புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
Page 35 of 36 •
Page 35 of 36 • 1 ... 19 ... 34, 35, 36
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஷத் துதி: வெள்ளம் தலைக்கேறும் வீழல் தீர்ப்பீர்!
(நேரிசை வெண்பா அந்தாதிப் பஞ்சக மாலை)
வெள்ளம் தலையேற்றி வெள்விடை யேறியென்
உள்ளத் தமர்வீர் உமைகோனே - வெள்ளம்
தலைக்கேறி வீட்டிய தாக்கத்தில் என்னுள்
மலைபோல் அழுத்தும் மயல். ... 1
மயலின் முயக்கில் மனமெங்கும் முட்கள்
தயக்கமே என்னைத் தழுவும் - துயரில்
செயலற்றே கற்பனை செவ்விதம் இல்லா(து)
அயலாகிப் போமென் அகம். ... 2
அகமிதே ஆவுடை யாராய்க் கருதி
உகந்தவோர் லிங்கமாய் உள்ளம் - அகழ்வீர்
பொழிகங்கை நீரால் புனிதம் அரும்ப
விழல்தீர்த் தருள்வீர் விழிப்பு. ... 3
விழித்தே உமைநான் விதவிதமாய்ப் போற்ற
வழித்துணை யாக வருவீர் - கழிபொழுதில்
என்சொல்லில் என்செயலில் எந்தை உமையெண்ணும்
தன்மை தருவீரே சம்பு. ... 4
சம்புவின் சம்பந்தம் சாதனை யில்சேர்க்க
சம்புவை அம்பாள் சகிதமாய் - நம்பிநான்
காரிருள் நீங்கிக் களிக்கும்நாள் என்னுளத்து
ளாரும் பரசிவவெள் ளம். ... 5
--ரமணி, 06/02/2016, கலி.23/10/5116
(சனி மஹா பிரதோஷ நன்னாள்)
*****
(நேரிசை வெண்பா அந்தாதிப் பஞ்சக மாலை)
வெள்ளம் தலையேற்றி வெள்விடை யேறியென்
உள்ளத் தமர்வீர் உமைகோனே - வெள்ளம்
தலைக்கேறி வீட்டிய தாக்கத்தில் என்னுள்
மலைபோல் அழுத்தும் மயல். ... 1
மயலின் முயக்கில் மனமெங்கும் முட்கள்
தயக்கமே என்னைத் தழுவும் - துயரில்
செயலற்றே கற்பனை செவ்விதம் இல்லா(து)
அயலாகிப் போமென் அகம். ... 2
அகமிதே ஆவுடை யாராய்க் கருதி
உகந்தவோர் லிங்கமாய் உள்ளம் - அகழ்வீர்
பொழிகங்கை நீரால் புனிதம் அரும்ப
விழல்தீர்த் தருள்வீர் விழிப்பு. ... 3
விழித்தே உமைநான் விதவிதமாய்ப் போற்ற
வழித்துணை யாக வருவீர் - கழிபொழுதில்
என்சொல்லில் என்செயலில் எந்தை உமையெண்ணும்
தன்மை தருவீரே சம்பு. ... 4
சம்புவின் சம்பந்தம் சாதனை யில்சேர்க்க
சம்புவை அம்பாள் சகிதமாய் - நம்பிநான்
காரிருள் நீங்கிக் களிக்கும்நாள் என்னுளத்து
ளாரும் பரசிவவெள் ளம். ... 5
--ரமணி, 06/02/2016, கலி.23/10/5116
(சனி மஹா பிரதோஷ நன்னாள்)
*****
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
சனி பிரதோஷ பா
இனி வருமோ
இது போலொருப்பா
ரமணியமப்பா
ரமணியின் பா ,
சரியாப்பா
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
சரக்கொன்றை...
(மடக்கணி அமைந்த அளவியல் நேரிசை வெண்பா)
சரக்கொன்றைக் கைப்பற்றிச் சட்டென் றமர்ந்தார்
சரக்கொன்றைப் பூமரம் கீழே - ஒருவர்
சரக்குந்து ஓட்டுனர் மற்றவர் செல்வர்
சரக்குந்து போதை சமம்.
--ரம்ணி, 13/12/2015
*****
(மடக்கணி அமைந்த அளவியல் நேரிசை வெண்பா)
சரக்கொன்றைக் கைப்பற்றிச் சட்டென் றமர்ந்தார்
சரக்கொன்றைப் பூமரம் கீழே - ஒருவர்
சரக்குந்து ஓட்டுனர் மற்றவர் செல்வர்
சரக்குந்து போதை சமம்.
--ரம்ணி, 13/12/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மீட்டிடப் போதுமான: மடக்கணி
(நேரிசை வெண்பா)
மீட்டிட வந்தனள் வீணையை! என்னைநீ
மீட்டிட வந்தாயோ வேலவா! - மீட்டிடப்
போதுமான காசில்லாப் பொன்னணி போலவென்
போதுமான தேமூழ்கிப் போய்!
விளக்கம்
மீட்டிட என்ற சொல்லின் பொருள் முறையே:
இசைத்திட, காப்பாற்ற, அடகு வைத்ததைத் திருப்ப.
போதுமான என்ற சொல்லின் பொருள் முறையே:
தேவையான அளவு; பொழுதும் ஆனதே!
குறிப்பு:
போதுமான என்ற சீர் விளாங்காய்ச் சீராகி ஓசை குறைப்பினும்,
மடக்குப் பொருளாக வருவதால் அதை அங்ஙனம் அமைத்தேன்.
--ரமணி, 29/01/2016
*****
(நேரிசை வெண்பா)
மீட்டிட வந்தனள் வீணையை! என்னைநீ
மீட்டிட வந்தாயோ வேலவா! - மீட்டிடப்
போதுமான காசில்லாப் பொன்னணி போலவென்
போதுமான தேமூழ்கிப் போய்!
விளக்கம்
மீட்டிட என்ற சொல்லின் பொருள் முறையே:
இசைத்திட, காப்பாற்ற, அடகு வைத்ததைத் திருப்ப.
போதுமான என்ற சொல்லின் பொருள் முறையே:
தேவையான அளவு; பொழுதும் ஆனதே!
குறிப்பு:
போதுமான என்ற சீர் விளாங்காய்ச் சீராகி ஓசை குறைப்பினும்,
மடக்குப் பொருளாக வருவதால் அதை அங்ஙனம் அமைத்தேன்.
--ரமணி, 29/01/2016
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மடக்கணி வெண்பா: ஆமையா?!
(இன்னிசை வெண்பா)
ஆமையா? என்றாரென் ஆசான் கடற்கரையில்
ஆமையா! என்றேன் அவர்சட்டைப் பைநோக்கி
ஆ?மையா? என்றார் அவரதனைக் கைப்பற்றி
ஆமையா உச்சியும் மை!
ஆமையாவின் பொருள் முறையே:
ஆமை-யா, ஆம்-ஐயா, ஆ-மையா, ஆம்-ஐயா
--ரமணி, 03/02/2016
*****
(இன்னிசை வெண்பா)
ஆமையா? என்றாரென் ஆசான் கடற்கரையில்
ஆமையா! என்றேன் அவர்சட்டைப் பைநோக்கி
ஆ?மையா? என்றார் அவரதனைக் கைப்பற்றி
ஆமையா உச்சியும் மை!
ஆமையாவின் பொருள் முறையே:
ஆமை-யா, ஆம்-ஐயா, ஆ-மையா, ஆம்-ஐயா
--ரமணி, 03/02/2016
*****
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மிக அருமை ஐயா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மடக்கணி வெண்பா: முடங்கல்
(இன்னிசை வெண்பா)
முடங்கல் பிணியில் முனகிடும் மன்னன்
முடங்கல் குழலில் முதியவர் வாழ்த்து
முடங்கல் சுருள்தனைத் தூதுவன் தந்தான்
முடங்கல் கொளும்மன் முகம்.
(முடங்கல் பொருள் முறையே:
முடக்குவாதம், மூங்கில், சுருளோலைக் கடிதம், மடங்குகை;
மன் = அரசன்)
--ரமணி, 04/02/2016
*****
சொற்பின்வரு நிலையணி வெண்பா: அலங்கல்
(பஃறொடை வெண்பா)
அலங்கல் அகம்மோத அல்லலுற் றேனுன்
அலங்கல் தலைமேல் அகற்றியது வாழ்வில்
அலங்கல்; கழுத்தினில் ஆடும் அலங்கல்
அகத்தினில் பக்தி அலங்கல் எழுப்பும்
இகத்தில் அலங்கல் அமைதியை ஈசா
உகந்தேன் அருள்வாய் உவந்து.
[அலங்கல் பொருள் முறையே:
அலம்+கல் (மடக்கு) = துன்பமாகிய கல்; மனக்கலக்கம்;
தலையில் அணியும் மாலை; கழுத்தில் அணியும் மாலை;
துளிர்; ஒழுங்குமுறை, ஒளி]
--ரமணி, 04/02/2016
*****
(இன்னிசை வெண்பா)
முடங்கல் பிணியில் முனகிடும் மன்னன்
முடங்கல் குழலில் முதியவர் வாழ்த்து
முடங்கல் சுருள்தனைத் தூதுவன் தந்தான்
முடங்கல் கொளும்மன் முகம்.
(முடங்கல் பொருள் முறையே:
முடக்குவாதம், மூங்கில், சுருளோலைக் கடிதம், மடங்குகை;
மன் = அரசன்)
--ரமணி, 04/02/2016
*****
சொற்பின்வரு நிலையணி வெண்பா: அலங்கல்
(பஃறொடை வெண்பா)
அலங்கல் அகம்மோத அல்லலுற் றேனுன்
அலங்கல் தலைமேல் அகற்றியது வாழ்வில்
அலங்கல்; கழுத்தினில் ஆடும் அலங்கல்
அகத்தினில் பக்தி அலங்கல் எழுப்பும்
இகத்தில் அலங்கல் அமைதியை ஈசா
உகந்தேன் அருள்வாய் உவந்து.
[அலங்கல் பொருள் முறையே:
அலம்+கல் (மடக்கு) = துன்பமாகிய கல்; மனக்கலக்கம்;
தலையில் அணியும் மாலை; கழுத்தில் அணியும் மாலை;
துளிர்; ஒழுங்குமுறை, ஒளி]
--ரமணி, 04/02/2016
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
அங்கணனின் மங்கை யெங்கே?
(முற்று முடுகு நேரிசை வெண்பா: தந்ததன)
இங்குமுள வங்குமுள வெங்குமுள வங்கணனி
னங்கமதி லெங்குமுள வங்கதம டங்கிவர
மங்கையிட மிங்குசிவ மங்கலமி லங்குமவ
ளிங்குமன வங்குவினி லெங்கு?
பதம் பிரித்து:
இங்குமுள அங்குமுள எங்குமுள அங்கணனின்
அங்கமதில் எங்குமுள அங்கதம் அடங்கிவர
மங்கையிடம் இங்குசிவ மங்கலம் இலங்குமவள்
இங்குமன வங்குவினில் எங்கு?
[குறிப்பு: வெண்பாவின் முடுகியலில் ஙகர ஒற்று மட்டும் பயில்வது காண்க.]
--ரமணி, 05/02/2016
*****
(முற்று முடுகு நேரிசை வெண்பா: தந்ததன)
இங்குமுள வங்குமுள வெங்குமுள வங்கணனி
னங்கமதி லெங்குமுள வங்கதம டங்கிவர
மங்கையிட மிங்குசிவ மங்கலமி லங்குமவ
ளிங்குமன வங்குவினி லெங்கு?
பதம் பிரித்து:
இங்குமுள அங்குமுள எங்குமுள அங்கணனின்
அங்கமதில் எங்குமுள அங்கதம் அடங்கிவர
மங்கையிடம் இங்குசிவ மங்கலம் இலங்குமவள்
இங்குமன வங்குவினில் எங்கு?
[குறிப்பு: வெண்பாவின் முடுகியலில் ஙகர ஒற்று மட்டும் பயில்வது காண்க.]
--ரமணி, 05/02/2016
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஷத் துதி: தாண்டவன் தாண்டகம் தங்கவே...
(இன்னிசை வெண்பா)
பாற்கடல் தோன்றிப் பரவிய நஞ்சினை
ஏற்றருள் செய்தார் இமையவர் மானிடர்
போற்றியே வாழ்ந்திடப் பொன்னம் பலத்தவர்!
கூற்றினை வென்றிடக் கூடு. ... 1
உருவும் நிழலும் ஒருமித் ததுபோல்
இரவும் பகலும் இணையும் பொழுது
விரிசடை வேதன் விடைமேல் நடனம்!
தெரிசனம் உள்வரத் தேடு. ... 2
கோவிற் கருவறை கொள்ளும் பொழிவினில்
மேவும் திரவியம் மேனி வழிந்திட
நாவைந் தெழுத்தினில் நர்த்தன மாடிடும்!
பாவம் தொலையவே பாடு. ... 3
வேதமும் பண்ணொடு மேற்படு மோசையில்
நாத சுரத்தின் நலம்செவி யாடவே
அம்மையும் அப்பனும் ஆலயச் சுற்றினில்!
இம்மையில் வேறென வீடு? ... 4
தாண்டவன் தாண்முளை தாண்டினைத் தாண்டிடத்
தாண்டவன் தாண்முதல் தாண்டகம் தங்கவே
தாண்டா வுமையவள் தன்னிடம் கொண்டாடும்
தாண்டவன் தண்ணெறி தாங்கு. ... 5
பொருள்
தாண்டவனாம் நடராசனின் மக்களாகிய (தாண்முளை) நாம்
. அகங்கரிப்பைத் (தாண்டினைத்) தாண்டிச் செல்லத்
தாண்டவனின் பாதமூலமே (தாண்முதல்) நம் செருக்குடைய
. அகத்தில் (தாண்டகம்) தங்கவே
தலைப்பின்னலில் மலர்மாலை (தாண்டா) அணிந்த உமையாளைத்
. தன் இடப்பக்கம் கொண்டு ஆடும்
தாண்டவனின் குளிர்நெறியைத் தாங்கு.
--ரமணி, 02/06/2016, கலி.20/02/5117
*****
(இன்னிசை வெண்பா)
பாற்கடல் தோன்றிப் பரவிய நஞ்சினை
ஏற்றருள் செய்தார் இமையவர் மானிடர்
போற்றியே வாழ்ந்திடப் பொன்னம் பலத்தவர்!
கூற்றினை வென்றிடக் கூடு. ... 1
உருவும் நிழலும் ஒருமித் ததுபோல்
இரவும் பகலும் இணையும் பொழுது
விரிசடை வேதன் விடைமேல் நடனம்!
தெரிசனம் உள்வரத் தேடு. ... 2
கோவிற் கருவறை கொள்ளும் பொழிவினில்
மேவும் திரவியம் மேனி வழிந்திட
நாவைந் தெழுத்தினில் நர்த்தன மாடிடும்!
பாவம் தொலையவே பாடு. ... 3
வேதமும் பண்ணொடு மேற்படு மோசையில்
நாத சுரத்தின் நலம்செவி யாடவே
அம்மையும் அப்பனும் ஆலயச் சுற்றினில்!
இம்மையில் வேறென வீடு? ... 4
தாண்டவன் தாண்முளை தாண்டினைத் தாண்டிடத்
தாண்டவன் தாண்முதல் தாண்டகம் தங்கவே
தாண்டா வுமையவள் தன்னிடம் கொண்டாடும்
தாண்டவன் தண்ணெறி தாங்கு. ... 5
பொருள்
தாண்டவனாம் நடராசனின் மக்களாகிய (தாண்முளை) நாம்
. அகங்கரிப்பைத் (தாண்டினைத்) தாண்டிச் செல்லத்
தாண்டவனின் பாதமூலமே (தாண்முதல்) நம் செருக்குடைய
. அகத்தில் (தாண்டகம்) தங்கவே
தலைப்பின்னலில் மலர்மாலை (தாண்டா) அணிந்த உமையாளைத்
. தன் இடப்பக்கம் கொண்டு ஆடும்
தாண்டவனின் குளிர்நெறியைத் தாங்கு.
--ரமணி, 02/06/2016, கலி.20/02/5117
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
#ரமணி_பிரதோஷம்
பிரதோஷத் துதி: தாண்டவனே ஆண்டருளே!
(எழுசீர் விருத்தம்: கூவிளங்காய் மா காய் மா காய் மா காய்)
ஆலெழுந்த வாரி அச்சமுற்ற தேவர்
. அன்றுன்னை நாட அருள்செய்யச்
சேலெழுந்த கண்ணாள் நஞ்சிறங்கும் கண்டம்
. திகிலெழுந்து பற்றக் கொண்டாயே
காலெழுந்து வீட்டும் கருமேக வெள்ளம்
. காலத்தை நிறுத்தும் நாள்வரையில்
காலெழுந்த நடனம் நிற்காதே ஆடும்
. கண்ணுதலே நல்லோர் காத்தருள்வாய். ... 1
ஆவிழிந்த ஐந்தும் ஆலயத்தில் ஆடி
. அடியார்க்கு நன்மை அருள்வோனே
நாவிழிந்த பாட்டாய் நாலுவகைப் பண்ணின்
. நாதமுனைச் சூழும் காட்சியுடன்
காவிழிந்த மலர்கள் காட்டுமலங் காரம்
. கண்ணிழியச் சுற்றில் வரும்போது
நோவிழிந்த வாழ்வின் நுண்மையைநா டாதே
. நுகர்வோரைத் திருத்தும் அருளாளா. ... 2
[ஆவிழிந்த ஐந்து = பஞ்சகவ்யம்;
நாலுவகைப் பண் = வேத, தேவார, நாதஸ்வர, மேளப் பாட்டு;
இவற்றில் மேளம் விரல்களால் எழுந்தாலும் தாளம் முதலில் மனத்தின்
நாவிலேயே எழுகிறது;
காவிழிந்த = சோலையில் இருந்து இறங்கிய]
தேனறியாக் காட்டு மலரானேன் ஆன்மத்
. தினவறியா வெற்று மனம்கொண்டேன்
வானறியாப் பயிராய் வலுவிழ்ந்தே இன்று
. வாடுகிறேன் ஒன்றும் அறிந்திலனாய்
நானறிந்த உலகில் துன்பமிலா இன்பம்
. நாடுகிறேன் இன்னும் தேடுகிறேன்
தானெரிந்த காட்டில் கூளியுடன் ஆடும்
. தாண்டவனே என்னை ஆண்டருளே. ... 3
[தானெரிந்த = தான் என்னும் உடல் நிமித்த அகந்தை]
--ரமணி, 02/07/2016, கலி.18/03/5117
*****
பிரதோஷத் துதி: தாண்டவனே ஆண்டருளே!
(எழுசீர் விருத்தம்: கூவிளங்காய் மா காய் மா காய் மா காய்)
ஆலெழுந்த வாரி அச்சமுற்ற தேவர்
. அன்றுன்னை நாட அருள்செய்யச்
சேலெழுந்த கண்ணாள் நஞ்சிறங்கும் கண்டம்
. திகிலெழுந்து பற்றக் கொண்டாயே
காலெழுந்து வீட்டும் கருமேக வெள்ளம்
. காலத்தை நிறுத்தும் நாள்வரையில்
காலெழுந்த நடனம் நிற்காதே ஆடும்
. கண்ணுதலே நல்லோர் காத்தருள்வாய். ... 1
ஆவிழிந்த ஐந்தும் ஆலயத்தில் ஆடி
. அடியார்க்கு நன்மை அருள்வோனே
நாவிழிந்த பாட்டாய் நாலுவகைப் பண்ணின்
. நாதமுனைச் சூழும் காட்சியுடன்
காவிழிந்த மலர்கள் காட்டுமலங் காரம்
. கண்ணிழியச் சுற்றில் வரும்போது
நோவிழிந்த வாழ்வின் நுண்மையைநா டாதே
. நுகர்வோரைத் திருத்தும் அருளாளா. ... 2
[ஆவிழிந்த ஐந்து = பஞ்சகவ்யம்;
நாலுவகைப் பண் = வேத, தேவார, நாதஸ்வர, மேளப் பாட்டு;
இவற்றில் மேளம் விரல்களால் எழுந்தாலும் தாளம் முதலில் மனத்தின்
நாவிலேயே எழுகிறது;
காவிழிந்த = சோலையில் இருந்து இறங்கிய]
தேனறியாக் காட்டு மலரானேன் ஆன்மத்
. தினவறியா வெற்று மனம்கொண்டேன்
வானறியாப் பயிராய் வலுவிழ்ந்தே இன்று
. வாடுகிறேன் ஒன்றும் அறிந்திலனாய்
நானறிந்த உலகில் துன்பமிலா இன்பம்
. நாடுகிறேன் இன்னும் தேடுகிறேன்
தானெரிந்த காட்டில் கூளியுடன் ஆடும்
. தாண்டவனே என்னை ஆண்டருளே. ... 3
[தானெரிந்த = தான் என்னும் உடல் நிமித்த அகந்தை]
--ரமணி, 02/07/2016, கலி.18/03/5117
*****
- Sponsored content
Page 35 of 36 • 1 ... 19 ... 34, 35, 36
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 35 of 36
|
|