புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
62 Posts - 63%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
1 Post - 1%
viyasan
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
254 Posts - 44%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
15 Posts - 3%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 19 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 19 of 36 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 27 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri May 16, 2014 9:02 am

ஆன்மீகச் செய்திக் கவிதை 7.
வைகாசி 2

இன்று காஞ்சிபுரம் ஶ்ரீவரதராஜப் பெருமாள் நாச்சியார் திருக்கோலத்துடன் புறப்பாடு


கோயில் விவரம்:
http://temple.dinamalar.com/New.php?id=633
http://www.hinduspritualarticles.blogspot.in/2013/01/blog-post_9.html

மோகினித் திருக்கோலம்:
http://thiruvarangan.blogspot.in/2009/12/1_3074.html

(இன்னிசை வெண்பா)
அயன்யாகம் தோன்றி அருள்செய்த மாயோன்
அயர்ச்சியில் ஆழ்குளத்தில் அத்தி வரதனாய்
ஏகமாத் தூங்க எழுந்த கனவிலின்று
மோகினியாய் ஊரலைந்தா னோ? ... 1

பராங்குச மங்கை பரகால மங்கை
இராப்பகல் பாரா(து) இறுக்கிய காதலெழும்
தாகத்தைத் துய்த்திடும் ஆசையில் மாதவனும்
மோகினியாய் ஊரலைந்தா னோ? ... 2

முன்கதை ஏதோ முகுந்தனவன் இற்றைநாள்
முன்னழகும் பின்னழகும் முட்டவே கண்ணெதிரில்
மோகினியாய் ஊர்வலமாம்! மோகவுளம் பக்தியின்
தாகத்தில் ஆழும் தழைந்து! ... 3

--ரமணி, 16/05/2014, கலி.02/02/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat May 17, 2014 8:08 am

ஆன்மீகச் செய்திக் கவிதை 8.
வைகாசி 3

இன்று சங்கடஹர சதுர்த்தி நாள்.

சங்கடஹர சதுர்த்தித் துதி:
இரண்டாம் சுதந்திரமாக அருள்!


(அளவியல் இன்னிசை வெண்பா)
பாரதம் பண்டைநெறிப் பண்பினில் ஆழ்ந்ததன்
வேரது மீண்டும் விளைய கணேசா!
உலகினில் முன்னோடும் உன்னத நாடாய்
வலம்வரச் செய்திடு வாய். ... 1

இரண்டாம்சு தந்திரமாய் எல்லாரும் தேவ!
இரண்டென நின்றும் இணைந்திடும் அன்பில்
வருநாளில் பாடுபட்டு வல்லரசாய் இந்தத்
திருநா(டு) இலங்கவருள் செய். ... 2

வெறுக்கையர் உள்ள வெறுமை யகல ... [வெறுக்கை = செல்வம்]
சிறுவர் சிறுமியர் செம்மையில் வாழ
இளையோர் அறத்தில் இழைய கணேசா!
வளமுறச் செய்திடு வாய். ... 3

*ஐங்கரனே நம்மக்கள் ஐம்புலன் கட்டுண்டே
ஐங்குரவர் சொல்கேட்டே ஐம்பாலோர் நன்மைபேணி
ஐந்தருவின் வாசமுறும் வாழ்வறம் துலங்கிடவே
ஐந்திணையும் காத்தருள் வாய். ... 4

"எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் ஓர்நிறை" யென்றே விநாயக!
இல்லார் குறைதீர்த் திருப்பார் நிறைசெய்ய
அல்லலின்றி வாழ வருள். ... 5

--ரமணி, 17/05/2014, கலி.03/02/5115

பாடல் 4 பற்றிய குறிப்பு:
ஐங்கரன் = பிள்ளையார்; ஐங்குரவர் = அரசன், ஆசான், அன்னை, தந்தை, மூத்த சகோதரன்;
ஐம்பாலோர் = ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் வகைப்படும் உயிர்கள்;
ஐந்தரு = சந்தானம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம், அரிசந்தனம் ஆகிய தேவலோக மரங்கள்;
ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்கள்.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun May 18, 2014 11:09 am

ஆன்மீகச் செய்திக் கவிதை 9.
வைகாசி 4

கீழைத் திருப்பதி ஶ்ரீகோவிந்தராஜப் பெருமாள் ஸன்னதி எதிரில்
ஶ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன ஸேவை.

அனுமன் திருமஞ்சனம்
(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

ஆழியைத் தாண்டி அருந்தொண்டு செய்தவன்
கீழைத் திருப்பதிக் கேசவன் ஆலயத்தில்
வீழுநீ ராடிடும் வீரன் அனுமனால்
ஏழை மனங்குளிரு மே. ... 1

அரனம்சன் அஞ்சனை மைந்தனவன் யோகி
உருவெளியன் ராமனின் தூதன் சிறிய
திருவடி மூலம் திருமால் அருளால்
இருள்நீங்கி வாழ்தல் எளிது. ... 2

புத்தி பலமும் புகழும் துணிகரமும்
சத்திய ஞானம் சரீரநலம் சொல்வன்மை
அத்தனையும் கைகூடும் அச்சமற்ற வாழ்வெனும்
அத்தம் அனுமனால் ஆம். ... 3

[அத்தம் = அருநெறி]

--ரமணி, 18/05/2014, கலி.04/02/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 19, 2014 10:11 am

ஆன்மீகச் செய்திக் கவிதை 10.
வைகாசி 5

சங்கரன்கோவில் ஶ்ரீகோமதியம்மன் தரிசனம்.

கோவில் விவரம்: http://temple.dinamalar.com/New.php?id=174

கோமதியம்மன் தரிசனம்
(சமனிலைச் சிந்து)

சங்கனும் பதுமனும் தம்முள் - தாயே
. சர்ச்சை புரிந்தது நன்றே
சங்கர நாரணன் என்றே - தாயே
. சர்ச்சையைத் தீர்த்துவைத் தாயே! ... 1

சந்திர ஒளிமுகம் கொண்டே - தாயே
. தவமிருந் தாயொரு காலில்
இந்திர தேவரும் உன்னைத் -தாயே
. நிரையுரு தாங்கியே காண! ... 2

கோமதி பேரினைக் கொண்டாய் - தாயே
. கோவிலில் மேவிய மர்ந்தாய்
சேமமுன் நாமமும் தருமே - தாயே
. சேவடி பணிந்தே வாழ்வோம்! ... 3

திங்களில் தங்கபா வாடை - தாயே
. திருவுரு தரிசனம் காண்போம்
மங்கைநீ புட்பபா வாடை - தாயே
. மங்கல வெள்ளியில் காண்போம்! ... 4

நோயுடன் தோஶமும் போகத் - தாயே
. உன்கழல் போற்றியே வாழ்வோம்
சேயென எம்மைக் காத்தே - தாயே
. சீர்பெறும் வகையருள் வாயே! ... 5

--ரமணி, 19/05/2014, கலி.05/02/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue May 20, 2014 6:05 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 11.
வைகாசி 6

ஶ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் புறப்பாடு.
சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

பெருமாள் தரிசனம்
(நேரிசை வெண்பா)

பெரிய பெருமாள் பெயர்கொள் அரங்கன்
கருவறை நீங்கி வருவன் - பெரியாழ்வார்
வல்லியைக் கொண்டரங்க மன்னார் புறப்பாடு
வில்லிபுத் தூரினில் இன்று.

தோளுக் கினியானால் தூக்க உலாவரும்
தாளைப் பணிந்தால் தகவுறும் - மூளும்
வினையெலாம் சாத்தூரின் வேங்கடவன் ஆளும்
கனிவில் மறையும் கரைந்து.

--ரமணி, 20/05/2014, கலி.06/02/5115

*****


முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue May 20, 2014 8:53 pm

அழகழகான கருத்துரு பா க்கள் - பாராட்டுகள்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed May 21, 2014 10:24 am

ஆன்மீகச் செய்திக் கவிதை 12.
வைகாசி 7

திருப்பதி ஶ்ரீஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்

நாரணன் நீராட்டு

(அறுசீர் விருத்தம்: காய் மா மா ... விளம் மா மா)
ஆகாய கங்கைத் தீர்த்தம்
. ஆயிரம் கலசம் கொண்டே
மாகாயம் மீது வார்க்க
. மஞ்சனம் ஆடும் மாயன்
காகோதம் மீது துயிலும் ... ... [காகோதம் = காகோதரம் = பாம்பு]
. கடல்வணன் கோலம் காண
மோகத்தைக் கொன்றே வாழ்வில்
. யோகமே அருள்செய் வானே.

கோவிந்தன் மூல உருவில்*
. கோவணம் அணிந்து காலை
ஆவிந்த னப்பால் கொண்டே
. ஆடுவான் அதன்பின் மேனிக்
காவந்த மாய்ப்ப ரிமளக் ... ... [காவந்து = காபந்து = பாதுகாப்பு]
. காப்பினை யணிந்த பின்னர்
ஆவிந்தன் தீர்த்த மாடி ... ... [ஆவிந்தன் = ஆவினம் மேய்க்கும் இடையன்]
. அலங்கர ணம்கொண் டருள்வான்.

[* http://prabanjaveliyil.blogspot.com/2014/02/blog-post_5843.html]

கௌமாரி வைண விதேவி*
. கவிந்ததோர் ஆற்ற லின்-கோ
வைமாமன் மருகன் உறவின்
. ஐக்கிய மாக உறைய
மாமாங்கம் ஆண்பெண் இருவர் .. ... [மாமாங்கம் = மாமாவான மாலின் மேனி]
. வாமமும் வலமும் காணும்
தேமாவாம் சீனி வாசன் ... ... [தேமா = தித்திப்பு மாமரம்]
. திருமலை அருள்வான் பேறே.

[* http://mahaperiyavaa.wordpress.com/2013/10/16/திருப்பதி-முருகன்-தலமா-த/]

--ரமணி, 21/05/2014, கலி.07/02/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 22, 2014 10:06 am

ஆன்மீகச் செய்திக் கவிதை 13.
வைகாசி 8

சுவாமிமலை ஶ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

பத்தனென ஆட்கொள்வாய் சுப்பையா!
(தரவு கொச்சகக் கலிப்பா)

அப்பனுக்குப் ஓங்காரப் பாடம்சொன்ன சுப்பையா!
அப்பொருளின் ஆதார அதிர்வெனக்கே எப்பய்யா?
ஒப்பில்லாத சுவாமிமலை ஒண்பொருளே சுப்பையா!
எப்பவுமே நான்செய்யும் எத்தனமேன் தப்பய்யா?

சத்திமகன் சத்திமூன்று சமையுமந்த வயிரவேல்!
நத்தகத்தின் எண்ணமதில் நின்றொளிரும் ஞானவேல்! ... [நத்தகம் = நத்தும் அகம் = விழையும் மனம்]
வித்தகத்தின் தத்துவமாய் வீற்றிருக்கும் வெற்றிவேல்!
பித்தகத்தன் என்றனுக்கோ எத்தனையோ கருமுள்வேல்!

அத்தன்சேய் நத்தாயோ மத்தனெனை முருகையா!
வித்தமெனக் காண்பதெலாம் வீணான சருகையா!
சித்த-மதில் உன்வேலால் சிதைப்பதுதான் எப்பய்யா?
பத்தனென ஆட்கொள்வாய் பரிவுடனே சுப்பையா!

--ரமணி, 22/05/2014, கலி.08/02/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri May 23, 2014 7:29 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 14.
வைகாசி 8


தத்தாத்திரய ஜயந்தி
(பொதுவாக தத்தரின் ஜயந்தி மார்கழிப் பௌர்ணமியை ஒட்டியே வந்தாலும்
இன்றைய நாளும் அதைக் காட்டுவதால், அவரை விட்டுவைப்பானேன்?)

தத்தரின் உண்டோ குரு!
(வெண்பா)

கணபதி துதி
உந்தை மலரவன் உம்பியின் மாமனார்
தந்தருட் செல்வமாய் அத்திரி பத்தினி
உந்தியில் தோன்றிய உண்மைக் குருவினை
வந்தனம் செய்ய வருள். ... 1

தத்தர் துதி
மூவராம் தேவரின் கூறென வந்தவர்
யாவரும் நாடிடும் மாநெறி தந்தவர்
யாவுமே வாழ்வினில் ஆசான் எனக்கொளின்
ஆவதில் லாதெதென் றார். ... 2

இருபத்து நான்கு இனமாய் விளங்கும்
உருவைத் தமது குருவெனக் கொண்டவர்
தத்தர் நமக்குத் தருவரே சாதனை
இத்தரை வாழ்வினி லே. ... 3

அஞ்செனும் பூதமும் சந்திரன் சூரியன்
கொஞ்சும் புறவினம் குன்றுறும் கட்செவி
தேன்தரும் தேனீயும் தேன்கொளும் கள்வனும்
மீனொடு மானும் இரைகொள் பருந்தும்
விலைமகள் விட்டில் வலைகொள் சிலந்தி
சிலீமுகம் செய்வனும் சிந்துரம் பாம்பும்
குளவி குழந்தை குமரி கடலென்
றுளவுரு யாவும் குரு. ... 4

தத்தரின் லீலையில் தாழ்வுறும் மாயையே
தத்தரின் நாமம் தரணியில் நல்வழி
தத்தரைப் போற்றத் தளையெலாம் நீங்கியே
முத்தியை உள்ளும் மனம். ... 5

--ரமணி, 23/05/2014, கலி.09/02/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat May 24, 2014 7:34 pm

ஆன்மீகச் செய்திக் கவிதை 15.
வைகாசி 10


திருநள்ளாறு ஶ்ரீசனீஸ்வரபகவான் சிறப்பு ஆராதனை

நள்ளாற்று நீலன்
(கலிவிருத்தம்: விளம் மா விளம் மா)

சனையெனில் மெதுவாம் சரமெனில் அசைவாம்
மனிதரின் வாழ்வில் மந்தனாய் ஊர்ந்தே
வினைகளை விதைத்தே விளைத்தபின் யருளும்
சனியவன் ஆட்சி சர்வமும் கொளுமே. ... 1

கார்வண நீலன் காக்கைய மர்ந்தே
ஊர்பவன் அச்சத் துருவனாய்க் காண்போம்
சூர்யனின் மைந்தன் சூழ்வினை செய்தே
சோர்வுறச் செய்வன் சுகமினி வரவே. ... 2

நளன்தனைப் பிடித்து நலிவுறச் செய்தே
திளைசனி விட்ட திருநள ஆற்றில்
குளித்தபின் சிவன்பால் குனிதலைச் செய்தே
நிளுதனம் விளைக்கும் நீலனைப் நாடி ... 3 ... [நிளுதனம் = அழிக்கை]

தரிசனம் செய்து தயையினை வேண்டக்
கரிசனம் கொண்டே கதிர்மகன் அருளும்
பரிவினில் தீமை பற்றுதல் நிற்க
வருவது எல்லாம் ஆகுமே நன்மை. ... 4

--ரமணி, 24/05/2014, கலி.10/02/5115

*****


Sponsored content

PostSponsored content



Page 19 of 36 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 27 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக