புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
Page 7 of 33 •
Page 7 of 33 • 1 ... 6, 7, 8 ... 20 ... 33
ஜ பி ல் - 6 மகுடம் யாருக்கு ? [168Vote ]
சென்னை சூப்பர் கிங்ஸ்
12273%டெல்லி டெர் டெவில்ஸ்
21%சன்ரைசெர்ஸ் ஹைத்ராபாத்
42%கிங்ஸ் லெவன் பஞ்சாப்
138%கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
53%மும்பை இந்தியன்ஸ்
138%புனே வார்ரியர்ஸ்
00%ராஜஸ்தான் ராயல்ஸ்
42%ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர்
53%
First topic message reminder :
இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .
குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.
அட்டவணை
இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .
குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.
அட்டவணை
தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:
http://livecricket1.bollym4u.com/
இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:
http://www.boxtv.com/ipl/
--நன்றி இனியவன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மும்பை இந்தியன்ஸ் மகா மோசம்; முதலிடத்தில் ராஜஸ்தான்
மும்பை இண்டியன்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ராஜஸ்தான்.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை ராஜஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.2 ஓவர்களில் 92 ரன்களுக்கு சுருண்டது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ராகுல் திராவிட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணியில் ஷேன் வாட்சன்-அஜிங்க்ய ரஹானே ஜோடி, மலிங்கா வீசிய, ஆட்டத்தின் 2-வது ஓவரில் இருந்தே அதிரடியைத் தொடங்கியது. அந்த ஓவரில் ரஹானே 2 பவுண்டரிகளை விரட்ட, ரிஷி தவன் ஓவரில் வாட்சன் ஒரு சிக்ஸரை விளாசினார்.
ஓஜா வீசிய 6-வது ஓவரில் ரஹானே சிக்ஸரை விளாச, மலிங்கா வீசிய அடுத்த ஓவரில் வாட்சன் 3 பவுண்டரிகளை விரட்டினார். இதனால் அந்த ஓவரின் முடிவில் 58 ரன்களை எட்டியது ராஜஸ்தான். அந்த அணி 62 ரன்களை எட்டியபோது போலார்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஷேன் வாட்சன். அவர் 25 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார்
இதையடுத்து திஷந்த் யாக்னிக் களம்புகுந்தார். போலார்ட் வீசிய 10-வது ஓவரில் யாக்னிக் பிரமாண்ட சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாச, அந்த ஓவரின் முடிவில் 88 ரன்களை எட்டியது ராஜஸ்தான். அந்த அணி 115 ரன்களை எட்டியபோது ஹர்பஜன் பந்துவீச்சில் சச்சினிடம் கேட்ச் ஆனார் யாக்னிக். அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்த ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்களில் ரன் அவுட்டாக, பிராட் ஹோட்ஜ் களம்புகுந்தார். அவர் வந்த வேகத்தில் ஹர்பஜன் பந்துவீச்சில் சிக்ஸர் ஒன்றை விளாசினார். இதனிடையே ரஹானே 46 பந்துகளில் அரைசதம் கண்டார். ஐபிஎல் போட்டியில் அவர் எடுத்த 7-வது அரை சதம் இது. ஜான்சன் வீசிய, ஆட்டத்தின் கடைசி ஓவரில் பிராட் ஹோட்ஜ், ஒரு சிக்ஸரை விளாச, ரஹானே தன் பங்குக்கு 3 பவுண்டரிகளை அடித்தார். இதனால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது மும்பை. ரஹானே 54 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 68, பிராட் ஹோட்ஜ் 15 பந்துகளில் 2 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் முதல் ஓவரிலேயே சச்சின் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மும்பையின் சரிவு தவிர்க்க முடியாததானது.
ரிக்கி பாண்டிங் 4, ரோஹித் சர்மா 2, போலார்ட் 1 ரன்களில் ஆட்டமிழக்க, 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறியது மும்பை.
அந்த அணி 61 ரன்களை எட்டியபோது தினேஷ் கார்த்திக் 30 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பையின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது. பின்னர் வந்த ரிஷி தவன் ரன் ஏதுமின்றியும், ஹர்பஜன் 1, ஜான்சன் 11, அம்பட்டி ராயுடு 27 ரன்களில் வெளியேற, மும்பையின் இன்னிங்ஸில் 92 ரன்களில் முடிவுக்கு வந்தது. இதனால் ராஜஸ்தான் 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.
ராஜஸ்தான் தரப்பில் ஜேம்ஸ் பாக்னெர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஹானே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல் போட்டி வரலாற்றில் மும்பை அணி, ரன்கள் அடிப்படையில் கண்ட மிகப்பெரிய தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது ராஜஸ்தான்.
-வெப்துனியா
மும்பை இண்டியன்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ராஜஸ்தான்.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை ராஜஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.2 ஓவர்களில் 92 ரன்களுக்கு சுருண்டது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ராகுல் திராவிட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணியில் ஷேன் வாட்சன்-அஜிங்க்ய ரஹானே ஜோடி, மலிங்கா வீசிய, ஆட்டத்தின் 2-வது ஓவரில் இருந்தே அதிரடியைத் தொடங்கியது. அந்த ஓவரில் ரஹானே 2 பவுண்டரிகளை விரட்ட, ரிஷி தவன் ஓவரில் வாட்சன் ஒரு சிக்ஸரை விளாசினார்.
ஓஜா வீசிய 6-வது ஓவரில் ரஹானே சிக்ஸரை விளாச, மலிங்கா வீசிய அடுத்த ஓவரில் வாட்சன் 3 பவுண்டரிகளை விரட்டினார். இதனால் அந்த ஓவரின் முடிவில் 58 ரன்களை எட்டியது ராஜஸ்தான். அந்த அணி 62 ரன்களை எட்டியபோது போலார்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஷேன் வாட்சன். அவர் 25 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார்
இதையடுத்து திஷந்த் யாக்னிக் களம்புகுந்தார். போலார்ட் வீசிய 10-வது ஓவரில் யாக்னிக் பிரமாண்ட சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாச, அந்த ஓவரின் முடிவில் 88 ரன்களை எட்டியது ராஜஸ்தான். அந்த அணி 115 ரன்களை எட்டியபோது ஹர்பஜன் பந்துவீச்சில் சச்சினிடம் கேட்ச் ஆனார் யாக்னிக். அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்த ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்களில் ரன் அவுட்டாக, பிராட் ஹோட்ஜ் களம்புகுந்தார். அவர் வந்த வேகத்தில் ஹர்பஜன் பந்துவீச்சில் சிக்ஸர் ஒன்றை விளாசினார். இதனிடையே ரஹானே 46 பந்துகளில் அரைசதம் கண்டார். ஐபிஎல் போட்டியில் அவர் எடுத்த 7-வது அரை சதம் இது. ஜான்சன் வீசிய, ஆட்டத்தின் கடைசி ஓவரில் பிராட் ஹோட்ஜ், ஒரு சிக்ஸரை விளாச, ரஹானே தன் பங்குக்கு 3 பவுண்டரிகளை அடித்தார். இதனால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது மும்பை. ரஹானே 54 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 68, பிராட் ஹோட்ஜ் 15 பந்துகளில் 2 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் முதல் ஓவரிலேயே சச்சின் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மும்பையின் சரிவு தவிர்க்க முடியாததானது.
ரிக்கி பாண்டிங் 4, ரோஹித் சர்மா 2, போலார்ட் 1 ரன்களில் ஆட்டமிழக்க, 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறியது மும்பை.
அந்த அணி 61 ரன்களை எட்டியபோது தினேஷ் கார்த்திக் 30 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பையின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது. பின்னர் வந்த ரிஷி தவன் ரன் ஏதுமின்றியும், ஹர்பஜன் 1, ஜான்சன் 11, அம்பட்டி ராயுடு 27 ரன்களில் வெளியேற, மும்பையின் இன்னிங்ஸில் 92 ரன்களில் முடிவுக்கு வந்தது. இதனால் ராஜஸ்தான் 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.
ராஜஸ்தான் தரப்பில் ஜேம்ஸ் பாக்னெர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஹானே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல் போட்டி வரலாற்றில் மும்பை அணி, ரன்கள் அடிப்படையில் கண்ட மிகப்பெரிய தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது ராஜஸ்தான்.
-வெப்துனியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நேற்றைய இரண்டு ஆட்டங்களும் அமர்க்களம்
யினியவன் wrote:நேற்றைய இரண்டு ஆட்டங்களும் அமர்க்களம்
ஹைதராபாத் அணிக்கு எதோ அதிர்ஷ்டம் அடிக்குது .. குறைவான ரன்கள் எடுத்தாலும் , சிறப்பான பந்துவீச்சில் வெற்றி பெற்று விடுகின்றனர் .
புனே அணியின் அணித்தலைவர் தேர்வு தவறு என்று நினைக்கின்றேன் . மேத்யுஸ் விட சிறந்த அணித்தலைவர் திறமை உடைய வீரர்கள் அந்த அணியில் உண்டு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த இரண்டு அணிகளும் தப்பித்தவறி அடுத்த சுற்றுக்கு முன்னேறினால் - எதிர் அணிகளுக்கு ரொம்ப எளிதாகி விடும் பைனல்ஸ் செல்வதற்கு.பாலாஜி wrote:
ஹைதராபாத் அணிக்கு எதோ அதிர்ஷ்டம் அடிக்குது .. குறைவான ரன்கள் எடுத்தாலும் , சிறப்பான பந்துவீச்சில் வெற்றி பெற்று விடுகின்றனர் .
புனே அணியின் அணித்தலைவர் தேர்வு தவறு என்று நினைக்கின்றேன் . மேத்யுஸ் விட சிறந்த அணித்தலைவர் திறமை உடைய வீரர்கள் அந்த அணியில் உண்டு
யினியவன் wrote:இந்த இரண்டு அணிகளும் தப்பித்தவறி அடுத்த சுற்றுக்கு முன்னேறினால் - எதிர் அணிகளுக்கு ரொம்ப எளிதாகி விடும் பைனல்ஸ் செல்வதற்கு.பாலாஜி wrote:
ஹைதராபாத் அணிக்கு எதோ அதிர்ஷ்டம் அடிக்குது .. குறைவான ரன்கள் எடுத்தாலும் , சிறப்பான பந்துவீச்சில் வெற்றி பெற்று விடுகின்றனர் .
புனே அணியின் அணித்தலைவர் தேர்வு தவறு என்று நினைக்கின்றேன் . மேத்யுஸ் விட சிறந்த அணித்தலைவர் திறமை உடைய வீரர்கள் அந்த அணியில் உண்டு
ராஜஸ்தான் , பெங்களூர் , சென்னை இந்த மூன்றில் ஒரு அணிதான் கோப்பையை வெல்லும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஐபிஎல்6: சென்னையின் செம சூப்பர் சேஸிங்! ராஜஸ்தான் ராயல்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது!
சென்னை: ஐபிஎல் 6வது தொடரில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரின் 5வது பந்து வரை அற்புதமாக சேஸ் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் டிராவிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக வாட்சனும் ரஹானேவும் களம் இறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் ஓவரை மொஹித் சர்மா வீசினார். முதல் பந்தை வாட்சன் அடித்த போது அதை தடுக்காமல் சென்னை வீரர்கள் விட்டதால் அது பவுண்டரி லைனைத் தொட்டது. ஆனால் இதர பந்துகளில் ராஜஸ்தான் அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. முதல் ஓவர் முடிவில் 5 ரன்களை எடுத்தது அந்த அணி. 2வது ஓவரை ஜாசன் ஹோல்டர் வீசினார். இந்த ஓவரிலும் 5 ரன்களை எடுத்தது அந்த அணி. 2 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ரன்களை சேர்த்தது.
ஓவருக்கு 14 ரன்களை அள்ளிக் கொடுத்த சென்னை
ஆனால் 3 வது ஓவரில் மொஹித் சர்மா வீசிய முதல் பந்தை வாட்சன் சிக்சருக்கு அனுப்பி வைத்தார். கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விளாசினார். இந்த 3வது ஓவரில் மட்டும் 14 ரன்களை வாரிக் கொடுத்தார் மொஹித் சர்மா. 3வது ஓவரின் முடிவில் 24 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. வாட்சன் 11 பந்துகளில் 18 ரன்களை விளாசியிருந்தார். ரஹானே 7 பந்துகளில் 6 ரன்களை எடுத்திருந்தார். 4வது ஓவரை மீண்டும் ஹோல்டர் வீசினார். இந்த ஓவரிலும் ராஜஸ்தானின் வேட்டை தொடர்ந்து. 3வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ரஹானே. 4வது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான் அணி. 5வது ஓவரை மோரிஸ் வீசினார். அவரது முதல் பந்தை வழக்கம் போல பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் வாட்சன்.3வது பந்தை அழகாக தூக்கி அடிக்க அதை கேட்ச் பிடிக்க முயன்றும் தவறவிடப்பட்டது. அடுத்த பந்தை மீண்டும் ஒரு சிக்சருக்கு தூக்கி அடித்தார். 5வது பந்தில் ரன் அவுட் ஆக்கக் கிடைத்த வாய்ப்பையும் கோட்டை விட்டனர் சென்னை வீரர்கள். 6வது பந்தில் 2 ரன்களை அடிக்க 5 ஓவரின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 48 ரன்களைக் குவித்தது.
பவுண்டரிகள், சிக்சர்கள்
6வது ஓவரை அஸ்வின் வீசினார். முதல் பந்தை வாட்சன் வேகமாக அடிக்க ரெய்னா தடுத்தார். 3வது பந்தையும் வாட்சன் அடித்து விளையாட ரெய்னா மீண்டும் அற்புதமாக தடுத்தார். இதில் 4வது பந்தில் ஒரு ரன் அடித்து 50 ரன்களைத் தொட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஓவரில் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்படுவதாக நினைத்துக் கொண்டிருந்த சென்னை ரசிகர்களை 5வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து திகைக்க வைத்தார் வாட்சன். 6வது ஓவர் முடிவில் 55 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. வாட்சன் 24 பந்துகளில் 39 ரன்களுடனும் ரஹானே 12 பந்தில் 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி மட்டும் இணைந்து 36 பந்துகளில் 55 ரன்களைக் குவித்தது. 16 ரன்களைக் கொடுத்த ஜடேஜா 7வது ஓவரை ஜடேஜா வீசினார். வாட்சன் - ரஹானே விக்கெட்ட்டை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இருந்தது. ஆனால் வழக்கம் போல வாட்சன் சென்னையின் பந்து வீச்சைகளை பதம் பார்த்துக் கொண்டிருந்தார். ஜடேஜாவின் 2 வது பந்தில் பவுண்டரி அடித்தார். ஜடேஜாவின் 6வது பந்தையும் சிக்சருக்கு அனுப்பிய வாட்சன் அரை சதத்தைக் கடந்தார். அவர் 29 பந்துகளில் 54 ரன்களை எடுத்தார். 7வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 71 ரன்களைக் குவித்தது. அஸ்வின் வீழ்த்திய 2 விக்கெட்டுகள் 8வது ஓவரை மீண்டும் அஸ்வின் வீசினார். வாட்சன் -ரஹானேவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியாகவேண்டிய நிலையில் அஸ்வின் வீசிய 2-வது பந்தில் ரஹானே அவுட் ஆனார். அவர் 15 பந்துகளில் 16 ரன்களை எடுத்திருந்தார். இதில் 1 பவுண்டரியும் அடங்கும். வாட்சனுடன் யாக்னிக் இணைந்தார். அஸ்வினின் இந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே எடுத்தது ராஜஸ்தான் அணி. 8வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 74 ரன்களை எடுத்தது அந்த அணி. 9வது ஓவரை ஹோல்டர் வீசினார். இவரது 3வது பந்தை யாக்னிக் பவுண்டரிக்கு தூக்கி அடித்தார். 9வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் என்ற நல்ல நிலையில் இருந்தது ராஜஸ்தான் அணி. 10-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தை யாக்னிக் தூக்கி அடிக்க அதை அஸ்வினே அழகாகப் பிடித்து அவுட் ஆக்கினார். 8 பந்துகளை எதிர்கொண்ட யாக்னிக் 7 ரன்களை எடுத்திருந்தார். அவர் பெவிலியனுக்குத் திரும்ப வாட்சனுடன் கேப்டன் டிராவிட் இணைந்து கொண்டார். 10வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 88 ரன்களை எடுத்தது. 11வது ஓவரை ஹோல்டர் வீச அவரது முதல் பந்தில் தமது 60வது ரன்னை எட்டினார் வாட்சன். இந்த ஓவரின் 5வது பந்தை வாட்சன் தூக்கி அடித்த அதை பிடிக்காமல் கோட்டை விட்டதால் பவுண்டரியைத் தொட்டது அடுத்த பந்தும் பவுண்டரிக்குப் போகவேண்டியதை அழகாகத் தடுத்ததால் 1 ரன் மட்டுமே வாட்சனால் எடுக்க முடிந்தது. 11வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எட்டியது ராஜஸ்தான். டிராவிட்டை வீழ்த்திய பிராவோ 12வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 5 ரன்களை கொடுத்தார் அஸ்வின். 4 ஓவர்களை வீசி 20 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் அஸ்வின்.
13வது ஓவரில் மோரிஸ் வீசிய முதல் பநதை வாட்சன் சிக்சருக்கு அனுப்பி வைத்து 75 ரன்களை எட்டினார். அவர் 43 பந்துகளில்75 ரன்களை குவித்தார். மோரிஸ் இந்த முறை 9 ரன்களை ராஜஸ்தானுக்குகொடுத்தார். 13வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களை எட்டியது ராஜஸ்தான் அணி. 14வது ஓவரை பிராவோ வீசினார். பிராவோவின் 2வது பந்தை டிராவிட் தூக்கி அடிக்க விக்கெட் கீப்பர் டோணி அழகாக பிடித்து அவுட் ஆக்கினார். 3 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் அணி. பிராவோ இன்றைய போட்டியில் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே 1 ரன் மட்டுமே கொடுத்த நிலையில் 1 விக்கெட் எடுத்தார். டிராவில் 9 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே எடுத்தார். டிராவிட் பெவிலியனுக்குத் திரும்ப களத்தில் மலைபோல் நின்ற வாட்சனுடன் பின்னி இணைந்து கொண்டார். பின்னி, பிராவோவின் 5வது பந்தில் ஒரு பவுண்டரியை விளாசினார். 14வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்தது. 15வது ஓவரை ஜடேஜா வீசினார். ஜடேஜாவின் 5வது பந்தை பவுண்டரிக்கு பின்னி அனுப்ப அது மொஹித் சர்மாவின் கையில் பட்டு தப்பியது. 15வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியது ராஜஸ்தான் அணி. 16வது ஓவரை பிராவோ வீசினார். அவரால் வாட்சனின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை 16வது ஓவர் முடிவில் வாட்சன் 54 பந்துகளில் 84 ரன்களுடன் இருந்தார். பின்னியோ 11 பந்துகளில்18 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை எடுத்தது. அடுத்தடுத்து சிக்சர்! 17வது ஓவரை ஜடேஜா வீச 2வது பந்தை சிக்சருக்கு அனுப்பி வைத்தார் வாட்சன். அடுத்த பந்து வைட் ஆனதால் திருப்பியும் ஜடேஜா போட்டபந்தை சிக்சருக்கே அனுப்பி வைத்து 96 ரன்களை எட்டினார் வாட்சன். 17வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான். முதல் சதமடித்த வாட்சன் 18வது ஓவரை பிராவோ வீசினார். பிராவோவின் 2வது பந்தில் 2 ரன்கள் எடுத்து வாட்சன் 101 ரன்களைத் தொட்டார். அவர் 61 பந்துகளில் 101ரன்களை எடுத்தார்.
நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் வாட்சன் தான் முதல் முறையாக சதமடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆனால் அடுத்த பந்திலேயே அவர் ஹசியால் கேட்ச் பிடித்து அவுட் ஆக்கப்பட்டார். 101 ரன்களுடன் வாட்சன் வெளியேறினார். களத்தில் இருந்த பின்னியுடன் ஹோட்ஜ் இணைந்தார். அப்போது ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்திருந்தது. பிராவோவின் 5வது பந்தை ஒரு இமாலய சிக்சருக்கு அனுப்பி வைத்தார் பின்னி. 18வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் அணி. ஒருவழியாக 20வது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 186 ரன்கள் தேவை என்ற கடினமானஇலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஹசி அபாரம்- ஏமாற்றிய முரளி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய், மைக் ஹசி களம் இறங்கினர். முதல் ஓவரை ராஜஸ்தானின் சண்டிலா வீசினார். இந்த ஓவரில் 4 ரன்களை மட்டுமே சென்னை அணியால் எடுக்க முடிந்தது.2வது ஓவரை சுக்லா வீசினார். சுக்லாவின் 3, 4வது பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிக்கு அனுப்பி சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் மைக் ஹசி. 2வது ஓவர் முடிவில் சென்னை அணி 15 ரன்களை எட்டியது. 3வது ஓவரை சண்டிலா வீச முதல் பந்தை ஹசி சிக்சருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் சண்டிலாவின் 3வது பந்தை முரளி விஜய் அடிக்க அதை சண்டிலாவே காட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். 5 பந்துகளை எதிர்கொண்ட முரளி 3 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 22 ரன்களை எடுத்தது. ஹசியுடன் சுரேஷ் ரெய்னா இணைந்து கொண்டார். 3வது ஓவர் முடிவில் 24 ரன்களை சென்னை எடுத்தது. 5ஓவர் முடிவில் 45/1 4வது ஓவரை சுக்லா மீண்டும் வீச அவரது பந்தை வேட்டையாடினார் ஹசி. முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். சுக்லாவின் 3வது பந்தை ரெய்னா பவுண்டரிக்கு அடித்து விரட்டினார். ஹசியும் விடுவதாக இல்லை... சுக்லாவின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர் மீண்டும் ஒரு பவுண்டரி தட்டினார். 14 பந்துகளை எதிர்கொண்ட ஹசி 29 ரன்களைக் குவித்தார். 5வது ஓவரை ஃபோள்க்னர் வீசினார். 5வது ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்களை எடுத்தது. 8 ஓவர் முடிவில் 70/1 6வது ஓவரை கூப்பர் வீசினார். அவரது முதல் பந்தில் ரெய்னா அதிரடியாக ஒரு சிக்சர் அனுப்ப சென்னை அணி 50 ரன்களைத் தாண்டியது. இந்த ஓவரிலும் ஹசியின் பவுண்டரி வேட்டை நீடித்தது. கூப்பரின் 4வது பந்தை எதிர்கொண்ட ஹசி அதை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 17 பந்துகளில்34 ரன்களை எட்டினார் ஹசி. 7வது ஓவரை மீண்டும் சண்டிலா வீசினார்.இந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே சென்னையால் எடுக்க முடிந்தது. 8வது ஓவரை சித்தார்த் திரிவேதி வீனார். சென்னை அணியின் ரன் குவிப்பு வேகம் சற்றே குறைந்தது போல் காணப்பட்டது. இதை நிர்வர்த்தி செய்யும் வகையில் திரிவேதியின் 5வது பந்தை ரெய்னா பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 8 ஓவர் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்களை எட்டியது. 72 பந்துகளில்116 ரன்களை எடுத்தாக வேண்டிய நிலையில் இருந்தது சென்னை அணி. ஹசி 23 பந்துகளில் 37 ரன்களைக் குவித்திருந்தார். 10 ஓவர் முடிவில் 92/1 9வது ஓவரை வாட்சன் வீசினார். அவரது முதல் பந்தில் ஒரு சிக்சரை அடித்தார் ரெய்னா. இந்த சிக்சர் மூலம் 21 பந்தில் 34 ரன்களை எட்டினார் ரெய்னா. 9வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். 66 பந்துகளில் 105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது சென்னை அணி. 10வது ஓவரை ராஜஸ்தான் அணியின் திரிவேதி மீண்டும் வீசினார். அவரது 3வது பந்தை எதிர்கொண்ட ஹசி அதனை பவுண்டரிக்கு தட்டிவிட்டார். இந்த ரன் மூலம் 27 பந்துகளில் 44 ரன்களை எட்டினார் ஹசி. 10வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 92 ரன்களை எட்டியது சென்னை அணி. அரைசதம் எட்டிய ஹசி-ரெய்னா 11வது ஓவரை கூப்பர் மீண்டும் வீச அவரது முதல் பந்தை ரெய்னா பதம் பார்த்து பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். ஹசியும் ரெய்னாவும் இந்நிலையில் 28 பந்துகளை சந்தித்து தலா 45 ரன்களை எட்டியிருந்தனர். கூப்பரின் 4வது பந்தை பவுண்டரிக்கு தட்டிய ஹசி அடுத்த பந்தில் அரை சதத்தை எட்டினார். 31 பந்துகளில் அவர் அரை சதத்தைத் தொட்டார்.இந்த ஓவரின் முடிவில் 103 ரன்களை சென்னை அணி எடுத்தது. ஹசி- ரெய்னா ஜோடி 51 பந்துகளை சந்தித்து 81 ரன்களைக் குவித்து அபாரத்தை வெளிப்படுத்தினர். 12வது ஓவரை பின்னி வீசினார். இவரது 4வது பந்தை ரெய்னா எதிர்கொண்டு அடித்த போது ரெய்னாவும் அரை சதத்தை எட்டினார். 33 பந்துகளில் ரெய்னா அரை சதமடித்தார். இந்த ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களை தொட்டது சென்னை அணி. 48 பந்துகளில் 77 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது சென்னை. ரெய்னா அவுட் 13வது ஓவரை ஃபோள்க்னர் வீச அவரது 4வது பந்தில் ரெய்னா எல்பிடபிள்யூவில் அவுட் ஆனார். 35 பந்துகளில் 51 ரன்களை ரெய்னா அடித்தார். இதில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர் அடங்கும். அப்போது சென்னை அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களாக இருந்தது. களத்தில் நின்ற
ஹசியுடன் கேப்டன் டோணி இணைந்தார்.13வது ஓவரின் முடிவில் 114 ரன்களை எட்டியது சென்னை அணி. இந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே கொடுத்து சென்னை அணியின் முக்கிய விக்கெட்டான ரெய்னா வீழ்த்தினார் ஃபோள்க்னர். 14வது ஓவரை பின்னி வீசினார். பின்னியின் 4வது பந்தையும் 5வது பந்தையும் பவுண்டரிகளுக்கு அனுப்பி சென்னை ரசிகர்களை பரவசப்படுத்தினார் ஹசி. இந்த ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை எடுத்தது. 36 பந்தில் 58 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் 15வது ஓவரை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. இந்த ஓவரை திரிவேதி வீசினார். திரிவேதியின் 3வது பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டார் ஹசி. அவர் 44 பந்துகளில் 73 ரன்களை எட்டினார். இந்த ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை எடுத்தது சென்னை அணி. 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருக்கிறது சென்னை அணி. ஒரு ஓவரில் 3 பவுண்டரிகள் 16வது ஓவரை கூப்பர் வீசினார். கூப்பரின் 3வது பந்தையும் 5,6வது பந்துகளையும்ஹசி பதம் பார்த்து பவுண்டரிகளுக்கு தட்டிவிட்டார். இதனால் சென்னை அணிக்கான நெருக்கடி சற்றே குறைந்து வெற்றியை நோக்கி பயணித்தது. 16 வது ஓவரின் முடிவில் செ ன்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது சென்னை அணி. 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதால் சென்னையின் வெற்றி உறுதியானது.
17வது ஓவரில் ஃபோள்க்னர். வீசிய பந்தில் ஹசி ரன் அவுட் ஆனார். அவர் 51 பந்துகளில் 88 ரன்களை எடுத்திருந்தார். இதில் 13 பவுண்டர்கள் 1 சிக்சர் அடங்கும். சென்னை அணியின் 2 முக்கிய விக்கெட்டுகளான ரெய்னா, ஹசி ஆகியோரை ஃபோள்க்னர். வீழ்த்தியிருக்கிறார். களத்தில் நின்ற கேப்டன் டோணியுடன் ஜடேஜா கை கோர்த்தார். ஆனால் ஃபோள்க்னர். வீசிய முதல் பந்திலேயே ஜடேஜா அவுட் ஆனார். சென்னை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில் டோணியுடன் பிராவோ கை கோர்த்தார். 17வது ஓவர் முடிவில் சென்னை அணி 157 ரன்களை எடுத்திருந்தது. விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது சென்னை அணி. இந்த அளவு ஸ்கோரை சேஸ் செய்துவந்த சென்னை அணி எப்படியும் இலக்கை எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. 18வது ஓவரை கூப்பர் வீசினார். அவரது 4வது பந்தில் கேப்டன் டோணி பவுண்டரி அடித்தார். இதனால் 14 பந்துகளில் 20 ரன்கள் என்ற டென்சன் நிலைக்கு கொண்டு வந்தார் டோணி. 5வது பந்தில் 2 ரன்களை எடுக்க 13 பந்தில் 18 ரன்கள் என்ற பரபரப்பான கட்டம் உருவானது. டோணியும் விடுவதாக இல்லை.. முடிந்த அளவு ரன்களை எடுத்து விடுவது என்பதாக அவரது ஆட்டம் இருந்தது. இந்த ஓவரின் முடிவில் 12 பந்துகளில் 17 ரன்கள் தேவை.. பரபரப்பான கடைசி 2ஓவர்கள் 19வது ஓவரை ஆபத்தான பவுலரான ஃபோள்க்னரே வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்க முடியாமல் போனாலும் அடுத்த பந்தில் 2 ரன்களை தட்டினார். இந்த ஓவரின் முடிவில் கடைசி பந்தை டோணி அடிக்க பவுண்டரி லைனில் அது கேட்ச் ஆனது. 16 பந்துகளை எதிர்கொண்ட டோணி 21 ரன்களை எடுத்தார். சென்னை அணியின் ஹசி, ரெய்னா, டோணி ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளுமே ஃபோள்க்னர் ஓவரில்தான் அவுட் ஆயினர். 19வது ஓவரின் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்திருந்தது. கடைசி ஒரு ஓவரில் 11 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலை..
சேஸிங்கின் உச்சகட்டம்!
களத்தில் இருந்த பிராவோவுடன் மோரிஸ் இணைந்தார். இந்த ஓவரை வாட்சன் வீசினார். முதல் பந்தில் 1 ரன் அடிக்கப்பட்டது. 2வது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. 3வது பந்தில் அற்புதமான ஒரு சிக்ரை தூக்கி அடித்தார் பிராவோ. இதனால் சென்னைக்கு இருந்த நெருக்கடி சற்றே தணிந்தது. 3 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டுவந்தார் பிராவோ. 4 வது பந்தில் 2 ரன்களை எடுத்து 184 ரன்களைத் தொட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.5வது பந்தில் பிராவோ 2 ரன்களை எடுக்க சென்னை அணி வெற்றி இலக்கான 186 ஐ எட்டியது. 19.5வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு186 ரன்களை எடுத்து சென்னை அணி அபார வெற்றியை பெற்றது. பிராவோ 9 பந்துகளில்15 ரன்களுடனும் மோரிஸ் 1 பந்தில் 1 ரன்னுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
சென்னை: ஐபிஎல் 6வது தொடரில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரின் 5வது பந்து வரை அற்புதமாக சேஸ் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் டிராவிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக வாட்சனும் ரஹானேவும் களம் இறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் ஓவரை மொஹித் சர்மா வீசினார். முதல் பந்தை வாட்சன் அடித்த போது அதை தடுக்காமல் சென்னை வீரர்கள் விட்டதால் அது பவுண்டரி லைனைத் தொட்டது. ஆனால் இதர பந்துகளில் ராஜஸ்தான் அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. முதல் ஓவர் முடிவில் 5 ரன்களை எடுத்தது அந்த அணி. 2வது ஓவரை ஜாசன் ஹோல்டர் வீசினார். இந்த ஓவரிலும் 5 ரன்களை எடுத்தது அந்த அணி. 2 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ரன்களை சேர்த்தது.
ஓவருக்கு 14 ரன்களை அள்ளிக் கொடுத்த சென்னை
ஆனால் 3 வது ஓவரில் மொஹித் சர்மா வீசிய முதல் பந்தை வாட்சன் சிக்சருக்கு அனுப்பி வைத்தார். கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விளாசினார். இந்த 3வது ஓவரில் மட்டும் 14 ரன்களை வாரிக் கொடுத்தார் மொஹித் சர்மா. 3வது ஓவரின் முடிவில் 24 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. வாட்சன் 11 பந்துகளில் 18 ரன்களை விளாசியிருந்தார். ரஹானே 7 பந்துகளில் 6 ரன்களை எடுத்திருந்தார். 4வது ஓவரை மீண்டும் ஹோல்டர் வீசினார். இந்த ஓவரிலும் ராஜஸ்தானின் வேட்டை தொடர்ந்து. 3வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ரஹானே. 4வது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான் அணி. 5வது ஓவரை மோரிஸ் வீசினார். அவரது முதல் பந்தை வழக்கம் போல பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் வாட்சன்.3வது பந்தை அழகாக தூக்கி அடிக்க அதை கேட்ச் பிடிக்க முயன்றும் தவறவிடப்பட்டது. அடுத்த பந்தை மீண்டும் ஒரு சிக்சருக்கு தூக்கி அடித்தார். 5வது பந்தில் ரன் அவுட் ஆக்கக் கிடைத்த வாய்ப்பையும் கோட்டை விட்டனர் சென்னை வீரர்கள். 6வது பந்தில் 2 ரன்களை அடிக்க 5 ஓவரின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 48 ரன்களைக் குவித்தது.
பவுண்டரிகள், சிக்சர்கள்
6வது ஓவரை அஸ்வின் வீசினார். முதல் பந்தை வாட்சன் வேகமாக அடிக்க ரெய்னா தடுத்தார். 3வது பந்தையும் வாட்சன் அடித்து விளையாட ரெய்னா மீண்டும் அற்புதமாக தடுத்தார். இதில் 4வது பந்தில் ஒரு ரன் அடித்து 50 ரன்களைத் தொட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஓவரில் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்படுவதாக நினைத்துக் கொண்டிருந்த சென்னை ரசிகர்களை 5வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து திகைக்க வைத்தார் வாட்சன். 6வது ஓவர் முடிவில் 55 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. வாட்சன் 24 பந்துகளில் 39 ரன்களுடனும் ரஹானே 12 பந்தில் 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி மட்டும் இணைந்து 36 பந்துகளில் 55 ரன்களைக் குவித்தது. 16 ரன்களைக் கொடுத்த ஜடேஜா 7வது ஓவரை ஜடேஜா வீசினார். வாட்சன் - ரஹானே விக்கெட்ட்டை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இருந்தது. ஆனால் வழக்கம் போல வாட்சன் சென்னையின் பந்து வீச்சைகளை பதம் பார்த்துக் கொண்டிருந்தார். ஜடேஜாவின் 2 வது பந்தில் பவுண்டரி அடித்தார். ஜடேஜாவின் 6வது பந்தையும் சிக்சருக்கு அனுப்பிய வாட்சன் அரை சதத்தைக் கடந்தார். அவர் 29 பந்துகளில் 54 ரன்களை எடுத்தார். 7வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 71 ரன்களைக் குவித்தது. அஸ்வின் வீழ்த்திய 2 விக்கெட்டுகள் 8வது ஓவரை மீண்டும் அஸ்வின் வீசினார். வாட்சன் -ரஹானேவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியாகவேண்டிய நிலையில் அஸ்வின் வீசிய 2-வது பந்தில் ரஹானே அவுட் ஆனார். அவர் 15 பந்துகளில் 16 ரன்களை எடுத்திருந்தார். இதில் 1 பவுண்டரியும் அடங்கும். வாட்சனுடன் யாக்னிக் இணைந்தார். அஸ்வினின் இந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே எடுத்தது ராஜஸ்தான் அணி. 8வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 74 ரன்களை எடுத்தது அந்த அணி. 9வது ஓவரை ஹோல்டர் வீசினார். இவரது 3வது பந்தை யாக்னிக் பவுண்டரிக்கு தூக்கி அடித்தார். 9வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் என்ற நல்ல நிலையில் இருந்தது ராஜஸ்தான் அணி. 10-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தை யாக்னிக் தூக்கி அடிக்க அதை அஸ்வினே அழகாகப் பிடித்து அவுட் ஆக்கினார். 8 பந்துகளை எதிர்கொண்ட யாக்னிக் 7 ரன்களை எடுத்திருந்தார். அவர் பெவிலியனுக்குத் திரும்ப வாட்சனுடன் கேப்டன் டிராவிட் இணைந்து கொண்டார். 10வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 88 ரன்களை எடுத்தது. 11வது ஓவரை ஹோல்டர் வீச அவரது முதல் பந்தில் தமது 60வது ரன்னை எட்டினார் வாட்சன். இந்த ஓவரின் 5வது பந்தை வாட்சன் தூக்கி அடித்த அதை பிடிக்காமல் கோட்டை விட்டதால் பவுண்டரியைத் தொட்டது அடுத்த பந்தும் பவுண்டரிக்குப் போகவேண்டியதை அழகாகத் தடுத்ததால் 1 ரன் மட்டுமே வாட்சனால் எடுக்க முடிந்தது. 11வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எட்டியது ராஜஸ்தான். டிராவிட்டை வீழ்த்திய பிராவோ 12வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 5 ரன்களை கொடுத்தார் அஸ்வின். 4 ஓவர்களை வீசி 20 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் அஸ்வின்.
13வது ஓவரில் மோரிஸ் வீசிய முதல் பநதை வாட்சன் சிக்சருக்கு அனுப்பி வைத்து 75 ரன்களை எட்டினார். அவர் 43 பந்துகளில்75 ரன்களை குவித்தார். மோரிஸ் இந்த முறை 9 ரன்களை ராஜஸ்தானுக்குகொடுத்தார். 13வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களை எட்டியது ராஜஸ்தான் அணி. 14வது ஓவரை பிராவோ வீசினார். பிராவோவின் 2வது பந்தை டிராவிட் தூக்கி அடிக்க விக்கெட் கீப்பர் டோணி அழகாக பிடித்து அவுட் ஆக்கினார். 3 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் அணி. பிராவோ இன்றைய போட்டியில் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே 1 ரன் மட்டுமே கொடுத்த நிலையில் 1 விக்கெட் எடுத்தார். டிராவில் 9 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே எடுத்தார். டிராவிட் பெவிலியனுக்குத் திரும்ப களத்தில் மலைபோல் நின்ற வாட்சனுடன் பின்னி இணைந்து கொண்டார். பின்னி, பிராவோவின் 5வது பந்தில் ஒரு பவுண்டரியை விளாசினார். 14வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்தது. 15வது ஓவரை ஜடேஜா வீசினார். ஜடேஜாவின் 5வது பந்தை பவுண்டரிக்கு பின்னி அனுப்ப அது மொஹித் சர்மாவின் கையில் பட்டு தப்பியது. 15வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியது ராஜஸ்தான் அணி. 16வது ஓவரை பிராவோ வீசினார். அவரால் வாட்சனின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை 16வது ஓவர் முடிவில் வாட்சன் 54 பந்துகளில் 84 ரன்களுடன் இருந்தார். பின்னியோ 11 பந்துகளில்18 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை எடுத்தது. அடுத்தடுத்து சிக்சர்! 17வது ஓவரை ஜடேஜா வீச 2வது பந்தை சிக்சருக்கு அனுப்பி வைத்தார் வாட்சன். அடுத்த பந்து வைட் ஆனதால் திருப்பியும் ஜடேஜா போட்டபந்தை சிக்சருக்கே அனுப்பி வைத்து 96 ரன்களை எட்டினார் வாட்சன். 17வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான். முதல் சதமடித்த வாட்சன் 18வது ஓவரை பிராவோ வீசினார். பிராவோவின் 2வது பந்தில் 2 ரன்கள் எடுத்து வாட்சன் 101 ரன்களைத் தொட்டார். அவர் 61 பந்துகளில் 101ரன்களை எடுத்தார்.
நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் வாட்சன் தான் முதல் முறையாக சதமடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆனால் அடுத்த பந்திலேயே அவர் ஹசியால் கேட்ச் பிடித்து அவுட் ஆக்கப்பட்டார். 101 ரன்களுடன் வாட்சன் வெளியேறினார். களத்தில் இருந்த பின்னியுடன் ஹோட்ஜ் இணைந்தார். அப்போது ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்திருந்தது. பிராவோவின் 5வது பந்தை ஒரு இமாலய சிக்சருக்கு அனுப்பி வைத்தார் பின்னி. 18வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் அணி. ஒருவழியாக 20வது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 186 ரன்கள் தேவை என்ற கடினமானஇலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஹசி அபாரம்- ஏமாற்றிய முரளி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய், மைக் ஹசி களம் இறங்கினர். முதல் ஓவரை ராஜஸ்தானின் சண்டிலா வீசினார். இந்த ஓவரில் 4 ரன்களை மட்டுமே சென்னை அணியால் எடுக்க முடிந்தது.2வது ஓவரை சுக்லா வீசினார். சுக்லாவின் 3, 4வது பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிக்கு அனுப்பி சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் மைக் ஹசி. 2வது ஓவர் முடிவில் சென்னை அணி 15 ரன்களை எட்டியது. 3வது ஓவரை சண்டிலா வீச முதல் பந்தை ஹசி சிக்சருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் சண்டிலாவின் 3வது பந்தை முரளி விஜய் அடிக்க அதை சண்டிலாவே காட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். 5 பந்துகளை எதிர்கொண்ட முரளி 3 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 22 ரன்களை எடுத்தது. ஹசியுடன் சுரேஷ் ரெய்னா இணைந்து கொண்டார். 3வது ஓவர் முடிவில் 24 ரன்களை சென்னை எடுத்தது. 5ஓவர் முடிவில் 45/1 4வது ஓவரை சுக்லா மீண்டும் வீச அவரது பந்தை வேட்டையாடினார் ஹசி. முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். சுக்லாவின் 3வது பந்தை ரெய்னா பவுண்டரிக்கு அடித்து விரட்டினார். ஹசியும் விடுவதாக இல்லை... சுக்லாவின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர் மீண்டும் ஒரு பவுண்டரி தட்டினார். 14 பந்துகளை எதிர்கொண்ட ஹசி 29 ரன்களைக் குவித்தார். 5வது ஓவரை ஃபோள்க்னர் வீசினார். 5வது ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்களை எடுத்தது. 8 ஓவர் முடிவில் 70/1 6வது ஓவரை கூப்பர் வீசினார். அவரது முதல் பந்தில் ரெய்னா அதிரடியாக ஒரு சிக்சர் அனுப்ப சென்னை அணி 50 ரன்களைத் தாண்டியது. இந்த ஓவரிலும் ஹசியின் பவுண்டரி வேட்டை நீடித்தது. கூப்பரின் 4வது பந்தை எதிர்கொண்ட ஹசி அதை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 17 பந்துகளில்34 ரன்களை எட்டினார் ஹசி. 7வது ஓவரை மீண்டும் சண்டிலா வீசினார்.இந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே சென்னையால் எடுக்க முடிந்தது. 8வது ஓவரை சித்தார்த் திரிவேதி வீனார். சென்னை அணியின் ரன் குவிப்பு வேகம் சற்றே குறைந்தது போல் காணப்பட்டது. இதை நிர்வர்த்தி செய்யும் வகையில் திரிவேதியின் 5வது பந்தை ரெய்னா பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். 8 ஓவர் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்களை எட்டியது. 72 பந்துகளில்116 ரன்களை எடுத்தாக வேண்டிய நிலையில் இருந்தது சென்னை அணி. ஹசி 23 பந்துகளில் 37 ரன்களைக் குவித்திருந்தார். 10 ஓவர் முடிவில் 92/1 9வது ஓவரை வாட்சன் வீசினார். அவரது முதல் பந்தில் ஒரு சிக்சரை அடித்தார் ரெய்னா. இந்த சிக்சர் மூலம் 21 பந்தில் 34 ரன்களை எட்டினார் ரெய்னா. 9வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். 66 பந்துகளில் 105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது சென்னை அணி. 10வது ஓவரை ராஜஸ்தான் அணியின் திரிவேதி மீண்டும் வீசினார். அவரது 3வது பந்தை எதிர்கொண்ட ஹசி அதனை பவுண்டரிக்கு தட்டிவிட்டார். இந்த ரன் மூலம் 27 பந்துகளில் 44 ரன்களை எட்டினார் ஹசி. 10வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 92 ரன்களை எட்டியது சென்னை அணி. அரைசதம் எட்டிய ஹசி-ரெய்னா 11வது ஓவரை கூப்பர் மீண்டும் வீச அவரது முதல் பந்தை ரெய்னா பதம் பார்த்து பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். ஹசியும் ரெய்னாவும் இந்நிலையில் 28 பந்துகளை சந்தித்து தலா 45 ரன்களை எட்டியிருந்தனர். கூப்பரின் 4வது பந்தை பவுண்டரிக்கு தட்டிய ஹசி அடுத்த பந்தில் அரை சதத்தை எட்டினார். 31 பந்துகளில் அவர் அரை சதத்தைத் தொட்டார்.இந்த ஓவரின் முடிவில் 103 ரன்களை சென்னை அணி எடுத்தது. ஹசி- ரெய்னா ஜோடி 51 பந்துகளை சந்தித்து 81 ரன்களைக் குவித்து அபாரத்தை வெளிப்படுத்தினர். 12வது ஓவரை பின்னி வீசினார். இவரது 4வது பந்தை ரெய்னா எதிர்கொண்டு அடித்த போது ரெய்னாவும் அரை சதத்தை எட்டினார். 33 பந்துகளில் ரெய்னா அரை சதமடித்தார். இந்த ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களை தொட்டது சென்னை அணி. 48 பந்துகளில் 77 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது சென்னை. ரெய்னா அவுட் 13வது ஓவரை ஃபோள்க்னர் வீச அவரது 4வது பந்தில் ரெய்னா எல்பிடபிள்யூவில் அவுட் ஆனார். 35 பந்துகளில் 51 ரன்களை ரெய்னா அடித்தார். இதில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர் அடங்கும். அப்போது சென்னை அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களாக இருந்தது. களத்தில் நின்ற
ஹசியுடன் கேப்டன் டோணி இணைந்தார்.13வது ஓவரின் முடிவில் 114 ரன்களை எட்டியது சென்னை அணி. இந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே கொடுத்து சென்னை அணியின் முக்கிய விக்கெட்டான ரெய்னா வீழ்த்தினார் ஃபோள்க்னர். 14வது ஓவரை பின்னி வீசினார். பின்னியின் 4வது பந்தையும் 5வது பந்தையும் பவுண்டரிகளுக்கு அனுப்பி சென்னை ரசிகர்களை பரவசப்படுத்தினார் ஹசி. இந்த ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை எடுத்தது. 36 பந்தில் 58 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் 15வது ஓவரை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. இந்த ஓவரை திரிவேதி வீசினார். திரிவேதியின் 3வது பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டார் ஹசி. அவர் 44 பந்துகளில் 73 ரன்களை எட்டினார். இந்த ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை எடுத்தது சென்னை அணி. 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருக்கிறது சென்னை அணி. ஒரு ஓவரில் 3 பவுண்டரிகள் 16வது ஓவரை கூப்பர் வீசினார். கூப்பரின் 3வது பந்தையும் 5,6வது பந்துகளையும்ஹசி பதம் பார்த்து பவுண்டரிகளுக்கு தட்டிவிட்டார். இதனால் சென்னை அணிக்கான நெருக்கடி சற்றே குறைந்து வெற்றியை நோக்கி பயணித்தது. 16 வது ஓவரின் முடிவில் செ ன்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது சென்னை அணி. 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதால் சென்னையின் வெற்றி உறுதியானது.
17வது ஓவரில் ஃபோள்க்னர். வீசிய பந்தில் ஹசி ரன் அவுட் ஆனார். அவர் 51 பந்துகளில் 88 ரன்களை எடுத்திருந்தார். இதில் 13 பவுண்டர்கள் 1 சிக்சர் அடங்கும். சென்னை அணியின் 2 முக்கிய விக்கெட்டுகளான ரெய்னா, ஹசி ஆகியோரை ஃபோள்க்னர். வீழ்த்தியிருக்கிறார். களத்தில் நின்ற கேப்டன் டோணியுடன் ஜடேஜா கை கோர்த்தார். ஆனால் ஃபோள்க்னர். வீசிய முதல் பந்திலேயே ஜடேஜா அவுட் ஆனார். சென்னை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில் டோணியுடன் பிராவோ கை கோர்த்தார். 17வது ஓவர் முடிவில் சென்னை அணி 157 ரன்களை எடுத்திருந்தது. விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது சென்னை அணி. இந்த அளவு ஸ்கோரை சேஸ் செய்துவந்த சென்னை அணி எப்படியும் இலக்கை எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. 18வது ஓவரை கூப்பர் வீசினார். அவரது 4வது பந்தில் கேப்டன் டோணி பவுண்டரி அடித்தார். இதனால் 14 பந்துகளில் 20 ரன்கள் என்ற டென்சன் நிலைக்கு கொண்டு வந்தார் டோணி. 5வது பந்தில் 2 ரன்களை எடுக்க 13 பந்தில் 18 ரன்கள் என்ற பரபரப்பான கட்டம் உருவானது. டோணியும் விடுவதாக இல்லை.. முடிந்த அளவு ரன்களை எடுத்து விடுவது என்பதாக அவரது ஆட்டம் இருந்தது. இந்த ஓவரின் முடிவில் 12 பந்துகளில் 17 ரன்கள் தேவை.. பரபரப்பான கடைசி 2ஓவர்கள் 19வது ஓவரை ஆபத்தான பவுலரான ஃபோள்க்னரே வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்க முடியாமல் போனாலும் அடுத்த பந்தில் 2 ரன்களை தட்டினார். இந்த ஓவரின் முடிவில் கடைசி பந்தை டோணி அடிக்க பவுண்டரி லைனில் அது கேட்ச் ஆனது. 16 பந்துகளை எதிர்கொண்ட டோணி 21 ரன்களை எடுத்தார். சென்னை அணியின் ஹசி, ரெய்னா, டோணி ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளுமே ஃபோள்க்னர் ஓவரில்தான் அவுட் ஆயினர். 19வது ஓவரின் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்திருந்தது. கடைசி ஒரு ஓவரில் 11 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலை..
சேஸிங்கின் உச்சகட்டம்!
களத்தில் இருந்த பிராவோவுடன் மோரிஸ் இணைந்தார். இந்த ஓவரை வாட்சன் வீசினார். முதல் பந்தில் 1 ரன் அடிக்கப்பட்டது. 2வது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. 3வது பந்தில் அற்புதமான ஒரு சிக்ரை தூக்கி அடித்தார் பிராவோ. இதனால் சென்னைக்கு இருந்த நெருக்கடி சற்றே தணிந்தது. 3 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டுவந்தார் பிராவோ. 4 வது பந்தில் 2 ரன்களை எடுத்து 184 ரன்களைத் தொட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.5வது பந்தில் பிராவோ 2 ரன்களை எடுக்க சென்னை அணி வெற்றி இலக்கான 186 ஐ எட்டியது. 19.5வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு186 ரன்களை எடுத்து சென்னை அணி அபார வெற்றியை பெற்றது. பிராவோ 9 பந்துகளில்15 ரன்களுடனும் மோரிஸ் 1 பந்தில் 1 ரன்னுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 7 of 33 • 1 ... 6, 7, 8 ... 20 ... 33
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 33
|
|