புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடைமுறை நியாயம்! Poll_c10நடைமுறை நியாயம்! Poll_m10நடைமுறை நியாயம்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நடைமுறை நியாயம்! Poll_c10நடைமுறை நியாயம்! Poll_m10நடைமுறை நியாயம்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
நடைமுறை நியாயம்! Poll_c10நடைமுறை நியாயம்! Poll_m10நடைமுறை நியாயம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நடைமுறை நியாயம்! Poll_c10நடைமுறை நியாயம்! Poll_m10நடைமுறை நியாயம்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நடைமுறை நியாயம்! Poll_c10நடைமுறை நியாயம்! Poll_m10நடைமுறை நியாயம்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நடைமுறை நியாயம்! Poll_c10நடைமுறை நியாயம்! Poll_m10நடைமுறை நியாயம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நடைமுறை நியாயம்! Poll_c10நடைமுறை நியாயம்! Poll_m10நடைமுறை நியாயம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நடைமுறை நியாயம்! Poll_c10நடைமுறை நியாயம்! Poll_m10நடைமுறை நியாயம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நடைமுறை நியாயம்! Poll_c10நடைமுறை நியாயம்! Poll_m10நடைமுறை நியாயம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
நடைமுறை நியாயம்! Poll_c10நடைமுறை நியாயம்! Poll_m10நடைமுறை நியாயம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடைமுறை நியாயம்!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 5:41 pm

நடைமுறை நியாயம்!

எந்தவொரு காவல் நிலையம் என்றாலும் பல மோட்டார் சைக்கிள்கள் ஒன்றின் மேல் ஒன்றாகக் குவிக்கப்பட்டிருப்பதையும் சில கார்கள் டயர் இல்லாமலும் இன்ஜின் இல்லாமலும், செடிகொடிகள் படர்ந்து, துருவேறி எதற்கும் லாயக்கற்றதாக நின்று கொண்டிருப்பதையும் காண முடியும். எந்த வழக்குக்கும் இவை பயன்படப் போவதில்லை. வெறும் அடைசல் என்பதாக வளாகத்தை நிரப்பிக்கொண்டிருக்கும் இந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்படாமல், காலம்காலமாக அதே நிலைமையில் தொடர்ந்துகொண்டிருப்பது அப்பகுதியில் சுகாதாரக்கேட்டை உருவாக்க மட்டுமே உதவியாக இருப்பதையும் காணலாம்.

கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கும் வாகனங்களை, வழக்கு முடியும்வரை அதன் உரிமையாளருக்குத் தாற்காலிகமாக திருப்பிக் கொடுக்கலாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்துள்ள தீர்ப்பு, இத்தகைய விவகாரங்களில் எதார்த்த நிலையை அனுசரித்து நடந்துகொள்வதால் எல்லோருக்கும் எத்தகைய நன்மை ஏற்படும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.

இந்த வழக்கைப் பொருத்தவரையில், ரேஷன் அரிசிக் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை அரிசியோடு பிடித்த குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுப் போலீஸôர், வழக்குப் பதிவுக்குப் பிறகு லாரியை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மறுத்தனர். வழக்கு முடியும்வரை தாற்காலிகப் பொறுப்பில் தனக்கு லாரியை வழங்க வேண்டும் என்று அந்த மனுதாரர் வழக்கு தொடுத்திருந்தார்.

"இவ்வாறு அதிகாரிகள் கைப்பற்றும் வாகனங்கள் அந்த வழக்கு முடியும்வரை பயன்படுத்தப்படாமல் வீணாகப் போவதைக் காட்டிலும் உரியவரிடம் தாற்காலிகமாக ஒப்படைக்கலாம். இதனால், அந்த வாகனங்களைத் தங்கள் வளாகத்தில் பாதுகாக்க வேண்டிய பொறுப்புச் சுமை காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் இருக்காது' என்று தெரிவித்துள்ளார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எம். வேணுகோபால். அவர் தெரிவித்துள்ள இந்த ஆலோசனை அனைத்து வழக்குகளுக்கும் பொருந்தும்.

கடத்தல் வழக்குகளில் ஈடுபடும் வாகனங்களை மூன்றாக வகைப்படுத்தலாம். ஏற்கெனவே திருடப்பட்ட, விபத்துகளில் சிக்கிச் சேதமடைந்த வாகனங்களிலிருந்து எடுக்கப்பட்ட பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு எண் பெறாத வாகனங்கள் முதல் வகை.

இத்தகைய வாகனங்கள் பெரும்பாலும் திருட்டு, கொள்ளை வழக்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படுவன. இவை பெரும்பாலும் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும். ஆனால் இவற்றைக் கொண்டு எந்த வழக்கையும் நடத்தவோ, சாட்சிப்படுத்தவோ முடியாது. இத்தகைய வாகனங்களை அப்போதே எடை போட்டு விற்றுவிடுவதைத் தவிர சிறந்த முடிவு ஏதுமில்லை.

இரண்டாவது வகை, "திருடுபோனதாக'ப் போலியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆனால் கடத்தலில் ஈடுபடுத்தப்படும் நல்ல நிலையில் உள்ள பதிவு எண் கொண்ட வாகனங்கள். கடத்தலில் இந்த வாகனங்கள் சிக்கும்போது, அதன் உரிமையாளர் மீது எந்த வழக்கும் பதிவு செய்ய முடியாதபடி, அவரைக் காப்பாற்றும் இந்த முன்னேற்பாடு செய்துகொண்டு வாகனத்தைக் கடத்தலில் ஈடுபடுத்துவார்கள்.

மூன்றாவது வகை வாகனங்கள், வாடகைக்குக் கிடைக்கும் லாரிகள் மற்றும் கார்கள். பெரும்பாலும் ரேஷன் அரிசி, சர்க்கரை, எரிசாராயம் போன்ற கடத்தலுக்கு வாடகைக்குக் கொண்டு செல்லப்படும் லாரிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. கடத்தலில் சிக்கினால் லாரி பறிமுதல் செய்யப்படும். லாரி, அல்லது கார் சும்மா இருப்பதைக் காட்டிலும் ஏதாவது வாடகை கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் வாடகைக்கு விட்டுவிட்டு இந்த வழக்குகளில் சிக்கிக்கொள்பவர்களே அதிகம். இவர்களில் பெரும்பாலோர் தங்கள் வாகனம் கடத்தலுக்கும், சமூகவிரோதச் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதைக்கூட அறியாதவர்கள்.

இத்தகைய நிகழ்வுகளில் தங்கள் வாகனங்களுக்கு உரிமை கோரவும், வழக்கு முடியும் வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறும் கேட்டு வரும் மனுக்கள் மிகச் சிலவாகத்தான் இருக்கும்.

இந்த மனுக்களை ஏற்று, அந்த வாகனத்தின் அப்போதைய காப்பீட்டு மதிப்பில் உள்ள தொகையைக் கருவூலத்தில் கட்டி எடுத்துச் செல்ல வகை செய்யலாம். இதனால் வாகனத்தைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். அதன் உரிமையாளர் தேவையில்லாமல் நஷ்டம் அடையமாட்டார்.

"திருடுபோனதாக' போலி வழக்குப் பதிவு செய்யும் வாகனங்களையும்கூட, அதன் உரிமையாளர்கள் கோரினால், கருவூலத்தில் அந்த வாகனத்தின் காப்பீட்டு மதிப்புத் தொகையை செலுத்தச் செய்து தாற்காலிகப் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பதில் தவறில்லை. வழக்கு முடிவுற்று, பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் அவர்களிடம் மீண்டும் வாகனத்தைத் திரும்பக் கோரிப் பெறுவதைக் காட்டிலும், அவர்கள் செலுத்திய பிணைத்தொகையை அரசே எடுத்துக்கொள்வது பல நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.

தற்போதைய நடைமுறைப்படி, தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஆனால் அதன் நல்ல பாகங்கள் பலவும் கழற்றப்பட்டுவிட்ட நிலையில், அதற்குக் கிடைக்கும் விலை மிகமிகக் குறைவு. இத்தகைய வாகனங்களின் நல்ல பாகங்களான டயர்கள், ரிம், ஷாக் அப்சர்வர், ரேடியோ மற்றும் பாடும்பெட்டி, மினி டி.வி. எல்லாமும் பறிமுதல் செய்யப்பட்ட அடுத்த நாளே மாயமாய் மறைந்துவிடும். அடுத்த சில நாள்களில் இன்ஜின் உள்ளிட்ட முக்கியமான பாகங்களும்!

இதைக் காட்டிலும், வழக்கு முடியும்வரை இதில் தொடர்புடைய வாகனத்தின் காப்பீட்டுத் தொகை என்னவோ அதை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு செல்ல அனுமதிப்பதே சிறந்ததாக இருக்கும். நடைமுறைக்கு ஏற்ற தீர்ப்பு; இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்ப்பு!


தினமணி




நடைமுறை நியாயம்! Mநடைமுறை நியாயம்! Uநடைமுறை நியாயம்! Tநடைமுறை நியாயம்! Hநடைமுறை நியாயம்! Uநடைமுறை நியாயம்! Mநடைமுறை நியாயம்! Oநடைமுறை நியாயம்! Hநடைமுறை நியாயம்! Aநடைமுறை நியாயம்! Mநடைமுறை நியாயம்! Eநடைமுறை நியாயம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 10:55 pm

வண்டி மாயமாய் மறைவது இருக்கட்டும்
வழக்கில் சிக்கினவரே மாயமாய் மறைந்துவிட்டார்ன்னு
சொல்லி தேடிக் கொண்டே இருக்கும் நிலையும் உண்டு

மாயமாய் மறைந்தவர் போலீசுடன்
உண்டு உறவாடும் மாயமும் உண்டு




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 11:48 pm

யினியவன் wrote:வண்டி மாயமாய் மறைவது இருக்கட்டும்
வழக்கில் சிக்கினவரே மாயமாய் மறைந்துவிட்டார்ன்னு
சொல்லி தேடிக் கொண்டே இருக்கும் நிலையும் உண்டு

மாயமாய் மறைந்தவர் போலீசுடன்
உண்டு உறவாடும் மாயமும் உண்டு

ஆமோதித்தல்




நடைமுறை நியாயம்! Mநடைமுறை நியாயம்! Uநடைமுறை நியாயம்! Tநடைமுறை நியாயம்! Hநடைமுறை நியாயம்! Uநடைமுறை நியாயம்! Mநடைமுறை நியாயம்! Oநடைமுறை நியாயம்! Hநடைமுறை நியாயம்! Aநடைமுறை நியாயம்! Mநடைமுறை நியாயம்! Eநடைமுறை நியாயம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக