புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
91 Posts - 61%
heezulia
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
6 Posts - 4%
eraeravi
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
1 Post - 1%
viyasan
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
283 Posts - 45%
heezulia
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
19 Posts - 3%
prajai
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_m10யார் இவள் ? (சிறுகதை) by அகல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இவள் ? (சிறுகதை) by அகல்


   
   
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Apr 12, 2013 8:35 pm

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/s480x480/403123_443229022391407_1933984433_n.jpg

டீ கலருக்கே மாறிப்போன வெள்ளை க்ளாசில் டீ போட்டுக்கொண்டு, அடுப்பு புகை தாங்காமல் கண்ணைக் கசக்கிக்கொண்டே பார்த்துச் சிரித்தார் டீக்கடை சரவணன். பாக்கெட்டில் பைசா கனமாக இருந்தால் மட்டுமே கலகலப்பாக பேசவும் சிரிக்கவும் செய்பவர் என்னிடம் மட்டும் விதி விளக்காக.

காலை 8.15 க்கே வர வேண்டிய பஸ் 8.30 ஆகியும் வரவில்லை. பஸ் வரும் திசையைப் பார்த்தால் சரவணனை பார்க்க நேரிடும். அவர் சிரித்தால் இன்னொரு முறை சிரிக்க வேண்டும். எனக்கு ஏனோ அதில் விருப்பமில்லை.

10 மணிக்கு எக்ஸாம். அட்லீஸ்ட் ஒம்பதரைக்காவது காலேஜ் போயிடனும். கடைசி மூனு செமஸ்டர் மேத்ஸ் பேப்பர் ஒன்னும் கஷ்டமா தெரிலய. சொல்லப் போனால் மேத்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட். ஆனா இந்த ரேண்டம் புராசஸ் மட்டும் ஏனோ சுத்தமா பிடிக்கல. ஆமா கணக்கு பாடத்துல திப்புசுல்தான் வரலாறு மாதிரி தியரியா இருந்தா எப்டி பிடிக்கும் ? ஆனா இந்த தியரிதான் வானவியல் ஆராட்ச்சில அதிகமா தேவைப்படுதாம். படிச்சிருக்கேன்.

அப்பாடா ஒருவழியா நம்ம கும்பகோணம் கோட்டம் ஆரஞ்சு கலர் பஸ் வந்துருச்சு. இடது தோள்ப்பட்டையில் பேக், வலதுகையில் சுருட்டப்பட்ட ரேண்டம் புராசஸ் நோட்ஸ். முன் படிக்கட்டு வழியாக பஸ்ஸினுள் ஏறினேன். பஸ் கிளம்பியது. அதே கண்டக்டர், அப்பப்ப ஓடும் DVD ப்ளேயரை எப்போதும்போல் தட்டி கொண்டிருந்தார். கொஞ்சம் தாமதமா வந்ததால கூட்ட நெரிசலில் பஸ் சந்தையை போல இருந்தது. உட்கார இடமில்லை.

சற்று சாய்ந்து கொள்ள பஸ்ஸின் மேல்புறத்தை தாங்கிக் கொண்டிருக்கும் கம்பி இடம் கொடுத்தது..

ஏதோதோ செய்தும் பலனில்லாமல் DVD ப்ளேயரை விட்டுவிட்டு டிக்கெட் கேட்டு வந்தார் கண்டக்டர். மிகவும் நல்லவர், பரிச்சயமானவர். இருபதுரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு கேட்டேன்.

"என்னணா இன்னைக்கு இவ்ளோ லேட்"

"அத ஏன் கேக்குற தம்பி, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்ல ஒரே ரகள. எதோ கட்சிகாரன் பேனர கிலிச்சுட்டாங்கலாம். அதுக்கு பஸ்ஸ விடமாற்றானுக. நல்லவனுக்கெல்லாம் சாவு வருது, ஆனா இவனுக நல்லாத்தான் இருக்கானுக"

18.50 பைசா மஞ்சள் டிக்கெட், 1.50 பைசா சில்லறையோடு சலிப்பையும் சேர்த்துக் கொடுத்தார் கண்டக்டர்.

எக்ஸாம் நோட்சை கடைசியில் இருந்து சற்று புரட்ட ஆரம்பித்தேன். பக்கத்தில், நாளிதழ் வாசித்துக்கொண்டிருந்தார் வெள்ளை நரை பெரியவர். சினிமா நடிகையின் பேட்டி பெரிய படத்துடன் பாதி பக்கமும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணை பற்றிய செய்தி ஓட்டுச் செய்தியாக ஓரமாகவும் இருந்தது. என்ன செய்ய ? சிரித்துக்கொண்டேன். எக்ஸாம் நோட்ஸ் பக்கம் பார்வை மீண்டும் திரும்பியது.

பின்புறம் ஒரே சத்தம்.

"என்னங்க நீங்க... ரெண்டு ஸ்டாப்புக்கு முன்னாடி ஏறி டிக்கெட் எடுத்தேன் ஆனா இன்னும் சில்லறை தரமாட்றிங்க"

"யோ வச்சுகிட்டாயா வஞ்சகம் பண்றேன்... 9.50 பைசா டிக்கெட்டுக்கு பத்து ரூபா கொடுத்த.. அந்த 50 பைசா வச்சுகிட்டு நான் என்ன அம்பானியாவா ஆகப்போறேன்"

"50 பைசா தான் கெடைக்க மாட்டேன்னு தெரியுதுல்ல, பேசமா 9.50 டிக்கெட்டெ பத்துரூபா ஆக்கச் சொல்லலாமுல்ல உங்க அதிகாரிட்ட"

"ஏன்யா... கவர்மெண்ட் 50 பைசா டிக்கெட் ஏத்துனா பரவாயில்ல. ஆனா சில்லரயில்லாம நாங்க தத்தளிச்சாலும் விடாம நச்சரிப்பிங்க"

அவன் மஞ்சள் கரை பல்லைக்காட்டி சிரித்தான்.

கண்டக்டர் 50 பைசாவை தேடிபிடித்து... "இந்தாயா உன் ஐம்பது காசு.. கோபால் பல்பொடி கெடச்சா கொஞ்சம் வாங்கி அந்த பல்ல மூனு நாளைக்கு விடாம தேயி" நக்கடித்தார்..

மீண்டும் அவனிடம் அதே சிரிப்பு...

கண்டக்டர் நோண்டிப்பார்த்தும் பாடாத DVD, ஒரு பள்ளத்தில் பஸ் இறங்கி ஏறியதும் கரகரப்பான குரலில் கானாவை ஆரம்பித்தது.

பாடலைப்பற்றி அருகில் இரண்டு ஜென்டில் மேன்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"இளையராஜா பாட்ட கேட்டா மனசுக்குள்ள எதோ பண்ணுதுங்க.. என்ன மனுஷன் அவரு. எனக்கு மட்டுமில்ல என் பையனுக்கும் ராஜா பாட்டுன்னா உசுரு. வாழ்நாள்ல ஒரு நாலாவது அவர பாத்தரணும்னு தோனுது"

ஆனால் பாடிக்கொண்டிருந்தது ஜானகி அம்மா பாடிய "விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்" கிளிஞ்சல்கள் படப்பாடல். TR இசையமைத்தது. எழுபது எம்பதுகளில், சந்திரபோஸ், சங்கர் கணேஷ், TR பாடல்களில் சில, இது இளையராஜா பாடலோ என்று யோசிக்க வைக்கும். அவர்களிடமும் தனித்திறமை இருந்தது. அதே காலகட்டதில் இளையராஜா என்ற லெஜண்ட் இருந்ததாலோ என்னவோ அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று நினைத்த நேரத்தில், பஸ் அடுத்த நிறுத்தத்தை அடைந்தது.

அன்று அந்த ஊர் சந்தை நாள். காலையிலேயே மக்கள் நெரிசல் சாலையின் இருபுறமும் நிறைந்திருந்தது. பேருந்தில் அடித்துப் பிடித்து மக்கள் ஏறினர். பேருந்தின் ஒரு ஜன்னலில் மணப்பாறை முறுக்கும், பக்கத்து ஜன்னலில் வெள்ளரிக்காய் வியாபாரமும் நடந்து கொண்டிருந்தது.

நெரிசலுக்கிடையே கஷ்டப்பட்டு ஒரு பெண்மணி ஏறினாள். முன்னரே ஒரு பெண் அமர்ந்திருக்கும் இருக்கையில்,

"இங்க யாரவது வாரங்கலாம்மா"

"இல்ல..."

"நான் உக்காரலாம்ல" சாந்தமான குரலில் கேட்டாள்.

"ஹ்ம்ம்ம்ம்" தலையை ஆட்டினாள்..

அமர்ந்துகொண்டாள்.

முப்பது வயதிருக்கும். சற்று தடித்த உடல், வெள்ளை நிறம், நல்ல அழகு, காஸ்ட்லியான புடவை, கழுத்து நிறைய நகை, பூந்தோட்டதிற்குள் புகுந்ததுபோல் ஒருவாசம் அவளிடம் இருந்து...

வண்டி புறப்பட்டது...

"தப்பி கொஞ்சம் தள்ளுப்பா.." பின்னிருந்து ஒரு குரல்...

ஒல்லியான ஒரு கிராமத்து பெண். கருத்த உடல், அழுக்குச்சட்டை, சரியாக வாரப்படாத முடி, மூக்கில் கொஞ்சம் சளியோடு ஒரு குழந்தையை இடுப்பில் வைத்திருந்தாள்.

சற்று விலகி இடம் கொடுத்தேன்.

உட்கார இடமில்லாமல் இடதுகையில் குழந்தையை அணைத்துக்கொண்டு வலது கையில் கம்பியைப் பிடித்துக் கொண்டு அந்த அழகான பெண் முன் நின்றாள்.

"உக்காறியாம ?"

"இல்லைங்க பரவாயில்ல"

"எங்க போகணும் ?

"திருச்சிக்கு..."

"போக இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமே.. எவ்ளோ நேரம் கொழந்தய வச்சுட்டு நிப்பிங்க"

"பரவயில்லமா" தயங்கினாள்...

அவளுடைய காஸ்ட்லி லுக் இவளின் தயக்கத்திற்கு காரணமோ என்னவோ ?

"சரி குழந்தைய கொடுமா.."

"பரவாயில்லமா"

"ஐயோ பரவாயில்ல குடுங்க"

ஒரு கூடை ரோஜா ஒட்டு மொத்தமாக மலர்ந்தால் எப்படி இருக்குமோ அத்தனை முக மலர்ச்சியோடு குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள்.

"உங்க பேரென்ன ? என்ன படிக்கிறிங்க ?" குழந்தையிடம் அவளின் கேள்விகள் ஆனந்தமாக தொடர்ந்தது.

சாலையின் மேடு பள்ளம் தாலாட்ட, சற்று நேரத்தில் இமைகளை சுருக்கியது குழந்தை. அதன் எண்ணை வடியும் தலையை மார்போடு அணைத்துக்கொண்டு, தண்ணீராக வெளிவந்த சளியை, தனது கருப்புகலர் பேக்கில் இருந்து பாலினும் வெண்மையான கைக்குட்டையை எடுத்து சுத்தமாக துடைத்து விட்டு அவளது தாடையை குழந்தையின் தலையில் மென்மையாக வைத்துக் கொண்டாள்..

சற்று நேரத்தில் குழந்தை எழுந்து அழ ஆரம்பித்து...

"குடுங்கம்மா நான் பாத்துக்குறேன்" குழந்தையின் தாய் சொன்னாள்..

"இல்ல பரவாயில்லமா"

எதையோ அவசரமாக தேடினாள். தனது பேக்கில் இருந்து ஒரு சிவப்பு நிற பிஸ்கட்பாக்கெட்டை எடுத்து மூன்று கிரீம் பிஸ்கட்டை ஒவ்வொன்றாக ஊட்டிவிட்டாள். சுத்தமாக இருக்கும் தனது தண்ணீர்பாட்டிலை எடுத்து, எச்சிலாகவே குடிக்க வைத்தாள். குழந்தை மீண்டும் உறங்க ஆரம்பித்தது. மீண்டும் மார்போடு அணைத்துக்கொண்டு தனது கைகளை குழந்தையின் மேல் படுத்திக் கொண்டாள். வெள்ளைக்காரி ஒருவள் ஆப்ரிக்கா குழந்தையை அணைத்துக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த காட்சி.

எனக்கு இது வித்தியாசமான உணர்வு... இதுவரை பார்த்திராத உணர்வு... என்னுள் எதை எதையோ சிந்திக்கச் செய்தது..

"குழந்தைகள் இல்லாதவர்கள் குழந்தைகளைக் கண்டால் இவ்வாறு பிரியமாக இருப்பார்கள். மாங்கல்யம் கழுத்தில் இருக்கும் இந்த பெண்ணிற்கு ஒருவேளை குழந்தை இல்லையோ ? அந்த ஏக்கத்தில் இப்படி அன்பு காட்டுகிறாளோ ? ச்சே ச்சே இருக்காது. எதுத்த வீட்டு அத்தைக்குந்தான் கொழந்த இல்ல. அவளும் அன்பு காட்டுவா அவளுக்கு ஈகுவலா இருக்கவங்கள்ட மட்டும்.

நம்ம ஊர் கோவில்லையே மேல்ஜாதி கீழ் ஜாதினு இன்னும் தீண்டாமை இருகத்தான செய்யுது. கீழ் ஜாதிக்காரங்க கோவிலுக்குள்ள போகக் கூடாது. ஆனா இவள பாத்தா அந்த அம்மன பாத்த மாதிரி இருக்கு.

ஒருவேள இவ கடவுளின் குழந்தையோ ? அன்னை தெரசாவோ ? யாருனே தெரியாது.. யாரா இருப்பா ? கேட்டுப் பாக்கலாமா ? இவ்வாறு கேள்விகள் என் மனதிற்குள் ஊற்று நீராய் கசிந்துகொண்டு இருந்தது.

திடீரென எதயோ தட்டும் சத்தம் கேட்டது.. தம்பி.. தம்பி.. கண்டக்டர் கத்தினார்..

பஸ் நின்னு ஒரு நிமிஷம் ஆகப்போகுதுப்பா... என்னாச்சு ? காலேஜ் வந்துருச்சு... எறங்குப்பா...

நினைவுகள் திரும்பியது.. மன நிறைவா, பாரமா தெரியவில்லை. உன்னதமான உணர்வுகளைச் சுமந்துகொண்டு கல்லூரியின் வாசலில் பாதத்தைப் பதித்தேன்.

முற்றும்.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/04/blog-post_12.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Apr 13, 2013 10:09 am

கதை நன்று, தட்டச்சுப் பிழைகளைத் திருத்தவும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக