புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்!
Page 1 of 1 •
தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜபண்டிதர் இலக்கண இலக்கியப் பெரும்புலவர்களான விசாகப்பெருமாள் ஐயர், சரவணப்பெருமாள் ஐயர் ஆகியோரின் மாணாக்கர்களுள் ஒருவர். அப்பெரும்புலவர் இருவரும் சென்னை மாநிலக் கல்லூரி பள்ளிக்கூடமாக இருந்த காலத்தில் அதில் பணியாற்றியவர்கள். சந்திரசேகர கவிராஜபண்டிதர் பல்லாண்டுகள் சித்தூர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரிசிரபுரம் சி. தியாகராச செட்டியார் ஓய்வுபெற்ற பின் ஆறுமாத காலம் கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழாசிரியராக வேலை பார்த்துள்ளார். அவர் உ.வே.சாமிநாதையரிடம் மிகுந்த அன்பு கொண்டவர். "தமிழ்த் தாதா' தம் ஐயங்கள் சிலவற்றை அவரிடம் கேட்டறிந்தது உண்டு என்று குறித்துள்ளார் என்றால், அவர் எப்படிப் பட்ட அறிஞர் என்பதனைச் சொல்லவும் வேண்டுமா?
சந்திரசேகர கவிராஜ பண்டிதருக்குப் பழம் புலவர்களின் வரலாறுகளை அறிவதிலும் முன்னோர் பாடல்களைத் திரட்டுவதிலும் மிகுந்த ஆர்வம். பல்லாண்டுகள் உழைத்துத் "தனிப்பாடல் திரட்டு' ஒன்றை வெளியிட்டார். அத்திரட்டில் இடம்பெற்றுள்ள பாடல்களில் ஒன்று "ஊரைச் சுடுமோ' என்பது. அவர் மிகவும் முயன்று சேகரித்துப் பதிப்பித்த பாட்டு அது.
அது குறித்து உ.வே.சா. எழுதியுள்ள "பிச்சைப்பாட்டு' என்னும் கட்டுரையில் தெரிவிக்கும் செய்திகள் சுவையானவை.
"கவிராஜ பண்டிதர் வடசென்னைப் பகுதியில் வண்ணார்பேட்டையில் சஞ்சீவிராயன் தெருவில் வாழ்ந்து வந்தார். அப்பகுதியில் ஓரளவு தமிழ் அறிந்த இராப் பிச்சைக்காரன் ஒருவன் தெம்மாங்கு, வெண்ணிலாப் பாட்டு, பராபரக்கண்ணி முதலிய தமிழ்ப் பாட்டுகளைப் பாடிப் பிச்சை கேட்பது வழக்கம். அன்று பால்போல் நிலவொளி காய்ந்து கொண்டிருந்தது. அவன் நிலவு பற்றிய பாடல் ஒன்றை இசையோடு பாடிச் சென்றான். "ஊரைச் சுடுமோ' என்னும் தொடரையே திரும்பத் திரும்பப் பாடியபடி அடுத்தத் தெருவிற்குள் நுழைந்தான். அத்தொடரைக் கேட்டு மயங்கிய கவிராஜ பண்டிதர் அவனைத் தொடர்ந்து சென்று பாட்டு முழுவதையும் சொல்லுமாறு வேண்டினார். அவன், "உலகந் தனைச்சுடுமோ; ஆரைச் சுடுமோ அறியேனே' என்னும் அடுத்த இரண்டு தொடர்களைப் பாடினான்.
அதற்குமேல் பாட்டு நினைவுக்கு வரவில்லை. அவன் பாடியதைக் கொண்டு அப்பாட்டு ஓர் இனிய வெண்பா என்பதனை உணர்ந்தார். பாட்டு முழுவதும் கிடைக்கவில்லையே என்று அவர் உள்ளம் ஏங்கியது. எஞ்சிய பகுதி நினைவுக்கு வந்தால் தெரிவிக்குமாறு சொல்லிவிட்டு வருத்தத்துடன் திரும்பினார். அவனும் "சரி'யென்று தலையாட்டிவிட்டுச் சென்றான்.
நான்கு நாள் கழிந்திருக்கும். அவன் பாட்டு முழுவதையும் பாடியவாறு பிச்சைகேட்டு வந்தான். அவருக்குப் புதையல் கிடைத்தது போல் மகிழ்ச்சி; பரிசு கொடுத்து அவனைப் பாராட்டினார்.
ஊரைச் சுடுமோ உலகந் தனைச்சுடுமோ
ஆரைச் சுடுமோ அறியேனே - நேரே
பொருப்புவட்ட மானநகிற் பூங்கொடியீர் இந்த
நெருப்புவட்ட மான நிலா''
என்பதே அப்பாட்டு. பின்பு அதனைத் தாம் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டில் சேர்த்துக் கொண்டார். அது காதலுற்ற பெண்ணொருத்தியின் பேச்சு. "மலை போன்ற வட்டமான மார்பகங்களைக் கொண்ட மங்கையர்களே, நெருப்பை வீசும் இந்த வட்டமான நிலவு ஊர் மக்களைச் சுடுமா? உலகத்தில் உள்ளவரையே எரித்துவிடுமா? யாரைச் சுடுமோ தெரியவில்லையே?' என்று தன் தோழியைப் பார்த்து வினவுகிறாள். "இது விரகதாபத்தால் வருந்திய தலைவி ஒருத்தி நிலவொளியை வெறுத்துக் கூறியது' என்று பாட்டு எழுந்த சூழலை உ.வே.சா., குறித்துள்ளார். யார் பாடியது என்னும் குறிப்பு அப்பொழுது தெரியவில்லை போலும்!
1945-ஆம் ஆண்டையொட்டி, உலகநாத முதலியார் என்பவர் தம் "பி.நா. சிதம்பர முதலியார் அண்டு பிரதர்ஸ் வித்தியா ரத்நாகரம் பிரஸ்' வாயிலாக உரையோடு "தனிப்பாடல் திரட்டு' என்னும் நூலினை இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். பாடல்களுக்கு உரையினைத் திருச்சுழியல் ஆஸ்திக மத சித்தாந்த அவதானி எம். வீரவேற்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். அதில், ஊரைச் சுடுமோ என்னும் பாட்டு இடம்பெற்றுள்ளது.
இன்றைக்குச் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை நாட்டில் பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் வாழ்ந்தார். அவர் பாடிய தனிப்பாடல்களுள் ஒன்றே இப்பாடல். ஆசிரியர் யார் என்று தெரியாத நிலையில், அதன் சுவையில் உள்ளம் பறிகொடுத்த சந்திரசேகர கவிராஜபண்டிதர்க்குத் தம்மைச் "சொக்க வைத்த வெண்பாவை' இயற்றியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பது தெரிந்திருந்தால், எப்படி ஆனந்தக் கூத்தாடியிருப்பார் என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை.
(நன்றி - தினமணி - முனைவர் தெ. ஞானசுந்தரம்)
சந்திரசேகர கவிராஜ பண்டிதருக்குப் பழம் புலவர்களின் வரலாறுகளை அறிவதிலும் முன்னோர் பாடல்களைத் திரட்டுவதிலும் மிகுந்த ஆர்வம். பல்லாண்டுகள் உழைத்துத் "தனிப்பாடல் திரட்டு' ஒன்றை வெளியிட்டார். அத்திரட்டில் இடம்பெற்றுள்ள பாடல்களில் ஒன்று "ஊரைச் சுடுமோ' என்பது. அவர் மிகவும் முயன்று சேகரித்துப் பதிப்பித்த பாட்டு அது.
அது குறித்து உ.வே.சா. எழுதியுள்ள "பிச்சைப்பாட்டு' என்னும் கட்டுரையில் தெரிவிக்கும் செய்திகள் சுவையானவை.
"கவிராஜ பண்டிதர் வடசென்னைப் பகுதியில் வண்ணார்பேட்டையில் சஞ்சீவிராயன் தெருவில் வாழ்ந்து வந்தார். அப்பகுதியில் ஓரளவு தமிழ் அறிந்த இராப் பிச்சைக்காரன் ஒருவன் தெம்மாங்கு, வெண்ணிலாப் பாட்டு, பராபரக்கண்ணி முதலிய தமிழ்ப் பாட்டுகளைப் பாடிப் பிச்சை கேட்பது வழக்கம். அன்று பால்போல் நிலவொளி காய்ந்து கொண்டிருந்தது. அவன் நிலவு பற்றிய பாடல் ஒன்றை இசையோடு பாடிச் சென்றான். "ஊரைச் சுடுமோ' என்னும் தொடரையே திரும்பத் திரும்பப் பாடியபடி அடுத்தத் தெருவிற்குள் நுழைந்தான். அத்தொடரைக் கேட்டு மயங்கிய கவிராஜ பண்டிதர் அவனைத் தொடர்ந்து சென்று பாட்டு முழுவதையும் சொல்லுமாறு வேண்டினார். அவன், "உலகந் தனைச்சுடுமோ; ஆரைச் சுடுமோ அறியேனே' என்னும் அடுத்த இரண்டு தொடர்களைப் பாடினான்.
அதற்குமேல் பாட்டு நினைவுக்கு வரவில்லை. அவன் பாடியதைக் கொண்டு அப்பாட்டு ஓர் இனிய வெண்பா என்பதனை உணர்ந்தார். பாட்டு முழுவதும் கிடைக்கவில்லையே என்று அவர் உள்ளம் ஏங்கியது. எஞ்சிய பகுதி நினைவுக்கு வந்தால் தெரிவிக்குமாறு சொல்லிவிட்டு வருத்தத்துடன் திரும்பினார். அவனும் "சரி'யென்று தலையாட்டிவிட்டுச் சென்றான்.
நான்கு நாள் கழிந்திருக்கும். அவன் பாட்டு முழுவதையும் பாடியவாறு பிச்சைகேட்டு வந்தான். அவருக்குப் புதையல் கிடைத்தது போல் மகிழ்ச்சி; பரிசு கொடுத்து அவனைப் பாராட்டினார்.
ஊரைச் சுடுமோ உலகந் தனைச்சுடுமோ
ஆரைச் சுடுமோ அறியேனே - நேரே
பொருப்புவட்ட மானநகிற் பூங்கொடியீர் இந்த
நெருப்புவட்ட மான நிலா''
என்பதே அப்பாட்டு. பின்பு அதனைத் தாம் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டில் சேர்த்துக் கொண்டார். அது காதலுற்ற பெண்ணொருத்தியின் பேச்சு. "மலை போன்ற வட்டமான மார்பகங்களைக் கொண்ட மங்கையர்களே, நெருப்பை வீசும் இந்த வட்டமான நிலவு ஊர் மக்களைச் சுடுமா? உலகத்தில் உள்ளவரையே எரித்துவிடுமா? யாரைச் சுடுமோ தெரியவில்லையே?' என்று தன் தோழியைப் பார்த்து வினவுகிறாள். "இது விரகதாபத்தால் வருந்திய தலைவி ஒருத்தி நிலவொளியை வெறுத்துக் கூறியது' என்று பாட்டு எழுந்த சூழலை உ.வே.சா., குறித்துள்ளார். யார் பாடியது என்னும் குறிப்பு அப்பொழுது தெரியவில்லை போலும்!
1945-ஆம் ஆண்டையொட்டி, உலகநாத முதலியார் என்பவர் தம் "பி.நா. சிதம்பர முதலியார் அண்டு பிரதர்ஸ் வித்தியா ரத்நாகரம் பிரஸ்' வாயிலாக உரையோடு "தனிப்பாடல் திரட்டு' என்னும் நூலினை இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். பாடல்களுக்கு உரையினைத் திருச்சுழியல் ஆஸ்திக மத சித்தாந்த அவதானி எம். வீரவேற்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். அதில், ஊரைச் சுடுமோ என்னும் பாட்டு இடம்பெற்றுள்ளது.
இன்றைக்குச் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை நாட்டில் பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் வாழ்ந்தார். அவர் பாடிய தனிப்பாடல்களுள் ஒன்றே இப்பாடல். ஆசிரியர் யார் என்று தெரியாத நிலையில், அதன் சுவையில் உள்ளம் பறிகொடுத்த சந்திரசேகர கவிராஜபண்டிதர்க்குத் தம்மைச் "சொக்க வைத்த வெண்பாவை' இயற்றியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பது தெரிந்திருந்தால், எப்படி ஆனந்தக் கூத்தாடியிருப்பார் என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை.
(நன்றி - தினமணி - முனைவர் தெ. ஞானசுந்தரம்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|