புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
3 Posts - 6%
heezulia
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதுமே இந்த விபரீதம்!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 14, 2012 9:38 am



ஆஸ்திரேலிய ரேடியோ நிறுவனத்தின் ரேடியோ ஜாக்கிகள் இருவருடைய விளையாட்டு அழைப்பு வினையாகிப்போனது. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இந்திய வம்சாவளி செவிலியர் ஜெசிந்தாவின் மரணம் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

ஜெசிந்தா மர்மமான முறையில் மருத்துவமனையில் இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதன் பிறகு இந்த விவகாரம் பலராலும் பேசப்படுவதாக மாறியுள்ளது. இவரது மரணம் கொலையா, தற்கொலையா என்ற விவாதங்களும் நடைபெறுகின்றன. ஆனால், இதற்குக் காரணமான ரேடியோ நிறுவனத்தின் மீதும் ரேடியோ ஜாக்கிகள் மீதும் வழக்குகள் ஏதும் இல்லை. ஒருவேளை இறந்தவர் இந்திய வம்சாவளியினர் என்பதால் அலட்சியமோ என்னவோ?

இந்த மரணம் குறித்து வெளியிட்ட வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள், இந்தச் சம்பவத்தை விவரித்தாலும் அதில் ஜெசிந்தா போலியாகப் பேசி ஏமாற்றப்பட்டார் என்பதை குற்றம் சொல்லவில்லை என்பதும், ரேடியோ ஜாக்கிகள் இருவரும் ஆஸ்திரேலிய தொனியில் (ஆக்ஸன்ட்) பேசியதாகவும் வலிந்து வலிந்து குறிப்பிடுகின்றன.

அதாவது, பேசியவர்கள் ஆஸ்திரேலிய தொனியில் பேசியபோதே அவர்கள் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினர் இல்லை என்பதை அந்த முட்டாள் ஜெசிந்தா புரிந்துகொண்டிருக்க வேண்டும்; புரிந்துகொள்ளாதது அவரது தவறு என்பதைப்போல எழுதுகின்றன. இத்தகைய இனப்பாகுபாடு ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.

லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டிஷ் இளவரசி கேத் மிடில்டனின் உடல்நிலை குறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு வானொலி பேச்சாளர்கள் ( ரேடியோ ஜாக்கி) தங்களை ராணி எலிசபெத் என்றும் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் போல பேசி, அந்த மருத்துவமனை தொலைபேசியில் பதில் அளித்த ஜெசிந்தாவை ஏமாற்றினர். கேத் மிடில்டன் உடல்நிலை மற்றும் மருத்துவ அறிக்கை குறித்து தகவல் அறிந்தனர்.

இரண்டு ரேடியோ ஜாக்கிகளின் விளையாட்டுக்குத் தான் ஆளாகிப் போனதாலும் மருத்துவமனையில் ஒரு நோயாளியின் (அவர் இளவரசியாக இருந்தாலும்) மருத்துவ நிலை குறித்த தகவல் கசியக் காரணமாகிப்போனோமே என்ற மனஉளைச்சலாலும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அதற்கான எந்தத் தடயங்களும் இல்லை. இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்த வலியுறுத்திக்கொண்டிருக்கின்றார் ஜெசிந்தாவின் கணவர்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய வானொலி நிறுவனமாகிய சதர்ன் கிராஸ் ஆஸ்ட்ரியோ, ஜெசிந்தா குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.2.84 கோடி வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. ரேடியோ ஜாக்கிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இழப்பீடு தருவது ஒருபுறம் இருக்கட்டும், இத்தகைய நிகழ்ச்சி மூலம் ஒரு அப்பாவி மனஉளைச்சலுக்கு ஆளாகி, அதனால் அந்தப் பெண்மணி இறந்திருப்பதால் இவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டாமா? கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டமா?

இதுபோன்ற அலட்சியமான பாணியில் விளையாட்டு என்கின்ற பெயரில் டிவி எப்எம் ரேடியோ நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் ஒலி,ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன.

வானொலியில் அல்லது டிவி நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் பங்குகொள்ளும் நபரிடம் தொகுப்பாளர்கள் கேட்கும் கேள்விகள் முதலில் அவர் யார் எந்த ஊர் என்கின்ற முகவரியாகத்தான் இருக்கும். அடுத்த கேள்விகள் முகம் தெரியாத அந்த நபரின் அந்தரங்கம் குறித்ததாக இருக்கும்.

ஏற்கெனவே இவர் தன்னைப் பற்றிய அடையாளத்தைத் தெரிவித்துவிட்டதால், அவர் பகிர்ந்துகொள்ளும் காதலியின் பெயர், கேலி செய்யும் நண்பரின் பெயரை, அவரைச் சார்ந்தவர்கள் ஊகிப்பது மிகவும் எளிது. ஆனாலும் இத்தகைய விளையாட்டுப் பேச்சுகள் ஊடகங்களில் தொடருகின்றன.

குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில், நிகழ்ச்சியை நடத்துபவர் கேட்கிறார். "வீட்டில் உனக்கு யாரைப் பிடிக்கும், யாரைப் பிடிக்காது?' குழந்தை தனக்கே உரிய குழந்தைத்தனத்துடன் சொல்கிறது, "எனக்கு அம்மாவைப் பிடிக்கும். பாட்டியைப் பிடிக்காது'. அடுத்த கேள்வி "ஏன் பாட்டியைப் பிடிக்காது?' "பாட்டி திட்டிக்கிட்டே இருப்பாங்க'.

நினைத்துப் பாருங்கள். உலகம் முழுவதும் அந்த திட்டுகிற பாட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதை அவர் எந்த மனநிலையில் ஏற்றுக்கொள்வார். தன்னை இந்த கேலிக்கு ஆளாக்கிய குழந்தையின் மீது அவருடைய அன்பு மாறுபாடில்லாமல் தொடருமா? பின்னொரு நாளில் சொல்லிக்காட்ட மாட்டாரா? ஏன் இப்படி வேண்டுமென்றே ஒரு குடும்பத்துக்குள் விஷத்தை விதைக்க வேண்டும்.

இன்னும் சில நிகழ்ச்சிகளில் அப்பா பிள்ளை இருவரையும் எதிர் அணியில் இருத்தி சண்டை போட்டுக்கொள்ளச் செய்கிறார்கள். அவர்கள் வீட்டில்போய் எப்படிப் பேசிக்கொள்வார்கள். அவர்களது வாழ்க்கை பொய்யா? அல்லது இந்த டிவி நிகழ்ச்சியே ஒரு முன்திட்டமிட்டு நடிக்கப்பட்ட போலி நாடகமா? எது உண்மை?

கேன்டிட் கேமிரா போன்ற நிகழ்ச்சிகளையும் வெளிநாட்டிலிருந்து அப்படியே இறக்குமதி செய்துள்ளன நமது தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள். யாராகிலும் ஒருவர் திடீரென்று கத்தியுடன் வந்து உங்கள் முன்னால் நின்றால் நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக இருக்கும்

. இதற்காக சாலையில் வருவோர் போவோரிடமெல்லாம் ரவுடி வேடத்தில் ஒருவர் கத்தியைக் காட்டியபடி திடிரென்று முன்தோன்றுவார். இவர்களின் கேலிக்கு ஆளாகும் நபர்களில் யாரேனும் ஒருவர் அச்சத்தால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனால் அதற்கு யார் பொறுப்பு?

ஆஸ்திரேலிய ரேடியோ நிறுவனம் போல வருத்தம் தெரிவித்து சில லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்துவிட்டால் கதை முடிந்ததா? இது ஒரு கொலை ஆகாதா?

வியாபாரத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றாகிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு எதையும் செய்யாமல் வாளா இருக்கிறது. விவரம் தெரிந்தவர்களும் ரசிக்கிறார்களே தவிர, முகம் சுளிக்கத் தயாராக இல்லை. அதுதான் வேதனையாக இருக்கிறது.............

தினமணி


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 9:53 am

இந்தமாதிரி வியாபார நுணுக்கங்களை கையாளும் மீடியாக்களையும் அதை நடத்துபவர்களையும் கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 14, 2012 12:12 pm

இவர்களின் மண்டையில் அடி வியாபார நோக்கிற்கு அப்பாவி உயிர் பலியானது




போதுமே இந்த விபரீதம்! Mபோதுமே இந்த விபரீதம்! Uபோதுமே இந்த விபரீதம்! Tபோதுமே இந்த விபரீதம்! Hபோதுமே இந்த விபரீதம்! Uபோதுமே இந்த விபரீதம்! Mபோதுமே இந்த விபரீதம்! Oபோதுமே இந்த விபரீதம்! Hபோதுமே இந்த விபரீதம்! Aபோதுமே இந்த விபரீதம்! Mபோதுமே இந்த விபரீதம்! Eபோதுமே இந்த விபரீதம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக