புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 48 of 84 •
Page 48 of 84 • 1 ... 25 ... 47, 48, 49 ... 66 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (362)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தொல்காப்பியர் தமிழ்ச் சொற்களை ‘மொழி’ நோக்கில் 3 வகைகளாகப் பகுக்கிறார் ! –
1 . ஓரெழுத்து ஒருமொழி
2 . ஈரெழுத்து ஒருமொழி
3 . இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துகளால் ஆன தொடர்மொழி
இவற்றுக்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் வருமாறு –
1 . ஓரெழுத்து ஒருமொழி : ‘ஆ’ போல்வன ; ஆ = பசு
2. ஈரெழுத்து ஒருமொழி : ‘மணி’ போல்வன; மணி = ‘டாண்’ணு பொருள் சொல்லிவிடுவீர்கள்!
3. தொடர்மொழி :
i. ‘வரகு ’ போல்வன ; வரகு = தானியங்களில் ஒன்று (Common millet)
ii. ‘கொற்றன்’ போல்வன ; கொற்றன் – இயற்பெயர்
‘கொற்றன்’ என்ற சொல்லில் ஒற்றெழுத்துகளை நீக்கிவிட்டால் நிற்பவை இரு எழுத்துகளே ! சொற்களில் எழுத்தை எண்ணும்போது மெய்யெழுத்துகளைக் கணக்கில் சேர்க்கக் கூடாது எனில் , ’ஈரெழுத்து ஒருமொழிக்கு அல்லவா எடுத்துக்காட்டாக அமையும் ? ஆனால் இளம்பூரணர் ‘இரண்டு எழுத்துகளைவிடக் கூடுதலான எழுத்துக்களல் அமைந்த தொடர்மொழி’க்கு அல்லவா ‘கொற்றனை’ நிறுத்தியுள்ளார் !
எனவே இளம்பூரணர் கருத்துப்படிச் சொற்களில் எழுத்தை எண்ணும் போது ஒற்றெழுத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும் !
ஆனால் நச்சர் இதில் மாறுபடுகிறார் !
நச்சர் கருத்துப்படிச் சொற்களில் எழுத்தை எண்ணும் போது ஒற்றெழுத்தையும் குற்றியலுகரத்தையும் கணக்கில் கொள்ளக்கூடாது !
நச்சினார்க்கினியரின் உரைப்படி-
1 . ஆ , கா , நா – ஓரெழுத்து ஒருமொழிகள்.
2 .மணி , வரகு , கொற்றன் – ஈரெழுத்து ஒருமொழிகள்.
(வரகு என்பதன் ஈற்றெழுத்துக் குற்றியலுகரமாக இருப்பதால் நச்சர் ‘கு’வைக் கணக்கில் கொள்ளவில்லை ! )
3. குரவு , அரவு – மூவெழுத்து ஒருமொழிகள் !
( ‘வு’ , குற்றியலுகரமல்ல என்பதால் நச்சர் அதனைக் கணக்கில் சேர்த்துக்கொண்டார் !)
4. கணவிரி – நாலெழுத்து ஒருமொழி .
(கணவிரி =- செவ்வலரி)
5 . அகத்தியனார் – ஐந்தெழுத்து ஒரு மொழி.
(இரு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)
6 . திருச்சிற்றம்பலம் – ஆறெழுத்து ஒரு மொழி.
(நான்கு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)
6 . பெரும்பற்றப் புலியூர் – ஏழெழுத்து ஒரு மொழி.
(நான்கு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)
நச்சர் கூறிய ‘ஒற்றைக் கணக்கில் எடுக்கவேண்டாம்’ என்பது யாப்பில் பொருந்துவது !
எனவே,
நாம் மேலே பார்த்த இளம்பூரணர் உரையே சிறந்ததாகக் காணப்படுகிறது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தொல்காப்பியர் தமிழ்ச் சொற்களை ‘மொழி’ நோக்கில் 3 வகைகளாகப் பகுக்கிறார் ! –
1 . ஓரெழுத்து ஒருமொழி
2 . ஈரெழுத்து ஒருமொழி
3 . இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துகளால் ஆன தொடர்மொழி
இவற்றுக்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் வருமாறு –
1 . ஓரெழுத்து ஒருமொழி : ‘ஆ’ போல்வன ; ஆ = பசு
2. ஈரெழுத்து ஒருமொழி : ‘மணி’ போல்வன; மணி = ‘டாண்’ணு பொருள் சொல்லிவிடுவீர்கள்!
3. தொடர்மொழி :
i. ‘வரகு ’ போல்வன ; வரகு = தானியங்களில் ஒன்று (Common millet)
ii. ‘கொற்றன்’ போல்வன ; கொற்றன் – இயற்பெயர்
‘கொற்றன்’ என்ற சொல்லில் ஒற்றெழுத்துகளை நீக்கிவிட்டால் நிற்பவை இரு எழுத்துகளே ! சொற்களில் எழுத்தை எண்ணும்போது மெய்யெழுத்துகளைக் கணக்கில் சேர்க்கக் கூடாது எனில் , ’ஈரெழுத்து ஒருமொழிக்கு அல்லவா எடுத்துக்காட்டாக அமையும் ? ஆனால் இளம்பூரணர் ‘இரண்டு எழுத்துகளைவிடக் கூடுதலான எழுத்துக்களல் அமைந்த தொடர்மொழி’க்கு அல்லவா ‘கொற்றனை’ நிறுத்தியுள்ளார் !
எனவே இளம்பூரணர் கருத்துப்படிச் சொற்களில் எழுத்தை எண்ணும் போது ஒற்றெழுத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும் !
ஆனால் நச்சர் இதில் மாறுபடுகிறார் !
நச்சர் கருத்துப்படிச் சொற்களில் எழுத்தை எண்ணும் போது ஒற்றெழுத்தையும் குற்றியலுகரத்தையும் கணக்கில் கொள்ளக்கூடாது !
நச்சினார்க்கினியரின் உரைப்படி-
1 . ஆ , கா , நா – ஓரெழுத்து ஒருமொழிகள்.
2 .மணி , வரகு , கொற்றன் – ஈரெழுத்து ஒருமொழிகள்.
(வரகு என்பதன் ஈற்றெழுத்துக் குற்றியலுகரமாக இருப்பதால் நச்சர் ‘கு’வைக் கணக்கில் கொள்ளவில்லை ! )
3. குரவு , அரவு – மூவெழுத்து ஒருமொழிகள் !
( ‘வு’ , குற்றியலுகரமல்ல என்பதால் நச்சர் அதனைக் கணக்கில் சேர்த்துக்கொண்டார் !)
4. கணவிரி – நாலெழுத்து ஒருமொழி .
(கணவிரி =- செவ்வலரி)
5 . அகத்தியனார் – ஐந்தெழுத்து ஒரு மொழி.
(இரு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)
6 . திருச்சிற்றம்பலம் – ஆறெழுத்து ஒரு மொழி.
(நான்கு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)
6 . பெரும்பற்றப் புலியூர் – ஏழெழுத்து ஒரு மொழி.
(நான்கு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)
நச்சர் கூறிய ‘ஒற்றைக் கணக்கில் எடுக்கவேண்டாம்’ என்பது யாப்பில் பொருந்துவது !
எனவே,
நாம் மேலே பார்த்த இளம்பூரணர் உரையே சிறந்ததாகக் காணப்படுகிறது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (363)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழி மரபில் அடுத்தது-
“மெய்யி னியக்க மகரமொடு சிவணும்” (மொழி. 13)
மெய்யெழுத்தானது இயங்வேண்டும் என்றால் ‘அ’ தேவை! – இப்படித்தானே பொருள் வருகிறது ?
அப்படியானால் ‘இ’யுடன் சேர்ந்து ‘கி’ ஆகிறதே அது? அதுவும் இயக்கம் தானே ?
எனவே நாம் பொருள் கொண்டதில் ஏதோ தவறு இருக்கிறது !
இளம்பூரணர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம் ! –
“ ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் என வரும் ” .
இதுதான் இளம்பூரணர் சொன்னது !
‘ட ற ல ள’ போன்ற மெய்களைச் சுட்டிக்காட்டத்தான் நமக்கு ‘அ’ தேவைப் படுகிறது ! இளம்பூரணர் உரை இதைத்தன் கூறுகிறது !
அஃதாவது ‘ட் எனும் புள்ளி எழுத்து ’ என்று கூறுவது அந்நாளில் மரபில்லை !
‘ட எனும் புள்ளி’ என்றுதான் கூறுவர் !
இன்றுகூட , ‘டகர மெய்’ என்று நாம் எழுதுவதைக் கவனிக்க ! ‘ட’ என வந்துவிட்டாலே , ‘ட்’டுடன் ‘அ’ சேர்கிறது என்பதைத்தானே குறிக்கிறது?
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழி மரபில் அடுத்தது-
“மெய்யி னியக்க மகரமொடு சிவணும்” (மொழி. 13)
மெய்யெழுத்தானது இயங்வேண்டும் என்றால் ‘அ’ தேவை! – இப்படித்தானே பொருள் வருகிறது ?
அப்படியானால் ‘இ’யுடன் சேர்ந்து ‘கி’ ஆகிறதே அது? அதுவும் இயக்கம் தானே ?
எனவே நாம் பொருள் கொண்டதில் ஏதோ தவறு இருக்கிறது !
இளம்பூரணர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம் ! –
“ ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் என வரும் ” .
இதுதான் இளம்பூரணர் சொன்னது !
‘ட ற ல ள’ போன்ற மெய்களைச் சுட்டிக்காட்டத்தான் நமக்கு ‘அ’ தேவைப் படுகிறது ! இளம்பூரணர் உரை இதைத்தன் கூறுகிறது !
அஃதாவது ‘ட் எனும் புள்ளி எழுத்து ’ என்று கூறுவது அந்நாளில் மரபில்லை !
‘ட எனும் புள்ளி’ என்றுதான் கூறுவர் !
இன்றுகூட , ‘டகர மெய்’ என்று நாம் எழுதுவதைக் கவனிக்க ! ‘ட’ என வந்துவிட்டாலே , ‘ட்’டுடன் ‘அ’ சேர்கிறது என்பதைத்தானே குறிக்கிறது?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
தொடத் தொடத் தொல்காப்பியம் அருமை!
தொடத் தொடத் தொல்காப்பியம் (364)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழி மரபில் அடுத்த நூற்பா !: -
“தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை” (மொழி. 14)
’ எல்லா எழுத்தும்’ – எல்லா மெய்யெழுத்துகளையும்,
‘தம்மியல் கிளப்பின்’ – குறிப்பிட வேண்டுமாயின்,
‘மெய்ந்நிலை மயக்கம் ’ – மெய்யாகவோ உயிர் மெய்யாகவோ குறிப்பிடலாம் ;
‘மானம் இல்லை’ – அதில் ஒன்றும் தவறில்லை !
‘இடையெழுத் தென்ப யரல வழள’ – இஃது இலக்கணம் .
இவை, ய் ர் ல் வ் ழ் ள் ஆகிய மெய்களைத்தான் குறிக்கின்றன ; ஆனாலும் ’ யரல வழள’ என்ற உயிர் மெய்களால் அந்த மெய்கள் சுட்டப்படுகின்றன !
இவ்வாறு சொல்லலாம் என்பதுதான் தொல்காப்பியரின் மேலை விதி !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழி மரபில் அடுத்த நூற்பா !: -
“தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை” (மொழி. 14)
’ எல்லா எழுத்தும்’ – எல்லா மெய்யெழுத்துகளையும்,
‘தம்மியல் கிளப்பின்’ – குறிப்பிட வேண்டுமாயின்,
‘மெய்ந்நிலை மயக்கம் ’ – மெய்யாகவோ உயிர் மெய்யாகவோ குறிப்பிடலாம் ;
‘மானம் இல்லை’ – அதில் ஒன்றும் தவறில்லை !
‘இடையெழுத் தென்ப யரல வழள’ – இஃது இலக்கணம் .
இவை, ய் ர் ல் வ் ழ் ள் ஆகிய மெய்களைத்தான் குறிக்கின்றன ; ஆனாலும் ’ யரல வழள’ என்ற உயிர் மெய்களால் அந்த மெய்கள் சுட்டப்படுகின்றன !
இவ்வாறு சொல்லலாம் என்பதுதான் தொல்காப்பியரின் மேலை விதி !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (365)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஒரே சொல்லில் இரு மெய்கள் அடுத்தடுத்து வரும் மெய்ம்மயக்கத்தை நூன்மரபில் பார்த்தோம் !
அதன் நீட்சியாக மொழிமரபில் தொல்காப்பியர் உரைப்பது –
“யரழ வென்னு மூன்றுமுன் னொற்றக்
கசதப ஙஞநம வீரொற் றாகும்” (மொழி. 15)
‘யரழ என்னும் மூன்றும் முன் ஒற்றக்’- ய் , ர் , ழ் ஆகிய மூன்று மெய்கள் சொற்களில் முதற்கண் நிற்க ,
‘கசதப ஙஞநம ஈரொற்று ஆகும்’ – க் ச் த் ப், இவைகளில் ஒன்று அல்லது ங் ஞ் ந் ம் எனும் இவைகளில் ஒன்று அதன் அருகே நிற்கலாம் !
இளம்பூரணர் எடுத்துக்காட்டை முதலில் பார்போம் ! –
1 . வேய்க்குறை
’ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !
2 . வேய்ச்சிறை
’ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !
3 .வேய்த்தலை
’ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !
4 . வேய்ப்புறம்
’ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !
5 . வேய்ங்குறை
’ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !
6 . வேய்ஞ்சிறை
‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது!
7 . வேய்ந்தலை
’ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !
8 . வேய்ம்புறம்
’ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !
9 . வேர்க்குறை
’ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !
10 . வேர்ச்சிறை
‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது!
11 . வேர்த்தலை
’ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !
12 . வேர்ப்புறம்
’ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !
13 . வேர்ங்குறை
’ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !
14 . வேர்ஞ்சிறை
‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது!
15 . வேர்ந்தலை
’ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !
16 . வேர்ம்புறம்
’ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !
17 . வீழ்க்குறை
’ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !
18 . வீழ்ச்சிறை
‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது!
19 . வீழ்த்தலை
’ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !
20 .வீழ்ப்புறம்
’ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !
21 . வீழ்ங்குறை
’ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !
22 . வீழ்ஞ்சிறை
‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது!
23 . வீழ்ந்தலை
’ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !
24 . வீழ்ம்புறம்
’ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !
இனி இதே நூற்பாவிற்கு நச்சர் தரும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம் ! –
1 . வேய்க்க
‘ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !
2 . வாய்ச்சி
‘ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !
3 . பாய்த்தல்
‘ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !
4 .வாய்ப்பு
‘ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !
5 . பீர்க்கு
‘ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !
6 . தேர்ச்சி
‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது !
7 . வார்த்தல்
‘ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !
8 . ஆர்ப்பு
‘ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !
9 . வாழ்க்கை
‘ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !
10 .தாழ்ச்சி
‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது !
11 . தாழ்த்தல்
‘ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !
12 . தாழ்ப்பு
‘ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !
13 . காய்ங்கனி
‘ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !
14 .தேய்ஞ்சது
‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது !
15 .காய்ந்தனம்
‘ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !
16 . காய்ம்புறம்
‘ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !
17 .நேர்ங்கல்
‘ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !
18 . நேர்ஞ்சிலை
‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது !
19 .நேர்ந்திலை
‘ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !
20 . நேர்ம்புறம்
‘ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !
21 . வாழ்ந்தனம்
‘ழை’ அடுத்து ‘ந்’ வந்தது !
22 . தாழ்ங்குலை
‘ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !
23 . தாழ்ஞ்சினை
‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது !
24 . தாழ்ந்திரள்
‘ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !
25 . வீழ்ம்படை
‘ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !
மேல் எடுத்துக்காட்டுகளில் பெயர்ச்சொல் , வினையாலணையும் பெயர் , வினை முற்று , தொகைச் சொல் ஆகியன வந்துள்ளதைக் கவனிக்க !
மேலை எடுத்துக்காட்டுகள் யாவுமே நெட்டெழுத்தை முதலாகக் கொண்டு அதன்பின் அடுத்தடுத்து இரு மெய்கள் மயங்கிய சொற்கள் !
அப்படியானால் சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகாதா?
இந்த ஐயத்திற்கு விடை கூறுகிறார் நச்சர் ! –
1 . வேந்தர்க்கு
இதில் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ர்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !
2 . அன்னாய்க்கு
இதிலும் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ய்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !
ஆகவே , சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகும்!
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஒரே சொல்லில் இரு மெய்கள் அடுத்தடுத்து வரும் மெய்ம்மயக்கத்தை நூன்மரபில் பார்த்தோம் !
அதன் நீட்சியாக மொழிமரபில் தொல்காப்பியர் உரைப்பது –
“யரழ வென்னு மூன்றுமுன் னொற்றக்
கசதப ஙஞநம வீரொற் றாகும்” (மொழி. 15)
‘யரழ என்னும் மூன்றும் முன் ஒற்றக்’- ய் , ர் , ழ் ஆகிய மூன்று மெய்கள் சொற்களில் முதற்கண் நிற்க ,
‘கசதப ஙஞநம ஈரொற்று ஆகும்’ – க் ச் த் ப், இவைகளில் ஒன்று அல்லது ங் ஞ் ந் ம் எனும் இவைகளில் ஒன்று அதன் அருகே நிற்கலாம் !
இளம்பூரணர் எடுத்துக்காட்டை முதலில் பார்போம் ! –
1 . வேய்க்குறை
’ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !
2 . வேய்ச்சிறை
’ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !
3 .வேய்த்தலை
’ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !
4 . வேய்ப்புறம்
’ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !
5 . வேய்ங்குறை
’ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !
6 . வேய்ஞ்சிறை
‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது!
7 . வேய்ந்தலை
’ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !
8 . வேய்ம்புறம்
’ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !
9 . வேர்க்குறை
’ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !
10 . வேர்ச்சிறை
‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது!
11 . வேர்த்தலை
’ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !
12 . வேர்ப்புறம்
’ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !
13 . வேர்ங்குறை
’ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !
14 . வேர்ஞ்சிறை
‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது!
15 . வேர்ந்தலை
’ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !
16 . வேர்ம்புறம்
’ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !
17 . வீழ்க்குறை
’ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !
18 . வீழ்ச்சிறை
‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது!
19 . வீழ்த்தலை
’ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !
20 .வீழ்ப்புறம்
’ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !
21 . வீழ்ங்குறை
’ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !
22 . வீழ்ஞ்சிறை
‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது!
23 . வீழ்ந்தலை
’ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !
24 . வீழ்ம்புறம்
’ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !
இனி இதே நூற்பாவிற்கு நச்சர் தரும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம் ! –
1 . வேய்க்க
‘ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !
2 . வாய்ச்சி
‘ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !
3 . பாய்த்தல்
‘ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !
4 .வாய்ப்பு
‘ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !
5 . பீர்க்கு
‘ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !
6 . தேர்ச்சி
‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது !
7 . வார்த்தல்
‘ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !
8 . ஆர்ப்பு
‘ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !
9 . வாழ்க்கை
‘ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !
10 .தாழ்ச்சி
‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது !
11 . தாழ்த்தல்
‘ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !
12 . தாழ்ப்பு
‘ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !
13 . காய்ங்கனி
‘ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !
14 .தேய்ஞ்சது
‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது !
15 .காய்ந்தனம்
‘ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !
16 . காய்ம்புறம்
‘ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !
17 .நேர்ங்கல்
‘ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !
18 . நேர்ஞ்சிலை
‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது !
19 .நேர்ந்திலை
‘ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !
20 . நேர்ம்புறம்
‘ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !
21 . வாழ்ந்தனம்
‘ழை’ அடுத்து ‘ந்’ வந்தது !
22 . தாழ்ங்குலை
‘ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !
23 . தாழ்ஞ்சினை
‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது !
24 . தாழ்ந்திரள்
‘ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !
25 . வீழ்ம்படை
‘ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !
மேல் எடுத்துக்காட்டுகளில் பெயர்ச்சொல் , வினையாலணையும் பெயர் , வினை முற்று , தொகைச் சொல் ஆகியன வந்துள்ளதைக் கவனிக்க !
மேலை எடுத்துக்காட்டுகள் யாவுமே நெட்டெழுத்தை முதலாகக் கொண்டு அதன்பின் அடுத்தடுத்து இரு மெய்கள் மயங்கிய சொற்கள் !
அப்படியானால் சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகாதா?
இந்த ஐயத்திற்கு விடை கூறுகிறார் நச்சர் ! –
1 . வேந்தர்க்கு
இதில் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ர்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !
2 . அன்னாய்க்கு
இதிலும் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ய்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !
ஆகவே , சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகும்!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (365)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஒரே சொல்லில் இரு மெய்கள் அடுத்தடுத்து வரும் மெய்ம்மயக்கத்தை நூன்மரபில் பார்த்தோம் !
அதன் நீட்சியாக மொழிமரபில் தொல்காப்பியர் உரைப்பது –
“யரழ வென்னு மூன்றுமுன் னொற்றக்
கசதப ஙஞநம வீரொற் றாகும்” (மொழி. 15)
‘யரழ என்னும் மூன்றும் முன் ஒற்றக்’- ய் , ர் , ழ் ஆகிய மூன்று மெய்கள் சொற்களில் முதற்கண் நிற்க ,
‘கசதப ஙஞநம ஈரொற்று ஆகும்’ – க் ச் த் ப், இவைகளில் ஒன்று அல்லது ங் ஞ் ந் ம் எனும் இவைகளில் ஒன்று அதன் அருகே நிற்கலாம் !
இளம்பூரணர் எடுத்துக்காட்டை முதலில் பார்போம் ! –
1 . வேய்க்குறை
’ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !
2 . வேய்ச்சிறை
’ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !
3 .வேய்த்தலை
’ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !
4 . வேய்ப்புறம்
’ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !
5 . வேய்ங்குறை
’ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !
6 . வேய்ஞ்சிறை
‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது!
7 . வேய்ந்தலை
’ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !
8 . வேய்ம்புறம்
’ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !
9 . வேர்க்குறை
’ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !
10 . வேர்ச்சிறை
‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது!
11 . வேர்த்தலை
’ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !
12 . வேர்ப்புறம்
’ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !
13 . வேர்ங்குறை
’ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !
14 . வேர்ஞ்சிறை
‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது!
15 . வேர்ந்தலை
’ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !
16 . வேர்ம்புறம்
’ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !
17 . வீழ்க்குறை
’ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !
18 . வீழ்ச்சிறை
‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது!
19 . வீழ்த்தலை
’ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !
20 .வீழ்ப்புறம்
’ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !
21 . வீழ்ங்குறை
’ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !
22 . வீழ்ஞ்சிறை
‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது!
23 . வீழ்ந்தலை
’ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !
24 . வீழ்ம்புறம்
’ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !
இனி இதே நூற்பாவிற்கு நச்சர் தரும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம் ! –
1 . வேய்க்க
‘ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !
2 . வாய்ச்சி
‘ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !
3 . பாய்த்தல்
‘ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !
4 .வாய்ப்பு
‘ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !
5 . பீர்க்கு
‘ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !
6 . தேர்ச்சி
‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது !
7 . வார்த்தல்
‘ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !
8 . ஆர்ப்பு
‘ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !
9 . வாழ்க்கை
‘ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !
10 .தாழ்ச்சி
‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது !
11 . தாழ்த்தல்
‘ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !
12 . தாழ்ப்பு
‘ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !
13 . காய்ங்கனி
‘ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !
14 .தேய்ஞ்சது
‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது !
15 .காய்ந்தனம்
‘ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !
16 . காய்ம்புறம்
‘ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !
17 .நேர்ங்கல்
‘ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !
18 . நேர்ஞ்சிலை
‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது !
19 .நேர்ந்திலை
‘ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !
20 . நேர்ம்புறம்
‘ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !
21 . வாழ்ந்தனம்
‘ழை’ அடுத்து ‘ந்’ வந்தது !
22 . தாழ்ங்குலை
‘ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !
23 . தாழ்ஞ்சினை
‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது !
24 . தாழ்ந்திரள்
‘ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !
25 . வீழ்ம்படை
‘ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !
மேல் எடுத்துக்காட்டுகளில் பெயர்ச்சொல் , வினையாலணையும் பெயர் , வினை முற்று , தொகைச் சொல் ஆகியன வந்துள்ளதைக் கவனிக்க !
மேலை எடுத்துக்காட்டுகள் யாவுமே நெட்டெழுத்தை முதலாகக் கொண்டு அதன்பின் அடுத்தடுத்து இரு மெய்கள் மயங்கிய சொற்கள் !
அப்படியானால் சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகாதா?
இந்த ஐயத்திற்கு விடை கூறுகிறார் நச்சர் ! –
1 . வேந்தர்க்கு
இதில் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ர்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !
2 . அன்னாய்க்கு
இதிலும் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ய்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !
ஆகவே , சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகும்!
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஒரே சொல்லில் இரு மெய்கள் அடுத்தடுத்து வரும் மெய்ம்மயக்கத்தை நூன்மரபில் பார்த்தோம் !
அதன் நீட்சியாக மொழிமரபில் தொல்காப்பியர் உரைப்பது –
“யரழ வென்னு மூன்றுமுன் னொற்றக்
கசதப ஙஞநம வீரொற் றாகும்” (மொழி. 15)
‘யரழ என்னும் மூன்றும் முன் ஒற்றக்’- ய் , ர் , ழ் ஆகிய மூன்று மெய்கள் சொற்களில் முதற்கண் நிற்க ,
‘கசதப ஙஞநம ஈரொற்று ஆகும்’ – க் ச் த் ப், இவைகளில் ஒன்று அல்லது ங் ஞ் ந் ம் எனும் இவைகளில் ஒன்று அதன் அருகே நிற்கலாம் !
இளம்பூரணர் எடுத்துக்காட்டை முதலில் பார்போம் ! –
1 . வேய்க்குறை
’ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !
2 . வேய்ச்சிறை
’ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !
3 .வேய்த்தலை
’ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !
4 . வேய்ப்புறம்
’ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !
5 . வேய்ங்குறை
’ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !
6 . வேய்ஞ்சிறை
‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது!
7 . வேய்ந்தலை
’ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !
8 . வேய்ம்புறம்
’ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !
9 . வேர்க்குறை
’ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !
10 . வேர்ச்சிறை
‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது!
11 . வேர்த்தலை
’ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !
12 . வேர்ப்புறம்
’ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !
13 . வேர்ங்குறை
’ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !
14 . வேர்ஞ்சிறை
‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது!
15 . வேர்ந்தலை
’ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !
16 . வேர்ம்புறம்
’ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !
17 . வீழ்க்குறை
’ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !
18 . வீழ்ச்சிறை
‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது!
19 . வீழ்த்தலை
’ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !
20 .வீழ்ப்புறம்
’ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !
21 . வீழ்ங்குறை
’ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !
22 . வீழ்ஞ்சிறை
‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது!
23 . வீழ்ந்தலை
’ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !
24 . வீழ்ம்புறம்
’ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !
இனி இதே நூற்பாவிற்கு நச்சர் தரும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம் ! –
1 . வேய்க்க
‘ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !
2 . வாய்ச்சி
‘ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !
3 . பாய்த்தல்
‘ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !
4 .வாய்ப்பு
‘ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !
5 . பீர்க்கு
‘ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !
6 . தேர்ச்சி
‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது !
7 . வார்த்தல்
‘ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !
8 . ஆர்ப்பு
‘ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !
9 . வாழ்க்கை
‘ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !
10 .தாழ்ச்சி
‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது !
11 . தாழ்த்தல்
‘ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !
12 . தாழ்ப்பு
‘ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !
13 . காய்ங்கனி
‘ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !
14 .தேய்ஞ்சது
‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது !
15 .காய்ந்தனம்
‘ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !
16 . காய்ம்புறம்
‘ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !
17 .நேர்ங்கல்
‘ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !
18 . நேர்ஞ்சிலை
‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது !
19 .நேர்ந்திலை
‘ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !
20 . நேர்ம்புறம்
‘ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !
21 . வாழ்ந்தனம்
‘ழை’ அடுத்து ‘ந்’ வந்தது !
22 . தாழ்ங்குலை
‘ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !
23 . தாழ்ஞ்சினை
‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது !
24 . தாழ்ந்திரள்
‘ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !
25 . வீழ்ம்படை
‘ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !
மேல் எடுத்துக்காட்டுகளில் பெயர்ச்சொல் , வினையாலணையும் பெயர் , வினை முற்று , தொகைச் சொல் ஆகியன வந்துள்ளதைக் கவனிக்க !
மேலை எடுத்துக்காட்டுகள் யாவுமே நெட்டெழுத்தை முதலாகக் கொண்டு அதன்பின் அடுத்தடுத்து இரு மெய்கள் மயங்கிய சொற்கள் !
அப்படியானால் சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகாதா?
இந்த ஐயத்திற்கு விடை கூறுகிறார் நச்சர் ! –
1 . வேந்தர்க்கு
இதில் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ர்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !
2 . அன்னாய்க்கு
இதிலும் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ய்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !
ஆகவே , சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகும்!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
தொட தொடத் தொல்க்காப்பியம் அருமை அய்யா!இது போன்று நன்னூலுக்கு விளக்கம்
எழுதி உள்ளீர்களாஅய்யா?-
எழுதி உள்ளீர்களாஅய்யா?-
நன்றி மோனிகா ஸ்ரீ !
நன்னூலுக்கு விளக்கம் எழுதவில்லை.
நன்னூலுக்கு விளக்கம் எழுதவில்லை.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (366)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மேலை நூற்பாவில் ‘ய்’ , ‘ர்’ , ‘ழ்’ ஆகிய மெய்கள் எப்படிப் பிற மெய்களுடன் வரும் என்றூ ஓதினார் தொல்காப்பியர் !
இப்போது அவற்றிலிருந்து ‘ர்’ , ‘ழ்’ ஆகியவற்றைப் பிரித்து இவற்றுக்கு உரிய சில பண்புகளை எழுதுகிறார் !-
“அவற்றுள்
ரகார ழகாரங் குற்றொற் றாகா” (மொழி. 16)
‘அவற்றுள்’ – ய , ர , ழ ஆகியவற்றுள்,
‘ரகார ழகாரம்’ - ‘ர்’ , ‘ழ்’ ஆகிய இரண்டும்,
‘குற்றொற்று ஆகா ’ – குறில் எழுத்துக்கு அருகிலே மெய்யெழுத்தாக நிற்கமாட்டா !
இந்த உண்மையை முன் ஆய்வில் நாம் கண்ட எடுத்துக்காட்டுகளிலும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் !
இளம்பூரணர் தரும் எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் !-
1 . தார்
‘ர்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
2 . தாழ்
‘ழ்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
3 . கரு
‘ரு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(க), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
4 . மழு
‘ழு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(ம), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளால், தொல்காப்பியர் சொன்னது , ‘ர்’, ‘ழ்’ஆகிய மெய்கள் பற்றியது மட்டுமல்ல , ரகர ழகர உயிர்மெய்கள் (ரு , ழு போல) பற்றியதும் ஆகும் என்பது புலனாகிறது !
தொல்காப்பியரின் இந்த நூற்பாவைக் கொண்டு இன்னொரு இலக்கணத்தையும் எடுக்கிறார் இளம்பூரணர் ! அதன்படி –
1. பொய்
‘ய்’ஆனது ஒரு குறிலின் (பொ) அருகேயும் நிற்கும் !
2. நோய்
‘ய்’ஆனது ஒரு நெடிலின் (பொ) அருகேயும் நிற்கும் !
முன்னே, ‘ர்’, ‘ழ்’ ஆகியன குறிலின் அருகே நிற்கமாட்டா என்று பார்த்ததை இங்கு ஒப்பிட்டுக்கொள்க !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மேலை நூற்பாவில் ‘ய்’ , ‘ர்’ , ‘ழ்’ ஆகிய மெய்கள் எப்படிப் பிற மெய்களுடன் வரும் என்றூ ஓதினார் தொல்காப்பியர் !
இப்போது அவற்றிலிருந்து ‘ர்’ , ‘ழ்’ ஆகியவற்றைப் பிரித்து இவற்றுக்கு உரிய சில பண்புகளை எழுதுகிறார் !-
“அவற்றுள்
ரகார ழகாரங் குற்றொற் றாகா” (மொழி. 16)
‘அவற்றுள்’ – ய , ர , ழ ஆகியவற்றுள்,
‘ரகார ழகாரம்’ - ‘ர்’ , ‘ழ்’ ஆகிய இரண்டும்,
‘குற்றொற்று ஆகா ’ – குறில் எழுத்துக்கு அருகிலே மெய்யெழுத்தாக நிற்கமாட்டா !
இந்த உண்மையை முன் ஆய்வில் நாம் கண்ட எடுத்துக்காட்டுகளிலும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் !
இளம்பூரணர் தரும் எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் !-
1 . தார்
‘ர்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
2 . தாழ்
‘ழ்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
3 . கரு
‘ரு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(க), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
4 . மழு
‘ழு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(ம), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளால், தொல்காப்பியர் சொன்னது , ‘ர்’, ‘ழ்’ஆகிய மெய்கள் பற்றியது மட்டுமல்ல , ரகர ழகர உயிர்மெய்கள் (ரு , ழு போல) பற்றியதும் ஆகும் என்பது புலனாகிறது !
தொல்காப்பியரின் இந்த நூற்பாவைக் கொண்டு இன்னொரு இலக்கணத்தையும் எடுக்கிறார் இளம்பூரணர் ! அதன்படி –
1. பொய்
‘ய்’ஆனது ஒரு குறிலின் (பொ) அருகேயும் நிற்கும் !
2. நோய்
‘ய்’ஆனது ஒரு நெடிலின் (பொ) அருகேயும் நிற்கும் !
முன்னே, ‘ர்’, ‘ழ்’ ஆகியன குறிலின் அருகே நிற்கமாட்டா என்று பார்த்ததை இங்கு ஒப்பிட்டுக்கொள்க !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (366)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மேலை நூற்பாவில் ‘ய்’ , ‘ர்’ , ‘ழ்’ ஆகிய மெய்கள் எப்படிப் பிற மெய்களுடன் வரும் என்று ஓதினார் தொல்காப்பியர் !
இப்போது அவற்றிலிருந்து ‘ர்’ , ‘ழ்’ ஆகியவற்றைப் பிரித்து இவற்றுக்கு உரிய சில பண்புகளை எழுதுகிறார் !-
“அவற்றுள்
ரகார ழகாரங் குற்றொற் றாகா” (மொழி. 16)
‘அவற்றுள்’ – ய , ர , ழ ஆகியவற்றுள்,
‘ரகார ழகாரம்’ - ‘ர்’ , ‘ழ்’ ஆகிய இரண்டும்,
‘குற்றொற்று ஆகா ’ – குறில் எழுத்துக்கு அருகிலே மெய்யெழுத்தாக நிற்கமாட்டா !
இந்த உண்மையை முன் ஆய்வில் நாம் கண்ட எடுத்துக்காட்டுகளிலும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் !
இளம்பூரணர் தரும் எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் !-
1 . தார்
‘ர்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
2 . தாழ்
‘ழ்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
3 . கரு
‘ரு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(க), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
4 . மழு
‘ழு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(ம), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளால், தொல்காப்பியர் சொன்னது , ‘ர்’, ‘ழ்’ஆகிய மெய்கள் பற்றியது மட்டுமல்ல , ரகர ழகர உயிர்மெய்கள் (ரு , ழு போல) பற்றியதும் ஆகும் என்பது புலனாகிறது !
தொல்காப்பியரின் இந்த நூற்பாவைக் கொண்டு இன்னொரு இலக்க
ணத்தையும் எடுக்கிறார் இளம்பூரணர் ! அதன்படி –
1. பொய்
‘ய்’ஆனது ஒரு குறிலின் (பொ) அருகேயும் நிற்கும் !
2. நோய்
‘ய்’ஆனது ஒரு நெடிலின் (பொ) அருகேயும் நிற்கும் !
முன்னே, ‘ர்’, ‘ழ்’ ஆகியன குறிலின் அருகே நிற்கமாட்டா என்று பார்த்ததை இங்கு ஒப்பிட்டுக்கொள்க !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மேலை நூற்பாவில் ‘ய்’ , ‘ர்’ , ‘ழ்’ ஆகிய மெய்கள் எப்படிப் பிற மெய்களுடன் வரும் என்று ஓதினார் தொல்காப்பியர் !
இப்போது அவற்றிலிருந்து ‘ர்’ , ‘ழ்’ ஆகியவற்றைப் பிரித்து இவற்றுக்கு உரிய சில பண்புகளை எழுதுகிறார் !-
“அவற்றுள்
ரகார ழகாரங் குற்றொற் றாகா” (மொழி. 16)
‘அவற்றுள்’ – ய , ர , ழ ஆகியவற்றுள்,
‘ரகார ழகாரம்’ - ‘ர்’ , ‘ழ்’ ஆகிய இரண்டும்,
‘குற்றொற்று ஆகா ’ – குறில் எழுத்துக்கு அருகிலே மெய்யெழுத்தாக நிற்கமாட்டா !
இந்த உண்மையை முன் ஆய்வில் நாம் கண்ட எடுத்துக்காட்டுகளிலும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் !
இளம்பூரணர் தரும் எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் !-
1 . தார்
‘ர்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
2 . தாழ்
‘ழ்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
3 . கரு
‘ரு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(க), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
4 . மழு
‘ழு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(ம), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளால், தொல்காப்பியர் சொன்னது , ‘ர்’, ‘ழ்’ஆகிய மெய்கள் பற்றியது மட்டுமல்ல , ரகர ழகர உயிர்மெய்கள் (ரு , ழு போல) பற்றியதும் ஆகும் என்பது புலனாகிறது !
தொல்காப்பியரின் இந்த நூற்பாவைக் கொண்டு இன்னொரு இலக்க
ணத்தையும் எடுக்கிறார் இளம்பூரணர் ! அதன்படி –
1. பொய்
‘ய்’ஆனது ஒரு குறிலின் (பொ) அருகேயும் நிற்கும் !
2. நோய்
‘ய்’ஆனது ஒரு நெடிலின் (பொ) அருகேயும் நிற்கும் !
முன்னே, ‘ர்’, ‘ழ்’ ஆகியன குறிலின் அருகே நிற்கமாட்டா என்று பார்த்ததை இங்கு ஒப்பிட்டுக்கொள்க !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 48 of 84 • 1 ... 25 ... 47, 48, 49 ... 66 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 48 of 84
|
|