புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
Page 24 of 37 •
Page 24 of 37 • 1 ... 13 ... 23, 24, 25 ... 30 ... 37
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கருப்புப் பணம் : இந்தியாவுக்கு 8வது இடம்
உலக அளவில் கருப்புப் பணம் புழக்கத்தில் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
குளோபல் பினான்சியல் இன்டிகிரிட்டி இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் 2010 வரையிலான கால கட்டத்தில், 232 பில்லியன் டாலர்கள் கருப்புப் பணத்தை இந்தியர்கள் வைத்திருந்தனர் என்றும், இது லஞ்சம், ஊழல் மற்றும் பல்வேறு வழிகளில் பெறப்பட்ட பணமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில், கருப்புப் பணம் மூலமாக இந்தியர்கள் வாங்கியுள்ள சொத்துக்களின் மதிப்பு 487 பில்லியன் டாலர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் சீனா முதல் இடத்திலும், மெக்சிகோ, மலேசியா அடுத்தடுத்த இடங்களையும் வகிக்கின்றன.
தினமணி
உலக அளவில் கருப்புப் பணம் புழக்கத்தில் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
குளோபல் பினான்சியல் இன்டிகிரிட்டி இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் 2010 வரையிலான கால கட்டத்தில், 232 பில்லியன் டாலர்கள் கருப்புப் பணத்தை இந்தியர்கள் வைத்திருந்தனர் என்றும், இது லஞ்சம், ஊழல் மற்றும் பல்வேறு வழிகளில் பெறப்பட்ட பணமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில், கருப்புப் பணம் மூலமாக இந்தியர்கள் வாங்கியுள்ள சொத்துக்களின் மதிப்பு 487 பில்லியன் டாலர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் சீனா முதல் இடத்திலும், மெக்சிகோ, மலேசியா அடுத்தடுத்த இடங்களையும் வகிக்கின்றன.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிப்போர் கவனத்துக்கு
ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள், பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதில், 2013 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள, குறைந்தபட்சம் 31.03.2014 வரையில் செல்லத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று இந்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது. எனவே, ஹஜ் 2013-ற்கான அறிவிப்பு பிப்ரவரி 2013-ல் வெளியிடப்படலாம் என்பதால் தற்போது பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அதற்கு முன்னதாகவே புதிதாக பாஸ்போர்ட்டு பெறுவதற்காக விண்ணப்பித்து, அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே பாஸ்போர்ட்டு பெற்றுள்ளவர்கள் (குழந்தைகள் உட்பட), அவரவர்களுடைய பாஸ்போர்ட்டுகளின் செல்லுபடியாகக் கூடிய காலத்தை சரிபார்த்து, செல்லுபடியாகும் காலம் 31.03.2014 வரை இல்லையென்றால் அந்த பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பாஸ்போர்ட்டில் விசா பதிவிற்காக குறைந்த பட்சம் அருகருகே 2 பக்கங்கள் காலியாக இருக்குமாறு உறுதி செய்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், ஹஜ் 2013-க்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய நிதி அமைப்பு குறியீட்டு எண்ணை குறிப்பிடுவது அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பிக்கவிருக்கும் மனுதாரர்கள் ஐஎப்சி குறியீடு உள்ள வங்கிகளில், புதிதாக வங்கிக் கணக்கைத் தொடங்குமாறும், அவ்வாறு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதற்கு சான்றாக காசோலை ஒன்றினை (இரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி
ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள், பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதில், 2013 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள, குறைந்தபட்சம் 31.03.2014 வரையில் செல்லத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று இந்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது. எனவே, ஹஜ் 2013-ற்கான அறிவிப்பு பிப்ரவரி 2013-ல் வெளியிடப்படலாம் என்பதால் தற்போது பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அதற்கு முன்னதாகவே புதிதாக பாஸ்போர்ட்டு பெறுவதற்காக விண்ணப்பித்து, அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே பாஸ்போர்ட்டு பெற்றுள்ளவர்கள் (குழந்தைகள் உட்பட), அவரவர்களுடைய பாஸ்போர்ட்டுகளின் செல்லுபடியாகக் கூடிய காலத்தை சரிபார்த்து, செல்லுபடியாகும் காலம் 31.03.2014 வரை இல்லையென்றால் அந்த பாஸ்போர்ட்டுகளை புதுப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பாஸ்போர்ட்டில் விசா பதிவிற்காக குறைந்த பட்சம் அருகருகே 2 பக்கங்கள் காலியாக இருக்குமாறு உறுதி செய்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், ஹஜ் 2013-க்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய நிதி அமைப்பு குறியீட்டு எண்ணை குறிப்பிடுவது அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பிக்கவிருக்கும் மனுதாரர்கள் ஐஎப்சி குறியீடு உள்ள வங்கிகளில், புதிதாக வங்கிக் கணக்கைத் தொடங்குமாறும், அவ்வாறு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதற்கு சான்றாக காசோலை ஒன்றினை (இரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மாணவி பலாத்காரம் : கட்சி வேறுபாடின்றி குரல் எழுப்பிய எம்.பிக்கள்
புது தில்லியில், மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கட்சி வேறுபாடின்றி பல எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.
ஞாயிறன்று இரவு தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வெளியில் தூக்கி வீசப்பட்டாள். அவளும், அவளது ஆண் நண்பரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் பல்வேறு கட்சி எம்.பிக்கள் இந்த விவகாரத்தை இன்று எழுப்பினர்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் இது குறித்து பேசுகையில், 23 வயது மாணவியை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, இந்தியாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம். நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டும். நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி. ராஜா எழுந்து பேசுகையில், நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. உடனடியாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, இதுபோன்ற குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த சமயத்தில் பேச எழுந்த சமாஜ்வாதி உறுப்பினர் ஜெயபாச்சன், 23 வயது மாணவிக்கு நடந்துள்ள கொடுமை மிகவும் வருத்தத்துக்கு உரியது. இது குறித்து நிச்சயமாக விவாதிக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். மேலும், இந்த சம்பவத்தை விவாதிக்க தற்போது நேரமில்லை என்று கூறியதால், மேலும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய ஜெயபாச்சன், இதற்கு முன்னதாகவே இது பற்றி நாம் விவாதித்திருக்க வேண்டும். ஆனால், இப்போது கூட இதற்கு நேரமில்லையா என்று ஆவேசமாகப் பேசினார்.
இந்த நிலையில், இன்று பிற்பகலில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இந்த விவகாரம் குறித்து இன்று விளக்கம் அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது
தினமணி
புது தில்லியில், மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கட்சி வேறுபாடின்றி பல எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.
ஞாயிறன்று இரவு தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வெளியில் தூக்கி வீசப்பட்டாள். அவளும், அவளது ஆண் நண்பரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் பல்வேறு கட்சி எம்.பிக்கள் இந்த விவகாரத்தை இன்று எழுப்பினர்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் இது குறித்து பேசுகையில், 23 வயது மாணவியை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, இந்தியாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம். நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டும். நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி. ராஜா எழுந்து பேசுகையில், நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. உடனடியாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, இதுபோன்ற குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த சமயத்தில் பேச எழுந்த சமாஜ்வாதி உறுப்பினர் ஜெயபாச்சன், 23 வயது மாணவிக்கு நடந்துள்ள கொடுமை மிகவும் வருத்தத்துக்கு உரியது. இது குறித்து நிச்சயமாக விவாதிக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். மேலும், இந்த சம்பவத்தை விவாதிக்க தற்போது நேரமில்லை என்று கூறியதால், மேலும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய ஜெயபாச்சன், இதற்கு முன்னதாகவே இது பற்றி நாம் விவாதித்திருக்க வேண்டும். ஆனால், இப்போது கூட இதற்கு நேரமில்லையா என்று ஆவேசமாகப் பேசினார்.
இந்த நிலையில், இன்று பிற்பகலில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இந்த விவகாரம் குறித்து இன்று விளக்கம் அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஏர்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் மற்றும் வீடியோகான் டி.டி.எச்.,சில் விஸ்வரூபம்!
ஏர்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் மற்றும் வீடியோகானும் விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.,சில் ஒளிபரப்புகின்றன. கமல் ஹாசன் நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வரூபம். முதன்முறையாக இத்திரைப்படம் டி.டி.எச் மூலம் வெளியிடப்பட இருக்கிறது. ஆரம்பத்தில் விஸ்வரூபம் திரைப்படம் ஏர்டெல் டி.டி.எச்சில் மட்டுமே வெளியிட இருந்தது. தற்போது அந்த நிலை மாறி ரிலையன்ஸ் மற்றும் வீடியோகான் டி.டி.எச்சிலும் ஒளிபரப்பபட இருக்கிறது. ஆரோ 3டி எனும் நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் 11ம் தேதி திரைக்கு வருகிறது. டி.டி.எச்சில் ஒருநாள் முன்னதாக அதாவது 10ம் தேதி இரவே ஒளிபரப்பபடுகிறது. இந்த டி.டி.எச் இணைப்புக்கு ரூ.1000 வரை வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
தினகரன்
ஏர்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் மற்றும் வீடியோகானும் விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.,சில் ஒளிபரப்புகின்றன. கமல் ஹாசன் நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வரூபம். முதன்முறையாக இத்திரைப்படம் டி.டி.எச் மூலம் வெளியிடப்பட இருக்கிறது. ஆரம்பத்தில் விஸ்வரூபம் திரைப்படம் ஏர்டெல் டி.டி.எச்சில் மட்டுமே வெளியிட இருந்தது. தற்போது அந்த நிலை மாறி ரிலையன்ஸ் மற்றும் வீடியோகான் டி.டி.எச்சிலும் ஒளிபரப்பபட இருக்கிறது. ஆரோ 3டி எனும் நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் 11ம் தேதி திரைக்கு வருகிறது. டி.டி.எச்சில் ஒருநாள் முன்னதாக அதாவது 10ம் தேதி இரவே ஒளிபரப்பபடுகிறது. இந்த டி.டி.எச் இணைப்புக்கு ரூ.1000 வரை வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
தினகரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரஜினி ஒரு தடவை சொன்னார்: சிகரெட் பழக்கத்தை விட்ட ரசிகர்கள்
ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அந்தப் படத்தில் ரஜினி பேசிய "நான் ஒரு தடவை சொன்னா அது நூறு தடவை சொன்ன மாதிரி" என்கிற வசனம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றது. அது வெறும் வசனம் மட்டுமல்ல ரஜினியின் வேதவாக்கு என்பது தற்போது புரிந்துள்ளது. அண்மையில் தனது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ரசிகர்களிடம் புகை மற்றும் மது பழக்கத்தை விட்டுவிடும்படி வேண்டுகோள் விடுத்தார். இப்படி அவர் ஒரு முறை விடுத்த வேண்டுகோளை நூறு முறை விடுத்த வேண்டுகோளாக ஏற்று புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளனர் சைதை ரசிகர்கள். மேலும் அவர்கள் சிகரெட்டை சாலையில் கொட்டி எரித்து புகைப் பழக்கத்துக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
தினமணி
ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அந்தப் படத்தில் ரஜினி பேசிய "நான் ஒரு தடவை சொன்னா அது நூறு தடவை சொன்ன மாதிரி" என்கிற வசனம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றது. அது வெறும் வசனம் மட்டுமல்ல ரஜினியின் வேதவாக்கு என்பது தற்போது புரிந்துள்ளது. அண்மையில் தனது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ரசிகர்களிடம் புகை மற்றும் மது பழக்கத்தை விட்டுவிடும்படி வேண்டுகோள் விடுத்தார். இப்படி அவர் ஒரு முறை விடுத்த வேண்டுகோளை நூறு முறை விடுத்த வேண்டுகோளாக ஏற்று புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளனர் சைதை ரசிகர்கள். மேலும் அவர்கள் சிகரெட்டை சாலையில் கொட்டி எரித்து புகைப் பழக்கத்துக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
புனேவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
புனேவில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.
புனே நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்த கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
தினமணி
புனேவில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள்.
புனே நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்த கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்.
சென்னையில் 19.12.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
புதுதாங்கல் பகுதி: முல்லை நகர் டி.என்.எச்.பி., பழைய மற்றும் புதிய ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், பட்டேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், டி.டி.கே.நகர், கிருஷ்ணா நகர், சக்தி நகர், கன்னடபாளையம், கிஷ்கின்தா ரோடு, சாய் நகர், ஸ்ரீ சாய் நகர், ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், மிலன்டை தெரு.
மாம்பலம் பகுதி: இராஜமன்னார் தெரு, ஜி.என்.செட்டி தெரு, பனங்கல் பார்க், உஸ்மான் ரோடு, துரைசாமி ரோடு, இராஜாச்சாரி தெரு, பசுல்லா தெரு, கோபால கிருஷ்ண ஐயர் தெரு, தியாகராஜா ரோடு, தீனதயாளன் தெரு, சீனிவாசா தெரு, இராமன் தெரு, ராஜாபாதர் தெரு, லோடிகான் தெரு, கோபாலகிருஷ்ணன் தெரு, கிரியப்பா தெரு, விஜயராகவாச்சாரி தெரு, டாக்டர். நாயர் ரோடு, வடக்கு போக் ரோடு, பாசுதேவ் தெரு, சிங்கார வேலு தெரு, இராஜா தெரு, நானா தெரு, சிவஞானம் தெரு, ஆற்காடு ரோடு, டேனியல் தெரு, சரவண தெரு,
நீலகண்ட மேத்தா தெரு, ஜெகதீசன் தெரு, வைத்தியராமன் தெரு, தணிகாசலம் ரோடு, மேலோனி தெரு, பகிவந்தம் தெரு, கிரசன்ட் பார்க் தெரு, மைலை ரங்கநாதன் தெரு, மாசிலாமணி தெரு, இராஜாம்மாள் தெரு, வெங்கட நாராயனா தெரு, ஜெகதாம்பாள் தெரு, வடக்கு கிரசண்ட் தெரு, லஷ்மி காலனி, மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, யோகாம்பாள் தெரு, சிங்காரம் தெரு, அனுமந்தராவ் தெரு, ராமராவ் தெரு, சீனுவாசா தெரு, ராமச்சத்திரா ரோடு, சாம்பசிவம் தெரு, ராகவையா ரோடு, ராஜாச்சாரி தெரு, பர்கிட் ரோடு.
பரங்கிமலை பகுதி: பட்லேன் மற்றும் ரோடு, இரணுவ குடியிருப்பு, மெக்ஸின் சாலை, புணித தோமையார் மலை மருத்துவமனை, ராமர் கோயில் தெரு, மீனம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஏர்போர்ட், ஜி.எஸ்.டி.சாலை ஒரு பகுதி, நந்தம்பாக்கம் மெயின் ரோடு, உட்கிரிக் கவுண்டி, பர்மா காலனி, நசரத்புரம், சிரிபுரம் காலனி, ஆலந்தூர், போலீஸ் ஆபிசர் ரோடு, அச்சுகம் நகர்.
பெசன்ட் நகர் பகுதி: பெசன்ட் நகர், ஒரு பகுதி - சாஸ்திரி நகர், அடையாறு, திருவான்மியூர், எல்.பி.ரோடு, எம்.ஜி.ரோடு.
பஞ்செட்டி பகுதி: பஞ்செட்டி, அழிஞ்சிவாக்கம், தட்சூர், இருளிப்பட்டு, பெரவலூர், பொன்னேரி, கீழ்மேனி, சென்னிவாக்கம், அமூர், நெடுவரம்வாக்கம், சாத்தரம், ஆண்டர்குப்பம்.
காமராஜ் நகர் பகுதி : காமராஜ் நகர், என்.எம்.ரோடு, ஆவடி த.நா.வீ.வ.வாரியம், வசந்தம் நகர், கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு, கன்னபாளையம், ஆவடி பூந்தமல்லி ரோடு, ஆவடி மார்க்கெட், குமரன் நகர், பெரியார் நகர், ஆனந்தம் நகர்.
புழல் பகுதி : செங்குன்றம் ஜி.என்.டி.சாலை, சண்முகபுரம், சூரப்பட்டு, எழில் நகர், நாகப்பா எஸ்டேட், கிராண்ட்லைன், புழல், காவாங்கரை, இந்திரா நகர், கதிர்வேடு, கண்ணப்பசாமி நகர், பாடியநல்லூர், பாரதிதாசன் நகர், மொண்டியம்மன் நகர், மதனம் குப்பம், சைக்கிள் ஷாப்.
தினமணி
சென்னையில் 19.12.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
புதுதாங்கல் பகுதி: முல்லை நகர் டி.என்.எச்.பி., பழைய மற்றும் புதிய ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், பட்டேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், டி.டி.கே.நகர், கிருஷ்ணா நகர், சக்தி நகர், கன்னடபாளையம், கிஷ்கின்தா ரோடு, சாய் நகர், ஸ்ரீ சாய் நகர், ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், மிலன்டை தெரு.
மாம்பலம் பகுதி: இராஜமன்னார் தெரு, ஜி.என்.செட்டி தெரு, பனங்கல் பார்க், உஸ்மான் ரோடு, துரைசாமி ரோடு, இராஜாச்சாரி தெரு, பசுல்லா தெரு, கோபால கிருஷ்ண ஐயர் தெரு, தியாகராஜா ரோடு, தீனதயாளன் தெரு, சீனிவாசா தெரு, இராமன் தெரு, ராஜாபாதர் தெரு, லோடிகான் தெரு, கோபாலகிருஷ்ணன் தெரு, கிரியப்பா தெரு, விஜயராகவாச்சாரி தெரு, டாக்டர். நாயர் ரோடு, வடக்கு போக் ரோடு, பாசுதேவ் தெரு, சிங்கார வேலு தெரு, இராஜா தெரு, நானா தெரு, சிவஞானம் தெரு, ஆற்காடு ரோடு, டேனியல் தெரு, சரவண தெரு,
நீலகண்ட மேத்தா தெரு, ஜெகதீசன் தெரு, வைத்தியராமன் தெரு, தணிகாசலம் ரோடு, மேலோனி தெரு, பகிவந்தம் தெரு, கிரசன்ட் பார்க் தெரு, மைலை ரங்கநாதன் தெரு, மாசிலாமணி தெரு, இராஜாம்மாள் தெரு, வெங்கட நாராயனா தெரு, ஜெகதாம்பாள் தெரு, வடக்கு கிரசண்ட் தெரு, லஷ்மி காலனி, மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, யோகாம்பாள் தெரு, சிங்காரம் தெரு, அனுமந்தராவ் தெரு, ராமராவ் தெரு, சீனுவாசா தெரு, ராமச்சத்திரா ரோடு, சாம்பசிவம் தெரு, ராகவையா ரோடு, ராஜாச்சாரி தெரு, பர்கிட் ரோடு.
பரங்கிமலை பகுதி: பட்லேன் மற்றும் ரோடு, இரணுவ குடியிருப்பு, மெக்ஸின் சாலை, புணித தோமையார் மலை மருத்துவமனை, ராமர் கோயில் தெரு, மீனம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஏர்போர்ட், ஜி.எஸ்.டி.சாலை ஒரு பகுதி, நந்தம்பாக்கம் மெயின் ரோடு, உட்கிரிக் கவுண்டி, பர்மா காலனி, நசரத்புரம், சிரிபுரம் காலனி, ஆலந்தூர், போலீஸ் ஆபிசர் ரோடு, அச்சுகம் நகர்.
பெசன்ட் நகர் பகுதி: பெசன்ட் நகர், ஒரு பகுதி - சாஸ்திரி நகர், அடையாறு, திருவான்மியூர், எல்.பி.ரோடு, எம்.ஜி.ரோடு.
பஞ்செட்டி பகுதி: பஞ்செட்டி, அழிஞ்சிவாக்கம், தட்சூர், இருளிப்பட்டு, பெரவலூர், பொன்னேரி, கீழ்மேனி, சென்னிவாக்கம், அமூர், நெடுவரம்வாக்கம், சாத்தரம், ஆண்டர்குப்பம்.
காமராஜ் நகர் பகுதி : காமராஜ் நகர், என்.எம்.ரோடு, ஆவடி த.நா.வீ.வ.வாரியம், வசந்தம் நகர், கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு, கன்னபாளையம், ஆவடி பூந்தமல்லி ரோடு, ஆவடி மார்க்கெட், குமரன் நகர், பெரியார் நகர், ஆனந்தம் நகர்.
புழல் பகுதி : செங்குன்றம் ஜி.என்.டி.சாலை, சண்முகபுரம், சூரப்பட்டு, எழில் நகர், நாகப்பா எஸ்டேட், கிராண்ட்லைன், புழல், காவாங்கரை, இந்திரா நகர், கதிர்வேடு, கண்ணப்பசாமி நகர், பாடியநல்லூர், பாரதிதாசன் நகர், மொண்டியம்மன் நகர், மதனம் குப்பம், சைக்கிள் ஷாப்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரை
நாட்டின் அமைதிக்கு சீர்குலைக்கும் சக்திகளை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார்.
கோவை: நாட்டின் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் சக்திகளை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கார்கில் போர் மற்றும் அந்தமான்-நிக்கோபர் தீவு மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட விமானப் படை பிரிவுகளின் 50ஆம் ஆண்டு நிறைவை அடுத்து, கோவை சூலூர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற கவுரவ விழாவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய அமைதிக்கும், வெளிநாடுகளுடனான சமூக உறவுகளுக்கும் உகந்த கொள்கைகளை இந்தியா வகுத்து செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு என்றும் அவர் கூறினார். ஐக்கிய நாடு அமைதிக் குழுவில் இந்திய படைகள் இடம்பெற்றிருப்பது நாட்டின் அமைதிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பெருமையுடன் தெரிவித்தார். முன்னதாக விமானப் படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் ஆளுநர் ரோசய்யா, விமானப் படை தளபதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தினகரன்
நாட்டின் அமைதிக்கு சீர்குலைக்கும் சக்திகளை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார்.
கோவை: நாட்டின் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் சக்திகளை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கார்கில் போர் மற்றும் அந்தமான்-நிக்கோபர் தீவு மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட விமானப் படை பிரிவுகளின் 50ஆம் ஆண்டு நிறைவை அடுத்து, கோவை சூலூர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற கவுரவ விழாவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய அமைதிக்கும், வெளிநாடுகளுடனான சமூக உறவுகளுக்கும் உகந்த கொள்கைகளை இந்தியா வகுத்து செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு என்றும் அவர் கூறினார். ஐக்கிய நாடு அமைதிக் குழுவில் இந்திய படைகள் இடம்பெற்றிருப்பது நாட்டின் அமைதிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பெருமையுடன் தெரிவித்தார். முன்னதாக விமானப் படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் ஆளுநர் ரோசய்யா, விமானப் படை தளபதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தினகரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வயிற்றுக்குள் சிரிஞ்ச் வைத்து தைத்ததால் பிரச்னை உயிருக்கு போராடும் இளம்பெண்.
நாகர்கோவில் : நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்தவர் சகாய ஆண்றனி மிக்கேலாள் (22). இவருக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (25) என்பவருக்கும் கடந்த ஒரு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கர்ப்பவதியாக இருந்த மிக்கேலாள், பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்தார். அவரை கடந்த அக்டோபர் 28ம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 31ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையை வெளியே எடுப்பதில் சிக்கல் இருந்ததால், கப் கருவி மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர். சகாய மிக்கேலாளுக்கு தையலும் போடப்பட்டது. ஆனால் மிக்கேலாளுக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்தது. வயிற்று வலி அதிகமாகவே அவசர, அவசரமாக அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்துள்ளனர்.
பின்னர் 2 மணி நேரம் கழித்து மயக்க நிலையில் வெளியே அழைத்து வந்துள்ளனர். அதன் பின்னர் அவரது உறவினர்கள் விசாரிக்கையில் ஏற்கனவே வயிற்றில் தையல் போடும் போது, வயிற்றுக்குள் சிரிஞ்ச்சை வைத்து தைத்ததும், பின்னர் அவசர, அவசரமாக அதை வெளியே எடுத்ததும் தெரிய வந்தது. இது குறித்து உறவினர்கள் கேட்ட போது, டாக்டர் தரப்பில் மறுப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் சகாய ஆன்றனி மிக்கேலாளின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. ஆனால் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அவசர, அவசரமாக அங்கிருந்து வெளியேற்றி விட்டனர். விஷயத்தை வெளியே சொல்ல கூடாது என பல தரப்பட்ட மிரட்டல்களும் சகாய ஆன்றனி மிக்லோள் குடும்பத்துக்கு வந்தன.
இந்த பிரச்சினைக்கு பிறகு சகாய ஆன்றனி மிக்கேலாளின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. கைக்குழந்தையுடன் கடந்த 2 மாதமாக இயற்கை உபாதைகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். ஏழ்மை நிலையால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லை.
தினமும் அவரை நடைபிணமாக குமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வருவதும், கொண்டு செல்வதுமாக இருக்கிறார்கள். மெல்ல அவர் கோமா நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி பலமுறை கலெக்டருக்கும், மருத்துவ உயர் அதிகாரிகளுக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் கூட புகார் மனுக்களை அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கண் துடைப்பு விசாரணை குழு
மகப்பேறு சம்பந்தமான பிரச்னை என்பதால், அத்துறையை சார்ந்தவர்களை வைத்தே விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால் சகாய ஆன்றனி மிக்கேலாள் விஷயத்தில் மகப்பேறு துறையை சார்ந்தவர்கள் விசாரணை மேற்கொள்ளாமல், காது, மூக்கு, தொண்டை மருத்துவரை நியமித்து விசாரணை குழுவை அமைத்து இருக்கிறார்கள். வெறும் கண் துடைப்புக்காகவும், ஒரு சிலரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துக்காக இவ்வாறு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
தினகரன்
நாகர்கோவில் : நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்தவர் சகாய ஆண்றனி மிக்கேலாள் (22). இவருக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (25) என்பவருக்கும் கடந்த ஒரு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கர்ப்பவதியாக இருந்த மிக்கேலாள், பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்தார். அவரை கடந்த அக்டோபர் 28ம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 31ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையை வெளியே எடுப்பதில் சிக்கல் இருந்ததால், கப் கருவி மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர். சகாய மிக்கேலாளுக்கு தையலும் போடப்பட்டது. ஆனால் மிக்கேலாளுக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்தது. வயிற்று வலி அதிகமாகவே அவசர, அவசரமாக அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்துள்ளனர்.
பின்னர் 2 மணி நேரம் கழித்து மயக்க நிலையில் வெளியே அழைத்து வந்துள்ளனர். அதன் பின்னர் அவரது உறவினர்கள் விசாரிக்கையில் ஏற்கனவே வயிற்றில் தையல் போடும் போது, வயிற்றுக்குள் சிரிஞ்ச்சை வைத்து தைத்ததும், பின்னர் அவசர, அவசரமாக அதை வெளியே எடுத்ததும் தெரிய வந்தது. இது குறித்து உறவினர்கள் கேட்ட போது, டாக்டர் தரப்பில் மறுப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் சகாய ஆன்றனி மிக்கேலாளின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. ஆனால் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அவசர, அவசரமாக அங்கிருந்து வெளியேற்றி விட்டனர். விஷயத்தை வெளியே சொல்ல கூடாது என பல தரப்பட்ட மிரட்டல்களும் சகாய ஆன்றனி மிக்லோள் குடும்பத்துக்கு வந்தன.
இந்த பிரச்சினைக்கு பிறகு சகாய ஆன்றனி மிக்கேலாளின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. கைக்குழந்தையுடன் கடந்த 2 மாதமாக இயற்கை உபாதைகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். ஏழ்மை நிலையால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லை.
தினமும் அவரை நடைபிணமாக குமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வருவதும், கொண்டு செல்வதுமாக இருக்கிறார்கள். மெல்ல அவர் கோமா நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி பலமுறை கலெக்டருக்கும், மருத்துவ உயர் அதிகாரிகளுக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் கூட புகார் மனுக்களை அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கண் துடைப்பு விசாரணை குழு
மகப்பேறு சம்பந்தமான பிரச்னை என்பதால், அத்துறையை சார்ந்தவர்களை வைத்தே விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால் சகாய ஆன்றனி மிக்கேலாள் விஷயத்தில் மகப்பேறு துறையை சார்ந்தவர்கள் விசாரணை மேற்கொள்ளாமல், காது, மூக்கு, தொண்டை மருத்துவரை நியமித்து விசாரணை குழுவை அமைத்து இருக்கிறார்கள். வெறும் கண் துடைப்புக்காகவும், ஒரு சிலரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துக்காக இவ்வாறு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
தினகரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
திருப்பதி கோவிலுக்கு 3 கிலோ தங்கம் காணிக்கையாக அளித்த விஜய் மல்லய்யா.
திருமலை: கிங்ஃபிஷர் ஏர் லைன்ஸ் நிறுவன அதிபர் விஜய் மல்லைய்யா, தனது 57வது பிறந்தநாளையொட்டி, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு, 3 கிலோ தங்கத்தை காணிக்கை அளித்துள்ளார்.
தினகரன்
திருமலை: கிங்ஃபிஷர் ஏர் லைன்ஸ் நிறுவன அதிபர் விஜய் மல்லைய்யா, தனது 57வது பிறந்தநாளையொட்டி, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு, 3 கிலோ தங்கத்தை காணிக்கை அளித்துள்ளார்.
தினகரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 24 of 37 • 1 ... 13 ... 23, 24, 25 ... 30 ... 37
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 24 of 37
|
|