புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
Page 31 of 36 •
Page 31 of 36 • 1 ... 17 ... 30, 31, 32 ... 36
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஷத் துதி: உள்ளம் உய்யும் விடையேறே!
(அலங்காரபஞ்சகம்: வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம்,
சந்தவிருத்தம் என ஐந்து பாவின நிரலில் அந்தாதி மாலையாக அமைந்தது)
(அளவியல் நேரிசை வெண்பா)
விடையேறிக் கொம்பிடை விஞ்சும் மகிழ்வில்
நடமிடும் மூவுலக நாத! - கடையேனென்
உள்ளம் உறவாடி உண்மை உவகையை
உள்ளிடும் உத்தி உரை.
(கலிநிலைத்துறை: மா கூவிளம் விளம் விளம் மா)
உரைக்க ஒண்ணுமோ உவரியில் எழுவிடம் உண்டே
வரரின் ஆருயிர் காத்தருள் செய்திடும் வண்ணம்!
அரைக்கச் சாயுரி யணிந்துநீர் மன்றினில் ஆடக்
கரையா உள்ளமும் காசினி காணுமோ கபாலி!
(நேரிசை அகவல்)
கபாலி யென்றுநீர் கையேந்தும் கோலம்
அபாரக் கருணையில் அமைதிகொள் ஞாலம்!
அபாயம் தீர-உம் அம்புயத்தாள் நாடினேன்
சுபாவம் மீட்டினால் சுமையெலாம் வாடுமே!
அந்தியின் வண்ணத்தில் அகமுறும் மோனமும்
சந்தியின் ஆடும்-உம் தரிசன ஞானமும்
வருவினை அறுக்கவே மாயைகொளும்
உருவெலாம் கடந்திடும் உன்னதம் தருவீர்!
அறுசீர் விருத்தம் (விளம் மா தேமா விளம் மா தேமா)
தருவெனப் பொழியும் ஆடல்
. தரணிகள் படைத்த ழிக்கும்
அருவமும் உருவம் ஆகும்
. அழகினில் உமது கோலம்
வருமுளம் அன்பில் ஆர
. வருவினை அறுவ தாகும்
கருணையிற் கனிந்தென் ஆன்மக்
. கருவுறும் கரையைக் கொள்வீர்!
(வண்ண விருத்தம்: தய்ய தய்ய தய்ய தய்ய
. தய்ய தய்ய ... தனதான)
[திருப்புகழ் 660: வெள்ளிகரம் கள்ள முள்ள வல்ல வல்லி
. கையி லள்ளி ... பொருளீயக்]
கொள்ளு முள்ள மைய லள்ளல்
. குள்ள மில்லை ... பெருமானே
துள்ளு மைவர் செய்யு மல்லல்
. தொல்லை சொல்ல ... முடியாதே
மெள்ள வள்ளல் சொல்லை யுள்ளும்
. வெள்ளை யுள்ள மருள்வீரே
முள்ளை நவ்வு மெய்யை வெல்ல
. வுள்ள முய்யும் .. விடையேறே!
[துள்ளும் ஐவர் = துள்ளியாடும் ஐம்புலன்கள்: மேலுள்ள திருப்புகழ் பாடற் பிரயோகம்]
பொருள் விளக்கம்:
நான் கொள்ளும் இந்த உள்ளத்தில் மையல் அள்ளலாக (சேறாக) மண்டிக் கிடக்கிறது;
. எனினும் என்னிடம் குள்ளம் (கொடுமை, தந்திரம்) இல்லை பெருமானே!
துள்ளியாடும் என் ஐம்புலன்கள் செய்யும் அல்லலின்
. தொல்லை சொல்ல வியலாதாக இருக்கிறது!
மெள்ள நான் வள்ளலாகிய உமது சொல்லை இடைவிடாது நினைக்கும்
. வெள்ளை உள்ளத்தை அருள்வீரே!
முள்போன்ற துன்பங்களை விரும்புகின்ற இந்த உடம்பை வெல்லுவது கூடினால்
. என் உள்ளம் கடைத்தேறும் விடையேறே!
--ரமணி, 01/05/2015, கலி.18/01/5116
*****
(அலங்காரபஞ்சகம்: வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம்,
சந்தவிருத்தம் என ஐந்து பாவின நிரலில் அந்தாதி மாலையாக அமைந்தது)
(அளவியல் நேரிசை வெண்பா)
விடையேறிக் கொம்பிடை விஞ்சும் மகிழ்வில்
நடமிடும் மூவுலக நாத! - கடையேனென்
உள்ளம் உறவாடி உண்மை உவகையை
உள்ளிடும் உத்தி உரை.
(கலிநிலைத்துறை: மா கூவிளம் விளம் விளம் மா)
உரைக்க ஒண்ணுமோ உவரியில் எழுவிடம் உண்டே
வரரின் ஆருயிர் காத்தருள் செய்திடும் வண்ணம்!
அரைக்கச் சாயுரி யணிந்துநீர் மன்றினில் ஆடக்
கரையா உள்ளமும் காசினி காணுமோ கபாலி!
(நேரிசை அகவல்)
கபாலி யென்றுநீர் கையேந்தும் கோலம்
அபாரக் கருணையில் அமைதிகொள் ஞாலம்!
அபாயம் தீர-உம் அம்புயத்தாள் நாடினேன்
சுபாவம் மீட்டினால் சுமையெலாம் வாடுமே!
அந்தியின் வண்ணத்தில் அகமுறும் மோனமும்
சந்தியின் ஆடும்-உம் தரிசன ஞானமும்
வருவினை அறுக்கவே மாயைகொளும்
உருவெலாம் கடந்திடும் உன்னதம் தருவீர்!
அறுசீர் விருத்தம் (விளம் மா தேமா விளம் மா தேமா)
தருவெனப் பொழியும் ஆடல்
. தரணிகள் படைத்த ழிக்கும்
அருவமும் உருவம் ஆகும்
. அழகினில் உமது கோலம்
வருமுளம் அன்பில் ஆர
. வருவினை அறுவ தாகும்
கருணையிற் கனிந்தென் ஆன்மக்
. கருவுறும் கரையைக் கொள்வீர்!
(வண்ண விருத்தம்: தய்ய தய்ய தய்ய தய்ய
. தய்ய தய்ய ... தனதான)
[திருப்புகழ் 660: வெள்ளிகரம் கள்ள முள்ள வல்ல வல்லி
. கையி லள்ளி ... பொருளீயக்]
கொள்ளு முள்ள மைய லள்ளல்
. குள்ள மில்லை ... பெருமானே
துள்ளு மைவர் செய்யு மல்லல்
. தொல்லை சொல்ல ... முடியாதே
மெள்ள வள்ளல் சொல்லை யுள்ளும்
. வெள்ளை யுள்ள மருள்வீரே
முள்ளை நவ்வு மெய்யை வெல்ல
. வுள்ள முய்யும் .. விடையேறே!
[துள்ளும் ஐவர் = துள்ளியாடும் ஐம்புலன்கள்: மேலுள்ள திருப்புகழ் பாடற் பிரயோகம்]
பொருள் விளக்கம்:
நான் கொள்ளும் இந்த உள்ளத்தில் மையல் அள்ளலாக (சேறாக) மண்டிக் கிடக்கிறது;
. எனினும் என்னிடம் குள்ளம் (கொடுமை, தந்திரம்) இல்லை பெருமானே!
துள்ளியாடும் என் ஐம்புலன்கள் செய்யும் அல்லலின்
. தொல்லை சொல்ல வியலாதாக இருக்கிறது!
மெள்ள நான் வள்ளலாகிய உமது சொல்லை இடைவிடாது நினைக்கும்
. வெள்ளை உள்ளத்தை அருள்வீரே!
முள்போன்ற துன்பங்களை விரும்புகின்ற இந்த உடம்பை வெல்லுவது கூடினால்
. என் உள்ளம் கடைத்தேறும் விடையேறே!
--ரமணி, 01/05/2015, கலி.18/01/5116
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆனித் திருமஞ்சனத் துதி: நீராடும் போதினிலே...
(ஆசிரியத் தாழிசை)
வேரோடும் தேவருடன் வினையோடும் தானவரும்
போராடிப் பாற்கடலில் பொங்கமுதம் கடைந்தக்கால்
நீராடி அலைநஞ்சை நிறைசெய்தீர் நீருண்டே! ... 1
[வேரோடும் = நன்மையே விளைக்கும் அறத்தின் வேரோடும்]
சீரோடும் ஏழுலகும் சிரந்தன்னில் கொள்ளுமிறைப்
பேராளன் என்றேநீர் பெயர்பெற்றே அருள்செய்ய
நீராடும் ஆட்டத்தில் நீதிநெறி நீடுறுமே! ... 2
நாராய ணன்தேவர் நான்முகனும் போற்றிடவே
பாராளும் வேந்தனெனப் பசுபதியாய் நின்றருள
நீராடும் ஆட்டத்தில் நிலைகொள்ளும் ஐந்தொழிலே! ... 3
காரோடும் முகிலிறங்கிக் கதித்துவரும் கால்களென
நீராடி நூற்றெட்டாய் நின்றிலங்கும் கூத்துகளில்
நீராடும் ஆட்டமென நீள்சிறப்ப தைந்தாமே! ... 4
வேரோடும் இறையாக வினையோடும் உயிர்யாவும்
சீரோடக் காரோடச் சித்தமெலாம் போராட
நீராடும் நீர்த்துளியால் நெஞ்சத்தில் நிர்மலமே! ... 5
நீராடும் நிலவாடும் நீள்சடையின் ஆட்டத்தில்
ஏரோடும் ஊர்த்தவத்தில் எழுந்தருளும் எந்தைநீர்
நீராடும் அருவுருவாய் நின்றிலங்கும் ரகசியமே. ... 6
[ஏரோடும் ஊர்த்தவத்தில் = உழவர் ஏர்க்கலப்பை ஓட வாழும் ஊரின் தவத்தில்;
அழகும் நன்மையும் விளைக்கும் உமது ஊர்த்தவ தாண்டவம்]
ஆரணத்தின் ஒலியுடன்தே வாரத்தின் பண்ணொலிக்கத்
தேரோடும் வீதியிலே திருவெல்லாம் நின்றிலங்க
நீராடி நீறணிந்த நீலகண்டன் தரிசனமே! ... 7
நீர்காற்று நெருப்புவெளி நிலமென்னும் ஐம்பூதம்
ஊர்மண்ணாய் உயிர்வாழும் உலகமென உருப்பதுவே
நீராடும் ஆட்டமெனும் நிம்மதியில் உயிர்வாழ்வே! ... 8
நீராவிப் புகைபோல நிலையற்ற நிலவுலகில்
நீராவி காத்தேயென் நெஞ்சினிலே நின்றருளி
நீராடி வினைதீர்த்தென் நீள்பிறவி கொள்வதென்றோ? ... 9
--ரமணி, 24/06/2015, கலி.09/02/5116
(ஆனித் திருமஞ்சன தினம்)
*****
(ஆசிரியத் தாழிசை)
வேரோடும் தேவருடன் வினையோடும் தானவரும்
போராடிப் பாற்கடலில் பொங்கமுதம் கடைந்தக்கால்
நீராடி அலைநஞ்சை நிறைசெய்தீர் நீருண்டே! ... 1
[வேரோடும் = நன்மையே விளைக்கும் அறத்தின் வேரோடும்]
சீரோடும் ஏழுலகும் சிரந்தன்னில் கொள்ளுமிறைப்
பேராளன் என்றேநீர் பெயர்பெற்றே அருள்செய்ய
நீராடும் ஆட்டத்தில் நீதிநெறி நீடுறுமே! ... 2
நாராய ணன்தேவர் நான்முகனும் போற்றிடவே
பாராளும் வேந்தனெனப் பசுபதியாய் நின்றருள
நீராடும் ஆட்டத்தில் நிலைகொள்ளும் ஐந்தொழிலே! ... 3
காரோடும் முகிலிறங்கிக் கதித்துவரும் கால்களென
நீராடி நூற்றெட்டாய் நின்றிலங்கும் கூத்துகளில்
நீராடும் ஆட்டமென நீள்சிறப்ப தைந்தாமே! ... 4
வேரோடும் இறையாக வினையோடும் உயிர்யாவும்
சீரோடக் காரோடச் சித்தமெலாம் போராட
நீராடும் நீர்த்துளியால் நெஞ்சத்தில் நிர்மலமே! ... 5
நீராடும் நிலவாடும் நீள்சடையின் ஆட்டத்தில்
ஏரோடும் ஊர்த்தவத்தில் எழுந்தருளும் எந்தைநீர்
நீராடும் அருவுருவாய் நின்றிலங்கும் ரகசியமே. ... 6
[ஏரோடும் ஊர்த்தவத்தில் = உழவர் ஏர்க்கலப்பை ஓட வாழும் ஊரின் தவத்தில்;
அழகும் நன்மையும் விளைக்கும் உமது ஊர்த்தவ தாண்டவம்]
ஆரணத்தின் ஒலியுடன்தே வாரத்தின் பண்ணொலிக்கத்
தேரோடும் வீதியிலே திருவெல்லாம் நின்றிலங்க
நீராடி நீறணிந்த நீலகண்டன் தரிசனமே! ... 7
நீர்காற்று நெருப்புவெளி நிலமென்னும் ஐம்பூதம்
ஊர்மண்ணாய் உயிர்வாழும் உலகமென உருப்பதுவே
நீராடும் ஆட்டமெனும் நிம்மதியில் உயிர்வாழ்வே! ... 8
நீராவிப் புகைபோல நிலையற்ற நிலவுலகில்
நீராவி காத்தேயென் நெஞ்சினிலே நின்றருளி
நீராடி வினைதீர்த்தென் நீள்பிறவி கொள்வதென்றோ? ... 9
--ரமணி, 24/06/2015, கலி.09/02/5116
(ஆனித் திருமஞ்சன தினம்)
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஷத் துதி: உண்மையை உரைப்பீர் சற்றே!
(அறுசீர் விருத்தம்: கூவிளம்/கருவிளம் மா மா விளம் மா மா)
சேயெனச் சிறந்த தில்லை
. தேடியே அலைந்த தில்லை
காயிலே பழுத்த தில்லை
. கனியிலே இனித்த தில்லை
தாயெனக் கண்ட தில்லை
. தந்தையாய் அறிந்த தில்லை
பேயுடன் ஆடும் தில்லைப்
. பித்தனே அருள்செய் வீரே. ... 1
கோயிலுட் காண்டல் இல்லை
. கொம்பெனக் கொண்ட தில்லை
பாயிரம் அறிந்த தில்லை
. பக்தியிற் சிறந்த தில்லை
வாயினிற் போற்ற வில்லை
. மனதிலும் பெரிதாய் இல்லை
நாயகன் நடனன் தில்லை
. நன்றெனக் கருள்செய் வீரோ? ... 2
இகத்திலே இன்பம் என்றே
. இருமையைக் கொண்ட துண்டு
அகத்திலே விளையும் ஆசை
. அனுபவித் துழன்ற துண்டு
முகத்திலே பணிவென் றாலும்
. முனிவுகொள் உள்ள முண்டு
நகத்திலே உணர்வைப் போல
. நானுமை யுணர்ந்த துண்டே! ... 3
கல்லிலே கண்ட துண்டு
. கனவிலே கண்ட தில்லை
சொல்லிலே கேட்ட துண்டு
. சூக்குமம் கண்ட தில்லை
இல்லையும் உண்டும் என்றே
. இருப்பதை உணர்ந்த தில்லை
தில்லையில் ஆடும் தீர்த்த!
. திருவருள் செய்வீ ரன்றோ? ... 4
வேரென நின்றே தில்லை
. வெளியிலே ஆடும் வேந்த!
காரிருள் நீக்கி யென்றன்
. களைகளை வெட்டிச் சாய்த்தே
பாரிலென் பிறப்பின் போக்கைப்
. பரிவுடன் மேம்ப டுத்தி
யாரென என்றன் உன்றன்
. உண்மையை உரைப்பீர் சற்றே! ... 5
--ரமணி, 29/06/2015, கலி.14/03/5116
*****
(அறுசீர் விருத்தம்: கூவிளம்/கருவிளம் மா மா விளம் மா மா)
சேயெனச் சிறந்த தில்லை
. தேடியே அலைந்த தில்லை
காயிலே பழுத்த தில்லை
. கனியிலே இனித்த தில்லை
தாயெனக் கண்ட தில்லை
. தந்தையாய் அறிந்த தில்லை
பேயுடன் ஆடும் தில்லைப்
. பித்தனே அருள்செய் வீரே. ... 1
கோயிலுட் காண்டல் இல்லை
. கொம்பெனக் கொண்ட தில்லை
பாயிரம் அறிந்த தில்லை
. பக்தியிற் சிறந்த தில்லை
வாயினிற் போற்ற வில்லை
. மனதிலும் பெரிதாய் இல்லை
நாயகன் நடனன் தில்லை
. நன்றெனக் கருள்செய் வீரோ? ... 2
இகத்திலே இன்பம் என்றே
. இருமையைக் கொண்ட துண்டு
அகத்திலே விளையும் ஆசை
. அனுபவித் துழன்ற துண்டு
முகத்திலே பணிவென் றாலும்
. முனிவுகொள் உள்ள முண்டு
நகத்திலே உணர்வைப் போல
. நானுமை யுணர்ந்த துண்டே! ... 3
கல்லிலே கண்ட துண்டு
. கனவிலே கண்ட தில்லை
சொல்லிலே கேட்ட துண்டு
. சூக்குமம் கண்ட தில்லை
இல்லையும் உண்டும் என்றே
. இருப்பதை உணர்ந்த தில்லை
தில்லையில் ஆடும் தீர்த்த!
. திருவருள் செய்வீ ரன்றோ? ... 4
வேரென நின்றே தில்லை
. வெளியிலே ஆடும் வேந்த!
காரிருள் நீக்கி யென்றன்
. களைகளை வெட்டிச் சாய்த்தே
பாரிலென் பிறப்பின் போக்கைப்
. பரிவுடன் மேம்ப டுத்தி
யாரென என்றன் உன்றன்
. உண்மையை உரைப்பீர் சற்றே! ... 5
--ரமணி, 29/06/2015, கலி.14/03/5116
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஷத் துதி: வேண்டுமோ வரம்?
(அளவியல் நேரிசை வெண்பா)
கண்ணுதல் தீக்கனலும் கண்டத்தில் காளமும்
வெண்ணீ றணிந்திலங்கு மேனியும் - பண்ணுறும்
கன்னற் பதிகமும் கண்ணுறக் காதுற
இன்னும் வரம்வேண்டல் ஏன்? ... 1
செஞ்சடை மீதுறும் திங்களொடு கங்கையொடு
அஞ்சேல் எனும்கை அழகுமயம் - வஞ்சி
இடம்கொண் டருள்செயும் ஈசனுருக் காணில்
விடையென வேண்டுவரம் வீண்! ... 2
மானும் மழுவும் மதியுடன் மத்தமும்
ஆனந்த மாய்த்தாங்கும் ஆடலை - வானவர்
மானிடர் போற்றி மகிழ்வது கண்ணுற
ஏன்வரம் வேண்டும் இனி? ... 3
திங்களும் ஞாயிறும் செவ்வாயர் கண்ணாக
வெங்கும் வியாழனாய் வெள்ளிமலை - தங்கியே
பொங்கு சனியாய் புதனாக புத்தியிலே
தங்க,வரம் வேண்டுமோ தான்! ... 4
[வியாழன் = குரு; புதன் = தேவன்]
வண்டமிழும் வேத வடமொழியும் பாரதம்
கொண்ட பிறமொழியும் கூத்தனின் - வண்ணம்
தனைப்பாடும் கல்வியில் தானறிந்தே உய்யும்
மனமெவண் வேண்டும் வரம்? ... 5
காலன் உதைத்த கழற்பாதம் சென்னியில்
மேலுறக் கொண்டார் வினைகளைக் - காலற
வீழ்த்தி யருள்செய் விடையோன் கழலிணைகாண்
வாழ்விலேன் வேண்டும் வரம்? ... 6
பாலும் தெளிதேனும் பன்னீரும் சந்தனமும்
கோலம் வழிந்தோடும் கூத்தனுரு - மேலுறும்
உள்ளத்தில் ஊறும் உவகையை வேறுவரம்
அள்ளித் தருமோ அகம்? ... 7
வேதம் தமிழிசை விண்முட்டும் ஓசையில்
தீதுகொளச் சுற்றிவரும் தோலுடையான் - பேதம்
அகற்றிடும் ஞானம் அகத்தில் சொரியத்
தகுந்ததோ வேறுவரம் தான்? ... 8
கழலிணை காணலே காக்கும் வரமாம்
குழகனாய்க் கண்ணுறும் கூத்தன் - அழகினைப்
பாதாதி கேசம் பருகுத லாம்வரம்
போதா தெனிலென் புகல்? ... 9
பிறப்போர் வரம்மீள் பிறப்பும் வரமாம்
இறப்போர் வரமாம் இகம்வா - லறிவன்
தரிசனம் மேலுலகில் தங்குவ தானால்
வருவினையும் ஆகுமே மாண்பு! ... 10
--ரமணி, 13/07/2015, கலி.28/03/5116
*****
(அளவியல் நேரிசை வெண்பா)
கண்ணுதல் தீக்கனலும் கண்டத்தில் காளமும்
வெண்ணீ றணிந்திலங்கு மேனியும் - பண்ணுறும்
கன்னற் பதிகமும் கண்ணுறக் காதுற
இன்னும் வரம்வேண்டல் ஏன்? ... 1
செஞ்சடை மீதுறும் திங்களொடு கங்கையொடு
அஞ்சேல் எனும்கை அழகுமயம் - வஞ்சி
இடம்கொண் டருள்செயும் ஈசனுருக் காணில்
விடையென வேண்டுவரம் வீண்! ... 2
மானும் மழுவும் மதியுடன் மத்தமும்
ஆனந்த மாய்த்தாங்கும் ஆடலை - வானவர்
மானிடர் போற்றி மகிழ்வது கண்ணுற
ஏன்வரம் வேண்டும் இனி? ... 3
திங்களும் ஞாயிறும் செவ்வாயர் கண்ணாக
வெங்கும் வியாழனாய் வெள்ளிமலை - தங்கியே
பொங்கு சனியாய் புதனாக புத்தியிலே
தங்க,வரம் வேண்டுமோ தான்! ... 4
[வியாழன் = குரு; புதன் = தேவன்]
வண்டமிழும் வேத வடமொழியும் பாரதம்
கொண்ட பிறமொழியும் கூத்தனின் - வண்ணம்
தனைப்பாடும் கல்வியில் தானறிந்தே உய்யும்
மனமெவண் வேண்டும் வரம்? ... 5
காலன் உதைத்த கழற்பாதம் சென்னியில்
மேலுறக் கொண்டார் வினைகளைக் - காலற
வீழ்த்தி யருள்செய் விடையோன் கழலிணைகாண்
வாழ்விலேன் வேண்டும் வரம்? ... 6
பாலும் தெளிதேனும் பன்னீரும் சந்தனமும்
கோலம் வழிந்தோடும் கூத்தனுரு - மேலுறும்
உள்ளத்தில் ஊறும் உவகையை வேறுவரம்
அள்ளித் தருமோ அகம்? ... 7
வேதம் தமிழிசை விண்முட்டும் ஓசையில்
தீதுகொளச் சுற்றிவரும் தோலுடையான் - பேதம்
அகற்றிடும் ஞானம் அகத்தில் சொரியத்
தகுந்ததோ வேறுவரம் தான்? ... 8
கழலிணை காணலே காக்கும் வரமாம்
குழகனாய்க் கண்ணுறும் கூத்தன் - அழகினைப்
பாதாதி கேசம் பருகுத லாம்வரம்
போதா தெனிலென் புகல்? ... 9
பிறப்போர் வரம்மீள் பிறப்பும் வரமாம்
இறப்போர் வரமாம் இகம்வா - லறிவன்
தரிசனம் மேலுலகில் தங்குவ தானால்
வருவினையும் ஆகுமே மாண்பு! ... 10
--ரமணி, 13/07/2015, கலி.28/03/5116
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
நீர்மை காப்போம்!
(கலித்துறை: தேமா மா மா மா காய்)
ஆற்று நீரில் அற்றைத் தேவை நம்முன்னோர்
காற்று வாங்கிக் கால்கள் நடந்தே முடித்தனரே
நேற்று வரையில் நிலையாய்க் கிடந்த ஊருணியைப்
போற்றி ஊரார் பொன்னாய்க் காத்தே வாழ்ந்தனரே. ... 1
ஊற்று நீராய் உதவும் கிணற்றின் பாசனத்தில்
ஏற்றம் இறைத்தே ஏர்க்கால் உழுதே விளைத்தனரே
தோற்ற மெல்லாம் தோன்றும் தெய்வ உருவென்றே
ஆற்றும் அறத்தில் அன்பாய்க் கூடி வாழ்ந்தனரே. ... 2
வீட்டில் கிணறு விழைந்தே பின்னர் வாழ்ந்ததிலே
கூட்டுக் குடும்பம் கொய்யாக் கனியாய்ப் பெருகியதே
ஈட்டும் பொருளை இருத்தும் குணத்தார் தலையெடுத்தே
நாட்டில் வளநீர் நலியச் செய்தே தழைத்தனரே. ... 3
இன்றோ அடுக்காய் இல்லம் கட்டி நிலநீரைக்
குன்றாய் உயர்ந்த கூரைத் தொட்டி சேமித்தே
என்றும் இல்லம் எங்கும் பாயும் நீரெனவே
நன்றாய்க் கறந்தே நன்மை செய்தும் பயனிலையே! ... 4
நிலமேற் கழிவு நீரிற் கழிவு சேர்த்தேநாம்
நிலத்துள் தங்கும் நீரின் தூய்மை கெடச்செய்தே
இலத்தில் குடிநீர் ஈட்டப் பணத்தைச் செலவழித்தே
நலத்தை நாட நலிவே தங்கும் வாழ்வினிலே! ... 5
குன்றை வெட்டும் குவாரித் தொழிலால் மழைபெய்தல்
குன்றி வயல்கள் குற்று யிராக ஆனதுவே
என்றும் இளமை என்றே உயிர்க்கும் இயற்சூழல்
இன்று கயவர் ஏரி தூர்த்தே சாய்த்தனரே. ... 6
நாளை வாழும் நம்சந் ததியார் இவையெல்லாம்
ஆளா ளுக்கே அகத்தில் உணரச் செய்கடனைக்
கோளாய்க் கொண்டே குறியாய்க் நாமும் இயங்குவதில்
நீளும் துயராம் நீரின் குறையைத் தீர்த்திடுவோம்! ... 7
--ரமணி, 24/07/2015, கலி.08/04/5116
*****
(கலித்துறை: தேமா மா மா மா காய்)
ஆற்று நீரில் அற்றைத் தேவை நம்முன்னோர்
காற்று வாங்கிக் கால்கள் நடந்தே முடித்தனரே
நேற்று வரையில் நிலையாய்க் கிடந்த ஊருணியைப்
போற்றி ஊரார் பொன்னாய்க் காத்தே வாழ்ந்தனரே. ... 1
ஊற்று நீராய் உதவும் கிணற்றின் பாசனத்தில்
ஏற்றம் இறைத்தே ஏர்க்கால் உழுதே விளைத்தனரே
தோற்ற மெல்லாம் தோன்றும் தெய்வ உருவென்றே
ஆற்றும் அறத்தில் அன்பாய்க் கூடி வாழ்ந்தனரே. ... 2
வீட்டில் கிணறு விழைந்தே பின்னர் வாழ்ந்ததிலே
கூட்டுக் குடும்பம் கொய்யாக் கனியாய்ப் பெருகியதே
ஈட்டும் பொருளை இருத்தும் குணத்தார் தலையெடுத்தே
நாட்டில் வளநீர் நலியச் செய்தே தழைத்தனரே. ... 3
இன்றோ அடுக்காய் இல்லம் கட்டி நிலநீரைக்
குன்றாய் உயர்ந்த கூரைத் தொட்டி சேமித்தே
என்றும் இல்லம் எங்கும் பாயும் நீரெனவே
நன்றாய்க் கறந்தே நன்மை செய்தும் பயனிலையே! ... 4
நிலமேற் கழிவு நீரிற் கழிவு சேர்த்தேநாம்
நிலத்துள் தங்கும் நீரின் தூய்மை கெடச்செய்தே
இலத்தில் குடிநீர் ஈட்டப் பணத்தைச் செலவழித்தே
நலத்தை நாட நலிவே தங்கும் வாழ்வினிலே! ... 5
குன்றை வெட்டும் குவாரித் தொழிலால் மழைபெய்தல்
குன்றி வயல்கள் குற்று யிராக ஆனதுவே
என்றும் இளமை என்றே உயிர்க்கும் இயற்சூழல்
இன்று கயவர் ஏரி தூர்த்தே சாய்த்தனரே. ... 6
நாளை வாழும் நம்சந் ததியார் இவையெல்லாம்
ஆளா ளுக்கே அகத்தில் உணரச் செய்கடனைக்
கோளாய்க் கொண்டே குறியாய்க் நாமும் இயங்குவதில்
நீளும் துயராம் நீரின் குறையைத் தீர்த்திடுவோம்! ... 7
--ரமணி, 24/07/2015, கலி.08/04/5116
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஷத் துதி: உன்னருள் என்றுவரு மோ?
(அளவியல் நேரிசை வெண்பா)
அந்தி மயங்கி அருளும் பொழுதிலே
சிந்தனை என்ன சிறுமனமே! - எந்தை
நடமாடும் ஆனந்தம் நாடவுன் னுள்ளே
விடைவேண்டும் எண்ணம் விழும். ... 1
வானத்தில் மேகத்தின் வண்ணங்கள் ஆலய
கானத்தில் மோனம் கலக்குமே! - ஏனின்னும்
தன்னைச்சிந் தித்தே தளர்வாய் சிறுமனமே
மன்றுளாடி பாதம் மருந்து. ... 2
விழுநீர் அகத்தில் விழுமம் தருமே!
ஒழுகிடும் எண்ணம் ஒழித்தே - கழுவாயாய்
அஞ்செழுத்து மந்திரம் ஆளும் அமைதியில்
நெஞ்சே இளைப்பாறு நின்று. ... 3
கோவில் திருச்சுற்றில் கோவணன் பூக்கோலம்
மேவிடும் உள்ளம் மினுக்கிடுமோ? - பாவம்
தொலைக்கப் பரமனின் தொல்கழல் சேர்வாய்
உலையும் உளத்துக்(கு) உரம். ... 4
நான்பிறக்க நீபிறந்தாய் நான்தான் இனியென்றே
ஏனென்னை வைத்தாயோ இவ்வாழ்வில்? - மானேந்தி
மீதுனக்கு மையன்மை மேவினால், என்மனமே
ஏனெனும் எண்ணந்தான் ஏது? ... 5
[மையன்மை = மையல்; மையன்மை செய்து (திவ். பெரியாழ்.2,3,3)--அகராதி.]
அறிவேன்நான் என்றாய் அறியேன்நான் உன்னைத்
தறிக்க இயலாத தன்மை - பொறுத்தது
போதுமென்(று) உன்னுடன் போராடும் ஆயுதமாய்
ஏதுள்ள(து) இந்நாள் எனக்கு? ... 6
ஆயுதம் கண்டிலேன் ஆன்மப் பொறியினைத்
தாயுமாய் நின்றருளும் தந்தையே - சேயென்
மனத்திலே இட்டுநீர் மாயை எரிப்பீர்
தினவுறும் காட்டிலே தீ! ... 7
கண்படும் காட்சியில் காமுறும் என்னுள்ளம்
புண்பட்டு வீங்கிப் புரையோடும் - கண்ணுதல்-உம்
கண்பட்(டு) அறுத்தெனது காயம் குணமாகிப்
பண்பட்டே சேர்ப்பீர் பலம். ... 8
அறத்தில் ஒழுகிடும் அன்பென்(று) இருந்தும்
இறுக்கும் உலகியல் ஈனம் - சிறுத்தமனம்
தன்னை விரித்துத் தருவாய்ப் பயன்தரும்
இன்நிலை கிட்டுவது) என்று? ... 9
வெண்ணீ றணிந்துளத்தில் வேற்றுமை விட்டொழித்தேன்
கண்ணீர் சொரியக் கழல்பிடித்தேன் - உண்ணீராய்
என்னுள் பரவியென் ஈனம் குறையவே
உன்னருள் என்றுவரு மோ? ... 10
--ரமணி, 29/07/2015, கலி.13/04/5116
*****
(அளவியல் நேரிசை வெண்பா)
அந்தி மயங்கி அருளும் பொழுதிலே
சிந்தனை என்ன சிறுமனமே! - எந்தை
நடமாடும் ஆனந்தம் நாடவுன் னுள்ளே
விடைவேண்டும் எண்ணம் விழும். ... 1
வானத்தில் மேகத்தின் வண்ணங்கள் ஆலய
கானத்தில் மோனம் கலக்குமே! - ஏனின்னும்
தன்னைச்சிந் தித்தே தளர்வாய் சிறுமனமே
மன்றுளாடி பாதம் மருந்து. ... 2
விழுநீர் அகத்தில் விழுமம் தருமே!
ஒழுகிடும் எண்ணம் ஒழித்தே - கழுவாயாய்
அஞ்செழுத்து மந்திரம் ஆளும் அமைதியில்
நெஞ்சே இளைப்பாறு நின்று. ... 3
கோவில் திருச்சுற்றில் கோவணன் பூக்கோலம்
மேவிடும் உள்ளம் மினுக்கிடுமோ? - பாவம்
தொலைக்கப் பரமனின் தொல்கழல் சேர்வாய்
உலையும் உளத்துக்(கு) உரம். ... 4
நான்பிறக்க நீபிறந்தாய் நான்தான் இனியென்றே
ஏனென்னை வைத்தாயோ இவ்வாழ்வில்? - மானேந்தி
மீதுனக்கு மையன்மை மேவினால், என்மனமே
ஏனெனும் எண்ணந்தான் ஏது? ... 5
[மையன்மை = மையல்; மையன்மை செய்து (திவ். பெரியாழ்.2,3,3)--அகராதி.]
அறிவேன்நான் என்றாய் அறியேன்நான் உன்னைத்
தறிக்க இயலாத தன்மை - பொறுத்தது
போதுமென்(று) உன்னுடன் போராடும் ஆயுதமாய்
ஏதுள்ள(து) இந்நாள் எனக்கு? ... 6
ஆயுதம் கண்டிலேன் ஆன்மப் பொறியினைத்
தாயுமாய் நின்றருளும் தந்தையே - சேயென்
மனத்திலே இட்டுநீர் மாயை எரிப்பீர்
தினவுறும் காட்டிலே தீ! ... 7
கண்படும் காட்சியில் காமுறும் என்னுள்ளம்
புண்பட்டு வீங்கிப் புரையோடும் - கண்ணுதல்-உம்
கண்பட்(டு) அறுத்தெனது காயம் குணமாகிப்
பண்பட்டே சேர்ப்பீர் பலம். ... 8
அறத்தில் ஒழுகிடும் அன்பென்(று) இருந்தும்
இறுக்கும் உலகியல் ஈனம் - சிறுத்தமனம்
தன்னை விரித்துத் தருவாய்ப் பயன்தரும்
இன்நிலை கிட்டுவது) என்று? ... 9
வெண்ணீ றணிந்துளத்தில் வேற்றுமை விட்டொழித்தேன்
கண்ணீர் சொரியக் கழல்பிடித்தேன் - உண்ணீராய்
என்னுள் பரவியென் ஈனம் குறையவே
உன்னருள் என்றுவரு மோ? ... 10
--ரமணி, 29/07/2015, கலி.13/04/5116
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
இலந்தையார் எழுதிய ஓர் அற்புதக் கவிதை இங்கே:
கீழே என் கவிதை...
கைவினை எல்லாம் கணிணியிலே!
(அறுசீர் விருத்தம்: தேமா மா/விளம் காய் - அரையடி)
பள்ளிப் பருவ நினைவுகளில்
. பஞ்சில் தூசு நீக்கிடவே
அள்ளிக் கையால் வில்லடித்தே
. அறையின் தரையே பஞ்சாகத்
துள்ளி விழுந்தே பரவிடவே
. தூய பஞ்சைக் கைதிரித்தே
வெள்ளைப் பஞ்சுப் பட்டைகள்
. வீங்கும் கட்டுகள் செய்தோமே! ... 1
பட்டைப் பஞ்சைத் தக்கிளியில்
. பாங்காய்த் நுனியில் கைகோர்த்தே
வட்டச் சக்கரம் விரல்சொடுக்கில்
. வாகாய் நன்கு சுழன்றிடவே
பட்டை நூலிழை நூற்பாக
. பக்குவம் பெற்றே மெல்லிழையாய்
சிட்டுக் கையால் நூல்நூற்றே
. சீராய்ச் சுற்றித் தொடர்ந்தோமே! ... 2
சட்டம் சுழற்றிக் கிடைநிலையில்
. தக்கிளி பருத்த நூலிழையைச்
சிட்ட மாகச் செய்தெமது
. சிந்தனை மிக்க ஆசானார்
திட்ட மிட்ட எண்களிலே
. சேர்த்தவை கைத்தறி நெசவுக்கு
இட்டுத் தந்த நிகழ்வுகளும்
. இன்று நெஞ்சில் நிழலிடுமே! ... 3
கைவினைக் கல்விப் பயிற்சியிலே
. கையால் நூற்றோம், இழைப்புளியால்
கைகள் ஓட்டி மரத்துண்டைக்
. கலையாய் இழைத்தே நேர்கோட்டில்
கைவாள் கொண்டே அறுத்தவற்றைக்
. கைசேர்த் துளியால் துளையிட்டே
கைகள் வீசிப் பந்தடிக்கும்
. கிரிக்கெட் மட்டையும் செய்தோமே! ... 4
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
. கவலை உனக்கிலை ஒத்துக்கொள்
மெய்த்தவம் அதுபோல் இல்லையென
. மேதகு கவிமணி சொன்னாரே
எத்தொழில் எதுவும் தெரியாமல்
. இருக்கும் நிலையில் இந்நாளில்
கைவினை யெல்லாம் கணிணியெனும்
. கையறு நிலையில் குழந்தைகளே! ... 5
--ரமணி, 08/08/2015, கலி.23/04/5116
*****
கீழே என் கவிதை...
கைவினை எல்லாம் கணிணியிலே!
(அறுசீர் விருத்தம்: தேமா மா/விளம் காய் - அரையடி)
பள்ளிப் பருவ நினைவுகளில்
. பஞ்சில் தூசு நீக்கிடவே
அள்ளிக் கையால் வில்லடித்தே
. அறையின் தரையே பஞ்சாகத்
துள்ளி விழுந்தே பரவிடவே
. தூய பஞ்சைக் கைதிரித்தே
வெள்ளைப் பஞ்சுப் பட்டைகள்
. வீங்கும் கட்டுகள் செய்தோமே! ... 1
பட்டைப் பஞ்சைத் தக்கிளியில்
. பாங்காய்த் நுனியில் கைகோர்த்தே
வட்டச் சக்கரம் விரல்சொடுக்கில்
. வாகாய் நன்கு சுழன்றிடவே
பட்டை நூலிழை நூற்பாக
. பக்குவம் பெற்றே மெல்லிழையாய்
சிட்டுக் கையால் நூல்நூற்றே
. சீராய்ச் சுற்றித் தொடர்ந்தோமே! ... 2
சட்டம் சுழற்றிக் கிடைநிலையில்
. தக்கிளி பருத்த நூலிழையைச்
சிட்ட மாகச் செய்தெமது
. சிந்தனை மிக்க ஆசானார்
திட்ட மிட்ட எண்களிலே
. சேர்த்தவை கைத்தறி நெசவுக்கு
இட்டுத் தந்த நிகழ்வுகளும்
. இன்று நெஞ்சில் நிழலிடுமே! ... 3
கைவினைக் கல்விப் பயிற்சியிலே
. கையால் நூற்றோம், இழைப்புளியால்
கைகள் ஓட்டி மரத்துண்டைக்
. கலையாய் இழைத்தே நேர்கோட்டில்
கைவாள் கொண்டே அறுத்தவற்றைக்
. கைசேர்த் துளியால் துளையிட்டே
கைகள் வீசிப் பந்தடிக்கும்
. கிரிக்கெட் மட்டையும் செய்தோமே! ... 4
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
. கவலை உனக்கிலை ஒத்துக்கொள்
மெய்த்தவம் அதுபோல் இல்லையென
. மேதகு கவிமணி சொன்னாரே
எத்தொழில் எதுவும் தெரியாமல்
. இருக்கும் நிலையில் இந்நாளில்
கைவினை யெல்லாம் கணிணியெனும்
. கையறு நிலையில் குழந்தைகளே! ... 5
--ரமணி, 08/08/2015, கலி.23/04/5116
*****
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நாலாம் /ஐந்தாம் வகுப்பில் தக்கிளியால், நூற்று ,
காதி வஸ்த்ராலயத்தில் கொடுத்து
பருத்திப் பட்டைகள் வாங்கியதை
நினைவு படுத்தி , அந்த இன்ப நாட்களுக்கு ,
என்னை பின்னோக்கி இழுத்து சென்றது ,உங்கள் கவிதை .
நன்றி அய்யா .
ரமணியன்
(கவிதையில் இருந்த link , நீக்கப் படுகிறது )
ர...ன்
காதி வஸ்த்ராலயத்தில் கொடுத்து
பருத்திப் பட்டைகள் வாங்கியதை
நினைவு படுத்தி , அந்த இன்ப நாட்களுக்கு ,
என்னை பின்னோக்கி இழுத்து சென்றது ,உங்கள் கவிதை .
நன்றி அய்யா .
ரமணியன்
(கவிதையில் இருந்த link , நீக்கப் படுகிறது )
ர...ன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 31 of 36 • 1 ... 17 ... 30, 31, 32 ... 36
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 31 of 36
|
|