புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 32 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 32 of 36 Previous  1 ... 17 ... 31, 32, 33, 34, 35, 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Aug 12, 2015 6:03 pm

பிரதோஷத் துதி: நடேசனுக்கோர் நவரச வெண்பாச் சரம்
(அளவியல் நேரிசை வெண்பா)

நகை (சிரிப்பு)
கைத்தீ அணைக்காதோ கங்கை? நிலவிடும்
மெய்த்தீ அணைக்கவோ மேவினாள் - மைவிழியாள்?
வெண்பனியில் கண்கனல் வீட்டுமோ? வாட்டாதோ
உண்விடம் தீயாய் உமை? ... 1

[நிலவிடும் = நிலவுகின்ற, நிலவு+இடும்; வீட்டுதல் = அழித்தல்]

அழுகை (ஓலம்)
பிரம்மன் உருத்திரனாய்ப் பெற்றதில் ஓலம்
பிரம்படி விம்மிப் பிளிற்றி - இரவில்
எரிவனத்தில் ஓலம் இடுவீர்-உம் கண்ணீர்
உருத்திராட் சம்கொள் ளுரு. ... 2

இளிவரல் (இழிவு)
வெண்ணீறு பூசியே வெள்விடை யேறிநீர்
பண்ணுகின்ற ஆட்டம் பரிகாசம்! - உண்ணும்
கொடுவிடத்தில் ஆடையே கோவணமாய்ப் போக
நடமாடும் நீரோர்கை நாட்டு! ... 3

மருட்கை (வியப்பு)
மூவுலகை மால்கொண்டார் மூன்றடியில், உம்பாதம்
தாவுகையில் அண்டம் தகருமே - மேவுசக்தி
அண்டம் விளைக்கும் அணுவாய் உயிர்பலவாய்
உண்டுநீர் கொள்வீர் உவந்து. ... 4

அச்சம்
கால்-அகலும் நீரொரு காலகாலன் ஆகுவீர்
மேலுறும் கையில் விடதரம் - சூலன்
எரிவனம் ஆடினால் என்னுளம் அஞ்சும்
தெரிவதெவண் தெய்வமென தென்று? ... 5

[விடதரம் = பாம்பு]

பெருமிதம் (உள்ளக் களிப்பு)
மாலயன் தேடியே மாய்ந்த பெருமிதமோ?
காலன் உதைத்த களிப்பிலோ? - வேலனிடம்
கற்ற பெருமிதமோ? காலம் கடந்தநிலை
உற்ற களிப்போ உமக்கு? ... 6

வெகுளி (சினம்)
நெற்றிக்கண் காட்டவுமை நேர்கொண்டார் நக்கீரர்
உற்ற சினத்தில் உமைபிரிந்தீர் - பெற்ற
வெகுளியில் ஓர்தலை வீட்டினீர் நானோ
வெகுளியென் மேலேன் வெறுப்பு? ... 7

உவகை (மகிழ்ச்சி)
உமையாள் இருக்கும் உவகை, அழித்தே
அமைக்கும் மலர்ச்சி அகத்தில் - உமைபத்தர்
போற்றும் மகிழ்வோர் புறமிருக்க கங்கையின்
ஊற்றாய்ப் பெருகும் உவப்பு. ... 8

அமைதி (சாந்தம்/நிறைவு)
ஆலமர் செல்வன் அமைதி அடியவர்
மேலமர் மோனமாய் மேவியே - காலனை
வெல்லுமெய் ஞானம் விளவித்தே தன்னிலை
சொல்லும் நிறைவே சுகம். ... 9

பலத்துதி
பித்தன்நான் ஏதோ பிதற்றினேன் நீயுமோர்
பித்தனென் றாவதால் பேயாய்-என் - சித்தம்
பிடித்தேயென் வாழ்வில் பிரச்சினைகள் தீர்த்தென்
பிடிவாதம் தன்னைப் பிடுங்கு. ... 10

--ரமணி, 12/08/2015, கலி.27/04/5116

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 12, 2015 7:02 pm

நன்றாக உள்ளது அய்யா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 13, 2015 6:43 am

T.N.Balasubramanian wrote:நன்றாக உள்ளது அய்யா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157178
-
சூப்பருங்க

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Aug 27, 2015 6:02 pm

பிரதோஷத் துதி:
ஆற்றுச் சடையனுக்கோர் அறுசுவை வெண்பாச் சரம்
(அளவியல் நேரிசை/இன்னிசை வெண்பா)

கைப்பு (கசப்பு)

கசப்பே மருந்தொன்றின் கண்ணுறும் தன்மை
பசப்பிய பாற்கடல் பாம்பின் - விசத்தை
விருந்தென்று கொண்டே மிடறினில் தாங்கும்
மருந்தீசா என்னுள்ளே வா! ... 1

பசப்பும் பகட்டும் பலவாய் இளைமைப்
பசிதீர வாழ்ந்த பலனில் - கசக்குதே
இன்று சுயதருமம் ஈசனே நீயெனக்கு
நின்றருள் செய்வதெவண் நேர்? ... 2

இனிப்பு

இடங்கொளும் பெண்ணால் இனிப்போ? அதுவும்
அடியார் துதிதரும் அன்போ? - நடமாடும்
ஈசநின் உண்மை இயல்பாம் இனிப்பென்று
பேசினால் அண்டுமோ பேய்? ... 3

இனித்திடும் வாழ்வென்றே இன்றுநாள் செல்லப்
பனித்தசடை பால்நீறு பார்த்தே - மனித்தப்
பிறவியிதில் உன்னை மறவாதே வாழும்
உறவுதரக் கேட்டேன் உமை. ... 4

புளிப்பு

புளித்தேதான் போகாதோ புண்ணியா? என்றும்
தளராதே நீயாடும் தாண்டவம்? - இன்னும்
பிறப்பிலியாய் ஞாலமெலாம் பேணியே வாழ்வில்
இறப்பும் தருவது என்று? ... 5

புளித்த வினைமாவு பொங்கியெழும் வாழ்வில்
அளித்திடும் தாண்டவனாய் ஆடும் - களிற்றுரியன்
என்வினை போக்கி எனக்கருள்நீ செய்யவே
என்னசெய்ய வேண்டும்நான் இன்று? ... 6

உவர்ப்பு (உப்பு)

உப்பிய நஞ்சை உவர்த்தலின்றிக் கண்டத்தில்
தப்பாது கொண்ட தவமணியே! - உப்பக்கம்
செஞ்சடை வேணியுடன் சேர்ந்தாடக் கண்டுமகிழ்
நெஞ்சத்தில் நேச நெகிழ்ப்பு. ... 7

[உவர்த்தல் = அருவருத்தல், வெறுத்தல்;
உப்பக்கம் = முதுகு; வேணி = பின்னல்]

பிறப்பாம் உவரியிது பெய்வினை மாரி
உறவை விளைக்கும் உவர்மண் - அறுப்பதில்
நெல்லில் மிகுவது நெற்பதரே என்றாலும்
அல்லல் களைந்தே அருள். ... 8

[உவரி = உப்புக் கடல்; மாரி = மழை; ]

துவர்ப்பு

மாதுளையச் செய்தே மறுபிறப் பித்தனை
யாதும் விளையாட்டே யாண்டுமே - வேதன்நீ
தாணுவாய்த் தாழத் தழைப்பித்த சக்தியைப்
பேணுதலன் றோவுன் புகழ்? ... 9

[மாதுளையச் செய்தே = மாதுவாம் உமையை வருத்தியே;
தாணு = பட்டமரம்]

மாதுளை வாழைக்காய் மாவடு மஞ்சளென்றே
தோதாய் உணவில் துவர்ப்பெனவே - ஏதுசுவை
ஆயினும் உன்னருள், ஆதியே என்வாழ்வில்
தோயவே செய்வாய் துவர்ப்பு. ... 10

கார்ப்பு (காரம்)

ஆகாரம் நஞ்சாம் அலங்கார ஓங்காரன்
சீகாரம் பாடவெழும் சீவனுரு - சேகாரம்
என்பும் அரவும் எருதும் எனவேநீ
அன்புடன் ஆளும் அரன். ... 11

[ஆகாரம் = உடம்பு; சீகாரம் = பூம்பாவையை எழுப்பச் சம்பந்தர் பாடிய பண்;
சேகாரம் = சேகரித்த பொருள்]

காரம் பலவகையாய்க் காணவரும் வாழ்விதன்
சாரம் எதுவெனில் சக்கையே - வேரில்
விளைவது யாதெனினும் வேதியனுன் பேரே
உளம்வரக் கேட்டேன் உமை. ... 12

கடைக்காப்பு

அறுசுவை உன்னிடம் ஆள்வதாய் நானும்
பொறுப்பில்லா தேபாப் புனைந்தேன் - சிறுவன்யான்
என்சுவை உன்னிடம் ஏற்றிக்கண் டாலும்நீ
என்றும் தெவிட்டா இனிப்பு. ... 13

--ரமணி, 27/08/2015, கலி.10/05/5116

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Sep 11, 2015 9:14 am

பிரதோஷத் துதி:
எருதேறும் ஈசனருள் என்றோ?
(முப்பத்திரண்டு சீர் ஆசிரிய விருத்தம்:
கூவிளங்காய் காய் மா மா | காய் காய் மா மா x 7)


கண்ணெதிரே சூரியனும் மேற்கில் சாயும்
. கதிரவனின் கிரணங்கள் நீளப் பாயும்
. . கண்களிலே இதமாக வழிந்தே ஓடும்
. . . கன்றுடனே பசுக்கூட்டம் கொட்டில் நாடும்
. . . . கையினிலே மேய்ப்போனின் கோலும் போகும்
. . . . . கால்தவழும் வாத்துகளும் ஓரம் போகும்
. . . . . . கழனியிலே நெற்கதிரைத் தென்றல் ஓட்டும்
. . . . . . . காற்றினிலே மணியோசை தனியாய்க் கேட்கும். ... 1

வண்ணமெலாம் திரளாக வானில் பாயும்
. வானளாவும் மேகங்கள் வண்ணம் தோயும்
. . வட்டமிடும் பறவையெலாம் கூட்டை நாடும்
. . . வடிநீரின் சலசலப்பில் கால்வாய் ஓடும்
. . . . வயலெல்லாம் பைங்கூழாய்க் கண்ணில் ஒட்டும் ... ... [பசும்பயிர்]
. . . . . வரப்பெல்லாம் பொன்துகளாய்க் கண்ணில் தட்டும்
. . . . . . வந்ததெலாம் போனதுவாய் ஆகும் நேரம்
. . . . . . . வழிகளெலாம் ஆலயத்தின் வாசல் சேரும். ... 2

தண்ணொளிரும் சிவலிங்கம் நீரில் ஆடும்
. தலைவீழும் திரவியங்கள் வழிந்தே ஓடும்
. . . தன்மவொலிப் பண்ணொலியில் ஒன்றாய்ச் சேரும் ... ... [தன்மவொலி = வேதவொலி]
. . . . தான்மறந்தே நெஞ்சங்கள் அன்பில் ஆறும்
. . . . . தாழ்சடையன் வெண்ணீறை நெற்றிக் கிட்டே
. . . . . . தலையெல்லாம் ஒன்றாகும் சூடம் தொட்டே
. . . . . . . தட்சிணமாய் உமைபாகன் கோவில் சுற்றே
. . . . . . . . தன்வினையைத் தாங்கவரம் கூடும் பற்றே. ... 3

எண்ணத்தில் இவையெல்லாம் கண்டும் கேட்டும்
. எழுதுவதில் இறைநெறியைப் பெரிதும் வேட்டும்
. . என்னுள்ளம் இகவாழ்வில் சுகமே நாடும்
. . . எண்ணத்தில் களிம்பேற்றி வினையே தேடும்
. . . . என்நாவில் ஐந்தெழுத்தே உருளும் போதும்
. . . . . ஏதேதோ எண்ணங்கள் இடையில் மோதும்
. . . . . . எருதேறும் ஈசனருள் ஓர்நாள் என்றோ
. . . . . . . இகவாழ்வில் கிட்டாது போமோ நெஞ்சே! ... 4

--ரமணி, 10/09/2015, கலி.24/05/5116

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Sep 11, 2015 9:17 am

பாரதி நினைவுத் துதி: என்றும் புதியவன்!
(அளவியல் நேரிசை வெண்பா)

செந்தமிழ்ப் பாட்டாலே சீர்மீட்டுத் தந்தவன்
எந்தையாய் எந்தாயாய் எம்முயிராய் - விந்தையாய்
சிந்தனையை மேம்படுத்திச் செவ்விதின் செப்பனிட்டே
எந்நாளும் வாழ்வான் இனி. ... 1

பழம்பொருள் என்றே பகலவன் இந்து
தழைதுளிர் மின்னொளி தண்ணீர் - வழக்கில்
ஒழிந்தே படியுமோ ஒட்டடை? என்றும்
அழியாத வானம் அவன். ... 2

என்றும் புதிதாய் இமைதரும் காப்பெனப்
பொன்றாது வாழ்ந்திடும் போதகனை - நன்றேநாம்
ஊரில் உலகத்தில் உள்ளத்தில் பின்பற்றப்
பாரதி வாழவைப் பான். ... 3

--ரமணி, 11/09/2015, கலி.25/05/5116

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 11, 2015 12:03 pm

ரமணியின் கவிதைகள் - Page 32 3838410834 அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Sep 15, 2015 8:55 am

அரசியல்வாதி
(கலிவிருத்தம்)

பணத்தில் ஊறிப் பணித்தே வாழ்வர்
கணப்பாய்ப் போர்வை கணிப்பாய்ப் பார்வை
பிணத்தில் கூடப் பிணித்தல் தேடும்
குணத்தில் ஊறிக் குணித்தல் செயலே. ... 1 ... [குணித்தல் = ஆலோசித்தல்]

சிரத்தில் இலாதது சிரிப்பில் காட்டுவர்
உரத்தே பேசுவர் உரித்தே வீசுவர்
பரத்தை யிடமும் பரித்தல் உண்டு ... ... [பரித்தல் = ஆளுமை]
தரத்தைப் போலியாய்த் தரித்தலும் உண்டே. ... 2

எனதே இல்லை எனினும் கொள்ளும்
மனதில் தேடின் மனிதம் ஓடும்
தனதைக் காப்பர் தனியே பார்ப்பர்
இனத்தைக் காட்டி யினிக்கும் வாழ்வே. ... 3

அளத்தல் ஆயிரம் அளித்தல் பூஜ்யம்
களத்தில் இறங்கிக் களிக்கும் போது
உளத்தில் உள்ளதை உளிசா திக்க
குளத்துக் குருதியில் குளிக்கும் வாழ்வே. ... 4

அரசியல் வாதி அரிசியில் ஊழல்
இரக்கம் இல்லா இரிகம் கொண்டே ... ... [இரிகம் = இதயம்]
துரத்தியே வாழும் துரிச்சை மாந்தர்
சிரத்தை அறுத்தே சிரிப்பாய் காளீ! ... 5

--ரமணி, 15/09/2015, கலி.29/05/5116

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 15, 2015 9:24 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 15, 2015 4:07 pm

ரமணியின் கவிதைகள் - Page 32 3838410834 ரமணியின் கவிதைகள் - Page 32 3838410834

Sponsored content

PostSponsored content



Page 32 of 36 Previous  1 ... 17 ... 31, 32, 33, 34, 35, 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக