புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 64 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 64 of 84 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 74 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 11, 2016 12:39 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (427)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மளிகைக் கடைக்கு ஒருவன் போகிறான் !

கடைக்காரரிடம் , “வெல்லம் உள்ளதா?”  என்று கேட்கிறான் !
கடையில் வெல்லம் இல்லை !
கடைக்காரர் என்ன சொல்லவேண்டும் ?

‘வெல்லம் இல்லை !’ என்று சொல்லவேண்டியதுதானே?

இப்படிச் சொல்வது நம் காலம் !

அந்தக் காலத்தில் இப்படிச் சொல்லமாட்டார்கள்! தொல்காப்பியம் இதற்குச் சான்று !

பின் எப்படிச் சொல்லவேண்டுமாம்?

“கற்கண்டு அல்லது இல்லை !” எனக் கூறவேண்டுமாம்!

இந்தக் கால நடையில் கூறவேண்டுமானால் , ‘கற்கண்டு தவிர வேறு இல்லைங்க!’ எனக் கூறவேண்டும் !

இதோ நூற்பா! –
“எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின்
அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல்” (கிளவி. 35)

‘எப்பொருள்  ஆயினும்’ – எந்தப் பொருள் ஆனாலும்,
‘அல்லது  இல்லெனின்’ – அது தவிர வேறு இல்லை என்றால்,
‘அப்பொருள்  அல்லாப் பிறிதுபொருள் கூறல்’ – கேட்டவர் குறித்த பொருள் தவிர   வேறொரு பொருளைச் சொல்லி ‘இது தவிர வேறு இல்லை’ எனல் வேண்டும் !

சேனாவரையர் எழுதிய எடுத்துக்காட்டின்படி –
“பயறுளதோ வணிகீர் !” – வினா.
“உழுந்தல்லது இல்லை !” – விடை இப்படி இருக்கவேண்டும் !

அஃதாவது –
‘இல்லை’ என்று முடித்துவிட்டால் அது  அப சகுனமாம் !

அதனால் வேறொரு பொருளைச் சொல்லி ‘அதுவல்லது இல்லை ’ என்று கூறப் பழந்தமிழர் விழைந்தனர் !

பழந்தமிழர் வாழ்க்கைதான் தொல்காப்பியம் என்பதற்கு இந்த நூற்பா நல்ல சான்று !

சரி !

நமது எடுத்துக்காட்டைத் தொடர்வோம் !

கடைக்காரரிடம் வினா - ‘வெல்லம் இருக்கிறதா?’
வெல்லம் இருக்கிறது ; ஆனால் அவன் என்ன வெல்லம் கேட்கிறான் என்பது தெரியவில்லை ! அப்போது சொல்லவேண்டிய விடை – ‘அச்சு வெல்லம் தவிர வேறு இல்லை’

இதற்குத் தொல்காப்பிய நூற்பா! -
“அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல்” (கிளவி. 36)

‘அப்பொருள் கூறில்’ – கேட்போன் கேட்ட பொருள் கடையில் இருந்து, அதைக் கூறவேண்டுமாயின்,
‘சுட்டிக் கூறல்’ – அவன் கேட்ட பொருள் வகைகளில் ,  உங்களிடம் இருக்கும் பொருள் இன்னது என்று குறிப்பிட்டுக் கூறவேண்டும் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 11, 2016 12:51 pm

தெலுங்கு செட்டியார் மளிகைக் கடையில் ," உப்பு உந்தியா ? " என்று கேட்டால்

" பப்பு உந்தி " என்று சொல்வாராம் .

அதாவது தன் கடையில் எதுவும் இல்லை என்று  சொல்லக்கூடாது என்பது செட்டியாரின் கொள்கை .

படிக்கும்போது வகுப்பில் ஆசிரியர் ஒன்றைக் கேட்க , அதற்கு மாணவன் வேறு ஒன்றைப் பதிலாகச் சொல்வான் . அப்போது ஆசிரியர் வேடிக்கையாக இந்த உதாரணத்தைச் சொல்வார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 25, 2016 8:38 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே !
நானும் அதைக் கேட்டிருக்கிறேன் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 25, 2016 8:40 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (428)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இன்னும் மளிகைக் கடையில்தான் இருக்கிறோம் ! -

“பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅது  ஒன்றா கும்மே”   (கிளவி . 37)  

‘பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்’ -  இன்ன பொருள் என்று பொருளின் பெயரைச் சொல்லாது , வெறும் ‘இது’ , ‘இவை’ என்ற சுட்டுப் பெயர்களைச் சொன்னாலும்,
‘பொருள்வேறு படாஅது  ஒன்றா கும்மே’ -  வேறான பொருளைத் தராது ! சொல்வோன் நினைத்த பொருளையே தரும் !

 ‘பயறு இருக்கிறதா’? -  கேட்போன் வினா.
‘இங்கே உள்ள இவை தவிர வேறு இல்லை ! ’ – கடைக்காரர் விடை.
- இது சரிதான் என்கிறார் தொல்காப்பியர் !

கடைக்காரர் , ‘இவை’ என்ற சுட்டுப்பெயரைத்தான் பயன்படுத்தினார் ; ஆனாலும் பொருள்,  கேட்போனுக்கு விளங்கிவிடுகிறது ! ஏனெனில் , கடைக்காரர்தான் , அரிசி மூட்டைகளைக் காட்டி , ‘இவைதாம்’ இருக்கின்றன என்று கைச் சுட்டாலும் சொற்சுட்டாலும் ( ‘இவை’) விளக்கிவிட்டாரே ?

இதற்கு முந்தைய நூற்பாவில் (கிளவி . 36) ,  ‘ இருக்கின்ற பொருளின் பெயரைச் சுட்டிக் கூறவேண்டும்’  என்று பார்த்தோமல்லவா?
அதில் ஏற்படும் ஐயத்தைக் களையும் நூற்பா இது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 25, 2016 8:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (428)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இன்னும் மளிகைக் கடையில்தான் இருக்கிறோம் ! -

“பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅது  ஒன்றா கும்மே”   (கிளவி . 37)  

‘பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்’ -  இன்ன பொருள் என்று பொருளின் பெயரைச் சொல்லாது , வெறும் ‘இது’ , ‘இவை’ என்ற சுட்டுப் பெயர்களைச் சொன்னாலும்,
‘பொருள்வேறு படாஅது  ஒன்றா கும்மே’ -  வேறான பொருளைத் தராது ! சொல்வோன் நினைத்த பொருளையே தரும் !

 ‘பயறு இருக்கிறதா’? -  கேட்போன் வினா.
‘இங்கே உள்ள இவை தவிர வேறு இல்லை ! ’ – கடைக்காரர் விடை.
- இது சரிதான் என்கிறார் தொல்காப்பியர் !

கடைக்காரர் , ‘இவை’ என்ற சுட்டுப்பெயரைத்தான் பயன்படுத்தினார் ; ஆனாலும் பொருள்,  கேட்போனுக்கு விளங்கிவிடுகிறது ! ஏனெனில் , கடைக்காரர்தான் , அரிசி மூட்டைகளைக் காட்டி , ‘இவைதாம்’ இருக்கின்றன என்று கைச் சுட்டாலும் சொற்சுட்டாலும் ( ‘இவை’) விளக்கிவிட்டாரே ?

இதற்கு முந்தைய நூற்பாவில் (கிளவி . 36) ,  ‘ இருக்கின்ற பொருளின் பெயரைச் சுட்டிக் கூறவேண்டும்’  என்று பார்த்தோமல்லவா?
அதில் ஏற்படும் ஐயத்தைக் களையும் நூற்பா இது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 25, 2016 8:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (428)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இன்னும் மளிகைக் கடையில்தான் இருக்கிறோம் ! -

“பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅது  ஒன்றா கும்மே”   (கிளவி . 37)  

‘பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்’ -  இன்ன பொருள் என்று பொருளின் பெயரைச் சொல்லாது , வெறும் ‘இது’ , ‘இவை’ என்ற சுட்டுப் பெயர்களைச் சொன்னாலும்,
‘பொருள்வேறு படாஅது  ஒன்றா கும்மே’ -  வேறான பொருளைத் தராது ! சொல்வோன் நினைத்த பொருளையே தரும் !

 ‘பயறு இருக்கிறதா’? -  கேட்போன் வினா.
‘இங்கே உள்ள இவை தவிர வேறு இல்லை ! ’ – கடைக்காரர் விடை.
- இது சரிதான் என்கிறார் தொல்காப்பியர் !

கடைக்காரர் , ‘இவை’ என்ற சுட்டுப்பெயரைத்தான் பயன்படுத்தினார் ; ஆனாலும் பொருள்,  கேட்போனுக்கு விளங்கிவிடுகிறது ! ஏனெனில் , கடைக்காரர்தான் , அரிசி மூட்டைகளைக் காட்டி , ‘இவைதாம்’ இருக்கின்றன என்று கைச் சுட்டாலும் சொற்சுட்டாலும் ( ‘இவை’) விளக்கிவிட்டாரே ?

இதற்கு முந்தைய நூற்பாவில் (கிளவி . 36) ,  ‘ இருக்கின்ற பொருளின் பெயரைச் சுட்டிக் கூறவேண்டும்’  என்று பார்த்தோமல்லவா?
அதில் ஏற்படும் ஐயத்தைக் களையும் நூற்பா இது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 07, 2016 4:43 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (429)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கத்தில் அடுத்து –
“இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க்  கிளவியும்
வினைக்கொருங் கியலும் காலந் தோன்றின்
சுட்டுப்பெயர்க்  கிளவி  முற்படக்  கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்”  (கிளவி. 38)

‘இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க்  கிளவியும்’ -  இயற்பெயராகிய சொல்லையும் , சுட்டுப்பெயராகிய சொல்லையும்,
‘வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின்’ – வினைத் தொடரில் எழுதும்போது,
‘சுட்டுப்பெயர்க்  கிளவி  முற்படக்  கிளவார்’ – சுட்டுப் பெயர்ச் சொல்லை முதற்கண் எழுதக் கூடாது !
‘இயற்பெயர் வழிய என்மனார் புலவர்’ – இயற் பெயரைச்  சொல்லிவிட்டு , அதன் பின் சுட்டுப் பெயரைச் சொல்லவேண்டும் !

சேனாவரையர் கூறிய எடுத்துக்காட்டுகளின்படி –
1. சாத்தன் அவன் வந்தான் √
       அவன் சாத்தன்  வந்தான் ×

2. சாத்தன் வந்தான் அவன் போயினான் √
       அவன் சாத்தன் வந்தான் போயினான் ×

3. சாத்தி வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க √
      அவள் சாத்தி வந்தாள் பூக்கொடுக்க ×

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளின்படி-
1. நம்பி வந்தான் அவற்குச் சோறு கொடுக்க √
       அவன்  வந்தான் நம்பிக்குச் சோறு கொடுக்க ×
2. எருது வந்தது அதற்குப்  புல்  கொடுக்க √
       அது வந்தது எருதுக்குப் புல்  கொடுக்க ×

மேலை எடுத்துக்காட்டுகளில் எல்லாம் வினை வந்ததைக் கவனியுங்கள்!

‘வந்தான்’ , ‘போயினான்’ , ‘கொடுக்க’ , ‘வந்தது’ – எல்லாம் வினைகள்; வினை முற்றுகள் !

சரி !

மேற்கண்டவாறு வினை இல்லாவிட்டால் ?

இதற்கு விடை கூறுகிறார் நச்சினார்க்கினியர் !

பெயராக இருந்தால்  சுட்டுப்பெயரை முன்னேயும் கூறலாம் , பின்னேயும் கூறலாம் !

நச்சர் எடுத்துக்காட்டின்படி –
1. சாத்தன் அவன் √
      அவன் சாத்தன் √
-
இவ்விரு தொடர்களிலும் வினை வரவில்லை என்பதைக் கவனியுங்கள் !

இந்த நூற்பா (கிளவி. 38) , தமிழ் உரைநடைத் தொடர் இலக்கணம் (Grammar for Tamil Syntax) கூறிய நூற்பா!

ஆகவே, தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் உரைநடை வளம் இருந்தது என்பது இதன்மூலம் புலனாகிறது !

இதனை உறுதிப்படுத்துவது அடுத்த நூற்பா!-
“முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே”  (கிளவி. 39)

‘முற்படக் கிளத்தல்’ – சுட்டுப் பெயரை இயற்பெயருக்கு முன்பு சொல்லுதல் ,
‘செய்யுளுள் உரித்தே’ – பாடலில் இருக்கலாம் !

இதற்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர்கள் தரும்  நேரிசை வெண்பாவில் , ‘அவன் அணங்கு நோய் செய்தான் ….     சேந்தன் பேர் வாழ்த்தி …’  என , ‘அவன் ’ என்ற சுட்டுப் பெயர் முன்னேயும் ‘சேந்தன்’ என்ற இயற் பெயர் பின்னேயும் வருவதைக் காணலாம் !

அஃதாவது , கிளவியாக்க  நூற்பா  38 உரைநடைக்குச் சொன்னது ; 39 செய்யுளுக்குச் சொன்னது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 07, 2016 4:44 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (429)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கத்தில் அடுத்து –
“இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க்  கிளவியும்
வினைக்கொருங் கியலும் காலந் தோன்றின்
சுட்டுப்பெயர்க்  கிளவி  முற்படக்  கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்”  (கிளவி. 38)

‘இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க்  கிளவியும்’ -  இயற்பெயராகிய சொல்லையும் , சுட்டுப்பெயராகிய சொல்லையும்,
‘வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின்’ – வினைத் தொடரில் எழுதும்போது,
‘சுட்டுப்பெயர்க்  கிளவி  முற்படக்  கிளவார்’ – சுட்டுப் பெயர்ச் சொல்லை முதற்கண் எழுதக் கூடாது !
‘இயற்பெயர் வழிய என்மனார் புலவர்’ – இயற் பெயரைச்  சொல்லிவிட்டு , அதன் பின் சுட்டுப் பெயரைச் சொல்லவேண்டும் !

சேனாவரையர் கூறிய எடுத்துக்காட்டுகளின்படி –
1. சாத்தன் அவன் வந்தான் √
       அவன் சாத்தன்  வந்தான் ×

2. சாத்தன் வந்தான் அவன் போயினான் √
       அவன் சாத்தன் வந்தான் போயினான் ×

3. சாத்தி வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க √
      அவள் சாத்தி வந்தாள் பூக்கொடுக்க ×

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளின்படி-
1. நம்பி வந்தான் அவற்குச் சோறு கொடுக்க √
       அவன்  வந்தான் நம்பிக்குச் சோறு கொடுக்க ×
2. எருது வந்தது அதற்குப்  புல்  கொடுக்க √
       அது வந்தது எருதுக்குப் புல்  கொடுக்க ×

மேலை எடுத்துக்காட்டுகளில் எல்லாம் வினை வந்ததைக் கவனியுங்கள்!

‘வந்தான்’ , ‘போயினான்’ , ‘கொடுக்க’ , ‘வந்தது’ – எல்லாம் வினைகள்; வினை முற்றுகள் !

சரி !

மேற்கண்டவாறு வினை இல்லாவிட்டால் ?

இதற்கு விடை கூறுகிறார் நச்சினார்க்கினியர் !

பெயராக இருந்தால்  சுட்டுப்பெயரை முன்னேயும் கூறலாம் , பின்னேயும் கூறலாம் !

நச்சர் எடுத்துக்காட்டின்படி –
1. சாத்தன் அவன் √
      அவன் சாத்தன் √
-
இவ்விரு தொடர்களிலும் வினை வரவில்லை என்பதைக் கவனியுங்கள் !

இந்த நூற்பா (கிளவி. 38) , தமிழ் உரைநடைத் தொடர் இலக்கணம் (Grammar for Tamil Syntax) கூறிய நூற்பா!

ஆகவே, தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் உரைநடை வளம் இருந்தது என்பது இதன்மூலம் புலனாகிறது !

இதனை உறுதிப்படுத்துவது அடுத்த நூற்பா!-
“முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே”  (கிளவி. 39)

‘முற்படக் கிளத்தல்’ – சுட்டுப் பெயரை இயற்பெயருக்கு முன்பு சொல்லுதல் ,
‘செய்யுளுள் உரித்தே’ – பாடலில் இருக்கலாம் !

இதற்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர்கள் தரும்  நேரிசை வெண்பாவில் , ‘அவன் அணங்கு நோய் செய்தான் ….     சேந்தன் பேர் வாழ்த்தி …’  என , ‘அவன் ’ என்ற சுட்டுப் பெயர் முன்னேயும் ‘சேந்தன்’ என்ற இயற் பெயர் பின்னேயும் வருவதைக் காணலாம் !

அஃதாவது , கிளவியாக்க  நூற்பா  38 உரைநடைக்குச் சொன்னது ; 39 செய்யுளுக்குச் சொன்னது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 07, 2016 4:45 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (429)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கத்தில் அடுத்து –
“இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க்  கிளவியும்
வினைக்கொருங் கியலும் காலந் தோன்றின்
சுட்டுப்பெயர்க்  கிளவி  முற்படக்  கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்”  (கிளவி. 38)

‘இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க்  கிளவியும்’ -  இயற்பெயராகிய சொல்லையும் , சுட்டுப்பெயராகிய சொல்லையும்,
‘வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின்’ – வினைத் தொடரில் எழுதும்போது,
‘சுட்டுப்பெயர்க்  கிளவி  முற்படக்  கிளவார்’ – சுட்டுப் பெயர்ச் சொல்லை முதற்கண் எழுதக் கூடாது !
‘இயற்பெயர் வழிய என்மனார் புலவர்’ – இயற் பெயரைச்  சொல்லிவிட்டு , அதன் பின் சுட்டுப் பெயரைச் சொல்லவேண்டும் !

சேனாவரையர் கூறிய எடுத்துக்காட்டுகளின்படி –
1. சாத்தன் அவன் வந்தான் √
       அவன் சாத்தன்  வந்தான் ×

2. சாத்தன் வந்தான் அவன் போயினான் √
       அவன் சாத்தன் வந்தான் போயினான் ×

3. சாத்தி வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க √
      அவள் சாத்தி வந்தாள் பூக்கொடுக்க ×

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளின்படி-
1. நம்பி வந்தான் அவற்குச் சோறு கொடுக்க √
       அவன்  வந்தான் நம்பிக்குச் சோறு கொடுக்க ×
2. எருது வந்தது அதற்குப்  புல்  கொடுக்க √
       அது வந்தது எருதுக்குப் புல்  கொடுக்க ×

மேலை எடுத்துக்காட்டுகளில் எல்லாம் வினை வந்ததைக் கவனியுங்கள்!

‘வந்தான்’ , ‘போயினான்’ , ‘கொடுக்க’ , ‘வந்தது’ – எல்லாம் வினைகள்; வினை முற்றுகள் !

சரி !

மேற்கண்டவாறு வினை இல்லாவிட்டால் ?

இதற்கு விடை கூறுகிறார் நச்சினார்க்கினியர் !

பெயராக இருந்தால்  சுட்டுப்பெயரை முன்னேயும் கூறலாம் , பின்னேயும் கூறலாம் !

நச்சர் எடுத்துக்காட்டின்படி –
1. சாத்தன் அவன் √
      அவன் சாத்தன் √
-
இவ்விரு தொடர்களிலும் வினை வரவில்லை என்பதைக் கவனியுங்கள் !

இந்த நூற்பா (கிளவி. 38) , தமிழ் உரைநடைத் தொடர் இலக்கணம் (Grammar for Tamil Syntax) கூறிய நூற்பா!

ஆகவே, தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் உரைநடை வளம் இருந்தது என்பது இதன்மூலம் புலனாகிறது !

இதனை உறுதிப்படுத்துவது அடுத்த நூற்பா!-
“முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே”  (கிளவி. 39)

‘முற்படக் கிளத்தல்’ – சுட்டுப் பெயரை இயற்பெயருக்கு முன்பு சொல்லுதல் ,
‘செய்யுளுள் உரித்தே’ – பாடலில் இருக்கலாம் !

இதற்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர்கள் தரும்  நேரிசை வெண்பாவில் , ‘அவன் அணங்கு நோய் செய்தான் ….     சேந்தன் பேர் வாழ்த்தி …’  என , ‘அவன் ’ என்ற சுட்டுப் பெயர் முன்னேயும் ‘சேந்தன்’ என்ற இயற் பெயர் பின்னேயும் வருவதைக் காணலாம் !

அஃதாவது , கிளவியாக்க  நூற்பா  38 உரைநடைக்குச் சொன்னது ; 39 செய்யுளுக்குச் சொன்னது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 07, 2016 4:46 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (429)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கத்தில் அடுத்து –
“இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க்  கிளவியும்
வினைக்கொருங் கியலும் காலந் தோன்றின்
சுட்டுப்பெயர்க்  கிளவி  முற்படக்  கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்”  (கிளவி. 38)

‘இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க்  கிளவியும்’ -  இயற்பெயராகிய சொல்லையும் , சுட்டுப்பெயராகிய சொல்லையும்,
‘வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின்’ – வினைத் தொடரில் எழுதும்போது,
‘சுட்டுப்பெயர்க்  கிளவி  முற்படக்  கிளவார்’ – சுட்டுப் பெயர்ச் சொல்லை முதற்கண் எழுதக் கூடாது !
‘இயற்பெயர் வழிய என்மனார் புலவர்’ – இயற் பெயரைச்  சொல்லிவிட்டு , அதன் பின் சுட்டுப் பெயரைச் சொல்லவேண்டும் !

சேனாவரையர் கூறிய எடுத்துக்காட்டுகளின்படி –
1. சாத்தன் அவன் வந்தான் √
       அவன் சாத்தன்  வந்தான் ×

2. சாத்தன் வந்தான் அவன் போயினான் √
       அவன் சாத்தன் வந்தான் போயினான் ×

3. சாத்தி வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க √
      அவள் சாத்தி வந்தாள் பூக்கொடுக்க ×

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளின்படி-
1. நம்பி வந்தான் அவற்குச் சோறு கொடுக்க √
       அவன்  வந்தான் நம்பிக்குச் சோறு கொடுக்க ×
2. எருது வந்தது அதற்குப்  புல்  கொடுக்க √
       அது வந்தது எருதுக்குப் புல்  கொடுக்க ×

மேலை எடுத்துக்காட்டுகளில் எல்லாம் வினை வந்ததைக் கவனியுங்கள்!

‘வந்தான்’ , ‘போயினான்’ , ‘கொடுக்க’ , ‘வந்தது’ – எல்லாம் வினைகள்; வினை முற்றுகள் !

சரி !

மேற்கண்டவாறு வினை இல்லாவிட்டால் ?

இதற்கு விடை கூறுகிறார் நச்சினார்க்கினியர் !

பெயராக இருந்தால்  சுட்டுப்பெயரை முன்னேயும் கூறலாம் , பின்னேயும் கூறலாம் !

நச்சர் எடுத்துக்காட்டின்படி –
1. சாத்தன் அவன் √
      அவன் சாத்தன் √
-
இவ்விரு தொடர்களிலும் வினை வரவில்லை என்பதைக் கவனியுங்கள் !

இந்த நூற்பா (கிளவி. 38) , தமிழ் உரைநடைத் தொடர் இலக்கணம் (Grammar for Tamil Syntax) கூறிய நூற்பா!

ஆகவே, தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் உரைநடை வளம் இருந்தது என்பது இதன்மூலம் புலனாகிறது !

இதனை உறுதிப்படுத்துவது அடுத்த நூற்பா!-
“முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே”  (கிளவி. 39)

‘முற்படக் கிளத்தல்’ – சுட்டுப் பெயரை இயற்பெயருக்கு முன்பு சொல்லுதல் ,
‘செய்யுளுள் உரித்தே’ – பாடலில் இருக்கலாம் !

இதற்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர்கள் தரும்  நேரிசை வெண்பாவில் , ‘அவன் அணங்கு நோய் செய்தான் ….     சேந்தன் பேர் வாழ்த்தி …’  என , ‘அவன் ’ என்ற சுட்டுப் பெயர் முன்னேயும் ‘சேந்தன்’ என்ற இயற் பெயர் பின்னேயும் வருவதைக் காணலாம் !

அஃதாவது , கிளவியாக்க  நூற்பா  38 உரைநடைக்குச் சொன்னது ; 39 செய்யுளுக்குச் சொன்னது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 64 of 84 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 74 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக