புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்)
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
First topic message reminder :
ஆரோக்கியமான உறவுகள் - (தொடர்கதை ஞாயிறுதோரும்)
அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள். நான் இன்று முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் படித்து இன்புறும் வகையில் "ஆரோக்கியமான உறவுகள்" என்ற பெயரில் தொடர்கதை ஒன்றை உங்கள் ஆசீர்வாதத்தோடு எழுத உள்ளேன். இக்கதையில் நான் கூற விழைவது உறவுகளுக்குள்ளே உள்ள அன்பின் ஆழம் பற்றித்தான்". தங்கள் நல்லாதரவுடன் இதோ தொடங்குகிறேன்.
அது யாரும் எதிர் பார்க்காத ஒரு மரணச்செய்தி. மகேஷ் அதைக் கேட்டதும், நிலைகுலைந்து விட்டார். இறந்தவர் மகேஷின் தங்கை சீதாவின் கணவர். வயது வெறும் 47தான். தன் ஒரே தங்கை சீதாவுக்கு இப்போது 38 வயது தான் ஆகிறது. பண வசதி நன்றாக இருந்த போதும் இந்த சிறிய வயதில் தன் தங்கை 15 வயது மகனுடன் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறாள்? என்ற கேள்விதான் மகேஷை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. அப்படியே, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன.
ஒருநாள் சீதா தன் அண்ணன் மகேஷ் வீட்டுக்கு வந்திருந்தாள். மகேஷ் தங்கை இளைத்து முகம் வாடி இருப்பதைக் கண்டு மிக வருத்தத்துடன் சீதாவிடம் "எப்படிம்மா இருக்க? உன் மகன் வைத்யா எப்படி இருக்கிறான்?" என கேட்க,
சீதா கண்ணில் வழிந்த நீரை தன் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு மெதுவாக சொல்லத் தொடங்கினாள். " அண்ணா, என்னவென்று சொல்வது? வைத்யா மிகவும் வாடிவிட்டான். எப்போதும் தன் அப்பா இல்லாத வெறுமையை தாங்க மாட்டாமல் தவிக்கிறான். அவனை தேற்ற என்னால் முடியவே இல்லை. அவனை எப்படி ஆளாக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை." என கண்ணீர் மல்கக் கூறினாள். மகேஷும் கண்கள் குளமாக, அவளை மனதளவில் தேற்றி விடை கொடுத்தான்.
மகேஷ் ஒருநாள் தன் வீட்டில் இருந்தபோது, அவரின் சகலை (சகலபாடி) சந்திரன் வந்தார். வந்தவர் மெல்ல சீதாவின் குடும்ப சூழ்நிலை குறித்து மகேஷிடம் விசாரிக்க, மகேஷ் தன் தங்கை பையன் வைத்யாவின் நிலையையும் அப்பாவின் நினைவால் அவன் வாடும் துயர் பற்றியும் சந்திரனிடம் சொன்னார். சந்திரன் மகேஷிடம் "மகேஷ், உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்? இப்போதே பேசலாமா?" எனக் கேட்க, மகேஷும் தலையாட்ட, சங்கரன் சொல்ல ஆரம்பித்தார்.
"மகேஷ், நீங்கள் என் சகலை (சகலபாடி), எனில் உங்கள் தங்கை சீதா எனக்கும் தங்கைதானே?" என்று கூற, மகேஷும் ஆம் என்பதுபோல் தலையாட்ட, சங்கரன் தொடர்ந்தார். - "என் கடைசி அக்கா, கீதாவைப்போலவே சிறு வயதில் கணவனை இழந்தவர். கணவன் இறந்தபின், தன் ஒரே மகளை வளர்க்க மிகவும் பாடுபட்டார். தம்பியாக நானும் என் அண்ணனும் பண உதவிகள் செய்தபோதிலும், எங்களால், அக்கா மகளுக்கு ஒரு அப்பா ஸ்தானத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. அக்காவுக்கும் ஒரு கணவன் இல்லாது பட்ட துயரங்களை கண்கொண்டு பார்க்க முடியாமல் இருந்தோம். எப்படியோ, அக்காவிற்கு அடைக்கலம் தந்து, குழந்தையை வளர்த்து அவளுக்கு ஒரு கல்யாணமும் செய்து முடித்தோம். ஆனால், எங்களால் என் அக்காவிற்கு உதவ முடிந்ததே தவிர, அவருக்கு கணவரின் இழப்பையும், அக்காவின் மகளுக்கு அப்பாவின் இடத்தையும் பூர்த்தி செய்ய முடியாமல் போனது." எனக் கூற
மகேஷ் "அண்ணா, நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?" எனக் கேட்க
சந்திரன் தொடர்ந்தார் - " மகேஷ், நான் சொல்லப் போவது உங்களுக்கு புதுமையாக இருக்கும். ஏற்றுக்கொள்ள முடியாதது போல் இருக்கும். ஆனால் உங்கள் தங்கை சீதா மற்றும் அவள் மகன் வைத்யா ஆகிய இருவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, நான் சொல்லப் போவது கண்டிப்பாக நல்லதாக இருக்கும். என்ன விஷயம் என்பதை நாளை நீங்கள் என்னோடு என் சொந்தக்காரர் வீட்டுக்கு வந்தீர்களானால் அவரின் வீட்டில் வைத்து சொல்லுவேன்? என்று கூறினார். மகேஷ் ஒன்றும் விளங்காதவராக, சரியென தலையாட்டினார்.
மறுநாள் காலையில் சந்திரன் மகேஷை கூட்டிக்கொண்டு, தன் உறவுக்காரரான அசோக் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீடே களையிழந்து வருத்தத்தோடு இருந்தது. அசோக் இருவரையும் வரவேற்று தேநீர் அளித்தார். வீடு வசதியாக இருந்தது. அசோக் தன் அம்மாவை இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அசோக்குக்கு கிட்டத்தட்ட 45 வயது இருக்கும். அவருக்கு இரு குழந்தைகள். பெரியவன் இந்த வருடம்தான் கல்லூரி சேர்ந்திருந்தான். இரண்டாவது மகள். அவள் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அசோக் ஒரு வண்டி பாகங்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனத்தில் சார்ஜ்மேனாக இருந்தார். நல்ல சம்பளம். ஆனால், சமீபத்தில் தன் மனைவியை விபத்தில் இழந்திருந்தார். மகேஷ் சந்திரனிடம் வந்த விவரம் குறித்து தனியாகக் கேட்க, சந்திரன் வீட்டுக்குச் சென்று சொல்கிறேன் எனக் கூற, மகேஷ் ஓரளவு யூகித்தவராக இருவரும் சந்திரனின் வீட்டுக்குத் திரும்பினர்.
சந்திரன் மகேஷிடம் "அசோக் குடும்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்க, மகேஷும் "நல்ல குடும்பம்" என்றார்.
சந்திரன் " மகேஷ், இப்போது அசோக் குடும்பத்தில் இரு குழந்தைகள் அம்மாவிற்காக ஏங்குகின்றன. அதுபோல் உன் தங்கையின் மகன் அப்பாவிற்காக ஏங்குகிறான். ஆனால் நீங்கள் மனது வைத்தால் மூன்று குழந்தைகளின் ஏக்கத்தையும் போக்க முடியும். அதாவது, அசோக்கிற்கு உங்கள் தங்கை சீதாவை ஏன் மனைவியாக்கக் கூடாது? இது மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து நான் எடுத்த முடிவாகும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என கேட்டு, ஆவலோடு மகேஷின் முகத்தை பார்த்தார்.
மகேஷ் "அண்ணா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆனால், அதற்கு அசோக் சீதா மற்றும் மூன்று குழந்தைகளின் சம்மதம் மட்டுமில்லாமல், இரு குடும்பத்தாரின் சம்மதம் வேண்டுமே" எனக் கூற,
சந்திரன் " மகேஷ், நான் அசோக்கின் குடும்பத்தில் இது பற்றி ஏற்கனவே கூறி, அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்றுவிட்டேன். நீங்கள், சீதாவிடம் மகனின் எதிர்காலத்தை மனதில் வைத்து சம்மதம் பெற்றால், குழந்தைகளை ஒன்றாக சந்திக்க வைத்து, பரஸ்பரம் புரிய வைத்து, அவர்களின் சம்மதத்தை நான் பெற்று விடுகிறேன்." எனக் கூற,
மகேஷுக்கு அப்போதே கல்யாணம் நடந்ததைப் போல நம்பிக்கை கிளைவிடத் தொடங்கியது. உடனே போய், தங்கையிடம் முழுதும் விளக்கி சம்மதம் பெற்றார்.
சந்திரன், மூன்று குழந்தைகளையும் ஒரு பூங்காவில் சந்திக்கச் செய்து பரஸ்பரம், இந்த கல்யாணத்தால் கிடைக்கப் போகும் நல்ல எதிர்காலத்தை விளக்கினார். குழந்தைகளும் அந்த "ஆரோக்கியமான உறவு" பற்றி புரிந்து சம்மதிக்க,
வடபழனி முருகன் கோவிலில் மூன்று குழந்தைகளும் முன்னின்று தங்கள் பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் நெருங்கிய உறவுகள் சம்மதிக்கவில்லை என்றாலும், போகப் போக, அனைவரும் அந்த உறவை ஆரோக்கியமாக உணர்ந்தனர்.
அசோக்கும் சீதாவும் ஆனந்தமாய் சந்திரனை நன்றிப் பெருக்கோடு ஆண்டவனாய் பார்த்தனர்.
(தொடரும்)
ஆரோக்கியமான உறவுகள் - (தொடர்கதை ஞாயிறுதோரும்)
அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள். நான் இன்று முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் படித்து இன்புறும் வகையில் "ஆரோக்கியமான உறவுகள்" என்ற பெயரில் தொடர்கதை ஒன்றை உங்கள் ஆசீர்வாதத்தோடு எழுத உள்ளேன். இக்கதையில் நான் கூற விழைவது உறவுகளுக்குள்ளே உள்ள அன்பின் ஆழம் பற்றித்தான்". தங்கள் நல்லாதரவுடன் இதோ தொடங்குகிறேன்.
அது யாரும் எதிர் பார்க்காத ஒரு மரணச்செய்தி. மகேஷ் அதைக் கேட்டதும், நிலைகுலைந்து விட்டார். இறந்தவர் மகேஷின் தங்கை சீதாவின் கணவர். வயது வெறும் 47தான். தன் ஒரே தங்கை சீதாவுக்கு இப்போது 38 வயது தான் ஆகிறது. பண வசதி நன்றாக இருந்த போதும் இந்த சிறிய வயதில் தன் தங்கை 15 வயது மகனுடன் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறாள்? என்ற கேள்விதான் மகேஷை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. அப்படியே, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன.
ஒருநாள் சீதா தன் அண்ணன் மகேஷ் வீட்டுக்கு வந்திருந்தாள். மகேஷ் தங்கை இளைத்து முகம் வாடி இருப்பதைக் கண்டு மிக வருத்தத்துடன் சீதாவிடம் "எப்படிம்மா இருக்க? உன் மகன் வைத்யா எப்படி இருக்கிறான்?" என கேட்க,
சீதா கண்ணில் வழிந்த நீரை தன் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு மெதுவாக சொல்லத் தொடங்கினாள். " அண்ணா, என்னவென்று சொல்வது? வைத்யா மிகவும் வாடிவிட்டான். எப்போதும் தன் அப்பா இல்லாத வெறுமையை தாங்க மாட்டாமல் தவிக்கிறான். அவனை தேற்ற என்னால் முடியவே இல்லை. அவனை எப்படி ஆளாக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை." என கண்ணீர் மல்கக் கூறினாள். மகேஷும் கண்கள் குளமாக, அவளை மனதளவில் தேற்றி விடை கொடுத்தான்.
மகேஷ் ஒருநாள் தன் வீட்டில் இருந்தபோது, அவரின் சகலை (சகலபாடி) சந்திரன் வந்தார். வந்தவர் மெல்ல சீதாவின் குடும்ப சூழ்நிலை குறித்து மகேஷிடம் விசாரிக்க, மகேஷ் தன் தங்கை பையன் வைத்யாவின் நிலையையும் அப்பாவின் நினைவால் அவன் வாடும் துயர் பற்றியும் சந்திரனிடம் சொன்னார். சந்திரன் மகேஷிடம் "மகேஷ், உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்? இப்போதே பேசலாமா?" எனக் கேட்க, மகேஷும் தலையாட்ட, சங்கரன் சொல்ல ஆரம்பித்தார்.
"மகேஷ், நீங்கள் என் சகலை (சகலபாடி), எனில் உங்கள் தங்கை சீதா எனக்கும் தங்கைதானே?" என்று கூற, மகேஷும் ஆம் என்பதுபோல் தலையாட்ட, சங்கரன் தொடர்ந்தார். - "என் கடைசி அக்கா, கீதாவைப்போலவே சிறு வயதில் கணவனை இழந்தவர். கணவன் இறந்தபின், தன் ஒரே மகளை வளர்க்க மிகவும் பாடுபட்டார். தம்பியாக நானும் என் அண்ணனும் பண உதவிகள் செய்தபோதிலும், எங்களால், அக்கா மகளுக்கு ஒரு அப்பா ஸ்தானத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. அக்காவுக்கும் ஒரு கணவன் இல்லாது பட்ட துயரங்களை கண்கொண்டு பார்க்க முடியாமல் இருந்தோம். எப்படியோ, அக்காவிற்கு அடைக்கலம் தந்து, குழந்தையை வளர்த்து அவளுக்கு ஒரு கல்யாணமும் செய்து முடித்தோம். ஆனால், எங்களால் என் அக்காவிற்கு உதவ முடிந்ததே தவிர, அவருக்கு கணவரின் இழப்பையும், அக்காவின் மகளுக்கு அப்பாவின் இடத்தையும் பூர்த்தி செய்ய முடியாமல் போனது." எனக் கூற
மகேஷ் "அண்ணா, நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?" எனக் கேட்க
சந்திரன் தொடர்ந்தார் - " மகேஷ், நான் சொல்லப் போவது உங்களுக்கு புதுமையாக இருக்கும். ஏற்றுக்கொள்ள முடியாதது போல் இருக்கும். ஆனால் உங்கள் தங்கை சீதா மற்றும் அவள் மகன் வைத்யா ஆகிய இருவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, நான் சொல்லப் போவது கண்டிப்பாக நல்லதாக இருக்கும். என்ன விஷயம் என்பதை நாளை நீங்கள் என்னோடு என் சொந்தக்காரர் வீட்டுக்கு வந்தீர்களானால் அவரின் வீட்டில் வைத்து சொல்லுவேன்? என்று கூறினார். மகேஷ் ஒன்றும் விளங்காதவராக, சரியென தலையாட்டினார்.
மறுநாள் காலையில் சந்திரன் மகேஷை கூட்டிக்கொண்டு, தன் உறவுக்காரரான அசோக் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீடே களையிழந்து வருத்தத்தோடு இருந்தது. அசோக் இருவரையும் வரவேற்று தேநீர் அளித்தார். வீடு வசதியாக இருந்தது. அசோக் தன் அம்மாவை இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அசோக்குக்கு கிட்டத்தட்ட 45 வயது இருக்கும். அவருக்கு இரு குழந்தைகள். பெரியவன் இந்த வருடம்தான் கல்லூரி சேர்ந்திருந்தான். இரண்டாவது மகள். அவள் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அசோக் ஒரு வண்டி பாகங்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனத்தில் சார்ஜ்மேனாக இருந்தார். நல்ல சம்பளம். ஆனால், சமீபத்தில் தன் மனைவியை விபத்தில் இழந்திருந்தார். மகேஷ் சந்திரனிடம் வந்த விவரம் குறித்து தனியாகக் கேட்க, சந்திரன் வீட்டுக்குச் சென்று சொல்கிறேன் எனக் கூற, மகேஷ் ஓரளவு யூகித்தவராக இருவரும் சந்திரனின் வீட்டுக்குத் திரும்பினர்.
சந்திரன் மகேஷிடம் "அசோக் குடும்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்க, மகேஷும் "நல்ல குடும்பம்" என்றார்.
சந்திரன் " மகேஷ், இப்போது அசோக் குடும்பத்தில் இரு குழந்தைகள் அம்மாவிற்காக ஏங்குகின்றன. அதுபோல் உன் தங்கையின் மகன் அப்பாவிற்காக ஏங்குகிறான். ஆனால் நீங்கள் மனது வைத்தால் மூன்று குழந்தைகளின் ஏக்கத்தையும் போக்க முடியும். அதாவது, அசோக்கிற்கு உங்கள் தங்கை சீதாவை ஏன் மனைவியாக்கக் கூடாது? இது மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து நான் எடுத்த முடிவாகும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என கேட்டு, ஆவலோடு மகேஷின் முகத்தை பார்த்தார்.
மகேஷ் "அண்ணா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆனால், அதற்கு அசோக் சீதா மற்றும் மூன்று குழந்தைகளின் சம்மதம் மட்டுமில்லாமல், இரு குடும்பத்தாரின் சம்மதம் வேண்டுமே" எனக் கூற,
சந்திரன் " மகேஷ், நான் அசோக்கின் குடும்பத்தில் இது பற்றி ஏற்கனவே கூறி, அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்றுவிட்டேன். நீங்கள், சீதாவிடம் மகனின் எதிர்காலத்தை மனதில் வைத்து சம்மதம் பெற்றால், குழந்தைகளை ஒன்றாக சந்திக்க வைத்து, பரஸ்பரம் புரிய வைத்து, அவர்களின் சம்மதத்தை நான் பெற்று விடுகிறேன்." எனக் கூற,
மகேஷுக்கு அப்போதே கல்யாணம் நடந்ததைப் போல நம்பிக்கை கிளைவிடத் தொடங்கியது. உடனே போய், தங்கையிடம் முழுதும் விளக்கி சம்மதம் பெற்றார்.
சந்திரன், மூன்று குழந்தைகளையும் ஒரு பூங்காவில் சந்திக்கச் செய்து பரஸ்பரம், இந்த கல்யாணத்தால் கிடைக்கப் போகும் நல்ல எதிர்காலத்தை விளக்கினார். குழந்தைகளும் அந்த "ஆரோக்கியமான உறவு" பற்றி புரிந்து சம்மதிக்க,
வடபழனி முருகன் கோவிலில் மூன்று குழந்தைகளும் முன்னின்று தங்கள் பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் நெருங்கிய உறவுகள் சம்மதிக்கவில்லை என்றாலும், போகப் போக, அனைவரும் அந்த உறவை ஆரோக்கியமாக உணர்ந்தனர்.
அசோக்கும் சீதாவும் ஆனந்தமாய் சந்திரனை நன்றிப் பெருக்கோடு ஆண்டவனாய் பார்த்தனர்.
(தொடரும்)
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மிக்க நன்றி கார்த்தி. நேரம் கிடைக்கும்போது என் சிறுகதை "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" கதை படித்துவிட்டு விமர்சிக்கவும்.slmkarthi wrote:கலக்குறிங்க. கதை சூப்பர். தொடரட்டும் உங்கள் இந்த சேவை. நிறைய பேருக்கு எழுத பிடிக்கும் அனால் எழுத வராது. வார்த்தை கோர்வை மற்றும் இது போல் நிறைய கதைக்கு தேவையான விஷயங்கள் வரத்து. அது உங்களுக்கு வருது. கலக்குங்க.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-9) (தொடர்கதை ஞாயிறுதோறும்)
போன வாரம்-8 வரை நடந்தது
//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.
மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.
இந்த இருவருக்கும் சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.
நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெறுகிறார்.
மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி சொல்ல சீதா முற்றிலும் மறுமணத்தை மறுக்க, சீதாவிடம் பேச சரியான நபர் சந்திரனின் விதவை அக்கா கலாவை மித்ரா தேர்ந்தெடுத்து கூற, கலாவும் சீதாவிடம் மறுமணம் குறித்துப் பேசுவதாக சந்திரனிடம் சொல்கிறார்.
இனி ......//
சந்திரனின் வீடு. ஒரு வியாழக்கிழமை. நேரம் இரவு 8.25 மணி.
சந்திரனின் இளைய மகன் நவீன் சந்திரனிடம் ஓடிவந்து "அப்பா, எனக்கு உடனே நீங்க, ஒரு ரூ.50 கொடுக்கவேண்டும்" என உரிமையோடு கேட்க,
மித்ரா: நவீன், உனக்கு எதற்கு அவ்வளவு பணம்? என்னவோ கொடுத்து வச்சிருக்கிராப்போல கேட்கிறாய்.
நவீன்: ஆமாம், எங்க தாத்தா உங்ககிட்ட கொடுத்து வச்சிருக்கிறத தானே கேட்கிறேன்.
மித்ரா: நீ கேட்கிறது, உங்க அப்பா, தன் உழைப்பால சம்பாதிச்சது. சொந்த பணம். அது ஒண்ணும் GPM இல்லை.
நவீன்: GPM -னா என்ன?
மித்ரா: GPM -னா Grand Parents Money . அதாவது, மூதாதையர் சொத்து.
நவீன்: Grand Parents Money என்று சொன்னா போதும். எங்களுக்கு புரியும். ஏன்னா, நாங்க VIII th இங்கிலீஷ் மீடியம். நீங்க X th தமிழ் மீடியம்.
மித்ரா: என்னவோ, "நான் VIII th பாஸ். நீ X th பெயில்" என்று செந்தில் கவுண்டமணிகிட்ட சொல்றமாதிரி சொல்ற.
நவீன்: அப்பா, இப்ப தரப்போறீங்களா இல்லையா?
மித்ரா: முதல்ல எதுக்காக வேணும்னு சொல்லு, ஏன்னா, உங்கப்பா யாரையும் ஏமாத்தாம, கொள்ளை அடிக்காம, உழைச்சு சம்பாதிச்சது. அது, வீணா விரயமாகக் கூடாது.
நவீன்: எங்க, கிளாஸ்ல 20 ஸ்டூடண்ட்ஸ் சேர்ந்து, ஆளுக்கு ரூ 50 ஷேர் போட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடப்போறோம்.
சந்திரன்: நல்ல விஷயம். ஆனா, நமக்கும் கிறிஸ்துமஸ்க்கும் என்ன சம்பந்தம்.
மித்ரா: ஏங்க, பிஞ்சு மனசுல நஞ்சை கலக்குறீங்க. கிறிஸ்துமஸ் ஒரு இந்திய அளவில், உலக அளவில் கொண்டாடப்படும் ஒரு பெரிய பண்டிகை. அதை அவன் கொண்டாடனும்னு நினைக்கறது தப்பா. நவீன், நீ பணத்த வாங்கிக்க செல்லம்.
சந்திரன்: நான் என்ன சொல்ல வரேன்னா, நாம ஹிந்து. நமக்கு ஏன் கிறிஸ்துமஸ் (என்ற சந்திரனின் வாயை தன் கையால் அடைத்தாள் மித்ரா).
மித்ரா: முதல்ல, பணத்த கொடுங்க. மத்தத அப்புறமா பேசிக்கலாம்.
சந்திரன் ரூ.50ஐ எடுத்து நவீனிடம் கொடுக்க, நவீன் சிட்டாய் பறந்தான்.
மித்ரா: நீங்க இன்னும் உங்க காலத்திலேயே இருக்கிறீர்கள். குழந்தைங்க இப்பவெல்லாம் ஜாதி மதம் பார்க்கறது இல்லை. எல்லா மதப் பண்டிகைகளையும் அவர்கள் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள். நீங்க ஜாதி அது இதுன்னு சொல்லி மனதில் நஞ்சை பாய்ச்சாதீங்க. விதவை மறுமணம் பற்றி யோசிக்கும் உன்னத மனம் படிச்ச உங்களுக்கு ஏன் மத வெறி?
சந்திரன்: மித்ரா, உன் ஒவ்வொரு செயலையும் கண்டு நான் பூரிப்படைகிறேன். நான், தடம் மாறும்போதெல்லாம் என்னை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும் நீ எனக்கு மனைவியாகக் கிடைத்தது நான் செய்த புண்ணியம். இருந்தாலும், 20 பசங்க ரூ.50 போட்டு கிடைக்கும் ரூ.1000ஐ, வெறுமனே ஒரு கேக் வெட்டி பாழாக்காமல், உபயோகமா எதாவது செய்தால் நன்றாக இருக்குமே என்றுதான்.
மித்ரா: சரி, நான் ஒரு ஐடியா சொல்லவா. இங்கிருந்து 2கிமீ தொலைவில் ஒரு அனாதை ஆஸ்ரமம் இருக்கு. நவீன் தன் நண்பர்களோட போய், ரூ.1000ஐ அவர்களுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாடக் கொடுத்து விட்டு வரச்சொல்லி அவனை கூப்பிட்டு, பேசுங்க.
சந்திரன்: மீண்டும் மீண்டும் உன் வார்த்தைகள் என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றன.
மித்ரா: போதும், போதும், உங்களுக்கு மெய் சிலிர்த்தால் அடுத்து என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும். (என்று கிண்டலாகக் கூறிக் கொண்டே நவீனை அழைத்தாள்)
சந்திரன் நவீனிடம் அனாதை ஆஸ்ரமம் பற்றிக் கூறி, அவர்களுக்கு ரூ.1000ஐ கொடுக்கும்படி கூற, நவீன் முதலில் மறுத்து, பின் விளக்கியபின் வியந்து, தானே, நண்பர்களுக்கு விளக்கி ஆஸ்ரமம் செல்ல முடிவெடுத்தான்.
சீதாவின் வீடு. வெள்ளிக்கிழமை. இரவு 7.50 மணி. கைப்பேசி அழைக்க, சீதா எடுத்துப் பார்த்தபோது, புதிய எண்ணாக இருக்கவே, ஏன் எடுக்கவேண்டும் என்று நினைத்து எடுக்காமல் விட்டுவிடுகிறாள். 10 நிமிடம் கழித்து மீண்டும் கைப்பேசி அழைக்க, இம்முறை, சந்திரன் "என்னம்மா, எப்படி இருக்கே? பையன் வைத்யா எப்படி இருக்கான்? என வினவ.
சீதா: சந்திரன் அண்ணாவா? சொல்லுங்கண்ணா என்ன விஷயம்?
சந்திரன்: சற்று முன்பு, என் அக்கா கலா உன்னை கைப்பேசியில் அழைத்தார்களாம், நீ எடுக்க வில்லையாம். ஒரு வேலை புதிய எண்ணாக இருக்கவே எடுக்கவில்லையோ என்று எண்ணி, என்னிடம் கூறினார்கள். நீ கலா அக்காவுடைய கைப்பேசி எண்ணை நான் சொல்கிறேன், கொஞ்சம் சேவ் செய்துகொள்கிறாயா?
(சந்திரன் சொல்லச் சொல்ல சீதா கலா அக்காவின் கைப்பேசி எண்ணை தன் கைப்பேசியில் சேகரித்துக் கொண்டாள்).
சந்திரன் வைத்த சில நிமிடங்களில் கலா அழைத்தார்.
(தொடரும் )
போன வாரம்-8 வரை நடந்தது
//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.
மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.
இந்த இருவருக்கும் சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.
நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெறுகிறார்.
மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி சொல்ல சீதா முற்றிலும் மறுமணத்தை மறுக்க, சீதாவிடம் பேச சரியான நபர் சந்திரனின் விதவை அக்கா கலாவை மித்ரா தேர்ந்தெடுத்து கூற, கலாவும் சீதாவிடம் மறுமணம் குறித்துப் பேசுவதாக சந்திரனிடம் சொல்கிறார்.
இனி ......//
சந்திரனின் வீடு. ஒரு வியாழக்கிழமை. நேரம் இரவு 8.25 மணி.
சந்திரனின் இளைய மகன் நவீன் சந்திரனிடம் ஓடிவந்து "அப்பா, எனக்கு உடனே நீங்க, ஒரு ரூ.50 கொடுக்கவேண்டும்" என உரிமையோடு கேட்க,
மித்ரா: நவீன், உனக்கு எதற்கு அவ்வளவு பணம்? என்னவோ கொடுத்து வச்சிருக்கிராப்போல கேட்கிறாய்.
நவீன்: ஆமாம், எங்க தாத்தா உங்ககிட்ட கொடுத்து வச்சிருக்கிறத தானே கேட்கிறேன்.
மித்ரா: நீ கேட்கிறது, உங்க அப்பா, தன் உழைப்பால சம்பாதிச்சது. சொந்த பணம். அது ஒண்ணும் GPM இல்லை.
நவீன்: GPM -னா என்ன?
மித்ரா: GPM -னா Grand Parents Money . அதாவது, மூதாதையர் சொத்து.
நவீன்: Grand Parents Money என்று சொன்னா போதும். எங்களுக்கு புரியும். ஏன்னா, நாங்க VIII th இங்கிலீஷ் மீடியம். நீங்க X th தமிழ் மீடியம்.
மித்ரா: என்னவோ, "நான் VIII th பாஸ். நீ X th பெயில்" என்று செந்தில் கவுண்டமணிகிட்ட சொல்றமாதிரி சொல்ற.
நவீன்: அப்பா, இப்ப தரப்போறீங்களா இல்லையா?
மித்ரா: முதல்ல எதுக்காக வேணும்னு சொல்லு, ஏன்னா, உங்கப்பா யாரையும் ஏமாத்தாம, கொள்ளை அடிக்காம, உழைச்சு சம்பாதிச்சது. அது, வீணா விரயமாகக் கூடாது.
நவீன்: எங்க, கிளாஸ்ல 20 ஸ்டூடண்ட்ஸ் சேர்ந்து, ஆளுக்கு ரூ 50 ஷேர் போட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடப்போறோம்.
சந்திரன்: நல்ல விஷயம். ஆனா, நமக்கும் கிறிஸ்துமஸ்க்கும் என்ன சம்பந்தம்.
மித்ரா: ஏங்க, பிஞ்சு மனசுல நஞ்சை கலக்குறீங்க. கிறிஸ்துமஸ் ஒரு இந்திய அளவில், உலக அளவில் கொண்டாடப்படும் ஒரு பெரிய பண்டிகை. அதை அவன் கொண்டாடனும்னு நினைக்கறது தப்பா. நவீன், நீ பணத்த வாங்கிக்க செல்லம்.
சந்திரன்: நான் என்ன சொல்ல வரேன்னா, நாம ஹிந்து. நமக்கு ஏன் கிறிஸ்துமஸ் (என்ற சந்திரனின் வாயை தன் கையால் அடைத்தாள் மித்ரா).
மித்ரா: முதல்ல, பணத்த கொடுங்க. மத்தத அப்புறமா பேசிக்கலாம்.
சந்திரன் ரூ.50ஐ எடுத்து நவீனிடம் கொடுக்க, நவீன் சிட்டாய் பறந்தான்.
மித்ரா: நீங்க இன்னும் உங்க காலத்திலேயே இருக்கிறீர்கள். குழந்தைங்க இப்பவெல்லாம் ஜாதி மதம் பார்க்கறது இல்லை. எல்லா மதப் பண்டிகைகளையும் அவர்கள் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள். நீங்க ஜாதி அது இதுன்னு சொல்லி மனதில் நஞ்சை பாய்ச்சாதீங்க. விதவை மறுமணம் பற்றி யோசிக்கும் உன்னத மனம் படிச்ச உங்களுக்கு ஏன் மத வெறி?
சந்திரன்: மித்ரா, உன் ஒவ்வொரு செயலையும் கண்டு நான் பூரிப்படைகிறேன். நான், தடம் மாறும்போதெல்லாம் என்னை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும் நீ எனக்கு மனைவியாகக் கிடைத்தது நான் செய்த புண்ணியம். இருந்தாலும், 20 பசங்க ரூ.50 போட்டு கிடைக்கும் ரூ.1000ஐ, வெறுமனே ஒரு கேக் வெட்டி பாழாக்காமல், உபயோகமா எதாவது செய்தால் நன்றாக இருக்குமே என்றுதான்.
மித்ரா: சரி, நான் ஒரு ஐடியா சொல்லவா. இங்கிருந்து 2கிமீ தொலைவில் ஒரு அனாதை ஆஸ்ரமம் இருக்கு. நவீன் தன் நண்பர்களோட போய், ரூ.1000ஐ அவர்களுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாடக் கொடுத்து விட்டு வரச்சொல்லி அவனை கூப்பிட்டு, பேசுங்க.
சந்திரன்: மீண்டும் மீண்டும் உன் வார்த்தைகள் என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றன.
மித்ரா: போதும், போதும், உங்களுக்கு மெய் சிலிர்த்தால் அடுத்து என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும். (என்று கிண்டலாகக் கூறிக் கொண்டே நவீனை அழைத்தாள்)
சந்திரன் நவீனிடம் அனாதை ஆஸ்ரமம் பற்றிக் கூறி, அவர்களுக்கு ரூ.1000ஐ கொடுக்கும்படி கூற, நவீன் முதலில் மறுத்து, பின் விளக்கியபின் வியந்து, தானே, நண்பர்களுக்கு விளக்கி ஆஸ்ரமம் செல்ல முடிவெடுத்தான்.
சீதாவின் வீடு. வெள்ளிக்கிழமை. இரவு 7.50 மணி. கைப்பேசி அழைக்க, சீதா எடுத்துப் பார்த்தபோது, புதிய எண்ணாக இருக்கவே, ஏன் எடுக்கவேண்டும் என்று நினைத்து எடுக்காமல் விட்டுவிடுகிறாள். 10 நிமிடம் கழித்து மீண்டும் கைப்பேசி அழைக்க, இம்முறை, சந்திரன் "என்னம்மா, எப்படி இருக்கே? பையன் வைத்யா எப்படி இருக்கான்? என வினவ.
சீதா: சந்திரன் அண்ணாவா? சொல்லுங்கண்ணா என்ன விஷயம்?
சந்திரன்: சற்று முன்பு, என் அக்கா கலா உன்னை கைப்பேசியில் அழைத்தார்களாம், நீ எடுக்க வில்லையாம். ஒரு வேலை புதிய எண்ணாக இருக்கவே எடுக்கவில்லையோ என்று எண்ணி, என்னிடம் கூறினார்கள். நீ கலா அக்காவுடைய கைப்பேசி எண்ணை நான் சொல்கிறேன், கொஞ்சம் சேவ் செய்துகொள்கிறாயா?
(சந்திரன் சொல்லச் சொல்ல சீதா கலா அக்காவின் கைப்பேசி எண்ணை தன் கைப்பேசியில் சேகரித்துக் கொண்டாள்).
சந்திரன் வைத்த சில நிமிடங்களில் கலா அழைத்தார்.
(தொடரும் )
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-10) (தொடர்கதை ஞாயிறுதோறும்)
போன வாரம்-9 வரை நடந்தது
//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.
மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.
இந்த இருவருக்கும் சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.
நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெறுகிறார்.
மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி சொல்ல சீதா முற்றிலும் மறுமணத்தை மறுக்க, சீதாவிடம் பேச சரியான நபர் சந்திரனின் விதவை அக்கா கலாவை மித்ரா தேர்ந்தெடுத்து கூற, கலாவும் சீதாவிடம் மறுமணம் குறித்துப் பேசுவதற்காக கைப்பேசியில் அழைக்கிறார்.
இனி ......//
சீதாவின் வீடு. நேரம் இரவு 8 மணி. கலா கைப்பேசியில் சீதாவை அழைக்கிறார்.
சீதா: ஹலோ.
கலா: ஹலோ, நான்தாம்மா சந்திரனின் அக்கா கலா பேசுறேன். எப்படிம்மா இருக்கே? பையன் ஸ்கூல் போறானா?
சீதா: சாரிக்கா, கொஞ்சம் முன்னே நீங்கதான் கூப்பிட்டீங்களா? என்கிட்ட உங்க போன் நம்பர் இல்லாததால எடுக்கலக்கா? தப்பா எடுத்துக்காதீங்க.
கலா: நீ இருக்கும் சூழ்நிலையில் தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தா எடுக்க மாட்டேன்னு எனக்கு புரியாதாம்மா. தெரியாத நம்பர எடுத்து ஹலோ சொல்லப்போய் அதையே தனக்கு சாதகமா பயன்படுத்திக்க எவ்வளவு பேர் காத்திருக்காங்க. நீ செய்ததுதான் சரி. அதனால் தான், நான் சந்திரனிடம் சொல்லி, என் மொபைல் எண்ணை உனக்குக் கொடுக்கச் சொன்னேன்.
சீதா: நீங்க சொல்றது சரிதான். அவர் இறந்த புதிதில் ஒரு ரெண்டு மூணு தெரியாத போன் வர, அதை எடுத்துப் பேசியதால் தேவையற்ற விளைவுகள் வரவே, அப்போதிலிருந்து தெரியாத யார் போன் செய்தாலும் எடுப்பதில்லை. தொடர்ந்து வருமானால், என் மகனிடம் சொல்லி அவனை எடுக்கச் சொல்வேன்.
கலா: சரியாச் சொன்னாய். அது சரி, அவர் இறந்து ஒரு மூன்று மாதங்கள் இருக்குமா?
சீதா : இன்றோடு சரியாக மூன்று மாதங்களும் இருபத்தோரு நாட்களும் ஆகின்றன.
கலா: நான் கேட்கக் கூடாதுதான், இருந்தாலும் கேட்கிறேன், வாழ்க்கை எப்படி போய்க் கொண்டிருக்கிறது?
சீதா: (கண்ணில் பொங்கிய நீரைத் துடைத்துக் கொண்டு, மூக்கை சிந்தியபடி) ஒரு நாள் போவது, ஒரு யுகமாக இருக்கிறது.
கலா: எனக்கு உன் நிலைமை புரியுது. கிட்டத்தட்ட நான் பட்ட அதே அவஸ்தைகளை நீயும் பட்டுக் கொண்டிருக்கிறாய். என் கணவர் இறந்தபோது என் வயது 26. என் மகளுக்கு 3 வயது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவரின் நினைவுகள் என்னை வாட்டி எடுத்தன.
சீதா: அப்படியானால் இப்போதெல்லாம், அவர் நினைப்பு உங்கள் மனதில் வருவதில்லையா?
கலா: முதல் இரண்டு வருடங்கள்தான். மறக்க முடியாத நிலைமை. அதன் பிறகு, எதிர்காலச் சிந்தனை. எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வது என்ற பயம். இவை மாறி மாறி வரும்போது, கணவரின் நினைவு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
சீதா: அதெப்படி முடியும். நம் மனம் முழுதும் நிறைந்தவரின் நினைவு எப்படி மறக்கும்?
கலா: உனக்கு இப்போது புரியாது. மனித மனம் எப்போதும் ஏதாவது நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கின்ற தன்மை உடையது. குடும்பத்தில் எல்லா பொருளாதாரச் சுமைகளையும் கணவர் சுமக்கும்போது நமக்கு சுமக்க சுமைகள் எதுவும் இல்லாமல் அவரின் நினைவுகளைமட்டுமே நம் மனம் சுமந்து கொண்டிருக்கும். அது ஒரு சூழல். ஆனால், நம் நிலைமை வேறு. அவரின் நினைவுகளை சுமக்கும் அதே வேளையில், அவர் சுமந்த குடும்ப சுமைகளை நாம் சுமக்கும் சூழ்நிலையில் இருக்கும்போது, மனம் இரு சுமைகளின் பாரம் தாங்கமாட்டாமல் பழைய சுமையை இறக்கி வைத்து விடும். இதுதான் இயல்பு.
சீதா: நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒவ்வொரு நொடியும் அவரின் நினைவுகளோடு தான் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
கலா: நீ சொல்வது நூறு சதவீதம் சரி. அவர் இறக்கி வைத்த பாரங்களை இப்போது நீ சுமக்கத் தொடங்கவில்லை என்பதுதான் என் கருத்து.
சீதா: எப்படிச் சொல்கிறீர்கள்?
கலா: நீ இப்போது மிகுந்த கவலையுடன் இருப்பதால், உன் சுற்றம் தற்போது அந்த சுமைகளை சுமந்துகொண்டிருக்கும். அவை எல்லாம், கொஞ்ச காலம் தான். அவர்களுக்கும் குடும்ப பாரம் உள்ளது. அதனால், உன் குடும்ப பாரத்தை அவர்கள் உன் தலையில் இறக்கி வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
சீதா: அப்படியென்றால், என் சகோதரர்கள் என்னை கொஞ்ச காலங்களில் தனியே விட்டுவிட்டு தங்கள் குடும்பத்தை கவனிக்கச் சென்று விடுவார்கள் என்று சொல்கிறீர்களா?
கலா: அதுதான் இயற்கை. நீ தனிமையில் இருக்கும்போது, இதைப் பற்றி சிந்தித்துப் பார்.
சீதா: இப்படியெல்லாம் பேசி எங்களை பிரிக்கத்தான் நீங்கள் போனில் இப்போது பேசிக்கொண்டிருக்கிறீர்களா? நான் ஏற்கனவே நொந்து போய் இருக்கிறேன். இப்படி பேசுவதானால், தயவு செய்து போனை வைத்து விடுங்கள். நான் உங்களிடம் பேசத் தயாராக இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள். (கைப்பேசியை நிறுத்தினால் சீதா)
(தொடரும் )
போன வாரம்-9 வரை நடந்தது
//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.
மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.
இந்த இருவருக்கும் சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.
நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெறுகிறார்.
மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி சொல்ல சீதா முற்றிலும் மறுமணத்தை மறுக்க, சீதாவிடம் பேச சரியான நபர் சந்திரனின் விதவை அக்கா கலாவை மித்ரா தேர்ந்தெடுத்து கூற, கலாவும் சீதாவிடம் மறுமணம் குறித்துப் பேசுவதற்காக கைப்பேசியில் அழைக்கிறார்.
இனி ......//
சீதாவின் வீடு. நேரம் இரவு 8 மணி. கலா கைப்பேசியில் சீதாவை அழைக்கிறார்.
சீதா: ஹலோ.
கலா: ஹலோ, நான்தாம்மா சந்திரனின் அக்கா கலா பேசுறேன். எப்படிம்மா இருக்கே? பையன் ஸ்கூல் போறானா?
சீதா: சாரிக்கா, கொஞ்சம் முன்னே நீங்கதான் கூப்பிட்டீங்களா? என்கிட்ட உங்க போன் நம்பர் இல்லாததால எடுக்கலக்கா? தப்பா எடுத்துக்காதீங்க.
கலா: நீ இருக்கும் சூழ்நிலையில் தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தா எடுக்க மாட்டேன்னு எனக்கு புரியாதாம்மா. தெரியாத நம்பர எடுத்து ஹலோ சொல்லப்போய் அதையே தனக்கு சாதகமா பயன்படுத்திக்க எவ்வளவு பேர் காத்திருக்காங்க. நீ செய்ததுதான் சரி. அதனால் தான், நான் சந்திரனிடம் சொல்லி, என் மொபைல் எண்ணை உனக்குக் கொடுக்கச் சொன்னேன்.
சீதா: நீங்க சொல்றது சரிதான். அவர் இறந்த புதிதில் ஒரு ரெண்டு மூணு தெரியாத போன் வர, அதை எடுத்துப் பேசியதால் தேவையற்ற விளைவுகள் வரவே, அப்போதிலிருந்து தெரியாத யார் போன் செய்தாலும் எடுப்பதில்லை. தொடர்ந்து வருமானால், என் மகனிடம் சொல்லி அவனை எடுக்கச் சொல்வேன்.
கலா: சரியாச் சொன்னாய். அது சரி, அவர் இறந்து ஒரு மூன்று மாதங்கள் இருக்குமா?
சீதா : இன்றோடு சரியாக மூன்று மாதங்களும் இருபத்தோரு நாட்களும் ஆகின்றன.
கலா: நான் கேட்கக் கூடாதுதான், இருந்தாலும் கேட்கிறேன், வாழ்க்கை எப்படி போய்க் கொண்டிருக்கிறது?
சீதா: (கண்ணில் பொங்கிய நீரைத் துடைத்துக் கொண்டு, மூக்கை சிந்தியபடி) ஒரு நாள் போவது, ஒரு யுகமாக இருக்கிறது.
கலா: எனக்கு உன் நிலைமை புரியுது. கிட்டத்தட்ட நான் பட்ட அதே அவஸ்தைகளை நீயும் பட்டுக் கொண்டிருக்கிறாய். என் கணவர் இறந்தபோது என் வயது 26. என் மகளுக்கு 3 வயது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவரின் நினைவுகள் என்னை வாட்டி எடுத்தன.
சீதா: அப்படியானால் இப்போதெல்லாம், அவர் நினைப்பு உங்கள் மனதில் வருவதில்லையா?
கலா: முதல் இரண்டு வருடங்கள்தான். மறக்க முடியாத நிலைமை. அதன் பிறகு, எதிர்காலச் சிந்தனை. எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வது என்ற பயம். இவை மாறி மாறி வரும்போது, கணவரின் நினைவு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
சீதா: அதெப்படி முடியும். நம் மனம் முழுதும் நிறைந்தவரின் நினைவு எப்படி மறக்கும்?
கலா: உனக்கு இப்போது புரியாது. மனித மனம் எப்போதும் ஏதாவது நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கின்ற தன்மை உடையது. குடும்பத்தில் எல்லா பொருளாதாரச் சுமைகளையும் கணவர் சுமக்கும்போது நமக்கு சுமக்க சுமைகள் எதுவும் இல்லாமல் அவரின் நினைவுகளைமட்டுமே நம் மனம் சுமந்து கொண்டிருக்கும். அது ஒரு சூழல். ஆனால், நம் நிலைமை வேறு. அவரின் நினைவுகளை சுமக்கும் அதே வேளையில், அவர் சுமந்த குடும்ப சுமைகளை நாம் சுமக்கும் சூழ்நிலையில் இருக்கும்போது, மனம் இரு சுமைகளின் பாரம் தாங்கமாட்டாமல் பழைய சுமையை இறக்கி வைத்து விடும். இதுதான் இயல்பு.
சீதா: நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒவ்வொரு நொடியும் அவரின் நினைவுகளோடு தான் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
கலா: நீ சொல்வது நூறு சதவீதம் சரி. அவர் இறக்கி வைத்த பாரங்களை இப்போது நீ சுமக்கத் தொடங்கவில்லை என்பதுதான் என் கருத்து.
சீதா: எப்படிச் சொல்கிறீர்கள்?
கலா: நீ இப்போது மிகுந்த கவலையுடன் இருப்பதால், உன் சுற்றம் தற்போது அந்த சுமைகளை சுமந்துகொண்டிருக்கும். அவை எல்லாம், கொஞ்ச காலம் தான். அவர்களுக்கும் குடும்ப பாரம் உள்ளது. அதனால், உன் குடும்ப பாரத்தை அவர்கள் உன் தலையில் இறக்கி வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
சீதா: அப்படியென்றால், என் சகோதரர்கள் என்னை கொஞ்ச காலங்களில் தனியே விட்டுவிட்டு தங்கள் குடும்பத்தை கவனிக்கச் சென்று விடுவார்கள் என்று சொல்கிறீர்களா?
கலா: அதுதான் இயற்கை. நீ தனிமையில் இருக்கும்போது, இதைப் பற்றி சிந்தித்துப் பார்.
சீதா: இப்படியெல்லாம் பேசி எங்களை பிரிக்கத்தான் நீங்கள் போனில் இப்போது பேசிக்கொண்டிருக்கிறீர்களா? நான் ஏற்கனவே நொந்து போய் இருக்கிறேன். இப்படி பேசுவதானால், தயவு செய்து போனை வைத்து விடுங்கள். நான் உங்களிடம் பேசத் தயாராக இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள். (கைப்பேசியை நிறுத்தினால் சீதா)
(தொடரும் )
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
படித்தவர்கள் விமர்சிக்கலாமே?
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
கண்டிப்பாக படிக்கிறேன்.ச. சந்திரசேகரன் wrote:மிக்க நன்றி கார்த்தி. நேரம் கிடைக்கும்போது என் சிறுகதை "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" கதை படித்துவிட்டு விமர்சிக்கவும்.slmkarthi wrote:கலக்குறிங்க. கதை சூப்பர். தொடரட்டும் உங்கள் இந்த சேவை. நிறைய பேருக்கு எழுத பிடிக்கும் அனால் எழுத வராது. வார்த்தை கோர்வை மற்றும் இது போல் நிறைய கதைக்கு தேவையான விஷயங்கள் வரத்து. அது உங்களுக்கு வருது. கலக்குங்க.
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
ஆரோக்கியமான உறவுகள் இனிக்கிறது
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
இனிய விமர்சனத்திற்கு நன்றிகள் கார்த்தி.slmkarthi wrote:ஆரோக்கியமான உறவுகள் இனிக்கிறது
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-11) (தொடர்கதை ஞாயிறுதோறும்)
சீதாவின் அண்ணன் மகேஷின் வீடு. நேரம் இரவு 09.45 மணி. மகேஷின் கைப்பேசி அழைக்க, மகேஷ் எடுக்க, மறுமுனையில் தங்கை சீதா (மிகுந்த கோபத்துடன்)
சீதா: அண்ணா, ஏன் என்னோட கைப்பேசி எண்ணை கலா அக்காவுக்கு கொடுத்தாய்? ஆறுதலா பேசுவாங்கன்னு பார்த்தா, நம் பாசமிக்க உறவை, கூடிய சீக்கிரம் பிரிஞ்சிடும்னு பேசுறாங்க. அதனால .......... (மகேஷ் குறுக்கிட்டு)
மகேஷ்: காலைல பெசலாமாம்மா. குழந்தை இப்போதான் அழுதுட்டு தூங்க ஆரம்பிச்சிருக்கா. பேசுற சத்தம் கேட்டா விழிச்சிக்குவா.
சீதா: (சீதா அண்ணனின் நிலை உணராதவளாக )அதில்லைனா. வந்து, அவங்க பேசுனது சரியா நீயே சொல்லு.
மகேஷ்: அதாம்மா. காலைல பேசிக்கலாம்னு சொன்னேனே. குழந்தைய இப்பத்தான் அண்ணி படாத பாடுபட்டு தூங்க வச்சிருக்கா.
சீதா: (சீதாவுக்கு தன் ஆதங்கத்தை அண்ணனிடம் கொட்டித் தீர்க்கவேண்டிய காட்டாயம் இருந்ததால்) அண்ணா, கொஞ்சம் அடுத்த அறைக்கு வந்து பேசேன். இப்பவே உன்கிட்ட பேச வேண்டியிருக்கு.
மகேஷ்: உனக்கு சொன்னா புரியாதாம்மா. நான் உன்கிட்ட பேசிக்கிட்டிருந்தா அண்ணி குழந்தையோட தனியா அவஸ்தை படுவா இல்லையா.
சீதா: (அண்ணனின் நிலை உணர்ந்தவளாக ) சரிண்ணா. நான் காலைல கூப்பிடுறேன்.
என்று சொல்லி கைப்பேசி இணைப்பை துண்டிக்க மனமின்றி துண்டித்தாள். மகன் வைத்யா அடுத்த அறையில் படித்துக் கொண்டிருக்க, சீதாவால் உறங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். மனம் மட்டும் கலா சொன்ன வார்த்தைகளையும், அண்ணன் சற்று முன்னர் தன்னோடு சற்று சலிப்பாக நடந்து கொண்டவிதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்க அப்படியே தூங்கிப் போனாள். மறு பக்கத்தில் மகேஷ் மனமின்றி தங்கையிடம் அவ்வாறு நடக்கவேண்டிய சூழல் அமைந்து விட்டதை எண்ணிக் கொண்டே உறங்கிப் போனான்.
மறுநாள் காலை. 6.15 மணி. சீதா விழித்துவிட்ட போதிலும் அண்ணனை கைப்பேசியில் அழைக்கவில்லை. அண்ணன் அழைக்கட்டுமே என காத்திருந்தாள்.
ஆனால், 8.00 மணியான பின்னும் மகேஷ் அழைத்தபாடில்லை. சீதாவிற்கு, கொஞ்சம் கொஞ்சமாக கோபம் பெருக ஆரம்பித்தது. ஆனால், மகேஷின் நிலை என்ன என்று சீதாவிற்கு எப்படித் தெரியும்? மகேஷ் இரவெல்லாம் குழந்தை அழுதுகொண்டே இருக்க, காலையில் குழந்தை நல மருத்துவரிடம் அவசரமாக சென்றிருப்பது சீதாவிர்க்குத் தெரிய வாய்ப்பில்லைதான். அதனால் தான், மகேஷ் தங்கையை காலையில் கைப்பேசியில் அழைக்கவில்லை என்பதை அறிந்தவன் ஆண்டவன் ஒருவன் மட்டுமே.
சந்திரனின் வீடு. காலைப் பரபரப்பு. இரு மகன்களும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கிடையில் டிவியில் ஒரு சேனலில் தெண்டுல்கர் சிக்ஸர் அடிக்க, உடனே மறு சேனலில் சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பல் டாக்டர் பல் பாதுகாப்பு பற்றி கூறிக் கொண்டிருந்தார். பெரியவனும் சிறியவனும் சேனலை மாற்றி மாற்றி பார்க்க, ஒரு சூழலில் தெண்டுல்கர் ஒரு சேனலில் அடித்த பந்து, அடுத்த சேனலில் ஆடிக் கொண்டிருந்த பல்லில் பட்டு, பல் தானே விழுந்து விடுவது போல் இரு காட்சிகளும் சேர்ந்து மித்ராவை குழப்பின. கடைசியில் பல் டாக்டர் ஆடும் பல்லை எடுக்க அனைவரும் தெண்டுல்கரிடம் செல்லுங்கள். அவர் சிக்ஸர் மூலம் பல்லை எடுத்து கையில் கொடுத்து விடுவார் எனக் கூறுவதுபோல் தெரிந்தது மித்ராவுக்கு.
(தொடரும் )
போன வாரம்-10 வரை நடந்தது
//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.
மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.
இந்த இருவருக்கும் சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.
நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெறுகிறார்.
மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி சொல்ல சீதா முற்றிலும் மறுமணத்தை மறுக்க, சீதாவிடம் பேச சரியான நபர் சந்திரனின் விதவை அக்கா கலாவை மித்ரா தேர்ந்தெடுத்து கூறுகிறார்.
கலாவும் சீதாவிடம் மறுமணம் குறித்து கைப்பேசியில் பேசுகிறார். கலா தன் அனுபவங்களின் கசப்பைக் கூறக்கூற கோபத்தில் சீதா மேலும் பேச விரும்பாமல் கைப்பேசி இணைப்பை துண்டிக்கிறார்.
இனி ......//
சீதாவின் அண்ணன் மகேஷின் வீடு. நேரம் இரவு 09.45 மணி. மகேஷின் கைப்பேசி அழைக்க, மகேஷ் எடுக்க, மறுமுனையில் தங்கை சீதா (மிகுந்த கோபத்துடன்)
சீதா: அண்ணா, ஏன் என்னோட கைப்பேசி எண்ணை கலா அக்காவுக்கு கொடுத்தாய்? ஆறுதலா பேசுவாங்கன்னு பார்த்தா, நம் பாசமிக்க உறவை, கூடிய சீக்கிரம் பிரிஞ்சிடும்னு பேசுறாங்க. அதனால .......... (மகேஷ் குறுக்கிட்டு)
மகேஷ்: காலைல பெசலாமாம்மா. குழந்தை இப்போதான் அழுதுட்டு தூங்க ஆரம்பிச்சிருக்கா. பேசுற சத்தம் கேட்டா விழிச்சிக்குவா.
சீதா: (சீதா அண்ணனின் நிலை உணராதவளாக )அதில்லைனா. வந்து, அவங்க பேசுனது சரியா நீயே சொல்லு.
மகேஷ்: அதாம்மா. காலைல பேசிக்கலாம்னு சொன்னேனே. குழந்தைய இப்பத்தான் அண்ணி படாத பாடுபட்டு தூங்க வச்சிருக்கா.
சீதா: (சீதாவுக்கு தன் ஆதங்கத்தை அண்ணனிடம் கொட்டித் தீர்க்கவேண்டிய காட்டாயம் இருந்ததால்) அண்ணா, கொஞ்சம் அடுத்த அறைக்கு வந்து பேசேன். இப்பவே உன்கிட்ட பேச வேண்டியிருக்கு.
மகேஷ்: உனக்கு சொன்னா புரியாதாம்மா. நான் உன்கிட்ட பேசிக்கிட்டிருந்தா அண்ணி குழந்தையோட தனியா அவஸ்தை படுவா இல்லையா.
சீதா: (அண்ணனின் நிலை உணர்ந்தவளாக ) சரிண்ணா. நான் காலைல கூப்பிடுறேன்.
என்று சொல்லி கைப்பேசி இணைப்பை துண்டிக்க மனமின்றி துண்டித்தாள். மகன் வைத்யா அடுத்த அறையில் படித்துக் கொண்டிருக்க, சீதாவால் உறங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். மனம் மட்டும் கலா சொன்ன வார்த்தைகளையும், அண்ணன் சற்று முன்னர் தன்னோடு சற்று சலிப்பாக நடந்து கொண்டவிதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்க அப்படியே தூங்கிப் போனாள். மறு பக்கத்தில் மகேஷ் மனமின்றி தங்கையிடம் அவ்வாறு நடக்கவேண்டிய சூழல் அமைந்து விட்டதை எண்ணிக் கொண்டே உறங்கிப் போனான்.
மறுநாள் காலை. 6.15 மணி. சீதா விழித்துவிட்ட போதிலும் அண்ணனை கைப்பேசியில் அழைக்கவில்லை. அண்ணன் அழைக்கட்டுமே என காத்திருந்தாள்.
ஆனால், 8.00 மணியான பின்னும் மகேஷ் அழைத்தபாடில்லை. சீதாவிற்கு, கொஞ்சம் கொஞ்சமாக கோபம் பெருக ஆரம்பித்தது. ஆனால், மகேஷின் நிலை என்ன என்று சீதாவிற்கு எப்படித் தெரியும்? மகேஷ் இரவெல்லாம் குழந்தை அழுதுகொண்டே இருக்க, காலையில் குழந்தை நல மருத்துவரிடம் அவசரமாக சென்றிருப்பது சீதாவிர்க்குத் தெரிய வாய்ப்பில்லைதான். அதனால் தான், மகேஷ் தங்கையை காலையில் கைப்பேசியில் அழைக்கவில்லை என்பதை அறிந்தவன் ஆண்டவன் ஒருவன் மட்டுமே.
சந்திரனின் வீடு. காலைப் பரபரப்பு. இரு மகன்களும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கிடையில் டிவியில் ஒரு சேனலில் தெண்டுல்கர் சிக்ஸர் அடிக்க, உடனே மறு சேனலில் சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பல் டாக்டர் பல் பாதுகாப்பு பற்றி கூறிக் கொண்டிருந்தார். பெரியவனும் சிறியவனும் சேனலை மாற்றி மாற்றி பார்க்க, ஒரு சூழலில் தெண்டுல்கர் ஒரு சேனலில் அடித்த பந்து, அடுத்த சேனலில் ஆடிக் கொண்டிருந்த பல்லில் பட்டு, பல் தானே விழுந்து விடுவது போல் இரு காட்சிகளும் சேர்ந்து மித்ராவை குழப்பின. கடைசியில் பல் டாக்டர் ஆடும் பல்லை எடுக்க அனைவரும் தெண்டுல்கரிடம் செல்லுங்கள். அவர் சிக்ஸர் மூலம் பல்லை எடுத்து கையில் கொடுத்து விடுவார் எனக் கூறுவதுபோல் தெரிந்தது மித்ராவுக்கு.
(தொடரும் )
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
அனைத்து (1800) வாசகர்களுக்கும் அன்பான நன்றிகள்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உறவின் உண்மையை உன்ன்னதமாய் சொன்ன விதம் நன்று சந்திரசேகர்
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|