புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
Page 2 of 36 •
Page 2 of 36 • 1, 2, 3 ... 19 ... 36
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
09. உண்டு இல்லை எனப் பண்ணுவோம்!
ரமணி, 19/08/2012
உண்டு என்பது உண்மை ஆயின்
இல்லை என்பது மாயை ஆகும்.
உண்மை என்பது ஒன்றே யாகில்
மாயை என்றது பலவே யாகும்.
ஒன்றே என்பது உள்ளே உறைவது
பலவே என்றது வெளியே தெரிவது.
உள்ளே உறைவதைப் புலன்கள் அறியா
வெளியே தெரிவதே புலன்கள் அறிவது.
புலன்களின் பின்னால் உள்ளது மனமே
மனதின் செயல்வகை புத்தியால் சிறக்கும்.
புத்தியால் ஒடுங்கும் தானெனும் அகந்தை
அகந்தை ஒடுங்கினால் ஆத்மா தெரியும்.
ஆத்மா தெரிந்திட ஞானம் பிறக்கும்
ஞானம் நிலைபெற மனமும் வசப்படும்.
மனம்வசப் பட்டால் புலன்கள் ஒடுங்கி
ஒருங்கித் தெரியும் உள்ளே உறைவது.
உள்ளே உறைவதன் தரிசனம் கிடைத்தால்
பலவகை உலகின் மாயை விலகும்.
மாயை விலகிட எல்லை இல்லா
ஆத்மா ஒன்றே என்பது தெரியும்.
ஒன்றின் உண்மை தெரியத் தெரிய
நான்நீ இவையெனும் பேதங்கள் குறையும்.
பலவகை பேதங்கள் குறையக் குறைய
மனதின் எல்லை வானாய் விரியும்.
வானாய் விரிய உயிரொளி பெருகும்
சச்சிதா னந்த உண்மை விளங்கும்!
*****
ரமணி, 19/08/2012
உண்டு என்பது உண்மை ஆயின்
இல்லை என்பது மாயை ஆகும்.
உண்மை என்பது ஒன்றே யாகில்
மாயை என்றது பலவே யாகும்.
ஒன்றே என்பது உள்ளே உறைவது
பலவே என்றது வெளியே தெரிவது.
உள்ளே உறைவதைப் புலன்கள் அறியா
வெளியே தெரிவதே புலன்கள் அறிவது.
புலன்களின் பின்னால் உள்ளது மனமே
மனதின் செயல்வகை புத்தியால் சிறக்கும்.
புத்தியால் ஒடுங்கும் தானெனும் அகந்தை
அகந்தை ஒடுங்கினால் ஆத்மா தெரியும்.
ஆத்மா தெரிந்திட ஞானம் பிறக்கும்
ஞானம் நிலைபெற மனமும் வசப்படும்.
மனம்வசப் பட்டால் புலன்கள் ஒடுங்கி
ஒருங்கித் தெரியும் உள்ளே உறைவது.
உள்ளே உறைவதன் தரிசனம் கிடைத்தால்
பலவகை உலகின் மாயை விலகும்.
மாயை விலகிட எல்லை இல்லா
ஆத்மா ஒன்றே என்பது தெரியும்.
ஒன்றின் உண்மை தெரியத் தெரிய
நான்நீ இவையெனும் பேதங்கள் குறையும்.
பலவகை பேதங்கள் குறையக் குறைய
மனதின் எல்லை வானாய் விரியும்.
வானாய் விரிய உயிரொளி பெருகும்
சச்சிதா னந்த உண்மை விளங்கும்!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
18. மரபின் வலிமை
ரமணி, 05/09/2012
தமிழைக் காதலித்தால் எழுவது மரபுக் கவிதை.
தன்னைக் காதலித்தால் எழுவது புதுமைக் கவிதை.
தமிழைக் காதலிக்க வந்து சேரும் யாப்பு.
தன்னைக் காதலிக்க வந்து சேரும் மூப்பு.
மலரைக் காதலித்தால் மனதில் சேரும் அழகு.
தன்னைக் காதலித்தால் மனதில் சேரும் அழுக்கு.
விரைவு உணவில் வயிறாரும், வலிமை மாளும்.
விகிதம் சரியாக உண்டால் வாழ்வு நீளும்.
வலிப்பு நடனக் கவர்ச்சி உடலுக்கு நன்றல்ல.
மரபு நாட்டிய அழகு நேற்றல்ல இன்றல்ல.
கூழைக் கவிதை கூனிக் குறுகி இளைக்கும்.
வாழைக் கவிதை அடியடியாய் வளர்ந்து தழைக்கும்.
ஆதலினால் கவிதை செய்வீர் மரபின் யாப்பில்!
சாதலில்லை மூப்புமில்லை அந்த மரணக் காப்பில்!
*****
ரமணி, 05/09/2012
தமிழைக் காதலித்தால் எழுவது மரபுக் கவிதை.
தன்னைக் காதலித்தால் எழுவது புதுமைக் கவிதை.
தமிழைக் காதலிக்க வந்து சேரும் யாப்பு.
தன்னைக் காதலிக்க வந்து சேரும் மூப்பு.
மலரைக் காதலித்தால் மனதில் சேரும் அழகு.
தன்னைக் காதலித்தால் மனதில் சேரும் அழுக்கு.
விரைவு உணவில் வயிறாரும், வலிமை மாளும்.
விகிதம் சரியாக உண்டால் வாழ்வு நீளும்.
வலிப்பு நடனக் கவர்ச்சி உடலுக்கு நன்றல்ல.
மரபு நாட்டிய அழகு நேற்றல்ல இன்றல்ல.
கூழைக் கவிதை கூனிக் குறுகி இளைக்கும்.
வாழைக் கவிதை அடியடியாய் வளர்ந்து தழைக்கும்.
ஆதலினால் கவிதை செய்வீர் மரபின் யாப்பில்!
சாதலில்லை மூப்புமில்லை அந்த மரணக் காப்பில்!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
உறவாடும் படிமக் குறிகள் (Icons)
ரமணி, 29/08/2012
காலையில் கண்விழித்து ஜன்னல் வழியே
நோக்கிடும் போது நினைவில் வருவது
கணினியை இயக்கும் உயிர்மென் பொருளாம்
மைக்ரோ ஸாஃப்டின் ’விண்டோஸ்’ தானே!
காலையில் பருகும் காப்பிக் காக
சாப்பாட்டு மேசையில் அமரும் போது
நினவில் வருவது ஆரகிள் கம்பெனி
மென்பொருள்-யாப்பொருள் ’ஜாவா’ தானே!
இதுபோல் பொருட்கள் நோக்கும் போது
கண்ணனும் எனக்கு நினைவில் வந்தால்
கொஞ்சம் என்னுள் பாரதி தோன்றி
ஏற்றம் பெற்று இருந்திடு வேனே!
ஐகான் என்று ஆங்கிலம் கூறும்
எத்தனை எத்தனை படிமக் குறிகள்
எதிர்ப்படு கிறதுநம் வாழ்வில் என்று
ஒருகணம் நின்று எண்ணியது உண்டோ?
உண்மையின் முகமென வந்திடும் மாய
ஹீரோ க்ளிஃபிக்ஸ் குறிகள் என்னை
உடாடிப் பரிகசித்து ஆள்வது கண்டேன்
நண்பன், அறிஞன், ஆசான் ஆக.
பார்த்ததும் புரிந்திடும் யாவரும் அறிந்திடும்
புகழ்மிகு படிக்குறி எதுவெனக் கேட்டால்
கழிப்பறைச் சுவர்களில் பளிச்செனத் தென்படும்
ஆண்-பெண் படிக்குறி தானெனச் சொல்வேன்!
ஒருபடம் வரைவது ஆயிரம் சொல்வது
என்னும் பழமொழி உண்மை போல
படிக்குறி வரைவது படங்கள் ஆயிரம்
வரைவது போல என்று சொல்லலாம்!
எங்கும் படிக்குறி! சாலைக் குறிகள்,
பெட்ரோல் விற்பனை, பேருந்து நிறுத்தம்,
ரயிலடி, கடைகள், அலுவல கங்கள்---
என்மின் அஞ்சலில் சலனப் படிக்குறி!
படிக்குறி நம்மை ஆக்கிர மித்துநம்
வாழ்-வினை மாற்றும்! நடத்தல் பேசுதல்
எழுதுதல் எல்லாம் படிக்குறி விரவிட
தினசரி வாழ்வில் சுழலும் தொழில்நுட்பம்!
மொழியின் எழுத்துகள் ஒலிகள் மறைந்து
படிக்குறி அவற்றின் சொற்பொருள் ஆகி
மொழியே கைசெய் சைகைகள் ஆகி
எகிப்தியர் காலம் மீண்டும் வருமோ?...
படிமங்கள் இறைமையின் படிக்குறிகள் ஆகிநம்
ஹிந்துமத வாழ்வில் இணைந்து இன்றைய
படிக்குறி போல எங்கும் அமர்ந்து
வாழ்வின் அறத்தை ஞாபகப் படுத்தும்.
அபரிமிதப் படிக்குறிகள் தினவாழ்வில் நிறைந்துநின்று
சட்டமும் வடிவமும் இரவினில் ஒளிர்ந்திடும்
வண்ணமும் பெற்றிட நாமதன் வழிபட்டு
வாழ்வில் வளமும் நெறியும் சேர்த்திட---
பீடம் ரூபம் படைக்கலம் முத்திரை
தாங்கி அருளும் இறைப்படி மங்களை
வாழ்வில் வளம்நெறி சேர்க்க வழிபடும்
மக்களைப் பழிப்பதென் மூர்க்கம் அன்றோ?
*****
ரமணி, 29/08/2012
காலையில் கண்விழித்து ஜன்னல் வழியே
நோக்கிடும் போது நினைவில் வருவது
கணினியை இயக்கும் உயிர்மென் பொருளாம்
மைக்ரோ ஸாஃப்டின் ’விண்டோஸ்’ தானே!
காலையில் பருகும் காப்பிக் காக
சாப்பாட்டு மேசையில் அமரும் போது
நினவில் வருவது ஆரகிள் கம்பெனி
மென்பொருள்-யாப்பொருள் ’ஜாவா’ தானே!
இதுபோல் பொருட்கள் நோக்கும் போது
கண்ணனும் எனக்கு நினைவில் வந்தால்
கொஞ்சம் என்னுள் பாரதி தோன்றி
ஏற்றம் பெற்று இருந்திடு வேனே!
ஐகான் என்று ஆங்கிலம் கூறும்
எத்தனை எத்தனை படிமக் குறிகள்
எதிர்ப்படு கிறதுநம் வாழ்வில் என்று
ஒருகணம் நின்று எண்ணியது உண்டோ?
உண்மையின் முகமென வந்திடும் மாய
ஹீரோ க்ளிஃபிக்ஸ் குறிகள் என்னை
உடாடிப் பரிகசித்து ஆள்வது கண்டேன்
நண்பன், அறிஞன், ஆசான் ஆக.
பார்த்ததும் புரிந்திடும் யாவரும் அறிந்திடும்
புகழ்மிகு படிக்குறி எதுவெனக் கேட்டால்
கழிப்பறைச் சுவர்களில் பளிச்செனத் தென்படும்
ஆண்-பெண் படிக்குறி தானெனச் சொல்வேன்!
ஒருபடம் வரைவது ஆயிரம் சொல்வது
என்னும் பழமொழி உண்மை போல
படிக்குறி வரைவது படங்கள் ஆயிரம்
வரைவது போல என்று சொல்லலாம்!
எங்கும் படிக்குறி! சாலைக் குறிகள்,
பெட்ரோல் விற்பனை, பேருந்து நிறுத்தம்,
ரயிலடி, கடைகள், அலுவல கங்கள்---
என்மின் அஞ்சலில் சலனப் படிக்குறி!
படிக்குறி நம்மை ஆக்கிர மித்துநம்
வாழ்-வினை மாற்றும்! நடத்தல் பேசுதல்
எழுதுதல் எல்லாம் படிக்குறி விரவிட
தினசரி வாழ்வில் சுழலும் தொழில்நுட்பம்!
மொழியின் எழுத்துகள் ஒலிகள் மறைந்து
படிக்குறி அவற்றின் சொற்பொருள் ஆகி
மொழியே கைசெய் சைகைகள் ஆகி
எகிப்தியர் காலம் மீண்டும் வருமோ?...
படிமங்கள் இறைமையின் படிக்குறிகள் ஆகிநம்
ஹிந்துமத வாழ்வில் இணைந்து இன்றைய
படிக்குறி போல எங்கும் அமர்ந்து
வாழ்வின் அறத்தை ஞாபகப் படுத்தும்.
அபரிமிதப் படிக்குறிகள் தினவாழ்வில் நிறைந்துநின்று
சட்டமும் வடிவமும் இரவினில் ஒளிர்ந்திடும்
வண்ணமும் பெற்றிட நாமதன் வழிபட்டு
வாழ்வில் வளமும் நெறியும் சேர்த்திட---
பீடம் ரூபம் படைக்கலம் முத்திரை
தாங்கி அருளும் இறைப்படி மங்களை
வாழ்வில் வளம்நெறி சேர்க்க வழிபடும்
மக்களைப் பழிப்பதென் மூர்க்கம் அன்றோ?
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
கவிதையும் கணினியும்
ரமணி, 31/10/2012
கவிதை எளிதாகக் கைவரும் போது
கவிதை வகைநோக்க மேலும் சிறந்து
கவிதை மனதில் மரபில் மிளிர்ந்து
கவினுறும் என்றென் கருத்து.
கவிதையில் ஓவியம் தீட்டுதல் போலக்
கவிதை இலக்கணத்தில் சிற்பம் வடித்தால்
கவிதை மரபின் ஒழுங்கில் செழித்துக்
கவிஞர்கள் நிற்பர் நிலைத்து.
கணினியில் ஓடும் நிகழ்ச்சி தொகுக்கும்
பணியினில் காட்டும் உழைப்பைச் சிறிதே
கவிதை மரபின் ஒழுங்கினில் காட்டச்
செவியில் இனிக்கும் கவி.
கணினி நிகழ்ச்சித் தொகுப்பின் முதன்மைப்
பணியான சொற்கள் மரபின் ஒழுங்கில்
அணிசேரக் கோர்த்தல் இயல்வதுபோல் யாப்பின்
அணியில் இயலாத தேன்?
மரபில்தான் மென்பொருள் சீர்ப்பது போல
மரபில் சிறக்கும் கவி.
*****
ரமணி, 31/10/2012
கவிதை எளிதாகக் கைவரும் போது
கவிதை வகைநோக்க மேலும் சிறந்து
கவிதை மனதில் மரபில் மிளிர்ந்து
கவினுறும் என்றென் கருத்து.
கவிதையில் ஓவியம் தீட்டுதல் போலக்
கவிதை இலக்கணத்தில் சிற்பம் வடித்தால்
கவிதை மரபின் ஒழுங்கில் செழித்துக்
கவிஞர்கள் நிற்பர் நிலைத்து.
கணினியில் ஓடும் நிகழ்ச்சி தொகுக்கும்
பணியினில் காட்டும் உழைப்பைச் சிறிதே
கவிதை மரபின் ஒழுங்கினில் காட்டச்
செவியில் இனிக்கும் கவி.
கணினி நிகழ்ச்சித் தொகுப்பின் முதன்மைப்
பணியான சொற்கள் மரபின் ஒழுங்கில்
அணிசேரக் கோர்த்தல் இயல்வதுபோல் யாப்பின்
அணியில் இயலாத தேன்?
மரபில்தான் மென்பொருள் சீர்ப்பது போல
மரபில் சிறக்கும் கவி.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
சஹதர்மிணீ!
ரமணி
லலாடம் நடுவில் திலகம் மிளிர,
சீமந்த ரேகையில் குங்குமம் துளிர்க்க.
சஞ்சரிக்கும் சஹதர்மிணீ! உனக்கு மனதில்
அடுப்படி, அலுவலகம், ஆன்மீகம், அக்கம்பக்கம்
எல்லாமே சமபாவம்! பற்றற்ற ஈடுபாடு!
நண்பர்கள் உண்டு, நண்பர்கள் இல்லை;
உறவினர் உண்டு, உறவினர் இல்லை.
பொழுது போகும், பொழுது போதாது,
எப்படி உனக்கிது சாத்தியம் ஆகிறது?
நானோ எனது செயல்கள் அனைத்திலும்
எடுப்பார் கைப்பிள்ளை! சித்தம் சிவன்போக்கு!
நீயும் நானும் வாழ்வில் இணைந்து
கருத்தொரு மித்து, கருத்து வேறுபட்டு,
நீஎன் சொல்கேட்டு நானுன் சொல்கேட்டு,
மதுரை சிதம்பரம் ஒன்றாக இணைந்து,
குறைகளைக் குறைத்து நிறைகளை நேசித்து
வாழ்வது கற்றோம், வருடங்கள் ஓட்டத்தில்!
இனிவரும் வாழ்வில் வம்சம் வளர,
கண்போல் வளர்த்த ஒரேமக னுக்கு
வதுவை தேடி விவாஹம் செய்வித்து
தாத்தா பாட்டி உறவுகள் ஆகி
பேரன் பேத்திகள் பேணி வளர்த்து,
புத்திரன் வதுவின் தாம்பத்யம் சிறக்க,
வாழக் கற்போம் கனவுகள் தவிர்த்து!
நீயின்றி நானும் நானின்றி நீயும்
வாழ்வது ஒருநாள் வந்தே தீரும்
என்பதை அறிந்து ஞானம் பெற்று
அந்த நாளில் சுமையாக இல்லாமல்
இருக்க நம்மைத் தேற்றிக் கொள்ள
உடல்நலம் பேணி, மனநலம் காத்து
வாழும் வகையைக் கவனித்து நடக்க
பகவான் நமக்கு அருள்வா னாக!
[லலாடம்=நெற்றி, சீமந்த ரேகை=வகிடு, சஹதர்மிணீ=இல்லறத்தில் பங்குகொள்ளும் மனைவி,
புத்திரன்=மகன், வது=மருமகள்]
*****
ரமணி
லலாடம் நடுவில் திலகம் மிளிர,
சீமந்த ரேகையில் குங்குமம் துளிர்க்க.
சஞ்சரிக்கும் சஹதர்மிணீ! உனக்கு மனதில்
அடுப்படி, அலுவலகம், ஆன்மீகம், அக்கம்பக்கம்
எல்லாமே சமபாவம்! பற்றற்ற ஈடுபாடு!
நண்பர்கள் உண்டு, நண்பர்கள் இல்லை;
உறவினர் உண்டு, உறவினர் இல்லை.
பொழுது போகும், பொழுது போதாது,
எப்படி உனக்கிது சாத்தியம் ஆகிறது?
நானோ எனது செயல்கள் அனைத்திலும்
எடுப்பார் கைப்பிள்ளை! சித்தம் சிவன்போக்கு!
நீயும் நானும் வாழ்வில் இணைந்து
கருத்தொரு மித்து, கருத்து வேறுபட்டு,
நீஎன் சொல்கேட்டு நானுன் சொல்கேட்டு,
மதுரை சிதம்பரம் ஒன்றாக இணைந்து,
குறைகளைக் குறைத்து நிறைகளை நேசித்து
வாழ்வது கற்றோம், வருடங்கள் ஓட்டத்தில்!
இனிவரும் வாழ்வில் வம்சம் வளர,
கண்போல் வளர்த்த ஒரேமக னுக்கு
வதுவை தேடி விவாஹம் செய்வித்து
தாத்தா பாட்டி உறவுகள் ஆகி
பேரன் பேத்திகள் பேணி வளர்த்து,
புத்திரன் வதுவின் தாம்பத்யம் சிறக்க,
வாழக் கற்போம் கனவுகள் தவிர்த்து!
நீயின்றி நானும் நானின்றி நீயும்
வாழ்வது ஒருநாள் வந்தே தீரும்
என்பதை அறிந்து ஞானம் பெற்று
அந்த நாளில் சுமையாக இல்லாமல்
இருக்க நம்மைத் தேற்றிக் கொள்ள
உடல்நலம் பேணி, மனநலம் காத்து
வாழும் வகையைக் கவனித்து நடக்க
பகவான் நமக்கு அருள்வா னாக!
[லலாடம்=நெற்றி, சீமந்த ரேகை=வகிடு, சஹதர்மிணீ=இல்லறத்தில் பங்குகொள்ளும் மனைவி,
புத்திரன்=மகன், வது=மருமகள்]
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
அருகிடும் வானுயிர் வாழ்வு
ரமணி, 17/10/2012
வயல்களில் வீடுகள் விளையும் போது
வந்து முதலில் குடிபுகும் மக்கள்
இயற்கைச் சூழலின் வாழ்வும் அழகும்
செயற்கையில் நாள்பட மறைவது காண்பர்.
இன்னமும் மனைகள் சுற்றிலும் காலியிருக்க
தினமும் காணும் வானுயிர் வாழ்வின்
விந்தையும் ஒலியும் வண்ணமும் செயலும்
சிந்தையில் என்றும் சீர்த்து நிற்கும்.
இந்திய ராபின் என்று பெயர்பெற்ற
குண்டுக் குருவிகள் கூட்டமாய்ப் பறந்து
ஆரவாரத் திரள்களாய் ஆங்காங்கே அமர்ந்து
தரையில் தத்தியும் கொத்தியும் தேடும்.
ஒன்றுடன் ஒன்று பேசிக் கொண்டும்
ஒன்றை யொன்று துரத்திக் கொண்டும்
பூந்தொட்டி நீரில் குளித்துக் கொண்டும்
கொன்றை மரத்தில் அமர்ந்து நோட்டமிடும்.
காலையில் காக்கைக்கு வைத்த உணவைக்
காக்கையைத் துரத்திவிட்டுப் பகிர்ந்து கொண்டும்
விடுமுறையில் குழந்தைகள் போல தினமும்
அட்டகாசம் செய்வதோர் இனிய அனுபவம்.
கடுகளவு உடலுடன் காதுறுத்தும் குரலுடன்
செடியிடைத் தத்திக் கழுத்தை வெட்டிப்
பூக்களில் தேடும் தேன்சிட்டு உண்ணும்
பட்டுப் பூச்சிகள் விட்ட மீதம்.
மாலை வேளையில் மின்கம்பி மேலமர்ந்து
சாலையின் அமைதியை அனுபவிக்கும் வால்குருவி.
எப்போதும் மழைவிரும்பிக் கூவும் குயில்கள்
தப்பாது எதிரொலிக்கும் நாமதுபோல் கூவினால்!
காக்கைகள் கூடத் துணிவு பெற்று
காலையில் இட்டதைச் சடுதியில் விழுங்கி
மாலையில் சிலநாட்கள் மிஞ்சிய கடைச்சரக்குக்
காரவகை இட்டால் காலிபண்ணும் சட்டென.
காக்கையின் குஞ்சுகள் குரல்காட்டிப் பழகும்.
குருவிகள் புறம்போக்கியில் கூடுகட்டும் நாம்*அசந்தால்!
திருட்டில் வளர்ந்த குயில்குஞ்சின் குரல்கேட்டு
வெருட்டும் காக்கையதை விரட்டி ஓயும்.
மழைபெய்தால் போதும் இன்னும் பலவகை
வண்ணங்கள் கூட்டும் எங்கிருந்தோ வந்து!
மழைக்காலம் முடிந்ததும் மறைந்தே போகும்நம்
எண்ணங்களில் இருந்து இவ்வகைப் பறவைகள்.
மழைநீர் தேங்கிய மனைகளின் சேற்றில்
வெண்ணிறக் கழுத்துடன் காணான் கோழிகள்
மழைநீரில் ஓடிச் செடிகளில் மறைந்து
சின்னக் குழந்தைக் குரல்களில் குழுமும்.
நீலச் சிறகும் செங்காலும் கண்பட
சாலை ஓரச் சுவரில் அமர்ந்து
சட்டெனப் பறக்கும் மீன்கொத்திப் பறவையின்
குரல்கேட் டால்நம் காதுகள் விறைக்கும்.
சேற்றினை அளைந்து சிறுமீன் உண்ணும்
வெண்சிறகுக் கொக்குகள் மேயும் மாடுகள்
கூடவே நடந்து கால்களில் கொத்திப்
பூச்சிகளை உண்டு மாடுகளுக்கு உதவும்.
இயற்கை ஒன்றிய இந்நாள் வாழ்க்கை
செயற்கை மழையில் எந்நாள் மறையுமோ?
இருக்கும் வரையில் கண்களில் விருந்து
மறைந்த பின்னர் மனதில் மட்டும்.
*****
ரமணி, 17/10/2012
வயல்களில் வீடுகள் விளையும் போது
வந்து முதலில் குடிபுகும் மக்கள்
இயற்கைச் சூழலின் வாழ்வும் அழகும்
செயற்கையில் நாள்பட மறைவது காண்பர்.
இன்னமும் மனைகள் சுற்றிலும் காலியிருக்க
தினமும் காணும் வானுயிர் வாழ்வின்
விந்தையும் ஒலியும் வண்ணமும் செயலும்
சிந்தையில் என்றும் சீர்த்து நிற்கும்.
இந்திய ராபின் என்று பெயர்பெற்ற
குண்டுக் குருவிகள் கூட்டமாய்ப் பறந்து
ஆரவாரத் திரள்களாய் ஆங்காங்கே அமர்ந்து
தரையில் தத்தியும் கொத்தியும் தேடும்.
ஒன்றுடன் ஒன்று பேசிக் கொண்டும்
ஒன்றை யொன்று துரத்திக் கொண்டும்
பூந்தொட்டி நீரில் குளித்துக் கொண்டும்
கொன்றை மரத்தில் அமர்ந்து நோட்டமிடும்.
காலையில் காக்கைக்கு வைத்த உணவைக்
காக்கையைத் துரத்திவிட்டுப் பகிர்ந்து கொண்டும்
விடுமுறையில் குழந்தைகள் போல தினமும்
அட்டகாசம் செய்வதோர் இனிய அனுபவம்.
கடுகளவு உடலுடன் காதுறுத்தும் குரலுடன்
செடியிடைத் தத்திக் கழுத்தை வெட்டிப்
பூக்களில் தேடும் தேன்சிட்டு உண்ணும்
பட்டுப் பூச்சிகள் விட்ட மீதம்.
மாலை வேளையில் மின்கம்பி மேலமர்ந்து
சாலையின் அமைதியை அனுபவிக்கும் வால்குருவி.
எப்போதும் மழைவிரும்பிக் கூவும் குயில்கள்
தப்பாது எதிரொலிக்கும் நாமதுபோல் கூவினால்!
காக்கைகள் கூடத் துணிவு பெற்று
காலையில் இட்டதைச் சடுதியில் விழுங்கி
மாலையில் சிலநாட்கள் மிஞ்சிய கடைச்சரக்குக்
காரவகை இட்டால் காலிபண்ணும் சட்டென.
காக்கையின் குஞ்சுகள் குரல்காட்டிப் பழகும்.
குருவிகள் புறம்போக்கியில் கூடுகட்டும் நாம்*அசந்தால்!
திருட்டில் வளர்ந்த குயில்குஞ்சின் குரல்கேட்டு
வெருட்டும் காக்கையதை விரட்டி ஓயும்.
மழைபெய்தால் போதும் இன்னும் பலவகை
வண்ணங்கள் கூட்டும் எங்கிருந்தோ வந்து!
மழைக்காலம் முடிந்ததும் மறைந்தே போகும்நம்
எண்ணங்களில் இருந்து இவ்வகைப் பறவைகள்.
மழைநீர் தேங்கிய மனைகளின் சேற்றில்
வெண்ணிறக் கழுத்துடன் காணான் கோழிகள்
மழைநீரில் ஓடிச் செடிகளில் மறைந்து
சின்னக் குழந்தைக் குரல்களில் குழுமும்.
நீலச் சிறகும் செங்காலும் கண்பட
சாலை ஓரச் சுவரில் அமர்ந்து
சட்டெனப் பறக்கும் மீன்கொத்திப் பறவையின்
குரல்கேட் டால்நம் காதுகள் விறைக்கும்.
சேற்றினை அளைந்து சிறுமீன் உண்ணும்
வெண்சிறகுக் கொக்குகள் மேயும் மாடுகள்
கூடவே நடந்து கால்களில் கொத்திப்
பூச்சிகளை உண்டு மாடுகளுக்கு உதவும்.
இயற்கை ஒன்றிய இந்நாள் வாழ்க்கை
செயற்கை மழையில் எந்நாள் மறையுமோ?
இருக்கும் வரையில் கண்களில் விருந்து
மறைந்த பின்னர் மனதில் மட்டும்.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
11. கடவுளிடம்...
ரமணி, 21/08/2012
கடவுளிடம் கேட்பது தவறா? என்றான் சிஷ்யன்.
கேட்பதைவிடத் தருவதைப் பெறுவது மேலென்றார் அவன்குரு.
அதுசரி, ஆனால் ஏனிப்படி? என்றான் சிஷ்யன்.
குழந்தை தின்பண்டம் தானே எடுத்துக் கொண்டால்
அதனிரு கைகள் சேர்ந்தாலும் குறைவே ஆகும்.
அதுவே அம்மா கொடுத்தால் அதிகம் ஆகாதோ
யோசித்துப் பார்சிஷ்யா யாசிக்கும் போது என்றார்குரு.
*****
ரமணி, 21/08/2012
கடவுளிடம் கேட்பது தவறா? என்றான் சிஷ்யன்.
கேட்பதைவிடத் தருவதைப் பெறுவது மேலென்றார் அவன்குரு.
அதுசரி, ஆனால் ஏனிப்படி? என்றான் சிஷ்யன்.
குழந்தை தின்பண்டம் தானே எடுத்துக் கொண்டால்
அதனிரு கைகள் சேர்ந்தாலும் குறைவே ஆகும்.
அதுவே அம்மா கொடுத்தால் அதிகம் ஆகாதோ
யோசித்துப் பார்சிஷ்யா யாசிக்கும் போது என்றார்குரு.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
27. தீபாவளித் திருநாள்
ரமணி, 12/11/2012
(பலவிகற்ப பஃறொடை முடுகியல் வெண்பா)
நரகசுரன் மாண்டநாளை அன்னைவரம் பெற்றபடி
இன்னுமிருள் மன்னியுள்ள போதினிலே கண்விழித்து
எண்ணெய்தேய்த் துக்குளித்துப் புத்தாடை கட்டி
வெடிவெடித்துக் கொண்டாடித் தித்திக்கும் தின்பண்டம்
நாவில் இனித்திடவே சுற்றமும் நட்பும்
தொலைபேசி நேர்வந்து வாழ்த்தி மகிழ்ந்திடவே
எல்லோரும் இன்புறுமித் தீபவொளிப் பொன்னாளில்
கண்ணனை உன்ன உயர்வு.
[’பெற்றபடி, இன்னுமிருள், மன்னியுள்ள, கண்விழித்து, வெடிவெடித்து, இனித்திடவே, தொலைபேசி, மகிழ்ந்திடவே’
போன்ற மூவசைச் சீர்களில் வரும் நடு அசையில் இருகுறில் இணந்து வந்து ஓசையை முடுக்கி விடுவது
(விரைவு பெறச் செய்வது) முடுகியல் வெண்பா.]
*****
ரமணி, 12/11/2012
(பலவிகற்ப பஃறொடை முடுகியல் வெண்பா)
நரகசுரன் மாண்டநாளை அன்னைவரம் பெற்றபடி
இன்னுமிருள் மன்னியுள்ள போதினிலே கண்விழித்து
எண்ணெய்தேய்த் துக்குளித்துப் புத்தாடை கட்டி
வெடிவெடித்துக் கொண்டாடித் தித்திக்கும் தின்பண்டம்
நாவில் இனித்திடவே சுற்றமும் நட்பும்
தொலைபேசி நேர்வந்து வாழ்த்தி மகிழ்ந்திடவே
எல்லோரும் இன்புறுமித் தீபவொளிப் பொன்னாளில்
கண்ணனை உன்ன உயர்வு.
[’பெற்றபடி, இன்னுமிருள், மன்னியுள்ள, கண்விழித்து, வெடிவெடித்து, இனித்திடவே, தொலைபேசி, மகிழ்ந்திடவே’
போன்ற மூவசைச் சீர்களில் வரும் நடு அசையில் இருகுறில் இணந்து வந்து ஓசையை முடுக்கி விடுவது
(விரைவு பெறச் செய்வது) முடுகியல் வெண்பா.]
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
குறட்பா முயற்சிகள்
ரமணி, 20/11/2012
மருத்துவச் சாலையில் பெற்ற குழந்தை
மருத்துவர் சொன்ன பொழுது. ... 1
அழகான பேர்வைக்க இன்டர்நெட் சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர். ... 2
மாலையில் அம்மாப்பா பேணும் குழந்தையைத்
காலையில் தாதி வளர்ப்பு. ... 3
ஓய்ந்திட வாரம் குழந்தை உலாவரும்
சாய்ந்தபடி தள்ளுவண்டி யில். ... 4
உடையில் கிழக்கு மனதினில் மேற்கு
தடையில்லா நம்பெண் மகள். ... 5
உடையில் மனதில் விழைவது மேற்கு
கடைதேடும் நம்மாண் மகன். ... 6
குன்றாமல் கொள்வது கொஞ்சம் கொடுப்பது
இன்றைய வர்த்தக வாழ்வு. ... 7
வலியோரை வாழ்த்தி எளியோரத் தாழ்த்தும்
கலிசூழ்ந்த தீய உலகு. ... 8
பெற்றோரைப் பேணிடார் சுற்றத்தை நாடிடார்
கற்றும் உதவாக் கரை. ... 9
பொருளும் பணமும் புகழும் உவந்து
அருளும் விலைபேசும் மா. ... 10 ... [மா = உலகு]
பற்றும்கை பிள்ளையார்கை என்றாகி வாழ்க்கையில்
உற்றதுணை என்றுகைப் பற்று. ... 11
அறுதலைக் கந்தன் உறுதுணை என்றாகி
மீண்டும் பிறத்தல் அறு. ... 12
தாமதம் இல்லாமல் நற்கதி பெற்றிடப்
பூமகளே சம்மதம் தா. ... 13
*****
ரமணி, 20/11/2012
மருத்துவச் சாலையில் பெற்ற குழந்தை
மருத்துவர் சொன்ன பொழுது. ... 1
அழகான பேர்வைக்க இன்டர்நெட் சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர். ... 2
மாலையில் அம்மாப்பா பேணும் குழந்தையைத்
காலையில் தாதி வளர்ப்பு. ... 3
ஓய்ந்திட வாரம் குழந்தை உலாவரும்
சாய்ந்தபடி தள்ளுவண்டி யில். ... 4
உடையில் கிழக்கு மனதினில் மேற்கு
தடையில்லா நம்பெண் மகள். ... 5
உடையில் மனதில் விழைவது மேற்கு
கடைதேடும் நம்மாண் மகன். ... 6
குன்றாமல் கொள்வது கொஞ்சம் கொடுப்பது
இன்றைய வர்த்தக வாழ்வு. ... 7
வலியோரை வாழ்த்தி எளியோரத் தாழ்த்தும்
கலிசூழ்ந்த தீய உலகு. ... 8
பெற்றோரைப் பேணிடார் சுற்றத்தை நாடிடார்
கற்றும் உதவாக் கரை. ... 9
பொருளும் பணமும் புகழும் உவந்து
அருளும் விலைபேசும் மா. ... 10 ... [மா = உலகு]
பற்றும்கை பிள்ளையார்கை என்றாகி வாழ்க்கையில்
உற்றதுணை என்றுகைப் பற்று. ... 11
அறுதலைக் கந்தன் உறுதுணை என்றாகி
மீண்டும் பிறத்தல் அறு. ... 12
தாமதம் இல்லாமல் நற்கதி பெற்றிடப்
பூமகளே சம்மதம் தா. ... 13
*****
- Sponsored content
Page 2 of 36 • 1, 2, 3 ... 19 ... 36
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 36
|
|