புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
Page 16 of 36 •
Page 16 of 36 • 1 ... 9 ... 15, 16, 17 ... 26 ... 36
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மிக்க நன்றி சின்னக் கண்ணன் அவர்களே.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஞானம்
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
காலையில் கண்விழித்தே கடவுளைக் கிழிப்பேனே
வேலையில் பொட்டலமாய் மேலவனைக் கட்டுவனே
சாலையில் செருப்பவிழ்த்தே சாற்றுவனே தெருவோரம்
மாலையில் கடவுற்பேர் மரித்திடும் அணங்குடனே.
--ரமணி, 13/03/2014
*****
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
காலையில் கண்விழித்தே கடவுளைக் கிழிப்பேனே
வேலையில் பொட்டலமாய் மேலவனைக் கட்டுவனே
சாலையில் செருப்பவிழ்த்தே சாற்றுவனே தெருவோரம்
மாலையில் கடவுற்பேர் மரித்திடும் அணங்குடனே.
--ரமணி, 13/03/2014
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஷத் துதி: தேமதுரச் சுவையார...
(தந்ததனத் தானதனத் தனதான)
[’உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி...’--திருப்புகழ் 3.]
உந்துகடற் பாலலையைக் கடைகோலால்
. உம்பருடற் றானவர்கைக் கடைநாகம்
உந்தியதைத் தேகெழுமிச் சுழிகாளம்
. உம்பர்பதைத் தோடவிடப் பரமேசன்
சொந்தமெனக் கையிலெடுத் துணவாய
. ருந்திவிடக் கௌரிவிதிர்த் தவளோடி
வந்துதடுத் தேமிடறிற் கரியோனாய்
. அண்டமுயிர்த் தேவொளிரச் செயுமேறே! ... 1
சொந்தமெனப் பேணிடுமிச் சிறைமேனி
. உண்ணவுடுக் கையணியத் திமிரேறும்
பந்தமெனப் பேணுமனச் சிறைமேவி
. அஞ்சுபுலத் தாறுவுயிர்ப் புணையேகும்
கந்தல்களைப் போற்றுலகச் சுமையேறி
. அஞ்சுமனத் தேவினையொட் டடைசேரும்
அந்தகனிப் போதுமனத் துளைவாலே
. அந்தமிலித் தாளதனிற் றலைதாழ்வேன். ... 2
நந்திதலைக் கோடுமிசைப் பதமேவி
. அஞ்சலெனச் சூலமெடுத் தவிநாசி
வந்துமனத் தாடுவதற் கெனநானும்
. வஞ்சமறுத் தேவிதயச் சுவரோரம்
சிந்தையறுத் தேவுணரச் சிலநேரம்
. எண்ணமதிற் றேமதுரச் சுவையாரும்
சந்திரனைச் சூடுதலைச் சடையோனே
. அந்தநிலச் சீர்பெறுதற் கருள்வாயே. ... 3
--ரமணி, 14/03/2014, கலி.30/11/5114
*****
(தந்ததனத் தானதனத் தனதான)
[’உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி...’--திருப்புகழ் 3.]
உந்துகடற் பாலலையைக் கடைகோலால்
. உம்பருடற் றானவர்கைக் கடைநாகம்
உந்தியதைத் தேகெழுமிச் சுழிகாளம்
. உம்பர்பதைத் தோடவிடப் பரமேசன்
சொந்தமெனக் கையிலெடுத் துணவாய
. ருந்திவிடக் கௌரிவிதிர்த் தவளோடி
வந்துதடுத் தேமிடறிற் கரியோனாய்
. அண்டமுயிர்த் தேவொளிரச் செயுமேறே! ... 1
சொந்தமெனப் பேணிடுமிச் சிறைமேனி
. உண்ணவுடுக் கையணியத் திமிரேறும்
பந்தமெனப் பேணுமனச் சிறைமேவி
. அஞ்சுபுலத் தாறுவுயிர்ப் புணையேகும்
கந்தல்களைப் போற்றுலகச் சுமையேறி
. அஞ்சுமனத் தேவினையொட் டடைசேரும்
அந்தகனிப் போதுமனத் துளைவாலே
. அந்தமிலித் தாளதனிற் றலைதாழ்வேன். ... 2
நந்திதலைக் கோடுமிசைப் பதமேவி
. அஞ்சலெனச் சூலமெடுத் தவிநாசி
வந்துமனத் தாடுவதற் கெனநானும்
. வஞ்சமறுத் தேவிதயச் சுவரோரம்
சிந்தையறுத் தேவுணரச் சிலநேரம்
. எண்ணமதிற் றேமதுரச் சுவையாரும்
சந்திரனைச் சூடுதலைச் சடையோனே
. அந்தநிலச் சீர்பெறுதற் கருள்வாயே. ... 3
--ரமணி, 14/03/2014, கலி.30/11/5114
*****
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
தயவு செய்து இதன் விளக்கம் கொடுத்தால் ,கொஞ்சம் புரிதலுக்கு வசதியாக இருக்கும்
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஶத் துதி: தேமதுரச் சுவையார...
(தந்ததனத் தானதனத் தனதான)
[’உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி...’
--திருப்புகழ் 3.]
பாடல்:
உந்துகடற் பாலலையைக் கடைகோலால்
. உம்பருடற் றானவர்கைக் கடைநாகம்
உந்தியதைத் தேகெழுமிச் சுழிகாளம்
. உம்பர்பதைத் தோடவிடப் பரமேசன்
சொந்தமெனக் கையிலெடுத் துணவாய
. ருந்திவிடக் கௌரிவிதிர்த் தவளோடி
வந்துதடுத் தேமிடறிற் கரியோனாய்
. அண்டமுயிர்த் தேவொளிரச் செயுமேறே! ... 1
விளக்கம்:
(அலைகளை) உந்தும் கடலின் பால்-அலைகளை (மந்தாரை மலையை மத்தாக்கிக்) கடையும் கோலினால்
. (உம்பர் எனும்) தேவர்களுடன் (தானவர் எனும்) அசுரர்களும் கையால் கடையக் (கயிறாக உதவிய வாசுகி என்னும்) நாகமானது
(உந்தியெனும்) வயிறு வீங்கியதால் முளைத்துச் (கெழுமிச்) சுழித்திடும் விஶமானது (காளம்)
. தேவர்களைப் பதைத்து ஓடவிடப் பரமேசனாகிய சிவன் (அவர்களுக்கு அபயமளித்து)
தன் சொந்தப் பொருளாக அந்த விஶத்தைக் கருதிக் கையில் எடுத்து உணவாக
. அருந்திவிட, (அவன் மனையாள்) கௌரி நடுங்கியவள் (விதிர்த்தவள்) ஓடி
வந்து தடுக்கவே, கழுத்தில் (மிடறில்) கரியோனாக
. இந்த அண்டமெலாம் உயிர்த்து ஒளிரச் செய்யும் உயர்வுடையோனே (ஏறே)! ... 1
பாடல்:
சொந்தமெனப் பேணிடுமிச் சிறைமேனி
. உண்ணவுடுக் கையணியத் திமிரேறும்
பந்தமெனப் பேணுமனச் சிறைமேவி
. அஞ்சுபுலத் தாறுவுயிர்ப் புணையேகும்
கந்தல்களைப் போற்றுலகச் சுமையேறி
. அஞ்சுமனத் தேவினையொட் டடைசேரும்
அந்தகனிப் போதுமனத் துளைவாலே
. அந்தமிலித் தாளதனிற் றலைதாழ்வேன். ... 2
விளக்கம்:
என் சொந்தம் என நான் பேணிடும் இந்தச் சிறையாகிய உடல்
. உண்ணவும் (உடுக்கை) ஆடை அணியவும் திமிர் ஏறும்.
(பந்தம்) உறவு எனப் பேணும் மனச் சிறையில் பொருந்தி
. ஐந்து புலன்களின் வழியே இந்த உயிர் எனும் புணை (படகு) போகும்.
வெறும் கந்தல்களை வாழ்வியலாகப் போற்றும் இந்த உலகச் சுமை ஏறியதால்
. அஞ்சும் என் மனத்திலே வினைகள் ஒட்டடையெனச் சேரும்
அந்தகன் (குருடன்) நான் இப்போது என் மனத்தின் உளைச்சலால்
. அந்தம் (முடிவு என்பது) இல்லாத உன் தாளில் என் தலைதாழ்வேன். ... 2
பாடல்:
நந்திதலைக் கோடுமிசைப் பதமேவி
. அஞ்சலெனச் சூலமெடுத் தவிநாசி
வந்துமனத் தாடுவதற் கெனநானும்
. வஞ்சமறுத் தேவிதயச் சுவரோரம்
சிந்தையறுத் தேவுணரச் சிலநேரம்
. எண்ணமதிற் றேமதுரச் சுவையாரும்
சந்திரனைச் சூடுதலைச் சடையோனே
. அந்தநிலைச் சீர்பெறுதற் கருள்வாயே. ... 3
விளக்கம்:
நந்தியின் தலையில் உள்ள கோடு (கொம்பு) மீது உன் பாதம் பொருத்தி
. அஞ்சற்க எனச் சூலாயுதம் எடுத்து ஆடும் அவிநாசி (இது சிவனின் பெயர்களில் ஒன்று)
வந்து என் மனத்தில் ஆடுவதற்கென்று நானும்
. என் பொய்யான நோக்குகளை அறுத்து, என் இதயத்தின் சுவர் ஓரமாக
என் மனதையும் நிறுத்தி உணரும்போது சிலநேரம்
. என் எண்ணத்தில் உன் தேன் போன்ற மதுரச் சுவை நிறையும்.
சந்திரனைத் தலையில் சூடும் சடையோனே
. எனக்கு அந்த நிலைச் சீர்பெற்று நின்றிட அருள்வாயே. ... 3
--ரமணி, 14/03/2014, கலி.30/11/5114
*****
(தந்ததனத் தானதனத் தனதான)
[’உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி...’
--திருப்புகழ் 3.]
பாடல்:
உந்துகடற் பாலலையைக் கடைகோலால்
. உம்பருடற் றானவர்கைக் கடைநாகம்
உந்தியதைத் தேகெழுமிச் சுழிகாளம்
. உம்பர்பதைத் தோடவிடப் பரமேசன்
சொந்தமெனக் கையிலெடுத் துணவாய
. ருந்திவிடக் கௌரிவிதிர்த் தவளோடி
வந்துதடுத் தேமிடறிற் கரியோனாய்
. அண்டமுயிர்த் தேவொளிரச் செயுமேறே! ... 1
விளக்கம்:
(அலைகளை) உந்தும் கடலின் பால்-அலைகளை (மந்தாரை மலையை மத்தாக்கிக்) கடையும் கோலினால்
. (உம்பர் எனும்) தேவர்களுடன் (தானவர் எனும்) அசுரர்களும் கையால் கடையக் (கயிறாக உதவிய வாசுகி என்னும்) நாகமானது
(உந்தியெனும்) வயிறு வீங்கியதால் முளைத்துச் (கெழுமிச்) சுழித்திடும் விஶமானது (காளம்)
. தேவர்களைப் பதைத்து ஓடவிடப் பரமேசனாகிய சிவன் (அவர்களுக்கு அபயமளித்து)
தன் சொந்தப் பொருளாக அந்த விஶத்தைக் கருதிக் கையில் எடுத்து உணவாக
. அருந்திவிட, (அவன் மனையாள்) கௌரி நடுங்கியவள் (விதிர்த்தவள்) ஓடி
வந்து தடுக்கவே, கழுத்தில் (மிடறில்) கரியோனாக
. இந்த அண்டமெலாம் உயிர்த்து ஒளிரச் செய்யும் உயர்வுடையோனே (ஏறே)! ... 1
பாடல்:
சொந்தமெனப் பேணிடுமிச் சிறைமேனி
. உண்ணவுடுக் கையணியத் திமிரேறும்
பந்தமெனப் பேணுமனச் சிறைமேவி
. அஞ்சுபுலத் தாறுவுயிர்ப் புணையேகும்
கந்தல்களைப் போற்றுலகச் சுமையேறி
. அஞ்சுமனத் தேவினையொட் டடைசேரும்
அந்தகனிப் போதுமனத் துளைவாலே
. அந்தமிலித் தாளதனிற் றலைதாழ்வேன். ... 2
விளக்கம்:
என் சொந்தம் என நான் பேணிடும் இந்தச் சிறையாகிய உடல்
. உண்ணவும் (உடுக்கை) ஆடை அணியவும் திமிர் ஏறும்.
(பந்தம்) உறவு எனப் பேணும் மனச் சிறையில் பொருந்தி
. ஐந்து புலன்களின் வழியே இந்த உயிர் எனும் புணை (படகு) போகும்.
வெறும் கந்தல்களை வாழ்வியலாகப் போற்றும் இந்த உலகச் சுமை ஏறியதால்
. அஞ்சும் என் மனத்திலே வினைகள் ஒட்டடையெனச் சேரும்
அந்தகன் (குருடன்) நான் இப்போது என் மனத்தின் உளைச்சலால்
. அந்தம் (முடிவு என்பது) இல்லாத உன் தாளில் என் தலைதாழ்வேன். ... 2
பாடல்:
நந்திதலைக் கோடுமிசைப் பதமேவி
. அஞ்சலெனச் சூலமெடுத் தவிநாசி
வந்துமனத் தாடுவதற் கெனநானும்
. வஞ்சமறுத் தேவிதயச் சுவரோரம்
சிந்தையறுத் தேவுணரச் சிலநேரம்
. எண்ணமதிற் றேமதுரச் சுவையாரும்
சந்திரனைச் சூடுதலைச் சடையோனே
. அந்தநிலைச் சீர்பெறுதற் கருள்வாயே. ... 3
விளக்கம்:
நந்தியின் தலையில் உள்ள கோடு (கொம்பு) மீது உன் பாதம் பொருத்தி
. அஞ்சற்க எனச் சூலாயுதம் எடுத்து ஆடும் அவிநாசி (இது சிவனின் பெயர்களில் ஒன்று)
வந்து என் மனத்தில் ஆடுவதற்கென்று நானும்
. என் பொய்யான நோக்குகளை அறுத்து, என் இதயத்தின் சுவர் ஓரமாக
என் மனதையும் நிறுத்தி உணரும்போது சிலநேரம்
. என் எண்ணத்தில் உன் தேன் போன்ற மதுரச் சுவை நிறையும்.
சந்திரனைத் தலையில் சூடும் சடையோனே
. எனக்கு அந்த நிலைச் சீர்பெற்று நின்றிட அருள்வாயே. ... 3
--ரமணி, 14/03/2014, கலி.30/11/5114
*****
mbalasaravanan wrote:தயவு செய்து இதன் விளக்கம் கொடுத்தால் ,கொஞ்சம் புரிதலுக்கு வசதியாக இருக்கும்
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆதி சங்கரர் அருளிய ’ஶ்ரீ கணேச புஜங்கம்’
ஸ்தோத்திரத்தின் தமிழ் யாப்பு
(குறள் வெண்செந்துறை: புஜங்க அமைப்பு:
லகு-குரு-குரு x 4)
தணத்துப் பிணைந்தே மணித்தா ரொலித்தே
. அலைந்தா டயிண்டை மலர்த்தண் டுமாடும்
அணத்துப் பரூஉமே னிமின்நா கமாலை
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 1
ஒலித்தண் டுநாதக் குரல்பா டுமுத்தம்
. துதிக்கை நுனித்தேம் பழம்மா துளையாம்
சலத்தின் மணத்தால் சுரும்பர்த் தார்கூட்டும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 2
மிளிர்செம் பருத்திச் சிவந்தோங் குதோற்றம்
. துளிர்க்கா லைசோதிக் கதிர்போன் ற-ஏகம்
களிற்றா னைமோடும் துதிக்கை யோர்கோடும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 3
வணச்சோ திரத்னத் திலாரங் கிரீடம்
. கிரீடத் திலங்கும் பிறைவள் ளியாகும்
அணிக்கே யிழையாய்ப் பிறப்பை யறுக்கும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 4
உயர்ந்தே றுவல்லிக் கரம்நோக் கவேரோ
. டுவல்லிப் புதல்சுற் றிலக்கம் மயங்கும்
அயர்வே கவிண்மா தர்வீசித் துதிக்கும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 5
அலைக்கும் கொடுஞ்செவ் விழிப்பார் வையாளன்
. அருட்செய் யுமாடற் கொழுந்தா யுருப்பான்
கலைபிந் துவாளென் றறிந்தார் துதிக்கும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 6
ஒருப்பட் டமாசற் றவேறற் றவொன்றாய்
. குணம்நீங் குமானந் தவோர்தோற் றமில்லாக்
கரையோ மெனும்வே தமுட்கொள் ளுமோடாய்ச்
. சமர்த்தன் பழையோன் எனப்போற் றுவேனே. ... 7
உணர்வின் பவாளன் நிறையோ னுனைநான்
. வணங்கே னோஞாலம் படைப்போ னழிப்போன்
வணங்கே னோஆடும் பரம்தோற் றமொன்றாய்
. வணங்கே னோவித்தா குமீசன் மகன்நான். ... 8
உணர்வோ டுகாலை எழுந்தே யிதைப்பா
. டுவோர்தம் விருப்பம் நிறைவே றும்திண்ணம்
கணேசர் தயையால் பலிக்கா ததில்லை
. கணேசர் வலத்தாற் கிடைக்கா ததேதோ? ... 9
--தமிழ் யாப்பு: ரமணி, 20/03/2014, கலி.06/12/5114
*****
பதம் பிரித்து:
ஆதி சங்கரர் அருளிய ’ஶ்ரீ கணேச புஜங்கம்’
ஸ்தோத்திரத்தின் தமிழ் யாப்பு
தணத்துப் பிணைந்தே மணித்தார் ஒலித்தே
. அலைந்தாட இண்டை மலர்த்தண்டும் ஆடும்
அணத்துப் பரூஉமேனி மின்நாக மாலை
. கணாதீசன் ஈசன் மகன்-நான் துதிப்பேன். ... 1
[தணத்தல் = பிரிதல்; இண்டை = தாமரை; அணத்தல் = மேல்நிமிர்தல்;
பரூஉ = பருமை; மின்நாகம் = மின்னும் நாகம்.]
ஒலித்தண்டு நாதக் குரல்பாடு முத்தம்
. துதிக்கை நுனித் தேம்பழம் மாதுளையாம்
சலத்தின் மணத்தால் சுரும்பர்த் தார்கூட்டும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 2
[ஒலித்தண்டு = ஒலிக்கும் வீணை; முத்தம் = இதழ்கள்;
தேம்பழம் = தேன் போன்று இனிய பழம்; சலம் = மத்தசலம்;
சுரும்பர் = வண்டினங்கள்; தார்கூட்டும் = மாலைபோல் கூடி வதியும்.]
மிளிர் செம்பருத்திச் சிவந்தோங்கு தோற்றம்
. துளிர்க் காலை சோதிக் கதிர்போன்ற ஏகம்
களிற்றானை மோடும் துதிக்கை ஓர்கோடும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 3
[துளிர் = முளைவிட்ட தளிர்; மோடு = வயிறு; கோடு = தந்தம்.]
வணச்சோதி ரத்னத்தில் ஆரம் கிரீடம்
. கிரீடத்(து) இலங்கும் பிறை வள்ளி யாகும்
அணிக்கே இழையாய்ப் பிறப்பை அறுக்கும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 4
[வணம் = வண்ணம்; சோதி = ஒளி; வள்ளி = ஆபரணம், அணி;]
உயர்ந்து-ஏறு வல்லிக் கரம்நோக்க வேரோ(டு)
. வல்லிப் புதல் சுற்றில் அக்கம் மயங்கும்
அயர்வு-ஏக விண்மாதர் வீசித் துதிக்கும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 5
[வல்லி = படர்கொடி; புதல் = புருவம்; அக்கம் = கண்கள்;
வீசி = சாமரம் வீசி.]
அலைக்கும் கொடும்-செவ் விழிப் பார்வையாளன்
. அருட்செய்யும் ஆடற் கொழுந்தாய் உருப்பான்
கலை-பிந்து வாள் என்று-அறிந்தார் துதிக்கும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 6
[கலை-பிந்து = பிரணவத்தின் கூறுகளான கலையும் பிந்துவும்;
வாள் = ஒளி.]
ஒருப்பட்ட மாசற்ற வேறற்ற ஒன்றாய்
. குணம்-நீங்கும் ஆனந்த ஓர்தோற்றம்-இல்லாக்
கரை-ஓம் எனும்வேதம் உட்கொள்ளு மோடாய்ச்
. சமர்த்தன் பழையோன் எனப்போற்று வேனே. ... 7
[வேதம் உட்கொள்ளும் மோடாய் = வேதத்தின் பிறவிக் கர்ப்பமாய்.]
உணர்வு இன்ப-வாளன் நிறையோன் உனைநான்
. வணங்கேனோ ஞாலம் படைப்போன் அழிப்போன்
வணங்கேனோ ஆடும் பரம்-தோற்றம் ஒன்றாய்
. வணங்கேனோ வித்தாகும் ஈசன் மகன்(ஐ)நான். ... 8
[உணர்விபவாளன் = அறிவாகும் இன்பம் துய்ப்பவன், சச்சிதானந்தன்;
நிறையோன் = அமைதி நிறைந்தோன்.]
உணர்வோடு காலை எழுந்தே இதைப்பா(டு)
. வோர்-தம் விருப்பம் நிறைவே உம் திண்ணம்
கணேசர் தயையால் பலிக்காதது இல்லை
. கணேசர் வலத்தால் கிடைக்காது ஏதோ? ... 9
[வலம் = வலிமை.]
--தமிழ் யாப்பு: ரமணி, 20/03/2014, கலி.06/12/5114
*****
ஸ்தோத்திரத்தின் தமிழ் யாப்பு
(குறள் வெண்செந்துறை: புஜங்க அமைப்பு:
லகு-குரு-குரு x 4)
தணத்துப் பிணைந்தே மணித்தா ரொலித்தே
. அலைந்தா டயிண்டை மலர்த்தண் டுமாடும்
அணத்துப் பரூஉமே னிமின்நா கமாலை
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 1
ஒலித்தண் டுநாதக் குரல்பா டுமுத்தம்
. துதிக்கை நுனித்தேம் பழம்மா துளையாம்
சலத்தின் மணத்தால் சுரும்பர்த் தார்கூட்டும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 2
மிளிர்செம் பருத்திச் சிவந்தோங் குதோற்றம்
. துளிர்க்கா லைசோதிக் கதிர்போன் ற-ஏகம்
களிற்றா னைமோடும் துதிக்கை யோர்கோடும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 3
வணச்சோ திரத்னத் திலாரங் கிரீடம்
. கிரீடத் திலங்கும் பிறைவள் ளியாகும்
அணிக்கே யிழையாய்ப் பிறப்பை யறுக்கும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 4
உயர்ந்தே றுவல்லிக் கரம்நோக் கவேரோ
. டுவல்லிப் புதல்சுற் றிலக்கம் மயங்கும்
அயர்வே கவிண்மா தர்வீசித் துதிக்கும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 5
அலைக்கும் கொடுஞ்செவ் விழிப்பார் வையாளன்
. அருட்செய் யுமாடற் கொழுந்தா யுருப்பான்
கலைபிந் துவாளென் றறிந்தார் துதிக்கும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 6
ஒருப்பட் டமாசற் றவேறற் றவொன்றாய்
. குணம்நீங் குமானந் தவோர்தோற் றமில்லாக்
கரையோ மெனும்வே தமுட்கொள் ளுமோடாய்ச்
. சமர்த்தன் பழையோன் எனப்போற் றுவேனே. ... 7
உணர்வின் பவாளன் நிறையோ னுனைநான்
. வணங்கே னோஞாலம் படைப்போ னழிப்போன்
வணங்கே னோஆடும் பரம்தோற் றமொன்றாய்
. வணங்கே னோவித்தா குமீசன் மகன்நான். ... 8
உணர்வோ டுகாலை எழுந்தே யிதைப்பா
. டுவோர்தம் விருப்பம் நிறைவே றும்திண்ணம்
கணேசர் தயையால் பலிக்கா ததில்லை
. கணேசர் வலத்தாற் கிடைக்கா ததேதோ? ... 9
--தமிழ் யாப்பு: ரமணி, 20/03/2014, கலி.06/12/5114
*****
பதம் பிரித்து:
ஆதி சங்கரர் அருளிய ’ஶ்ரீ கணேச புஜங்கம்’
ஸ்தோத்திரத்தின் தமிழ் யாப்பு
தணத்துப் பிணைந்தே மணித்தார் ஒலித்தே
. அலைந்தாட இண்டை மலர்த்தண்டும் ஆடும்
அணத்துப் பரூஉமேனி மின்நாக மாலை
. கணாதீசன் ஈசன் மகன்-நான் துதிப்பேன். ... 1
[தணத்தல் = பிரிதல்; இண்டை = தாமரை; அணத்தல் = மேல்நிமிர்தல்;
பரூஉ = பருமை; மின்நாகம் = மின்னும் நாகம்.]
ஒலித்தண்டு நாதக் குரல்பாடு முத்தம்
. துதிக்கை நுனித் தேம்பழம் மாதுளையாம்
சலத்தின் மணத்தால் சுரும்பர்த் தார்கூட்டும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 2
[ஒலித்தண்டு = ஒலிக்கும் வீணை; முத்தம் = இதழ்கள்;
தேம்பழம் = தேன் போன்று இனிய பழம்; சலம் = மத்தசலம்;
சுரும்பர் = வண்டினங்கள்; தார்கூட்டும் = மாலைபோல் கூடி வதியும்.]
மிளிர் செம்பருத்திச் சிவந்தோங்கு தோற்றம்
. துளிர்க் காலை சோதிக் கதிர்போன்ற ஏகம்
களிற்றானை மோடும் துதிக்கை ஓர்கோடும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 3
[துளிர் = முளைவிட்ட தளிர்; மோடு = வயிறு; கோடு = தந்தம்.]
வணச்சோதி ரத்னத்தில் ஆரம் கிரீடம்
. கிரீடத்(து) இலங்கும் பிறை வள்ளி யாகும்
அணிக்கே இழையாய்ப் பிறப்பை அறுக்கும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 4
[வணம் = வண்ணம்; சோதி = ஒளி; வள்ளி = ஆபரணம், அணி;]
உயர்ந்து-ஏறு வல்லிக் கரம்நோக்க வேரோ(டு)
. வல்லிப் புதல் சுற்றில் அக்கம் மயங்கும்
அயர்வு-ஏக விண்மாதர் வீசித் துதிக்கும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 5
[வல்லி = படர்கொடி; புதல் = புருவம்; அக்கம் = கண்கள்;
வீசி = சாமரம் வீசி.]
அலைக்கும் கொடும்-செவ் விழிப் பார்வையாளன்
. அருட்செய்யும் ஆடற் கொழுந்தாய் உருப்பான்
கலை-பிந்து வாள் என்று-அறிந்தார் துதிக்கும்
. கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 6
[கலை-பிந்து = பிரணவத்தின் கூறுகளான கலையும் பிந்துவும்;
வாள் = ஒளி.]
ஒருப்பட்ட மாசற்ற வேறற்ற ஒன்றாய்
. குணம்-நீங்கும் ஆனந்த ஓர்தோற்றம்-இல்லாக்
கரை-ஓம் எனும்வேதம் உட்கொள்ளு மோடாய்ச்
. சமர்த்தன் பழையோன் எனப்போற்று வேனே. ... 7
[வேதம் உட்கொள்ளும் மோடாய் = வேதத்தின் பிறவிக் கர்ப்பமாய்.]
உணர்வு இன்ப-வாளன் நிறையோன் உனைநான்
. வணங்கேனோ ஞாலம் படைப்போன் அழிப்போன்
வணங்கேனோ ஆடும் பரம்-தோற்றம் ஒன்றாய்
. வணங்கேனோ வித்தாகும் ஈசன் மகன்(ஐ)நான். ... 8
[உணர்விபவாளன் = அறிவாகும் இன்பம் துய்ப்பவன், சச்சிதானந்தன்;
நிறையோன் = அமைதி நிறைந்தோன்.]
உணர்வோடு காலை எழுந்தே இதைப்பா(டு)
. வோர்-தம் விருப்பம் நிறைவே உம் திண்ணம்
கணேசர் தயையால் பலிக்காதது இல்லை
. கணேசர் வலத்தால் கிடைக்காது ஏதோ? ... 9
[வலம் = வலிமை.]
--தமிழ் யாப்பு: ரமணி, 20/03/2014, கலி.06/12/5114
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மூலம், தமிழில்:
ஶ்ரீகணேஶபுஜங்கம்
ஆதி ஶங்கராசார்ய
ரணத்க்ஷுத் ரகண்டா நிநாதா பிராமம்
. சலத்தாண் டலோத்தண் டவத்பத் மதாளம் |
லஸத்துந் திலாங்கோ பரிவ்யா ளஹாரம்
. கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 1 ||
த்வனித்வம் ஸவீணா லயோல்லா ஸிவக்த்ரம்
. ஸ்புரச்சுண் டதண்டோல் லஸத்பீ ஜபூரம் |
கலத்தர்ப் பஸௌகந்த் யலோலா லிமாலம்
. கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 2 ||
ப்ரகாஶஜ் ஜபாரக் தரத்னப் ரசூன
. ப்ரவாலப் ரபாதா ருணஜ்யோ திரேகம் |
ப்ரலம்போ தரம்வக் ரதுண்டை கதந்தம்
. கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 3 ||
விசித்ரஸ் புரத்ரத் னமாலா கிரீடம்
. கிரீடோல் லஸத்சந் ரரேகா விபூஷம் |
விபூஷை கபூஷம் பவத்வம் சஹேதும்
. கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 4 ||
உதஞ்சத் புஜாவல் லரீத்ருச் யமூலோச்
. சலத்ப்ரூ லதாவிப் ரமப்ரா ஜதக்ஷம் |
மருத்சுந் தரீசா மரை:ஸேவ் யமானம்
. கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 5 ||
ஸ்புரந்நிஷ் டுராலோ லபிங்காக் ஷிதாரம்
. க்ருபாகோ மலோதா ரலீலா வதாரம் |
கலாபிந் துகம்கீ யதேயோ கிவர்யை:
. கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 6 ||
யமேகாக் ஷரம்நிர் மலம்நிர் விகல்பம்
. குணாதீ தமானந் தமாகா ரஶூன்யம் |
பரம்பா ரமோம்கா ரமாம்னா யகர்பம்
. வதந்திப் ரகல்பம் புராணம் தமீடே || 7 ||
சிதானந் தஸாந்த்ரா யஶாந்தா யதுப்யம்
. நமோவிஷ் வகர்த்ரே சஹர்த்ரே சதுப்யம் |
நமோ&னந் தலீலா யகைவல் யபாஸே
. நமோவிஷ் வபீஜப் ரஸீதே ஶஸுனோ || 8 ||
இமம்ஸுஸ் தவம்ப்ரா தருத்வா யபக்த்யா
. படேத்யஸ் துமர்த்யோ லபேத்சர் வகாமான் |
கணேஶப் ரசாதே னஸித்யந் திவாசோ
. கணேஶே விபௌதுர் லபம்கிம் ப்ரசன்னே || 9 ||
*****
மூலம், English transliteration:
shrIgaNeshabhuja~ggam
Adi sha~gkarAchArya
raNatkShudrakaNThAninAdAbhirAmaM
. chalattANDalOthtaNDavatpadmatAlam |
lasattuntilAggOparivyAlahAraM
. gaNAdIshamIshAnasUnuM tamIDE || 1 ||
dhvanidhvaMsavINAlayOllAsivaktraM
. sphurachchuNDadaNDOllasathbhIjapUram |
galaddarppasaugandyalOlAlimAlaM
. gaNAdIshamIshAnasUnuM tamIDE || 2 ||
prakAshajjapAraktaratnaprasUna
. pravAlaprabhAtAruNajyOtirEkam |
pralambOdaraM vakratuNDaikadandaM
. gaNAdIshamIshAnasUnuM tamIDE || 3 ||
vichithraspurathratnamAlAkirITaM
. kirITOllasathchanrarEkAvibhUSham |
vibhUShaikabhUShaM bhavadhvaMsahEtuM
. gaNAdIshamIshAnasUnuM tamIDE || 4 ||
udajchatbhujAvallarIdruchyamUlOch
. chaladbhrUlatAvibhramabhrAjadakSham |
maruthsundarIchAmarai: sEvyamAnam
. gaNAdIshamIshAnasUnuM tamIDE || 5 ||
sphuranniShThurAlOlapigkAkShitAram
. krupAkOmalOdAralIlAvatAram |
kalAbindugam gIyatE yOgivaryai
. gaNAdIshamIshAnasUnuM tamIDE || 6 ||
yamEkAkSharaM nirmalaM nirvikalpaM
. guNAtItamAnandamAkArashUnyam |
paraM pAramOMkAramAmnAyagarbhaM
. vadanti prakalbhaM purANaM tamIDE || 7 ||
chidAnandasAndrAya shAntA yatubhyaM
. namO vishvakartrE cha hartrE cha tubhyam |
namO&nantalIlAya kaivalyabhAsE
. namO vishvabhIja prasIdEshasunO || 8 ||
imaM sustavaM prAtarutthAya bhaktyA
. paThEdyastu martyO labhEtsarvakAmAn |
gaNEshaprasAdEna sidhyanti vAchO
. gaNEshE vibhau durlabhaM kiM prasannE || 9 ||
*****
மூலம், சமஸ்கிருதத்தில்:
श्रीगणेशभुजङ्गम्
आदि शङ्कराचार्य
रणत्क्षुद्रकण्ठानिनादाभिरामं
. चलत्ताण्डलॊथ्तण्डवत्पद्मतालम् ।
लसत्तुन्तिलाग्गॊपरिव्यालहारं
. गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ १ ॥
ध्वनिध्वंसवीणालयॊल्लासिवक्त्रं
. स्फुरच्चुण्डदण्डॊल्लसथ्भीजपूरम् ।
गलद्दर्प्पसौगन्द्यलॊलालिमालं
. गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ २ ॥
प्रकाशज्जपारक्तरत्नप्रसून
. प्रवालप्रभातारुणज्यॊतिरॆकम् ।
प्रलम्बॊदरं वक्रतुण्डैकदन्दं
. गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ ३ ॥
विचिथ्रस्पुरथ्रत्नमालाकिरीटं
. किरीटॊल्लसथ्चन्ररॆकाविभूषम् ।
विभूषैकभूषं भवध्वंसहॆतुं
. गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ ४ ॥
उदज्चत्भुजावल्लरीद्रुच्यमूलॊच्
. चलद्भ्रूलताविभ्रमभ्राजदक्षम् ।
मरुथ्सुन्दरीचामरै: सॆव्यमानम्
. गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ ५ ॥
स्फुरन्निष्ठुरालॊलपिग्काक्षितारम्
. क्रुपाकॊमलॊदारलीलावतारम् ।
कलाबिन्दुगम् गीयतॆ यॊगिवर्यै
. गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ ६ ॥
यमॆकाक्षरं निर्मलं निर्विकल्पं
. गुणातीतमानन्दमाकारशून्यम् ।
परं पारमॊंकारमाम्नायगर्भं
. वदन्ति प्रकल्भं पुराणं तमीडॆ ॥ ७ ॥
चिदानन्दसान्द्राय शान्ता यतुभ्यं
. नमॊ विश्वकर्त्रॆ च हर्त्रॆ च तुभ्यम् ।
नमॊऽनन्तलीलाय कैवल्यभासॆ
. नमॊ विश्वभीज प्रसीदॆशसुनॊ ॥ ८ ॥
इमं सुस्तवं प्रातरुत्थाय भक्त्या
. पठॆद्यस्तु मर्त्यॊ लभॆत्सर्वकामान् ।
गणॆशप्रसादॆन सिध्यन्ति वाचॊ
. गणॆशॆ विभौ दुर्लभं किं प्रसन्नॆ ॥ ९ ॥
--தமிழ் யாப்பு: ரமணி, 20/03/2014, கலி.06/12/5114
*****
ஶ்ரீகணேஶபுஜங்கம்
ஆதி ஶங்கராசார்ய
ரணத்க்ஷுத் ரகண்டா நிநாதா பிராமம்
. சலத்தாண் டலோத்தண் டவத்பத் மதாளம் |
லஸத்துந் திலாங்கோ பரிவ்யா ளஹாரம்
. கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 1 ||
த்வனித்வம் ஸவீணா லயோல்லா ஸிவக்த்ரம்
. ஸ்புரச்சுண் டதண்டோல் லஸத்பீ ஜபூரம் |
கலத்தர்ப் பஸௌகந்த் யலோலா லிமாலம்
. கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 2 ||
ப்ரகாஶஜ் ஜபாரக் தரத்னப் ரசூன
. ப்ரவாலப் ரபாதா ருணஜ்யோ திரேகம் |
ப்ரலம்போ தரம்வக் ரதுண்டை கதந்தம்
. கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 3 ||
விசித்ரஸ் புரத்ரத் னமாலா கிரீடம்
. கிரீடோல் லஸத்சந் ரரேகா விபூஷம் |
விபூஷை கபூஷம் பவத்வம் சஹேதும்
. கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 4 ||
உதஞ்சத் புஜாவல் லரீத்ருச் யமூலோச்
. சலத்ப்ரூ லதாவிப் ரமப்ரா ஜதக்ஷம் |
மருத்சுந் தரீசா மரை:ஸேவ் யமானம்
. கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 5 ||
ஸ்புரந்நிஷ் டுராலோ லபிங்காக் ஷிதாரம்
. க்ருபாகோ மலோதா ரலீலா வதாரம் |
கலாபிந் துகம்கீ யதேயோ கிவர்யை:
. கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 6 ||
யமேகாக் ஷரம்நிர் மலம்நிர் விகல்பம்
. குணாதீ தமானந் தமாகா ரஶூன்யம் |
பரம்பா ரமோம்கா ரமாம்னா யகர்பம்
. வதந்திப் ரகல்பம் புராணம் தமீடே || 7 ||
சிதானந் தஸாந்த்ரா யஶாந்தா யதுப்யம்
. நமோவிஷ் வகர்த்ரே சஹர்த்ரே சதுப்யம் |
நமோ&னந் தலீலா யகைவல் யபாஸே
. நமோவிஷ் வபீஜப் ரஸீதே ஶஸுனோ || 8 ||
இமம்ஸுஸ் தவம்ப்ரா தருத்வா யபக்த்யா
. படேத்யஸ் துமர்த்யோ லபேத்சர் வகாமான் |
கணேஶப் ரசாதே னஸித்யந் திவாசோ
. கணேஶே விபௌதுர் லபம்கிம் ப்ரசன்னே || 9 ||
*****
மூலம், English transliteration:
shrIgaNeshabhuja~ggam
Adi sha~gkarAchArya
raNatkShudrakaNThAninAdAbhirAmaM
. chalattANDalOthtaNDavatpadmatAlam |
lasattuntilAggOparivyAlahAraM
. gaNAdIshamIshAnasUnuM tamIDE || 1 ||
dhvanidhvaMsavINAlayOllAsivaktraM
. sphurachchuNDadaNDOllasathbhIjapUram |
galaddarppasaugandyalOlAlimAlaM
. gaNAdIshamIshAnasUnuM tamIDE || 2 ||
prakAshajjapAraktaratnaprasUna
. pravAlaprabhAtAruNajyOtirEkam |
pralambOdaraM vakratuNDaikadandaM
. gaNAdIshamIshAnasUnuM tamIDE || 3 ||
vichithraspurathratnamAlAkirITaM
. kirITOllasathchanrarEkAvibhUSham |
vibhUShaikabhUShaM bhavadhvaMsahEtuM
. gaNAdIshamIshAnasUnuM tamIDE || 4 ||
udajchatbhujAvallarIdruchyamUlOch
. chaladbhrUlatAvibhramabhrAjadakSham |
maruthsundarIchAmarai: sEvyamAnam
. gaNAdIshamIshAnasUnuM tamIDE || 5 ||
sphuranniShThurAlOlapigkAkShitAram
. krupAkOmalOdAralIlAvatAram |
kalAbindugam gIyatE yOgivaryai
. gaNAdIshamIshAnasUnuM tamIDE || 6 ||
yamEkAkSharaM nirmalaM nirvikalpaM
. guNAtItamAnandamAkArashUnyam |
paraM pAramOMkAramAmnAyagarbhaM
. vadanti prakalbhaM purANaM tamIDE || 7 ||
chidAnandasAndrAya shAntA yatubhyaM
. namO vishvakartrE cha hartrE cha tubhyam |
namO&nantalIlAya kaivalyabhAsE
. namO vishvabhIja prasIdEshasunO || 8 ||
imaM sustavaM prAtarutthAya bhaktyA
. paThEdyastu martyO labhEtsarvakAmAn |
gaNEshaprasAdEna sidhyanti vAchO
. gaNEshE vibhau durlabhaM kiM prasannE || 9 ||
*****
மூலம், சமஸ்கிருதத்தில்:
श्रीगणेशभुजङ्गम्
आदि शङ्कराचार्य
रणत्क्षुद्रकण्ठानिनादाभिरामं
. चलत्ताण्डलॊथ्तण्डवत्पद्मतालम् ।
लसत्तुन्तिलाग्गॊपरिव्यालहारं
. गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ १ ॥
ध्वनिध्वंसवीणालयॊल्लासिवक्त्रं
. स्फुरच्चुण्डदण्डॊल्लसथ्भीजपूरम् ।
गलद्दर्प्पसौगन्द्यलॊलालिमालं
. गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ २ ॥
प्रकाशज्जपारक्तरत्नप्रसून
. प्रवालप्रभातारुणज्यॊतिरॆकम् ।
प्रलम्बॊदरं वक्रतुण्डैकदन्दं
. गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ ३ ॥
विचिथ्रस्पुरथ्रत्नमालाकिरीटं
. किरीटॊल्लसथ्चन्ररॆकाविभूषम् ।
विभूषैकभूषं भवध्वंसहॆतुं
. गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ ४ ॥
उदज्चत्भुजावल्लरीद्रुच्यमूलॊच्
. चलद्भ्रूलताविभ्रमभ्राजदक्षम् ।
मरुथ्सुन्दरीचामरै: सॆव्यमानम्
. गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ ५ ॥
स्फुरन्निष्ठुरालॊलपिग्काक्षितारम्
. क्रुपाकॊमलॊदारलीलावतारम् ।
कलाबिन्दुगम् गीयतॆ यॊगिवर्यै
. गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ ६ ॥
यमॆकाक्षरं निर्मलं निर्विकल्पं
. गुणातीतमानन्दमाकारशून्यम् ।
परं पारमॊंकारमाम्नायगर्भं
. वदन्ति प्रकल्भं पुराणं तमीडॆ ॥ ७ ॥
चिदानन्दसान्द्राय शान्ता यतुभ्यं
. नमॊ विश्वकर्त्रॆ च हर्त्रॆ च तुभ्यम् ।
नमॊऽनन्तलीलाय कैवल्यभासॆ
. नमॊ विश्वभीज प्रसीदॆशसुनॊ ॥ ८ ॥
इमं सुस्तवं प्रातरुत्थाय भक्त्या
. पठॆद्यस्तु मर्त्यॊ लभॆत्सर्वकामान् ।
गणॆशप्रसादॆन सिध्यन्ति वाचॊ
. गणॆशॆ विभौ दुर्लभं किं प्रसन्नॆ ॥ ९ ॥
--தமிழ் யாப்பு: ரமணி, 20/03/2014, கலி.06/12/5114
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
காலையில் தேதியைக் கிழித்தபோது படித்ததொரு வாசகம்:
’அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்’
மாறுதலை என்பதாலோ ஐங்கரப் பிள்ளைக்கும்
ஆறுதலை என்பதாலோ ஆறுமுகப் பிள்ளைக்கும்
தேறிடவே பால்வராதே தேவிநரப் பிள்ளைக்கே
ஊறியசம் பந்தம் உரை.
--ரமணி, 09/04/2014
*****
’அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்’
மாறுதலை என்பதாலோ ஐங்கரப் பிள்ளைக்கும்
ஆறுதலை என்பதாலோ ஆறுமுகப் பிள்ளைக்கும்
தேறிடவே பால்வராதே தேவிநரப் பிள்ளைக்கே
ஊறியசம் பந்தம் உரை.
--ரமணி, 09/04/2014
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பிரதோஷத் துதிப் பஞ்சகம்
(வண்ணச் சந்த வெண்பா: தான தனந்தனனா தன்ன தனந்தனனா)
ஆல மருந்திடவே யன்னை கரந்தருள்வாள்
ஞாலம் புரந்திடவே நன்மை விளைந்திடவே
லீலை புரிந்தவனை யின்மை களைந்திடவே
ஓல மனந்தொழவே ருண்டு. ... 1
கால மிகந்தவனே கன்னல் விருந்தெனவே
சீலம் மிகுந்திடிலே சிந்தை நிறைந்திடுவான்
கோல தனந்தனையே யுன்னு மனந்தனிலே
பால மமைந்திடவே ருண்டு. ... 2
ஏறு சிரந்தனிலே யின்றை யசந்தியிலே
கூறு வணங்குடனே கொன்றை யதிர்ந்திடுமே
ஆறு மிழிந்திடுமே அந்த நடந்தனிலே
தேறு மனந்தனிலே தெம்பு. ... 3
ஊனி லிழிந்திடவே உண்மை யழிந்திடுமே
நானு னையுன்னிடவே நன்மை யடைந்திடவே
ஈன வனந்தனிலே என்னை யுகந்தருள்வாய்
ஊன மழிந்திடவே யுந்து. ... 4
தீய துடைந்திடவே மேன்மை யடைந்திடவே
தாவு மனந்தனிலே தங்கி யகந்தைதனை
மேவு மனங்கெடவே மந்த மகன்றிடவே
காவ லயென்மனம் குந்து. ... 5
பதம் பிரித்து:
பிரதோஷத் துதிப் பஞ்சகம்
(வண்ணச் சந்த வெண்பா: தான தனந்தனனா தன்ன தனந்தனனா)
ஆலம் அருந்திடவே அன்னை கரந்து-அருள்வாள்/கரம்-தருவாள்
ஞாலம் புரந்திடவே நன்மை விளைந்திடவே
லீலை புரிந்தவனை இன்மை களைந்திடவே
ஓல மனந்தொழ-ஏர் உண்டு. ... 1 ... [ஏர்=எழுச்சி, அழகு, நன்மை]
காலம் இகந்தவனே கன்னல் விருந்தெனவே
சீலம் மிகுந்திடிலே சிந்தை நிறைந்திடுவான்
கோல தனம்-தனையே உன்னு மனம்-தனிலே
பாலம் அமைந்திட-ஏர் உண்டு. ... 2
[கோலதனம் = சிவனது கோலத்தில் உள்ள செல்வங்களான
மத்தம், மதியம், நதி, அரவு, தோல் போன்றன.]
ஏறு சிரம்-தனிலே இன்றைய சந்தியிலே
கூறு அணங்குடனே கொன்றை அதிர்ந்திடுமே
ஆறும் இழிந்திடுமே அந்த நடம்-தனிலே
தேறு மனம்-தனிலே தெம்பு. ... 3
ஊனில் இழிந்திடவே உண்மை அழிந்திடுமே
நானுனை உன்னிடவே நன்மை அடைந்திடவே
ஈன வனம்-தனிலே என்னை உகந்து-அருள்வாய்
ஊனம் அழிந்திடவே உந்து. ... 4
தீயது உடைந்திடவே மேன்மை அடைந்திடவே
தாவு மனம்-தனிலே தங்கி அகந்தை-தனை
மேவு மனம்-கெடவே மந்தம் அகன்றிடவே
காவல என்மனம் குந்து. ... 5
--ரமணி, 10-12/04/2014, கலி.29/12/5114
(சனிப் பிரதோஷ நாள்)
*****
(வண்ணச் சந்த வெண்பா: தான தனந்தனனா தன்ன தனந்தனனா)
ஆல மருந்திடவே யன்னை கரந்தருள்வாள்
ஞாலம் புரந்திடவே நன்மை விளைந்திடவே
லீலை புரிந்தவனை யின்மை களைந்திடவே
ஓல மனந்தொழவே ருண்டு. ... 1
கால மிகந்தவனே கன்னல் விருந்தெனவே
சீலம் மிகுந்திடிலே சிந்தை நிறைந்திடுவான்
கோல தனந்தனையே யுன்னு மனந்தனிலே
பால மமைந்திடவே ருண்டு. ... 2
ஏறு சிரந்தனிலே யின்றை யசந்தியிலே
கூறு வணங்குடனே கொன்றை யதிர்ந்திடுமே
ஆறு மிழிந்திடுமே அந்த நடந்தனிலே
தேறு மனந்தனிலே தெம்பு. ... 3
ஊனி லிழிந்திடவே உண்மை யழிந்திடுமே
நானு னையுன்னிடவே நன்மை யடைந்திடவே
ஈன வனந்தனிலே என்னை யுகந்தருள்வாய்
ஊன மழிந்திடவே யுந்து. ... 4
தீய துடைந்திடவே மேன்மை யடைந்திடவே
தாவு மனந்தனிலே தங்கி யகந்தைதனை
மேவு மனங்கெடவே மந்த மகன்றிடவே
காவ லயென்மனம் குந்து. ... 5
பதம் பிரித்து:
பிரதோஷத் துதிப் பஞ்சகம்
(வண்ணச் சந்த வெண்பா: தான தனந்தனனா தன்ன தனந்தனனா)
ஆலம் அருந்திடவே அன்னை கரந்து-அருள்வாள்/கரம்-தருவாள்
ஞாலம் புரந்திடவே நன்மை விளைந்திடவே
லீலை புரிந்தவனை இன்மை களைந்திடவே
ஓல மனந்தொழ-ஏர் உண்டு. ... 1 ... [ஏர்=எழுச்சி, அழகு, நன்மை]
காலம் இகந்தவனே கன்னல் விருந்தெனவே
சீலம் மிகுந்திடிலே சிந்தை நிறைந்திடுவான்
கோல தனம்-தனையே உன்னு மனம்-தனிலே
பாலம் அமைந்திட-ஏர் உண்டு. ... 2
[கோலதனம் = சிவனது கோலத்தில் உள்ள செல்வங்களான
மத்தம், மதியம், நதி, அரவு, தோல் போன்றன.]
ஏறு சிரம்-தனிலே இன்றைய சந்தியிலே
கூறு அணங்குடனே கொன்றை அதிர்ந்திடுமே
ஆறும் இழிந்திடுமே அந்த நடம்-தனிலே
தேறு மனம்-தனிலே தெம்பு. ... 3
ஊனில் இழிந்திடவே உண்மை அழிந்திடுமே
நானுனை உன்னிடவே நன்மை அடைந்திடவே
ஈன வனம்-தனிலே என்னை உகந்து-அருள்வாய்
ஊனம் அழிந்திடவே உந்து. ... 4
தீயது உடைந்திடவே மேன்மை அடைந்திடவே
தாவு மனம்-தனிலே தங்கி அகந்தை-தனை
மேவு மனம்-கெடவே மந்தம் அகன்றிடவே
காவல என்மனம் குந்து. ... 5
--ரமணி, 10-12/04/2014, கலி.29/12/5114
(சனிப் பிரதோஷ நாள்)
*****
- Sponsored content
Page 16 of 36 • 1 ... 9 ... 15, 16, 17 ... 26 ... 36
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 36
|
|