந்த ஆயிரத்து ஐநூறு ரூபாயில் சேர்க்கப்பட மாட்டது. ஏனென்றால் டேராடூன் இன்னும் வரவில்லை. இப்போது நாம் இருப்பதோ கிழக்கிந்திய ரயில்வேயில் என்று மகாவீர் தியாகியிடம் காந்திஜி சொன்னார்.
இவ்வாறு சிரித்தும் சிரிக்க வைத்த்உக் கொண்டும் பண முடிப்புகளைப் பெற்றுகொண்டும் பண முடிப்பகளைப் பெற்றுக்கொண்டே, நகரத்தை நோக்கிச் சென்றார் திறந்த கார், இருமருங்களிலும் ஜனத்திரள். கடைத் தெருவிலுள்ள லாலாமித்ரசேன் என்பவர் காந்திஜியின் வண்டி இரண்டு நிமிடங்கள் தன் கடைக்கு முன் நிற்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஐநூறு ரூபாய் பணமுடிப்புக் கொடுக்க வாக்களித்திருந்தார்.
உத்திரப் பிரதேச யத்திரைக்காக ஆச்சாரிய கிருபாளனி ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். அவர் நிபந்தனையை ஒத்துக் கொள்ளவில்லை.
மகாத்மாஜி இதைப்பற்றிக் கேள்விப்பட்ட போது சிரித்தார், ஆனால் அந்தக் கடைக்கு முன்னால் வந்ததோ இல்லையோ, வண்டி நின்றுவிட்டது. ‘என்ன ஆனது’ என வினவினார் காந்திஜி.
‘ஒன்றுமில்லை சிறிது பெட்ரோல் அடைத்துவிட்டது’ என்று விடையளித்தார் டிரைவர் பிரம்மச்சாரி. இதைச்சொல்லி விட்ட டிரைவர் கீழே இறங்கி சர்…பர்…. என்ற சப்த்த்தை உண்டாக்கினார். அவ்வமயம் லாலாமித்ரசேன் மா விளக்கு பொருத்திக்கொண்டிருந்தார். காந்திஜி ‘அடே, செலஃப் போட்டு ஓட்டுவது தானே’ என்றார்.
‘ஐயா! ‘செல்ஃப் கூடச் சரியாக இல்லாதிருக்கிறது’ என்றார் பிரம்மச்சாரி.
இதைப்பார்த்துக் கிருபளானிக்குக்கோபம் தாங்கவில்லை. மாவிளக்குப் பொருத்தம் வேலை முடிந்ததும் லாலா தட்டுடன் வெளியே வந்து 500 ரூபாய் பணமுடிப்பு ஒன்றைக் காந்திஜியிடம் சமர்ப்பித்தரா. சிரித்துக்கொண்டே காந்திஜி பிரம்மச்சாரியிடம், ‘இப்பொழுது ‘செல்ஃப் சரியாகியிருக்குமே’ என்றார்.
பிரம்மச்சாரி இதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்; உடனே வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டினார். ‘பா’ வும் பாபூவும் இதைப் பார்த்து விழுந்து-விழுந்து சிரித்தனர். கிருபாளனிக்கும் கடுகடுப்பு மாறி மகிழ்ச்சியேற்பட்டது. சிரிப்பை அடக்கிக்கொண்டு, என் செய்வது, உ.பி.குண்டர்களின் நடுவில் சிக்கிக் கொண்டுவிட்டோம்!’ என்றார்.
33. கங்கோத்திரி அசுத்தமானால்…….
அக்வால் பஞ்சாயத்து ஜம்னாலால் பஜாஜை ஜாதியிலிருந்து விலக்கி வைத்திருந்தது. தீண்டத்தகாதவர்கள் சமைத்ததை அவர் சாப்பிட்டார் என்பதுதான் அவர் செய்த பெரிய குற்றம். இருந்தாலும் அவருக்கென்று தனிக்கூட்டம் இருந்தது. அவர்கள் அவரை விட்டுவிட விரும்பவில்லை. அக்கூட்டத்தினர் சிலர் ஒரு நாள் ஜம்னாலால்ஜியிடம் வந்து ‘நீங்கள் எங்களுக்காகவாவது’ கட்டாயம் ஒன்று செய்ய வேண்டும். வேறு எதைச் செய்தபோதிலும் இனிமேல் தீண்டத்தகாதவரிகளிடம் சாப்பிடுவதில்லை என்று உறுதி சொல்லுங்கள். இது எங்களுடைய திருப்திக்காகவாவது இருக்கட்டும். தீண்டாதவர்களிடம் சாப்பிடமாட்டீர்கள் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளிப்பீர்களா? என்று கேட்டனர்.
ஜம்னாலால்ஜி, ”ஆசிரமத்தில் எல்லா ஜாதியினரும் இருக்கின்றனர். நான் ஆசிரமத்தில் சாப்பிட மறுக்கலாமா?’
”ஆசிரமத்தைப் பற்றி யார் கூறுகிறார்கள்? அதுதான் புனித பூமி ஆயிற்றே. தீர்த்த ஸ்தலத்திற்கு யாராவது தடை சொல்வார்களா? மற்ற இடங்களில் மட்டும் இதைச் செய்யாதீர்கள். இதுதான் எங்கள் வேண்டுகோள் ” என்றனர் வந்த கூட்டத்தினர்.
ஆனால் இந்த வேண்டுகோளை மட்டும் ஜம்னாலால் எப்படி ஒத்துக்கொள்வார்? கடைசியில் அப்பெருமக்கள் காந்திஜியிடம் சென்று முறையிட்டனர். அடிகள் கேட்ட கேள்வி இதுதான் - ஜம்னாலால்ஜி தீண்டத்தகாதவர்களிடம் சாப்பிடுகிறார். இதனால் நீங்கள் பயப்படுவது பயப்படுவது சமூகத்திற்காகவா அல்லது மதத்திற்காகவா?
”மத்த்தைப்பற்றி எங்களுக்கு என்ன தெரியும்? சமூகத்தின் பழக்கவழக்கம் இப்படி செய்யக்கூடாது என்று இருக்கிறது. நாங்கள் ஜம்னாலால்ஜி சொல்வதெல்லாம் கேட்கிறோம் எங்களுடைய அச்சிறு வேண்டுகோளை மட்டும் அவர் ஏன் நிராகரிக்க வேண்டும்” கூட்டத்தினரில் வயோதிகர் இப்படி பதிலளித்தார்.
பழக்க வழக்கம் சரியில்லையென்றால் அதை ஒழித்தே ஆகவேண்டும். யார் குடிகாரன் இல்லையோ, விபசாரம் செய்வதில்லையோ அவன் தன் கையில் சுத்தமாகச் செய்த சாப்பிடத்தக்க பொருட்களை நாம் சாப்பிடத்தான் வேண்டும். எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். எவன் தூய்மையற்றவனோ, புலாலுண்பவனோ அல்லது குடிகாரனோ, அவன் கையால் செய்த்தைச் சாப்பிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்களுக்குத்துணிவு இல்லையென்றால் நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம்; ஆனால் அவ்வாறு செய்பவரை பின்வாங்கச் சொல்வானேன்? தூய்மையில்லாதவர்கள் பிராமணனாக இருந்தாலும் சரி, அவர் கையால் சாப்பிடுவதில்லை என்ற உறதியை அவருடன் சேர்ந்து நீங்களும் ஏன் எடுக்கக்கூடாது?
நீங்களோ பஞ்சாயத்தாரின் ஆணைக்குப் பயப்படுகிறார்கள் ஆனால் கங்கை ஆறு தோன்றுமிடத்தில் கங்கோத்திரி அசுத்தமாகிவிட்டால் கங்கை நீர் தூய்மையாக இருக்குமா? இன்றைக்குப் பஞ்சாயத்து, பஞ்சாயத்தாக இல்லை. இன்றைய பஞ்சாயத்து அரக்க வழிகளைப் பூசிப்பதாக இருக்கிறது. இவர்கள் ஏமாற்று வித்தைக்கார்களாகவும் தன்னலமுடையவர்களாகவும், கோபம், பொறாமை நிறைந்தவர்களாகவும், இருக்கிறார்கள். பஞ்சாயத்தார்களிடம் இருக்க வேண்டிய நடுநலைமை எங்கு போய்விட்டது? என்னுடைய எச்சரிக்கை என்னவென்றால் பஞ்சாயத்தார்களிடம் உள்ள தீமைகளை நாம் இப்போதே களைந்தெரிவில்லையென்றால் சமூகம் கெட்டே போகும். தர்மத்தைப் பற்றி பேச்சளவில் பெரிதாக மட்டும் பேசிவிட்டால் நியாயம் வந்துவிடுமா? பஞ்சாயத்தின் அடித்தளமே களங்கமடைந்துவிட்டது. அதைத் தூய்மைப்படுத்துவதற்கு நாம் எல்லோரும் தாயராக இருக்கவேண்டும். ஜம்னாலால்ஜீ இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார். அவரை நீங்கள் வாழ்த்துங்கள். அவரிடம் அன்பு காட்டினால் மட்டும் போதும். அதே மாதிரி பஞ்சாயத்துக்கு எதிராக உள்ளவர்களையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் பால் கோபம் கொள்ளாதீர்கள்; இரக்கம் காட்டுங்கள். நாம் கொபத்தை அன்பினாலும் குழப்பத்தை அமைதியாலும் வெல்லுவோம். ஆகையால் அவர்களையும் நேசியுங்கள். தர்மத்த்ஐ காத்து அநியாயத்தை ஒழிப்பதில் தம் கடமையைச் சீராகச் செய்ய வேண்டுமென்று ஜம்னாலால்ஜியை வாழ்த்தி விட்டுச் செல்லுங்கள்’ - இவ்வாறு காந்திஜி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
காந்திஜி பேசி முடித்த பின் கூட்டத்தினரிடையேயும் அமைதி தாண்டவமாடியது. யாருக்கும் பதில் சொல்ல நா எழவில்லை, ஒன்றும் பேசாமல் பெரியவர் தம் தலைப்பாகையைக் கழற்றிக் காந்திஜியின் திருவடிகளின் முன் வைத்து வணங்கி ‘அண்ணலே தங்கள் அறிவுரை கேட்டு நாங்கள் அரியபேறு பெற்றுவிட்டோம்’ என்று கூறினார்.
அக்வால் பஞ்சாயத்து ஜம்னாலால் பஜாஜை ஜாதியிலிருந்து விலக்கி வைத்திருந்தது. தீண்டத்தகாதவர்கள் சமைத்ததை அவர் சாப்பிட்டார் என்பதுதான் அவர் செய்த பெரிய குற்றம். இருந்தாலும் அவருக்கென்று தனிக்கூட்டம் இருந்தது. அவர்கள் அவரை விட்டுவிட விரும்பவில்லை. அக்கூட்டத்தினர் சிலர் ஒரு நாள் ஜம்னாலால்ஜியிடம் வந்து ‘நீங்கள் எங்களுக்காகவாவது’ கட்டாயம் ஒன்று செய்ய வேண்டும். வேறு எதைச் செய்தபோதிலும் இனிமேல் தீண்டத்தகாதவரிகளிடம் சாப்பிடுவதில்லை என்று உறுதி சொல்லுங்கள். இது எங்களுடைய திருப்திக்காகவாவது இருக்கட்டும். தீண்டாதவர்களிடம் சாப்பிடமாட்டீர்கள் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளிப்பீர்களா? என்று கேட்டனர்.
ஜம்னாலால்ஜி, ”ஆசிரமத்தில் எல்லா ஜாதியினரும் இருக்கின்றனர். நான் ஆசிரமத்தில் சாப்பிட மறுக்கலாமா?’
”ஆசிரமத்தைப் பற்றி யார் கூறுகிறார்கள்? அதுதான் புனித பூமி ஆயிற்றே. தீர்த்த ஸ்தலத்திற்கு யாராவது தடை சொல்வார்களா? மற்ற இடங்களில் மட்டும் இதைச் செய்யாதீர்கள். இதுதான் எங்கள் வேண்டுகோள் ” என்றனர் வந்த கூட்டத்தினர்.
ஆனால் இந்த வேண்டுகோளை மட்டும் ஜம்னாலால் எப்படி ஒத்துக்கொள்வார்? கடைசியில் அப்பெருமக்கள் காந்திஜியிடம் சென்று முறையிட்டனர். அடிகள் கேட்ட கேள்வி இதுதான் - ஜம்னாலால்ஜி தீண்டத்தகாதவர்களிடம் சாப்பிடுகிறார். இதனால் நீங்கள் பயப்படுவது பயப்படுவது சமூகத்திற்காகவா அல்லது மதத்திற்காகவா?
”மத்த்தைப்பற்றி எங்களுக்கு என்ன தெரியும்? சமூகத்தின் பழக்கவழக்கம் இப்படி செய்யக்கூடாது என்று இருக்கிறது. நாங்கள் ஜம்னாலால்ஜி சொல்வதெல்லாம் கேட்கிறோம் எங்களுடைய அச்சிறு வேண்டுகோளை மட்டும் அவர் ஏன் நிராகரிக்க வேண்டும்” கூட்டத்தினரில் வயோதிகர் இப்படி பதிலளித்தார்.
பழக்க வழக்கம் சரியில்லையென்றால் அதை ஒழித்தே ஆகவேண்டும். யார் குடிகாரன் இல்லையோ, விபசாரம் செய்வதில்லையோ அவன் தன் கையில் சுத்தமாகச் செய்த சாப்பிடத்தக்க பொருட்களை நாம் சாப்பிடத்தான் வேண்டும். எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். எவன் தூய்மையற்றவனோ, புலாலுண்பவனோ அல்லது குடிகாரனோ, அவன் கையால் செய்த்தைச் சாப்பிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்களுக்குத்துணிவு இல்லையென்றால் நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம்; ஆனால் அவ்வாறு செய்பவரை பின்வாங்கச் சொல்வானேன்? தூய்மையில்லாதவர்கள் பிராமணனாக இருந்தாலும் சரி, அவர் கையால் சாப்பிடுவதில்லை என்ற உறதியை அவருடன் சேர்ந்து நீங்களும் ஏன் எடுக்கக்கூடாது?
நீங்களோ பஞ்சாயத்தாரின் ஆணைக்குப் பயப்படுகிறார்கள் ஆனால் கங்கை ஆறு தோன்றுமிடத்தில் கங்கோத்திரி அசுத்தமாகிவிட்டால் கங்கை நீர் தூய்மையாக இருக்குமா? இன்றைக்குப் பஞ்சாயத்து, பஞ்சாயத்தாக இல்லை. இன்றைய பஞ்சாயத்து அரக்க வழிகளைப் பூசிப்பதாக இருக்கிறது. இவர்கள் ஏமாற்று வித்தைக்கார்களாகவும் தன்னலமுடையவர்களாகவும், கோபம், பொறாமை நிறைந்தவர்களாகவும், இருக்கிறார்கள். பஞ்சாயத்தார்களிடம் இருக்க வேண்டிய நடுநலைமை எங்கு போய்விட்டது? என்னுடைய எச்சரிக்கை என்னவென்றால் பஞ்சாயத்தார்களிடம் உள்ள தீமைகளை நாம் இப்போதே களைந்தெரிவில்லையென்றால் சமூகம் கெட்டே போகும். தர்மத்தைப் பற்றி பேச்சளவில் பெரிதாக மட்டும் பேசிவிட்டால் நியாயம் வந்துவிடுமா? பஞ்சாயத்தின் அடித்தளமே களங்கமடைந்துவிட்டது. அதைத் தூய்மைப்படுத்துவதற்கு நாம் எல்லோரும் தாயராக இருக்கவேண்டும். ஜம்னாலால்ஜீ இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார். அவரை நீங்கள் வாழ்த்துங்கள். அவரிடம் அன்பு காட்டினால் மட்டும் போதும். அதே மாதிரி பஞ்சாயத்துக்கு எதிராக உள்ளவர்களையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் பால் கோபம் கொள்ளாதீர்கள்; இரக்கம் காட்டுங்கள். நாம் கொபத்தை அன்பினாலும் குழப்பத்தை அமைதியாலும் வெல்லுவோம். ஆகையால் அவர்களையும் நேசியுங்கள். தர்மத்த்ஐ காத்து அநியாயத்தை ஒழிப்பதில் தம் கடமையைச் சீராகச் செய்ய வேண்டுமென்று ஜம்னாலால்ஜியை வாழ்த்தி விட்டுச் செல்லுங்கள்’ - இவ்வாறு காந்திஜி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
காந்திஜி பேசி முடித்த பின் கூட்டத்தினரிடையேயும் அமைதி தாண்டவமாடியது. யாருக்கும் பதில் சொல்ல நா எழவில்லை, ஒன்றும் பேசாமல் பெரியவர் தம் தலைப்பாகையைக் கழற்றிக் காந்திஜியின் திருவடிகளின் முன் வைத்து வணங்கி ‘அண்ணலே தங்கள் அறிவுரை கேட்டு நாங்கள் அரியபேறு பெற்றுவிட்டோம்’ என்று கூறினார்.
34. யார் சத்தியத்தைத் தேடி அலைகிறாரோ அவருக்கு அது கட்டாயம் கிடைக்கும்
காந்திஜி வங்காளத்தில் சுற்றுப்பிரயாணம் செய்து கொண்டிருந்தார். வழிநெடுக ஜனங்கள் கூட்டம் கூட்டமாக நின்று மனப்பூர்வமாகத் தம்மாலானதை ஹரிஜன நிதிக்காகக் காந்திஜியிடம் கொடுத்தனர். ஒரு ஊர் ரயிலடியில் ஒரு மாது கூட்டத்தைப்பிளந்து கொண்டு காந்திஜி உள்ள ரயில் பெட்டியின் பக்கத்தில் வந்தாள், தங்க ஆபரணங்கள் அவள் உடம்பில் ஜொலித்துக் கொண்டிருந்தன. பக்கத்தில் வந்துதான் அணிந்துகொண்டிருந்த எல்லா நகைகளையும் கழற்றி காந்திஜியின் திருவடிகளில் சமர்பித்து, ”எனக்குச் சத்தியத்தைக் கொடுத்தருளுங்கள்” என்றாள்.
‘இது ஆண்டவன் ஒருவனால்தான் செய்ய முடியும். யார் சத்தியத்தை தேடி அலைகிறாரோ அவருக்கு அது கட்டாயம் கிடைக்கும்’ என்று பதிலளித்தார். காந்திஜி.
காந்திஜி வங்காளத்தில் சுற்றுப்பிரயாணம் செய்து கொண்டிருந்தார். வழிநெடுக ஜனங்கள் கூட்டம் கூட்டமாக நின்று மனப்பூர்வமாகத் தம்மாலானதை ஹரிஜன நிதிக்காகக் காந்திஜியிடம் கொடுத்தனர். ஒரு ஊர் ரயிலடியில் ஒரு மாது கூட்டத்தைப்பிளந்து கொண்டு காந்திஜி உள்ள ரயில் பெட்டியின் பக்கத்தில் வந்தாள், தங்க ஆபரணங்கள் அவள் உடம்பில் ஜொலித்துக் கொண்டிருந்தன. பக்கத்தில் வந்துதான் அணிந்துகொண்டிருந்த எல்லா நகைகளையும் கழற்றி காந்திஜியின் திருவடிகளில் சமர்பித்து, ”எனக்குச் சத்தியத்தைக் கொடுத்தருளுங்கள்” என்றாள்.
‘இது ஆண்டவன் ஒருவனால்தான் செய்ய முடியும். யார் சத்தியத்தை தேடி அலைகிறாரோ அவருக்கு அது கட்டாயம் கிடைக்கும்’ என்று பதிலளித்தார். காந்திஜி.
35. என்னுடைய டிக்கெட்டை நீ எடுத்துக்கொள்.
ஜிரால்டா பார்பீஸ் காந்திஜியை இதற்கு முன் ஒருபோதும் சந்தித்ததல்லை. முதன்முதலாக அவள் இங்கிலாந்திலிருந்து பம்பாய் வந்து இறங்கியதும், அடுத்த வண்டியிலேயே தான் லாகூருக்குச் செல்லவேண்டுமென அவளுக்குத் தெரியாது. வழியில் சிறிது நேரம் கழிந்ததால் ரயிலடிக்குப் போய்ச்சேர சிறிது தாமதமாகிவிட்டது. வண்டி புறப்படத் தயாராக இருந்தது. பெண்களுக்காக இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்று மட்டும் அதில் இருந்தத. அதிலும் ஏராளமானவர்கள் ஏறியிருந்தார்கள். இடத்தைப் பிடிப்பதற்காக அவள் இங்கு மங்கும் ஓடித்திரிந்தாள். ஆனா பயன் இல்லை. திடீரென்று அவளுடைய பார்வை காலிப்பெட்டி ஒன்றின் மீது விழுந்தது. அது முதல்வகுப்புப் பெட்டி. அதிகப்பணம் கொடுத்தாவது முதல் வகுப்பில் போய் ஏறிவிடலாம் என நினைத்துக் ‘கார்டி’டம் செல்வதற்காக அவரைத் தேடினாள். அது ‘ரிசர்வ்’ செய்யப்பெட்டி என்பதை அவசரத்தில் அவள் பார்க்கவில்லை.
ரயில் பெட்டியில் நுழையும் வாயிலில் சிலர் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் அம்மாதுவை நிறுத்தி, ”நான் தங்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமா?” என்றார்.
அந்தமனிதர் அதிக உயரமில்லாமலும், எளிய கபடமற்ற முகத்தோற்றத்துடனும், பொக்கை வாயுடனும் இருந்தார். அதற்குள் வண்டி புறப்பட ‘கார்டு’ ‘விசிலு’ம் ஊதியாயிற்று. உடனே அம்மனிதர் ‘கார்டு’ பக்கம் திரும்பிச் சமிக்ஞை காட்டினார். பச்சைக்கொடியைக் காண்பிக்கத் தயாராயிருந்த கார்டு உடனே வண்டியை நிறுத்துவதற்கு மறு ‘விசில்’ கொடுத்தார். அதற்குள் அந்தக் கலக்கமுற்ற மாது தன் கதையைச் சொல்லி முடித்திருந்தாள். மற்றொரு மனிதர் இதைப்பார்த்துச் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார். உடனே அம்மனிதர் வேஷ்டியில் மடித்து வைத்திருந்த முதல் வகுப்பு டிக்கட்டை அம்மாதினிடம் கொடுத்துவிட்டு அவள் வைத்திருந்த டிக்கெட்டைக் கேட்டார்.
இம்மாதிரி கேட்டதை மற்றொரு மனிதர் ஆட்சேபித்தார். ஆனால் டிக்கெட்டை எடுத்துக் கொடுத்த அம்மனிதரோ எல்லோரையும் அடக்கிவிட்டார். இதற்குள் அங்கு கூட்டம் சேர்ந்துவிட்டது. வண்டி நின்றுபோய்விட்டதன் காரணத்தையறிய ஸ்டேஷன் மாஸ்டர் ஓடோடியும் வந்தார். ஆனால் அந்த விசித்திர மனிதரோ வழக்கம்போல் அமைதியாக ஒரு கூலியிடம் அம்மாதின் சாமான்களை உள்ளே வைத்துவிட்டுத் தனது சாமான்களை வெளியே எடுத்து வைக்குமாறு கூறினார்.
”விஷயம் இதுதான். நான் முதல் வகுப்பில் பிராயாணம் செய்ய விரும்புவதில்லை. என் நண்பர்கள் எனக்குத் தெரியாமலேயே முதல் வகுப்புச் சீட்டை வாங்கி ரிசர்வ் செய்துவிட்டார்கள். நானும் லூகூர் தான் செல்கிறேன். ஆகையால் இடம் மாற்றிக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே” என்று அம்மனிதர் சொன்னார்.
வியப்புக் குறிகளும் வினாக்குறிகளும் தோன்றக்கூடிய முகபாவத்துடன் கூடிய நயிலையில் அம்மாது அம்மனிதர் கூறியதை நிராகரிக்க முடியவில்லை; சீட்டை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டியதாயிற்று. அம்மனிதர் தன்னுடைய நண்பர்களின் வெறுப்புக்களைப் பற்றிச் சிறிதும் கவலைகொள்ளாமல் பின்னாலுள்ள மூன்றாவது வகுப்புப் பெட்டியில் ஓர் ஓரத்தில் இடமு பிடித்து உட்கார்ந்தார்.
அம்மனிதர் வேறு யாருமில்லை. சாக்ஷாத் மகாத்மாஜீயே.
ஜிரால்டா பார்பீஸ் காந்திஜியை இதற்கு முன் ஒருபோதும் சந்தித்ததல்லை. முதன்முதலாக அவள் இங்கிலாந்திலிருந்து பம்பாய் வந்து இறங்கியதும், அடுத்த வண்டியிலேயே தான் லாகூருக்குச் செல்லவேண்டுமென அவளுக்குத் தெரியாது. வழியில் சிறிது நேரம் கழிந்ததால் ரயிலடிக்குப் போய்ச்சேர சிறிது தாமதமாகிவிட்டது. வண்டி புறப்படத் தயாராக இருந்தது. பெண்களுக்காக இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்று மட்டும் அதில் இருந்தத. அதிலும் ஏராளமானவர்கள் ஏறியிருந்தார்கள். இடத்தைப் பிடிப்பதற்காக அவள் இங்கு மங்கும் ஓடித்திரிந்தாள். ஆனா பயன் இல்லை. திடீரென்று அவளுடைய பார்வை காலிப்பெட்டி ஒன்றின் மீது விழுந்தது. அது முதல்வகுப்புப் பெட்டி. அதிகப்பணம் கொடுத்தாவது முதல் வகுப்பில் போய் ஏறிவிடலாம் என நினைத்துக் ‘கார்டி’டம் செல்வதற்காக அவரைத் தேடினாள். அது ‘ரிசர்வ்’ செய்யப்பெட்டி என்பதை அவசரத்தில் அவள் பார்க்கவில்லை.
ரயில் பெட்டியில் நுழையும் வாயிலில் சிலர் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் அம்மாதுவை நிறுத்தி, ”நான் தங்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமா?” என்றார்.
அந்தமனிதர் அதிக உயரமில்லாமலும், எளிய கபடமற்ற முகத்தோற்றத்துடனும், பொக்கை வாயுடனும் இருந்தார். அதற்குள் வண்டி புறப்பட ‘கார்டு’ ‘விசிலு’ம் ஊதியாயிற்று. உடனே அம்மனிதர் ‘கார்டு’ பக்கம் திரும்பிச் சமிக்ஞை காட்டினார். பச்சைக்கொடியைக் காண்பிக்கத் தயாராயிருந்த கார்டு உடனே வண்டியை நிறுத்துவதற்கு மறு ‘விசில்’ கொடுத்தார். அதற்குள் அந்தக் கலக்கமுற்ற மாது தன் கதையைச் சொல்லி முடித்திருந்தாள். மற்றொரு மனிதர் இதைப்பார்த்துச் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார். உடனே அம்மனிதர் வேஷ்டியில் மடித்து வைத்திருந்த முதல் வகுப்பு டிக்கட்டை அம்மாதினிடம் கொடுத்துவிட்டு அவள் வைத்திருந்த டிக்கெட்டைக் கேட்டார்.
இம்மாதிரி கேட்டதை மற்றொரு மனிதர் ஆட்சேபித்தார். ஆனால் டிக்கெட்டை எடுத்துக் கொடுத்த அம்மனிதரோ எல்லோரையும் அடக்கிவிட்டார். இதற்குள் அங்கு கூட்டம் சேர்ந்துவிட்டது. வண்டி நின்றுபோய்விட்டதன் காரணத்தையறிய ஸ்டேஷன் மாஸ்டர் ஓடோடியும் வந்தார். ஆனால் அந்த விசித்திர மனிதரோ வழக்கம்போல் அமைதியாக ஒரு கூலியிடம் அம்மாதின் சாமான்களை உள்ளே வைத்துவிட்டுத் தனது சாமான்களை வெளியே எடுத்து வைக்குமாறு கூறினார்.
”விஷயம் இதுதான். நான் முதல் வகுப்பில் பிராயாணம் செய்ய விரும்புவதில்லை. என் நண்பர்கள் எனக்குத் தெரியாமலேயே முதல் வகுப்புச் சீட்டை வாங்கி ரிசர்வ் செய்துவிட்டார்கள். நானும் லூகூர் தான் செல்கிறேன். ஆகையால் இடம் மாற்றிக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே” என்று அம்மனிதர் சொன்னார்.
வியப்புக் குறிகளும் வினாக்குறிகளும் தோன்றக்கூடிய முகபாவத்துடன் கூடிய நயிலையில் அம்மாது அம்மனிதர் கூறியதை நிராகரிக்க முடியவில்லை; சீட்டை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டியதாயிற்று. அம்மனிதர் தன்னுடைய நண்பர்களின் வெறுப்புக்களைப் பற்றிச் சிறிதும் கவலைகொள்ளாமல் பின்னாலுள்ள மூன்றாவது வகுப்புப் பெட்டியில் ஓர் ஓரத்தில் இடமு பிடித்து உட்கார்ந்தார்.
அம்மனிதர் வேறு யாருமில்லை. சாக்ஷாத் மகாத்மாஜீயே.
36. கடைசியில் எனக்கு ஒருவழி தோன்றிற்று
காந்தியடிகள் எந்தப்பொருளையும் வீணாக்குவதில்லை. பழைய தபால் உறைகளைக்கூட அவர்பயன்படுத்துவார். கடிதங்களில் உள்ள காலிப்பகுதிகளைக் கத்தரித்துச் சேர்த்துவைத்துக்கொள்வார். பார்சல்களின் மேலுள்ள உறைகளையும் பத்திரிக்கள் வைத்துவரும் உறைகளையும் சேர்த்து வைத்து உபயோகப்படுத்திக்கொள்வார். இப்படி சேர்த்து வைத்த துண்டுக் காகிதங்களின் மேல் தம் கருத்துக்களை எழுதுவார். அல்லது அன்றாடம கணக்குகளை எழுதிக்கொள்வார். துரதிஷ்டவசமாக அநேகக்காகிதங்கள் காணாமற் போய்விட்டன. ஆனால் கிடைத்த காகிதங்களை வைத்துக்கொண்டு பார்க்கையில், பத்திரிகை ஆசிரியர் தொழில், அச்சு சம்மந்தமான எப்பேர்பட்ட நுணுக்கங்களையெல்லாம் காந்தியடிகள் இந்தத் துண்டு காகிதங்களில் எழுதி வந்தார் என்பது புலனாகிறது. அவர் பேசா நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் இப்படிப்பட்ட கழிவுக் காகிதங்கள் மிகமிக உபயோகப்பட்டன.
ஒரு நாள் கிருஷ்ணதாஸ், காந்தியடிகளைப் பார்க்க அவருடைய அறையில் நுழைந்தபோது அடிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ‘கிருஸ்ணதாஸ், எனக்குத் தினந்தோறும் அநேக தந்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவைகளை யெல்லாம் கிழித்து எறியச்செய்தேன். இதனால் எனக்கு மிகுந்த வருத்தம்தான். இவைகளை எந்த வித்திலாவது உபயோகப்படுத்த முடியாதா என யோசித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் எனக்கு ஒரு வழி தோன்றிற்று” என்றார் காந்தியடிகள்.
இவ்வாறு சொல்லிவிட்டு அவர் தந்திப்பார்ம் ஒன்றைக் கையில் எடுத்து அதை மடித்து எப்படி உறை செய்வது என்பதை விளக்கிச் சொன்னார். இனிமேல் உறைகள் எல்லாம் இம்மாதிரியே செய்யப்படவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
கிருஷ்ணதாஸ் இப்படியே செய்து வந்தார். பழைய காகிதங்களை உறையாக மாற்றி உபயோகிப்பதில் காந்தியடிகளுக்கு மிகுந்த ஆவல். புது உறைகளைக்கையால் தொடக்கூட மாட்டார். பழைய உறைகளைப் பயன்படுத்துவதில் அடிகளுக்குத் தனி ஆர்வம்.
காந்தியடிகள் எந்தப்பொருளையும் வீணாக்குவதில்லை. பழைய தபால் உறைகளைக்கூட அவர்பயன்படுத்துவார். கடிதங்களில் உள்ள காலிப்பகுதிகளைக் கத்தரித்துச் சேர்த்துவைத்துக்கொள்வார். பார்சல்களின் மேலுள்ள உறைகளையும் பத்திரிக்கள் வைத்துவரும் உறைகளையும் சேர்த்து வைத்து உபயோகப்படுத்திக்கொள்வார். இப்படி சேர்த்து வைத்த துண்டுக் காகிதங்களின் மேல் தம் கருத்துக்களை எழுதுவார். அல்லது அன்றாடம கணக்குகளை எழுதிக்கொள்வார். துரதிஷ்டவசமாக அநேகக்காகிதங்கள் காணாமற் போய்விட்டன. ஆனால் கிடைத்த காகிதங்களை வைத்துக்கொண்டு பார்க்கையில், பத்திரிகை ஆசிரியர் தொழில், அச்சு சம்மந்தமான எப்பேர்பட்ட நுணுக்கங்களையெல்லாம் காந்தியடிகள் இந்தத் துண்டு காகிதங்களில் எழுதி வந்தார் என்பது புலனாகிறது. அவர் பேசா நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் இப்படிப்பட்ட கழிவுக் காகிதங்கள் மிகமிக உபயோகப்பட்டன.
ஒரு நாள் கிருஷ்ணதாஸ், காந்தியடிகளைப் பார்க்க அவருடைய அறையில் நுழைந்தபோது அடிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ‘கிருஸ்ணதாஸ், எனக்குத் தினந்தோறும் அநேக தந்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவைகளை யெல்லாம் கிழித்து எறியச்செய்தேன். இதனால் எனக்கு மிகுந்த வருத்தம்தான். இவைகளை எந்த வித்திலாவது உபயோகப்படுத்த முடியாதா என யோசித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் எனக்கு ஒரு வழி தோன்றிற்று” என்றார் காந்தியடிகள்.
இவ்வாறு சொல்லிவிட்டு அவர் தந்திப்பார்ம் ஒன்றைக் கையில் எடுத்து அதை மடித்து எப்படி உறை செய்வது என்பதை விளக்கிச் சொன்னார். இனிமேல் உறைகள் எல்லாம் இம்மாதிரியே செய்யப்படவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
கிருஷ்ணதாஸ் இப்படியே செய்து வந்தார். பழைய காகிதங்களை உறையாக மாற்றி உபயோகிப்பதில் காந்தியடிகளுக்கு மிகுந்த ஆவல். புது உறைகளைக்கையால் தொடக்கூட மாட்டார். பழைய உறைகளைப் பயன்படுத்துவதில் அடிகளுக்குத் தனி ஆர்வம்.
37. பேசும் உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கிறது
அப்போதிருந்த பீகார் கவர்னர், சம்பாரன் சம்மந்தமாகப்பேச காந்தியடிகளை அழைத்தபோது, அடிகளை எங்கு கைது செய்து விடுவார்களோ என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது.
அந்நாளில் கவர்னர் ராஞ்சியில் தங்கியிருந்தார். ராஞ்சிக்கு புறப்படும் போது காந்தியடிகள் நண்பர்களிடம், ”ஒரு வேளை தாம் கைது செய்யப்பட்டு விட்டாலும் இன்ன இன்ன வழிகளை மேற்கொண்டு வேலைகளை ஒழுங்காகச் செய்து கொண்டேயிருக்கவேண்டும்.” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
காந்தியடிகள் கவர்னரைச் சந்திக்க பத்துமணிக்குத் தனியாகவே சென்றார். ஒன்று அல்லது ஒன்றரை மணிவரை பேச்சுவார்த்தை நடைபெறும் என காந்திஜி நினைத்தார். ஆனால் அது மாலை ஐந்து ஆறுவரை நீண்டுக்கொண்டிருந்தது. அவருடைய நண்பர்கள் தந்தியின் வரவை எதிர் பாரத்த வண்ணமிருந்தனர். நாள் முழுவதும் கழிந்துவிட்டது. ஆனால் செய்தி ஒன்றுமில்ல்ஐ. காந்தியடிகளைக்கைது செய்துவிட்டார்கள் என்றே நண்பர்கள் எல்லோரும் நினைக்கத் தொடங்கினர். மறுநாள் தந்தி வந்தது; நேற்று கவர்னருடன் நிறைய பேச்சு நடந்தது; இன்றும் நடைபெறும் ” என்று தந்தி வாசகம் இருந்தது.
கடைசியில் காந்தியடிகள் தன்னுடைய பேச்சுத் திறமையால் சம்பாரனில் நடந்த நிகழ்ச்சிகள் விசாரணைக்குரியவையே என்பதனைக் கவர்னருக்குப் புரியவைத்தார். கவர்னர் உடனே ஓர் விசாரணைக்குழுவை நியமித்து, தாங்களும் இதில் இருக்கவேண்டும்” என காந்தியடிகளை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்.
அடிகள் உடனே இதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் கவர்னர் ”தாங்கள் குழுவில் இருந்தால் தான் இந்த நூறு ஆண்டுகளில் அரசாங்க அலுவலர்கள் இந்திய மக்களிடம் எப்படி நடந்துகொண்டார்கள் என்ற உண்மையைத் தெரிவிக்க முடியும்; இல்லையென்றால் குழுவின் அறிக்கை தங்கள் பார்வைக்கு வராமற் போய்விடலாம்” என காந்தியிடம் கூறினார்.
கவர்னர் இவ்வாறு கூறியதைக் கேட்டு அடிகள் சம்மதித்தார். ஆனால் தம் நணபர்களிடம், ”இந்தக் குழுவில் நடைபெறும் பேச்சு வார்த்தைகளைப்பற்றி மக்களிடம் சொல்லவும் அல்லது பத்திரிக்கைகளில் எழுதவும் உங்களில் யாரும் முற்படக்கூடாது. இது சம்பந்தமாகப் பேசும் உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கிறுது” எனக் கூறினார்.
இந்த விசாரணைக் குழு அரசாங்கத்திற்குத் தன் அறிக்கை கொடுத்ததின் விளைவாக அவுரித் தோட்ட முதலாளிகளான வெள்ளையர்களின் ஆடம்பர வாழ்க்கை அழிந்தது. இருந்தாலும் அவர்கள் காந்தியடிகளின் நண்பர்களாகவே தொடர்ந்து இருந்து வந்தனர்.
அப்போதிருந்த பீகார் கவர்னர், சம்பாரன் சம்மந்தமாகப்பேச காந்தியடிகளை அழைத்தபோது, அடிகளை எங்கு கைது செய்து விடுவார்களோ என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது.
அந்நாளில் கவர்னர் ராஞ்சியில் தங்கியிருந்தார். ராஞ்சிக்கு புறப்படும் போது காந்தியடிகள் நண்பர்களிடம், ”ஒரு வேளை தாம் கைது செய்யப்பட்டு விட்டாலும் இன்ன இன்ன வழிகளை மேற்கொண்டு வேலைகளை ஒழுங்காகச் செய்து கொண்டேயிருக்கவேண்டும்.” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
காந்தியடிகள் கவர்னரைச் சந்திக்க பத்துமணிக்குத் தனியாகவே சென்றார். ஒன்று அல்லது ஒன்றரை மணிவரை பேச்சுவார்த்தை நடைபெறும் என காந்திஜி நினைத்தார். ஆனால் அது மாலை ஐந்து ஆறுவரை நீண்டுக்கொண்டிருந்தது. அவருடைய நண்பர்கள் தந்தியின் வரவை எதிர் பாரத்த வண்ணமிருந்தனர். நாள் முழுவதும் கழிந்துவிட்டது. ஆனால் செய்தி ஒன்றுமில்ல்ஐ. காந்தியடிகளைக்கைது செய்துவிட்டார்கள் என்றே நண்பர்கள் எல்லோரும் நினைக்கத் தொடங்கினர். மறுநாள் தந்தி வந்தது; நேற்று கவர்னருடன் நிறைய பேச்சு நடந்தது; இன்றும் நடைபெறும் ” என்று தந்தி வாசகம் இருந்தது.
கடைசியில் காந்தியடிகள் தன்னுடைய பேச்சுத் திறமையால் சம்பாரனில் நடந்த நிகழ்ச்சிகள் விசாரணைக்குரியவையே என்பதனைக் கவர்னருக்குப் புரியவைத்தார். கவர்னர் உடனே ஓர் விசாரணைக்குழுவை நியமித்து, தாங்களும் இதில் இருக்கவேண்டும்” என காந்தியடிகளை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்.
அடிகள் உடனே இதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் கவர்னர் ”தாங்கள் குழுவில் இருந்தால் தான் இந்த நூறு ஆண்டுகளில் அரசாங்க அலுவலர்கள் இந்திய மக்களிடம் எப்படி நடந்துகொண்டார்கள் என்ற உண்மையைத் தெரிவிக்க முடியும்; இல்லையென்றால் குழுவின் அறிக்கை தங்கள் பார்வைக்கு வராமற் போய்விடலாம்” என காந்தியிடம் கூறினார்.
கவர்னர் இவ்வாறு கூறியதைக் கேட்டு அடிகள் சம்மதித்தார். ஆனால் தம் நணபர்களிடம், ”இந்தக் குழுவில் நடைபெறும் பேச்சு வார்த்தைகளைப்பற்றி மக்களிடம் சொல்லவும் அல்லது பத்திரிக்கைகளில் எழுதவும் உங்களில் யாரும் முற்படக்கூடாது. இது சம்பந்தமாகப் பேசும் உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கிறுது” எனக் கூறினார்.
இந்த விசாரணைக் குழு அரசாங்கத்திற்குத் தன் அறிக்கை கொடுத்ததின் விளைவாக அவுரித் தோட்ட முதலாளிகளான வெள்ளையர்களின் ஆடம்பர வாழ்க்கை அழிந்தது. இருந்தாலும் அவர்கள் காந்தியடிகளின் நண்பர்களாகவே தொடர்ந்து இருந்து வந்தனர்.
38. என் செய்தியில் உண்மை இருந்தால்….
காந்தியடிகள் சாதாரணமாக எல்லோரையும் நம்புபவர். ஆனால் கொள்கைகள் பற்றிய விஷயங்களில் மிக விழிப்புடன் இருந்து நன்றாக அவைகளை அலசிப்பார்ப்பார். அவர் சிறு சிறு விஷயத்திலும் கண்டிப்புடன் இருப்பார். யாராவது தன் கருத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்காகப் பிடிவாதம் செய்தால் வர் தன் முடிவில் மிகவும் திடமாக நின்றுவிடுவார்.
உப்புச்சத்தயாகிரகத்தின் போது பிரசித்தி பெற்ற தண்டியாத்திரையை அடிகள் மேற்கொண்டார். அவருடைய கடைசி செய்தியை ‘டேப்ரிக்கார்டி’ல் செய்து நாட்டிலுள்ள ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் பரவச் செய்ய வேண்டுமென நண்பர்கள் நினைத்தனர்.
இதை காந்தியடிகளிடம் எடுத்துச் சொல்வதற்காக குழு ஒன்று சென்றது. இக்குழுவின் உறுப்பினர்களில் டாக்டர் ராஜேந்திர பிரசாதும் ஒருவர். வர் காந்தியடிகள் முன் மேற்சொன்ன யோசனையைச் சமர்ப்பித்தார். ஆனால் அடிகள் உறுதியான குரலில் அந்த யோசனையை நிராகரித்து விட்டார். வந்தவர்கள் மீண்டும் வற்புறுத்தினார்கள். வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். அப்போது காந்தியடிகள் என்னுடைய பேச்சுக்களை என் குரலிலேயே பதிவு செய்து அதை மக்களுக்கு பரப்பவேண்டுமென்ற அவசியமில்லை. என்னுடைய செய்தியில் உண்மை இருந்தால் பதிவு செய்யாமலேயே ஒவ்வொரு வீட்டிலும் என் செய்தி பரவட்டும். என் செய்தியில் சத்தியம் இல்லையென்றால் அதை செய்வது வீணாகும்’ என்றார்.
காந்தியடிகள் சாதாரணமாக எல்லோரையும் நம்புபவர். ஆனால் கொள்கைகள் பற்றிய விஷயங்களில் மிக விழிப்புடன் இருந்து நன்றாக அவைகளை அலசிப்பார்ப்பார். அவர் சிறு சிறு விஷயத்திலும் கண்டிப்புடன் இருப்பார். யாராவது தன் கருத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்காகப் பிடிவாதம் செய்தால் வர் தன் முடிவில் மிகவும் திடமாக நின்றுவிடுவார்.
உப்புச்சத்தயாகிரகத்தின் போது பிரசித்தி பெற்ற தண்டியாத்திரையை அடிகள் மேற்கொண்டார். அவருடைய கடைசி செய்தியை ‘டேப்ரிக்கார்டி’ல் செய்து நாட்டிலுள்ள ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் பரவச் செய்ய வேண்டுமென நண்பர்கள் நினைத்தனர்.
இதை காந்தியடிகளிடம் எடுத்துச் சொல்வதற்காக குழு ஒன்று சென்றது. இக்குழுவின் உறுப்பினர்களில் டாக்டர் ராஜேந்திர பிரசாதும் ஒருவர். வர் காந்தியடிகள் முன் மேற்சொன்ன யோசனையைச் சமர்ப்பித்தார். ஆனால் அடிகள் உறுதியான குரலில் அந்த யோசனையை நிராகரித்து விட்டார். வந்தவர்கள் மீண்டும் வற்புறுத்தினார்கள். வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். அப்போது காந்தியடிகள் என்னுடைய பேச்சுக்களை என் குரலிலேயே பதிவு செய்து அதை மக்களுக்கு பரப்பவேண்டுமென்ற அவசியமில்லை. என்னுடைய செய்தியில் உண்மை இருந்தால் பதிவு செய்யாமலேயே ஒவ்வொரு வீட்டிலும் என் செய்தி பரவட்டும். என் செய்தியில் சத்தியம் இல்லையென்றால் அதை செய்வது வீணாகும்’ என்றார்.
39. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே இருக்கிறேன்
ஏதோபல காரணங்களால் காந்தியடிகளுக்கு மகாராஷட்டிரத்தில் பல எதிர்ப்பாளர்கள் உருவாகியிருந்தார்கள். சின்னஞ்சிறு விஷயங்களின் பொருட்டும் காந்தியடிகளின் மாகராஷ்ட்டிர துவேஷத்தைக் கண்டார்கள்; அத்துடன் நீட்டி விரித்து அவரைப்பற்றிய போலிப்பிரச்சாரம் செய்தார்கள், மத்தியப் பிரதேசத்தில் அப்போதிருந்த காங்கிரஸ் மந்திரி சபையிலிருந்து டாக்டர் கரே அவர்களை விலக்கவேண்டிவந்தது. இதற்குப் பின்னாலும் மாகராஷட்டிர துவேஷத்தை அவர்கள் கற்பித்தார்கள். தம்முடைய பழைய மாணவி குமாரி ப்ரேமா பஹனுக்குக் காந்தியடிகள் எழுதின கடித்த்தில் தம் மனதைத் திறந்து வைத்திருந்தார். ஆண்-பெண்ணின் திருமண வாழ்வும், குடும்ப உறவையும் பற்றிய சில விஷயங்களை சங்கோசமின்றி அக்கடித்த்தில் அடிகள் எழுதியிருந்தார். தம்முடைய சில அனுபவங்களையும் கூறியிருந்தார். இக்கடிதங்களை வைத்துக்கொண்டே அவர்கள் அடிகளுக்குக் கெட்ட பெயர் உண்டாக்க முயற்சித்தார்கள்.
இந்த நிகழ்ச்சிகளினால் பலரும் வருத்தமுற்றனர்; குறிப்பாக உயர்ந்த குணம் படைத்த பெரும்பான்மை மகாராஷ்டிர்ர்களும் இது மிகுந்த வேதனை அளித்தது. இந்த விஷப் பிரச்சாரத்தை எப்படி தடுப்பது என்றே அவர்களுக்குப் புரியவில்லை.
அச்சான்றோருள் பம்பாயிலுள்ள திருமதி அவந்திகாபாய் கோகலேயும் ஒருவர். காந்தியடிகள் மீது அவருக்கு மிகுந்த பக்தி. அவர் ஒவ்வொரு வருடமும் அடிகளின் பிறந்த நாளன்று தன் கையாலேயே நூற்று, செய்த வேஷ்டியை பரிசாக அனுப்பி வந்தார். அவ்வருடமும் இதேமாதிரி செய்து அனுப்பி வைத்ததோடு தன் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கடிதமும் எழுதி அனுப்பினார். அக்கடிதம் பின் வருமாறு ”தங்களை எதிர்த்து இப்பகுதியில் மாரட்டிப் பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் பொய் புரட்டான போலிப் பிரச்சாரம் செய்யப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ளும் சக்தி எனுக்குக் கிடையாது. மனம் மிகவும் சஞ்சலப்படுகிறது. தாங்களோ முற்றிலும் மௌனமாக இருக்கிறீர்கள். இதைப்பற்றி ஒன்றும் பேசுவதுமில்லை, எழுதுவதுமில்லை. நமக்கு எந்தவிதமான உபாயமும் தெரியவில்லை. இந்து விஷப்பிரச்சாரம் மேலும் பரவாமல் தடுக்க ஏதேனும் வழிசெய்ய வேண்டும்.”
அதற்குக் காந்திஜி கீழ்க் கண்டவாறு பதில் எழுதினார். சில நண்பர்கள் மூலமாக என்னைப் பற்றிய போலிப் பிரச்சாரம் நடைபெறுவதை நான் அறியாமல் இல்லை. ஆனால் நான் என்ன செய்யட்டும்? எப்படி சிலர் என்னைப் பழித்துப் பேசி இன்பம் காண்கிறார்களோ அதுபோல் என்னை சிலர் ஏற்றிப் பேசி புகழவும் செய்கிறார்கள். பழிச் சொல்லால் நான் வாடிப் போகவேண்டும்? அதே போல் புகழுரைகளாலும் நான் ஏன் முக மலர்ச்சியடைய வேண்டும்? நிந்திப்பவர்களினால் நான் குறைந்து போய் விடுவதுமில்லை. நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே இருக்கிறேன். இம்மியும் குறைந்தோ, கூடுவதோ கிடையாது. ஆண்டவன் சந்நிதானத்தில் மனிதன் உண்மையுள்ளவனாய் நடந்து கொண்டால் அவனுக்கு எங்கும் எப்போதும் அச்சமே கிடையாது.
ஏதோபல காரணங்களால் காந்தியடிகளுக்கு மகாராஷட்டிரத்தில் பல எதிர்ப்பாளர்கள் உருவாகியிருந்தார்கள். சின்னஞ்சிறு விஷயங்களின் பொருட்டும் காந்தியடிகளின் மாகராஷ்ட்டிர துவேஷத்தைக் கண்டார்கள்; அத்துடன் நீட்டி விரித்து அவரைப்பற்றிய போலிப்பிரச்சாரம் செய்தார்கள், மத்தியப் பிரதேசத்தில் அப்போதிருந்த காங்கிரஸ் மந்திரி சபையிலிருந்து டாக்டர் கரே அவர்களை விலக்கவேண்டிவந்தது. இதற்குப் பின்னாலும் மாகராஷட்டிர துவேஷத்தை அவர்கள் கற்பித்தார்கள். தம்முடைய பழைய மாணவி குமாரி ப்ரேமா பஹனுக்குக் காந்தியடிகள் எழுதின கடித்த்தில் தம் மனதைத் திறந்து வைத்திருந்தார். ஆண்-பெண்ணின் திருமண வாழ்வும், குடும்ப உறவையும் பற்றிய சில விஷயங்களை சங்கோசமின்றி அக்கடித்த்தில் அடிகள் எழுதியிருந்தார். தம்முடைய சில அனுபவங்களையும் கூறியிருந்தார். இக்கடிதங்களை வைத்துக்கொண்டே அவர்கள் அடிகளுக்குக் கெட்ட பெயர் உண்டாக்க முயற்சித்தார்கள்.
இந்த நிகழ்ச்சிகளினால் பலரும் வருத்தமுற்றனர்; குறிப்பாக உயர்ந்த குணம் படைத்த பெரும்பான்மை மகாராஷ்டிர்ர்களும் இது மிகுந்த வேதனை அளித்தது. இந்த விஷப் பிரச்சாரத்தை எப்படி தடுப்பது என்றே அவர்களுக்குப் புரியவில்லை.
அச்சான்றோருள் பம்பாயிலுள்ள திருமதி அவந்திகாபாய் கோகலேயும் ஒருவர். காந்தியடிகள் மீது அவருக்கு மிகுந்த பக்தி. அவர் ஒவ்வொரு வருடமும் அடிகளின் பிறந்த நாளன்று தன் கையாலேயே நூற்று, செய்த வேஷ்டியை பரிசாக அனுப்பி வந்தார். அவ்வருடமும் இதேமாதிரி செய்து அனுப்பி வைத்ததோடு தன் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கடிதமும் எழுதி அனுப்பினார். அக்கடிதம் பின் வருமாறு ”தங்களை எதிர்த்து இப்பகுதியில் மாரட்டிப் பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் பொய் புரட்டான போலிப் பிரச்சாரம் செய்யப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ளும் சக்தி எனுக்குக் கிடையாது. மனம் மிகவும் சஞ்சலப்படுகிறது. தாங்களோ முற்றிலும் மௌனமாக இருக்கிறீர்கள். இதைப்பற்றி ஒன்றும் பேசுவதுமில்லை, எழுதுவதுமில்லை. நமக்கு எந்தவிதமான உபாயமும் தெரியவில்லை. இந்து விஷப்பிரச்சாரம் மேலும் பரவாமல் தடுக்க ஏதேனும் வழிசெய்ய வேண்டும்.”
அதற்குக் காந்திஜி கீழ்க் கண்டவாறு பதில் எழுதினார். சில நண்பர்கள் மூலமாக என்னைப் பற்றிய போலிப் பிரச்சாரம் நடைபெறுவதை நான் அறியாமல் இல்லை. ஆனால் நான் என்ன செய்யட்டும்? எப்படி சிலர் என்னைப் பழித்துப் பேசி இன்பம் காண்கிறார்களோ அதுபோல் என்னை சிலர் ஏற்றிப் பேசி புகழவும் செய்கிறார்கள். பழிச் சொல்லால் நான் வாடிப் போகவேண்டும்? அதே போல் புகழுரைகளாலும் நான் ஏன் முக மலர்ச்சியடைய வேண்டும்? நிந்திப்பவர்களினால் நான் குறைந்து போய் விடுவதுமில்லை. நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே இருக்கிறேன். இம்மியும் குறைந்தோ, கூடுவதோ கிடையாது. ஆண்டவன் சந்நிதானத்தில் மனிதன் உண்மையுள்ளவனாய் நடந்து கொண்டால் அவனுக்கு எங்கும் எப்போதும் அச்சமே கிடையாது.
40. இவரை ரக்ஷிப்பது உங்கள் கடமை
ஒத்துழையாமை இயக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் காந்தியடிகள் சென்னை வந்தார். 1919 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம். சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி வீட்டில் தங்கியிருந்தார்.
ஒருநாள் தமிழ் நாட்டின் புகழ்பெற்ற தேசியக்கவிஞர் பாரதி அவரைச் சந்திக்க வந்தார். எந்தவிதமான ஆசாரமும் இல்லாமல் அவர் அடிகளைப் பார்த்து ”மிஸ்டர்’ காந்தி! இன்று மாலை கடற்கரையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம். நான் அதில் பேசுகிறேன். தாங்கள் இதற்குத் தலைமை தாங்க ஒப்புக்கொள்ளவேண்டும்” என்றார்.
காந்தியடிகள் ‘நாளை இந்தக் கூட்டம் நடைபெற்றால் நான் வரமுடியும்’ என பதிலளித்தார்.
‘கூட்டம் இன்றுதான் ஏற்பாடாகியிருக்கிறது. தங்களின் ஒத்துழையாம் இயக்கம் வெற்றி பெறுக’ என வாழ்த்திவிட்டு பாரதியார் சென்று விட்டார். அறிமுகம் முதலியன இல்லாமலேயே வந்த இவர் யார் எனக் காந்தியடிகள் கேட்டார்.
”இவர் தான் தமிழ் நாட்டின் தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்” என ராஜாஜி அவர்கள் பதிலளித்தார்.
”அப்படியென்றால் இவரை ரக்ஷிப்பது உங்கள் போன்றவர்களுக்கு கடமை” என்றார் காந்தியடிகள்.
ஒத்துழையாமை இயக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் காந்தியடிகள் சென்னை வந்தார். 1919 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம். சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி வீட்டில் தங்கியிருந்தார்.
ஒருநாள் தமிழ் நாட்டின் புகழ்பெற்ற தேசியக்கவிஞர் பாரதி அவரைச் சந்திக்க வந்தார். எந்தவிதமான ஆசாரமும் இல்லாமல் அவர் அடிகளைப் பார்த்து ”மிஸ்டர்’ காந்தி! இன்று மாலை கடற்கரையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம். நான் அதில் பேசுகிறேன். தாங்கள் இதற்குத் தலைமை தாங்க ஒப்புக்கொள்ளவேண்டும்” என்றார்.
காந்தியடிகள் ‘நாளை இந்தக் கூட்டம் நடைபெற்றால் நான் வரமுடியும்’ என பதிலளித்தார்.
‘கூட்டம் இன்றுதான் ஏற்பாடாகியிருக்கிறது. தங்களின் ஒத்துழையாம் இயக்கம் வெற்றி பெறுக’ என வாழ்த்திவிட்டு பாரதியார் சென்று விட்டார். அறிமுகம் முதலியன இல்லாமலேயே வந்த இவர் யார் எனக் காந்தியடிகள் கேட்டார்.
”இவர் தான் தமிழ் நாட்டின் தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்” என ராஜாஜி அவர்கள் பதிலளித்தார்.
”அப்படியென்றால் இவரை ரக்ஷிப்பது உங்கள் போன்றவர்களுக்கு கடமை” என்றார் காந்தியடிகள்.
41. கடவுள் படைப்பில் எப்பொருளும் வீணுக்கல்ல
நவகாளி யாத்திரையின்போது காந்தியடிகள் ஸ்ரீராம்பூரில் தங்கியிருந்தார். அன்று இரவு இரண்டு மணிக்கு அவர் விழித்துக்கொண்டார். மனுவையும் எழுப்பினார். அன்றுதான் மனுவுக்காக சீட்டித்துணியில் பைஜாமாவும் சட்டையும் தைத்து வந்திருந்தன. காந்தியடிகள் அவளிடம் ‘நீ சீட்டி அல்லது வேறு வகையான கதர் வாங்குவது சம்மந்தமாக யாரிடமாவது சொல்லி இருந்தாயா?’ எனக்கேட்டார்.
மனு இந்தத் துணியை அவர் கொண்டுவரவில்லை. தாங்கள் பிர்லா ஆட்களிடம் சொல்லியிருந்தீர்கள். அவர்கள் தான் கொண்டுவந்தார்கள்’ எனக் கூறினாள்.
அப்படியென்றால் குறைந்த விலையா இருக்கும்? ஆனால் மனதில் இப்படிப்பட்ட துணிகள் உடுத்தினால்தான் அழகாகத்தோன்றும் என்ற எண்ணம் எழுந்திருந்தால் அதை களைந்தெரியவேண்டும். மனிதன் சுவைக்காக புளிப்பு, இனிப்பு காரம் முதலியவைகளை உணவில் சேர்த்துகொள்கிறான். ஆனால் இந்த உடம்பு தொண்டு செய்வதற்கென்றே பயன்படுத்தவேண்டும். தொண்டு செய்வதற்கு நாம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்ன எண்ணத்தை உண்டாக்கினால் நல்லது. இதே விதி உடையணிவதற்கும் பொருந்தும். ஆடைகள் மானத்தைக் காப்பாற்றுவதற்கும் உஷ்ணம், குளிர் முதலியவைகளிலிருந்து காப்பாற்றக் கொள்வதற்கும் தான் இருக்கின்றன. போலி நாகரிகத்தை வெளிக்காட்ட அல்ல. இன்று எல்லாத்துறைகளிலும் போலி நாகரீகம் தான் பரவியிருக்கிறது. நமதுபிற்கால சந்ததிகள் இதனால் கெட்டு அழிந்து போவார்களே என்ற துக்கம்தான் எனக்கு ஏற்படுகிறுது.” என்றார் காந்தியடிகள்.
இதன் பின் இப்படிப்பட்ட துணிகள் உடுத்துவதினால் என்ன தீமைகள் விளைகின்றன என்பதை விள்க்கிகொண்டே குழந்தைகள் விடுதிக்கு வந்தார். ‘குழந்தைகள் எப்படித் தூய்மையாக இருக்கவேண்டுமென அன்று கூறியிருந்தேன். இன்று மேலும் அதன் மீது ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். கழந்தைகள் எவ்வளவுக்கெவ்வளவு தூய்மையாகவும் சாதாரணமாகவும் தென்படுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் அழகாக இருக்கிறார்கள். தலைமயிர் தலையைக் காப்பாற்றவே இருக்கிறது. கடவுள் கொடுத்திருப்பவையாவும் நன் முறையில் பயன்படுத்துவதற்கே. அவனால் படைக்கப்பட்ட எந்தப் பொருளும் வீணாவதில்லை’ என்றார் காந்தியடிகள்.
நவகாளி யாத்திரையின்போது காந்தியடிகள் ஸ்ரீராம்பூரில் தங்கியிருந்தார். அன்று இரவு இரண்டு மணிக்கு அவர் விழித்துக்கொண்டார். மனுவையும் எழுப்பினார். அன்றுதான் மனுவுக்காக சீட்டித்துணியில் பைஜாமாவும் சட்டையும் தைத்து வந்திருந்தன. காந்தியடிகள் அவளிடம் ‘நீ சீட்டி அல்லது வேறு வகையான கதர் வாங்குவது சம்மந்தமாக யாரிடமாவது சொல்லி இருந்தாயா?’ எனக்கேட்டார்.
மனு இந்தத் துணியை அவர் கொண்டுவரவில்லை. தாங்கள் பிர்லா ஆட்களிடம் சொல்லியிருந்தீர்கள். அவர்கள் தான் கொண்டுவந்தார்கள்’ எனக் கூறினாள்.
அப்படியென்றால் குறைந்த விலையா இருக்கும்? ஆனால் மனதில் இப்படிப்பட்ட துணிகள் உடுத்தினால்தான் அழகாகத்தோன்றும் என்ற எண்ணம் எழுந்திருந்தால் அதை களைந்தெரியவேண்டும். மனிதன் சுவைக்காக புளிப்பு, இனிப்பு காரம் முதலியவைகளை உணவில் சேர்த்துகொள்கிறான். ஆனால் இந்த உடம்பு தொண்டு செய்வதற்கென்றே பயன்படுத்தவேண்டும். தொண்டு செய்வதற்கு நாம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்ன எண்ணத்தை உண்டாக்கினால் நல்லது. இதே விதி உடையணிவதற்கும் பொருந்தும். ஆடைகள் மானத்தைக் காப்பாற்றுவதற்கும் உஷ்ணம், குளிர் முதலியவைகளிலிருந்து காப்பாற்றக் கொள்வதற்கும் தான் இருக்கின்றன. போலி நாகரிகத்தை வெளிக்காட்ட அல்ல. இன்று எல்லாத்துறைகளிலும் போலி நாகரீகம் தான் பரவியிருக்கிறது. நமதுபிற்கால சந்ததிகள் இதனால் கெட்டு அழிந்து போவார்களே என்ற துக்கம்தான் எனக்கு ஏற்படுகிறுது.” என்றார் காந்தியடிகள்.
இதன் பின் இப்படிப்பட்ட துணிகள் உடுத்துவதினால் என்ன தீமைகள் விளைகின்றன என்பதை விள்க்கிகொண்டே குழந்தைகள் விடுதிக்கு வந்தார். ‘குழந்தைகள் எப்படித் தூய்மையாக இருக்கவேண்டுமென அன்று கூறியிருந்தேன். இன்று மேலும் அதன் மீது ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். கழந்தைகள் எவ்வளவுக்கெவ்வளவு தூய்மையாகவும் சாதாரணமாகவும் தென்படுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் அழகாக இருக்கிறார்கள். தலைமயிர் தலையைக் காப்பாற்றவே இருக்கிறது. கடவுள் கொடுத்திருப்பவையாவும் நன் முறையில் பயன்படுத்துவதற்கே. அவனால் படைக்கப்பட்ட எந்தப் பொருளும் வீணாவதில்லை’ என்றார் காந்தியடிகள்.
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|