புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10 
3 Posts - 5%
prajai
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10 
2 Posts - 4%
viyasan
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10 
1 Post - 2%
Rutu
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10 
1 Post - 2%
சிவா
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10 
2 Posts - 13%
Rutu
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 15, 2013 1:24 pm

First topic message reminder :

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்
ரமணி

01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம்
தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு.
நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும்
நகையென மின்னும்
தகைசால் தெய்வீகத் துறவி
ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே.

மராட்டிய மாநில மூதூர் ஒன்றில்
விராட்டுரு முனியின் வீதியோர முகாம்.
யானைமேல் அமர்ந்து
நாலுபேர் சாலைவழிப்
போவதைப் பார்த்தார் பெரியவர்.
அவர்களை உடனே அழைத்து உசாவினார்:
இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ?

நாங்கள் ஓர்காலம் நீங்காத செல்வமுடன்
பாங்காக வாழ்ந்தோம் ஸ்வாமீ!
எந்தைதம் காலம் எய்திய காலை
விந்தையான முறையில்
தனங்கள் அனைத்தும் தானம் செய்துவிட்டு
வனமிகிவ் வானை எம்வசம் தந்து
கற்றது ஊரெல்லாம் சொற்றியே
உற்ற காலம் கழித்து வாழ்வீர்
என்று சொல்லி நன்று மறைந்தாரே!

அதன்படி நாங்களும் அங்கும் இங்கும்
மெதுவாக யானைமேல்
ஊர்விட்டு ஊர்சென்று
பேர்மிகு புராணக் கதைகள் சொல்கிறோம்
பக்திப் பாக்கள் பாடுகிறோம்
ஏதோ கொஞ்சம்
தீதில்லாப் பொருள்கிடைக்கும் எமக்கும் யானைக்குமே!

ஹாஹா என்று சிரித்தார் பெரியவர்.
இங்கேயும் இதுதான் நடைமுறை!
இவர்களும் என்னை யானைபோல்
தவறாது ஊர்விட்டு ஊராக
அழைத்துச் செல்லும் இடங்களில் நானும்
உழைக்கிறேன் பக்தி உள்பலம் பெருகவே.

இவர்கட்கும் சாப்பாடு பணமெனக் கிடைக்கும்
எனக்கும் பக்தர்கள்
எனக்கும் உமக்கும் ஒரேதொழில்!
பெரியவர் சிரிப்பில் நகைச்சுவை உணர்வும்
சரிசம உள்ளமும் கண்ட பக்தருளம்
விரிவும் உவகையும் வியப்பும் உற்றதே!

--ரமணி 08/01/2013

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jul 09, 2015 10:07 am

ஜகத்குரு தரிசனம்
33. சம்புசொல் அன்றோ வசம்பு!
(அளவியல் இன்னிசை வெண்பா)

சிறுநீ ரகத்தில் சிரமம் சிகிச்சை
உறிந்தது செல்வம் உளைச்சலென் உள்ளத்தில்
ஐயன் அருளில் அடியேன் குணம்பெற்றென்
மெய்தேற நான்வேண்டு வேன். ... 1

இதுபோன்ற போதில் இனியவராய்ப் பேசிப்
பொதுவில் கருணை பொழியும் பெரியவர்
இச்சம யம்கடிந்தே ஏசியது கண்டவர்
அச்சம் எழநின் றனர். ... 2

பண்ணும் அதர்மத்தைப் பற்றியெல் லாரும்தான்
எண்ணாது என்னிடம் இங்கு வருகின்றார்
தான்செய் அதர்மம் தவறை உணர்வதில்லை
நானென்ன செய்வது நன்று? ... 3

முன்னோர் தரும முறைக்கென்று வைத்திருந்தார்
நின்று விளைநிலம் நீர்ப்பந்தல் வைக்க!
இவரதை விற்றுண்டால் இன்னல் வராதா?
தவறுசெய் தால்துன்பம் தான். ... 4

உறைத்தது வந்தவருக்(கு) உள்ளம் நெகிழ
உறுதிமொழி தந்துநின்றார் உற்றதர்மம் நீர்ப்பந்தல்
என்றவர் செய்யவே; இன்முனி கேட்டவரை
மன்னித்துச் சொன்னார் மருந்து. ... 5

கடையில் வசம்பு கணிசமாய் வாங்கி
அடிவயிற் றில்பூ(சு) அறைத்தே; சிலநாளில்
எல்லாம் சரியாகும் என்றார் தருமத்தில்
நல்லதே செய்துவா நன்கு. ... 6

பத்துநாள் சென்றதும் பத்தரும் மீள்வந்தார்
அத்தனை துன்பமும் ஆவியாய்ப் போனதென்றார்!
நம்முடல் உள்ள நலிவுகள் போக்கிடும்
சம்புசொல் அன்றோவ சம்பு! ... 7

--ரமணி, 09/07/2015, கலி.24/03/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9623/

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2015 3:01 pm

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 R3ZjzOp1RdyJ1enPgEjo+imagesசம்போ சங்கரா !
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 R3ZjzOp1RdyJ1enPgEjo+imagesஜய ஜய சங்கரா !!
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 R3ZjzOp1RdyJ1enPgEjo+imagesஹர ஹர சங்கரா !!!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 09, 2015 9:20 pm

அருமையான கவிதைகள் அய்யா ..... வாழ்த்துக்கள்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jul 16, 2015 6:28 pm

ஜகத்குரு தரிசனம்
34. எப்போதும் ராமநாமம்
(எண்சீர் விருத்தம்: கூவிளம் காய் காய் காய் ... காய் காய் மா மா)

உத்தர மாநிலத்தில் பணிசெய்து வாழும்நம்
. ஊர்க்கார ராயொருவர் ஓர்நாள் காஞ்சிச்
சித்தரைக் காணவந்தார், பிரச்சினையாம் அவருக்கு:
. செவிகேட்கும் எப்போதும் ஏதோ பேச்சு!
அத்தனை யும்ராம தூதனென்று பேர்பெற்ற
. ஆஞ்சநேயர் குரலென்றே உள்ளம் கொண்டார்
இத்தகு தெய்வீக சக்தியவர்க் கிருப்பதனை
. வேறெவரும் அறியாதே ஒளித்தல் ஆமோ? ... 1

கூடிய நண்பர்கள் தூண்டுதலால் அம்மனிதர்
. குறிசொல்ல ஓர்நாளை ஒதுக்கி வைத்தார்
கூடரும் சக்திபயன் பிறமனிதர் பெறும்வண்ணம்
. கூட்டுதலை விழைந்தவரைச் சுற்றிக் கூட்டம்
பாடதற்குப் பணமென்று அவரேதும் கொள்ளவில்லை
. பலித்ததிவர் சிலபேர்க்குச் சொன்ன குறியே!
நாடுவோர்க் கிவர்சொல்லால் நலிவுசில தீர்ந்ததெனில்
. நன்மைசெயும் இவர்மனத்தில் அமைதி இல்லை! ... 2

காஞ்சியில் பெரியவரை தரிசித்தே அலுவலகக்
. காரியத்தில் சென்னைக்கு மாற்றம் கேட்டார்
ஆஞ்சநே யர்கருணை பூரணமாய் உனக்கிருக்கே
. அவரிடமே வேண்டிக்கொள் என்றார் முனிவர்!
பூஞ்சையாய்க் கவலைபடர் முகத்துடனே இவர்சொன்னார்
. புரைதீர்க்கும் சொல்தீய தேவ தையோ
ஆஞ்சநே யர்சொல்லாய் நான்கொண்ட ஊகத்தால்
. அடியேனுக் கிரவினிலே தூக்கம் இல்லை! ... 3

என்துயர் பெரியவர்தான் தீர்த்தருள வேண்டுமென்றே
. இங்குவந்தேன்! கருணைமுனி சொன்னார் தீர்வு:
என்றுமே இராமரது நாமத்தைச் செபம்செய்வாய்
. இம்மடத்தின் குருவான போதேந் திராளின்
இன்னருள் அதிஷ்டானம் உன்மனத்தில் சாந்திதரும்
. இங்குசென்று சிலகாலம் வாசம் செய்வாய்
கும்பகோ ணம்பக்கம் இப்பெரியார் அதிஷ்டானம்
, கோவிந்த புரமென்றோர் ஊரில் உளதே. ... 4

பின்னையோர் நாளினிலே பத்தரவர் வந்துநின்றார்
. பெரியவரை தரிசித்தே ஆசி பெறவே
என்னவோய் ஆஞ்சநேயர் தன்ராம சேவைக்கே
. இப்போது போய்ட்டாரா என்றார் முனிவர்,
தன்முகத் தில்குறும்பு தவழ்ந்திடவே! எப்போதும்
. சத்தியரா மர்நாம செபத்தில் உறைவோர்
பொன்மனச் செம்மலென்றே பூவுலகில் செல்வரென
. போதேந்தி ராள்முனிவர் வாழ்க்கை சொலுமே! ... 5

--ரமணி, 16/07/2015, கலி.31/03/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9683/

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 16, 2015 6:52 pm

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 UjmQ6ijMR8qUfRjQrXx4+periyava

மஹா பெரியவா பாதமே சரணம் .

ஜய ஜய சங்கரா
ஹர ஹர சங்கரா .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jul 27, 2015 7:08 pm

ஜகத்குரு தரிசனம்
35. குழந்தைகள் சாமிக்கு வழிபாடு!
(அளவியல் இன்னிசை வெண்பா)

அந்தநாள் பாலர்கள் ஆடுவிளை யாட்டிலும்
இந்துமா தொல்வழக்கம் இல்லா திருக்காது
கோவில் விழாக்காண் குடந்தைக் குழந்தையுடன்
மேவிவிளை யாடு மிறை! ... 1

கூடைக் களிமண்ணைக் குஞ்சுக் கரம்பல
கூடிப் பிசையவே கூடும் இறையுரு!
வெண்ணைகொள் தாழியும் வேங்கடவன் வாகனமும்
வண்ணத்தில் வந்திடும் வாகு! ... 2

பற்பலவாய் தெய்வம் பரியூர்தி மூஞ்சூறாம்
கற்பனை ஊற்றெடுக்கக் கற்ற குழந்தைகள்
மந்திரம் சொல்லும் மழலைக் குரலிலே
கந்தனை யெண்ணியே காப்பு. ... 3

சிவாய நமஹ திருமால் நமஹ
சிவநந்தி யேபோற்றி தேவியே போற்றி
கரிமுக னேநமஹ கந்தனே போற்றி
பரிவுடன் எங்களைப் பார்! ... 4

காவிரி யோரம் தருக்கள் சொரிந்திடும்
பூவும் இலைபுல்லும் பூசையில் அர்ச்சனை!
வெண்ணீறும் குங்குமமும் மேனி யலங்கரிக்கப்
பண்ணும் அமர்க்களப் பாங்கு! ... 5

நடைவண்டிச் சட்டத்தில் நட்டுவெச்ச சாமி
உடைகலைய ஒய்யார ஊர்வலத் தில்வரக்
காவலுக்கு தெய்வம் கருப்பண சாமியென
ஏவலுக்குக் காத்திருக்கு மே! ... 6

இப்படியோர் சாமி எதிர்வரவே காஞ்சிமுனி
சப்பரத்தின் முன்னே திருமட வீதியிலே!
தண்டத்தால் வந்தித்துத் தண்கரத்தால் கும்பிட்டுக்
கண்பார்த்தே நின்றார் கனிந்து. ... 7

குழந்தைகள் சாமிக்குக் கொள்ளைகற் கண்டும்
பழம்தேங்காய் நைவேத்யம் பண்ணிடச் சொல்லி
விநியோகம் செய்ததில் வீதியில்கை லாயப்
பனியாய் மலர்ந்தது பற்று. ... 8

திருக்கரம் ஆசீர்வ திக்கக் குழந்தைத்
திருவிழா ஊர்வலம் சென்றது மேலே
இளம்வயதில் கொள்ளும் இறைப்பற்று மேலே
வளரவே செய்தார் வழி! ... 9

இளம்வயதில் இங்ஙன் இறைப்பற்று ஓங்கிக்
களம்கொண்டே வாழ்வில் களிப்பும் கனிவும்
நிலைபெறச் செய்தே நியமங்கள் நாடும்
கலைகற்பித் தல்நம் கடன். ... 10

--ரமணி, 27/07/2015, கலி.11/04/5116

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 27, 2015 7:18 pm

குழந்தைகளும் தெய்வமும் ஒன்றென
கொண்டாடும் மாமுனி அவர் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Aug 13, 2015 9:13 am

ஜகத்குரு தரிசனம்
36. வேப்பம்பூ பச்சடி
(எழுசீர் விருத்தம்: காய் விளம் விளம் தேமா . காய் காய் காய் )

வேப்பம்பூ புளியுடன் வெல்லமும் நாங்கள்
. வேதமுனி அவைதன்னில் சமர்ப்பித்தோம்
வேப்பம்பூ பச்சடி செய்விதம் என்ன
. மேதையவர் எங்களிடம் கேட்டாரே
யாப்பென்றே அவரிடம் ஓர்முறை சொன்னோம்
. யாதுமறி யாதவர்போல் செவிமடுத்தார்
சாப்பாட்டுக் கித்துடன் தேனுடன் நெய்யும்
. சற்றேசேர் பச்சடியில் சுவைகூடும்! ... 1

பக்குவமாய்ச் செய்தபின் பச்சடி அம்பாள்
. பாதத்தில் நைவேத்யம் செய்வீரே
முக்கண்ணி நம்மிடம் வசப்படு வாளே
. முன்வந்தே அருள்செய்து காத்திடுவாள்
அக்கணத்தில் கேட்டது சரியெனச் சொல்வார்
. அகமுடையான் பச்சடியை உண்டாலே!
சிக்கலின்றி பணிகளைச் செய்வரே செய்வோர்
. சீர்மிக்க பச்சடியின் மகிமையன்றோ! ... 2

பக்குவமாய்ப் பச்சடி செய்திடச் சொல்லிப்
. பணித்தாரே திருமடத்தின் பிரசாதம்!
சிக்கனமாய்ப் பச்சடி தந்தவர் கேட்டார்
. தெரிகிறதா நான்தந்த காரணமே?
தக்கபடிப் பெரியவர் சொல்வது உள்ளம்
. தங்கிடவே என்றுரைத்தாள் ஓர்மங்கை
முக்கண்ணி பக்தியில் எந்நாளும் நீங்கள்
. முழுகிடவே தந்தேன்நான் என்றாரே. ... 3

புதுக்கோட்டை பத்தராய்த் தரிசனம் செய்தே
. புண்ணியங்கள் பெற்றோமே நாங்களெலாம்!
எதுசொன்னா லுமதிலோர் தத்துவம் காட்டி
. எங்களுக்கு வழிசொல்லும் காஞ்சிமுனி
பொதுவான அறமென உள்ளதைச் செய்தால்
. பொலிவுடனே வாழ்ந்திடலாம் என்றாரே
எதுநல்ல காரியம் என்றுநாம் தேர்ந்தே
. இறைபக்தி உடன்சேரச் செய்வோமே! ... 4

--ரமணி, 13/08/2015, கலி.28/04/5116

*****


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 13, 2015 9:44 am

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 103459460 ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 3838410834
-
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 VzscuyTd6uspdgYmrGNg+th_7
-
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 JP4WjISQUCkyCFBCTfvO+th_imagesCA2UETR1
-
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 YKU9M1PITw61nN4sRrih+th_imagesCA1BHRLE
-
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 6 IdtRS6ErSqKsV7hvIgjI+th_images
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 13, 2015 6:14 pm

தமிழ் வருட பிறப்பன்று செய்து பார்த்திட வேண்டியதுதான் .
நன்றி , ரமணி அவர்களே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக