புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 எந்த இடம் நல்ல இடம்... Poll_m10 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 எந்த இடம் நல்ல இடம்... Poll_m10 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 எந்த இடம் நல்ல இடம்... Poll_m10 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 எந்த இடம் நல்ல இடம்... Poll_m10 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 எந்த இடம் நல்ல இடம்... Poll_m10 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 எந்த இடம் நல்ல இடம்... Poll_m10 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 எந்த இடம் நல்ல இடம்... Poll_m10 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 எந்த இடம் நல்ல இடம்... Poll_m10 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 எந்த இடம் நல்ல இடம்... Poll_m10 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 எந்த இடம் நல்ல இடம்... Poll_m10 எந்த இடம் நல்ல இடம்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த இடம் நல்ல இடம்...


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 5:45 pm



பிறப்பைத் தேர்ந்தெடுக்கும், இறப்பைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை" - என்பது ரஜினிகாந்த் நடித்த ஒரு திரைப்படத்தின் பாடல் வரி.

ஆனாலும் ஒரு குழந்தை எந்த நாட்டில் பிறப்பது பாதுகாப்பானது, ஆரோக்கியமானது, அதன் எதிர்காலத்துக்கு வளம் சேர்ப்பது என்று பட்டியலிட்டால், இந்தியா 66-வது இடத்தில் இருக்கிறது.

முதல் 10 இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகள்: சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், சிங்கப்பூர், நியூஸிலாந்து, நெதர்லாந்து, கனடா, ஹாங்காங் ஆகியன. அமெரிக்கா 16-வது இடத்தில். பாகிஸ்தான் 75-வது இடத்தில்!

ஒவ்வொரு நாட்டின் மொத்த உற்பத்தி, குடும்ப மகிழ்ச்சி, மருத்துவ வசதி, குழந்தைகளுக்கான கல்வி வசதி, விவாகரத்து எண்ணிக்கை, குழந்தைகளின் இறப்பு விகிதம், ஊழல், நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை என பல விஷயங்களுக்கும் மதிப்பெண் கொடுத்து இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளது எகனாமிக் இன்டலிஜன்ஸ் யூனிட். இதில் குறிப்பாக, 2013-ஆம் ஆண்டு பிறக்கும் குழந்தை 2030-இல், அதன் வளர்இளம் பருவத்தில் வேலைபெறும் வாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

பெரும்பாலான நேரங்களில் இத்தகைய சர்வே மற்றும் பட்டியல் எல்லாம் வெறும் சடங்குபோலவே நடைபெறுகின்றன என்பதும், ஐரோப்பிய நாடுகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகின்றது என்பதும் தெரிந்ததுதான். இந்தப் பட்டியலில் இந்தியா பின்தங்கியிருப்பதற்காக நாம் தலைகுனியத் தேவையில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் நாம் நம்மை சுயமதிப்பீடு செய்துகொள்வது இந்த நேரத்தில் அவசியமாகிறது.

முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் மக்கள்தொகை மொத்தத்தையும் சேர்த்தாலும்கூட இந்தியாவின் மக்கள்தொகை மிச்சமாகத்தான் இருக்கும். அந்த நாடுகளால் அனைத்துக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு, உடல்நலம், கல்வி, வேலைவாய்ப்பை உறுதி செய்வது பெரிய விஷயமே அல்ல. இந்தியாவில் 62 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அனைவருக்கும் கல்வி என்பது சட்டப்படி சாத்தியமாகியுள்ளது. இன்றும் நடைமுறை சாத்தியமாகவில்லை. அனைவருக்கும் மருத்துவம், அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வீடு என்பதை எட்டுவதற்கு இன்னும் பல "பதின்ஆண்டுகள்' ஆகலாம்.

இந்தியா ஒரு குழந்தைக்கு ஏற்புடைய நாடாக இருப்பதில் பின்தங்கிப் போனதற்கு மூல காரணம், ஊழல், மருத்துவ வசதிக் குறைவு, வளர்இளம் பருவத்தில் ஒரு குழந்தைக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய இயலாத நிலைமை ஆகியவை.

இத்தனை பெரிய ஊழல்கள், சுரண்டல்களுக்குப் பிறகும், பெருவாரியான இந்தியர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் நேர்மையாக, உழைப்பில் கிடைத்ததைக் கொண்டு அமைதியாக வாழ்கிறார்கள் என்பதுதான் இந்தியாவின் பலம். பாரதத்தின் ஆன்மிகம் வளர்த்தெடுத்த பாரம்பரியம் அப்படியானது. இந்த மரபுதான் இன்னமும் இந்திய மக்களைக் கட்டிக்காத்து நிற்கிறது.

ஆனால், இந்தியப் பாரம்பரியத்தை, அதன் மரபுகளை, இந்திய ஞானத்தை உடைப்பதில்தான் இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதற்கு நம் அரசியல்வாதிகளும் துணை போய்க்கொண்டிருக்கிறார்கள். அதுதான் வளர்ச்சி என்கிற மாயையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நம் இந்திய மருத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளினார்கள். அவர்கள் மருந்துச் சந்தையை விரித்தார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் பாரம்பரிய மருத்துவச்சிகள், மருத்துவர்கள் இருந்த நிலையை ஒழித்துவிட்டு, இப்போது கிராமங்களில் மருத்துவ சேவை ஆற்றுவதற்காக 3 ஆண்டு மருத்துவப் படிப்பை அறிமுகம் செய்யவிருக்கிறோம்.

வேளாண்மை மரபுகளை அழித்து, மரபீனி விதைகள், ரசாயன உரங்களால் எல்லாரையும் நோய்க்கு ஆளாக்கினார்கள். என்டோசல்பானும், சயனைடும் நாம் கேட்கவில்லை. நம்மீது திணிக்கப்பட்டன. அதற்கு அரசியல்வாதிகள் துணைபோனார்கள்.

இவர்கள்தான் இந்திய அரசியல்வாதிகளுக்கு ஊழலைச் சொல்லிக்கொடுத்து, தங்கள் நாட்டுக்கு ஊழல் பணத்தைக் கொண்டுபோய் அதை வெள்ளைப்பணமாகத் திருப்பிக் கொண்டு வந்து சேர்த்தார்கள். இப்போது சிறுவணிகத்தைக்கூட அவர்களே செய்ய வந்துவிட்டார்கள். இத்தனை அழிவுகளைச் செய்துவிட்டு, குழந்தைக்கு எது பாதுகாப்பான நாடு என்பதில் இந்தியா 66-வது இடத்தில் இருக்கிறது என்று சொன்னால் அவர்களை என்னவென்பது?

இந்த சர்வே, பட்டியல் எல்லாமும் உண்மையின் முன்பாக வெட்கப்படக்கூடியவை. இவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. ஆனால், குழந்தைகளுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோமா என்பதை இந்தப் பின்னணியில் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.

மருத்துவமனை உண்டு, மருத்துவர்கள் உண்டு, ஆனால், மருத்துவ சேவை மட்டும் கிடைக்காது. ஆனால் அதை நாம் தட்டிக் கேட்கவில்லை. ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்கின்ற அடாவடித்தனத்துக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தொடர்பில்லை.

தொடக்கக் கல்வி வரை இலவசமாகப் படித்த நேர்த்தியான நிலைமையை, நர்சரி பள்ளிகளாலும் ஆங்கிலப் பயிற்றுமொழி பள்ளிகளாலும் சீரழித்ததற்கு பன்னாட்டு நிறுவனங்கள் காரணமல்ல, நமது புத்திகெட்டத்தனம்தான் அது. இதனால் அரசுப் பள்ளிகளை நாமே சீரழித்தோம்.

பன்னாட்டு நிறுவனங்களையோ, ஆட்சியாளர்களின் அலட்சியத்தையோ மட்டுமே நாம் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ள முடியாது. நமது தாற்காலிக சந்தோஷத்துக்காகவும், சுயநலத்துக்காகவும் பாரம்பரியத்தை பலி கொடுத்ததும், நமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றாததும்கூடக் காரணங்கள்தான்!


தினமணி




 எந்த இடம் நல்ல இடம்... M எந்த இடம் நல்ல இடம்... U எந்த இடம் நல்ல இடம்... T எந்த இடம் நல்ல இடம்... H எந்த இடம் நல்ல இடம்... U எந்த இடம் நல்ல இடம்... M எந்த இடம் நல்ல இடம்... O எந்த இடம் நல்ல இடம்... H எந்த இடம் நல்ல இடம்... A எந்த இடம் நல்ல இடம்... M எந்த இடம் நல்ல இடம்... E எந்த இடம் நல்ல இடம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 10:52 pm

தெரியுது ஆனா தெரியலேன்ற மனப்போக்கில் இருப்பதால் வரும் வினை




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக