புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_m10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_m10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_m10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_m10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_m10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_m10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_m10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_m10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_m10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_m10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_m10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_m10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_m10கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Mar 19, 2013 10:42 am

கண்ணீரில் நனையும் காப்பகப் பெற்றோர்

முதியோரைக் காப்பகங்களில் கொண்டு சேர்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் காப்பகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

வயதான பெற்றோரை, கோயில் குளங்களுக்கு அழைத்துச் சென்ற கூட்டுக்குடும்ப வாழ்க்கை, இப்போது சிதறிப் போய்விட்டது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில், பெற்றோரின் ஆலோசனையால் பிள்ளைகள் நல்வழிப்பட்டனர். பண்பாடு, கலாசாரம் காப்பாற்றப்பட்டது.

இன்று பணமே முக்கிய காரணியாகி விட்டது. அன்பு, பாசப் பிணைப்பு அறுந்து போய்விட்டது. பணத்தைத் தேடி அலையும் இளம் தலைமுறையினர், பெற்று வளர்த்த பெற்றோரை மறந்து விடுகின்றனர். பின் அவர்களைச் சுமையாகவே கருதுகின்றனர்.

ஆடம்பர வாழ்க்கையால் குடும்பத்தில் மருமகள், மாமியார் பிரச்னை ஏற்படுகிறது. இது மகன்-தந்தை உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக காப்பகங்களில் பெற்றோர் சேர்க்கப்படுகின்றனர்.

காப்பகங்களில் பெற்றோரைக் குழந்தைகள் கொண்டு சேர்ப்பதைவிட, மன அமைதி இழந்த பெரும்பாலான பெற்றோர், தாங்களாகவே தேடிச்சென்று சேருகின்றனர்.

அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 300 பேர் வரை காப்பகங்களில் உள்ளனர். இவ்வாறு காப்பகங்களில் சேர்க்கப்பட்ட பெற்றோர்களில் 20 சதவிகிதம் பேர் நீரிழிவு நோய் மற்றும் வாத நோயால் அவதிப்படுகின்றனர்.

காப்பகங்களில் பெற்றோரைச் சேர்த்த பிள்ளைகளில் 60 சதவிகிதம் பேர், எப்போதாவது ஒரு முறை காப்பகத்திற்கு வந்து பெற்றோரைப் பார்க்கின்றனர். 10 சதவிகிதம் பேர் மட்டும் வாரம் ஒருமுறை வந்து பெற்றோரைப் பார்த்துவிட்டு தேவைக்கு பணம் கொடுத்துச் செல்வதாகவும், மீதியுள்ள 30 சதவிகிதம் பேர் பெற்றோரை அநாதையாகவே விட்டுவிடுவதாகவும் காப்பகத்தினர் கூறுகின்றனர்.

பெற்றோரைக் காப்பகங்களில் விடும் நகர கலாசாரம், இப்போது கிராமப்புறங்களிலும் பரவி உள்ளது. என்னதான் இருந்தாலும், பெற்ற பிள்ளைகள், பேரக் குழந்தைகளுடன் வீட்டில் கொஞ்சிய நாளை எண்ணி ஏங்கிய நிலையில்தான் காப்பகங்களில் பெற்றோர்கள் வருந்துகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, இருந்த சொத்தை எழுதி வாங்கிவிட்டு, காப்பகத்துக்கு அனுப்பி விட்ட பிள்ளைகளை நினைக்கும் பெற்றோரும், சொத்தை எழுதி வாங்க நினைத்த பிள்ளைகளுக்குப் பயந்து காப்பகத்துக்கு வந்த பெற்றோரும் கணிசமாக இருக்கின்றனர்.

காப்பகங்களில் இவர்களுக்கு உணவு ஒரு பிரச்னை இல்லை. ஆனால் இவர்களுக்கு அங்கு போதிய மருத்துவ வசதி இல்லை என்பது குறைபாடாக சொல்லப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட முதியோர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உடன் இருந்து கவனிக்க போதிய ஊழியர் இல்லாத சூழ்நிலை காப்பகங்களில் உள்ளன.

நோய்வாய்ப்பட்ட முதியவர்களைக் காப்பகங்களில் கவனிக்க ஊழியர்கள் ஆர்வமாக முன்வருவதில்லை. அவ்வாறு வரும் ஊழியர்களுக்குப் போதிய ஊதியமும் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்தக் குறைபாடுகளை ஓரளவுக்குத் தீர்க்க, அந்தந்தப் பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார மருத்துவமனை மருத்துவர் குழு, காப்பகங்களுக்கு வாரம் ஒரு முறை முகாமிட்டு முதியோர்களின் உடல் நலத்தைச் சோதித்து சிகிச்சை அளிக்கலாம்.

கல்மனத்துடன் இல்லாமல், பிள்ளைகள் நோய்பட்ட பெற்றோரைக் காப்பகங்களுக்குச் சென்று பார்த்து அவர்களைக் குறைந்தபட்சம் மருத்துவமனைக்காவது அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யலாம்.

"இன்றைய இளைய சமுதாயத்தினர், நாளைய முதியோர்'' என்பதை மட்டும் மறந்து விடக்கூடாது.

( சு. பழனி - நன்றி - தினமணி )

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 19, 2013 1:35 pm

தெய்வங்கள் இரண்டையும் தெருவுக்கு அனுப்பி விட்டு கோவில் கோவிலாக அலைகிற முட்டாள்கள் இருக்கும் வரை உலகம் உருப்படாது . அவர்களை மண்டையில் அடி

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Apr 01, 2013 1:17 pm

நம்ம காந்தி படம் எடுத்தாரே 'அட்டன்பரோ' அவரும்
'காப்பகத்துக்கு' போயிட்டாராம். இன்னைக்கு 'டைம்ஸ் ஆப் இந்தியா' ல படிச்சேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 01, 2013 4:53 pm

பதிவுக்கு நன்றி சாமி அவர்களே. போனமுறை கவிதைப்போட்டிக்காக நான் எழுதிய ஒரு கவிதை இந்தக் கட்டுரையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. அதை மீண்டும் இங்கு தந்துள்ளேன், உங்களின் பார்வைக்காக புன்னகை

வேரை மறந்த விழுதுகள்
[இன்னிசைக் கலிவெண்பா]
வந்தாரை நம்நாட்டில் வாழவைப்போம், நம்முயிரைத்
தந்தோரை வீட்டைவிட்டே தள்ளிவிடும் வன்கொடுமை
நொந்தாரே பெற்றோர்கள் நோயொடுமூ தோரில்லில்
சிந்தாமல் ஒர்துளிநீர் சிற்றறிவால் பிள்ளைகள்பார்

இங்கிவரைப் பெற்றெடுத்து இன்னலுடன் தான்வளர்த்து
மங்கியதோர் கண்களுடன் மண்ணுக்கு நீரிறைத்து
பொங்கிவரும் பொங்கலிட்டுப் போற்றியவர் இப்பொழுதோ
தங்குகிறார் யாருமின்றித் தான்முதியோர் இல்லமதில்

பொல்லாத இந்நிலையில் புண்ணான தாய்சொல்வாள்:
"கல்யாணம் செய்துவைத்தோம் கட்டழகைப் கைபிடித்தான்
இல்லாது சொல்லியெமை இங்கிருக்க வைத்துவிட்டாள்
கல்லாதார் நாங்கள்தான் கற்கின்றோம் காலம்போய்
நல்லவனே முன்பொருகால் நன்றியினைத் தான்மறந்தான்"

"தாய்போதும் என்கின்றான் தந்தையரோ வேண்டாமாம்
நாய்எனவே ஓடிவந்தே நானிருப்பேன் தாதியைப்போல்
நோய்பெருத்த தந்தையர்க்கோ நோக்கிடமூ தோரில்லம்
பேய்க்குணமே உள்ளவனாய்ப் பெற்றேன்பார் என்மகனை"

"வேரதனை விட்டகன்ற வேர்விழுதே நீகேளாய்
ஊரதனில் உள்ளோர்கள் உன்னைநகை யாடிடுவார்
பாரிதைநீ இவ்விடத்துன் பையனுனைச் சேர்க்கவந்தே
பேரேட்டில் பேர்பதிப்பான் போ"

-----சுந்தரராஜ் தயாளன்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக