புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வணக்கம் ..!
விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டிற்கும் தடையை யாவரும் அறிவோம். இந்த படம் இஸ்லாமிற்கு எதிரானது, கமலஹாசன் இந்திய இஸ்லாமியரை தீவிரவாதிகளாகவே காட்டி இருக்கிறார் என்று கமல் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறாக குற்றச்சாட்டுகளைக் கூறுவோர் அனைவரும் படத்தைப் பார்க்கவில்லை. பார்க்காமலே இஸ்லாம் சகோதரர்கள் கருத்துக்களை வெளியிடுகிறார்கள் படத்திற்கும் தடையும் கோரியுள்ளனர்.
இதன் பின்னணியில் மதக்கட்சிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பல அரசியல் ஆதாயங்கள் தேடுவதற்காக மதபிரச்சனை உருவாகும் சூழலுக்கு இந்தப் பிரச்சனையை கொண்டுவந்துள்ளனர். இது அரசியல் விளையாட்டு என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அதை புரிந்துகொள்ள மட்டுமே மறுக்கிறோம். கமலஹாசன் இஸ்லாமிற்கு எதிரானவர் என்று சித்தரித்து செய்திகளை வெளியிடும் சமூக வலைதள நண்பர்கள் சில அடிப்படைகளை அறிந்துகொள்ளும் பொருட்டில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.
சினிமா வரலாற்றில் சில நிகழ்வுகள்
விஸ்வரூபம் தடையை ஆதரிக்கும்/எதிர்க்கும் முன் தமிழ் சினிமாவின் சில நிகழ்வுகளை புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது.
2011 ஆம் ஆண்டு வெளியான "பயணம்" படம் உள்நாட்டு தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். விமானத்திலேயே ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொல்வதாக காட்சி அமைப்பு இருக்கும். எந்த இஸ்லாமிய சகோதரர்களோ, அமைப்போ இந்த படத்திற்கு தடை கோரவில்லை. முக்கியமாக அந்தப் படத்தில் மிகவும் ஆக்ரோசமான உணர்ச்சிமிக்க ஒரு காட்சி படத்தின் கடைசியில் வரும். ஒரு இஸ்லாம் குழந்தை வைத்திருக்கும் பையில், தீவிரவாதி ஒருவன் பரிசுப்பொருள் என்று கூறி வெடிகுண்டை வைத்து அனுப்புவதானா காட்சி அது. குறைந்த பட்சம் அந்த காட்சிக்கு எந்த அமைப்பினரும் தடை கோரவில்லை
விஜயக்காந் படங்களில் பெரும்பாலும் இவ்வாறான காட்சிகளே இருக்கும். அப்போதும் எந்த எதிருப்பும் எழவில்லை.
மனித நேயம், இந்து முஸ்லிம் சகோதரத்துவம் இவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ரோஜா, பாம்பே போன்ற படங்களில் உள்நாட்டு தீவிரவாதம்/மதவாத மோதல்கள் இவற்றைக் காட்டும் பல காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. நடந்த உண்மைச் சம்பவம் என்கிற முறையில் பாம்பே படத்தில் வரும் காட்சிகளுக்கும் நாம் தடைகோரவில்லை.
இதைப்போல் தமிழ்நாட்டில் இதற்கு முன் தீவிரவாதத்தை மையப்படுத்தி பல படங்கள் வந்திருக்கிறது. அதற்கு பெரிதாக இஸ்லாம் சகோதரர்கள் போராட்டம் நடத்தவில்லை. ஆனால் வெளிநாடான ஆப்கானிஸ்தானில் நடக்கும் ஒரு நிகழ்வை மையப்படுத்தி எடுத்த படத்திற்கு தரப்படும் எதிர்ப்புகள் மிகவும் வருத்தமளிக்கிறது.
கமலஹாசனுக்கு எதிர்ப்புகள் புதிதல்ல என்றாலும், இந்த போக்கை பார்கையில், உலகில் மிகவும் அறியப்பட்ட ஒருவரின் படத்தை தடை செய்து அரசியல் ஆதாயத்திற்காக இஸ்லாம் சகோதரர்களை சில மதவாத அமைப்புகள் தூண்டிவிடுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. மறுக்கமுடியாத உண்மையும் கூட.
இஸ்லாமியரின் ககோதரன் கமல்
இதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. இஸ்லாம் அமைப்புகள், கட்சிகள் நன்கு அறியும்.
1992 ஆம் ஆண்டு பாபர்மசூதி இடிக்கப்பட்ட போது அதை எதிர்த்து வலுவான குரல் கொடுத்தவர் கமலஹாசன். அன்றைய பிரமதரை சந்தித்து தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தவர்.
இந்து முஸ்லிம் இணக்கமான உறவிற்காக இயங்கும் "ஹர்மனி" என்ற அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்து அதற்காக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.
தனது "ஹேராம்" படத்திலும் இஸ்லாமியர்களை உயர்த்திக்காட்டியவர். தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்லும் தமிழன் என்பதையெல்லாம் தாண்டி, ஜாதி மதம் இவற்றைக் கடந்த மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் உண்மையான மனிதர்.
http://4.bp.blogspot.com/-aOdVQvnTMwk/UQT2oXQKUyI/AAAAAAAABTE/jQTxdGjngdY/s1600/hey-ram.jpg
படத்தின் தளம்
விஸ்வரூபம் படத்தை பார்த்த இஸ்லாம் சகோதரர்கள் முதல் மற்றவர்வரை, படத்தில் இந்திய முஸ்லீம்களை உயர்த்தியே காட்டியுள்ளார் கமல் என்கிறார்கள். படத்தின் பெரும்பாலான பகுதிகளில் அல்லாவைப் பெருமைபடுத்தும் விதமாகவே காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது என்பது அவர்களின் கருத்து.
படத்தின் தளம் அல்கொய்தா, தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகள் எப்படி செயல்படுகிறது என்பதுமட்டுமே. அந்த தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் அப்பாவி இஸ்லாமியர்களையே எப்படி கொலைசெய்கிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். மறுக்கும் பட்சத்தில் அதை மறைக்கவே நினைக்கிறோம் என்று கொள்ளவேண்டும். தாலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்தவரை, ஆப்கானிஸ்தானில் இஸ்லாம் சகோதரிகளுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டது. அடிமையாக வைக்கப்பட்டார்கள் என்றே கூறலாம். தாலிபான்களின் முக்கியமான கட்டளைகளில் ஒன்று "பெண்கள் பள்ளிக்கு செல்லக் கூடாது" என்பது.
ஆட்சி ஆப்கானிஸ்தானில் அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தபிறகு, பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் விஷம் கலந்துவிட்டு 48 பெண் மாணவிகள் உயிர்க்கு போராடிய கதை உலகறியும்.
ஜீன்ஸ், டி ஷர்ட் போட்ட பெண்களை தாலிபான்கள் பாகிஸ்தானில் கொலை செய்துள்ளார்கள். தங்கள் வீட்டு விழாவில் நடனம் ஆடிய 6 கிராமத்து பெண்களையும் கொலை செய்துள்ளனர். இவையாவும் சமீபத்தில் அங்கு நடந்த நிகழ்வுகள் சில உதாரணங்களாக. கொல்லப்பட்டது வேறு மதத்தவறல்ல இஸ்லாமியர்களே.
இஸ்லாம் மதம் தீவிரவாத மதம் அல்ல. எந்த மதமும் தீவிரவாதத்தைப் போதிப்பதில்லை. அதே வேளையில் மேல சொல்லப்பட்ட செயல்களைச் செய்யும் தீவிரவாத அமைப்புகளை பற்றிய உண்மைச் சம்பவத்தை சொல்லும் படத்திற்கு நாம் ஏன் தடை கோரவேண்டும். அந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஏன் தெரிந்துகொள்ள மறுக்கவேண்டும் ? தீவிரவாதத்தை எதிர்த்து குரல்கொடுக்க தயங்கவேண்டும்.
இதுபோன்ற தீவிரவாத செயல்களை வெளியுலகிற்கு தெரியவிடமாட்டோம், தீவிரவாதத்தை ஆதரிப்போம் எனும் போக்கில் சிந்திக்கும் தமிழ், இந்திய இஸ்லாமிய சகோதரர்கள் மட்டும் விஸ்வரூபம் படத்திற்கு தடை கூறலாம். ஆனால் இந்திய, தமிழ் இஸ்லாமியர்கள் என்றும் தீவிரவாதத்தை ஆதரிக்கமாட்டார்கள் என்பதை நன்கு அறிவேன்.
தீவிரவாதத்தை எதிர்ப்போம்
இஸ்லாம் மதத்தவர் மட்டுமல்ல, எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு அப்பாவி உயிரை எடுக்கும்பட்சத்தில் அது தீவிரவாத செயலே. இந்த அடிப்படையை நாம் புரிந்துகொண்டு தீவிரவாத செயல்களை எதிர்க்க ஒன்றுபடுவது அவசியமாகிறது. ஒரு சாதிக்காரன் மற்ற சாதிக்காரனைக் கொன்றாலும், ஒரு இந்து இஸ்லாமியரைக் கொன்றாலும், ஒரு இஸ்லாமியர் இந்துவைக் கொன்றாலும், ஒரு இஸ்லாமியரே இஸ்லாமியரைக் கொன்றாலும் அது தீவிரவாதமே.
பாகிஸ்தான் ஆப்கனிஸ்தானில் வசிக்கும் ஒருவன், தீய செயல்களை செய்ய விரும்பாத இந்திய முஸ்லீமையோ ஒரு இந்துவையோ நண்பனாக கருதுவதில்லை. அப்படியிருக்க நமது நாட்டை அழிக்க என்னும் ஒரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பிடம் இருந்து தாய் நாட்டைக் காக்கும் விதத்தில் படமாக்கப்பட்ட ஒரு படத்திற்கு இங்கே நாம் ஏன் தடை விதிக்க வேண்டும் ? இதுவரை அந்நாட்டு தீவிரவாத அமைப்புகள் இந்தியாவின் மீது நடத்திய தாக்குதல்களில் இறந்தது இந்து மட்டுமல்ல. இஸ்லாம் சகோதரனும் தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நம் நாட்டை அழிக்க என்னும் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் எவ்வாறு இயங்குகிறது என்று காட்டும் ஒரு படத்தை தடுப்பது நாம் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக ஆகிவிடாதா .? இதை இஸ்லாத்திற்கு எதிரான படம் என்று உணர்ச்சிப்பூர்வமாக பார்க்காமல், தீவிரவதத்திற்கு எதிரான படம் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியமாகிறது. மேலும் இந்து முஸ்லிம் என்று சிந்திக்காமல், இந்தியன் என்ற சிந்தனையுடன் அணுகுவதும் அவசியமாகிறது. இதை நாம் நன்கு உணர வேண்டும்.
http://4.bp.blogspot.com/-q1EAgOKhJNs/UQT24M8rjUI/AAAAAAAABTM/5Vfuwr3MMsU/s1600/11.jpg
"காக்கைச் சிறகினிலே" வலைப்பூவில் பதியும் எந்த ஒரு பதிவும் எந்த மதத்தையும் புண்படுத்தும் படியாக இருக்கக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். காரணம் "மதம் தோன்றும் முன்னே மனிதன் தோன்றிவிட்டான். எனக்கு மனிதம் மட்டும் போதும்". அதேவேளையில், அனைத்து மதத்தினரும் என் சகோதரர்களே. ஒரு சில மதத்தில் இருக்கும் சிலர் செய்யும் தவறுகளுக்கு அந்த மதமே தவறு என்று நாம் கூற இயலாது. ஏனென்றால் எந்த மதமும் தவறான கொள்கைகளைப் போதிப்பதில்லை. அந்த கொள்கைகளைப் புரிந்துகொள்ளும் விதம் தான் தவறாகிறது. இதுவே எனது எண்ணம், கருத்து.
ஆகையால் இங்கு பின்னூட்டம் (கமெண்ட்) இட விரும்பும் நண்பர்கள், நடுநிலையாக யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி ..!
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/01/blog-post_27.html
அன்புடன்,
அகல்
விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டிற்கும் தடையை யாவரும் அறிவோம். இந்த படம் இஸ்லாமிற்கு எதிரானது, கமலஹாசன் இந்திய இஸ்லாமியரை தீவிரவாதிகளாகவே காட்டி இருக்கிறார் என்று கமல் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறாக குற்றச்சாட்டுகளைக் கூறுவோர் அனைவரும் படத்தைப் பார்க்கவில்லை. பார்க்காமலே இஸ்லாம் சகோதரர்கள் கருத்துக்களை வெளியிடுகிறார்கள் படத்திற்கும் தடையும் கோரியுள்ளனர்.
இதன் பின்னணியில் மதக்கட்சிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பல அரசியல் ஆதாயங்கள் தேடுவதற்காக மதபிரச்சனை உருவாகும் சூழலுக்கு இந்தப் பிரச்சனையை கொண்டுவந்துள்ளனர். இது அரசியல் விளையாட்டு என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அதை புரிந்துகொள்ள மட்டுமே மறுக்கிறோம். கமலஹாசன் இஸ்லாமிற்கு எதிரானவர் என்று சித்தரித்து செய்திகளை வெளியிடும் சமூக வலைதள நண்பர்கள் சில அடிப்படைகளை அறிந்துகொள்ளும் பொருட்டில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.
சினிமா வரலாற்றில் சில நிகழ்வுகள்
விஸ்வரூபம் தடையை ஆதரிக்கும்/எதிர்க்கும் முன் தமிழ் சினிமாவின் சில நிகழ்வுகளை புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது.
2011 ஆம் ஆண்டு வெளியான "பயணம்" படம் உள்நாட்டு தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். விமானத்திலேயே ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொல்வதாக காட்சி அமைப்பு இருக்கும். எந்த இஸ்லாமிய சகோதரர்களோ, அமைப்போ இந்த படத்திற்கு தடை கோரவில்லை. முக்கியமாக அந்தப் படத்தில் மிகவும் ஆக்ரோசமான உணர்ச்சிமிக்க ஒரு காட்சி படத்தின் கடைசியில் வரும். ஒரு இஸ்லாம் குழந்தை வைத்திருக்கும் பையில், தீவிரவாதி ஒருவன் பரிசுப்பொருள் என்று கூறி வெடிகுண்டை வைத்து அனுப்புவதானா காட்சி அது. குறைந்த பட்சம் அந்த காட்சிக்கு எந்த அமைப்பினரும் தடை கோரவில்லை
விஜயக்காந் படங்களில் பெரும்பாலும் இவ்வாறான காட்சிகளே இருக்கும். அப்போதும் எந்த எதிருப்பும் எழவில்லை.
மனித நேயம், இந்து முஸ்லிம் சகோதரத்துவம் இவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ரோஜா, பாம்பே போன்ற படங்களில் உள்நாட்டு தீவிரவாதம்/மதவாத மோதல்கள் இவற்றைக் காட்டும் பல காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. நடந்த உண்மைச் சம்பவம் என்கிற முறையில் பாம்பே படத்தில் வரும் காட்சிகளுக்கும் நாம் தடைகோரவில்லை.
இதைப்போல் தமிழ்நாட்டில் இதற்கு முன் தீவிரவாதத்தை மையப்படுத்தி பல படங்கள் வந்திருக்கிறது. அதற்கு பெரிதாக இஸ்லாம் சகோதரர்கள் போராட்டம் நடத்தவில்லை. ஆனால் வெளிநாடான ஆப்கானிஸ்தானில் நடக்கும் ஒரு நிகழ்வை மையப்படுத்தி எடுத்த படத்திற்கு தரப்படும் எதிர்ப்புகள் மிகவும் வருத்தமளிக்கிறது.
கமலஹாசனுக்கு எதிர்ப்புகள் புதிதல்ல என்றாலும், இந்த போக்கை பார்கையில், உலகில் மிகவும் அறியப்பட்ட ஒருவரின் படத்தை தடை செய்து அரசியல் ஆதாயத்திற்காக இஸ்லாம் சகோதரர்களை சில மதவாத அமைப்புகள் தூண்டிவிடுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. மறுக்கமுடியாத உண்மையும் கூட.
இஸ்லாமியரின் ககோதரன் கமல்
இதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. இஸ்லாம் அமைப்புகள், கட்சிகள் நன்கு அறியும்.
1992 ஆம் ஆண்டு பாபர்மசூதி இடிக்கப்பட்ட போது அதை எதிர்த்து வலுவான குரல் கொடுத்தவர் கமலஹாசன். அன்றைய பிரமதரை சந்தித்து தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தவர்.
இந்து முஸ்லிம் இணக்கமான உறவிற்காக இயங்கும் "ஹர்மனி" என்ற அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்து அதற்காக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.
தனது "ஹேராம்" படத்திலும் இஸ்லாமியர்களை உயர்த்திக்காட்டியவர். தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்லும் தமிழன் என்பதையெல்லாம் தாண்டி, ஜாதி மதம் இவற்றைக் கடந்த மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் உண்மையான மனிதர்.
http://4.bp.blogspot.com/-aOdVQvnTMwk/UQT2oXQKUyI/AAAAAAAABTE/jQTxdGjngdY/s1600/hey-ram.jpg
படத்தின் தளம்
விஸ்வரூபம் படத்தை பார்த்த இஸ்லாம் சகோதரர்கள் முதல் மற்றவர்வரை, படத்தில் இந்திய முஸ்லீம்களை உயர்த்தியே காட்டியுள்ளார் கமல் என்கிறார்கள். படத்தின் பெரும்பாலான பகுதிகளில் அல்லாவைப் பெருமைபடுத்தும் விதமாகவே காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது என்பது அவர்களின் கருத்து.
படத்தின் தளம் அல்கொய்தா, தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகள் எப்படி செயல்படுகிறது என்பதுமட்டுமே. அந்த தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் அப்பாவி இஸ்லாமியர்களையே எப்படி கொலைசெய்கிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். மறுக்கும் பட்சத்தில் அதை மறைக்கவே நினைக்கிறோம் என்று கொள்ளவேண்டும். தாலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்தவரை, ஆப்கானிஸ்தானில் இஸ்லாம் சகோதரிகளுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டது. அடிமையாக வைக்கப்பட்டார்கள் என்றே கூறலாம். தாலிபான்களின் முக்கியமான கட்டளைகளில் ஒன்று "பெண்கள் பள்ளிக்கு செல்லக் கூடாது" என்பது.
ஆட்சி ஆப்கானிஸ்தானில் அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தபிறகு, பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் விஷம் கலந்துவிட்டு 48 பெண் மாணவிகள் உயிர்க்கு போராடிய கதை உலகறியும்.
ஜீன்ஸ், டி ஷர்ட் போட்ட பெண்களை தாலிபான்கள் பாகிஸ்தானில் கொலை செய்துள்ளார்கள். தங்கள் வீட்டு விழாவில் நடனம் ஆடிய 6 கிராமத்து பெண்களையும் கொலை செய்துள்ளனர். இவையாவும் சமீபத்தில் அங்கு நடந்த நிகழ்வுகள் சில உதாரணங்களாக. கொல்லப்பட்டது வேறு மதத்தவறல்ல இஸ்லாமியர்களே.
இஸ்லாம் மதம் தீவிரவாத மதம் அல்ல. எந்த மதமும் தீவிரவாதத்தைப் போதிப்பதில்லை. அதே வேளையில் மேல சொல்லப்பட்ட செயல்களைச் செய்யும் தீவிரவாத அமைப்புகளை பற்றிய உண்மைச் சம்பவத்தை சொல்லும் படத்திற்கு நாம் ஏன் தடை கோரவேண்டும். அந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஏன் தெரிந்துகொள்ள மறுக்கவேண்டும் ? தீவிரவாதத்தை எதிர்த்து குரல்கொடுக்க தயங்கவேண்டும்.
இதுபோன்ற தீவிரவாத செயல்களை வெளியுலகிற்கு தெரியவிடமாட்டோம், தீவிரவாதத்தை ஆதரிப்போம் எனும் போக்கில் சிந்திக்கும் தமிழ், இந்திய இஸ்லாமிய சகோதரர்கள் மட்டும் விஸ்வரூபம் படத்திற்கு தடை கூறலாம். ஆனால் இந்திய, தமிழ் இஸ்லாமியர்கள் என்றும் தீவிரவாதத்தை ஆதரிக்கமாட்டார்கள் என்பதை நன்கு அறிவேன்.
தீவிரவாதத்தை எதிர்ப்போம்
இஸ்லாம் மதத்தவர் மட்டுமல்ல, எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு அப்பாவி உயிரை எடுக்கும்பட்சத்தில் அது தீவிரவாத செயலே. இந்த அடிப்படையை நாம் புரிந்துகொண்டு தீவிரவாத செயல்களை எதிர்க்க ஒன்றுபடுவது அவசியமாகிறது. ஒரு சாதிக்காரன் மற்ற சாதிக்காரனைக் கொன்றாலும், ஒரு இந்து இஸ்லாமியரைக் கொன்றாலும், ஒரு இஸ்லாமியர் இந்துவைக் கொன்றாலும், ஒரு இஸ்லாமியரே இஸ்லாமியரைக் கொன்றாலும் அது தீவிரவாதமே.
பாகிஸ்தான் ஆப்கனிஸ்தானில் வசிக்கும் ஒருவன், தீய செயல்களை செய்ய விரும்பாத இந்திய முஸ்லீமையோ ஒரு இந்துவையோ நண்பனாக கருதுவதில்லை. அப்படியிருக்க நமது நாட்டை அழிக்க என்னும் ஒரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பிடம் இருந்து தாய் நாட்டைக் காக்கும் விதத்தில் படமாக்கப்பட்ட ஒரு படத்திற்கு இங்கே நாம் ஏன் தடை விதிக்க வேண்டும் ? இதுவரை அந்நாட்டு தீவிரவாத அமைப்புகள் இந்தியாவின் மீது நடத்திய தாக்குதல்களில் இறந்தது இந்து மட்டுமல்ல. இஸ்லாம் சகோதரனும் தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நம் நாட்டை அழிக்க என்னும் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் எவ்வாறு இயங்குகிறது என்று காட்டும் ஒரு படத்தை தடுப்பது நாம் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக ஆகிவிடாதா .? இதை இஸ்லாத்திற்கு எதிரான படம் என்று உணர்ச்சிப்பூர்வமாக பார்க்காமல், தீவிரவதத்திற்கு எதிரான படம் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியமாகிறது. மேலும் இந்து முஸ்லிம் என்று சிந்திக்காமல், இந்தியன் என்ற சிந்தனையுடன் அணுகுவதும் அவசியமாகிறது. இதை நாம் நன்கு உணர வேண்டும்.
http://4.bp.blogspot.com/-q1EAgOKhJNs/UQT24M8rjUI/AAAAAAAABTM/5Vfuwr3MMsU/s1600/11.jpg
"காக்கைச் சிறகினிலே" வலைப்பூவில் பதியும் எந்த ஒரு பதிவும் எந்த மதத்தையும் புண்படுத்தும் படியாக இருக்கக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். காரணம் "மதம் தோன்றும் முன்னே மனிதன் தோன்றிவிட்டான். எனக்கு மனிதம் மட்டும் போதும்". அதேவேளையில், அனைத்து மதத்தினரும் என் சகோதரர்களே. ஒரு சில மதத்தில் இருக்கும் சிலர் செய்யும் தவறுகளுக்கு அந்த மதமே தவறு என்று நாம் கூற இயலாது. ஏனென்றால் எந்த மதமும் தவறான கொள்கைகளைப் போதிப்பதில்லை. அந்த கொள்கைகளைப் புரிந்துகொள்ளும் விதம் தான் தவறாகிறது. இதுவே எனது எண்ணம், கருத்து.
ஆகையால் இங்கு பின்னூட்டம் (கமெண்ட்) இட விரும்பும் நண்பர்கள், நடுநிலையாக யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி ..!
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/01/blog-post_27.html
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ஏற்கனமே, போட்ட முதலை எடுக்க வேண்டுமென்று டி.டி.ஹெச் வரை சென்று தடங்களால் திரும்பிவிட்டார் கமல், அடுத்து படம் ஒரு சில இடங்களில் ரிலீஸ் ஆனதால் திருட்டு வி.சி.டி வேறு இதிலும் இழப்பு இனியும் தாமதித்தால் அது அவருக்கு சோதனையில் கடை நிலைக்கு தள்ளிவிடும்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உங்களுடைய இந்த கட்டுரை பதிவு அருமை நடுநிலையாக எழுதி உள்ளீர்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அரசியலும், மதமும், ஜாதியும் இன்று அனைத்திலும் பின்னிப் பினைந்துவிட்டது.
அதில் சுய லாபத்திற்காக எதுவும் செய்ய தயார் ஆயிட்டாங்க.
அதில் இதுபோன்ற முயற்சிகள் பாதிப்புக்குள்ளாகிறது வேதனையே.
அதில் சுய லாபத்திற்காக எதுவும் செய்ய தயார் ஆயிட்டாங்க.
அதில் இதுபோன்ற முயற்சிகள் பாதிப்புக்குள்ளாகிறது வேதனையே.
- Halfmoonபண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010
அவரவர் மதங்கள் அவரவர்களுக்கு உயிர் என்று கொண்டால்.. இஸ்லாமியர்களுக்கு அதைவிட ஒருபடி மேல்தான். பாம்பாய் படத்தை எடுத்ததால் மணிரத்னம் எவ்வளவு பிரச்சினைகளைச் சந்தித்தார் என்று எல்லாருக்கும் தெரியும். இன்னும் கம்ப்யூட்டர்,இண்டர்நெட் என்று வளராத காலகட்டம் அது. இருந்திருந்தால் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்ப்படுத்தியிருக்கக்கூடும். தங்களுடைய சுயலாபத்திற்க்காக மதங்களை ஏன் பகடைக்காய்களாய் பயன்படுத்த வேண்டும்? உன்னைப்போல் ஒருவன் படத்திற்கே கமலஹாசன் எதிப்புகளைச் சந்தித்தார். இருப்பினும் இம்முறை விஸ்வரூபத்தில் “குர் ஆனையும்” தொழுகையையும் மோசமாக சித்தரித்திருக்கிறார் என்பதாலேயே இப்படத்திற்கு இத்தனை எதிர்ப்புகளே அன்றி கமலஹாசனுக்கு எதிரானதல்ல இஸ்லாம். பிரச்சினை ஏற்படும்னு தெரிஞ்சும் ஏன் அந்த மாதிரியான கதைகளை படமாக்க முயற்சிக்கிராங்க. பணம் சம்பாதிக்கத்தானே படம் எடுக்குறாங்க.. கமர்சியலான படமாக எடுத்து கல்லா கட்ட வேண்டியதுதானே? இண்டெர்நெட் வளர்ந்த இக்காலகட்டத்தில் குக்கிரமத்தில் இருப்பவனுக்கும் எல்லாமும் தெரிகிறது. எதிர்ப்புகள் பெருகுகிறது என்பதில் ஆச்சர்யப்பட அவசியமில்லை. உதாரணமாக, டெல்லியில் இதற்குமுன் கற்பழிப்புகள் நடக்கவில்லையா? அதற்காக இத்தனை பெரிய ஆர்ப்பாட்டங்களை, எதிர்ப்புகளை இந்திய அரசு சந்தித்ததுண்டா? ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? என்று இந்த பதிவிற்கு தலைப்பிட்டு இருக்கின்றீகள். குஜராத் இனக்கலவரத்தை, அங்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கமலஹாசனோ, மணிரத்னமோ படமாக எடுத்து தமிழ்நாட்டில் வெளியிடட்டும். முடியுமா? தமிழ்நாட்டில் தானே என்று மற்ற மாநிலத்தவர்கள் அமைதியாக இருந்துவிடுவார்களா? கலாச்சாரத்தை, மரபுகளை, மதவாத உணர்வுகளை தூண்டிவிடும் இதுபோன்ற படங்கள் இனிமேல் வெளிவராமல் இருக்க இந்த விஸ்வரூத்திற்க்கு இடப்பட்ட தடை சரியே என் பார்வையில்....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இரண்டு வருடங்களுக்குள் வந்த சயிப் அலி கானின் குர்பான் படத்தை பார்க்க வேண்டுகிறேன் - இந்தப் படத்தை தடை செய்ய விரும்புபவர்களை.
இதே இன்டர்நெட் யுகத்தில் வந்த படம் தான் - ஒரு இஸ்லாமியர் எடுத்த படம் தான் - மும்பையில் தயாரித்து வெளியிடப்பட்ட படம்.
தயவுசெய்து அந்தப் படத்தை பார்த்துவிட்டு கருத்து கூற வேண்டுகிறேன்.
இதே இன்டர்நெட் யுகத்தில் வந்த படம் தான் - ஒரு இஸ்லாமியர் எடுத்த படம் தான் - மும்பையில் தயாரித்து வெளியிடப்பட்ட படம்.
தயவுசெய்து அந்தப் படத்தை பார்த்துவிட்டு கருத்து கூற வேண்டுகிறேன்.
- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
எல்லா இஸ்லாமியர்களும் எதிர்க்கவில்லை. குறிப்பாக படம் பார்த்த இஸ்லாமியர்கள் எதிர்ப்புக்கு எதிராக கருத்தை பல தளங்களில் பதிவு செய்துள்ளார்கள்.
இஸ்லாமியர் ஒன்றுபட்டு இருத்தல் தவறில்லை. அதே வேளையில் சில இஸ்லாம் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட படத்திற்கு தடை கோரும் நாம் , பாகிஸ்தான் ஆப்கனிஸ்தானில் தீவிரவாத தாக்குதலில் உயிரிலப்போரும் அப்பாவி இஸ்லாம் சகோதர சகோதரிகள் குழந்தைகள் தான் என்பதை ஏனோ யோசிக்க மறுக்கிறோம்.. வேதனையளிக்கிறது..Halfmoon wrote:அவரவர் மதங்கள் அவரவர்களுக்கு உயிர் என்று கொண்டால்.. இஸ்லாமியர்களுக்கு அதைவிட ஒருபடி மேல்தான்.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
மிக்க நன்றி முத்து ...Muthumohamed wrote:உங்களுடைய இந்த கட்டுரை பதிவு அருமை நடுநிலையாக எழுதி உள்ளீர்கள்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன் wrote:அரசியலும், மதமும், ஜாதியும் இன்று அனைத்திலும் பின்னிப் பினைந்துவிட்டது.
அதில் சுய லாபத்திற்காக எதுவும் செய்ய தயார் ஆயிட்டாங்க.
அதில் இதுபோன்ற முயற்சிகள் பாதிப்புக்குள்ளாகிறது வேதனையே.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்
» இந்தியாவில் கொரோனா பற்றிய செய்தி படங்களுக்காக மறைந்த இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் விருது!
» விஸ்வரூபம் படத்திற்கு 2 தேசிய விருதுகள், பரதேசி படத்திற்கு ஒரு தேசிய விருது!
» ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!
» ஆப்கான் தாக்குதலில் மூன்று இந்தியர்கள் பலி
» இந்தியாவில் கொரோனா பற்றிய செய்தி படங்களுக்காக மறைந்த இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் விருது!
» விஸ்வரூபம் படத்திற்கு 2 தேசிய விருதுகள், பரதேசி படத்திற்கு ஒரு தேசிய விருது!
» ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!
» ஆப்கான் தாக்குதலில் மூன்று இந்தியர்கள் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|