புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனவ கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்: கைதாவதை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைப்பு?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த முற்றுகை போராட்டத்தில் பயங்கர மோதல் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
போலீஸ் படையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் இன்று 3-வது நாளாக பதட்டம் நீடிக்கிறது.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தலைவர் புஷ்பராயன், நிர்வாகிகள் முகிலன், மைபா ஜேசுராஜன் மற்றும் கலவரத்தில் ஈடுபட்ட வர்களை கைதுசெய்ய போலீசார் கடந்த 2 நாட்களாக இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சோதனை நடத்தினர். இதில் தாக்குதல் நடத்திய 51 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மைபா ஜேசுராஜன் ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் உதயகுமார் அரசியல் பிரமுகர் ஒருவர் முன்னிலையில் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் (நேற்று இரவு) சரணடைவதாக தெரிவித்தார். ஆனால் இதற்கு இடிந்தகரை பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் உதயகுமார் நேற்று மாலை திடீரென இடிந்தகரை உண்ணாவிரத பந்தலுக்கு வந்தார். நிருபர்களுக்கு பேட்டியளித்த பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உருக்கமாக பேசினார்.
அப்போது ஆண்களும், பெண்களும் கதறி அழுது உங்களை கைதாக விடமாட்டோம் என்று கூறினர். இந்த சமயத்தில் உதயகுமாரை கைது செய்ய அதிரடிப்படை போலீசார் இடிந்தகரை நோக்கி கடற்கரை வழியாக பதுங்கி, பதுங்கி சென்றனர்.
இதனை அறிந்த இளைஞர்கள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த உதயகுமார் மற்றும் புஷ்பராயன், முகிலன் ஆகியோரை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். கடற்கரையில் தயாராக நிறுத்தி வைத்திருந்த 4 படகுகளில் அவர்களை ஏற்றி நடுக்கடலுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
படகுகளில் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்ட உதயகுமார், புஷ்பராயன், முகிலன் ஆகியோர் நேற்று நள்ளிரவில் இடிந்தகரை அருகே உள்ள கூத்தங்குழி மீனவர் கிராமத்துக்கு திரும்பினர். அங்கு அவர்கள் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை அறிந்த போலீசார் அவர்களை கைது செய்வதற்காக கூத்தங்குழி கிராமத்தை முற்றுகையிட்டுள்ளனர். போலீசார் ஊருக்குள் புகுவதை தடுக்க கூத்தங்குழி கிராம மக்கள் ஊரை சுற்றிலும் மணல் பரப்பில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வலைகளையும் புதைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே கூத்தங்குழி கிராமத்துக்குள் நுழைய போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்துமீறி நுழைந்தால் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்படும் என்பதால் உதயகுமார் உள்ளிட்டோரை எவ்வாறு கைது செய்வது என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் ஐ.ஜி.க்கள் கண்ணப்பன், ராஜேஷ்தாஸ், இடிந்தகரை வந்துள்ள அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தொடர்பு கொண்டு உதயகுமாரை போலீஸ் நிலையத்திலோ அல்லது கோர்ட்டிலோ சரணடைய வைக்க அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு கெஜ்ரிவால் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.
இதனிடையே உதயகுமார் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு காவல் நிலையத்தில் கைது ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடலோர காவல்நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இடிந்தகரை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது
மாலை மலர்
போலீஸ் படையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் இன்று 3-வது நாளாக பதட்டம் நீடிக்கிறது.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தலைவர் புஷ்பராயன், நிர்வாகிகள் முகிலன், மைபா ஜேசுராஜன் மற்றும் கலவரத்தில் ஈடுபட்ட வர்களை கைதுசெய்ய போலீசார் கடந்த 2 நாட்களாக இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சோதனை நடத்தினர். இதில் தாக்குதல் நடத்திய 51 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மைபா ஜேசுராஜன் ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் உதயகுமார் அரசியல் பிரமுகர் ஒருவர் முன்னிலையில் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் (நேற்று இரவு) சரணடைவதாக தெரிவித்தார். ஆனால் இதற்கு இடிந்தகரை பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் உதயகுமார் நேற்று மாலை திடீரென இடிந்தகரை உண்ணாவிரத பந்தலுக்கு வந்தார். நிருபர்களுக்கு பேட்டியளித்த பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உருக்கமாக பேசினார்.
அப்போது ஆண்களும், பெண்களும் கதறி அழுது உங்களை கைதாக விடமாட்டோம் என்று கூறினர். இந்த சமயத்தில் உதயகுமாரை கைது செய்ய அதிரடிப்படை போலீசார் இடிந்தகரை நோக்கி கடற்கரை வழியாக பதுங்கி, பதுங்கி சென்றனர்.
இதனை அறிந்த இளைஞர்கள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த உதயகுமார் மற்றும் புஷ்பராயன், முகிலன் ஆகியோரை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். கடற்கரையில் தயாராக நிறுத்தி வைத்திருந்த 4 படகுகளில் அவர்களை ஏற்றி நடுக்கடலுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
படகுகளில் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்ட உதயகுமார், புஷ்பராயன், முகிலன் ஆகியோர் நேற்று நள்ளிரவில் இடிந்தகரை அருகே உள்ள கூத்தங்குழி மீனவர் கிராமத்துக்கு திரும்பினர். அங்கு அவர்கள் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை அறிந்த போலீசார் அவர்களை கைது செய்வதற்காக கூத்தங்குழி கிராமத்தை முற்றுகையிட்டுள்ளனர். போலீசார் ஊருக்குள் புகுவதை தடுக்க கூத்தங்குழி கிராம மக்கள் ஊரை சுற்றிலும் மணல் பரப்பில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வலைகளையும் புதைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே கூத்தங்குழி கிராமத்துக்குள் நுழைய போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்துமீறி நுழைந்தால் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்படும் என்பதால் உதயகுமார் உள்ளிட்டோரை எவ்வாறு கைது செய்வது என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் ஐ.ஜி.க்கள் கண்ணப்பன், ராஜேஷ்தாஸ், இடிந்தகரை வந்துள்ள அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தொடர்பு கொண்டு உதயகுமாரை போலீஸ் நிலையத்திலோ அல்லது கோர்ட்டிலோ சரணடைய வைக்க அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு கெஜ்ரிவால் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.
இதனிடையே உதயகுமார் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு காவல் நிலையத்தில் கைது ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடலோர காவல்நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இடிந்தகரை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது
மாலை மலர்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ராஜா wrote: அருமை அருமை , நாட்டு மக்களை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்பதற்காக போராடும் ஒரு மனிதனை தீவிரவாதி அளவுக்கு ஆக்கிபுட்டார்களே
- திமுகபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011
பாசிச ஜெயா தலைமையில் தொடரும் அமைதிப்படை ராஜராஜ சோழன் பாணிப்படுகொலைகள்.
கூடங்குளம் போலீஸ் தடியடியை நியாயப்படுத்தி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பக்திப் பரவசத்தோடு வெளியிட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில் அணு உலை பாதுகாப்பானது, அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய, மாநில அரசுகள் நியமித்த வல்லுனர் குழுக்கள் அளித்த அறிக்கைகளை அடுத்து அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை சொல்கிறார், ஜெயா.
இந்த 500 கோடி எதற்கு? கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அப்பகுதியில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாம் ஏற்படும் என்று அளந்து விட்டு இந்த ‘லஞ்சப்’ பணம் எதற்கு? போராடும் மக்களை திசைதிருப்பி, உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் அரசியல் பிரமுகர்களை சரிக்கட்டவே இந்த 500 கோடி பம்பர் பரிசு என்பது பாமரனுக்கும் தெரியும்.
ஒரு சிறிய எடுத்துகாட்டக போபால் விபத்து தொடர்பாக கூட இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள் கைவிரித்து விட்டன. கொலைகார ஆண்டர்சனை கைது செய்ய முடியாது என்றும் கூறிவிட்டன. இதை ஏற்றுக் கொண்டு போபால் மக்கள் அமைதியாக வாழ வேண்டுமென்று ஒருவர் சொன்னால் அது எத்தனை அயோக்கியத்தனமானது? அணுமின்நிலைய விபத்தும், அதனால் கொல்லப்பட்ட, நடைபிணங்களாக வாழும் மக்களும் பல்வேறு இரத்த சாட்சியங்களாக உலகம் முழுவதும் இருக்கும் போது கூடங்குளம் பகுதி மக்கள் மட்டும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று தங்களையே பலி கொடுப்பதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டுமா? நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டால் யாரும் போராடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம்?
உதயகுமார் மீது சில மாற்றுகருத்துக்கள் இருந்தாலும் கூட இப்போது கூடங்களம் போராட்டத்தை முழுவீச்சில் கிண்டலும், கேலியும் செய்துகொண்டிருக்கிறார்கள், போபாலில் விஷவாயு விபத்து நடந்து பல்லாயிரக்கணக்க ானோர் பலியான போது அரசு நடந்துகொண்ட விதம் அதனால் பாதிக்கப்பட்டு, இன்னமும் ஊனமாக குழந்தைகள் ஊனமாக பிறக்கிறார்கள். 20 வருடங்களுக்கும் மேலான நீதிப்போராட்டத் துக்குப் பின்பும், ஒரு சாலைவிபத்துக்கு வழங்கும் நஷ்ட ஈடு கூட அதில் மரணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. போபால் விஷவாயு விபத்தில் பலியானவர்களில் நம் சொந்தங்கள் யாரேனும் இருந்திருந்தால் இன்று கூடங்குளம் மக்களின் பயத்தையும் அதனால் உண்டாகியிருக்கும் போராட்டத்தையும் கிண்டல் செய்ய நமக்கு மனம் வருமா? வளர்ந்த நாடான ஜப்பானே ஆட்டம் கண்டபோது, சுடுகாட்டில் கூட ஊழல் நடக்கும் இந்தியாவின் அணு உலை மீதான நம்பகத்தன்மையை சந்தேகிக்க மெத்தப்படித்த அணு-விஞ்ஞானியாக இருக்கவேண்டாம், சராசரி ஆறறிவு இருந்தாலே போதும்.
நியாயமான குமுறல். சாத்வீகமான போராட்டத்துக்குள் சில நச்சரவங்கள் புகுந்திருக்கின்றன. அணு உலையால் பாதிப்பு வரும் என்ற அம்மக்களின் குரல் அபயக்குரல். அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் முழு விளக்கமும் கொடுக்கப்பட வேண்டும். அதே நேரம் இவ்வளவு பெரிய செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இம்மின் நிலையத்திலிருந்து மின்சாரமும் தேவையே. பாதுகாப்போடு மின் உற்பத்தி அப்பகுதி மக்களை பாதிக்காதவாறு
மக்களின் நியாயமான சந்தேகங்களை தீர்க்க முடியாமல் பொய் குற்றச்சாட்டுக்களை, வன்முறையை பாவிக்கின்றனர் ஆட்சியில் உள்ளவர்கள்.
உதய குமார் போராட்டம் தவறு என்றால் அதை வளர்த்து விட்டது யார்? மிக மோசமான நிர்வாக திறமை உள்ள முதல்வரே இதற்கு பொறுப்பு, எப்போது இவர் ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு சீர் குலைவது வாடிக்கை, ஆனால் இவர் ஆட்சியில் அது சிறப்பாக இருப்பதாக அவர் புகழ் பாடும் பத்திரிகைகள் பொய் செய்திகளை பரப்பும். இவர் ஆட்சியில் போலீசாருக்கு துப்பாக்கி சூடு நடத்த மட்டுமே தெரியும், பின்னர் கலவரத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கினார் என்று முதல்வர் புகழ் பாடப்படும் அனைத்திற்கும் இவரை தேர்ந்தெடுத்த தமிழ் மக்களே காரணம்.
இன்று பத்தாம் வகுப்பு காலாண்டு பரீட்சை துவங்குகிறது,சென்னையை தவிர வேறெங்கும் நிர்வாக புலி ஆட்சியில் மின்சாரம் இல்லாததால் மற்ற மாவட்ட மாணவர்கள் துன்பபடுகிறார்கள் போரட்டகாரர்களுக்கு ஆரம்பம் முதலே ஆதரவளித்து பிரச்சினை பெரிதாக காரணமான நிர்வாக திறமை இல்லாத முதல்வரே இதற்கு பொறுப்பு.
சென்ற ஆட்சியில் பொது மக்கள் அல்லது அரசு துறை இது மாதிரி எதாவது போராட்டம் என்று சொன்னால் உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர் சென்று பேச்சு நடத்தி உடனே தீர்த்து வைப்பார் அல்லது அவர்கள் முதல்வரை சென்று சந்தித்து பின்னர் பிரச்சினை தீரும், ஆனால் இன்று?
கடந்த ஒன்றரை ஆண்டாக மக்கள் படாத துன்பம் இல்லை இவரது ஆஸ்தான சோதிடர்கள் இவர் ஆட்சிக்கு வந்தால் ராணி போல இருப்பார்,அமைச்சர் எல்லாம் அடிமை போல் இருப்பார்கள், மக்கள் மண்ணு போல் ஒன்னும் தெரியாமல் இருப்பார்கள், உங்களுக்கு பொற்காலம் என்று ஒத்து ஊதுவர்,ஆனால் அது உண்மை,அதே சமயம் இவர் ஆண்டால் தமிழகம் சீரழியும்,இயற்கை சீற்றங்களால் துன்பப்படும்,நோய் பரவும்,வறட்சி, வெள்ளம் வாட்டி வதைக்கும்,தமிழகதிற்கு அது ஒரு கேடுகாலமாக அமையும் என்று உண்மையை சொல்ல பயந்து சொல்லாமல் விட்டுவிடுவார்கள்,மொத்தத்தில் இதை எல்லாம் அனுபவிப்பது தமிழக மக்களே!
நேற்று CNN -IBN தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்த இந்தியாவின் அறிவுஜீவி சு.சுவாமி இந்த போராட்டத்துக்குள் விடுதலைபுலிகள் உள்ளார்கள் என்கிறார்!! இந்த ஆளு சேது சமுத்திர திட்டம் வேண்டாம் அங்கு ராமர் பாலம் உள்ளது என்கிறார்!! அது ராமனும் சீதையும் கட்டியது என்ற கதைக்குள் எந்த புலிகள் உள்ளார்கள்?
20 ஆண்டுகளாக வன்முறை ஆட்சியாளர்களுக்கு கு….டி கழுவிய தமிழ்நாடு போலீசும், அரசும், அதிகார வர்க்கமும், ஓட்டுக்கட்சிகளும் மாமா வேலைபார்த்த ஊடகங்களும் இப்போது இடிந்தகரை மக்களுக்கு எதிராகத்திரும்பியிருக்கின்றன.
கலவரத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கினார் என்று ஜெயா புகழ் பாடப்படும் ஊடகங்களை நினைக்கும் போது அமைதிப்படை ராஜராஜ சோழன் பாணிதான் நினைவுக்கு வருகிறது.
வாழ்க புரட்சி தலைவி நாமம் போடும் தமிழ் மாக்கள்!!!!!!
கூடங்குளம் போலீஸ் தடியடியை நியாயப்படுத்தி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பக்திப் பரவசத்தோடு வெளியிட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில் அணு உலை பாதுகாப்பானது, அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய, மாநில அரசுகள் நியமித்த வல்லுனர் குழுக்கள் அளித்த அறிக்கைகளை அடுத்து அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை சொல்கிறார், ஜெயா.
இந்த 500 கோடி எதற்கு? கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அப்பகுதியில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாம் ஏற்படும் என்று அளந்து விட்டு இந்த ‘லஞ்சப்’ பணம் எதற்கு? போராடும் மக்களை திசைதிருப்பி, உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் அரசியல் பிரமுகர்களை சரிக்கட்டவே இந்த 500 கோடி பம்பர் பரிசு என்பது பாமரனுக்கும் தெரியும்.
ஒரு சிறிய எடுத்துகாட்டக போபால் விபத்து தொடர்பாக கூட இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள் கைவிரித்து விட்டன. கொலைகார ஆண்டர்சனை கைது செய்ய முடியாது என்றும் கூறிவிட்டன. இதை ஏற்றுக் கொண்டு போபால் மக்கள் அமைதியாக வாழ வேண்டுமென்று ஒருவர் சொன்னால் அது எத்தனை அயோக்கியத்தனமானது? அணுமின்நிலைய விபத்தும், அதனால் கொல்லப்பட்ட, நடைபிணங்களாக வாழும் மக்களும் பல்வேறு இரத்த சாட்சியங்களாக உலகம் முழுவதும் இருக்கும் போது கூடங்குளம் பகுதி மக்கள் மட்டும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று தங்களையே பலி கொடுப்பதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டுமா? நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டால் யாரும் போராடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம்?
உதயகுமார் மீது சில மாற்றுகருத்துக்கள் இருந்தாலும் கூட இப்போது கூடங்களம் போராட்டத்தை முழுவீச்சில் கிண்டலும், கேலியும் செய்துகொண்டிருக்கிறார்கள், போபாலில் விஷவாயு விபத்து நடந்து பல்லாயிரக்கணக்க ானோர் பலியான போது அரசு நடந்துகொண்ட விதம் அதனால் பாதிக்கப்பட்டு, இன்னமும் ஊனமாக குழந்தைகள் ஊனமாக பிறக்கிறார்கள். 20 வருடங்களுக்கும் மேலான நீதிப்போராட்டத் துக்குப் பின்பும், ஒரு சாலைவிபத்துக்கு வழங்கும் நஷ்ட ஈடு கூட அதில் மரணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. போபால் விஷவாயு விபத்தில் பலியானவர்களில் நம் சொந்தங்கள் யாரேனும் இருந்திருந்தால் இன்று கூடங்குளம் மக்களின் பயத்தையும் அதனால் உண்டாகியிருக்கும் போராட்டத்தையும் கிண்டல் செய்ய நமக்கு மனம் வருமா? வளர்ந்த நாடான ஜப்பானே ஆட்டம் கண்டபோது, சுடுகாட்டில் கூட ஊழல் நடக்கும் இந்தியாவின் அணு உலை மீதான நம்பகத்தன்மையை சந்தேகிக்க மெத்தப்படித்த அணு-விஞ்ஞானியாக இருக்கவேண்டாம், சராசரி ஆறறிவு இருந்தாலே போதும்.
நியாயமான குமுறல். சாத்வீகமான போராட்டத்துக்குள் சில நச்சரவங்கள் புகுந்திருக்கின்றன. அணு உலையால் பாதிப்பு வரும் என்ற அம்மக்களின் குரல் அபயக்குரல். அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் முழு விளக்கமும் கொடுக்கப்பட வேண்டும். அதே நேரம் இவ்வளவு பெரிய செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இம்மின் நிலையத்திலிருந்து மின்சாரமும் தேவையே. பாதுகாப்போடு மின் உற்பத்தி அப்பகுதி மக்களை பாதிக்காதவாறு
மக்களின் நியாயமான சந்தேகங்களை தீர்க்க முடியாமல் பொய் குற்றச்சாட்டுக்களை, வன்முறையை பாவிக்கின்றனர் ஆட்சியில் உள்ளவர்கள்.
உதய குமார் போராட்டம் தவறு என்றால் அதை வளர்த்து விட்டது யார்? மிக மோசமான நிர்வாக திறமை உள்ள முதல்வரே இதற்கு பொறுப்பு, எப்போது இவர் ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு சீர் குலைவது வாடிக்கை, ஆனால் இவர் ஆட்சியில் அது சிறப்பாக இருப்பதாக அவர் புகழ் பாடும் பத்திரிகைகள் பொய் செய்திகளை பரப்பும். இவர் ஆட்சியில் போலீசாருக்கு துப்பாக்கி சூடு நடத்த மட்டுமே தெரியும், பின்னர் கலவரத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கினார் என்று முதல்வர் புகழ் பாடப்படும் அனைத்திற்கும் இவரை தேர்ந்தெடுத்த தமிழ் மக்களே காரணம்.
இன்று பத்தாம் வகுப்பு காலாண்டு பரீட்சை துவங்குகிறது,சென்னையை தவிர வேறெங்கும் நிர்வாக புலி ஆட்சியில் மின்சாரம் இல்லாததால் மற்ற மாவட்ட மாணவர்கள் துன்பபடுகிறார்கள் போரட்டகாரர்களுக்கு ஆரம்பம் முதலே ஆதரவளித்து பிரச்சினை பெரிதாக காரணமான நிர்வாக திறமை இல்லாத முதல்வரே இதற்கு பொறுப்பு.
சென்ற ஆட்சியில் பொது மக்கள் அல்லது அரசு துறை இது மாதிரி எதாவது போராட்டம் என்று சொன்னால் உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர் சென்று பேச்சு நடத்தி உடனே தீர்த்து வைப்பார் அல்லது அவர்கள் முதல்வரை சென்று சந்தித்து பின்னர் பிரச்சினை தீரும், ஆனால் இன்று?
கடந்த ஒன்றரை ஆண்டாக மக்கள் படாத துன்பம் இல்லை இவரது ஆஸ்தான சோதிடர்கள் இவர் ஆட்சிக்கு வந்தால் ராணி போல இருப்பார்,அமைச்சர் எல்லாம் அடிமை போல் இருப்பார்கள், மக்கள் மண்ணு போல் ஒன்னும் தெரியாமல் இருப்பார்கள், உங்களுக்கு பொற்காலம் என்று ஒத்து ஊதுவர்,ஆனால் அது உண்மை,அதே சமயம் இவர் ஆண்டால் தமிழகம் சீரழியும்,இயற்கை சீற்றங்களால் துன்பப்படும்,நோய் பரவும்,வறட்சி, வெள்ளம் வாட்டி வதைக்கும்,தமிழகதிற்கு அது ஒரு கேடுகாலமாக அமையும் என்று உண்மையை சொல்ல பயந்து சொல்லாமல் விட்டுவிடுவார்கள்,மொத்தத்தில் இதை எல்லாம் அனுபவிப்பது தமிழக மக்களே!
நேற்று CNN -IBN தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்த இந்தியாவின் அறிவுஜீவி சு.சுவாமி இந்த போராட்டத்துக்குள் விடுதலைபுலிகள் உள்ளார்கள் என்கிறார்!! இந்த ஆளு சேது சமுத்திர திட்டம் வேண்டாம் அங்கு ராமர் பாலம் உள்ளது என்கிறார்!! அது ராமனும் சீதையும் கட்டியது என்ற கதைக்குள் எந்த புலிகள் உள்ளார்கள்?
20 ஆண்டுகளாக வன்முறை ஆட்சியாளர்களுக்கு கு….டி கழுவிய தமிழ்நாடு போலீசும், அரசும், அதிகார வர்க்கமும், ஓட்டுக்கட்சிகளும் மாமா வேலைபார்த்த ஊடகங்களும் இப்போது இடிந்தகரை மக்களுக்கு எதிராகத்திரும்பியிருக்கின்றன.
கலவரத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கினார் என்று ஜெயா புகழ் பாடப்படும் ஊடகங்களை நினைக்கும் போது அமைதிப்படை ராஜராஜ சோழன் பாணிதான் நினைவுக்கு வருகிறது.
வாழ்க புரட்சி தலைவி நாமம் போடும் தமிழ் மாக்கள்!!!!!!
தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
- திமுகபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011
சென்னை: தொடக்கத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஜெயலலிதா அரசு ஆதரவு தெரிவித்து, அவர்களை உசுப்பி விட்டு விட்டு, தற்போது அவர்களை அடக்கி ஒடுக்கிவிடக் கருதுகிறது. காவல் துறையினரை மட்டுமே நம்பி ஆட்சி செய்த, எந்த ஆட்சியும் நிலைத்ததில்லை என்பதை இந்த 'மெஜாரிட்டி' அதிமுக அரசு உணர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. அரசு காவல் துறையை அங்கே கொண்டு போய் குவித்து வைத்து, அவர்கள் மூலமாகவே போராட்டத்தை அடக்கி ஒடுக்க எண்ணுகிறது. துப்பாக்கி பிரயோகம் வரை நடைபெற்று மீனவர் ஒருவர் தன் உயிரைக் காணிக்கையாக்கியிருக்கிறார்.
அன்றாடம் நமது மீனவர்களை இலங்கைக் கடற்படையிடமிருந்து காப்பாற்ற நாம் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், காவல்துறையே இன்று நம்முடைய மீனவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கிறது. தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் முயற்சியிலே அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது.
போராட்டம் எதிர்ப்பாளர்கள் கையை விட்டுப் போய், சரணடைய வந்த உதயகுமாரையும் புஷ்பராயனையும் பொதுமக்களே சரணடையக் கூடாதென்று தூக்கிக் கொண்டு போய்விட்டதாக செய்தி வந்துள்ளது.
கூடங்குளத்தில் போராட்டம் இந்த அளவிற்கு பெரிதாக ஆவதற்கு அதிமுக ஆட்சியினர்தான் காரணம் என்று எதிர்ப்பாளர்களே கூறுகிறார்கள். தொடக்கத்திலேயே அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு மாநில அரசு ஆதரவு தெரிவித்து, அவர்களை உசுப்பி விட்டு விட்டு, தற்போது அவர்களை அடக்கி ஒடுக்கிவிடக் கருதுகிறது.
அணு உலை பிரச்சனையில், முதலில் மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு இருப்பதைப்போலக் காட்டிக் கொள்வதற்காக, அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார்கள்.
முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதைப் போல 1,000 மெகாவாட் மின் திறன் கொண்ட இரண்டு அணு மின் அலகுகள் அமைப்பதற்கான பெரும்பாலான பணிகள் முடிவுற்றிருந்த நிலையில்; பணியினைத் தொடர வேண்டாமென்றும்- போராட்டம் நடத்துகின்ற மக்களுக்கு அறிவுரை கூறி உண்மையை உணரச் செய்கிற வரை, அணு உலை பணிகளைத் தொடங்கக்கூடாது என்றும், 19-9-2011 அன்று பிரதமருக்கு நமது முதலமைச்சர் கடிதம் எழுதினார்.
இந்தச் செயல்; எதிர்ப்பாளர்களுக்கெல்லாம் தங்கள் செயல்பாடு நியாயம்தான் என்று ஊக்கப்படுத்திவிட்டது. ஆரம்பத்திலேயே அணு உலை எதிர்ப்பாளர்களிடம், அந்த ஆலையினால் ஆபத்து இல்லை, ஆபத்து வராமல் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக் கொள்ளும், ஆபத்துக்களைத் தடுப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படும் என்றெல்லாம் தொடக்கத்திலேயே போராட்டக் குழுவினரிடம் விளக்கியிருந்தால், இந்த அளவிற்கு நிலைமை முற்றியிருக்காது.
மத்திய அரசின் முடிவினை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு 21-9-2011 அன்று தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா அணு உலை எதிர்ப்பாளர்களையெல்லாம் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, அதற்கு மறுநாள் 22-9-2011 அன்று அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி, அதிலே மத்திய அரசு உடனடியாக கூடங்குளம் திட்டப் பணிகளை நிறுத்த வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றியதோடு, மூத்த அமைச்சர் ஒருவர் தலைமையில் போராட்டக் குழுவினரோடு பிரதமரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொடுத்தார்.
இப்படியெல்லாம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜெயலலிதா, பின்னர் என்ன காரணத்தாலோ தன்னுடைய முந்தைய நிலையை மாற்றிக் கொண்டார்.
காவல் துறையினரை மட்டுமே நம்பி ஆட்சி செய்த எந்த ஆட்சியும் நிலைத்ததில்லை என்பதை இந்த மெஜாரிட்டி அதிமுக அரசு உணரவேண்டும்.
எப்படியோ இதுவரை நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்பதைப் போல அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.
தொடக்கத்தில் போராட்டக்காரர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய ஜெயலலிதா தற்போது முதலமைச்சரைச் சந்திக்க வந்த போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச மறுத்தது- மன்னிக்க முடியாத- முன் யோசனையற்ற தவறு.
மத்திய அரசும், மாநில அரசும் போராட்டக் குழுவினரின் முக்கிய பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து வைத்துப் பேச வேண்டும். ஆபத்து எதுவும் ஏற்படாமல் அரசினால் எடுக்கப்பட வேண்டிய அத்தனை நடவடிக்கைகளையும் செய்து கொடுப்போம் என்று அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். உத்தரவாதம் அளிப்பதோடு அவற்றை செய்து முடிக்கவும் ஆவண செய்ய வேண்டும்.
போராட்டம் நடத்துவோரும் நமது மக்கள்தான். அவர்களை ஏதோ விரோதிகள் என்பதைப்போல இந்த அரசு நினைக்கக் கூடாது. போராட்டம் நடத்துவோரும், அந்த அணு உலை தொடங்குவதற்கு முன்பாகவே தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தால், இத்தனை கோடி ரூபாய்களை செலவழித்திருக்கத் தேவையில்லை.
ஆனால் பல ஆண்டு காலமாக பணிகளை செய்து முடித்துள்ள நிலையில், இருதரப்பினருக்கும் உகந்த முறையில் சுமூகமாக இதைத் தீர்ப்பதற்கு வழி காண வேண்டுமே தவிர, இந்த மெஜாரிட்டி அரசு தங்களிடம் காவல்துறை இருக்கிறது என்ற நினைப்போடு, போராட்டத்தை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று கருதிடக்கூடாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. அரசு காவல் துறையை அங்கே கொண்டு போய் குவித்து வைத்து, அவர்கள் மூலமாகவே போராட்டத்தை அடக்கி ஒடுக்க எண்ணுகிறது. துப்பாக்கி பிரயோகம் வரை நடைபெற்று மீனவர் ஒருவர் தன் உயிரைக் காணிக்கையாக்கியிருக்கிறார்.
அன்றாடம் நமது மீனவர்களை இலங்கைக் கடற்படையிடமிருந்து காப்பாற்ற நாம் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், காவல்துறையே இன்று நம்முடைய மீனவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கிறது. தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் முயற்சியிலே அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது.
போராட்டம் எதிர்ப்பாளர்கள் கையை விட்டுப் போய், சரணடைய வந்த உதயகுமாரையும் புஷ்பராயனையும் பொதுமக்களே சரணடையக் கூடாதென்று தூக்கிக் கொண்டு போய்விட்டதாக செய்தி வந்துள்ளது.
கூடங்குளத்தில் போராட்டம் இந்த அளவிற்கு பெரிதாக ஆவதற்கு அதிமுக ஆட்சியினர்தான் காரணம் என்று எதிர்ப்பாளர்களே கூறுகிறார்கள். தொடக்கத்திலேயே அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு மாநில அரசு ஆதரவு தெரிவித்து, அவர்களை உசுப்பி விட்டு விட்டு, தற்போது அவர்களை அடக்கி ஒடுக்கிவிடக் கருதுகிறது.
அணு உலை பிரச்சனையில், முதலில் மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு இருப்பதைப்போலக் காட்டிக் கொள்வதற்காக, அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார்கள்.
முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதைப் போல 1,000 மெகாவாட் மின் திறன் கொண்ட இரண்டு அணு மின் அலகுகள் அமைப்பதற்கான பெரும்பாலான பணிகள் முடிவுற்றிருந்த நிலையில்; பணியினைத் தொடர வேண்டாமென்றும்- போராட்டம் நடத்துகின்ற மக்களுக்கு அறிவுரை கூறி உண்மையை உணரச் செய்கிற வரை, அணு உலை பணிகளைத் தொடங்கக்கூடாது என்றும், 19-9-2011 அன்று பிரதமருக்கு நமது முதலமைச்சர் கடிதம் எழுதினார்.
இந்தச் செயல்; எதிர்ப்பாளர்களுக்கெல்லாம் தங்கள் செயல்பாடு நியாயம்தான் என்று ஊக்கப்படுத்திவிட்டது. ஆரம்பத்திலேயே அணு உலை எதிர்ப்பாளர்களிடம், அந்த ஆலையினால் ஆபத்து இல்லை, ஆபத்து வராமல் மத்திய, மாநில அரசுகள் பார்த்துக் கொள்ளும், ஆபத்துக்களைத் தடுப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படும் என்றெல்லாம் தொடக்கத்திலேயே போராட்டக் குழுவினரிடம் விளக்கியிருந்தால், இந்த அளவிற்கு நிலைமை முற்றியிருக்காது.
மத்திய அரசின் முடிவினை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு 21-9-2011 அன்று தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா அணு உலை எதிர்ப்பாளர்களையெல்லாம் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, அதற்கு மறுநாள் 22-9-2011 அன்று அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி, அதிலே மத்திய அரசு உடனடியாக கூடங்குளம் திட்டப் பணிகளை நிறுத்த வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றியதோடு, மூத்த அமைச்சர் ஒருவர் தலைமையில் போராட்டக் குழுவினரோடு பிரதமரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொடுத்தார்.
இப்படியெல்லாம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜெயலலிதா, பின்னர் என்ன காரணத்தாலோ தன்னுடைய முந்தைய நிலையை மாற்றிக் கொண்டார்.
காவல் துறையினரை மட்டுமே நம்பி ஆட்சி செய்த எந்த ஆட்சியும் நிலைத்ததில்லை என்பதை இந்த மெஜாரிட்டி அதிமுக அரசு உணரவேண்டும்.
எப்படியோ இதுவரை நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்பதைப் போல அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.
தொடக்கத்தில் போராட்டக்காரர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய ஜெயலலிதா தற்போது முதலமைச்சரைச் சந்திக்க வந்த போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச மறுத்தது- மன்னிக்க முடியாத- முன் யோசனையற்ற தவறு.
மத்திய அரசும், மாநில அரசும் போராட்டக் குழுவினரின் முக்கிய பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து வைத்துப் பேச வேண்டும். ஆபத்து எதுவும் ஏற்படாமல் அரசினால் எடுக்கப்பட வேண்டிய அத்தனை நடவடிக்கைகளையும் செய்து கொடுப்போம் என்று அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். உத்தரவாதம் அளிப்பதோடு அவற்றை செய்து முடிக்கவும் ஆவண செய்ய வேண்டும்.
போராட்டம் நடத்துவோரும் நமது மக்கள்தான். அவர்களை ஏதோ விரோதிகள் என்பதைப்போல இந்த அரசு நினைக்கக் கூடாது. போராட்டம் நடத்துவோரும், அந்த அணு உலை தொடங்குவதற்கு முன்பாகவே தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தால், இத்தனை கோடி ரூபாய்களை செலவழித்திருக்கத் தேவையில்லை.
ஆனால் பல ஆண்டு காலமாக பணிகளை செய்து முடித்துள்ள நிலையில், இருதரப்பினருக்கும் உகந்த முறையில் சுமூகமாக இதைத் தீர்ப்பதற்கு வழி காண வேண்டுமே தவிர, இந்த மெஜாரிட்டி அரசு தங்களிடம் காவல்துறை இருக்கிறது என்ற நினைப்போடு, போராட்டத்தை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று கருதிடக்கூடாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
மத்திய அரசும், மாநில அரசும் போராட்டக் குழுவினரின் முக்கிய பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து வைத்துப் பேச வேண்டும். ஆபத்து எதுவும் ஏற்படாமல் அரசினால் எடுக்கப்பட வேண்டிய அத்தனை நடவடிக்கைகளையும் செய்து கொடுப்போம் என்று அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். உத்தரவாதம் அளிப்பதோடு அவற்றை செய்து முடிக்கவும் ஆவண செய்ய வேண்டும்.
அது சரி மத்திய அரசியே ஆட்டுவிக்கும் அதிகாரம் படைத்த கட்சிகள் இதுவரை மத்திய அரசை இந்த பிறேச்சனையில் நெருக்காதது ஏன் மற்ற விஷயத்துக்காக டெல்லிக்கு பறக்கும் இவர்கள் இதற்காக என்ன செய்தார்கள் கடிதம் எழுதுவதை தவிர
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- திமுகபண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011
balakarthik wrote:மத்திய அரசும், மாநில அரசும் போராட்டக் குழுவினரின் முக்கிய பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து வைத்துப் பேச வேண்டும். ஆபத்து எதுவும் ஏற்படாமல் அரசினால் எடுக்கப்பட வேண்டிய அத்தனை நடவடிக்கைகளையும் செய்து கொடுப்போம் என்று அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். உத்தரவாதம் அளிப்பதோடு அவற்றை செய்து முடிக்கவும் ஆவண செய்ய வேண்டும்.
அது சரி மத்திய அரசியே ஆட்டுவிக்கும் அதிகாரம் படைத்த கட்சிகள் இதுவரை மத்திய அரசை இந்த பிறேச்சனையில் நெருக்காதது ஏன் மற்ற விஷயத்துக்காக டெல்லிக்கு பறக்கும் இவர்கள் இதற்காக என்ன செய்தார்கள் கடிதம் எழுதுவதை தவிர
சென்ற ஆட்சியில் பொது மக்கள் அல்லது அரசு துறை இது மாதிரி எதாவது போராட்டம் என்று சொன்னால் உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர் சென்று பேச்சு நடத்தி உடனே தீர்த்து வைப்பார் அல்லது அவர்கள் முதல்வரை சென்று சந்தித்து பின்னர் பிரச்சினை தீரும், ஆனால் இன்று?
தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
திமுக wrote:சென்ற ஆட்சியில் பொது மக்கள் அல்லது அரசு துறை இது மாதிரி எதாவது போராட்டம் என்று சொன்னால் உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர் சென்று பேச்சு நடத்தி உடனே தீர்த்து வைப்பார் அல்லது அவர்கள் முதல்வரை சென்று சந்தித்து பின்னர் பிரச்சினை தீரும், ஆனால் இன்று?
அது மாநில அரசு பிறேச்சனையா இருக்கும் இதுல மத்திய அரசுத்தானே முக்கிய பங்கு வகிக்கிறது மத்திய அரசுல இன்னைக்கு வரைக்கும் தமிழக கட்சிகள் சில கூடணியிலத்தானே இருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கோட்டையை மட்டுமே பிடிக்கும் கட்சிகள் இருக்கும் வரை
இதுபோல் வேடிக்கையான காட்சிகள் இருக்கவே செய்யும்.
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க நினைக்கும்
கட்சிகள் இன்று ஒன்றாவது இருக்கா?
இதுபோல் வேடிக்கையான காட்சிகள் இருக்கவே செய்யும்.
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க நினைக்கும்
கட்சிகள் இன்று ஒன்றாவது இருக்கா?
யினியவன் wrote:மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க நினைக்கும்
கட்சிகள் இன்று ஒன்றாவது இருக்கா?
மக்கள் மனதில் இடத்தை பிடிப்பதினால் என்ன பயன் இருக்கு நல்ல சென்டர் ஏரியாவுல இடைத்தை பிடிசாவாவது பிரயோஜனம் இருக்குனுத்தானே அந்த இடத்துக்கு போட்டி போடுறாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|