புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
Page 20 of 36 •
Page 20 of 36 • 1 ... 11 ... 19, 20, 21 ... 28 ... 36
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 16.
வைகாசி 11
தேவகோட்டை ஶ்ரீரங்கநாதர் புறப்பாடு
தேவகோட்டை ரங்கநாதர்
(குறும்பா)
தேவகோட்டை ரங்கநாதப் பெருமாளே
காவலற்று நானேவோர் வெறுமாளே!
. ரங்கநாதன் சரணவிணை
. மங்கலமே மரணமிலை
ஆவிநானென் றறிந்திடவே அருள்வாயே! ... 1
நெடிதுயர்ந்த மாலவனின் கோலத்திலே
கடிதயர்ந்தே ஏகும்வினை காலத்திலே!
. மாதவனின் சேவனையில்
. ஏதுமிலை மேவினையே
படிதுயராய்ப் பற்றாது ஞாலத்திலே! ... 2
ஊர்வலத்தில் அச்சுதனின் தரிசனமே
நேர்வலத்தில் உய்க்குமவன் பரிசனமே ... [பரிசனம் = உறவு]
. பெருமாளின் நாமமதே
. வருநாளின் சேமமெனக்
கார்வலத்தின் மாரியவன் கரிசனமே. ... 3
--ரமணி, 25/05/2014, கலி.11/02/5115
*****
வைகாசி 11
தேவகோட்டை ஶ்ரீரங்கநாதர் புறப்பாடு
தேவகோட்டை ரங்கநாதர்
(குறும்பா)
தேவகோட்டை ரங்கநாதப் பெருமாளே
காவலற்று நானேவோர் வெறுமாளே!
. ரங்கநாதன் சரணவிணை
. மங்கலமே மரணமிலை
ஆவிநானென் றறிந்திடவே அருள்வாயே! ... 1
நெடிதுயர்ந்த மாலவனின் கோலத்திலே
கடிதயர்ந்தே ஏகும்வினை காலத்திலே!
. மாதவனின் சேவனையில்
. ஏதுமிலை மேவினையே
படிதுயராய்ப் பற்றாது ஞாலத்திலே! ... 2
ஊர்வலத்தில் அச்சுதனின் தரிசனமே
நேர்வலத்தில் உய்க்குமவன் பரிசனமே ... [பரிசனம் = உறவு]
. பெருமாளின் நாமமதே
. வருநாளின் சேமமெனக்
கார்வலத்தின் மாரியவன் கரிசனமே. ... 3
--ரமணி, 25/05/2014, கலி.11/02/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஷத் துதி: அம்மானைத் துதிக்க அம்மானை!
மகளிர்க் கிடமேனி மத்தகம் தந்தது
நகைப்புக் கிடமாமோ நஞ்சுண்டர்க் கம்மானை?
நகைப்புக் கிடமென்றே நஞ்சுண்டர்க் காகில்
இகலெதிர் கொள்வதே எங்ஙனம் அம்மானை?
இகத்தை யழித்தே யிகல்கொள்வர் அம்மானை! ... 1
குஞ்சரனைத் தந்து குமரனும் தந்தவர்
அஞ்சுமுகம் கொண்ட அனல்விழியர் அம்மானை!
அஞ்சுமுகம் கொண்ட அனல்விழியர் ஆமாகில்
அஞ்சுவரே அன்னார் அடியவர் அம்மானை?
அஞ்செழுத் துள்வரின் அச்சமில்லை அம்மானை! ... 2
பேயுடன் ஆடிடும் பித்தரெம் மீசர்
நாயுடன் சஞ்சரிக்கும் நாயகர் அம்மானை!
நாயுடன் சஞ்சரிக்கும் நாயகரை எங்ஙனம்
நாயன்மார் நண்ணியே நாடினர் அம்மானை?
ஆயெலாம் தீர்ப்பதால் அண்ணினர் அம்மானை! ... 3
எருதேறி ஆடிடும் ஈசரவர் எங்ஙன்
எருமையாம் என்மனம் ஏறுவர் அம்மானை?
எருமையில் ஏறும் எமன்வரு முன்னே
அருமையாம் உன்னுள் வருவதே அம்மானை!
ஒருமை யிருந்தால் உறும்திணம் அம்மானை! ... 4
அத்தன் பிடித்திட அத்தன் பிடித்தென்
சித்தம் பிடித்துநான் சீர்பெறுவேன் அம்மானை!
சித்தம் பிடித்துநீ சீர்பெறுவாய் ஆமாகில்
இத்தனை ஆட்டமும் ஏனடி அம்மானை?
குத்திநான் ஆடுதலோர் கூத்தன்றோ அம்மானை! ... 5
அன்னைக் கொருபிடி அத்தர்க் கொருபிடி
தன்னைப் பிடிக்கவே தாழ்சடையான் அம்மானை!
தன்னைப் பிடிக்கவே தாழ்சடையான் என்றாலே
என்னைப் பிடித்தவை ஏகுமோ அம்மானை?
முன்பன் பிடிக்கவரும் முத்தியே அம்மானை! ... 6
--ரமணி, 26/05/2014, கலி.12/02/5115
அனந்த் அவர்களின் அம்மானைக் கட்டுரை:
http://vsa-writes.blogspot.in/2012_12_01_archive.html
*****
மகளிர்க் கிடமேனி மத்தகம் தந்தது
நகைப்புக் கிடமாமோ நஞ்சுண்டர்க் கம்மானை?
நகைப்புக் கிடமென்றே நஞ்சுண்டர்க் காகில்
இகலெதிர் கொள்வதே எங்ஙனம் அம்மானை?
இகத்தை யழித்தே யிகல்கொள்வர் அம்மானை! ... 1
குஞ்சரனைத் தந்து குமரனும் தந்தவர்
அஞ்சுமுகம் கொண்ட அனல்விழியர் அம்மானை!
அஞ்சுமுகம் கொண்ட அனல்விழியர் ஆமாகில்
அஞ்சுவரே அன்னார் அடியவர் அம்மானை?
அஞ்செழுத் துள்வரின் அச்சமில்லை அம்மானை! ... 2
பேயுடன் ஆடிடும் பித்தரெம் மீசர்
நாயுடன் சஞ்சரிக்கும் நாயகர் அம்மானை!
நாயுடன் சஞ்சரிக்கும் நாயகரை எங்ஙனம்
நாயன்மார் நண்ணியே நாடினர் அம்மானை?
ஆயெலாம் தீர்ப்பதால் அண்ணினர் அம்மானை! ... 3
எருதேறி ஆடிடும் ஈசரவர் எங்ஙன்
எருமையாம் என்மனம் ஏறுவர் அம்மானை?
எருமையில் ஏறும் எமன்வரு முன்னே
அருமையாம் உன்னுள் வருவதே அம்மானை!
ஒருமை யிருந்தால் உறும்திணம் அம்மானை! ... 4
அத்தன் பிடித்திட அத்தன் பிடித்தென்
சித்தம் பிடித்துநான் சீர்பெறுவேன் அம்மானை!
சித்தம் பிடித்துநீ சீர்பெறுவாய் ஆமாகில்
இத்தனை ஆட்டமும் ஏனடி அம்மானை?
குத்திநான் ஆடுதலோர் கூத்தன்றோ அம்மானை! ... 5
அன்னைக் கொருபிடி அத்தர்க் கொருபிடி
தன்னைப் பிடிக்கவே தாழ்சடையான் அம்மானை!
தன்னைப் பிடிக்கவே தாழ்சடையான் என்றாலே
என்னைப் பிடித்தவை ஏகுமோ அம்மானை?
முன்பன் பிடிக்கவரும் முத்தியே அம்மானை! ... 6
--ரமணி, 26/05/2014, கலி.12/02/5115
அனந்த் அவர்களின் அம்மானைக் கட்டுரை:
http://vsa-writes.blogspot.in/2012_12_01_archive.html
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 17.
வைகாசி 12
ஶ்ரீ வைகுண்டம் ஶ்ரீ வைகுண்டபதி புறப்பாடு
கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=910
கள்ளபிரான் உள்ளம்வரின்...
(தரவு கொச்சகக் கலிப்பா)
கள்ளனுக்கும் அருள்செய்தே காப்புதந்த கள்ளபிரான்
வள்ளலென நல்லவர்க்கு வாரிவாரி வழங்குவரே
உள்ளுமனம் ஏதுமின்றி உளைவதென உலகீரே
தள்ளுநாளில் கொள்ளுவினை தள்ளுவதும் அவர்தானே! ... 1
மூலவராய் வைகுந்தர் உற்சவராய்க் கள்ளபிரான்
கோலமிரு வகையினராய்க் கோவிந்தன் தகவுறுவார்
ஆலயத்தில் ஊர்வலத்தில் அச்சுதனை நேர்காண
ஓலமிடும் உளமதுவே ஓசையற்ற அமைதியிலே. ... 2
வைகுந்தன் நாமமுற வையமெலாம் சேமமுறும்
வைகுந்தன் நாமமுற மனதினிலே ஏமமுறும்
வைகுந்தப் பெருமாளே மெய்யடியார்க் குருவாவார்
வைகுந்தன் தாள்விந்தம் ஆனந்தக் காபந்தே. ... 3
--ரமணி, 26/05/2014, கலி.12/02/5115
*****
வைகாசி 12
ஶ்ரீ வைகுண்டம் ஶ்ரீ வைகுண்டபதி புறப்பாடு
கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=910
கள்ளபிரான் உள்ளம்வரின்...
(தரவு கொச்சகக் கலிப்பா)
கள்ளனுக்கும் அருள்செய்தே காப்புதந்த கள்ளபிரான்
வள்ளலென நல்லவர்க்கு வாரிவாரி வழங்குவரே
உள்ளுமனம் ஏதுமின்றி உளைவதென உலகீரே
தள்ளுநாளில் கொள்ளுவினை தள்ளுவதும் அவர்தானே! ... 1
மூலவராய் வைகுந்தர் உற்சவராய்க் கள்ளபிரான்
கோலமிரு வகையினராய்க் கோவிந்தன் தகவுறுவார்
ஆலயத்தில் ஊர்வலத்தில் அச்சுதனை நேர்காண
ஓலமிடும் உளமதுவே ஓசையற்ற அமைதியிலே. ... 2
வைகுந்தன் நாமமுற வையமெலாம் சேமமுறும்
வைகுந்தன் நாமமுற மனதினிலே ஏமமுறும்
வைகுந்தப் பெருமாளே மெய்யடியார்க் குருவாவார்
வைகுந்தன் தாள்விந்தம் ஆனந்தக் காபந்தே. ... 3
--ரமணி, 26/05/2014, கலி.12/02/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 18.
வைகாசி 13
திருப்போரூர் ஶ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம்
கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=12
திருப்போரூர் முத்துக்குமரன் துதி
(எண்சீர் விருத்தம்: தேமா விளம் தேமா கூவிளம் அரையடி)
போரூர் உத்தம சீலன் வேலனைப்
. போற்றும் முன்னுறை யோகி ஐங்கரன்
தார மாயிரு தேவி கொண்டவன்
. ஆரத் துதித்தவன் சம்ம தத்துடன்
சூரன் வதைத்தவன் கோலம் கண்டிட
. சூழும் வினயவன் பாதம் கொண்டிட
ஆரும் அருள்தனில் அன்பும் சாந்தியும்
. சாறாய் ஊறியே உள்ளத் தோங்குமே. ... 1
வேலன் முழுக்கினைக் காணும் பேறுற
. வேண்டும் விழைவுகள் வாழ்வில் நேருற
ஆலம் கொண்டவன் மைந்தன் பார்வையில்
. ஆன்ம நலன்களே வாழ்வில் முன்னுறக்
காலன் வருகையில் அச்ச மின்றியே
. காலம் பொருளுடன் செல்லப் புண்ணிய
ஞாலம் மரித்தபின் ஏகித் துய்த்தபன்
. ஞானம் ஓர்தினம் கிட்டும் சென்மமே. ... 2
எண்ணெய்க் காப்பது எண்ணம் காக்குமே
. நீர பிடேகம் மூலம் காட்டுமே
வண்ண மற்றபால் மஞ்ச னந்தனில்
. வான வில்மன மாயை யேகுமே
வெண்ணீ றாலபி டேகம் கண்ணுற
. வேதன் வெள்ளொளி பேதம் தீர்க்குமே
மண்ணின் ஆசைகள் விட்டுப் போகவே
. வண்ணம் முத்தியி லக்கைக் கொள்ளுமே. ... 3
--ரமணி, 27/05/2014, கலி.13/02/5115
*****
வைகாசி 13
திருப்போரூர் ஶ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம்
கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=12
திருப்போரூர் முத்துக்குமரன் துதி
(எண்சீர் விருத்தம்: தேமா விளம் தேமா கூவிளம் அரையடி)
போரூர் உத்தம சீலன் வேலனைப்
. போற்றும் முன்னுறை யோகி ஐங்கரன்
தார மாயிரு தேவி கொண்டவன்
. ஆரத் துதித்தவன் சம்ம தத்துடன்
சூரன் வதைத்தவன் கோலம் கண்டிட
. சூழும் வினயவன் பாதம் கொண்டிட
ஆரும் அருள்தனில் அன்பும் சாந்தியும்
. சாறாய் ஊறியே உள்ளத் தோங்குமே. ... 1
வேலன் முழுக்கினைக் காணும் பேறுற
. வேண்டும் விழைவுகள் வாழ்வில் நேருற
ஆலம் கொண்டவன் மைந்தன் பார்வையில்
. ஆன்ம நலன்களே வாழ்வில் முன்னுறக்
காலன் வருகையில் அச்ச மின்றியே
. காலம் பொருளுடன் செல்லப் புண்ணிய
ஞாலம் மரித்தபின் ஏகித் துய்த்தபன்
. ஞானம் ஓர்தினம் கிட்டும் சென்மமே. ... 2
எண்ணெய்க் காப்பது எண்ணம் காக்குமே
. நீர பிடேகம் மூலம் காட்டுமே
வண்ண மற்றபால் மஞ்ச னந்தனில்
. வான வில்மன மாயை யேகுமே
வெண்ணீ றாலபி டேகம் கண்ணுற
. வேதன் வெள்ளொளி பேதம் தீர்க்குமே
மண்ணின் ஆசைகள் விட்டுப் போகவே
. வண்ணம் முத்தியி லக்கைக் கொள்ளுமே. ... 3
--ரமணி, 27/05/2014, கலி.13/02/5115
*****
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
கிருஷ்ணா
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 19.
வைகாசி 14
திருவள்ளூர் ஶ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு
கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=127
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் துதி
(இன்னிசை வெண்பா)
அல்லல் கரைந்தபின் அச்சுதன் தீர்த்தத்தில்
வெல்லம் கரைத்தே வினைகடக்கும் பத்தரின்
உள்ளம் நிறைந்தே உவகை தரும்திரு
வள்ளூரின் வைத்தியன் தாள். ... 1
மால்மனம் நாடிட மாவே படையலாய்
மால்பதம் வைத்தபின் ஐயர் பசிதீர்த்த
சாலிஹோத்ர மாமுனி யார்க்கருளி மாதவன்
கால்நீட்டி ஒய்வுற்ற வூர். ... 2
எவ்வுள் கிடந்தானின் நீள்மேனி பத்தைந்தாய்
அவ்வணை யின்னுயரம் ஐந்தடி யாய்க்கோலம்
கண்டார் மனம்கனியக் காதல் பெருகவே
கொண்டானே மாலன் துயில். ... 3
வீரராக வப்பெருமாள் வீதிவலம் கண்டவர்
பேரெழிலில் பாவம் பெயர்ந்தேக உள்ளத்தில்
காரிருள் நீங்கக் கனியும் அமைதியில்
வேரினைப் போற்றிவாழ் வோம். ... 4
--ரமணி, 28/05/2014, கலி.14/02/5115
*****
வைகாசி 14
திருவள்ளூர் ஶ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு
கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=127
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் துதி
(இன்னிசை வெண்பா)
அல்லல் கரைந்தபின் அச்சுதன் தீர்த்தத்தில்
வெல்லம் கரைத்தே வினைகடக்கும் பத்தரின்
உள்ளம் நிறைந்தே உவகை தரும்திரு
வள்ளூரின் வைத்தியன் தாள். ... 1
மால்மனம் நாடிட மாவே படையலாய்
மால்பதம் வைத்தபின் ஐயர் பசிதீர்த்த
சாலிஹோத்ர மாமுனி யார்க்கருளி மாதவன்
கால்நீட்டி ஒய்வுற்ற வூர். ... 2
எவ்வுள் கிடந்தானின் நீள்மேனி பத்தைந்தாய்
அவ்வணை யின்னுயரம் ஐந்தடி யாய்க்கோலம்
கண்டார் மனம்கனியக் காதல் பெருகவே
கொண்டானே மாலன் துயில். ... 3
வீரராக வப்பெருமாள் வீதிவலம் கண்டவர்
பேரெழிலில் பாவம் பெயர்ந்தேக உள்ளத்தில்
காரிருள் நீங்கக் கனியும் அமைதியில்
வேரினைப் போற்றிவாழ் வோம். ... 4
--ரமணி, 28/05/2014, கலி.14/02/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 20.
வைகாசி 15
மன்னார்குடி ஶ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு
கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=354
மன்னார்குடிக் கண்ணன் துதி
(கலிவிருத்தம்: மாங்கன்லி கூவிளம் கூவிளம் தேமா)
கணபதி வாழ்த்து:
நாமந்தனில் நெற்றிவி நாயக! கண்ணன்
நாமந்தனைப் பாவினில் நாடவே உன்றன்
சேமந்தரு பார்வையில் சேயவன் நானும்
ஏமந்தரும் சொற்களில் ஏடிடச் செய்வாய்!
கண்ணன் துதி:
மன்னார்குடிக் கண்ணனை மாயனைக் காணத்
தன்னால்வரும் அன்பிலே தாயெனும் உள்ளம்
முன்னால்வர மாதவன் முத்தியை வாழ்வில்
உன்னாமலே தந்தவன் உய்வருள் வானே. ... 1
கண்ணன்விளை யாடலின் காட்சியை உள்ளக்
கண்ணார்ந்திரு மாமுனி காணவே மாயை
வண்ணத்தினில் கோபனாய் வாசுவாய் வந்த
அண்ணல்கழல் நண்ணவே அல்வினை போமே. ... 2
முப்பத்திரு லீலையில் உற்சவம் ஒன்றில்
ஒப்பில்சிறு கண்ணனாய் ஊர்ந்தவன் தானும்
இப்பாலடி யாரெறி வெண்ணையைக் கொண்டு
சப்பாணியின் நாடகம் ஆடுவான் கண்ணன்! ... 3
ஆண்டாளவள் வேடமும் தாங்குவான் ஏதும்
வேண்டாரவர் உள்ளமும் ஏங்கிடச் செய்வான்
ஆண்டானவன் ஆண்டாளாய் ஆகியே வாழ்வில்
தூண்டாவிளக் காவனே தூயொளி தந்தே. ... 4
இடையன்தரும் காட்சியில் வேட்டியே பாகை
இடையில்சதங் கைவளை இத்துடன் சாவி
நடையில்வரும் நூபுர நர்த்தனம் ஆவின்
படைமேய்த்திடச் சாட்டைகொள் பாலகன் பூவே! ... 5
கண்னன்பதம் நண்ணவே காட்சியில் ஆன்ம
எண்ணம்வர வாழ்விலே ஏற்றமாம் வாக்கில்
உண்மைவர லட்சியம் உன்னதம் கொள்ளும்
திண்மைவர நேயமே தேட்டமா யாமே. ... 6
--ரமணி, 29/05/2014, கலி.15/02/5115
*****
வைகாசி 15
மன்னார்குடி ஶ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு
கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=354
மன்னார்குடிக் கண்ணன் துதி
(கலிவிருத்தம்: மாங்கன்லி கூவிளம் கூவிளம் தேமா)
கணபதி வாழ்த்து:
நாமந்தனில் நெற்றிவி நாயக! கண்ணன்
நாமந்தனைப் பாவினில் நாடவே உன்றன்
சேமந்தரு பார்வையில் சேயவன் நானும்
ஏமந்தரும் சொற்களில் ஏடிடச் செய்வாய்!
கண்ணன் துதி:
மன்னார்குடிக் கண்ணனை மாயனைக் காணத்
தன்னால்வரும் அன்பிலே தாயெனும் உள்ளம்
முன்னால்வர மாதவன் முத்தியை வாழ்வில்
உன்னாமலே தந்தவன் உய்வருள் வானே. ... 1
கண்ணன்விளை யாடலின் காட்சியை உள்ளக்
கண்ணார்ந்திரு மாமுனி காணவே மாயை
வண்ணத்தினில் கோபனாய் வாசுவாய் வந்த
அண்ணல்கழல் நண்ணவே அல்வினை போமே. ... 2
முப்பத்திரு லீலையில் உற்சவம் ஒன்றில்
ஒப்பில்சிறு கண்ணனாய் ஊர்ந்தவன் தானும்
இப்பாலடி யாரெறி வெண்ணையைக் கொண்டு
சப்பாணியின் நாடகம் ஆடுவான் கண்ணன்! ... 3
ஆண்டாளவள் வேடமும் தாங்குவான் ஏதும்
வேண்டாரவர் உள்ளமும் ஏங்கிடச் செய்வான்
ஆண்டானவன் ஆண்டாளாய் ஆகியே வாழ்வில்
தூண்டாவிளக் காவனே தூயொளி தந்தே. ... 4
இடையன்தரும் காட்சியில் வேட்டியே பாகை
இடையில்சதங் கைவளை இத்துடன் சாவி
நடையில்வரும் நூபுர நர்த்தனம் ஆவின்
படைமேய்த்திடச் சாட்டைகொள் பாலகன் பூவே! ... 5
கண்னன்பதம் நண்ணவே காட்சியில் ஆன்ம
எண்ணம்வர வாழ்விலே ஏற்றமாம் வாக்கில்
உண்மைவர லட்சியம் உன்னதம் கொள்ளும்
திண்மைவர நேயமே தேட்டமா யாமே. ... 6
--ரமணி, 29/05/2014, கலி.15/02/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 21.
வைகாசி 16
சிவகாசி ஶ்ரீவிஸ்வநாதர் உற்சவாரம்பம்
கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=1309
காசிநாதர் துதி
(குறும்பா)
விச்வநாதர் வைகாசி விழாக்கோலம்
உச்சிமதி சிவன்காசி யுலாக்கோலம்
. கொடியேற்றம் தேரோட்டம்
. அபிடேக நீரோட்டம்
இச்சையிலா வாழ்வுதரும் சிலாக்கோலம். ... 1
பாண்டியனும் சென்றனனே வடகாசி
தாண்டவனைத் தாபிக்கத் தென்காசி
. வானதியில் நீராட்ட
. ஆனிரையின் மேலேற்ற
ஆண்டகையோ மேவியது சிவகாசி! ... 2
காசிவிச்வ நாதனென்னும் பேருடனே
காசிவிசா லாட்சியன்னை யாருடனே
. சிவகாசி தங்கினனே
. பவரோகம் மங்கிடவே
ஆசிலானைப் போற்றிடுவோம் தாருடனே. ... 3
வான்வழியே காசிசென்று பண்டியனே
கோனருளால் வழிபட்டு வேண்டினனே
. இதனாலே திருவாளர்
. பதம்காண வருவாரே
வானூர்த்திச் செலவின்முன் வேண்டுவரே. ... 4
அத்தனைநாம் பத்துநாளும் தரிசித்தே
நித்தமும்நாம் சித்தமதில் வருவித்தே
. அக்கறையாய் வழிபடவே
. அக்கரைக்கு வழிவருமே
முத்தியருட் காப்புவினை எரிவித்தே. ... 5
--ரமணி, 29/05/2014, கலி.15/02/5115
*****
வைகாசி 16
சிவகாசி ஶ்ரீவிஸ்வநாதர் உற்சவாரம்பம்
கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=1309
காசிநாதர் துதி
(குறும்பா)
விச்வநாதர் வைகாசி விழாக்கோலம்
உச்சிமதி சிவன்காசி யுலாக்கோலம்
. கொடியேற்றம் தேரோட்டம்
. அபிடேக நீரோட்டம்
இச்சையிலா வாழ்வுதரும் சிலாக்கோலம். ... 1
பாண்டியனும் சென்றனனே வடகாசி
தாண்டவனைத் தாபிக்கத் தென்காசி
. வானதியில் நீராட்ட
. ஆனிரையின் மேலேற்ற
ஆண்டகையோ மேவியது சிவகாசி! ... 2
காசிவிச்வ நாதனென்னும் பேருடனே
காசிவிசா லாட்சியன்னை யாருடனே
. சிவகாசி தங்கினனே
. பவரோகம் மங்கிடவே
ஆசிலானைப் போற்றிடுவோம் தாருடனே. ... 3
வான்வழியே காசிசென்று பண்டியனே
கோனருளால் வழிபட்டு வேண்டினனே
. இதனாலே திருவாளர்
. பதம்காண வருவாரே
வானூர்த்திச் செலவின்முன் வேண்டுவரே. ... 4
அத்தனைநாம் பத்துநாளும் தரிசித்தே
நித்தமும்நாம் சித்தமதில் வருவித்தே
. அக்கறையாய் வழிபடவே
. அக்கரைக்கு வழிவருமே
முத்தியருட் காப்புவினை எரிவித்தே. ... 5
--ரமணி, 29/05/2014, கலி.15/02/5115
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆன்மீகச் செய்திக் கவிதை 22.
வைகாசி 18
பத்ராச்சலம் ஶ்ரீராமபிரான் புறப்பாடு
கோவில் விவரம்:
http://ta.wikipedia.org/wiki/பத்திராசலம்_கோவில்
இராமரின் அருட்காப்பு
கணபதி துதி
சதுர்த்தி புனர்பூ சநட்சத் திருநாள்
சதுரனாம் சீதைக்கேள் சத்திய ராமனின்
பத்திராச லம்கோலம் பற்றிநான் பாடவே
அத்தன் மகனே அருள்.
இராமர் துதி
(எழுசீர் விருத்தம்: கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
. விளம் விளம் காய்)
பத்திரர்க் கருள்செயச் சங்கொலிச் செவியுற
. பத்தரின் எதிரிலே நாற்கரமாய்
பத்திரம் தனுசுடன் ஏந்திய இருகரம்
. அச்சுதன் திகிரிசங் கிருகையிலே
சத்திய அனையவள் சீதையோர் மடியிலே
. தம்பியாம் இலக்குவன் இன்னொன்றில்
நித்திய கதியினைத் தந்தவர் மகிழவே
. பத்திர மலையினில் மேவினனே.
[பத்திரம் = அம்பு; திகிரி = சக்கரம்; அனை = அன்னை]
போகல தமக்கையின் சொப்பனம் உறுத்தவள்
. புற்றினில் ஐயனைக் கண்டனளே
ராகவன் அடியவர் பக்தரா மதாசனும்
. அரசினர் வரிப்பணம் கையாண்டே
வாகுடன் எழுந்தவோர்க் கோவிலை அமைத்தவர்
. வரையிலாத் துயருறச் சிறைப்பட்டார்
ராகவன் இலக்குவன் மன்னனின் முஹர்களாம்
. ஆறுலட் சம்தொகை மீட்டனரே.
ராமனின் திருவிளை யாடலை உணர்ந்தமன் ... [மன் = மன்னன்]
. அத்தனை பணத்தையும் தாள்வைத்தே
ராமதா சரைவிடு வித்திடப் பொறுத்தவர்
. நாணயம் இரண்டினைக் கைக்கொளவே
ராகவன் சபையிலே இன்றுநாம் இரணிய
. நாணயம் இருப்பது காணுவமே
ராகவன் கருணையாம் சாகர மெனவர
. யாதொரு பேதமும் காணாதே!
தந்தைசொல் மிகுந்தொரு மந்திரம் எதுவெனத்
. தாயினும் சிறந்திலைக் கோவிலென
வந்தவர் உடன்பிறந் தோரினும் பெரியவன்
. அன்னவர் தந்தையாய்ப் பேணுதலும்
வந்தவோர் மனைவியின் இன்னொரு துணையிலை
. வந்துதாள் பற்றியர் நலன்காப்பே
எந்தவோர் தருமமும் இல்லையே இதனினும்
. என்றசொல் ராமனின் பேர்சொலுமே.
--ரமணி, 01/06/2014, கலி.18/02/5115
*****
வைகாசி 18
பத்ராச்சலம் ஶ்ரீராமபிரான் புறப்பாடு
கோவில் விவரம்:
http://ta.wikipedia.org/wiki/பத்திராசலம்_கோவில்
இராமரின் அருட்காப்பு
கணபதி துதி
சதுர்த்தி புனர்பூ சநட்சத் திருநாள்
சதுரனாம் சீதைக்கேள் சத்திய ராமனின்
பத்திராச லம்கோலம் பற்றிநான் பாடவே
அத்தன் மகனே அருள்.
இராமர் துதி
(எழுசீர் விருத்தம்: கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
. விளம் விளம் காய்)
பத்திரர்க் கருள்செயச் சங்கொலிச் செவியுற
. பத்தரின் எதிரிலே நாற்கரமாய்
பத்திரம் தனுசுடன் ஏந்திய இருகரம்
. அச்சுதன் திகிரிசங் கிருகையிலே
சத்திய அனையவள் சீதையோர் மடியிலே
. தம்பியாம் இலக்குவன் இன்னொன்றில்
நித்திய கதியினைத் தந்தவர் மகிழவே
. பத்திர மலையினில் மேவினனே.
[பத்திரம் = அம்பு; திகிரி = சக்கரம்; அனை = அன்னை]
போகல தமக்கையின் சொப்பனம் உறுத்தவள்
. புற்றினில் ஐயனைக் கண்டனளே
ராகவன் அடியவர் பக்தரா மதாசனும்
. அரசினர் வரிப்பணம் கையாண்டே
வாகுடன் எழுந்தவோர்க் கோவிலை அமைத்தவர்
. வரையிலாத் துயருறச் சிறைப்பட்டார்
ராகவன் இலக்குவன் மன்னனின் முஹர்களாம்
. ஆறுலட் சம்தொகை மீட்டனரே.
ராமனின் திருவிளை யாடலை உணர்ந்தமன் ... [மன் = மன்னன்]
. அத்தனை பணத்தையும் தாள்வைத்தே
ராமதா சரைவிடு வித்திடப் பொறுத்தவர்
. நாணயம் இரண்டினைக் கைக்கொளவே
ராகவன் சபையிலே இன்றுநாம் இரணிய
. நாணயம் இருப்பது காணுவமே
ராகவன் கருணையாம் சாகர மெனவர
. யாதொரு பேதமும் காணாதே!
தந்தைசொல் மிகுந்தொரு மந்திரம் எதுவெனத்
. தாயினும் சிறந்திலைக் கோவிலென
வந்தவர் உடன்பிறந் தோரினும் பெரியவன்
. அன்னவர் தந்தையாய்ப் பேணுதலும்
வந்தவோர் மனைவியின் இன்னொரு துணையிலை
. வந்துதாள் பற்றியர் நலன்காப்பே
எந்தவோர் தருமமும் இல்லையே இதனினும்
. என்றசொல் ராமனின் பேர்சொலுமே.
--ரமணி, 01/06/2014, கலி.18/02/5115
*****
- Sponsored content
Page 20 of 36 • 1 ... 11 ... 19, 20, 21 ... 28 ... 36
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 36
|
|