புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
9 Posts - 82%
mruthun
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
1 Post - 9%
heezulia
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
2 Posts - 1%
manikavi
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
2 Posts - 1%
mruthun
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_m10நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நொச்சி வந்தாச்சு! கொசுக்கள் போயே போச்சு!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Apr 01, 2013 10:45 am

அரசோ, தனிமனிதர்களோ என்ன செய்தாலும் அடக்க முடியாத கலவரம் கொசுக் கலவரம். கொசுவர்த்தியில் தொடங்கி, எலெக்ட்ரானிக் கொசு விரட்டும் இயந்திரம்வரை அறிவியல், ஆயிரம் தீர்வுகளைஇதற்குக் கொடுத்தாலும், எல்லாவற்றையும் முறியடித்து, ங்கொய்" என்றுகாதில் ரீங்கரித்து, மனிதனுக்கு பெப்பே காட்டும் புரட்சி வீரன் கொசு. ராணுவத்தால்கூட அடக்கமுடியாத இப்பிரச்சினைக்கு நம்மூர் பாட்டி வைத்தியம் மூலமாக அதிரடித் தீர்வு காணகளமிறங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. கொசுக்களுக்கு எதிரான மனிதர்களின் உரிமைப்போருக்கு சென்னை மாநகராட்சி பயன்படுத்தப் போகும் ஆயுதத்தின் பெயர் நொச்சிச் செடி.
-
நீர்வழித்தடங்களின் ஓரத்தில் நொச்சிச் செடிகளை வளர்த்தல், வீடுகளுக்கு நொச்சிச் செடி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்தப் போவதாக சென்னை மாநகராட்சியின் சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
-
வாசிக்க வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், நொச்சியின் மகத்துவத்தை அறிந்தவர்கள் இதை வரவேற்கவே செய்வார்கள். சென்னை மாநகருக்கு மட்டுமின்றி, இந்தியா முழுமைக்குமேகூட இத்திட்டத்தை விரிவுபடுத்தலாம். வெப்பமண்டலப் பிரதேசங்களுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மாபெரும்கொடை நொச்சிச் செடி.
-
இதென்ன புதுச்செடி என்று ஆச்சரியப்படாதீர்கள். வேலியோரங்களிலும், கிராமச்சாலைகளின் இருபுறங்களிலும் புதராக வளர்ந்த நொச்சிச் செடிகளை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். வெண்ணொச்சி, கருநொச்சி என்று இதில் இரண்டு வகைகள் உண்டு. வெண்ணொச்சி சுமார் 30 அடிவரை மரம் மாதிரி வளரக்கூடிய தன்மை கொண்டது. இதன் கிளைகள் வெண்மை நிறத்தில் இருக்கும். ஆற்றங்கரையோரங்களில் புதர்மாதிரி வளரும். இதன் கிளைகள் ஒல்லியானதாக இருந்தாலும் வலிமையானவை. முன்பெல்லாம் வகுப்பறைகளில் மாணவர்களை மிரட்ட, ஆசிரியர்கள் வைத்திருக்கும் பிரம்பு பெரும்பாலும் நொச்சிப் பிரம்பாக இருக்கும். கிராமங்களில் இதன் இளம் கிளைகளைக் கொண்டு கூடை பின்னுவார்கள். இந்தக் கூடையில் வைக்கப்படும் பொருட்களை பூச்சிபொட்டு நெருங்காது. வயற்காடுகளுக்கு வேலியாக நொச்சி வளர்ப்பதுண்டு. வலிமையான வேலியாக கால்நடைகளிடமிருந்து பயிரைக் காக்கும். வெள்ளாடுகூட நொச்சி இலைகளை சாப்பிட விரும்புவதில்லை. நொச்சித் தழைகளை இயற்கை உரமாகவும் பயன்படுத்துகிறார்கள்.
-
தமிழர் போர் மரபிலும் நொச்சிக்கு இடமுண்டு. சங்க காலத்தில் உறையூரை தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்த தித்தன் என்கிற சோழ மன்னன் தன்னுடைய நாட்டு எல்லைக்கு நொச்சிவேலி அமைத்ததாக வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது.
-
சங்க இலக்கியத்தில் நொச்சித்திணை என்று ஒரு திணையே உண்டு. நொச்சித்திணைவீரர்கள் நொச்சிப்பூ மாலை சூடி, எதிரிகளின் முற்றுகையை ஊடறுப்பார்கள் என்று பாடல்கள் குறிப்பிடுகின்றன. நொச்சிப்பூக்கள் மயில்நீல நிறம் கொண்டவை.
நொச்சியின் எல்லாப் பயன்பாடுகளைக் காட்டிலும் அதன் மருத்துவக்குணங்களே சிறப்பானதாக இருக்கிறது. இன்றும் கிராமங்களில் கொசுக்களையும் பூச்சிகளையும் விரட்ட, நொச்சி இலைகளை எரித்து புகைபோடும் பழக்கம் நீடிக்கிறது (நொச்சி இல்லாதஇடத்தில் வேம்பு). சிறுநகரங்களில், ஈக்கள் மொய்க்கக்கூடிய பழங்களை விற்கும் வியாபாரிகள், இலைகளோடு கூடிய நொச்சிக்குச்சிகளை விசிறி, அவற்றை விரட்டுவதைக் கவனித்திருக்கலாம். நொச்சி இலைகளை தலையணை உறைக்குள் பஞ்சுக்குப் பதிலாக அடைத்துப் பயன்படுத்தினால்கழுத்து வலி, தலைவலி நீங்கும் என்பது பழங்காலத்து வைத்தியம். நொச்சி இலையை சாறெடுத்து, கட்டிகளின் மீது தடவிவர, கரைந்துவிடுமாம். எதற்கெல்லாம் தைலம் பயன்படுத்துகிறோமோ அந்த உபாதைகளுக்கு எல்லாம் நொச்சிஇலைச் சாற்றை தைலத்துக்குப் பதிலாக உபயோகப்படுத்தலாம். குடிநீருக்கு வெட்டிவேர் பயன்படுத்துவதைப்போல நொச்சி வேரையும் பயன்படுத்தலாம். நொச்சிவேர்போட்டு,நீர் காய்ச்சிக் குடித்தால் வயிற்றில் பூச்சித்தொல்லை தீரும். இவ்வாறாக நம்முடைய பாட்டி வைத்திய முறைகளில் இன்னும் ஏராளமான பிரச்சினைகளுக்கு நொச்சி தீர்வளிக்கிறது.
-
கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் நொச்சியை வளர்க்க பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. ஆறு, ஓடை, காடுகளில் கிடைக்கும் நொச்சிச் செடிகளை பெயர்த்தெடுத்து வந்து வளர்க்கலாம். நகரங்களில் வசிப்பவர்கள் நொச்சி வளர்க்க விரும்பினால், அருகிலிருக்கும் வனத்துறை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை உதவிக்கு நாடலாம். சில தனியார் நர்சரிகளிலும் நொச்சிச்செடி வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்டோமானால், ஏற்பாடு செய்து தருவார்கள். அரசு சித்த மருத்துவ வளாகங்களில் நொச்சி வளர்க்கப்படுகிறது.
-
சென்னை மாநகராட்சியின் நொச்சி வளர்ப்புத் திட்டம் பெரும் வெற்றியடையும் பட்சத்தில், இதற்கு வணிக அந்தஸ்தும் கிடைத்துவிடக்கூடும். யாருக்குத் தெரியும்? இப்போது கேட்பாரற்று ஆங்காங்கே வளரும் நொச்சியைக்கூட பயிர் செய்யக்கூடிய நிலைமை வந்தாலும் வரும்.
தற்போது கொசுவை ஒழிக்க நாம்பயன்படுத்தி வரும் கெமிக்கல் முறைகளை எதிர்க்கும் திறன், கொசுக்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விட்டிருக்கிறது. எனவே, இயற்கை ஏற்கெனவே நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஏற்பாடுகளை மீண்டும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம். என்ன இருந்தாலும் உலகம் உருண்டைதானே... வாழ்க்கை வட்டம்தானே?
-
புதிய தலைமுறை




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 01, 2013 10:53 am

நொச்சி நொச்சிதான் - சூப்பர் மச்சின்னு சொல்லுங்க.

இயற்கை இயற்கை தான் - நல்ல பகிர்வு பவுன்ராஜ்.

நொச்சிகுப்பத்தில் அப்ப கொசு இருக்காதோ? இல்ல இருக்கும் பெயர் மட்டும் தானே - கொசுவுக்கு பெயரை படிக்க தெரியாதுல்ல!!!




ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Apr 01, 2013 12:48 pm

நொச்சி செடிக் கிளையை உடைத்து நட்டு வைத்தாலே போதும். தானாக வளர்ந்து விடும்.
சளித்தொல்லை க்கு வேது பிடிப்பதற்கு இதன் இலை பயன்படும்.

நல்ல பகிர்வு !

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 01, 2013 4:25 pm

எல்லாம் சரி....நொச்சிக் குச்சியில் அடி வாங்கி இருக்கின்றீர்களா ? ஒரு மாதம் வரை வலிக்கும். தழும்பு மறைய ஆறுமாதம் கூட ஆகும்.

நீளமான நொச்சிக்குச்சியை ஒரு முனையில் கூராக்கி ஈட்டிபோல் செய்துகொள்வோம். அதை வேகமாக வீச, தற்காலத்தில் ஜாவலின் என்கிறார்களே அதுபோல் நீண்ட தூரம் பாய்ந்து தரையில் குத்திக்கொண்டு நிற்கும். யாருடைய நொச்சிக்குச்சி அதிக தூரம் பாய்கிறது என்பதை வைத்து எங்கள் வலிமை முடிவு செய்யப்படும். சில சமயம், சோளக்காட்டில் திருட்டுத்தனமாக வந்து பயிரை நாசம் செய்யும் பன்றியைகூட இதை வீசி காயப்படுத்தி உள்ளேன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 01, 2013 4:32 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எல்லாம் சரி....நொச்சிக் குச்சியில் அடி வாங்கி இருக்கின்றீர்களா ? ஒரு மாதம் வரை வலிக்கும். தழும்பு மறைய ஆறுமாதம் கூட ஆகும்.

நீளமான நொச்சிக்குச்சியை ஒரு முனையில் கூராக்கி ஈட்டிபோல் செய்துகொள்வோம். அதை வேகமாக வீச, தற்காலத்தில் ஜாவலின் என்கிறார்களே அதுபோல் நீண்ட தூரம் பாய்ந்து தரையில் குத்திக்கொண்டு நிற்கும். யாருடைய நொச்சிக்குச்சி அதிக தூரம் பாய்கிறது என்பதை வைத்து எங்கள் வலிமை முடிவு செய்யப்படும். சில சமயம், சோளக்காட்டில் திருட்டுத்தனமாக வந்து பயிரை நாசம் செய்யும் பன்றியைகூட இதை வீசி காயப்படுத்தி உள்ளேன்.

சின்ன வயதில் பல சாகசம் செய்து உள்ளீர் என்று சொல்லுங்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 01, 2013 4:32 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எல்லாம் சரி....நொச்சிக் குச்சியில் அடி வாங்கி இருக்கின்றீர்களா ? ஒரு மாதம் வரை வலிக்கும். தழும்பு மறைய ஆறுமாதம் கூட ஆகும்.

நீளமான நொச்சிக்குச்சியை ஒரு முனையில் கூராக்கி ஈட்டிபோல் செய்துகொள்வோம். அதை வேகமாக வீச, தற்காலத்தில் ஜாவலின் என்கிறார்களே அதுபோல் நீண்ட தூரம் பாய்ந்து தரையில் குத்திக்கொண்டு நிற்கும். யாருடைய நொச்சிக்குச்சி அதிக தூரம் பாய்கிறது என்பதை வைத்து எங்கள் வலிமை முடிவு செய்யப்படும். சில சமயம், சோளக்காட்டில் திருட்டுத்தனமாக வந்து பயிரை நாசம் செய்யும் பன்றியைகூட இதை வீசி காயப்படுத்தி உள்ளேன்.

அடி வாங்கினதில்ல ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக