புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
19 Posts - 49%
heezulia
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
2 Posts - 5%
Guna.D
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
1 Post - 3%
Shivanya
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
10 Posts - 2%
prajai
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_m10அவசரத்தில் ஒரு சட்டம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரத்தில் ஒரு சட்டம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 05, 2013 2:08 pm

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க சட்டத்தையும் தண்டனையையும்கடுமையாக்க வேண்டியது எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு அதை வெளிப்படையாகவும், விவாதங்களுக்குப் பிறகும் அமல்படுத்துவது அவசியம். ஆனால் மத்திய அமைச்சரவை, இது தொடர்பான அவசரச் சட்டத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதலும் பெற்றுவிட்டது.
-
அவசரச் சட்டத்தை அமல்படுத்தினாலும் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல்பெற்றாக வேண்டும். இன்னும் இரு வாரங்களில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இந்த சட்டத்தை, அவையின் முதல் நடவடிக்கையாக எடுத்துக்கொள்ள எந்த எதிர்க்கட்சியும் மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை. நீதியரசர் வர்மா குழு அளித்துள்ள பரிந்துரைகளின்அடிப்படையில் இந்திய குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் யாரும் தடையாக இருக்கப் போவதில்லை. பிறகு ஏன் இந்த அவசரம்? எதற்காக இந்த அவசர முடிவு?
-
ஏனென்றால், நீதியரசர் வர்மா கமிஷன் பரிந்துரைத்ததில் பலவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் காரணம். இவர்கள்ஏற்க மறுத்துள்ள அம்சங்களை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காகத்தான் இவ்வாறு அவசரச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
-
பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் தரும் புகார்களைப் பதிவு செய்யாத போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டும், மேலும், சிறப்புப் படை அல்லது காவல்துறையினர் பணிக்காலத்தில் இதுபோன்ற பாலியல் வன்முறையில் ஈடுபட்டால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி விசாரணை நடத்த வேண்டும், அந்த அராஜக செயலுக்காக அவர்களுக்குத் தலைமை ஏற்றிருந்த அதிகாரி மீதும் வழக்கு தொடுக்க வேண்டும் என்று வர்மா கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால், அது குறித்து இந்த அவசரச் சட்டம் மௌனம் காக்கிறது. பாலியல் புகாரில் சிக்கிய அரசியல்வாதிகள் குறித்தும்பேச்சே காணோம்.
-
மணவாழ்வில் ஒரு பெண் சந்திக்க நேரும் பாலியல் வன்முறைக்கும் தண்டனை வழங்க இக்கமிஷன் பரிந்துரை செய்தது. ஆனால், அதுபற்றியும் மத்திய அமைச்சரவை அக்கறை கொள்ளவில்லை. திராவக வீச்சில் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவ உதவியை அரசே ஏற்பது குறித்தும் பேச்சே இல்லை.
-
ஆனால், வர்மா கமிஷன் பரிந்துரைக்காத மரண தண்டனையை மத்திய அமைச்சரவை தன்னிச்சையாகப் பரிந்துரைத்துள்ளது.
பாலியல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்து, தில்லி பாலியல் படுகொலைச் சம்பவத்தில் பரவலாக இருந்தபோதிலும், பெண்கள் அமைப்புகள் இதற்கு மாறான கருத்தை முன்வைத்ததால்தான், இந்த தண்டனையைத் தான் பரிந்துரைக்கவில்லை என்று வர்மா கமிஷன் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும்கூட, அரிதினும் அரிதான நேர்வுகளில் மரண தண்டனை அளிப்பதில் நீதிபதியின் விருப்புரிமைக்கு இந்த அவசரச் சட்டம் வகை செய்கிறது.
-
தில்லி பாலியல் வழக்கில் மிக விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு, மிக விரைவில் குற்றப்பத்திரிகைதாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், இது குறித்து மத்திய அரசு விரைந்து செயல்படுவது மகிழ்ச்சிதான்.ஆனால் அதை முறைப்படி, இரு வாரங்களில் கூடவிருக்கும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உள்படுத்தி சட்டத் திருத்தமாகவே நிறைவேற்றலாமே என்பதுதான் நமது கேள்வி. ஒரு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும்போது, முன்தேதியிட்டு அமல்படுத்தவாய்ப்பு உள்ளது. ஆனால் அவசரச் சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்தமுடியாது. இந்த அவசரச் சட்டம், தற்போது தில்லி துணை மருத்துவ மாணவி பாலியல் படுகொலை வழக்குக்குப் பொருந்துமா என்றால், பொருந்தாது. அப்படியானால், யாரைக் காப்பாற்ற மத்திய அமைச்சரவை முயல்கிறது?
-
தற்போதைய தில்லி பாலியல் படுகொலை வழக்கில், மக்கள் கோபம் கொண்டிருக்கும் விவகாரம் - 6 பேர் கும்பலில், மிக வெறித்தனமாகஇயங்கி அப்பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கிய நபர் "பதினேழரை வயது சிறுவன்' என்பதால், அவனை சிறார் நீதிமன்றத்தில் விசாரிப்பது பற்றியே! சட்டப்படி அவன் சிறுவனாக இருக்கலாம். ஆனால் அவன் செய்த செயல் சிறுவனுக்கு உரித்தானது அல்ல என்பதுதான் மக்கள் கருத்தாக இருக்கிறது.
-
சிறார் வயது 18 என்பதை 16 ஆகக் குறைக்க வேண்டும் என்றகோரிக்கையை வர்மா கமிஷன் பரிந்துரைக்க மறுத்துள்ளது.இருப்பினும், அரிதினும் அரிதான நிகழ்வுகளிலும், சிறார் ஈடுபடும் குற்றத்தின் கடுமையை வைத்து அவர்களைப் பொது நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்பதை இந்த அவசரச் சட்டம் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், அதை ஏன் மத்திய அரசு செய்யவில்லை?
-
வர்மா கமிஷன் 29 நாள்களில் அறிக்கை கொடுத்தது. அதேபோன்று இவர்களும் விரைந்து செயல்பட்டதாகக் காட்டிக்கொள்ளவும் வேண்டும். அரசு இயந்திரத்தில் அங்கமாக இருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும். ஆகவே கமிஷன் பரிந்துரைத்த சில முக்கியமான பரிந்துரைகளை எடுத்துக்கொள்ளாமல், பரிந்துரைக்கப்படாத மரண தண்டனையை எடுத்துக்கொண்டு, தங்களை அப்பழுக்கில்லாதவர்களாக காட்டிக்கொள்ள நினைக்கிறதுமத்திய அரசு.
-
பிரச்னைகளை விவாதிக்காமல் அமைச்சரவை மட்டுமே முடிவு செய்துள்ள இந்த அவசரச் சட்டம் பலன் அளிக்காது என்றும், இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் பெண்கள் அமைப்புகள் குரல் கொடுத்தன. ஆனாலும் குடியரசுத் தலைவர் இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.
-அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித்த கோலம் போல ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது மத்திய அமைச்சரவை. உளப்பூர்வமான முனைப்புடன் அல்லாமல் அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே அரசின் குறிக்கோளாக இருக்கும்போது, இந்த அவசரச்சட்டத்தால் முழுப் பயன் பெண்களுக்குக் கிடைக்குமா?எங்கேயோ, ஏதோ இடிக்கிறது!
-
தினமணி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Feb 05, 2013 4:01 pm

இதையடுத்து இச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஒரு குழு போராட்டம் செய்யும், அதையும் மிகைப்படுத்தி மீடியாக்கள் லாபம் பார்க்கும்..
உடனே அனைத்து இணைய தளங்களிலும் இதன் சாதக பாதகங்கள் விவாதிக்கப்படும், கடைசியில் இந்தியாவின் பெண்களின் நிலைமை அதே நிலையில் தான் இருக்கும்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது





சதாசிவம்
அவசரத்தில் ஒரு சட்டம்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 05, 2013 4:53 pm

சதாசிவம் wrote:இதையடுத்து இச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஒரு குழு போராட்டம் செய்யும், அதையும் மிகைப்படுத்தி மீடியாக்கள் லாபம் பார்க்கும்..
உடனே அனைத்து இணைய தளங்களிலும் இதன் சாதக பாதகங்கள் விவாதிக்கப்படும், கடைசியில் இந்தியாவின் பெண்களின் நிலைமை அதே நிலையில் தான் இருக்கும்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மிகசரியாக சொல்லியுள்ளீர்கள் சதாசிவம் ..... நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக