புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
44 Posts - 43%
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
43 Posts - 42%
prajai
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
4 Posts - 4%
Jenila
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
1 Post - 1%
kargan86
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
1 Post - 1%
jairam
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
8 Posts - 5%
prajai
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
1 Post - 1%
jairam
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 15, 2013 1:24 pm

First topic message reminder :

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்
ரமணி

01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம்
தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு.
நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும்
நகையென மின்னும்
தகைசால் தெய்வீகத் துறவி
ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே.

மராட்டிய மாநில மூதூர் ஒன்றில்
விராட்டுரு முனியின் வீதியோர முகாம்.
யானைமேல் அமர்ந்து
நாலுபேர் சாலைவழிப்
போவதைப் பார்த்தார் பெரியவர்.
அவர்களை உடனே அழைத்து உசாவினார்:
இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ?

நாங்கள் ஓர்காலம் நீங்காத செல்வமுடன்
பாங்காக வாழ்ந்தோம் ஸ்வாமீ!
எந்தைதம் காலம் எய்திய காலை
விந்தையான முறையில்
தனங்கள் அனைத்தும் தானம் செய்துவிட்டு
வனமிகிவ் வானை எம்வசம் தந்து
கற்றது ஊரெல்லாம் சொற்றியே
உற்ற காலம் கழித்து வாழ்வீர்
என்று சொல்லி நன்று மறைந்தாரே!

அதன்படி நாங்களும் அங்கும் இங்கும்
மெதுவாக யானைமேல்
ஊர்விட்டு ஊர்சென்று
பேர்மிகு புராணக் கதைகள் சொல்கிறோம்
பக்திப் பாக்கள் பாடுகிறோம்
ஏதோ கொஞ்சம்
தீதில்லாப் பொருள்கிடைக்கும் எமக்கும் யானைக்குமே!

ஹாஹா என்று சிரித்தார் பெரியவர்.
இங்கேயும் இதுதான் நடைமுறை!
இவர்களும் என்னை யானைபோல்
தவறாது ஊர்விட்டு ஊராக
அழைத்துச் செல்லும் இடங்களில் நானும்
உழைக்கிறேன் பக்தி உள்பலம் பெருகவே.

இவர்கட்கும் சாப்பாடு பணமெனக் கிடைக்கும்
எனக்கும் பக்தர்கள்
எனக்கும் உமக்கும் ஒரேதொழில்!
பெரியவர் சிரிப்பில் நகைச்சுவை உணர்வும்
சரிசம உள்ளமும் கண்ட பக்தருளம்
விரிவும் உவகையும் வியப்பும் உற்றதே!

--ரமணி 08/01/2013

*****



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 24, 2015 11:03 am

நன்றி ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 103459460 ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 24, 2015 3:13 pm

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 8QkmHiaVQRxN6zpx55e9+paramacharya-01
-
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 3838410834

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Feb 14, 2015 8:34 am

ஜகத்குரு தரிசனம்
27. உச்சிட்ட நாதர்!
(அறுசீர்க் குறள் வெண்செந்துறை)

காளத்தி நாதரவர் கனிவோடு கொண்டாரே கண்ணப்பர் உச்சிட்டம்
காளமமர் கண்டருக்குக் காணிக்கை யாகநானும் தந்ததெலாம் மிச்சிலையே! ... 1

காளத்தி ஆலயத்தின் குடமுழுக்கு; காஞ்சிமுனி காணிக்கை இவ்விதமே
ஏளனமென் றிலையென்றார் ஏறுடையான் இட்டமுடன் ஏற்றிடுவான் எச்சிலையே. ... 2

பாலுடன்கங் கைநீரும் பட்டாடை யும்தேனும் நீராடற் கனுப்பினாரே
ஆலமர்ந்தான் ஆடலுக்கு அன்றுமுதல் இன்றுவரை ஆகிவந்த பொருளன்றோ? ... 3

தாய்மடியில் வாய்வைத்தே தான்கன்றும் எச்சிலாக்கி னாலொழியப் பால்தருமோ
தாயெனநாம் கொள்பசுவும்? ஆதலினால் தாயுமான வன்கொள்ளும் பாலெச்சில்! ... 4

தேமதுரம் தேடியலைத் தேனீதன் வாயாலே தேனுறிஞ்சிச் சேர்த்திடுமே
நாமதனை இட்டமாக நாடுதல்போல் நாதனவன் கொள்தேனும் எச்சிலாமே! ... 5

மீன்வாழும் கங்கைநீரும் மீன்வாயைத் திறந்துமூடிக் கொப்பளிக்க மிச்சிலாகும்
கூன்பிறையான் குடமுழுக்கும் குளிநீரும் எச்சிலாகக் கொள்ளுவனே இட்டமுடன்! ... 6

பட்டிழையை வாயாற்றான் பட்டுதரும் பூச்சிகளும் நூற்றிடுமே ஆகையினால்
இட்டமுடன் ஈசனனவன் ஏற்றணியும் பட்டாடை மிச்சிலென ஆவதுவே. ... 7

எனவேநான் ஐதீகம் ஏற்பதென ஈசனுக்குக் காணிக்கை எச்சிலாக
அனுப்பிவைத்தேன் என்றாரே அருமுனிதன் இன்முகத்தில் புன்னகையொன் றாடவிட்டே. ... 8

--ரமணி, 13/02/2015

உதவி:
http://periva.proboards.com/thread/8622/

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 14, 2015 9:35 am

அருமையாக உள்ளது , திரு ரமணி அவர்களே .

பிப் 18 ,2010 இல் ஈகரையில் பதிவான எந்தன் கவிதை , புனிதம் என்ற தலைப்பில் , தங்கள் மேலான பார்வைக்கு .


எச்சில் புனிதம் என்று நான் கூறின்,
எள்ளி நகையாடுவீர் !
வாந்தியும் புனிதமென்று கூறினால்,
வாங்கி கட்டிக் கொள்வேன் உடனடியாக,
இறந்தவர் உடையும் புனிதமென்றால்,
பிறந்தாயோ பேத்துவதற்கு என்றிடிவீர்,
சித்தர் கூறிய வார்த்தைகள் எனின்,
பித்தம் தெளிந்தமாதிரி என்னைப் பார்ப்பீர்.

கழுவிய ஆவின் மடியை கன்றுக்கு காட்டியபின்,
கழுவாது, கறந்திடும் ஆவின்பால், புனிதமென்றிடுவோம்.  
எச்சில் என்றாலும் இச்சையுடன் செய்திடுவோம் ,
பச்சைப்பாலை இறைவனுக்கு அபிஷேகமாக .

தேனீக்கள் மலர்களை நாடி ,மது உறிஞ்சி ,
தேனடையில் உமிழிந்திட்ட தேன் தானே ,
தேவனடி சேருகின்ற புனிதப் பொருள்.
மருந்து எனவும் "ஜீரணி" எனவும் மக்களும் ,
விருந்துண்ட பின் இதை ருசிக்கின்றனர் .

தன்னை சுற்றி தானே பின்னிடும் ஆடையே,
தனக்கு எமன் என அறியாப் பட்டுப் புழு,
மடிந்தபின் எடுக்கும் பட்டை தானே ,
"மடி" என்றும் "புனித"மென்றும் கூறுகிறோம்.

ரமணியன்


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Feb 14, 2015 10:34 am

உங்கள் கவிதை மிகவும் அழகு, ரமணியன் அவர்களே!
பகிர்ந்ததற்கு நன்றி.

ரமணி

[quote="T.N.Balasubramanian"]அருமையாக உள்ளது , திரு ரமணி அவர்களே .

பிப் 18 ,2010 இல் ஈகரையில் பதிவான எந்தன் கவிதை , புனிதம் என்ற தலைப்பில் , தங்கள் மேலான பார்வைக்கு .
[quote]


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 14, 2015 4:59 pm

மிக மிக அருமையான கவிதைகள் ........





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 16, 2015 9:08 pm

ரமணி wrote:உங்கள் கவிதை மிகவும் அழகு, ரமணியன் அவர்களே!
பகிர்ந்ததற்கு நன்றி.

ரமணி

T.N.Balasubramanian wrote:அருமையாக உள்ளது , திரு ரமணி அவர்களே .

பிப் 18 ,2010 இல் ஈகரையில் பதிவான எந்தன் கவிதை , புனிதம் என்ற தலைப்பில் , தங்கள் மேலான பார்வைக்கு .

மேற்கோள் செய்த பதிவு: 1120508


ரமணியன்

தங்கள் வாழ்த்தால், மனம் நிறைவு பட்டது , திரு ரமணி அவர்களே !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 07, 2015 8:46 am

ஜகத்குரு தரிசனம்
29. பெயர்க் காரணம்
(கலிவெண்பா)

பெரியவா என்னும் பெயரேன்? அடியார்
அருமுனியைக் கேட்க அவரும் - பெரியவாய்,
ஓயாமற் பேசிடும் ஓட்டைவாய் என்றுதான்
தாயாரும் மற்றோரும் தக்கபெயர் வைத்தனரோ?
ஓயாமல் நீங்கள் உபநிடத வாக்கியம்
தாயாரின் அன்புடன் தந்தெமைக் காக்கப்
பெரியவாய் என்பதும் பேர்ப்பொருத்தம் ஆமே!
அருமுனியின் பத்தர் அவசரமாய்ச் சொல்லப்
பெரியவாள் என்னும் பெயரெதற் கென்றார்
கரிசனமே கண்ணுறும் காஞ்சி முனிவர்.
மனந்தங்கும் காமாதி மாயைதனை வாளால்
இனந்தெரி யாதறுக்கும் இன்செயற் பேரிதுவே!
காமகோ டிப்பீடம் காஞ்சியின் பேரெதற்கு?
சேமமுனி காரணம் செப்பினார் இன்முகமாய்:
காமகோ டிச்சொல்லே தர்மார்த்த காமகோடி
காமத்தின் கோடியில் கண்ணுறும் மோட்சமே
நாமத்தின் பின்னுறும் நற்பொருள் என்றாரே!
தெய்வத்தை நீணிழலாய்த் தேடித் தொடர்ந்துசென்று
தெய்வத்தின் தீங்குரலைத் தீந்தமிழில் தந்தே
அடியார் கணபதி ஆக்கிய நூலைப்
படிக்கவரும் பத்திநெறிப் பற்று.

--ரமணி, 01/05/2015, கலி.18/01/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9131/

*****

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 07, 2015 9:49 am

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 0Oc3pxPR0az81fIsoniQ+p23
-
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 H5qordR065WPzP6p9p0g+p27
-
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 103459460 ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 4 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 07, 2015 10:24 am

ரமணி wrote:ஜகத்குரு தரிசனம்
29. பெயர்க் காரணம்
(கலிவெண்பா)

பெரியவா என்னும் பெயரேன்? அடியார்
அருமுனியைக் கேட்க அவரும் - பெரியவாய்,
ஓயாமற் பேசிடும் ஓட்டைவாய் என்றுதான்
தாயாரும் மற்றோரும் தக்கபெயர் வைத்தனரோ?
ஓயாமல் நீங்கள் உபநிடத வாக்கியம்
தாயாரின் அன்புடன் தந்தெமைக் காக்கப்
பெரியவாய் என்பதும் பேர்ப்பொருத்தம் ஆமே!
அருமுனியின் பத்தர் அவசரமாய்ச் சொல்லப்
பெரியவாள் என்னும் பெயரெதற் கென்றார்
கரிசனமே கண்ணுறும் காஞ்சி முனிவர்.
மனந்தங்கும் காமாதி மாயைதனை வாளால்
இனந்தெரி யாதறுக்கும் இன்செயற் பேரிதுவே!
காமகோ டிப்பீடம் காஞ்சியின் பேரெதற்கு?
சேமமுனி காரணம் செப்பினார் இன்முகமாய்:
காமகோ டிச்சொல்லே தர்மார்த்த காமகோடி
காமத்தின் கோடியில் கண்ணுறும் மோட்சமே
நாமத்தின் பின்னுறும் நற்பொருள் என்றாரே!
தெய்வத்தை நீணிழலாய்த் தேடித் தொடர்ந்துசென்று
தெய்வத்தின் தீங்குரலைத் தீந்தமிழில் தந்தே
அடியார் கணபதி ஆக்கிய நூலைப்
படிக்கவரும் பத்திநெறிப் பற்று.

--ரமணி, 01/05/2015, கலி.18/01/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9131/

*****
மேற்கோள் செய்த பதிவு: 1135344

அருமை மிக்க நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக