புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 53 of 84 •
Page 53 of 84 • 1 ... 28 ... 52, 53, 54 ... 68 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:உசு ,முசு இவற்றுடன் " பசு " என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்ளலாமா ?
"திசு " உம் சேருமோ இதில் முனைவர் அய்யா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" கொசுவை " ஏன் விட்டுவிட்டீர் ரமணியன் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:" கொசுவை " ஏன் விட்டுவிட்டீர் ரமணியன் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
எம். ஜகதீசன், ரமணீயன் ஆகியோர்க்கு நன்றி !
‘பசு’ , ‘திசு’ , ‘கொசு’ ஆகிய மூன்று பெயர்ச் சொற்களையும் சேர்த்துக்கொள்ளலாம் ! தவறில்லை !
ஆனால் பழைய இலக்கணங்களோடு இணைத்துக்கொள்ளக் கூடாது ! நம் ஆய்வாகக் கொல்ளவேண்டும் !
‘பசு’ , ‘திசு’ , ‘கொசு’ ஆகிய மூன்று பெயர்ச் சொற்களையும் சேர்த்துக்கொள்ளலாம் ! தவறில்லை !
ஆனால் பழைய இலக்கணங்களோடு இணைத்துக்கொள்ளக் கூடாது ! நம் ஆய்வாகக் கொல்ளவேண்டும் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மிகவும் நன்றி ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:எம். ஜகதீசன், ரமணீயன் ஆகியோர்க்கு நன்றி !
‘பசு’ , ‘திசு’ , ‘கொசு’ ஆகிய மூன்று பெயர்ச் சொற்களையும் சேர்த்துக்கொள்ளலாம் ! தவறில்லை !
ஆனால் பழைய இலக்கணங்களோடு இணைத்துக்கொள்ளக் கூடாது ! நம் ஆய்வாகக் கொல்ளவேண்டும் !
நன்றி முனைவர் அவர்களே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தொடத் தொடத் தொல்காப்பியம் (390)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழிமரபில் , சொற்களின் ஈறுகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !
இப்போது நாம் பார்க்கவேண்டியது –
“உப்ப காரமொடு ஞகாரையு மற்றே
அப்பொரு ளிரட்டா திவணை யான” (மொழி. 47)
‘உப்ப காரமொடு’ – முன்பு இதே மொழிமரபு நூற்பா 43இல் ’தபு’ என்ற ஒரு சொல்லில் மட்டும்தான் ‘பு’ வானது சொல்லீறாக வரும் எனப் பார்த்தோமல்லவா? அதைப் போல,
‘ஞகாரையும் அற்றே’ – ‘ஞ்’ என்ற எழுத்தும் அப்படியே ஒரே ஒரு சொல்லில்தான் வரும் !
‘அப்பொருள் இரட்டாது இவணை யான’ – ’தபு’ என்ற சொல்லைப் பொறுத்தவரையில் , எடுத்துச் சொன்னால்
ஒரு பொருளும் படுத்துச் சொன்னால் வேறுபொருளுமாக இரண்டு பொருள்கள் இருப்பது போல ‘ஞ்’ ஈற்றுச் சொல்லுக்கு இருபொருள் இல்லை !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டு – ‘உரிஞ்’
அஃதாவது , ‘உரிஞ்’ என்ற இந்த ஒரு சொல்தான் தமிழில் ‘ஞ்’ஞை ஈற்றிலே கொண்டு வரும் !
மேல் தொல்காப்பிய நூற்பாவில் , ‘இவணை’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !
இவணை = இவண் + ஐ
இவண் – சுட்டுப் பெயர்
ஐ – அசை (Expletive)
இவணை - இவ்விடத்து
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழிமரபில் , சொற்களின் ஈறுகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !
இப்போது நாம் பார்க்கவேண்டியது –
“உப்ப காரமொடு ஞகாரையு மற்றே
அப்பொரு ளிரட்டா திவணை யான” (மொழி. 47)
‘உப்ப காரமொடு’ – முன்பு இதே மொழிமரபு நூற்பா 43இல் ’தபு’ என்ற ஒரு சொல்லில் மட்டும்தான் ‘பு’ வானது சொல்லீறாக வரும் எனப் பார்த்தோமல்லவா? அதைப் போல,
‘ஞகாரையும் அற்றே’ – ‘ஞ்’ என்ற எழுத்தும் அப்படியே ஒரே ஒரு சொல்லில்தான் வரும் !
‘அப்பொருள் இரட்டாது இவணை யான’ – ’தபு’ என்ற சொல்லைப் பொறுத்தவரையில் , எடுத்துச் சொன்னால்
ஒரு பொருளும் படுத்துச் சொன்னால் வேறுபொருளுமாக இரண்டு பொருள்கள் இருப்பது போல ‘ஞ்’ ஈற்றுச் சொல்லுக்கு இருபொருள் இல்லை !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டு – ‘உரிஞ்’
அஃதாவது , ‘உரிஞ்’ என்ற இந்த ஒரு சொல்தான் தமிழில் ‘ஞ்’ஞை ஈற்றிலே கொண்டு வரும் !
மேல் தொல்காப்பிய நூற்பாவில் , ‘இவணை’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !
இவணை = இவண் + ஐ
இவண் – சுட்டுப் பெயர்
ஐ – அசை (Expletive)
இவணை - இவ்விடத்து
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (390)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழிமரபில் , சொற்களின் ஈறுகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !
இப்போது நாம் பார்க்கவேண்டியது –
“உப்ப காரமொடு ஞகாரையு மற்றே
அப்பொரு ளிரட்டா திவணை யான” (மொழி. 47)
‘உப்ப காரமொடு’ – முன்பு இதே மொழிமரபு நூற்பா 43இல் ’தபு’ என்ற ஒரு சொல்லில் மட்டும்தான் ‘பு’ வானது சொல்லீறாக வரும் எனப் பார்த்தோமல்லவா? அதைப் போல,
‘ஞகாரையும் அற்றே’ – ‘ஞ்’ என்ற எழுத்தும் அப்படியே ஒரே ஒரு சொல்லில்தான் வரும் !
‘அப்பொருள் இரட்டாது இவணை யான’ – ’தபு’ என்ற சொல்லைப் பொறுத்தவரையில் , எடுத்துச் சொன்னால்
ஒரு பொருளும் படுத்துச் சொன்னால் வேறுபொருளுமாக இரண்டு பொருள்கள் இருப்பது போல ‘ஞ்’ ஈற்றுச் சொல்லுக்கு இருபொருள் இல்லை !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டு – ‘உரிஞ்’
அஃதாவது , ‘உரிஞ்’ என்ற இந்த ஒரு சொல்தான் தமிழில் ‘ஞ்’ஞை ஈற்றிலே கொண்டு வரும் !
மேல் தொல்காப்பிய நூற்பாவில் , ‘இவணை’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !
இவணை = இவண் + ஐ
இவண் – சுட்டுப் பெயர்
ஐ – அசை (Expletive)
இவணை - இவ்விடத்து
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழிமரபில் , சொற்களின் ஈறுகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !
இப்போது நாம் பார்க்கவேண்டியது –
“உப்ப காரமொடு ஞகாரையு மற்றே
அப்பொரு ளிரட்டா திவணை யான” (மொழி. 47)
‘உப்ப காரமொடு’ – முன்பு இதே மொழிமரபு நூற்பா 43இல் ’தபு’ என்ற ஒரு சொல்லில் மட்டும்தான் ‘பு’ வானது சொல்லீறாக வரும் எனப் பார்த்தோமல்லவா? அதைப் போல,
‘ஞகாரையும் அற்றே’ – ‘ஞ்’ என்ற எழுத்தும் அப்படியே ஒரே ஒரு சொல்லில்தான் வரும் !
‘அப்பொருள் இரட்டாது இவணை யான’ – ’தபு’ என்ற சொல்லைப் பொறுத்தவரையில் , எடுத்துச் சொன்னால்
ஒரு பொருளும் படுத்துச் சொன்னால் வேறுபொருளுமாக இரண்டு பொருள்கள் இருப்பது போல ‘ஞ்’ ஈற்றுச் சொல்லுக்கு இருபொருள் இல்லை !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டு – ‘உரிஞ்’
அஃதாவது , ‘உரிஞ்’ என்ற இந்த ஒரு சொல்தான் தமிழில் ‘ஞ்’ஞை ஈற்றிலே கொண்டு வரும் !
மேல் தொல்காப்பிய நூற்பாவில் , ‘இவணை’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !
இவணை = இவண் + ஐ
இவண் – சுட்டுப் பெயர்
ஐ – அசை (Expletive)
இவணை - இவ்விடத்து
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (391)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழிமரபில் அடுத்தது –
“வகரக் கிளவி நான்மொழி யீற்றது” (மொழி. 48)
‘வகரக் கிளவி’ – ‘வ்’ எனும் சொல்,
‘நான்மொழி ஈற்றது’ – நான்கு சொற்களுக்கு மட்டும் ஈறாக வரும் !
‘வகரக் கிளவி’ - இப்படித் தமிழ் இலக்கணங்களில் வந்தால் , இடத்தைப் பொறுத்து , ‘வ்’ அல்லது ‘வ’ எனக் கொள்ள வேண்டும் !
‘நான் மொழி’ என்பதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் –
1 . அவ்
2 . இவ்
3 . உவ்
4 . தெவ்
இவை நான்கும் பெயர்ச் சொற்களே (Nouns) !
‘வ்’ ஈறு தொடர்பாக , முன்பே நாம் புள்ளிமயங்கியல் நூற்பாக்கள் 83 , 87 ஆகியவற்றில் விரிவாகப் பார்த்துள்ளோம்! ஆகவே அவற்றை மீண்டும் இங்கே இணைக்கவில்லை !
இறுதியாக மொழிமரபின் கடைசி நூற்பா ! –
“மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப
புகரக் கிளந்த வஃறிணை யான ” (மொழி 49)
‘மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த , னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப’ - இரண்டு எழுத்துகளைக் கொண்ட சொற்களின் ஈறு ‘ன்’ ஆக இருந்தால் , அந்த ‘ன்’னுக்குப் பதிலாக ‘ம்’ வருவது ஒன்பது சொற்களில் மட்டும் நடவாது என்பார்கள்!
‘புகரக் கிளந்த அஃறிணை யான’ - குற்றம் அற்ற அப்படிப்பட்ட ஒன்பது சொற்களும் அஃறிணைச் சொற்களாம் !
அந்த ஒன்பது சொற்கள் யாவை ?
இளம்பூரணர் எழுதுகிறார் !-
1 . எகின்
2 . செகின்
3 . விழன்
4 . பயின்
5. அழன்
6 . புழன்
7 . குயின்
8 . கடான்
9 . வயான்
இச் சொற்களின் பொருளைப் பற்றி நமக்கு முன்பு கவலைப் பட்டவர் நச்சினார்க்கினியர்! அவர் ,
1. எகின் = புளி
2. பயின் = பிசின்
3. குயின் = மேகம்
4. அழன் = பிணம்
5. வயான் = காரிப் பறவை
- என்று பொருள்கள் எழுதிவிட்டு , “செகின் முதலிய பிறவற்றுக்குப் பொருள் புலப்பட்டில”
எனக் குறித்துளார் !
ஒன்பது சொற்களுக்கு மட்டும்தானே தடைபோட்டது தொல்காப்பியம் ?
அப்படியானால் மீதி ‘ன்’ ஈற்றுச் சொற்களின் ஈற்றில் , ‘ன்’னுக்குப் பதிலாக ‘ம்’ வரும் என்பதுதானே பொருள் ?
ஆமாம் என்ற இளம்பூரணர் , அப்படி வரக்கூடிய ‘ன்’ஈற்றுச் சொற்கள் சிலவற்றை எழுதுகிறார் !-
1 . நிலன்
இது ‘நிலம்’ என்ற பொருளையே தரும் !
2 . பிலன்
இது ‘பிலம்’ என்ற பொருளையே தரும்!
‘வயான்’ எனும் காரிப் பறவையைப் பார்க்க ஆசையா?
இதோ -
1 .
[You must be registered and logged in to see this image.] Courtesy – blog.chaukhat.com
2.
[You must be registered and logged in to see this image.] Courtesy – orientalbirdimages.org
3.
[You must be registered and logged in to see this image.] Courtesy – tulaoer.org
இதன் விலங்கியல் பெயர் - Dicrurus மச்ரோசெர்கிஸ்
இதன் வேறு பெயர் - கரிக் குருவி
இதன் தாயகம் – இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள்
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழிமரபில் அடுத்தது –
“வகரக் கிளவி நான்மொழி யீற்றது” (மொழி. 48)
‘வகரக் கிளவி’ – ‘வ்’ எனும் சொல்,
‘நான்மொழி ஈற்றது’ – நான்கு சொற்களுக்கு மட்டும் ஈறாக வரும் !
‘வகரக் கிளவி’ - இப்படித் தமிழ் இலக்கணங்களில் வந்தால் , இடத்தைப் பொறுத்து , ‘வ்’ அல்லது ‘வ’ எனக் கொள்ள வேண்டும் !
‘நான் மொழி’ என்பதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் –
1 . அவ்
2 . இவ்
3 . உவ்
4 . தெவ்
இவை நான்கும் பெயர்ச் சொற்களே (Nouns) !
‘வ்’ ஈறு தொடர்பாக , முன்பே நாம் புள்ளிமயங்கியல் நூற்பாக்கள் 83 , 87 ஆகியவற்றில் விரிவாகப் பார்த்துள்ளோம்! ஆகவே அவற்றை மீண்டும் இங்கே இணைக்கவில்லை !
இறுதியாக மொழிமரபின் கடைசி நூற்பா ! –
“மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப
புகரக் கிளந்த வஃறிணை யான ” (மொழி 49)
‘மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த , னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப’ - இரண்டு எழுத்துகளைக் கொண்ட சொற்களின் ஈறு ‘ன்’ ஆக இருந்தால் , அந்த ‘ன்’னுக்குப் பதிலாக ‘ம்’ வருவது ஒன்பது சொற்களில் மட்டும் நடவாது என்பார்கள்!
‘புகரக் கிளந்த அஃறிணை யான’ - குற்றம் அற்ற அப்படிப்பட்ட ஒன்பது சொற்களும் அஃறிணைச் சொற்களாம் !
அந்த ஒன்பது சொற்கள் யாவை ?
இளம்பூரணர் எழுதுகிறார் !-
1 . எகின்
2 . செகின்
3 . விழன்
4 . பயின்
5. அழன்
6 . புழன்
7 . குயின்
8 . கடான்
9 . வயான்
இச் சொற்களின் பொருளைப் பற்றி நமக்கு முன்பு கவலைப் பட்டவர் நச்சினார்க்கினியர்! அவர் ,
1. எகின் = புளி
2. பயின் = பிசின்
3. குயின் = மேகம்
4. அழன் = பிணம்
5. வயான் = காரிப் பறவை
- என்று பொருள்கள் எழுதிவிட்டு , “செகின் முதலிய பிறவற்றுக்குப் பொருள் புலப்பட்டில”
எனக் குறித்துளார் !
ஒன்பது சொற்களுக்கு மட்டும்தானே தடைபோட்டது தொல்காப்பியம் ?
அப்படியானால் மீதி ‘ன்’ ஈற்றுச் சொற்களின் ஈற்றில் , ‘ன்’னுக்குப் பதிலாக ‘ம்’ வரும் என்பதுதானே பொருள் ?
ஆமாம் என்ற இளம்பூரணர் , அப்படி வரக்கூடிய ‘ன்’ஈற்றுச் சொற்கள் சிலவற்றை எழுதுகிறார் !-
1 . நிலன்
இது ‘நிலம்’ என்ற பொருளையே தரும் !
2 . பிலன்
இது ‘பிலம்’ என்ற பொருளையே தரும்!
‘வயான்’ எனும் காரிப் பறவையைப் பார்க்க ஆசையா?
இதோ -
1 .
[You must be registered and logged in to see this image.] Courtesy – blog.chaukhat.com
2.
[You must be registered and logged in to see this image.] Courtesy – orientalbirdimages.org
3.
[You must be registered and logged in to see this image.] Courtesy – tulaoer.org
இதன் விலங்கியல் பெயர் - Dicrurus மச்ரோசெர்கிஸ்
இதன் வேறு பெயர் - கரிக் குருவி
இதன் தாயகம் – இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள்
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (392)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எழுத்ததிகாரத்தில் நாம் இதுவரை நூற்பாவாரியாக ஆய்ந்தவை :-
1.நூன் மரபு
2.மொழி மரபு
3.புணரியல்
4.தொகை மரபு
5.உருபியல்
6. உயிர் மயங்கியல்
7. புள்ளி மயங்கியல்
8.குற்றியலுகரப் புணரியல்
இப்போது மீதி இருப்பது ‘பிறப்பியல்’ ஒன்று மட்டுமே !
‘பிறப்பியல்’ , எழுத்ததிகாரத்தின் மூன்றாவது இயல்.
இதனை இப்போது பார்ப்போம் !
முதல் நூற்பா ! –
“உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப்
பல்லு மிதழு நாவு மூக்கும்
அண்ணமு முளப்பட வெண்முறை நிலையான
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
பிறப்பி னாக்கம் வேறுவே றியல
திறப்படத் தெரியுங் காட்சி யான” (பிறப்.1)
தமிழ் எழுத்தொலிகள் பிறக்கும் முறைகளைத் தொகுத்துச் சுருக்கமாக ஒரு நூற்பாவில் கூறிவிட்டார் தொல்காபியர் !
‘உந்தி முதலா முந்துவளி தோன்றி’ – வயிற்றின் தொப்புள் பகுதியிலிருந்து காற்றானது கிளம்பி,
‘தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ’ – தலை , தொண்டை, நெஞ்சு ஆகிய பகுதிகளில் நிலைபெற்று ,
‘பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான
உறுப்புற்று அமைய’ – பல் , இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகிய ஐந்து உறுப்புகளில் சேர,
‘எல்லா வெழுத்தும் சொல்லுங் காலைப்,பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல
திறப்படத் தெரியும் காட்சி ஆன’ – தமிழ் எழுத்து ஒலிப்புகள் எல்லாம் , ஆராய்ந்து பார்க்குமிடத்து , ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாகப் பிறக்கும் !
இவ்வாறு தொல்காப்பியர் கூறியதைத்தான் இன்றைய மொழியியலார் (Linguists) ஆங்கிலத்தில் ஓதுகின்றனர் ! ‘பிறப்பியல்’ என்பதை Articulation of letters என்கின்றனர்; ‘மிடறு ’ என்பதை அவர்கள் Larynx என்கின்றனர் .
தலை – இது மூளையைக் குறிக்கும் என்று ச.பாலசுந்தரம் எழுதியுள்ளார்!அவரே , மொழியியலார் மூக்குத் துளையின் அடிப்பாகத்தைக் குறிக்கும் என மொழிநூலார் கருதுவர் என்ற குறிப்பையும் தருகிறார் !
தலை , நெஞ்சு ஆகியவை கூடத் தமிழ் எழுத்து உச்சரிப்பில் பங்கு வகிக்கின்றன என்று அந்தக் காலத்திலேயே தொல்காப்பியர் கூறியுள்ளது நமக்கு வியப்பை அளிக்கிறது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எழுத்ததிகாரத்தில் நாம் இதுவரை நூற்பாவாரியாக ஆய்ந்தவை :-
1.நூன் மரபு
2.மொழி மரபு
3.புணரியல்
4.தொகை மரபு
5.உருபியல்
6. உயிர் மயங்கியல்
7. புள்ளி மயங்கியல்
8.குற்றியலுகரப் புணரியல்
இப்போது மீதி இருப்பது ‘பிறப்பியல்’ ஒன்று மட்டுமே !
‘பிறப்பியல்’ , எழுத்ததிகாரத்தின் மூன்றாவது இயல்.
இதனை இப்போது பார்ப்போம் !
முதல் நூற்பா ! –
“உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப்
பல்லு மிதழு நாவு மூக்கும்
அண்ணமு முளப்பட வெண்முறை நிலையான
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
பிறப்பி னாக்கம் வேறுவே றியல
திறப்படத் தெரியுங் காட்சி யான” (பிறப்.1)
தமிழ் எழுத்தொலிகள் பிறக்கும் முறைகளைத் தொகுத்துச் சுருக்கமாக ஒரு நூற்பாவில் கூறிவிட்டார் தொல்காபியர் !
‘உந்தி முதலா முந்துவளி தோன்றி’ – வயிற்றின் தொப்புள் பகுதியிலிருந்து காற்றானது கிளம்பி,
‘தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ’ – தலை , தொண்டை, நெஞ்சு ஆகிய பகுதிகளில் நிலைபெற்று ,
‘பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான
உறுப்புற்று அமைய’ – பல் , இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகிய ஐந்து உறுப்புகளில் சேர,
‘எல்லா வெழுத்தும் சொல்லுங் காலைப்,பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல
திறப்படத் தெரியும் காட்சி ஆன’ – தமிழ் எழுத்து ஒலிப்புகள் எல்லாம் , ஆராய்ந்து பார்க்குமிடத்து , ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாகப் பிறக்கும் !
இவ்வாறு தொல்காப்பியர் கூறியதைத்தான் இன்றைய மொழியியலார் (Linguists) ஆங்கிலத்தில் ஓதுகின்றனர் ! ‘பிறப்பியல்’ என்பதை Articulation of letters என்கின்றனர்; ‘மிடறு ’ என்பதை அவர்கள் Larynx என்கின்றனர் .
தலை – இது மூளையைக் குறிக்கும் என்று ச.பாலசுந்தரம் எழுதியுள்ளார்!அவரே , மொழியியலார் மூக்குத் துளையின் அடிப்பாகத்தைக் குறிக்கும் என மொழிநூலார் கருதுவர் என்ற குறிப்பையும் தருகிறார் !
தலை , நெஞ்சு ஆகியவை கூடத் தமிழ் எழுத்து உச்சரிப்பில் பங்கு வகிக்கின்றன என்று அந்தக் காலத்திலேயே தொல்காப்பியர் கூறியுள்ளது நமக்கு வியப்பை அளிக்கிறது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 53 of 84 • 1 ... 28 ... 52, 53, 54 ... 68 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 53 of 84
|
|