புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது உங்கள் இடம்..! - Page 9 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 9 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 9 I_vote_rcap 
1 Post - 50%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்..! - Page 9 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 9 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 9 I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 9 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 9 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 9 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
இது உங்கள் இடம்..! - Page 9 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 9 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 9 I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 9 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 9 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 9 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது உங்கள் இடம்..! - Page 9 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 9 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 9 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இது உங்கள் இடம்..! - Page 9 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 9 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 9 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
இது உங்கள் இடம்..! - Page 9 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 9 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 9 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இது உங்கள் இடம்..! - Page 9 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 9 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 9 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இது உங்கள் இடம்..! - Page 9 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 9 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 9 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இது உங்கள் இடம்..! - Page 9 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 9 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 9 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இது உங்கள் இடம்..! - Page 9 I_vote_lcapஇது உங்கள் இடம்..! - Page 9 I_voting_barஇது உங்கள் இடம்..! - Page 9 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்..!


   
   

Page 9 of 23 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 23  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 1:30 pm

First topic message reminder :

நன்றி: வாரமலர்

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 24, 2013 1:03 pm

இது ஆம்பளைங்க சமாச்சாரம்!

மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை பற்றி, வாய் ஓயாமல் பேசுகிறோம். ஆனால், மருமகன்கள் கொடுமை மட்டும், வெளியே தெரிவதில்லை. ஆம்பளைங்க சமாச்சாரம் என்பதாலா? "வீராதி வீரனும் வீட்டுக்குள் நுழைந்து விட்டால் கோழைதான்!' ஆனால், மாமனார் வீட்டுக்கு சென்று விட்டால், கோழைக்கும் வீரம் வந்துவிடும் போலிருக்கு! தன்னை ஒரு வி.ஐ.பி.,யாக நினைத்து, மாமனார் வீட்டில் உள்ள அனைவரும், தன்னை ஓடி ஓடி உபசரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சிறு தவறு நடந்து விட்டாலும், அதை பெரிதுபடுத்தி மனைவியிடம் கொட்டித் தீர்ப்பது, ஆகிய கொடுமைகளை செய்கின்றனர் மருமகன்கள்!
கணவனிடம், பொறந்த வீட்டை விட்டு கொடுக்காமல் பேசினாலும், பெற்றோரிடம் ஒப்பாரி வைப்பாள் மனைவி. அதுவும் இரண்டு, மூன்று மருமகன்கள் இருக்கும் வீட்டில் கேட்கவே வேண்டாம். "என் புருசன சரியாவே கவனிக்கல. இரண்டாவது மருமகன்னா உங்களுக்கு உசத்தி! மரியாதை இல்லாத வீட்டிற்கு இனி வரவே மாட்டேன்னு என் புருசன் சொல்லிட்டார்...' என்று மூக்கை உறிஞ்சி மகள் அழுவதும், அதைக் கேட்ட பெற்றோர், மனம் உடைந்து போவதும், அனேக குடும்பங்களில் நடக்கிற சமாச்சாரம்.
கேட்டுப் பெறுவதா மரியாதை? மனைவி மட்டும், உங்கள் பெற்றோரை, தாய், தந்தையாக நினைக்க வேண்டும். அதுபோல் நீங்களும் நினைத்தால் என்ன? மாப்பிள்ளை முறுக்குடன் அலட்டாமல், உங்கள் குடும்ப உறுப்பினர்களுள் ஒன்றாக, மனைவி வீட்டாரையும் நினைத்துப் பழகுங்கள். பிறகு பாருங்கள்; உண்மையான மதிப்பும், மரியாதையும் மாமனார், மாமியாரிடமிருந்து எப்படி கிடைக்கிறது என்பதை!

— ஜி.சபிதா, நெல்லை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 24, 2013 1:05 pm

நடத்துனர்கள் கவனத்திற்கு...

கண்பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான நான், சமீபத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் செல்லும் பொருட்டு, அரசு பேருந்தில் பயணித்தேன். மாற்றுத்திறனாளர் அடையாள அட்டையை நகலெடுத்து, நடத்துனரிடம் கொடுத்தால், நாலில் ஒரு பங்கு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற அரசின் நடைமுறையிலுள்ள அறிவிப்பின் அடிப்படையில், அவ்வாறு, நகலை நடத்துனர் வசம் கொடுத்தேன். அதைப் பெற்றுக்கொண்ட அவர், மிகவும் கீழ்த்தரமாக, "இதையெல்லாம் எடுத்துகிட்டு வந்து, எங்க உசிரை வாங்கறீங்களே... இதை பத்திரமா கொண்டு போய் டெப்போவுல சேர்க்கலன்னா, என் சம்பளத்துலதான் பிடிப்பாங்க...' என்கிற ரீதியில், ஏக வசனம் பேசி, சக பயணியர் முன் கூனிக் குறுகச் செய்து விட்டார்.
மாற்றுத்திறனாளராய் பிறந்துவிட்ட காரணத்தால் தான், அரசின் சலுகைகளை அனுபவிக்கிறோமேயொழிய, அரசின் சலுகைகளை மனதிற்கொண்டு, யாரும் உடல் உறுப்புகளை இழந்து, மாற்றுத்திறனாளராவதில்லை. இதை, அரசுப் பேருந்து நடத்துனர்கள் உணர்ந்து கொள்வரா!

— கா.இளையராஜா, கடலூர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 24, 2013 1:22 pm

//பொது இடங்களில் மற்றவர் முகஞ்சுளிக்காமல் இருக்கத்தான் டையபரே தவிர, இப்படி இடைவெளி­யின்றி உபயோகிக்க அல்ல என்று, மிகவும் கடுமையாக கடிந்து கொண்டார்//

இதில் முகம் சுளிக்க என்ன இருக்கு? குழந்தை தானே? பெற்றவர்களின் சோம்பேறித்தனத்தின் விளைவே இந்த டயபர் உபயோகிப்பது . அந்த செய்தி இல் சொன்னது போல ஒவ்வோறு முறை குழந்தை சிறுநீர் கழிக்கும் போதும் அதற்கு அலம்பி விட்டு, துடைத்து புது துணி அல்லது ஜட்டி மாற்றுவோம். மேலும் கையுடன் பழயதை துவைத்து அல்லது கசக்கி அலசி போடுவோம். அது தான் சுகாதாரம். அதுக்கு சோம்பேறித்தனப் பட்டுக்கொண்டு ,குழந்தை உடம்பையும் புண் ஆக்குகிறார்கள் கோபம் . 'அந்த 3 நாட்களில்' நமக்கே எவ்வளவு கஷ்டமாக இருக்கு, அப்போ எப்படி குழந்தைக்கு அதை போல தொடர்ந்து உபயோகிக்க மனம் வருகிறது? பஞ்சு போன்ற சருமம் என்ன ஆகும் என்று யோசிக்கவே மாட்டாளா? அவாளை எல்லாம் மண்டையில் அடி இப்படிபோடனும் போல இருக்கும் எனக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 24, 2013 1:37 pm

அருண் wrote:சிறிய தட்டும் பெரிய தட்டும்!

டாக்டர் நண்பர் வீட்டில் சாப்பிடச் சென்றேன். சாப்பாட்டு மேஜையில், பெரியதும், சிறியதுமாக இரண்டு அழகிய பீங்கான் தட்டுகளை, என் முன்னே வைத்தனர். பொரியல், கூட்டு, சாலட் போன்றவற்றை, பெரிய தட்டிலும், சாதத்தைச் சிறிய தட்டிலும் பரிமாற ஆரம்பித்தனர்.
ஏதாவது தவறுதலாகப் பரிமாறுகின்றனரோ என்ற தயக்கத்துடன் கேட்டேன். அவர்: தவறு எதுவும் நேரவில்லை. வேண்டுமென்று தான் இப்படிப் பரிமாறுகிறோம். சாதத்தின் அளவு குறைவாகவும், காய்கறி, பழங்களின் அளவு அதிகமாகவும் சாப்பிட வேண்டும்...
குறைவாகச் சாப்பிட வேண்டியதை, சிறிய தட்டில் போட்டுக் கொண்டால், தட்டு நிறைய சாப்பிட்டது போல, திருப்தி உணர்வு ஏற்பட்டு விடும். நிறையச் சாப்பிட வேண்டிய அயிட்டங்களை, பெரிய தட்டில் போட்டு தாராளமாகச் சாப்பிட வேண்டும். அதனால், எப்போதுமே எங்கள் வீட்டில் இப்படித்தான் பரிமாறுவோம்... என்று, விளக்கமாகச் சொன்னார்.
விருந்தும் கொடுத்து, எப்படி ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்றும் கற்று கொடுத்த டாக்டர் குடும்பத்திற்கு, மனமார நன்றி தெரிவித்துவிட்டு வந்தேன்.
இனி, டாக்டர் சொன்னபடி தான் சாப்பிட வேண்டும் என்று, தீர்மானித்தும் விட்டேன். அப்போ.. நீங்க...
— மீனலோசனி பட்டாபிராமன், சென்னை.

இது ரொம்ப நல்லா இருக்கே புன்னகை சூப்பருங்க பொதுவாகவே எங்க வீட்டில் சாதம் குறைவாகவும் கறிகாய் அதிகமாகவும் சாப்பிடுவோம்.இந்த முறை இல் சாப்பிட்டால் இன்னும் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் புன்னகை தகவலுக்கு ரொம்ப நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 24, 2013 1:42 pm

ஆமாம் அம்மா! காய்கறிகள் அதிகமாக சாப்பிடுவது நல்லது.
இன்றைய குழந்தைகள் பாதி பேர் விட்டமின் குறைபாடுகளால் சிறு வயதிலேயே
கண்ணாடியுடன் வலம் வருவதை பார்கிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 24, 2013 1:48 pm

அருண் wrote:
பத்து இலக்க எண்களை துரத்தினவன்!

நான் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரி. அலுவலக பணி தொடர்பாக சென்னை வந்திருந்தேன். சென்னையில் இறங்கும் போது தான், என் மொபைல் போன் காணாமல் போனதை உணர்ந்தேன். என் மனைவி எண்ணோ, சென்னை நண்பர்கள் அலுவலக துணை அதிகாரிகள் எண்ணோ, எனக்கு மனப்பாடமாக தெரியவில்லை. 400க்கும் மேற்பட்ட எண்கள், மொபைல் போன் புக்கில் உள்ளன. அன்று முழுவதும் முகத்தை தொலைத்து விட்டவன் போல பரிதவித்தேன்.
நண்பர்களின், துணை அதிகாரிகளின் மறைமுக கிண்டலுக்கு ஆளானேன். ஷெர்லாக்ஹோம்ஸ் போல் துப்பறிந்து, எட்டு மணி நேரத்திற்கு பின், மனைவி எண்ணை கண்டுபிடித்தேன். எட்டு மணி நேரம் தொடர்பு கொள்ளாததால், எனக்கு என்ன ஆயிற்றோ, ஏது ஆயிற்றோ என, என் குடும்பத்தினர் பதறியிருக்கின்றனர். ஊர் திரும்பியதும், இரண்டு வேலைகள் செய்தேன். போன்புக் எண்களை டைரியில் பிரதி எடுத்தேன். நெருக்கமான இருபது நபர்களின் எண்களை மனப்பாடம் செய்தேன். குறைந்த விலையில் இரண்டாவது மொபைல் போன் வாங்கி, முதல் மொபைல் போனில் பதிவு செய்த எண்களை பதிந்து, பீரோவில் பாதுகாப்பாய் வைத்தேன். என் அவஸ்தை உங்களுக்கு பாடமாய் இருக்கட்டும்.

— க.சபேசன், திருப்பூர்.

ஆமாம் கையால் எழுதிவைத்த டைரி தான் பெஸ்ட் புன்னகை நான் எப்பவும் எழுதிதான் வைப்பேன். 'டிஜிடல் டைரி ' வைத்ததிருந்தேன், ஒருமுறை பாட்டரி போய் காலை வாரிவிட்டது. மேலே சொன்னவர்போல எண்கள் நினைவில் இல்லாமல் பயந்து விட்டேன் ; . என்றாலும், டிஜிடல் டைரி இன் மூடி இல் stick on பேப்பர் இல் கிருஷ்ணா அப்பா மற்றும் கிருஷ்ணாவின் எங்களை எழுதி வைத்திருந்தாதால் பிழைத்தேன். அதிலிருந்து 'தன் கையே தனக்குதவி' என்கிறதை கடைப்பிடிக்கிறேன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 24, 2013 1:59 pm

அருண் wrote:இவரன்றோ நல்லாசிரியர்!

என் வீட்டில், வெள்ளையடிப்பு நடந்தது. வெள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவரை பார்த்து, பள்ளியில் படிக்கும் என் பேத்தி, வீட்டிற்குள் ஓடினாள். என்னவென்று விசாரித்தேன்.
அதற்கு அவள், "இவர் எங்கள் வகுப்பாசிரியர். என்னை பார்த்தால், அவருக்கு சங்கடமாக இருக்கும்...' என்றாள். இது பற்றி அவரிடம் விசாரித்தேன். அதற்கு அவர், தான் ஒரு எம்.ஏ.,பட்டதாரி என்றும், என் பேத்தி படிக்கும் பள்ளியில் வேலை பார்ப்பதாகவும் கூறினார்.
மேலும், "அங்கு தரும் மாத சம்பளம், குடும்பம் நடத்தப் போதாது. அதனால், விடுமுறை நாட்களில், எனக்குத் தெரிந்த பெயின்டிங், வெள்ளை அடிப்பு போன்ற வேலைகளுக்குச் செல்கிறேன். தினமும், 400 ரூபாய் கிடைக்கிறது. இந்தத் தொழில் செய்வதற்காக, நான் வெட்கப்பட வில்லைங்க; செய்யும் தொழில்தானுங்களே தெய்வம்...' என்றார்.
என் பேத்தியை பார்த்தேன், அவள் முகத்தில் ஒரு பெருமிதம். என் உள்ளத்திலும், அவர் ஒரு நல்லாசிரியராக ஏறி அமர்ந்து கொண்டார்.
— களந்தை மைந்தன், நெல்லை.

என் மனத்திலும் தான் புன்னகை நேர்மையாக சம்பாதிக்கும்போது வெட்கப்படவேண்டிய அவசியம் இல்லைதான் , சபாஷ் ஆசிரியரே ! சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 24, 2013 2:04 pm

அருண் wrote:மொபைலை இப்படியும் பயன்படுத்தலாம்!

சமீபத்தில் நானும், என் தோழியும், ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது. பயணம் ஆரம்பித்தது முதலே, தோழியின் மொபைலில், குறுஞ்செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. சிறிது நேரத்தில், பர்சில் வைத்திருந்த மற்றொரு, "சிம்'கார்டை மாற்றினாள். அதிலும், குறுஞ்செய்திகள் வந்தன.
கோபத்தோடு அவளைப் பார்க்க, அவள் தன் மொபைலை என்னிடம் நீட்டினாள். அத்தனை குறுஞ்செய்திகளும், பொது அறிவு வினா - விடைகள். அவளை வியப்போடு நோக்க, அவளே விளக்கினாள். தான் ஒரு வெப்சைட்டை ஆக்ட்டிவேட் செய்துள்ளதாகவும், அதில் இருந்தே, இந்த வினாக்கள் வருவதாகவும் கூறினாள்.
"வெப்சைட்டில் அதிகமான துறைகள் இருக்கும்' எனவும், "நாமே அதில் ஏதாவது பதினைந்து துறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். துறைக்கு இரண்டு கேள்விகள் வீதம், ஒரு நாளைக்கு முப்பது பொது அறிவு வினாக்கள் வரும்...' எனவும் விளக்கினாள்.
மேலும், மாணவர்கள் மொபைலில் வரும் குறுஞ்செய்திகளை மறக்க மாட்டார்கள் என்பதால், இந்த முறையை அறிமுகம் செய்துள்ளதாகவும், இது, அவள் கல்லூரிக்கு பயணம் செய்யும் நேரம் என்பதால், இந்த குறிப்பிட்ட நேரத்தை அதில் கொடுத்துள்ளதாகவும், அவள் குறிப்பிட்ட அந்த ஒரு மணி நேரத்திலேயே, முப்பது குறுஞ்செய்திகளும் வந்துவிடும் எனவும் கூறினாள்.
மொபைலை இப்படியும் உபயோகிக்கலாம் மாணவர்களே...
வெப்சைட் முகவரி: www.upscportal.com

— லக்ஷ்சனா, திண்டுக்கல்.

நல்லா இருக்கே இது புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 24, 2013 2:11 pm

அருண் wrote:புது வாழ்க்கைக்கு ஒரு பயிற்சி.!

என் கல்லூரி தோழிக்கு, மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்திருந்ததை கேள்விப்பட்டு, அவளை பார்க்க சென்றிருந்தேன். நான், அவள் வீட்டிற்கு சென்றிருந்த சமயம், தோழி படுபிசியாக இருந்தாள். கேஸ் சிலிண்டர் முதல் கேபிள் டிவி, மளிகை சாமான் வரை எல்லாவற்றையும் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி... இன்னும் கல்யாணமே முடியல, அதுக்குள்ள இவ்வளவு பிசியாயிட்ட...' என்று கேட்டேன். அதற்கு அவளோ, "இல்லடி... எங்க அம்மாதான் இந்த மூணு மாசம், வீட்டில் வரவு - செலவு கணக்கு வழக்குகளை நீதான் பார்க்கணும். அப்பதான், நீ போகப்போற வீட்டுல எல்லா விஷயங்களும் புரியும். அதோட, எந்த செலவுகளில் சிக்கனமா இருக்கணும்ன்னு, பிராக்டிஸ் எடுத்துக்க சொன்னாங்க. அதுக்காக, என் அப்பா சம்பளத்தை கூட, என் கையில குடுத்திட்டார்..' என்றாள்.

எனக்கு இந்த பயிற்சி புதுமையாகவும், அவசியமானதாகவும் பட்டது. தோழிக்கு வாழ்த்து சொல்லிய கையோடு, அவளது பெற்றோரையும் வியந்து பாராட்டி விட்டு வந்தேன். அதை என் பெற்றோரிடமும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் மிகவும் பெருமையோடு சொன்னேன். இல்லத்தரசியாக போகும் பெண்களுக்கு, ஒரு வகையில் சிறந்த முன்னேற்பாடு தானே!

— எஸ்.ஷன்மதி, மதுரை.

அருமையான ஐடியா வாக இருக்கே இது புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 25, 2013 11:18 am

அருண் wrote:ரெப்ரெஜிரேட்டரில் வைத்த அப்பளம்!

"நண்பர் ஒருவரின் வீட்டுக்கு, நண்பகல் நேரத்தில் சென்றிருந்தேன். அனைவரும் ஒன்றாக அமர்ந்து, உணவருந்திக் கொண்டிருந்தனர். நண்பரின் மனைவி, பொரித்துக் கொண்டு வந்து பரிமாறிய அப்பளம், ஒரு குழந்தையின் தட்டில் போடும் போது, உடைந்து விட்டது.
"உடைந்த அப்பளம் வேண்டாம். எனக்கு, உடையாத அப்பளம் தான் வேண்டும்...' என்று, குழந்தை அழத் தொடங்கியது. "முழு அப்பளத்தையா முழுங்கப் போகிறாய்? உடைத்து, உடைத்துத்தானே சாப்பிடப் போகிறாய். அதையே சாப்பிடு...' என்றார் நண்பரின் மனைவி.
குழந்தை மறுத்தது. இருவரும் அவரவர் நிலையில் உறுதியாக இருக்க, மனைவிக்காக பரிந்து பேசினார் நண்பர். "எனக்கு முழு அப்பளம் தான் வேண்டும். நான் முழுசாகவே அதை சாப்பிடுவேன்...' என்றது குழந்தை.
அனைவருக்கும் ஆச்சரியம். சரி, என்னதான் நடக்கிறது. எப்படி சாப்பிடப் போகிறது என்ற ஆர்வ மிகுதியால், ஒரு முழு அப்பளத்தைப் பொரித்துக் கொடுக்கச் சொன்னார் நண்பர். அப்பளத்தை கையில் வாங்கிய குழந்தை, அதை எடுத்துச் சென்று, ரெப்ரெஜிரேட்டரின் சில்லர் தட்டில் ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து வந்தது. இப்போது, அப்பளம் அப்படியே துணி மாதிரி மடிக்கும் பக்குவத்தில் இருந்தது.
"இப்ப பாருங்க... முழு அப்பளத்தை எப்படி நான் சாப்பிடுறேன்னு...' என்று சொல்லி, அப்பளத்தை மடித்து, வாய்க்குள் போட்டு, சாப்பிடத் துவங்கியது. நாங்கள் பிரீசரில் வைத்த மாதிரி, உறைந்து போனோம்.

— மு.தட்சிணாமூர்த்தி, வேணுகோபாலபுரம்.

அவ்வளவு போல்லதா குழந்தை அது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 9 of 23 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக