புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:39 pm
» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Today at 2:26 pm
» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Today at 1:57 pm
» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Today at 1:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:29 pm
» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Yesterday at 10:52 pm
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Yesterday at 8:10 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Oct 06, 2024 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Oct 06, 2024 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 06, 2024 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Sun Oct 06, 2024 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 06, 2024 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
by heezulia Today at 4:39 pm
» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Today at 2:26 pm
» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Today at 1:57 pm
» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Today at 1:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:29 pm
» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Yesterday at 10:52 pm
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Yesterday at 8:10 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Oct 06, 2024 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Oct 06, 2024 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 06, 2024 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Sun Oct 06, 2024 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 06, 2024 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 15 of 84 •
Page 15 of 84 • 1 ... 9 ... 14, 15, 16 ... 49 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (101)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘வ்’ ஈறு தொடர்கிறது !
‘அவ்’ என்பது வேற்றுமைப் புணர்ச்சியில் எவ்வாறு வரும் என்பதை இதற்கு முன் பார்த்தோம் !
அதனைத் தொடர்ந்து ,
“வேற்றுமை யல்வழி யாய்த மாகும்” (புள்ளி மயங்கியல் 84)
வேற்றுமை அல்வழி – அல்வழிப் புணர்ச்சியில் ‘அவ்’ முதலியன !
ஆய்தம் ஆகும் - ‘வ்’ ஆனது ஆய்தமாக மாறும் !
அஃதாவது ,
அவ் + கடிய = அஃ + கடிய
அஃ + கடிய = அஃகடிய (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + கடிய = இஃ + கடிய
இஃ + கடிய = இஃகடிய (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + கடிய = உஃ + கடிய
உஃ + கடிய = உஃகடிய (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + சிறிய = அஃ + சிறிய
அஃ + சிறிய = அஃசிறிய (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + சிறிய = இஃ + சிறிய
இஃ + சிறிய = இஃசிறிய (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + சிறிய = உஃ + சிறிய
உஃ + சிறிய = உஃசிறிய (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + தீய = அஃ + தீய
அஃ + தீய = அஃதீய (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + தீய = இஃ + தீய
இஃ + தீய = இஃதீய (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + தீய = உஃ + தீய
உஃ + தீய = உஃதீய (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + பெரிய = அஃ + பெரிய
அஃ + பெரிய = அஃபெரிய (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + பெரிய = இஃ + பெரிய
இஃ + பெரிய = இஃபெரிய (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + பெரிய = உஃ + பெரிய
உஃ + பெரிய = உஃபெரிய (அல்வழிப் புணர்ச்சி)
மேலை எடுத்துக்காட்டுகள் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்கே !
அப்படியானால் , மென்கணம் வந்து புணர்ந்தால் ? :-
“மெல்லெழுத் தியையி னவ்வெழுத் தாகும்” (புள்ளி மயங்கியல் 85)
மெல்லெழுத்து இயையின் – ஞ , ந் , ம் என்ற மெல்லின எழுத்துகள் வந்து சேர்ந்தால் !
அவ்வெழுத்து ஆகும் - ‘வ்’ ஆனது , ஞ் , ந் , ம் என மாறும் !
சான்றுகள் ! :-
அவ் + ஞாண் = அஞ் + ஞாண்
அஞ் + ஞாண் = அஞ்ஞாண் (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + ஞாண் = இஞ் + ஞாண்
இஞ் + ஞாண் = இஞ்ஞாண் (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + ஞாண் = உஞ் + ஞாண்
உஞ் + ஞாண் = உஞ்ஞாண் (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + நூல் = அந் + நூல்
அந் + நூல் = அந்நூல் (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + நூல் = இந் + நூல்
இந் + நூல் = இந்நூல் (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + நூல் = உந் + நூல்
உந் + நூல் = உந்நூல் (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + மணி = அம் + மணி
அம் + மணி = அம்மணி (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + மணி = இம் + மணி
இம் + மணி = இம்மணி (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + மணி = உம் + மணி
உம் + மணி = உம்மணி (அல்வழிப் புணர்ச்சி)
அவ் ,இவ் ,உவ் – மூன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு !
இவற்றை ஒருமைக்கும் எழுதலாம் , பன்மைக்கும் எழுதலாம் !
அவ் வீடு √
அவ் வீடுகள் √
இவ் வீடு √
இவ் வீடுகள் √
உவ் வீடு √
உவ் வீடுகள் √
மேல் எடுத்துக்காட்டுகளில் உஃகடிய , உஞ்ஞாண் முதலிய உகரச் சுட்டைக் கொண்ட சொற்கள் இன்று முற்றிலுமாக வழக்கொழிந்துவிட்டன !
அண்மைச் சுட்டும் (இவ்) , சேய்மைச் சுட்டும் (அவ்) மட்டுமே இன்று வழக்கில் உள்ளன !
இடைமைச் சுட்டு (உவ்) வழக்கில் இல்லை !
நல்ல வேளையாகத் தொல்காப்பியத்தில் பதிவுகள் இருந்ததால் , இந்த வழக்கொழிந்த வரலாற்றையாவது தெரிந்துகொள்ள முடிகிறது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘வ்’ ஈறு தொடர்கிறது !
‘அவ்’ என்பது வேற்றுமைப் புணர்ச்சியில் எவ்வாறு வரும் என்பதை இதற்கு முன் பார்த்தோம் !
அதனைத் தொடர்ந்து ,
“வேற்றுமை யல்வழி யாய்த மாகும்” (புள்ளி மயங்கியல் 84)
வேற்றுமை அல்வழி – அல்வழிப் புணர்ச்சியில் ‘அவ்’ முதலியன !
ஆய்தம் ஆகும் - ‘வ்’ ஆனது ஆய்தமாக மாறும் !
அஃதாவது ,
அவ் + கடிய = அஃ + கடிய
அஃ + கடிய = அஃகடிய (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + கடிய = இஃ + கடிய
இஃ + கடிய = இஃகடிய (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + கடிய = உஃ + கடிய
உஃ + கடிய = உஃகடிய (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + சிறிய = அஃ + சிறிய
அஃ + சிறிய = அஃசிறிய (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + சிறிய = இஃ + சிறிய
இஃ + சிறிய = இஃசிறிய (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + சிறிய = உஃ + சிறிய
உஃ + சிறிய = உஃசிறிய (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + தீய = அஃ + தீய
அஃ + தீய = அஃதீய (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + தீய = இஃ + தீய
இஃ + தீய = இஃதீய (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + தீய = உஃ + தீய
உஃ + தீய = உஃதீய (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + பெரிய = அஃ + பெரிய
அஃ + பெரிய = அஃபெரிய (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + பெரிய = இஃ + பெரிய
இஃ + பெரிய = இஃபெரிய (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + பெரிய = உஃ + பெரிய
உஃ + பெரிய = உஃபெரிய (அல்வழிப் புணர்ச்சி)
மேலை எடுத்துக்காட்டுகள் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்கே !
அப்படியானால் , மென்கணம் வந்து புணர்ந்தால் ? :-
“மெல்லெழுத் தியையி னவ்வெழுத் தாகும்” (புள்ளி மயங்கியல் 85)
மெல்லெழுத்து இயையின் – ஞ , ந் , ம் என்ற மெல்லின எழுத்துகள் வந்து சேர்ந்தால் !
அவ்வெழுத்து ஆகும் - ‘வ்’ ஆனது , ஞ் , ந் , ம் என மாறும் !
சான்றுகள் ! :-
அவ் + ஞாண் = அஞ் + ஞாண்
அஞ் + ஞாண் = அஞ்ஞாண் (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + ஞாண் = இஞ் + ஞாண்
இஞ் + ஞாண் = இஞ்ஞாண் (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + ஞாண் = உஞ் + ஞாண்
உஞ் + ஞாண் = உஞ்ஞாண் (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + நூல் = அந் + நூல்
அந் + நூல் = அந்நூல் (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + நூல் = இந் + நூல்
இந் + நூல் = இந்நூல் (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + நூல் = உந் + நூல்
உந் + நூல் = உந்நூல் (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + மணி = அம் + மணி
அம் + மணி = அம்மணி (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + மணி = இம் + மணி
இம் + மணி = இம்மணி (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + மணி = உம் + மணி
உம் + மணி = உம்மணி (அல்வழிப் புணர்ச்சி)
அவ் ,இவ் ,உவ் – மூன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு !
இவற்றை ஒருமைக்கும் எழுதலாம் , பன்மைக்கும் எழுதலாம் !
அவ் வீடு √
அவ் வீடுகள் √
இவ் வீடு √
இவ் வீடுகள் √
உவ் வீடு √
உவ் வீடுகள் √
மேல் எடுத்துக்காட்டுகளில் உஃகடிய , உஞ்ஞாண் முதலிய உகரச் சுட்டைக் கொண்ட சொற்கள் இன்று முற்றிலுமாக வழக்கொழிந்துவிட்டன !
அண்மைச் சுட்டும் (இவ்) , சேய்மைச் சுட்டும் (அவ்) மட்டுமே இன்று வழக்கில் உள்ளன !
இடைமைச் சுட்டு (உவ்) வழக்கில் இல்லை !
நல்ல வேளையாகத் தொல்காப்பியத்தில் பதிவுகள் இருந்ததால் , இந்த வழக்கொழிந்த வரலாற்றையாவது தெரிந்துகொள்ள முடிகிறது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (102)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘வ்’ ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்ததாக ,
“ஏனவை புணரி னியல்பென மொழிப” (புள்ளி மயங்கியல் 86)
என்றார் தொல்காப்பியர் !
ஏனவை – வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களையும் , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களையும் நீக்கி , ஏனைய இடையெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும் உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும் !
புணரின் – வந்து சேர்ந்தால் !
இயல்பு என மொழிப - ‘அவ்’ , ‘இவ்’ , ‘உவ்’களில் , ‘வ்’வில் திரிபு இலாது , இயல்பாகச் சேரும் என்று கூறுவார்கள் !
அவ் + யாழ் = அவ் யாழ் (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + யாழ் = இவ் யாழ் (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + யாழ் = உவ் யாழ் (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + வட்டு = அவ் வட்டு (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + வட்டு = இவ் வட்டு (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + வட்டு = உவ் வட்டு (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + வடை = அவ் வடை (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + வடை = இவ் வடை (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + வடை = உவ் வடை (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + ஆடை = அவ் வாடை (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + ஆடை = இவ் வாடை (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + ஆடை = உவ் வாடை (அல்வழிப் புணர்ச்சி)
மேலைக் காட்டுகளில் , ‘அவ்’ , ‘இவ்’ , ‘உவ்’ ஆகியவற்றிலுள்ள ‘வ்’வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதைக் காணலாம் !
‘வ்’ ஈற்றின் இறுதிச் சூத்திரம் ! :-
“ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே” (புள்ளி மயங்கியல் 87)
ஏனை வகரம் – மொழி மரபில் (நூற்பா 48) , ‘வ்’ ஈற்றுச் சொற்கள் மொத்தம் நான்கு என்றார் தொல்காப்பியர் ! அவற்றில் , அவ் , இவ் , உவ் என்ற மூன்றையும் தவிர்த்துத் ‘தெவ்’ என்பதிலுள்ள ‘வ்’ !
தொழிற் பெயர் இயல்பு – ‘ஞ்’ ஈற்றுத் தொழிற் பெயர் , வன்கணம் வரும்போது , உகரச் சாரியையும் வல்லெழுத்துச் சந்தியும் பெறும் எனவும் , ஏனைய இடைக்கணம் , உயிர்க்கணம் , மென்கணம் வந்து புணரும்போது உகரச் சாரியை மட்டும் சேரும் என்றும் புள்ளி மயங்கியல் நூற்பா 1 , 2 ஆகியவற்றில் கூறியபடி!
தெவ் + கடிது = தெவ்வுக் கடிது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + சிறிது = தெவ்வுச் சிறிது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + தீது = தெவ்வுத் தீது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + பெரிது = தெவ்வுப் பெரிது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + ஞான்றது = தெவ்வு ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + நீண்டது = தெவ்வு நீண்டது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + மாண்டது = தெவ்வு மாண்டது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + வலிது = தெவ்வு வலிது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + கடுமை = தெவ்வுக் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + சிறுமை = தெவ்வுச் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தெவ் + தீமை = தெவ்வுத் தீமை (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தெவ் + பெருமை = தெவ்வுப் பெருமை (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தெவ் + ஞாற்சி = தெவ்வு ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + நீட்சி = தெவ்வு நீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தெவ் + மாட்சி = தெவ்வு மட்சி (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தெவ் + வலிமை = தெவ்வு வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தொல்காப்பியர் பாட்டுக்கு ஒற்றை வரியில் ஒரு நூற்பாவைச் சொல்லிவிட்டு ஓலையை மூடிவிட்டார் !
அதனை விளங்கிக் கொள்ள நாம் இளம்பூரணர் உதவியோடு , எத்தனை முன் நூற்பாக்களைத் தழுவிப் பிடிக்க வேண்டியுள்ளது பார்த்தீர்களா?
இதுதான் ’சூத்திரம்’ என்பது !
சுருக்கமாகக் கூறுதல் !
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘வ்’ ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்ததாக ,
“ஏனவை புணரி னியல்பென மொழிப” (புள்ளி மயங்கியல் 86)
என்றார் தொல்காப்பியர் !
ஏனவை – வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களையும் , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களையும் நீக்கி , ஏனைய இடையெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும் உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களும் !
புணரின் – வந்து சேர்ந்தால் !
இயல்பு என மொழிப - ‘அவ்’ , ‘இவ்’ , ‘உவ்’களில் , ‘வ்’வில் திரிபு இலாது , இயல்பாகச் சேரும் என்று கூறுவார்கள் !
அவ் + யாழ் = அவ் யாழ் (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + யாழ் = இவ் யாழ் (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + யாழ் = உவ் யாழ் (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + வட்டு = அவ் வட்டு (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + வட்டு = இவ் வட்டு (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + வட்டு = உவ் வட்டு (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + வடை = அவ் வடை (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + வடை = இவ் வடை (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + வடை = உவ் வடை (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + ஆடை = அவ் வாடை (அல்வழிப் புணர்ச்சி)
இவ் + ஆடை = இவ் வாடை (அல்வழிப் புணர்ச்சி)
உவ் + ஆடை = உவ் வாடை (அல்வழிப் புணர்ச்சி)
மேலைக் காட்டுகளில் , ‘அவ்’ , ‘இவ்’ , ‘உவ்’ ஆகியவற்றிலுள்ள ‘வ்’வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதைக் காணலாம் !
‘வ்’ ஈற்றின் இறுதிச் சூத்திரம் ! :-
“ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே” (புள்ளி மயங்கியல் 87)
ஏனை வகரம் – மொழி மரபில் (நூற்பா 48) , ‘வ்’ ஈற்றுச் சொற்கள் மொத்தம் நான்கு என்றார் தொல்காப்பியர் ! அவற்றில் , அவ் , இவ் , உவ் என்ற மூன்றையும் தவிர்த்துத் ‘தெவ்’ என்பதிலுள்ள ‘வ்’ !
தொழிற் பெயர் இயல்பு – ‘ஞ்’ ஈற்றுத் தொழிற் பெயர் , வன்கணம் வரும்போது , உகரச் சாரியையும் வல்லெழுத்துச் சந்தியும் பெறும் எனவும் , ஏனைய இடைக்கணம் , உயிர்க்கணம் , மென்கணம் வந்து புணரும்போது உகரச் சாரியை மட்டும் சேரும் என்றும் புள்ளி மயங்கியல் நூற்பா 1 , 2 ஆகியவற்றில் கூறியபடி!
தெவ் + கடிது = தெவ்வுக் கடிது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + சிறிது = தெவ்வுச் சிறிது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + தீது = தெவ்வுத் தீது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + பெரிது = தெவ்வுப் பெரிது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + ஞான்றது = தெவ்வு ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + நீண்டது = தெவ்வு நீண்டது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + மாண்டது = தெவ்வு மாண்டது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + வலிது = தெவ்வு வலிது (அல்வழிப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + கடுமை = தெவ்வுக் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + சிறுமை = தெவ்வுச் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தெவ் + தீமை = தெவ்வுத் தீமை (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தெவ் + பெருமை = தெவ்வுப் பெருமை (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தெவ் + ஞாற்சி = தெவ்வு ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி ; உ - சாரியை)
தெவ் + நீட்சி = தெவ்வு நீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தெவ் + மாட்சி = தெவ்வு மட்சி (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தெவ் + வலிமை = தெவ்வு வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி; உ - சாரியை)
தொல்காப்பியர் பாட்டுக்கு ஒற்றை வரியில் ஒரு நூற்பாவைச் சொல்லிவிட்டு ஓலையை மூடிவிட்டார் !
அதனை விளங்கிக் கொள்ள நாம் இளம்பூரணர் உதவியோடு , எத்தனை முன் நூற்பாக்களைத் தழுவிப் பிடிக்க வேண்டியுள்ளது பார்த்தீர்களா?
இதுதான் ’சூத்திரம்’ என்பது !
சுருக்கமாகக் கூறுதல் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (103)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியர் புள்ளி மயங்கியலில் கூறிய சொற் புணர்ச்சிகளை வரிசையாகப் பார்த்து வருகிறோம் !
கடைசியாக ‘வ்’ ஈற்றுச் சொற்களை முடித்தோம் !
இப்போது , ‘ழ்’ ஈற்றுச் சொற்களைத் தொடங்குகிறார் தொல்காப்பியர் ! :-
“ழகார விறுதி ரகார வியற்றே” (புள்ளி மயங்கியல் 88)
ழகார விறுதி - ‘ழ்’ ஈற்றுச் சொற்கள் !
ரகார இயற்றே – புள்ளி மயங்கியல் 62 மற்றும் 67இல் ‘ர்’ ஈற்றுச் சொற்களுடன் வல்லெழுத்துச் சொற்கள் வந்து புணர்ந்தால் , வல்லெழுத்துச் சந்தி தோன்றும் எனக் கூறிய அதே பாங்கின்படி !
இதன்படி , வருமாறு புணர்ச்சிகள் அமையும் !:-
பூழ் + கால் = பூழ்க் கால் (வேற்றுமைப் புணர்ச்சி ; க் - சந்தி)
பூழ் + சிறகு = பூழ்ச் சிறிது (வேற்றுமைப் புணர்ச்சி ; க் - சந்தி)
பூழ் + தலை = பூழ்த் தலை (வேற்றுமைப் புணர்ச்சி ; க் - சந்தி)
பூழ் + புறம் = பூழ்ப் புறம் (வேற்றுமைப் புணர்ச்சி ; க் - சந்தி)
பூழ் – ஒரு பறவையின் பெயர் !
இளம்பூரணர் குறித்த ‘பூழ்’ பார்க்க ஆசையா ?
[You must be registered and logged in to see this link.]
(Courtesy – en.wikipedia.org)
இதுதான் பூழ்ப் பறவை !
இது காடை வகை எனப்படுகிறது !
Quail – இதன் ஆங்கிலப் பெயர் !
இதன் விலங்கியல் பெயர் – Coturnix ypsilophora
இது ‘Phasianidae’ குடும்பத்தைச் சேர்ந்தது என்பர்.
காடையைச் சமைத்து உண்பதுபோல இதனையும் சமைத்து உண்ணலாம் !
தொல்காப்பியம் நமக்கு விருந்துதான் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியர் புள்ளி மயங்கியலில் கூறிய சொற் புணர்ச்சிகளை வரிசையாகப் பார்த்து வருகிறோம் !
கடைசியாக ‘வ்’ ஈற்றுச் சொற்களை முடித்தோம் !
இப்போது , ‘ழ்’ ஈற்றுச் சொற்களைத் தொடங்குகிறார் தொல்காப்பியர் ! :-
“ழகார விறுதி ரகார வியற்றே” (புள்ளி மயங்கியல் 88)
ழகார விறுதி - ‘ழ்’ ஈற்றுச் சொற்கள் !
ரகார இயற்றே – புள்ளி மயங்கியல் 62 மற்றும் 67இல் ‘ர்’ ஈற்றுச் சொற்களுடன் வல்லெழுத்துச் சொற்கள் வந்து புணர்ந்தால் , வல்லெழுத்துச் சந்தி தோன்றும் எனக் கூறிய அதே பாங்கின்படி !
இதன்படி , வருமாறு புணர்ச்சிகள் அமையும் !:-
பூழ் + கால் = பூழ்க் கால் (வேற்றுமைப் புணர்ச்சி ; க் - சந்தி)
பூழ் + சிறகு = பூழ்ச் சிறிது (வேற்றுமைப் புணர்ச்சி ; க் - சந்தி)
பூழ் + தலை = பூழ்த் தலை (வேற்றுமைப் புணர்ச்சி ; க் - சந்தி)
பூழ் + புறம் = பூழ்ப் புறம் (வேற்றுமைப் புணர்ச்சி ; க் - சந்தி)
பூழ் – ஒரு பறவையின் பெயர் !
இளம்பூரணர் குறித்த ‘பூழ்’ பார்க்க ஆசையா ?
[You must be registered and logged in to see this link.]
(Courtesy – en.wikipedia.org)
இதுதான் பூழ்ப் பறவை !
இது காடை வகை எனப்படுகிறது !
Quail – இதன் ஆங்கிலப் பெயர் !
இதன் விலங்கியல் பெயர் – Coturnix ypsilophora
இது ‘Phasianidae’ குடும்பத்தைச் சேர்ந்தது என்பர்.
காடையைச் சமைத்து உண்பதுபோல இதனையும் சமைத்து உண்ணலாம் !
தொல்காப்பியம் நமக்கு விருந்துதான் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (104)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
புள்ளி மயங்கியலில் , ‘ழ்’ ஈற்றுச் சொற் புணர்ச்சிகளில் தொல்காப்பியரது இரண்டாம் நூற்பா ! :-
“தாழென் கிளவி கோலொடு புணரின்
அக்கிடை வருத லுரித்து மாகும்” (புள்ளி மயங்கியல் 89)
அஃதாவது , வேற்றுமைப் புணர்ச்சியில் ,
தாழ் + கோல் = தாழ் + அக்கு + கோல் (அக்கு - சாரியை)
தாழ் + அக்கு + கோல் = தாழக் கோல் (க் - சந்தி)
என வரும் !
மேல் நூற்பாவில் வந்த உம்மை , எதிர்மறை உம்மை !
அதனால் , ‘அக்கு’ வராமலும் , இதே வேற்றுமைப் புணர்ச்சியில் ,புணர்ச்சி ஏற்படும் என்பதே தொல்காப்பியம் ! :-
தாழ் + கோல் = தாழ்க் கோல் √ ( ‘அக்கு’ வரவில்லை)
= தாழக் கோல் √( ‘அக்கு’ வந்து , திரிந்துள்ளது)
தாழ் – பூட்டு (Lock)
தாழக் கோல் – சாவி (key)
‘தாழக் கோல்’ , வழக்கில் ‘தாக் கோல்’ என்று ஆங்காங்கே வழங்குகிறது !
பூட்டில் ,மறு நுனியைக் குழிக்குள் இறக்கிப் பிணைப்பதால் (பூட்டுவதால்) ,அது பூட்டு !
அதேபோல , பூட்டில் , மறு நுனியைக் குழிக்குள் இறக்கிப் (தாழ்த்து) பிணைப்பதால் , அது தாழ் !
‘தாழ்’ – பூட்டைக் குறித்தது , பழைய வழக்கு ! இதனை இழக்கக் கூடாது !
‘தாழ்’ – கணைய மரத்தைக் குறித்தது , அடுத்த கால வழக்கு !
கணைய மரம் – அடைத்த கதவில் போடும் குறுக்குக் கட்டை (Latch) .
இப்போது சுவையான ஒரு வினா !
தொல்காப்பியத்தில் ‘தமிழ்’ என்ற சொல் வந்துள்ளதா ?
வந்துள்ளது !
‘ழ்’ ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்ததாக நாம் காணவிருக்கும் நூற்பாவில்தான் ‘தமிழ்’ வருகிறது !
“தமிழென் கிளவியு மதனோ ரற்றே” (புள்ளி மயங்கியல் 90)
அதனோர் அற்றே - ‘தாழக் கோல்’ போலத் ‘தமிழ்’ எனும் சொல்லும் , வேற்றுமைப் புணர்ச்சியில் , புணரும் !
தமிழ் + கூத்து = தமிழக் கூத்து √ ( ‘அக்கு’ வந்து திரிந்துள்ளது)
தமிழ் + கூத்து = தமிழ்க் கூத்து √ ( ‘அக்கு’ வரவில்லை)
தமிழ் + சேரி = தமிழச் சேரி √ ( ‘அக்கு’ வந்து திரிந்துள்ளது)
தமிழ் + சேரி = தமிழ்ச் சேரி √ ( ‘அக்கு’ வரவில்லை)
தமிழ் + தோட்டம் = தமிழத் தோட்டம் √ ( ‘அக்கு’ வந்து திரிந்துள்ளது)
தமிழ் + தோட்டம் = தமிழ்த் தோட்டம் √ ( ‘அக்கு’ வரவில்லை)
தமிழ் + பள்ளி = தமிழப் பள்ளி √ ( ‘அக்கு’ வந்து திரிந்துள்ளது)
தமிழ் + பள்ளி = தமிழ்ப் பள்ளி √ ( ‘அக்கு’ வரவில்லை)
மேல் புணர்ச்சிகளில் ஆழமான ஒரு மொழி நுட்பம் உள்ளது !
‘தாழ்’ என்பதுடன் அகரச் சாரியை சேர்ந்து , ‘தாழக் கோல்’ என்று வந்தது என விதி வகுத்திருக்கலாம் ! ‘தமிழச் சேரி’யில் , ‘அச்சு’ச் சாரியை வந்தது எனக் கூறியிருக்கலாம் ! ‘தமிழப் பள்ளி’யின் நடுவே வந்தது ‘அப்பு’ச் சாரியை என்றும் ஓதியிருக்கலாம் !
ஆனால் ஏன் கூறவில்லை ?
ஏனெனில் , ‘தாழக் கோல்’ , ‘தமிழக் கூத்து ’ , ‘தமிழச் சேரி’ , ‘தமிழத் தோட்டம்’ , ‘தமிழப் பள்ளி’ என்பவற்றில் , ‘அக்’ , ‘அச்’,’அத்’ , ‘அப்’ ஆகியன இடையே வந்துள ! இப்படி ஒவ்வொரு புணர்ச்சிக்கும் தனித் தனிச் சாரியை கூறுவதானால் , ‘அக்கு’ச் சாரியை , ‘அச்சு’ச் சாரியை , ‘அத்து’ச் சாரியை , ‘அப்பு’ச் சாரியை என்று பல சாரியைகளைக் கூறவேண்டிவரும் !
பழந்தமிழ் இலக்கணத்தின் கோட்பாடுகளில் ஒன்று – பொதுமைப் படுத்தல் (Generalisation) !
‘அக்கு’ என்று ஒரே ஒரு சாரியையைக் கூறி , இதன் திரிபுகள் பலவாறாகும் என்று பொதுமைப் படுத்திப் , பலவாறான புணர்ச்சிகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் !
‘அக்’கைத் தவிர்த்து , வெறும் அகரச் சாரியையை மட்டும் கூறி , ‘தமிழ் + அ + பள்ளி = தமிழப் பள்ளி’ எனக் கூறுவதில் என்ன சிக்கல் ?
‘தமிழ் + பள்ளி’ என்றவுடன் , ‘தமிழ்ப் பள்ளி’ என்ற புணர்ச்சிக்கே இடம் வரும் ! ‘அ’ நேரடியாக நுழைய வாய்ப்பே இல்லை ! இதற்கான விதியை முன் கட்டுரையில் (புள்ளி மயங்கியல் 88) பார்த்தோம் ! எனவேதான் , ‘அக்கு’ வந்து , அதன் ‘க்கு’க் கெட்டு , ‘அ’ மிஞ்சித் , ‘தமிழ’ என்றாகிப் , பின் ‘ப்’ சந்தி சேர்ந்து , ‘தமிழப் பள்ளி’ ஆகிறது என்ற விளக்கத்தைத் தரவேண்டியுள்ளது !
தமிழர்தம் நீண்ட சொல் வரலாற்றுக்கு இயைய இச் செயல் முறை (Process) அமைந்துள்ளது என்பதே வியப்பான மொழி இரகசியம் (Secret of Language) !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
புள்ளி மயங்கியலில் , ‘ழ்’ ஈற்றுச் சொற் புணர்ச்சிகளில் தொல்காப்பியரது இரண்டாம் நூற்பா ! :-
“தாழென் கிளவி கோலொடு புணரின்
அக்கிடை வருத லுரித்து மாகும்” (புள்ளி மயங்கியல் 89)
அஃதாவது , வேற்றுமைப் புணர்ச்சியில் ,
தாழ் + கோல் = தாழ் + அக்கு + கோல் (அக்கு - சாரியை)
தாழ் + அக்கு + கோல் = தாழக் கோல் (க் - சந்தி)
என வரும் !
மேல் நூற்பாவில் வந்த உம்மை , எதிர்மறை உம்மை !
அதனால் , ‘அக்கு’ வராமலும் , இதே வேற்றுமைப் புணர்ச்சியில் ,புணர்ச்சி ஏற்படும் என்பதே தொல்காப்பியம் ! :-
தாழ் + கோல் = தாழ்க் கோல் √ ( ‘அக்கு’ வரவில்லை)
= தாழக் கோல் √( ‘அக்கு’ வந்து , திரிந்துள்ளது)
தாழ் – பூட்டு (Lock)
தாழக் கோல் – சாவி (key)
‘தாழக் கோல்’ , வழக்கில் ‘தாக் கோல்’ என்று ஆங்காங்கே வழங்குகிறது !
பூட்டில் ,மறு நுனியைக் குழிக்குள் இறக்கிப் பிணைப்பதால் (பூட்டுவதால்) ,அது பூட்டு !
அதேபோல , பூட்டில் , மறு நுனியைக் குழிக்குள் இறக்கிப் (தாழ்த்து) பிணைப்பதால் , அது தாழ் !
‘தாழ்’ – பூட்டைக் குறித்தது , பழைய வழக்கு ! இதனை இழக்கக் கூடாது !
‘தாழ்’ – கணைய மரத்தைக் குறித்தது , அடுத்த கால வழக்கு !
கணைய மரம் – அடைத்த கதவில் போடும் குறுக்குக் கட்டை (Latch) .
இப்போது சுவையான ஒரு வினா !
தொல்காப்பியத்தில் ‘தமிழ்’ என்ற சொல் வந்துள்ளதா ?
வந்துள்ளது !
‘ழ்’ ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்ததாக நாம் காணவிருக்கும் நூற்பாவில்தான் ‘தமிழ்’ வருகிறது !
“தமிழென் கிளவியு மதனோ ரற்றே” (புள்ளி மயங்கியல் 90)
அதனோர் அற்றே - ‘தாழக் கோல்’ போலத் ‘தமிழ்’ எனும் சொல்லும் , வேற்றுமைப் புணர்ச்சியில் , புணரும் !
தமிழ் + கூத்து = தமிழக் கூத்து √ ( ‘அக்கு’ வந்து திரிந்துள்ளது)
தமிழ் + கூத்து = தமிழ்க் கூத்து √ ( ‘அக்கு’ வரவில்லை)
தமிழ் + சேரி = தமிழச் சேரி √ ( ‘அக்கு’ வந்து திரிந்துள்ளது)
தமிழ் + சேரி = தமிழ்ச் சேரி √ ( ‘அக்கு’ வரவில்லை)
தமிழ் + தோட்டம் = தமிழத் தோட்டம் √ ( ‘அக்கு’ வந்து திரிந்துள்ளது)
தமிழ் + தோட்டம் = தமிழ்த் தோட்டம் √ ( ‘அக்கு’ வரவில்லை)
தமிழ் + பள்ளி = தமிழப் பள்ளி √ ( ‘அக்கு’ வந்து திரிந்துள்ளது)
தமிழ் + பள்ளி = தமிழ்ப் பள்ளி √ ( ‘அக்கு’ வரவில்லை)
மேல் புணர்ச்சிகளில் ஆழமான ஒரு மொழி நுட்பம் உள்ளது !
‘தாழ்’ என்பதுடன் அகரச் சாரியை சேர்ந்து , ‘தாழக் கோல்’ என்று வந்தது என விதி வகுத்திருக்கலாம் ! ‘தமிழச் சேரி’யில் , ‘அச்சு’ச் சாரியை வந்தது எனக் கூறியிருக்கலாம் ! ‘தமிழப் பள்ளி’யின் நடுவே வந்தது ‘அப்பு’ச் சாரியை என்றும் ஓதியிருக்கலாம் !
ஆனால் ஏன் கூறவில்லை ?
ஏனெனில் , ‘தாழக் கோல்’ , ‘தமிழக் கூத்து ’ , ‘தமிழச் சேரி’ , ‘தமிழத் தோட்டம்’ , ‘தமிழப் பள்ளி’ என்பவற்றில் , ‘அக்’ , ‘அச்’,’அத்’ , ‘அப்’ ஆகியன இடையே வந்துள ! இப்படி ஒவ்வொரு புணர்ச்சிக்கும் தனித் தனிச் சாரியை கூறுவதானால் , ‘அக்கு’ச் சாரியை , ‘அச்சு’ச் சாரியை , ‘அத்து’ச் சாரியை , ‘அப்பு’ச் சாரியை என்று பல சாரியைகளைக் கூறவேண்டிவரும் !
பழந்தமிழ் இலக்கணத்தின் கோட்பாடுகளில் ஒன்று – பொதுமைப் படுத்தல் (Generalisation) !
‘அக்கு’ என்று ஒரே ஒரு சாரியையைக் கூறி , இதன் திரிபுகள் பலவாறாகும் என்று பொதுமைப் படுத்திப் , பலவாறான புணர்ச்சிகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் !
‘அக்’கைத் தவிர்த்து , வெறும் அகரச் சாரியையை மட்டும் கூறி , ‘தமிழ் + அ + பள்ளி = தமிழப் பள்ளி’ எனக் கூறுவதில் என்ன சிக்கல் ?
‘தமிழ் + பள்ளி’ என்றவுடன் , ‘தமிழ்ப் பள்ளி’ என்ற புணர்ச்சிக்கே இடம் வரும் ! ‘அ’ நேரடியாக நுழைய வாய்ப்பே இல்லை ! இதற்கான விதியை முன் கட்டுரையில் (புள்ளி மயங்கியல் 88) பார்த்தோம் ! எனவேதான் , ‘அக்கு’ வந்து , அதன் ‘க்கு’க் கெட்டு , ‘அ’ மிஞ்சித் , ‘தமிழ’ என்றாகிப் , பின் ‘ப்’ சந்தி சேர்ந்து , ‘தமிழப் பள்ளி’ ஆகிறது என்ற விளக்கத்தைத் தரவேண்டியுள்ளது !
தமிழர்தம் நீண்ட சொல் வரலாற்றுக்கு இயைய இச் செயல் முறை (Process) அமைந்துள்ளது என்பதே வியப்பான மொழி இரகசியம் (Secret of Language) !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (105)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ழ்’ – ஈற்றில் நாம் இப்போது காணப் போவது , ‘குமிழ்’ !
குமிழைப் பற்றிப் பிறகு பார்ப்போம் !
முதலில் நூற்பா !:-
“குமிழென் கிளவி மரப்பெய ராயின்
பீரென் கிளவியோ டோரியற் றாகும்” (புள்ளி மயங்கியல் 91)
‘குமிழ்’ என்பது மரத்தைக் குறிக்கும்போது , ‘பீர்’ என்பதோடு ஒத்துப் புணரும் !
‘பீர்’ என்பது எப்படிப் புணரும்?
‘அம்’ சாரியையையும் மெல்லெழுத்துச் சந்தியையும் பெற்றுப் புணரும் !
இதனைப் புள்ளி மயங்கியல் நூற்பா 70இல் கூறியுள்ளார் !
அதன்படிக் ‘குமிழ்’ வருமாறு புணரும் ! :-
குமிழ் + கோடு = குமிழங் கோடு (அம் – சாரியை; ங் – மெல்லெழுத்துச் சந்தி)
குமிழ் + செதிள் = குமிழஞ் செதிள் (அம் – சாரியை; ஞ் – மெல்லெழுத்துச் சந்தி)
குமிழ் + தோல் = குமிழந் தோல் (அம் – சாரியை; ந் – மெல்லெழுத்துச் சந்தி)
குமிழ் + பூ = குமிழம் பூ (அம் – சாரியை; ம் – மெல்லெழுத்துச் சந்தி)
இவை நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
இளம்பூரணர் , “ ‘குமிழ்’ என்பதற்குத்தான் தொல்காப்பியர் விதி கூறினார் என்பதால், அத்தோடு விட்டுவிடாதீர்கள் ! ‘மகிழ்’ போன்ற ‘ழ்’ ஈற்று மரங்களுக்கும் இதே விதியைக் கொள்க ! ” என்ற கருத்துப்பட உரை எழுதியுள்ளார் !
இதன்படி –
மகிழ் + கோடு = மகிழங் கோடு (அம் – சாரியை; ங் – மெல்லெழுத்துச் சந்தி)
மகிழ் + தோல் = மகிழந் தோல் (அம் – சாரியை; ந் – மெல்லெழுத்துச் சந்தி)
மகிழ் + செதிள் = மகிழஞ் செதிள் (அம் – சாரியை; ஞ் – மெல்லெழுத்துச் சந்தி)
மகிழ் + பூ = மகிழம் பூ (அம் – சாரியை; ம் – மெல்லெழுத்துச் சந்தி)
இந் நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
கோடு – கிளை (branch)
செதிள் – பட்டை (bark)
தொல்காப்பியர் கூறிய ‘குமிழ்’ மரம் எப்படி இருக்கும் ?
இதோ இப்படி ! –
[You must be registered and logged in to see this link.]
(Courtesy-- [You must be registered and logged in to see this link.]
கீழே குமிழ் மரத்தின் இலையைக் காணலாம் ! :-
[You must be registered and logged in to see this link.]
(Courtesy- m.inmagine.com)
கீழுள்ளவை குமிழம் பழங்கள் !:-
[You must be registered and logged in to see this link.]
(Courtesy- flickrhivemind.net)
‘குமிழ்’ என்பது வேறு ஒன்றுமில்லை ! வெண் தேக்கு (White teak)மரம்தான் !
குமிழின் தாவரவியல் பெயர் - Gmelinaarborea
தமிழில் கூம்பல் , பெருங்குமிழ் , குமுதை என்று அறியப்படுவன இந்த வெண் தேக்குதான் !
இதன் தாயகம் இந்தியா , சீனா , மலேசியா , பிலிப்பைன்ஸ் என்று கூறுகிறார்கள்!
முதலில் தமிழகத்திலிருந்துதான் இது பரவியதா என்று மேலாய்வு செய்ய வேண்டும் !
குமிழம் பூ குட்ட நோயைத் (Leprosy) தீர்க்கவல்லது என்பர் ! பட்டையும் வேரும் மூலத்திற்கு (Piles)மருந்து என்றும் கூறுவர் !
இளம்பூரணர் சொன்ன ‘மகிழ்’ ?
பார்த்து மகிழ இதோ ‘மகிழ்’ மரம்!
[You must be registered and logged in to see this link.]
(Courtesy- Shivatemples.com)
கீழே இருப்பது மகிழம் பூ ! :-
[You must be registered and logged in to see this link.]
(Courtesy- mooligaikal.blogspot.com)
‘மகிழ்’தான் , ‘வகுளம்’ எனப்படுகிறது !
மகிழ் மரத்தின் தாவரவியல் பெயர் – Mimusops .
மகிழம் பூவிற்குக் காமம் பெருக்கும் தன்மை உள்ளது என்கின்றனர் ! மகிழம் பட்டைக்குக் கருப்பைப் பலவீனத்தைப் (Uterus weakness)போக்கும் குணம் உண்டு என்பர் !
ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும் ! தமிழில் எந்த ஆராய்ச்சியைச் செய்தாலும் அது சித்த மருத்துவத்தில் போய் நிற்கிறது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ழ்’ – ஈற்றில் நாம் இப்போது காணப் போவது , ‘குமிழ்’ !
குமிழைப் பற்றிப் பிறகு பார்ப்போம் !
முதலில் நூற்பா !:-
“குமிழென் கிளவி மரப்பெய ராயின்
பீரென் கிளவியோ டோரியற் றாகும்” (புள்ளி மயங்கியல் 91)
‘குமிழ்’ என்பது மரத்தைக் குறிக்கும்போது , ‘பீர்’ என்பதோடு ஒத்துப் புணரும் !
‘பீர்’ என்பது எப்படிப் புணரும்?
‘அம்’ சாரியையையும் மெல்லெழுத்துச் சந்தியையும் பெற்றுப் புணரும் !
இதனைப் புள்ளி மயங்கியல் நூற்பா 70இல் கூறியுள்ளார் !
அதன்படிக் ‘குமிழ்’ வருமாறு புணரும் ! :-
குமிழ் + கோடு = குமிழங் கோடு (அம் – சாரியை; ங் – மெல்லெழுத்துச் சந்தி)
குமிழ் + செதிள் = குமிழஞ் செதிள் (அம் – சாரியை; ஞ் – மெல்லெழுத்துச் சந்தி)
குமிழ் + தோல் = குமிழந் தோல் (அம் – சாரியை; ந் – மெல்லெழுத்துச் சந்தி)
குமிழ் + பூ = குமிழம் பூ (அம் – சாரியை; ம் – மெல்லெழுத்துச் சந்தி)
இவை நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
இளம்பூரணர் , “ ‘குமிழ்’ என்பதற்குத்தான் தொல்காப்பியர் விதி கூறினார் என்பதால், அத்தோடு விட்டுவிடாதீர்கள் ! ‘மகிழ்’ போன்ற ‘ழ்’ ஈற்று மரங்களுக்கும் இதே விதியைக் கொள்க ! ” என்ற கருத்துப்பட உரை எழுதியுள்ளார் !
இதன்படி –
மகிழ் + கோடு = மகிழங் கோடு (அம் – சாரியை; ங் – மெல்லெழுத்துச் சந்தி)
மகிழ் + தோல் = மகிழந் தோல் (அம் – சாரியை; ந் – மெல்லெழுத்துச் சந்தி)
மகிழ் + செதிள் = மகிழஞ் செதிள் (அம் – சாரியை; ஞ் – மெல்லெழுத்துச் சந்தி)
மகிழ் + பூ = மகிழம் பூ (அம் – சாரியை; ம் – மெல்லெழுத்துச் சந்தி)
இந் நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
கோடு – கிளை (branch)
செதிள் – பட்டை (bark)
தொல்காப்பியர் கூறிய ‘குமிழ்’ மரம் எப்படி இருக்கும் ?
இதோ இப்படி ! –
[You must be registered and logged in to see this link.]
(Courtesy-- [You must be registered and logged in to see this link.]
கீழே குமிழ் மரத்தின் இலையைக் காணலாம் ! :-
[You must be registered and logged in to see this link.]
(Courtesy- m.inmagine.com)
கீழுள்ளவை குமிழம் பழங்கள் !:-
[You must be registered and logged in to see this link.]
(Courtesy- flickrhivemind.net)
‘குமிழ்’ என்பது வேறு ஒன்றுமில்லை ! வெண் தேக்கு (White teak)மரம்தான் !
குமிழின் தாவரவியல் பெயர் - Gmelinaarborea
தமிழில் கூம்பல் , பெருங்குமிழ் , குமுதை என்று அறியப்படுவன இந்த வெண் தேக்குதான் !
இதன் தாயகம் இந்தியா , சீனா , மலேசியா , பிலிப்பைன்ஸ் என்று கூறுகிறார்கள்!
முதலில் தமிழகத்திலிருந்துதான் இது பரவியதா என்று மேலாய்வு செய்ய வேண்டும் !
குமிழம் பூ குட்ட நோயைத் (Leprosy) தீர்க்கவல்லது என்பர் ! பட்டையும் வேரும் மூலத்திற்கு (Piles)மருந்து என்றும் கூறுவர் !
இளம்பூரணர் சொன்ன ‘மகிழ்’ ?
பார்த்து மகிழ இதோ ‘மகிழ்’ மரம்!
[You must be registered and logged in to see this link.]
(Courtesy- Shivatemples.com)
கீழே இருப்பது மகிழம் பூ ! :-
[You must be registered and logged in to see this link.]
(Courtesy- mooligaikal.blogspot.com)
‘மகிழ்’தான் , ‘வகுளம்’ எனப்படுகிறது !
மகிழ் மரத்தின் தாவரவியல் பெயர் – Mimusops .
மகிழம் பூவிற்குக் காமம் பெருக்கும் தன்மை உள்ளது என்கின்றனர் ! மகிழம் பட்டைக்குக் கருப்பைப் பலவீனத்தைப் (Uterus weakness)போக்கும் குணம் உண்டு என்பர் !
ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும் ! தமிழில் எந்த ஆராய்ச்சியைச் செய்தாலும் அது சித்த மருத்துவத்தில் போய் நிற்கிறது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தமிழின் சிறப்பு தொல்காப்பியம். இப்போது ஈகரையின் சிறப்பும் அதுவே.
ஈகரையில் ஒரு மையில் கல்லான பதிவு இது. தொடர வாழ்த்துகள் முனைவர் எஸ். செளந்திர பாண்டியன் அவர்களே.
ஈகரையில் ஒரு மையில் கல்லான பதிவு இது. தொடர வாழ்த்துகள் முனைவர் எஸ். செளந்திர பாண்டியன் அவர்களே.
தொடத் தொடத் தொல்காப்பியம் (106)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ழ்’ ஈற்றில் அடுத்தது , ‘பாழ்’ !
பாழாகவிடாமல் இதனைப் பார்ப்போம் !
“பாழென் கிளவி மெல்லெழுத் துறழ்வே” (புள்ளி மயங்கியல் 92)
அஃதாவது , ‘பாழ்’ எனும் சொல்லுடன் , வேற்றுமைப் புணர்ச்சியில் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது , வல்லெழுத்துச் சந்தியும் வரலாம், மெல்லெழுத்துச் சந்தியும் வரலாம் ! :-
பாழ் + கிணறு = பாழ்க் கிணறு √ (வல்லெழுத்துச் சந்தி)
பாழ் + கிணறு = பாழ்ங் கிணறு √ (மெல்லெழுத்துச் சந்தி)
பாழ் + சேரி = பாழ்ச் சேரி √ (வல்லெழுத்துச் சந்தி)
பாழ் + சேரி = பாழ்ஞ் சேரி √ (மெல்லெழுத்துச் சந்தி)
பாழ் + தோட்டம் = பாழ்த் தோட்டம் √ (வல்லெழுத்துச் சந்தி)
பாழ் + தோட்டம் = பாழ்ந் தோட்டம் √ (மெல்லெழுத்துச் சந்தி)
பாழ் + பாடி = பாழ்ப் படி √ (வல்லெழுத்துச் சந்தி)
பாழ் + பாடி = பாழ்ம் பாடி √ (மெல்லெழுத்துச் சந்தி)
மேலைச் சொற்கள் – பாழ்பட்ட கிணறு, பாழ்பட்ட சேரி,பாழ்பட்ட தோட்டம் ,பாழ்பட்ட பாடி ஆகியவற்றைக் குறிக்கும் !
பாடி – திருப்பூர்ப் பாடி அல்ல ! முல்லை நிலத்து ஊரைக் (Pastoral village) குறிக்கும் !
மேலே வந்தவாறு , ‘வல்லெழுத்துச் சந்தியும் வரலாம் , மெல்லெழுத்துச் சந்தியும் வரலாம்’
என்பதைத்தான் ‘உறழும்’ என்கிறார்கள் !
அது சரி , ஏன் உறழணும் ?
‘ழ்’ – உச்சரிப்பதற்குக் கடினமான ஒலி !
பொதுமக்கள் நாவில் அவ்வளவாக வராத ஒலி !
பிறப்பியல் நூற்பா 13இல் ‘ழ்’ ஆனது எப்படிப் பிறக்கும் என்று தொல்காப்பியர் எழுதுகிறார் !
நுனி நாக்கானது , மேல் அண்ணத்தை (Palate) வருடிக் கொடுக்கும்போதுதான் ‘ழ்’பிறக்கும் என்கிறார் தொல்காப்பியர் !
மொழியியலார் ‘ழ்’ழின் பிறப்பை - Voiced retroflex palatal lateral என்பர் !
எனவேதான் , பொதுமக்களிடம் வரும்போது , ‘ழ்’ழை அடுத்து மற்றொரு வல்லொலி ( ‘க்’ ,’ச்’ போல்வன ) வருவது இடராக உள்ளது !
இந்த இடரைத் தவிர்ப்பதற்காகவே , ‘ழ்’ழை அடுத்துவரும் சந்தியை மெல்லெழுத்துச் சந்தியாக மக்களே மாற்றிக் கொண்டனர் !
இந்த மாற்றம் மக்களால் ஏற்படுவது !
புலவர்கள் கூடித் தீர்மானம் போட்டு நிறைவேற்றுவது இல்லை !
இதுதான் ‘உறழ்ச்சி’ இரகசியம் !
அடுத்து ‘ஏழ்’! :-
“ஏழென் கிளவி யுருபிய னிலையும்” (புள்ளி மயங்கியல் 93)
ஏழென் கிளவி – ‘ஏழ்’ எனும் சொல் !
உருபியல் நிலையும் – உருபியல் நூற்பா 22இல் , ‘ஏழனை’ என்று
‘அன்’ சாரியை பெறுதலை உரைத்த வண்ணம் , இங்கும் ‘அன்’வரும் !
அஃதாவது , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது , வேற்றுமைப் புணர்ச்சியில் , வருமாறு புணரும் ! :-
ஏழ் + காயம் = ஏழ் காயம் ×
= ஏழன் காயம் √
ஏழ் + சுக்கு = ஏழ் சுக்கு ×
= ஏழன் சுக்கு √
ஏழ் + தோரை = ஏழ் தோரை ×
= ஏழன் தோரை √
ஏழ் + பயறு = ஏழ் பயறு ×
= ஏழன் பயறு √
காயம் – வெண் காயம் ; பெருங்காயம் ; வெள்ளைப் பூண்டு.
சுக்கு – காய்ந்த இஞ்சி
தோரை – மலை நெல்
பயறு – தட்டைப் பயறு , மொச்சைப் பயறு முதலியன
‘ஏழன் சுக்கு’ என்றால் ?
ஏழாவது சுக்கா? ஏழு சுக்குகளா?
நச்சினார்க்கினியர் சிக்கலைத் தீர்த்துவைக்கிறார் !
‘ஏழன் சுக்கு’ என்றால் , ‘ஏழு பணத்திற்கு வாங்கும் சுக்கு ’ என்பது நச்சினார்க்கினியர் விளக்கம் !
‘ஏழன் காயம்’ என்பது ‘ஏழற் காயம்’ என வராதா ?
இந்தச் சிக்கலைத் தீர்ப்பவர் இளம்பூரணர் !
அஃதாவது , “இயல்பு வல்லெழுத்து இவ்வோத்தின் புறனடையான் வீழ்க்க” என்றார் அவர்!
இவ்வோத்து – இந்தப் புள்ளி மயங்கியல் !
புறனடை – புள்ளி மயங்கியல் நூற்பா 110இல் ‘விழன் குளம்’என்று , வேற்றுமைப் புணர்ச்சியில், திரியாது இயல்பாகப் புணர்ந்த அதே முறை !
அஃதாவது , ‘விழன் குளம்’ , ‘விழற் குளம்’ ஆகாதவாறுபோல , ‘ஏழன் காயம்’ , ‘ஏழற் காயம்’ ஆகாது என்கிறார் இளம்பூரணர் !
இந்த ‘ஏழ்’ என்பது ஒரு சமுதாயப் பிறழ்ச்சியைஉண்டாக்கிவிட்டது !
மதுரை அருகே வெள்ளலூரில் ‘ஏழைக் காத்த அம்மன்’ கோயில் உள்ளது ! இங்கு என்ன செய்கிறார்கள் , குறிப்பிட்ட நாளில் 7 சிறுமிகளைத் தேர்ந்தெடுத்துப் 15 நாட்கள் கோயிலுக்குள்ளேயே விரதம் இருக்குமாறு செய்கின்றனர் ! ‘ஏழைக் காத்த அம்மன்– ஏழுபேர்களைக் காத்த அம்மன்தானே ?’ என்பது அவர்களது வாதம் !
ஓர் இலக்கணப் பிழையால் அவர்கள் ஏமாந்தார்கள் !
அம்மனின் பெயர் ‘ஏழை காத்த அம்மன்’ !! இரண்டாம் வேற்றுமைத் தொகைச் சொல் இது ! நடுவே ‘க்’ போடக் கூடாது
ஏழை காத்த – ஏழையைக் காத்த ! ஏழு பேர்களை அல்ல!
‘ஏழு பேர்களைக் காத்த அம்மன்’ என்றால் , மீதிப் பேர்கள் என்னாவது ? - யாரும் கேட்கவில்லை !
இலக்கணம் என்பது புலவர்களின் இடுப்பில் செருகியிருப்பது என்ற எண்ணம் தவறு என்பதற்கு ஏழை காத்த அம்மனே சாட்சி !
இறுதியாக, மேலே வந்த மலை நெல்லைப் பார்க்க ஆசையா ?
[You must be registered and logged in to see this link.]
Courtesyhttp://nagalpoonai.blogspot.in/
இதுதான் மலை நெல் ! இது ‘ஒட்டடையான்’ என்ற வகையைச் சேர்ந்தது என்கின்றனர் ! இளம்பூரணர் குறித்த ‘தோரை’ இதுதானா என்பது நமக்குத் தெரியாது ! ஒட்டடையான் மலை நெல் மிக மிக ருசியாக இருக்கும் என்கின்றனர் ! உண்டால் பசியே எடுக்காதாம் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ழ்’ ஈற்றில் அடுத்தது , ‘பாழ்’ !
பாழாகவிடாமல் இதனைப் பார்ப்போம் !
“பாழென் கிளவி மெல்லெழுத் துறழ்வே” (புள்ளி மயங்கியல் 92)
அஃதாவது , ‘பாழ்’ எனும் சொல்லுடன் , வேற்றுமைப் புணர்ச்சியில் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது , வல்லெழுத்துச் சந்தியும் வரலாம், மெல்லெழுத்துச் சந்தியும் வரலாம் ! :-
பாழ் + கிணறு = பாழ்க் கிணறு √ (வல்லெழுத்துச் சந்தி)
பாழ் + கிணறு = பாழ்ங் கிணறு √ (மெல்லெழுத்துச் சந்தி)
பாழ் + சேரி = பாழ்ச் சேரி √ (வல்லெழுத்துச் சந்தி)
பாழ் + சேரி = பாழ்ஞ் சேரி √ (மெல்லெழுத்துச் சந்தி)
பாழ் + தோட்டம் = பாழ்த் தோட்டம் √ (வல்லெழுத்துச் சந்தி)
பாழ் + தோட்டம் = பாழ்ந் தோட்டம் √ (மெல்லெழுத்துச் சந்தி)
பாழ் + பாடி = பாழ்ப் படி √ (வல்லெழுத்துச் சந்தி)
பாழ் + பாடி = பாழ்ம் பாடி √ (மெல்லெழுத்துச் சந்தி)
மேலைச் சொற்கள் – பாழ்பட்ட கிணறு, பாழ்பட்ட சேரி,பாழ்பட்ட தோட்டம் ,பாழ்பட்ட பாடி ஆகியவற்றைக் குறிக்கும் !
பாடி – திருப்பூர்ப் பாடி அல்ல ! முல்லை நிலத்து ஊரைக் (Pastoral village) குறிக்கும் !
மேலே வந்தவாறு , ‘வல்லெழுத்துச் சந்தியும் வரலாம் , மெல்லெழுத்துச் சந்தியும் வரலாம்’
என்பதைத்தான் ‘உறழும்’ என்கிறார்கள் !
அது சரி , ஏன் உறழணும் ?
‘ழ்’ – உச்சரிப்பதற்குக் கடினமான ஒலி !
பொதுமக்கள் நாவில் அவ்வளவாக வராத ஒலி !
பிறப்பியல் நூற்பா 13இல் ‘ழ்’ ஆனது எப்படிப் பிறக்கும் என்று தொல்காப்பியர் எழுதுகிறார் !
நுனி நாக்கானது , மேல் அண்ணத்தை (Palate) வருடிக் கொடுக்கும்போதுதான் ‘ழ்’பிறக்கும் என்கிறார் தொல்காப்பியர் !
மொழியியலார் ‘ழ்’ழின் பிறப்பை - Voiced retroflex palatal lateral என்பர் !
எனவேதான் , பொதுமக்களிடம் வரும்போது , ‘ழ்’ழை அடுத்து மற்றொரு வல்லொலி ( ‘க்’ ,’ச்’ போல்வன ) வருவது இடராக உள்ளது !
இந்த இடரைத் தவிர்ப்பதற்காகவே , ‘ழ்’ழை அடுத்துவரும் சந்தியை மெல்லெழுத்துச் சந்தியாக மக்களே மாற்றிக் கொண்டனர் !
இந்த மாற்றம் மக்களால் ஏற்படுவது !
புலவர்கள் கூடித் தீர்மானம் போட்டு நிறைவேற்றுவது இல்லை !
இதுதான் ‘உறழ்ச்சி’ இரகசியம் !
அடுத்து ‘ஏழ்’! :-
“ஏழென் கிளவி யுருபிய னிலையும்” (புள்ளி மயங்கியல் 93)
ஏழென் கிளவி – ‘ஏழ்’ எனும் சொல் !
உருபியல் நிலையும் – உருபியல் நூற்பா 22இல் , ‘ஏழனை’ என்று
‘அன்’ சாரியை பெறுதலை உரைத்த வண்ணம் , இங்கும் ‘அன்’வரும் !
அஃதாவது , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது , வேற்றுமைப் புணர்ச்சியில் , வருமாறு புணரும் ! :-
ஏழ் + காயம் = ஏழ் காயம் ×
= ஏழன் காயம் √
ஏழ் + சுக்கு = ஏழ் சுக்கு ×
= ஏழன் சுக்கு √
ஏழ் + தோரை = ஏழ் தோரை ×
= ஏழன் தோரை √
ஏழ் + பயறு = ஏழ் பயறு ×
= ஏழன் பயறு √
காயம் – வெண் காயம் ; பெருங்காயம் ; வெள்ளைப் பூண்டு.
சுக்கு – காய்ந்த இஞ்சி
தோரை – மலை நெல்
பயறு – தட்டைப் பயறு , மொச்சைப் பயறு முதலியன
‘ஏழன் சுக்கு’ என்றால் ?
ஏழாவது சுக்கா? ஏழு சுக்குகளா?
நச்சினார்க்கினியர் சிக்கலைத் தீர்த்துவைக்கிறார் !
‘ஏழன் சுக்கு’ என்றால் , ‘ஏழு பணத்திற்கு வாங்கும் சுக்கு ’ என்பது நச்சினார்க்கினியர் விளக்கம் !
‘ஏழன் காயம்’ என்பது ‘ஏழற் காயம்’ என வராதா ?
இந்தச் சிக்கலைத் தீர்ப்பவர் இளம்பூரணர் !
அஃதாவது , “இயல்பு வல்லெழுத்து இவ்வோத்தின் புறனடையான் வீழ்க்க” என்றார் அவர்!
இவ்வோத்து – இந்தப் புள்ளி மயங்கியல் !
புறனடை – புள்ளி மயங்கியல் நூற்பா 110இல் ‘விழன் குளம்’என்று , வேற்றுமைப் புணர்ச்சியில், திரியாது இயல்பாகப் புணர்ந்த அதே முறை !
அஃதாவது , ‘விழன் குளம்’ , ‘விழற் குளம்’ ஆகாதவாறுபோல , ‘ஏழன் காயம்’ , ‘ஏழற் காயம்’ ஆகாது என்கிறார் இளம்பூரணர் !
இந்த ‘ஏழ்’ என்பது ஒரு சமுதாயப் பிறழ்ச்சியைஉண்டாக்கிவிட்டது !
மதுரை அருகே வெள்ளலூரில் ‘ஏழைக் காத்த அம்மன்’ கோயில் உள்ளது ! இங்கு என்ன செய்கிறார்கள் , குறிப்பிட்ட நாளில் 7 சிறுமிகளைத் தேர்ந்தெடுத்துப் 15 நாட்கள் கோயிலுக்குள்ளேயே விரதம் இருக்குமாறு செய்கின்றனர் ! ‘ஏழைக் காத்த அம்மன்– ஏழுபேர்களைக் காத்த அம்மன்தானே ?’ என்பது அவர்களது வாதம் !
ஓர் இலக்கணப் பிழையால் அவர்கள் ஏமாந்தார்கள் !
அம்மனின் பெயர் ‘ஏழை காத்த அம்மன்’ !! இரண்டாம் வேற்றுமைத் தொகைச் சொல் இது ! நடுவே ‘க்’ போடக் கூடாது
ஏழை காத்த – ஏழையைக் காத்த ! ஏழு பேர்களை அல்ல!
‘ஏழு பேர்களைக் காத்த அம்மன்’ என்றால் , மீதிப் பேர்கள் என்னாவது ? - யாரும் கேட்கவில்லை !
இலக்கணம் என்பது புலவர்களின் இடுப்பில் செருகியிருப்பது என்ற எண்ணம் தவறு என்பதற்கு ஏழை காத்த அம்மனே சாட்சி !
இறுதியாக, மேலே வந்த மலை நெல்லைப் பார்க்க ஆசையா ?
[You must be registered and logged in to see this link.]
Courtesyhttp://nagalpoonai.blogspot.in/
இதுதான் மலை நெல் ! இது ‘ஒட்டடையான்’ என்ற வகையைச் சேர்ந்தது என்கின்றனர் ! இளம்பூரணர் குறித்த ‘தோரை’ இதுதானா என்பது நமக்குத் தெரியாது ! ஒட்டடையான் மலை நெல் மிக மிக ருசியாக இருக்கும் என்கின்றனர் ! உண்டால் பசியே எடுக்காதாம் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ஆதிரா , கவிஞர் கே. இனியவன் ஆகியோர்க்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் ! பாராட்டுகள் அனைத்தும் ஈகரைக்கே சேரும் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 15 of 84 • 1 ... 9 ... 14, 15, 16 ... 49 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 84
|
|