புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
47 Posts - 47%
heezulia
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
45 Posts - 45%
T.N.Balasubramanian
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
247 Posts - 49%
ayyasamy ram
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_m10சிறுகதை உத்திகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை உத்திகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Mar 25, 2013 5:40 pm

First topic message reminder :

சிறுகதை உத்திகள்

ந்த மன்றத்தில் சிறுகதை எழுதும் ஆர்வம் பலருக்கு அதிகம் இருப்பதால் நாம் எல்லோரும் சேர்ந்து சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்: நான் ஏதோ பெரிய எழுத்தாளன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, உத்திகள் பற்றி என் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்த இழையின் நோக்கம்.

சிறுகதை எழுதும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மாதிரி தி.ஜானகிராமன். முதல் காரியமாக அவரது இந்தக் கதையைப் படித்து, ஒரு கதாசிரியர் பார்வையில் உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை, எண்ணங்களை இந்கு பதியுங்கள். ஒன்றிரண்டு பதிவுகள் ஆனதும் என் கருத்துக்களைப் பதிகிறேன்.

குழந்தைக்கு ஜுரம்
தி.ஜானகிராமன்


*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Apr 02, 2013 6:47 pm

வணக்கம் அகல்.

கதையின் விரைவான நடையும் கருத்தும் அருமை. தட்டெழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவேண்டும். இந்தக் கதையைத் தன்மை ஒருமையில் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கலாம் என்பது என் அபிப்பிராயம்.

நிறையப் படிக்கவும் எழுதவும் முயலவும். குறிப்பாக இன்ன மாதிரிதான் எழுதவேண்டும் என்று கட்டுப்படுத்திக் கொள்ளாமல் பலவகைக் கதைகளை எழுதிப் பார்க்கவும்.

அன்புடன்,
ரமணி



அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Apr 02, 2013 8:57 pm

ரமணி wrote:வணக்கம் அகல்.

கதையின் விரைவான நடையும் கருத்தும் அருமை. தட்டெழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவேண்டும். இந்தக் கதையைத் தன்மை ஒருமையில் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கலாம் என்பது என் அபிப்பிராயம்.

நிறையப் படிக்கவும் எழுதவும் முயலவும். குறிப்பாக இன்ன மாதிரிதான் எழுதவேண்டும் என்று கட்டுப்படுத்திக் கொள்ளாமல் பலவகைக் கதைகளை எழுதிப் பார்க்கவும்.

அன்புடன்,
ரமணி

வணக்கம் ஐயா.. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.. கண்டிப்பாக தங்களின் கருத்துக்கள் எனக்கு பயன்படும்.



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Apr 05, 2013 7:47 am

சிறுகதை இலக்கிய நடை

ஒரு சிறுகதையில் கதைக்கூற்று அல்லது கதைசொலல், வருணனை, உரையாடல், மனவோட்டம் இவை நான்கும் கலந்து வருவதால் கதையின் இலக்கிய நடை அதற்கேற்ப மாறுபடும். கதையின் நடையே அதன் குரலாய் ஒலிக்கிறது என்பதால் வெவ்வேறு நடைகள் கதையின் குரலில் இசைந்து வரவேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

1. கதைக் கூற்று அல்லது கதைசொலல் நடை

ஒரு சிறுகதையை ஆசிரியர் பொதுவாகத் தன்மை, முன்னிலை, படர்க்கை, சர்வஞானம் என்ற நான்கு நிலைகளின் நோக்கில் நின்று கதை சொல்லலாம் என்று பார்த்தோம்.


இந்த நான்கு நிலைகளிலும் ஆசிரியர் கதையின் மையப் பாத்திரத்தை முன்னிறுத்துவதுடன், மற்ற பாத்திரங்கள், கதைக்களன், கதைச்சூழல், முன்கதை போன்றவற்றையும் விவரித்து எழுதும்போது இடத்திற்கேற்ப நடை மாறுபடுகிறது.

* தன்மை நிலையில் ஆசிரியர் முற்றிலும் ஒளிந்துகொள்ள மையப் பாத்திரமே நினைப்பது, பேசுவது, வருணிப்பது போன்றவற்றைச் செய்கிறது. ஆசிரியர் குறுக்கீடு அறவே இல்லாது அமைய வேண்டுவதால் இந்தக் கூற்று எல்லாவற்றிலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

* முன்னிலை நிலையில் மையப் பாத்திரமும் ஆசிரியரும் சேர்ந்து கதையை நகர்த்துகிறார்கள். வாசகனே மையப் பாத்திரம் ஆவதால் இவ்வாறு எழுதுவது கடினும்.

* படர்க்கை நிலையில் ஆசிரியர் ஓரு சில வெவ்வேறு பாத்திரங்களுடன் சேர்ந்து கதை புனைகிறார். படர்க்கையிலும் ஆசிரியர் தன்னை ஒளித்துக்கொண்டு ஓரிரு பாத்திரங்களின் நோக்கில் தற்சார்பாகக் கதைசொல்ல முடியும்.

* சர்வஞான நிலையிலோ ஆசிரியர் கடவுளாகிக் கதையில் எல்லாவற்றையும் தன்னோக்கில் சொல்கிறார்.

இப்படி வெவ்வேறு நடைகளில் எழுதுவதற்கு ஆசிரியர் தனக்கென்று ஓர் இலக்கிய நடையை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். ஆசிரியரின் சொந்த இலக்கிய நடை பொதுவாகக் கவிதை அழகுடனும் கவிதை சார்ந்த கூறுகளுடனும் இருப்பது வழக்கம். கதை விவரிக்கும் மண்ணின் கலாச்சாரமும் பண்பாடும் நடையை நிர்ணயிப்பதாக அமைவதுண்டு. பாத்திரங்களின் இயல்பை உணர்ந்து அவர்கள் நினைப்பதையும் பேசுவதையும் அவர்கள் பாணியில் எழுதவேண்டும். இந்த நடைகள் யாவும் ஒன்றுக்கொன்று இசைந்து வருமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சில சான்றுகள்:
1. வழி தெரியவில்லை: சுஜாதா (தன்மை நோக்கில்)


ஒரு சினிமா பார்ப்பதற்காக சபர்பன் ரயில் மார்க்கத்தில், பெயர் தெரிவிக்க முடியாத அந்த ஸ்டேஷனில் நான் இறங்கினேன். படம், நான் சென்னையில் தப்பவிட்ட படம். ஊரெல்லாம் சளைக்காமல் ஓடி ஓய்ந்துவிட்டு மொபஸலில் ஓடிக்கொண்டு இருந்தது. நல்ல படம் என்று நண்பர்கள் வற்புறுத்திப் பார்க்கச் சொன்னார்கள்.
...
தென்னங்கீற்று சிங்கிள் ப்ரொஜக்டர் சோடா கலர் கை முறுக்(கு) கொட்டகை. டிக்கெட் வாங்கி உள்ளே போய் உட்கார்ந்தேன். ஒரு நாய், காலடியில் ஓடியது. கொசு, காதடியில் பாடியது. காஞ்சனா ஈஸ்ட்மென் கலரில் சிரித்...

ஆனால், இந்தக் கதை அந்த சினிமாவைப் பற்றியது அல்லவே. சினிமா பார்த்துவிட்டு நான் ஸ்டேஷனுக்குத் திரும்பியபோது, எனக்கு ஏற்பட்ட விநோத அனுபவத்தைப் பற்றியது...
...
வந்த வழி ஞாபகம் இருந்தது. அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். இரவின் இருள் காரணமோ, அந்தத் தெருக்களின் பின்னல் காரணமோ, வழி தவறிவிட்டேன். போகிறேன்... போகிறேன்... ஸ்டேஷனையே காணோம்.
...
நல்லவேளை, எதிரில் ஒரு சைக்கிள் ரிக்-ஶாகாரன் தென்பட்டான்.
...
"ஸ்டேஷனுக்குப் போகறதுக்கு இங்கே வந்தியா?" என்றான்.

""ஏன்?"

"வழி தப்பு."
...
ரிக்-ஷா சென்றுகொண்டு இருந்தது. மறுபடி ஒரு சந்தில் ஒடித்தது.

ஏன் பயப்படுகிறேன் என்று யோசித்துப் பார்த்தேன். அடுத்து நடக்கப்போவது என்ன என்பது தெரியாததால், இருட்டால், அந்தப் பாழாய்ப் போகிற பாட்டால்.

என்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசித்தேன். ரூபாய் முப்பதோ என்னவோ. ஆனால், ரிஸ்ட் வாட்ச்? மோதிரம்?

அவன் என்னை எங்கு அழைத்துச் செல்கிறான்?

சற்று நேரத்தில் எனக்குத் தெரிய வந்தது. ஒரு வீட்டின் எதிரே ரிக்ஷாவை நிறுத்தினான். இறங்கிவிட்டான்.

(இந்தக் கதையை முழுதும் இங்கே படிக்கலாம்:

*****

2. மழைப் பயணம்: வண்ணநிலவன் (படர்க்கை தற்சாரா நோக்கு)

"ஒங்க தலையில என்ன களிமண்ணா இருக்கு? பொம்பள போயிப் பேசதுக்கும் ஆம்பள பேசதுக்கும் வித்தியாசம் இருக்குய்யா. நீங்க ஒங்க தங்கச்சி, அம்மாங்கிற உருத்தோட பேசலாம். நான் அப்பிடிப் பேச முடியுமா? என்ன இருந்தாலும் நான் அடுத்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தவதான?" என்றாள் சிவகாமி.

பேச்சியப்பனுக்குத் தன் தங்கச்சியிடமும் அம்மாவிடமும் இதைப் போய்ப் பேசுவதற்கு இஷ்டம் இல்லை. மகேஸ் இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறாள். அவளுடைய புருஷனுக்கு ஒழுங்கான வேலை கிடையாது. இட்லி சுட்டு, வடை சுட்டு என்று காலத்தை ஓட்டு கிறாள். சிவகாமி நினைப்பதுபோல் கயத்தாறில் அந்த இரண்டு வீடுகளுக்கு என்ன பெரிய வாடகை வந்துவிடும்? அதில் போய், ஒரு வீட்டு வாடகையைப் பங்கு கேள் என்கிறாளே சிவகாமி. அவனுக்கு அந்த யோசனையே சுத்தமாகப் பிடிக்கவில்லை.

"இதுக்கு எதுக்கு நேர்ல போகணுங்கேன்? மகேஸுகிட்டச் செல்லுல பேசுனா போதாதா?""

"வெவரம் புரியாமப் பேசாதீய… வாடகைப் பணத்தக் கேக்க மட்டும் போகல… ஒங்க அம்மய இங்க கூட்டிக்கிட்டு வரணும்லா? ஒங்க அம்மய அவ தன்கூட வச்சுக்கிட்டுதான் ரெண்டு வீட்டு வாடகைப் பணத்தையும் வாங்கி முடிஞ்சுக்கிடுதா!"

(இந்தக் கதையை முழுதும் இங்கே படிக்கலாம்:


*****

3. கசங்கல்கள்: மாலன் (படர்க்கை தற்சார்ந்த நோக்கு)

இவன் கவலையோடு அண்ணாந்து பார்த்தான். மழை வருகிற மாதிரி இருந்தது. இருட்டை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தது வானம். வரும், இன்று மழை வரும். அதன் எல்லா அழகுகளுக்குப் பின்னாலும் இருக்கிற சோகங்களை நினைவுபடுத்துகிற மாதிரி, மழை அதன் சோகங்களுடனும் வரும்.

இன்றும் மழை வந்துவிட்டால் இந்தச் சட்டை காயாமல் போய் விடுமோ என்று பயமாகவும் இருந்தது. நாளைக்கு இன்டர்வியூவுக்குப் போக இந்தச் சட்டையைத்தான் நம்பியிருந்தான். இந்தச் சட்டைதான் கிழிசல் இல்லாமல், காலர் நைந்து போகாமல், கலர் மங்கிவிடாமல் பளிச்சென்று இருந்தது. இதுவும்கூட இவனுடையதில்லை. அண்ணா கொஞ்சநாள் போட்டுக் கொண்டு போவதற்காகக் கொடுத்த சட்டை. இவனது மெலிதான உடம்பிற்கு ஒரு சுற்றுப் பெரிதாக இருக்கிற சட்டை. ... மூன்றரை மணிக்கு மேல் இவனை உள்ளே கூப்பிட்டார்கள். உள்ளே இருந்தவர்கள் எல்லோருக்கும் வழுக்கைத் தலை. ஒருவர் புகைப்படங்களில் பார்க்கிற சர்ச்சில் மாதிரி சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார். இரண்டு பேர் சூட் அணிந்திருந்தார்கள். ஒருவர் ஜிப்பா. மாசு மறுவில்லாத வெள்ளை ஜிப்பா. இவர்களுடைய சட்டைகளில் ஈரமோ, சகதிக் கறையோ இல்லாததைக் கவனித்தான். காலையில் பார்த்த சட்டைகள் ஞாபகம் வந்தது.

(இந்தக் கதையை முழுதும் இங்கே படிக்கலாம்:

*****
வருணணை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.


அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Apr 05, 2013 12:41 pm

அருமையான பகிர்வு ஐயா... அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Apr 05, 2013 3:06 pm

பல பயனுள்ள தகவல்கள்.... சூப்பருங்க தொடருங்கள்....



சதாசிவம்
சிறுகதை உத்திகள் - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Apr 05, 2013 6:26 pm

2. வருணனை

சிறுகதையில் வருணனை பொதுவாக அளவோடு இருக்கும். இந்த வருணனை கதைக் களம், சூழல், காலம், பாத்திரம் பற்றியதாக இருக்கலாம்.

1. கதைக் களம் பற்றிய அம்பையின் வருணணை (’வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’)

ஒரு சதுர கஜம் எட்டரை விலைக்கு நிலம் வாங்கி வீடு கட்டினாராம் கிஷனின் அப்பா. ரயில்பெட்டித் தொடர் மாதிரி வரிசையாய் அறைகள். எல்லா அறைகளும் முடிந்தபின் போனால் போகிறது என்று ஒட்டவைத்தாற்போல் ஒரு சமையலறை. இரு ஜன்னல்கள். ஒரு ஜன்னலின் கீழ், குழாய் வைத்த தொட்டி, ஒரு பெரிய தட்டுக்கூட வைக்க வகையில்லாமல் குறுகியது. கீழே, செங்கல் தடுப்பு இல்லாத சாக்கடை முற்றம். மேலே குழாயைத் திறந்ததும் கீழே பாதங்கள் குறுகுறுக்கும். பத்து நிமிடங்களில் ஒரு சிறு வெள்ளக்காடு காலடியில்...

*****

2. கதைச் சூழல் பற்றிய இரா.முருகனின் வருணணை (’ஆழ்வார்’)

அந்த முன்னிரவுச் சூழ்நிலை கொஞ்சம் அபத்தமாக இருந்தது. குண்டும் குழியுமாகக் கிடந்த தெருவில் பள்ளத்தில் இறங்கிய சைக்கிள் செயின் கழன்று போய் மாட்டிக் கொண்டிருந்தவன் யாரையென்று இல்லாமல் திட்டிக் கொண்டு நடுத் தெருவில் குனிந்து உட்கார்ந்திருந்தான். எதிரே பழைய கட்டிடம். கீழ்ப்பகுதியில் எல்லாம் கடைகள். ஒரு மாவு மெஷினும் உண்டு. கடைகளை அடைத்துவிட்டுக் கிளம்பிப் போயிருக்க, மாவு மெஷினிலிருந்து ஏதோ கரகரவென்று பொடியாகப் பிளாஸ்டிக் வாளியில் சுமந்து கொண்டுவந்து தெருவில் கொட்டி, நான்கைந்து பேர் கர்மசிரத்தையாகக் கையளைந்து தேடிக் கொண்டிருந்தார்கள். மேல் மாடியில் பிரம்மச்சாரிக் குடியிருப்புகளில் மங்கிய பல்ப் வெளிச்சத்தில் களைத்துப் போன மின்விசிறிகள் சுற்றுவது ஜன்னல் வழியே தெரிந்தது. கீழே சிதறியிருந்த மாவிலிருது பரபரப்பாக ஓடிய கரப்பான் பூச்சிகள் ஏறாமல் கால் மாற்றிக் கொண்டு ஒரு ஸ்தூல சரீர வைஷ்ணவர் மேலே பார்த்து, ’சடகோபா .. சடகோபா.. ’ என்று தொடர்ந்து பெருஞ்சத்தத்துடன் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

*****

3. கதையில் காலம்

காலம் எனும் கூறு பொதுவாக இரண்டு விதங்களில் சிறுகதையில் கையாளப்படுகிறது: காட்சி (scene), தொகுப்பு/திரட்டு (summary). காட்சியில் ஒரு குறுகிய, கதை-இப்போது-நிகழும் காலம் விவரிக்கப் படுகிறது. தொகுப்பில் முன்கதைச் சுருக்கமாக முன்சென்ற காலம் காட்டப்படுகிறது.

'நடுவில் உள்ளவள்': எஸ்.ராமகிருஷ்ணன் (ஒரு நிகழ்காலக் காட்சி)

வெயில் ஏறிக்கொண்டு இருந்தது. இறந்து போன அம்மாவின் உடலை மயானத்துக்குக் கொண்டுபோவதற்காகக் காலையில் இருந்தே காத்துக்கொண்டு இருந்தோம். இன்னும் சியாமளா வந்து சேரவில்லை. அவள் சூரத்தில் இருந்து கிளம்பிவிட்டாள் என்று தகவல் வந்திருந்தது. விமானத்தில் வந்து மதுரையில் இறங்கி, கார் பிடித்திருந்தால்கூட இந்நேரம் வந்திருக்கக் கூடும்.
...
"அப்படி இல்லை கணவதி. ராத்திரி போன உசுரு. நேரமாச்சுன்னா, உடம்பு தாங்காது. எல்லாரும் வேலைவெட்டியைப் போட்டுட்டு வந்திருக்காங்க. ஜோலியைப் பாத்துப் போகணும்ல..." என்றார் மாமா.
...
எத்தனை முறை போன் பண்ணுவது? ஒவ்வொரு முறையும் பாஸ்கர் அழுகையோடு, "மச்சான் வந்துர்றோம். மயானத்துக்குக் கொண்டுபோயிராதீக" என்று கரைந்து அழுத குரலில் சொல்வதைக் கேட்கும்போது கலக்கமாகவே இருக்கிறது. ஆனாலும், இறந்த உடலை வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் காத்துக்கொண்டு இருக்க முடியும்?
...
"மாமா, ஆச்சியை எப்போ எடுப்பாக?"

"எதுக்குடே?"

"ராத்திரி ட்வென்டி ட்வென்டி மேட்ச் இருக்கு, அதைப் பாக்கணும்."

"அதுக்குள்ள எடுத்திருவாக."
...
டவுன் பஸ் வந்து நிற்கும் ஓசை கேட்டது. யாரோ ஒரு பெண் பேருந்தில் இருந்து இறங்கி ரோட்டிலேயே மாரில் அடித்துக்கொண்டு, "என்னப் பெத்த மகராசி... என் சிவக்குளத்துப் பொறப்பே..." என்று புலம்பியபடியே, வேகமாக வந்துகொண்டு இருந்தாள். அம்மாவின் ஊரில் இருந்து வந்திருக்கிறாள் என்பது மாத்திரம் தெரிந்தது.

*****

கடந்த காலத்தை ஒரு தொகுப்பில் விவரிக்கும் போது பொதுவாக ஆசிரியர் நேரடியாகச் சொல்வதை விட கதையில் ஒரு பாத்திரத்தின் மூலம் சொல்வது சிறந்தது. தமிழின் முதல் சிறுகதையான வ.வே.சு. ஐயர் எழுதிய ’குளத்தங்கரை அரசமரம்’ கதை இப்படித் தொடங்குகிறது.


பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என்மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் ! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேணும் பொய்யில்லை. நான் பழைய நாளத்தது மரம்- பொய் சொல்லக் கத்தவில்லை. இப்போ தொண்ணூறு நூ று வருஷமிருக்கும். உங்கள் கொள்ளு பாட்டிகளின் பாட்டிகளெல்லாம் நம்ம குளத்துங்கரைக்குத்தான் குடமுங் கையுமாக வருவார்கள். சில பேர் குழந்தைகளையுங் கூட கூட்டி வருவார்கள். பட்டு பட்டாயிருக்கும் குழந்தைகள். அதுகளை கரையில் விட்டுவிட்டுப் புடவைகளை அழுக்குப் போகத் தோய்த்து, மஞ்சள் பூசிக்கொண்டு அழகாக ஸ்நானம் பண்ணுவார்கள். குழந்தைகளெல்லாம் ராஜகோபாலன் போலத் தவுந்துகொண்டு மல்லிகைச் செடியண்டே போய் மல்லிகை மொக்குகளை பார்த்து சிரிக்கும். அந்தக் காலத்திலே ஒரு பவள மல்லிகைச் செடி, முத்து முத்தாய்ப் பூப் பூத்துக் கொண்டு அந்த ஓரத்திலிருந்தது.

*****

4. கதா பாத்திர வருணணை

சிறுகதையின் மையப் பாத்திரம் மற்றும் பிற பாத்திரங்கள் படைப்பில் அவற்றின் வெளித்தோற்றமும் உள்மனதும் பற்றிய வருணணை கதைக்கு ஒரு மிக முக்கியமான அம்சம்.

வீணா: சுஜாதா


வீணா பிறந்தது 1946-ல். 1956-லிருந்து 1960 வரை அவள் பெற்றோர் டில்லியில் இருந்தபோது சாப்பிட்ட கோதுமையினாலும், அவள் அம்மாவிடமிருந்து பெற்ற நேர்த்தியான மூக்கினாலும், மிக ஒழுங்கான அதரங்களாலும், உயரத்தினாலும், எல்லா அளவுகளும் ஓர் அரை இன்ச் குறைந்து சட்டையை மீறும் உடம்பு வளப்பத்தினாலும் அவள் எதிரே செல்பவரைப் பிரமிக்கவைக்கும் அழகு பெற்றிருந்தாள். எப்படிப்பட்ட பிரமிப்பு? பெட்ரூமில் புலியைப் பார்க்கும் பிரமிப்பு. ஆதாரமான சில உணர்ச்சிகளை வயிற்றில் ஏற்படுத்தும் பிரமிப்பு!
...

சுந்தர் ஒரு சாதாரணன். அவன் உலகம், நீங்கள் கேட்டவை, தீபாவளி மலர், எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களின் உலகம்; செய்தித்தாள்களை நம்பும் உலகம். ‘உங்களுக்குச் சோர்வாக இருக்கிறதா?’ என்று விளம்பரத்தில் கேட்டால், உடனே சோர்வாக உணரும் ஹிப்னோபீடியா சுபாவம். அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த மகத்தான சலனம், வீணாவுடன் ஒரு தடவை பேசியது. மகத்தான தீரச் செயல், அந்தக் கடிதத்தை எழுதியது.

*****

அதுசரி, தன்மை நோக்கில் சொல்லும் கதையில் அந்த ’நான்’ பாத்திர வருணணை எப்படி இருக்கவேண்டும்? ’நானே என்’ வெளித்தோற்றத்தை வருணித்துக்கொளவது செயற்கையாக இருக்காதோ? கதையில் என் மனதை, உணர்வுகளை விவரிப்பது இயல்பாக இருக்கும், ஆனால் ’என் வெளித்தோற்றம்?’ தன்மையில் எழுதப் பட்ட ஏராளமான சிறுகதைகள் உள்ளன. படித்தறிந்து பின்னூட்டம் இடுங்கள்.

சிறுகதையில் உரையாடல், மனவோட்டம் பற்றி வரும் பதிவுகளில்...

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Apr 09, 2013 9:56 am

3. சிறுகதையில் உரையாடல்

ஒரு வரிகூட உரையாடலே இல்லாமல் ஏதேனும் சிறுகதை படித்திருக்கிறீர்களா? அதேபோல் முழுவதும் உரையாடலாகவே எழுதப்பட்ட சிறுகதை? இத்தகைய கதை பற்றி அறிந்தவர்கள் கதைத் தலைப்பு, ஆசிரியர், சுட்டி முதலிய விவரங்களை இங்குப் பதியலாம்.

கதை மாந்தர்களின் பேச்சாக எழுதப்படும் உரையாடல் அவர்களின் குரலாகக் கதையில் ஒலிக்கிறது. பேச்சு என்பது ஒரு செய்தி அல்லது உணர்ச்சியின் வெளிப்பாடு. அந்த செய்தி அல்லது உணர்ச்சி சொற்களில் வடிக்கப்படும் போது ’ஏறத்தாழ சரியானது’ என்றுதான் சொல்லமுடியும். மனதின் உணர்ச்சிகளையோ, நினைவுகளையோ அல்லது ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த செய்தியையோ யாராலும் ’முற்றிலும் சரியாகச்’ சொல்ல முடிவதில்லை.

நடைமுறை வாழ்வில் போலன்றி ஒரு சிறுகதையில் உரையாடல் வெறும் வெட்டிப் பேச்சாக இருக்க முடியாது அல்லவா? எனவே உரையாடல் என்பது கதையின் கூறுகள் பலவற்றை ஒரே சமயத்தில் பார்த்துக்கொள்ளுமாறு எழுத வேண்டுவது அவசியம். உரையாடல் நடை இன்றைய கதையில் பொதுவாக பேச்சுத் தமிழில் அமைந்து பேசும் பாத்திரத்தின் குலம், குணம், வளர்ப்பு இவற்றிற்கேற்ப மாறுபடும்.

1. உரையாடல் கதையின் மனச்சூழலை (mood) அமைக்கலாம்:

’நிஜத்தைத் தேடி’: சுஜாதா

"யாரு?" என்றான். சற்றுத் திடுக்கிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் பார்தது தன் சோகக் கதையை காப்ஸ்யூல் வடிவத்தில் சொன்னான்: "ஊருக்குப் புதுசுங்க. வேலை தேடி வந்தேங்க .என் மனைவி காலைல இறந்து போய்ட்டாங்க பிணம் கிடக்குதுங்க. எடுக்கக் காசில்லை. பெரிய மனுசங்க உதவி பண்ணணும்" அவன் வைத்திருந்த தட்டில் சில ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. எதற்கோ புஷ்பங்கள் இருந்தன. ஒரு ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தது.

"வீடு எங்கே" என்றான்.

"இஙகதான் ஸார் கோகுலா பக்கம். தெரிஞ்சவங்க வீட்டில நிகழ்ந்து போச்சுங்க."

"சரி அட்ரஸ் சொல்லு."

"போனாப்போறது எதாவது கொடுத்து அனுப்பிடுங்களேன்" என்றாள் சன்னமாக. "இரு."

"நான் இங்க பெங்களுர் வந்தே மூணே நாள்தான் ஆவறது ஸார்! காலைல இறந்துட்டா."

"சரிதாம்பா, அட்ரஸ் என்ன? சொல்லேன்!"

அவன் சற்றே யோசித்து "மூணாவது கிராஸ்" என்றான்.

"மூணாவது க்ராஸ்னா? எச்.எம்.ட்டி லே அவுட்டா? சுந்தர் நகரா? இல்லை கோகுலா காலனிக்குள்ளயா?"

"சொல்லத் தெரியலிங்களே, சினிமா தியேட்டர் பக்கத்தில."

"அவனோட என்ன வாக்குவாதம்?" "இப்ப நீ சும்மா இருக்கப் போறியா இல்லையா? எந்த சினிமா தியேட்டர்யா?"

"என்ன ஸார் இப்படி கேக்கறிங்க இருக்கறதே ஒரு சினிமா தியேட்டர் தானே! பேர் தெரியாதா உங்களுக்கு?"

"எனக்குத் தெரியும். நீ சொல்லு."

அவன் மறுபடியும் அனுபல்லவியைப் பிடித்தான் "பங்களூர் வந்தே மூணு நாள் ஆவுது ஸார் காலைல இறந்துட்டா."

"சரிப்பா.எந்த இடம்? அதைச் சொல்ல மாட்டியா?"

"என்ன ஸார்,பெண்டாட்டி செத்துப் போன துக்கத்தில இருக்கேன், என்ன என்னவோ போலிஸ்காரங்க மாதிரி கேக்கறிங்களே. காசு கொடுக்க முடியும் இல்லைன்னு சொல்லிடுங்க, நான் போவணும். பிணம் கிடக்கு அங்கே!"

"அட்ரஸ் சரியா சொல்லு தரேன். "

"அதான் சொன்னேனே."

"சரியா சொல்லு."

"அய்யோ" என்றான். "வேண்டாம் ஸார்.என்ன நீங்க..."

(மேலே கதையில் படித்துக்கொள்ளுங்கள்.)

*****

2. உரையாடல் கதையின் கருப்பொருளை (theme) வெளிப்படுத்தலாம்.

மேலே உள்ள சுஜாதா கதையின் ஆரம்ப உரையாடல் மையப் பாத்திரமும் அவன் மனைவியும் வந்தவன் சொல்லும் செய்தியை நம்புவதா வேண்டாமா என்ற கதையின் கருப்பொருளை வெளிப்படுத்துகிறது. கணவன் நம்ப மறுக்கின்றான். சாவு பற்றிய செய்தியைத் தாங்கி வருபவன் பொய் சொல்லமாட்டான் என்று மனைவி நினைக்கிறாள்.

*****

3. முன்கதையை, கடந்த காலத்தை வெளிப்படுத்த, சிறுகதையில் உரையாடல் ஒரு சிறந்த கருவி:

’சிலிர்ப்பு’: தி.ஜானகிராமன்


"யப்பா, யப்பா!"

"ஏண்டா கண்ணு!"

"பிச்சி மாமாவுக்கு வந்து, வந்து, தொளாயிர ரூபா சம்பளம். பணக்காரர். இவ்வளவு பணக்காரர்ப்பா!" என்று கையை ஒரு கட வாத்திய அளவுக்கு அகற்றி, மோவாயை நீட்டினான் – குறை சொல்லுகிறாற்போல.

"அதுக்கு என்ன இப்ப?"

"வந்து, செத்தே முன்னாடி ஆரஞ்சு கேட்டேனோல்லியோ, வாங்கிக் குடுக்காம எங்கேயோ பாத்துண்டு நின்னார்ப்பா."

"அவர் காதிலே விழுந்திருக்காது. விழுந்திருந்தா வாங்கியிருப்பார்."

"நான் இரைஞ்சுதான்பா சொன்னேன்".

"பின்னே ஏன் வாங்கிக் கொடுக்கலை?" கேள்வியை நானே திருப்பிக் கேட்டுவிட்டேன். பையன் திணறினான்.

"வந்துப்பா, வந்து, பிச்சி மாமாவை வந்து ஒரு மூணு கால் சைக்கிள் வாங்கித் தான்னேன். வந்து, தரேன் தரேன்னு ஏமாத்திப் பிட்டார்ப்பா…"

"அவர் என்னத்துக்குடா வாங்கணும்? நான் வாங்கித் தரேன்."

"நீ எப்படி வாங்கித் தருவியாம்?"

"ஏன்?"

"உனக்கு நூறு ரூபாதானே சம்பளம்?"

"உனக்கு யார் சொன்னா?"

"வந்து, பிச்சி மாமாதான் சொன்னா."

"உங்கிட்ட வந்து சொன்னாரா, உங்கப்பாவுக்கு நூறு ரூபாதான் சம்பளம்னு?"

"வந்து எங்கிட்ட இல்லேப்பா. மாமிகிட்டச் சொன்னா. நீ வந்து மெட்ராஸ்லேந்து லெட்டர் எழுதியிருந்தே பாரு, புள்ளையார் பூஜையன்னிக்கி; அப்பச் சொன்னா மாமிகிட்ட. வெறுமெ வெறுமே நீ மெட்ராஸ் போறியாம். உனக்கு அரணாக்கொடி வாங்க முடியாதாம்."

இது ஏதுடா ஆபத்து!

*****

4. உரையாடல் கதையில் ஒரு பாத்திரத்தின் குணவிசேஷங்களைக் கோடிட்டுக் காட்ட உதவும் ஓர் உத்தி.

ஒரு பாத்திரத்தின் குணத்தை நேரடியாகச் சொல்வதை விட அதன் மனம், பேச்சு, செயல் மூலம் காட்டுவது ஒரு தேர்ந்த ஆசிரியரின் அடையாளம். சிறுகதையில் எதையும் சொல்வதை விடக் காட்டுவதே மிக இயல்பாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

தற்குணம் காட்டும் உரையாடல்

’காகிதப் பாலங்கள்’: ஜி.எச்.எஸ்.மணியன்

லெட்டர் எழுதிட்டு இருக்கேம்மா, இதோ வந்துட்டேன்..."

"ஏண்டி, கௌசல்யா, போனவாரம்தானே ஒங்க அப்பா வந்துட்டுப் போனார். வெறுமனே அதுக்குள்ள என்ன லெட்டர்? என்ன... நாங்கள் சௌக்யம், நீங்கள் சௌக்யமான்னுதானே...!"

"ஆமாம்மா, எங்க அண்ணாக்கு லெட்டர் எழுதி ரொம்ப நாளாச்சு; மன்னி வேற ரெண்டு லெட்டர் போட்டுட்டா..."

"ரெண்டு லெட்டரா?... வொண்ணுதானே காண்பிச்சே?"

"நேத்திக்கு ஒரு கார்டு வந்ததேம்மா. மிக்ஸி வாங்கிருக்கான்னுகூட எழுதலே?"

"யாருக்கு ஞாபகம் இருக்கு அதெல்லாம்? ஒங்காத்துலே இருக்கறவா வாரம் பத்து லெட்டர் எழுதறா. என்னமோ நீ இங்கே முள்ளுமேலே இருக்கறதா நெனைப்பு அவங்களுக்கு."

*****

பிறர் குணம் காட்டும் உரையாடல்

’உஞ்சவிருத்தி’: சுஜாதா


"ஏன் கேக்கறே... ஸ்கூல்ல புதுசா ஹெட்மாஸ்டரை நியமனம் பண்ணிட்டா. ரெண்டு பேருக்கும் ஆகலை. நோட்ஸ் போடக் கூடாதுன்னு தடை பண்ணிட்டா. கோவிச்சுண்டு ரிஸைன் பண்ணிட்டார். மணச்சநல்லூர்ல போய்ச் சேர்ந்தார். அங்கயும் சரிப்பட்டு வரலை. சம்பளம் சரியா வரலை. அதுக்கப்புறம் நோட்ஸ் போட்டு விக்கறதும் பாழாப் போச்சு. இவர் போட்ட நோட்ஸையே காப்பி அடிச்சு இன்னொருத்தன் போட்டு அரை விலைக்கு வித்தான். அவன்மேல கேஸ் போடறேன்னு வக்கீல்கள்ட்ட காசு நிறைய விட்டார். ஏறக்குறைய பாப்பர் ஆறநிலைக்கு வந்துட்டார். சொத்தும் இல்லை. பத்ரிக்கு போறேன்னு காலை ஓடிச்சுண்டார். மனசொடிஞ்சு போய்ட்டார். அப்றம்..." என்று ரங்கு பேச்சை நிறுத்தினான்.

*****

சரித்திரக்கதை உரையாடல்

சரித்திரக்கதைகளில் உரையாடல் பெரும்பாலும் செந்தமிழில் அமையும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

’குடிப்பெருமை’: கி.வா.ஜகந்நாதன்


"என்ன, தாமப்பல் கண்ணனாரே, இன்று சதுரங்க பலம் உம்மிடத்திலே இல்லையே! நான் அரச குலத்திலே பிறந்தவன், சதுரங்க வலியுடையவன்; நான் தான் வெல்கிறேன். உம்முடைய பக்கம் வெற்றி உண்டாக இது தமிழ்க் கவிதை அல்ல", என்று அந்த உற்சாகத்திலே மாவளத்தான் பேசத் தொடங்கினான்.

"போர்க்களத்துப் படைக்கும் இந்தச் சதுரங்கத்துக்கும் சம்பந்தமே இல்லை. அது வேறு, இது வேறு", என்று புலவர் சொல்லிக் காயை நகர்த்தி வைத்தார்.

*****

மனவோட்டம் பற்றி அடுத்த பதிவில்....


அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Apr 09, 2013 2:58 pm

அருமை ஐயா.. தொடருங்கள்... தொடர்கிறோம்....



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Apr 17, 2013 6:33 pm

4. சிறுகதையில் மனவோட்டம்

மனித மனம் விஷயங்களை ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்தி நினைக்கிறது. இதனை ஆங்கிலத்தில் thinking by association என்பர். ஒரு விஷயத்தைப் பற்றி மனம் நினைக்கும்போது இடைப்படும் எண்ணக் கூறுகளில் தென்படும் ஒரு வார்த்தை, ஒலி அல்லது சித்திரத்தை எடுத்துக்கொண்டு அது தொடர்பான விஷயங்களில் விலகியும் வழுவியும் சஞ்சரிக்கிறது; பின்னர் மீண்டும் மைய நினைவுக்கு வருகிறது. இன்னோரிடத்தில் வேறொரு சம்பந்தம் தட்டுப்பட வழுவிப் பின் மீண்டும் மைய எண்ணத்திற்குத் திரும்புகிறது. இவ்வாறு நிகழ்வதால் மனவோட்டம் என்பது ஓர் தெளிந்த ஆற்றொழுக்குப் போல் அல்லாமல் குழம்பிச் சுழித்துச் செல்லும் நீரோட்டமாக இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் stream of consciousness என்பர்.

இன்னொரு விஷயம். மனம் தனக்குத் தானே பேசிக்கொள்ளும் போது, நாம் வாயால் படிப்பது போல் இலக்கண சுத்தமாவோ அல்லது பேசும்போது எழும் வழக்குச் சொற்களிலோ நினைக்கிறதா? பெரும்பாலும் இல்லையென்று சொல்லிவிடலாம். மனத்தின் எண்ணவோட்டத்தில் முற்றுப் பெறாத வாக்கியங்களும் சொற்றொடர்களும் ஒலிகளும் சித்திரங்களும் சலனப் படங்களும் நினைப்பே இல்லாத புரிதல்களுமே அதிகம்.

இப்படிப்பட்ட மனவோட்டத்தை அப்படியே கதையில் எழுதினால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு மாதிரி:

கல்பனாவை எதிர்பார்த்துக் கடற்கரையில் காத்திருந்தேன். கல்பனா ஓவியங்கள்--கல்கியிலா? கல்பனா சாவ்லா ஸ்பேஸ் ஷட்டில் வெடித்து இறந்தாள் பாவம்! ஆஹா, இளம் தென்றல்! வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்! அதென்ன மூசு வண்டறை? வண்டுக்குத் தமிழில் இன்னொரு பெயர் சுரும்பு. அரும்பு-சுரும்பு. கல்பனா மலரத் தொடங்கியிருக்கும் அரும்பு. என்ன அரும்பு, ரோஜாவா, மல்லிகையா? மலர்களிலே அவள் மல்லிகை! மல்லிகை? ஆம், கள்ளங் கபடமற்ற வெள்ளை யுள்ளம், ஒரு குழந்தையின் மனதைப் போல! இதோ ஒரு குழந்தை என்னைப் பார்த்துக் கையாட்டி அழகாகச் சிரிக்கிறது. அம்மாவும் அழகுதான்! ஜாக்கிரதை, பக்கத்தில் அப்பா! அப்பா போய் எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? அம்மா எத்தனை வருஷங்கள் குடும்பத்தைத் தாங்கினாள்! வசுதேவ குடும்பகம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வசனத்தின் பொருள் உலகம் ஒரு குடும்பமாம், ஸில்லி! பட்டினப் பாலையில் இதை எழுதிய கணியன் பூங்குன்றனார் ஒரு ஜோதிடர். அடுத்த வரியிலேயே அவர் ’தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று மனிதனின் கர்ம வினைகளைப் பற்றியும் பிறவிச் சுழலைப் பற்றியும் அல்லவா பேசுகிறார்? இத்தனை பிறவிகளில் எத்தனை ஊர்களில் பிறந்திருப்போம், எத்தனை பேரைக் கேளிராகப் பெற்றிருப்போம்? என்றெல்லவா இதன் உட்பொருள்?

"என்ன பலமான சிந்தனை?" எதிரில் கல்பனா!


*****

இப்படி மனவோட்டச் சலனங்களைச் சித்தரித்துக் கதை முழுவதும் எழுதிக் கதையின் ஒருமை சிதறாமல் வாசகனை மகிழ்வூட்டும் திறன் உங்களுக்கு இருந்தால் தாராளமாக இப்படி எழுதலாம். இது பெரும்பாலும் சாத்தியம் இல்லை என்பதால் கதாசிரியர் ஒரு பாத்திரத்தின் மனவோட்டத்தைச் சொல்லும் போது கதையை விட்டு விலகாதபடி ஓர் ஒழுங்கினைக் கையாள நேரிடுகிறது.

ஒரு நாவலில் கதையை நிறுத்திக் கதை மாந்தர்களின் மனவோட்டத்தை விவரித்துச் சொல்லிப் பின் கதையைத் தொடரலாம். சிறுகதையில் இப்படி முடியாது. எனவே மனவோட்டம் என்பது சிறுகதையில் கதாபாத்திரத்தின் குணத்தைக் காட்டவும், கதையை நகர்த்தவும், உரையாடலுக்குப் பின்புலமாகவும் பொதுவாகக் கையாளப் படுகிறது. வேறு விதங்களில் கையாளும் போது கதையின் ஒருமையும் குரலும் பார்வையும் சிதறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுவது அவசியம். கீழ்வரும் சான்றுகளைக் கொண்டு சம்பந்தப்பட்ட கதைகளை முழுவதும் ஊன்றிப் படித்துக் கதையில் மனவோட்டம் சொல்லப் படும் விதங்களை அறிந்துகொள்ளவும்.

1. ’கணவன், மகள், மகன்’: அசோகமித்திரன்


[மனதில் கூடப் பிறருக்கு வருத்தம் தரும் நினைவுகளை அகற்ற முயலும் ஒரு அப்பாவிப் பெண்ணின் மனத்தை அசோகமித்திரன் வருணிக்கிறார்.]

மங்களத்திற்கு ஒவ்வொரு கட்டத்திலும் புதிராக இருந்தது. அவள் இவ்வளவு நாட்கள் எந்த மனிதனோடு வாழ்க்கை நடத்தினாள்? இருபத்தைந்து ஆண்டுகள் கூடவே இருந்தும் கூட அவளறியாத ரகசியங்கள் இவ்வளவு அவனிடமிருந்ததா? அவன் மறைத்தானா அல்லது அவள் தான் ஒரேயடியாகக் கண்ணை மூடிக் கொண்டு இருந்து விட்டாளா? இவ்வளவு குருடாக இருந்தவளால் கணவன் மீது பிடிப்பு வைத்திருக்க முடியுமா? அதனால் தான் அவன் ஓடிவிட்டானா?...

உமாவும் ஒரு சீட்டு கம்பெனியில் ரசீது எழுதும் வேலைக்குப் போனாள். அவள் வேலைக்குச் சேர்ந்து இரு மாதங்களுக்குள் அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்று வேறு யாரோதான் மங்களத்துக்குச் சொன்னார்கள். மங்களத்துக்கு நம்ப முடியவில்லை. அவள் பெண் அன்று காலைகூட ஏதும் புதிதாக நடந்திராத மாதிரிச் சாப்பிட்டுக் கைக்குச் சிறிது மோர்சாதமும் எடுத்துப் போயிருக்கிறாள். உமா மாலையில் வீடு வந்தவுடன் அவளை கேட்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் கேட்க வாய் வரவில்லை. அடுத்த நாளும் வாய் வரவில்லை. அதற்கடுத்த நாளும்.

பதினைந்து நாட்கள் கழித்து உமாவாகவே தனிக்குடித்தனம் போகப் போவதாகச் சொன்னபோதும் கேட்க முடியவில்லை. அவளுடைய மாப்பிள்ளை இளவயதுக்காரனா, வயதானவனா, சைவமா, அசைவமா என்று கூடக் கேட்க்கவில்லை. உமாவாகவும் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்ததாக தோன்றவில்லை...

ராமு அந்த முறை எழுந்து விட்டான். ஆனால் இதோ மறுபடியும் சீக்காளியாவதற்கான பாதையில் இருக்கிறான். அவனை இன்னமும், ’குடிக்காதேடா’ என்று ஒரு வார்த்தை அவளால் சொல்ல முடியவில்லை. அவன் குடிப்பது அவளுக்கு தெரியும் என்ற நிலையை உண்டாக்க மனம் வேண்டவில்லை. அவளுக்குத் தன் மகனறிய அவனைக் குடிகாரன் என்று அவள் நினைப்பது கூடச் சாத்தியமாயில்லை. அவனும் அவள் அறியாதவள் என்றுதான் நினைக்க விரும்புவான். இவ்வளவு முற்றிப் போயும் தெரியாமல் இருக்குமா என்ற தோன்றாது. அவளுக்குத் தெரியாதது போல அவள் நடந்து கொள்ளவேண்டும்; அவளுக்குத் தெரியாது, அவளுக்கு தெரிவதை அவன் விரும்பவில்லை என்பது போல அவன் நடந்து கொள்ளவேண்டும்...

*****

2. ’ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்’: ஆதவன்


[மனிதத் தன்மைகள் குறைந்துவரும் இளைய தலமுறையை ஒரு கிழவரின் மனம் மூலம் வருணிக்கிறார் ஆதவன்.]

டர்ரென்று கனவேகமாகச் சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிளின் ஓசை, தரையின் அதிர்வு-நாகராஜன் பதற்றத்துடன் அவசரமாக நடைபாதை மீது தாவி ஏறினார். ஆம், அதே இளைஞன்தான். மோட்டார் சைக்கிள் செயலற்றுப் போக வைக்கும் மூர்க்கமான ஓசையை உமிழ்ந்தவாறு அவரை அடித்துத் தள்ளிவிடும் போல சின்னா பின்னமாக்கிவிடும்போல தோன்றியது.

ஒரே கணம்தான்; அதோ, அவனும் அவனுடைய‌ வாகனமும் தூரத்தில் சென்று மறைந்துவிட்டன.

அவருக்குப் படபடப்பு அடங்குவதற்கு சில விநாடிகள் பிடித்தன. அவர் மனதில் அந்த இளைஞன்பால் மீண்டும் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது. அவன் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்கிறானென்பதை இந்தக் கணம் மறுபடி ருசுப் படுத்தியிருந்தது. அவர் வீட்டை விட்டு வெளியே இறங்க‌ வேண்டியதுதான் தாமதம், உடனே அவனுடைய மோட்டார் சைக்கிள் எங்கிருந்தோ அவரைத் துரத்திக் கொண்டு வந்து விடுகிறது. அவரைப் பதட்டமடையச் செய்வதில் அவனுக்கு ஒரு குரூரமான மகிழ்ச்சி கிடைப்பதாகப் தோண்றியது. உருப்படியான எதிலும் தீவிரப் பிடிவில்லாமல், ஆழமான‌ எதனுடனும் தம்மை முழுமையாகச் சம்பந்தப்படுத்திக் கொண்டு அதன் விளைவுகளைச் சந்திக்கத் துணிவில்லாமல், தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும் இக்கால இளைஞர்களுக்கு இதுபோன்ற பொறுக்கித்தனமான முறைகளில்தான் மனக் கிளர்ச்சியையும் பரவசத்தையும் உருவாக்கிக் கொள்ளத் தோன்றுகிறது. தம்மை நிரூபித்துக்கொள்ளத்தெரிகிறது. அவருடைய பதட்டம் அவனுக்கு ஒரு எல்.எஸ்.டி. அவனுடைய உப்புமா வாழ்க்கையில் அவர் ஒரு ஊறுகாய்.

*****

3. ’இணைப்பறவை’: ஆர்.சூடாமணி


[வாழ்க்கை அனுபவம் மனதை எவ்வளவு புதிராக ஆக்கிவிடுகிறது!]

வந்தவர் போனபோது தன் நண்பர்களிடம் , "என்னைக்குமே மண்டைக்கனந்தான். இந்த சந்தர்ப்பத்தில் கூட மூஞ்சி கொடுத்துப் பேச இஷ்ட்டப்படலே பாருங்களேன். அந்தம்மா எப்படித்தான் இந்த மனுஷன் கூட குடித்தனம் பண்ணினாளோ, பாவம் !" என்று சொல்லிக்கொண்டு போனது ஸ்ரீமதியின் காதில் விழுந்தது. அவள் மீண்டும் கொல்லைப் பக்கம் வந்தாள்.

தாத்தா இப்போது வானத்தைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பார்வையை இறக்கி மாட்டுத் தொழுவத்தைப் பார்த்தார். அதனருகில் இருந்த துணி துவைக்கும் கல்லைப் பார்த்தார். பிறகு வேலியாகப் படர்ந்திருந்த மல்லிகைக் கொடிகளைப் பார்த்தார். ஒவ்வொன்றையும் பார்வை தடவிக் கொடுப்பதுப்போல் இருந்தது. பாட்டி தொழுவத்திலே மாட்டுக்கு தவிடும், பிண்ணாக்கும் வைப்பது, கல்லில் தன் மடிப்புடவையைத் தோய்ப்பது, மல்லிகைக் கொடிகளை ஆசையுடன் வளர்ப்பது எல்லாம் ஸ்ரீமதிக்கு நினைவு வந்தன. பாட்டி இறந்தபோது சடலத்தை தாத்தா இமைக்காமல் நோக்கினார். ஆனாலும் அழவில்லை. அப்போது சரி, பிறகு இந்த இரண்டு வாரங்களிலும் சரி, அவர் அழுது யாரும் பார்க்கவில்லை. இப்படி வீட்டை இடம் இடமாக பொருள் பொருளாக கண்களினால் வருடிக் கொடுக்கிறாரே அவ்வளவுதான் !.

வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட அவள் முனைந்தபோது தாத்தாவின் பார்வை தற்செயலாக அவள் மேல் விழுந்தது.

"என்ன, இன்னும் யாரானும் வந்திருக்காளோ, துக்கம் விசாரிக்க ?"

*****

4. ’காகிதப் பாலங்கள்’: ஜி.எச்.எஸ்.மணியன்


[உரையாடல்களில் பின்புலமாமாய் இயங்கும் மனது பல சந்தர்பங்களில் சொல்லுவது ஒன்றும் நினைப்பது ஒன்றுமாக அல்லவோ செயல்படுகிறது!]

எழுதி முடிச்சுட்டியாடி கௌசல்யா?" என்றபடியே ஹாலுக்குள் வந்தாள் அவள் ’அம்மா’... அதாவது, அவளோட அவரின் அம்மா. அவள் இப்படிக் கேட்டதற்கு லெட்டரைப் படித்துக் காட்டேன் என்று அர்த்தம்...

"கவர்ல எழுதறயா?... கவர் எதுக்கு? ஒரு கார்டுல ரெண்டு வரி எழுதிப்போட்டா பத்தாது? உன் போஸ்டேஜுக்கே மாசா மாசம் தனியா பணம் ஒதுக்கணும் போலிருக்கு. வந்து நீ லெட்டர் எழுதிட்டு இருக்கே... இல்லாட்ட கதை எழுதறேன்னு பேப்பரை வேஸ்ட் பண்ணிண்டிருக்கே!"

கௌசல்யாவின் விழிக்கடைகளில் நீர் முத்துக்கள் தென்பட்டன. "படிக்கறேம்மா, கேக்கறேளா?"

"ம்...ம்... பாபுக்கு ரெடியா கரைச்சு வச்சிருக்கியா?"

"ரெடியா இருக்கும்மா! அது எழுந்திருக்க நாழியாகும். ம்... அன்புள்ள அண்ணாவுக்கு கௌசல்யா அநேக நமஸ்காரம். அப்பா நலமாக வந்து சேர்ந்திருப்பா (எழுதியிருந்தது: அப்பா விவரமெல்லாம் சொல்லியிருப்பார். அவரிடம் சரியாகவே பேச முடியவில்லை.) இங்கு நாங்கள் எல்லோரும் சௌக்யம். பாபு... ம்... சமர்த்தாக இருக்கிறது. ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுகிறது. (படிக்காமல் விட்டது: பாபு வரவர முரண்டு பிடிக்கிறது. இந்த வயசிலேயே இத்தனை பிடிவாதம். இவரை அப்படியே உரிச்சு வெச்சிருக்கு.) நிற்க, இவருக்கு ஆபீஸில் ஜாஸ்தி வேலை. எக்ஸாஸ்டட் ஆக வருகிறார். அட்வான்ஸஸ் செக்க்ஷன் பார்க்கிறார். சீ.ஏ.ஐ.ஐ.பி.யில்..." என்று ஆரம்பிததுமே,

"அதெல்லாம் எதுக்கு எழுதறே? அவன் பெயிலாயிட்டான்னு அப்படியே உங்க வீட்டுக்கு ஒப்பிக்கணுமாக்கும்?"

"..."

"சரி சரி, படி! மணி பன்னெண்டாகப் போறது."

"அக்கௌண்டன்ஸி பாஸ் பண்ணிவிட்டார். அறுபத்தெட்டு மார்க்... ம்... இவருக்கு ப்ரமோஷன் கிடைக்கலாம். (படிக்காமல் விட்டது: அக்கௌண்டன்ஸியை ஜுரத்தோடுபோய் கடனுக்கேன்னு எழுதினார். அவுட்!) நான் நேற்று ஒரு கதை எழுதி முடித்தேன்..."

*****


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Apr 18, 2013 10:31 am

நல்ல அலசல், பயனுள்ள பகுப்பாய்வு... மகிழ்ச்சி மகிழ்ச்சி மிகவும் பயனுள்ள தொடர்...மேலும் தொடர வாழ்த்துகள் ....





சதாசிவம்
சிறுகதை உத்திகள் - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக