புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 50%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10 
284 Posts - 45%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10 
20 Posts - 3%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 5 of 36 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 20 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Feb 12, 2013 1:09 pm

24. உத்திக் கவிதைகள்

1. வினை-பெயர் அடுத்து இருபொருள் படவரும் எண்ணும்மைகள்
(இருவிகற்ப அறுசீர் விருத்தம்)

முள்ளும் மலரும் மலரும் காயும் காயும் கனியுமே
பள்ளும் பறையும் பறையும் ஒலியும் ஒலியும் ஒளியுமே
காகமும் கரையும் கரையும் உடையும் உடையும் கிழியுமே
தாகமும் குறையும் குறையும் மறையும் மறையும் நிறையுமே.

கல்லும் கரையும் கரையும் அணையும் அணையும் உடையுமே
சொல்லும் விளக்கும் விளக்கும் இருளும் இருளும் மருளுமே
காற்றும் அலையும் அலையும் சுழலும் சுழலும் கழலுமே
நாற்றும் தழையும் தழையும் ஆடும் ஆடும் மேயுமே.

[ஒலிதல்=தழைத்தல்; கிழி=பரிசு; மறை=வேதம்]

இதுபோல் அமைத்தெழுத வேறென்ன எண்ணும்மைகள் பயன்படும்?

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Mar 24, 2013 8:03 pm

25. சிலேடை வெண்பாக்கள்

01. குரங்கு மனமா மனக் குரங்கா?

(இன்னிசை வெண்பா)
ஓடிடும் ஆடிடும் ஊரெலாம் தேடிடும்
நாடியது கைப்படின் நாராய்க் கிழிக்கும்
வனம்வாழ் குரங்குமனம் மானிடமோ அன்றி
மனிதன் மனமோ குரங்கு?

02. ஆவினமும் பாவினமும்

(இன்னிசை வெண்பா)
அசைபோடச் சீராகும். கட்டித் தளைக்க
இசையும். அடிவைத்து மேயும். தொடையிற்
பொசிந்து செழித்திடும் வெண்பாற் றருவதால்
ஆவினமே பாவினமாய்ப் பாடு.

--ரமணி, 05/03/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Apr 14, 2013 9:36 am

26. விஜய வருஷ சங்கல்பம்
(குறளடி வஞ்சிப்பா)

விஷுபுண்ணிய தினப்பிறப்பில்
விஷாலாக்ஷியின் அருட்பார்வையில்
விஜயவருஷம் பிறந்தெழுந்தது
விஷ்வரூபமாய் வளர்ந்தாளவே
தீவினையெலாம் தீப்பட்டு
நல்வினைகள் எழுந்தோங்கி
வல்லமைகள் பலசேர்ந்து
நலங்கள்பல விளைந்திடவே
பலவகைகளில் வணங்கிடுவோம்
இவ்வாண்டில்
ஊமைகள் பேசி உண்மைகள் வெளிவர
ஆமைகள் முயலாகி ஆற்றல் காட்டிடத்
தீமைகள் விலகி நன்மைகள் பெருகவே
பாமரர் பண்டிதர் யாவரும் நலம்பெறத்
தாமத மின்றிப் பூமகள் அருள்பெற
நாமெலாம் உழைப்போம் நம்பிக்கை யுடனே.

--ரமணி, 01/01/5114 | 14/04/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Apr 18, 2013 10:13 am

ஹாஸ்யக் குறட்பாக்கள்: மணவாழ்வு அன்று

மதுரை சிதம்பரம் வீட்டிலே ஒன்ற
விதவித மாகுமே வாழ்வு. ... 11

மதுரை சிதம்பரம் ஒன்றாக ஆகிவிட்டால்
மாமியார் என்னா வது? ... 12

மாமியார் மெச்சிய மாட்டுப்பெண் உண்டோசொல்?
சாமியாலும் ஆகாத வொன்று. ... 13

கணவனவன் அம்மாக்கோண்(டு) ஆகிவிட்டால் அந்தோ
மனைவியின் வாழ்க்கை நரகு. ... 14

மாமனார் வாயில்லாப் பூச்சியாகி விட்டாலோ
மாமியார் ராச்சியம் தான். ... 15

பணமும் நகையும் படைத்தாயின் வாழ்க்கை
மணமகள் கைவசம் தான். ... 16

பற்றிடும் கொம்பு புளியமரக் கொம்பாயின்
வற்றாத செல்வத்தில் வாழ்வு. ... 17

கொண்டாட்டம் சம்பளம் வந்து ஒருவாரம்
திண்டாட்டம் மீதிவாரம் மூன்று. ... 18

கடனேதும் கிட்டாது போனால் உடனே
அடகுக்கு இல்லாள் நகை. ... 19

பட்டுப் புடவைக்கே வக்கில்லை வாழ்க்கையில்
கிட்டுவ தெங்கே நகை? ... 20

--ரமணி, 18/04/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Apr 18, 2013 9:01 pm

வங்கிக் குறட்பாக்கள்

வாடிக்கை யாளர்கள் வேடிக்கை வஸ்துவல்ல
பாடியாடப் பால்தரும் மாடு. ... 21

சங்கநிதி வேண்டாம் பதுமநிதி தேவையில்லை
வங்கியின் வைப்பே நிதி. ... 22

பற்றுக பற்றுள்ளார் பற்றினை அப்பற்றைப்
பற்றாது விட்டாலோ பாடு. ... 23

வங்கிக் கடன்தொகை வாராது போனாலோ
மங்குமே வங்கிப் புகழ். ... 24

உள்ளத்தில் மென்மை உதவாது தோழனே
கள்ளநோட் டாயிது காண். ... 25

அங்கொரு கண்ணுடன் இங்கொரு கண்ணுமே
வங்கியில் வேண்டுமே காண். ... 26

அகச்சுற்றுக் கேமரா ஆகாது மாற்று
புறச்சுற்றுக் காவலே மேல். ... 27

கணிணிமயம் ஆகியும் தாமத மாகிப்
பணியெல்லாம் ஊர்வது ஏன்? ... 28

கிளையில் அலுவலர் ஓர்குடும்பம் ஆயின்
விளையும் பயன்கள் பல. ... 29

தலைமையைப் போற்றித் தலைமையும் போற்ற
நிலைமையில் கேடு வராது. ... 30

--ரமணி, 18/04/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jun 05, 2013 7:14 am

27. உருத்திரன் மகிமை
(அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா)


தரவு (எட்டடி)
உருத்திரரே உம்முடைய சினத்திற்கென் தலைதாழும்
உருத்திரரே உம்முடைய வில்லிற்கென் தலைதாழும்
கயிலைமலை உறைபவரே காப்பாற்றும் எம்குலத்தை
கயவர்கள் மீதெறியும் சரங்களைநீர் சாந்தமாக்கும்.
அனைத்துலகிற் கதிபதியே அமரர்கள் இறையம்சமே
வினைகளெனும் பிணிதீர்க்கும் வைத்தியரே பக்தர்களின்
குற்றங்கள் பொறுத்தருளி குணங்களைக்கொண் டாடும்நீர்
மற்றெல்லா வகைகளிலும் மலமறுத்து முக்திதாரும்.

தாழிசை
கருநீலக் கழுத்துடையார் கதிரவனாய் வெளிக்கிளம்பி
இருள்நீக்கி மருள்நீக்கி இனியவைகள் அருளட்டும்
சடைதரித்த ஒப்பற்ற சிவனாரின் அருளமுதில்
அடியார்கள் உளமகிழ்ந்து அருள்வோனைப் போற்றட்டும். ... 1

வணங்குகிறேன் பகவானை வியனுலக நாயகனை
குணக்குன்றாம் மகாதேவன் கண்முன்று உடையோனை
முப்புரங்கள் எரித்தவனை முத்தழல்கள் மறைத்தவனை
எப்பொழுதும் சிவமாகி எமனையே ஜெயித்தவனை. ... 2

பச்சிலைகள் கூந்தலாகப் பசுமரங்கள் வடிவமாக
இச்சககத்தில் பிராணிகளை இரட்சிக்கும் பெருமானே
உணவுகளின் அதிபதியே உலுத்தர்களை வதைப்பவனே
வணங்குகிறேன் உமதுருவை வரமளித்தே அருள்புரிவீர். ... 3

அம்போதரங்கம்
(நாற்சீரீரடி: பேரெண்: 2)


காண்பதெல்லாம் உமதுகண்ணாய்க் கண்ணாயிரம் படைத்தவரே
வேண்டுவதை அளித்தருளும் வித்தகனே வணங்குகிறேன். ... 1

புடைசூழும் சேனைகளைப் படைத்திருந்தும் முன்னின்று
அடியார்கள் நலங்காக்கும் விடையோனை வணங்குகிறேன். ... 2

(நாற்சீரோரடி: அளவெண்: 4)
சம்சார விருட்சத்தைச் சேதிக்கும் ஆயுதமே ... 1
அம்புகளால் பகைவர்கள் அவதியுறச் செய்பவரே ... 2
மங்கலத்தின் உறைவிடமே மரஞ்செடிகள் அதிபதியே ... 3
எங்களைநீர் இரட்சித்து ஏற்றமுறச் செயவேண்டும். ... 4

(முச்சீர் ஓரடி: இடையெண்: 8)
அமைச்சனும் வணிகனும் நீ ... 1
அழவைத்துக் காப்பவன் நீ ... 2
கள்வர்கள் தலைவனும் நீ ... 3
கொள்ளைகள் அடிப்பவன் நீ ... 4
உறங்குவோன் விழித்திருப்போன் நீ ... 5
உறைபவன் ஓடுபவன் நீ ... 6
அவையோரும் அவைத்தலையும் நீ ... 7
உமைதுர்க்கை உருவமும் நீ. ... 8

(இருசீர் ஓரடி: சிற்றெண்: 16)
வலியோன் நீ, மெலியோன் நீ, ... 1-2
குயவன் நீ, தச்சன் நீ, ... 3-4
கருமான் நீ, வேடன் நீ, ... 5-6
சிறியோன் நீ, பெரியோன் நீ, ... 7-8
மலைகள் நீ, அலைகள் நீ, ... 9-10
ஒலியும் நீ, எதிரொலியும் நீ, ... 11-12
நாதன் நீ, தூதன் நீ ... 13-14
வஸ்துகள் நீ, வாஸ்துவும் நீ, ... 15-16

தனிச்சொல்
என்வாங்கு

சுரிதகம் (நேரிசை ஆசிரியம்)
எல்லாம் நீயென எழுந்து நின்று
பல்லா யிரமுயிர் படைத்து அழிக்கும்
உருத்திர கணங்களின் உள்ளுறை நாயக!
விருத்திகள் யாவும் வேண்டுவ தளித்து
இம்மையும் மறுமையும் சிறக்க
உம்மையே நாடுவோம் அம்மை யப்பரே!

--ரமணி, 05/06/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jun 26, 2013 5:59 pm

29. செய்திக் கவிதைகள்:
இந்தியத் தந்தி சேவைக்கு இறுதி நாள் 15 Jul 2013


[160 ஆண்டுகள் பழமைவாய்ந்த "தந்தி’ சேவைக்கு மூடு விழா: தினமணி 13 Jun 2013]

(பலவிகற்ப பஃறொடை வெண்பா)
கட்டுக் கடகட வென்று கடிதிலே
விட்டொலித்துச் சென்றுசேர்ந்து வீடுகளில் சேதிசொன்ன
தந்தியின் சேவைக்(கு) அடுத்தமாத மத்தியில்
அந்திமக் காலமென இந்திய அஞ்சலகம்
நூற்றைம் பதுவருடம் ஆற்றிய சேவையின்
ஊற்றை அடைத்திடச் செய்தது தீர்மானம்.
கம்பியில்லாத் தந்திச் செயல்பா(டு) உயர்வதில்
கம்பிசெலும் தந்திகளின் அஞ்சல் அறுவது
என்றேனும் நேரத்தான் வேண்டுவ(து) என்றாலும்
அன்போ(டு) அளிப்போம் விடை.

--ரமணி, 26/06/2013

தந்தியின் குரல்கேட்க இங்கே சொடுக்கவும்:
http://www.pond5.com/sound-effects/1/telegram.html

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jul 06, 2013 9:25 am

30. பயணக் கவிதைகள்

பேரூர் பட்டீஸ்வரக் கோவிலில் அரிய காட்சிகள்
(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)

1. அன்னாசி காலடியில் ஆர்த்திருக்கப் பேரூரில்
சன்னமாகத் தன்துதிக்கை யால்துழாவி - சின்னதான
வன்னப் பசுஞ்சிகை வெட்டியே உண்டிடும்
கன்னப் பொறியின் களிறு.


[ஆர்த்தல்=நிறைதல்; வன்னம்=நிறம்; பசுஞ்சிகை=பசுமை இலைக் கொண்டை; கன்னப்பொறி=கோவில்]

2. கூரையிலே ஆவுடையார்க் கூத்தனாக நின்றுநம்மைத்
தேரைபோல் பார்ப்பான் திசையெங்கும் - ஆரகனாய்க்
காரைகள் நீக்கிக் கனலினை மேடுறுத்தும்
பேரூர்ப் பரமேச் வரன்.


[ஆரகன்=அழிப்போன், கள்வன், கபடன்]

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jul 09, 2013 9:13 am

மாலைக் காட்சிகள்: ஹைக்கூ பாணியில் வெண்பா

வெண்கதிர் செங்கதிராய் வீழும். மிகநீளும்.
கண்வழியும். காதொலிக்கும் பண்ணோசை. - விண்ணகரம்.
தண்ணெனத் தென்காற்று. விண்வெளியில் வண்ணங்கள்.
மண்ணில் மனிதனின் மாசு.

மஞ்சுகள் சித்திர வண்ணங்கள். மௌனநிழல்
சஞ்சரிக்கும். குன்றிழியும் செஞ்சோதி. - துஞ்சிடும்.
குஞ்சரம் காணும் குழந்தைகள். கோவில்முன்
குஞ்சுகள் பின்னே குருகு.

--ரமணி, 09/07/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Jul 15, 2013 10:02 am

உத்திப் பாக்கள்: ஒருவிகற்ப நேரிசை வெண்பா
ஒரு சொல் திரிபுறாமல் திரும்புதல்


சொல்லொன்று கேட்டொருவர் சீர்மிக்க வாழ்வடைந்தார்
சொல்லொன்று கேட்டொருவர் செத்துவீழ்ந்தார் -- சொல்லிய
சொல்லொன்று கேட்டொருவர் முக்தியும் பெற்றதுண்டு
சொல்லொன்று சொல்லவேண்டும் அன்பு.

ஒருநாள் மகிழ்ச்சி ஒருநாள் துயரம்
ஒருநாள் இழவென ஓடும் - திருநாள்
ஒருநாள் வெருவு ஒருநாள் துணிபு
ஒருநாள் எனவுயிர் வாழ்வு.

ஒருநாள் சிரிப்பு ஒருநாள் சிலிர்ப்பு
ஒருநாள் சினமுடன் ஓய்வாள் - திருநாள்
ஒருநாள் வசவு ஒருநாள் நெருக்கம்
ஒருநாள் எனமனையாள் வாழ்வு.

*****

ஒரு சொல் திரிபுடன் திரும்புதல்

அஞ்சிட வேண்டுவதை அஞ்சும் மனமுடன்
அஞ்சு புலன்களும் அஞ்சிநின்று - அஞ்செழுத்தை
அஞ்சாமல் துஞ்சாமல் நெஞ்சி லிருத்தினால்
அஞ்சுடன் ஆறும் மனம்.

கண்ணுறும் துன்பங்கள் கண்ணோட்டம் ஆற்றிடக்
கண்போல் பிறர்நலன் காண்போரை(க்) - கண்ணிமைபோல்
கண்ணுதல் ஈசனே கண்ணருளிக் காத்திடக்
கண்கூடாய் நீங்குமேகண் கட்டு.

கண்ணுதல் ஈசனை நண்ணுதல் நன்மைதரும்
எண்ணுதல் பூசனை திண்மைதரும் - உண்ணுதல்
பண்ணுதல் அண்ணுதல் பற்பலவும் கைவந்தால்
ஒண்ணுதல் தேவிநம் மோடு.

நம் சென்னை பாஷையில் இன்னொன்று:

இன்னா விளைத்தார்க்கு இன்னா விளைந்தாலும்
இன்மையில் செய்திடும் இன்னாவே - தன்மையென்றேன்.
இன்னாநான் செய்யணும்? இன்னாநீ சொல்றது?
இன்னாதான் மண்டையோஎன் றான்!

*****

Sponsored content

PostSponsored content



Page 5 of 36 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 20 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக