புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
48 Posts - 43%
heezulia
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
2 Posts - 2%
prajai
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
414 Posts - 49%
heezulia
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
28 Posts - 3%
prajai
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10கவிதைகளின் சங்கமம்.............. Poll_m10கவிதைகளின் சங்கமம்.............. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகளின் சங்கமம்..............


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 06, 2012 3:51 pm

நீ......

எனக்குப் பிடித்த
பூக்களின்
பட்டியலில்
உன்னையும்
சேர்த்துக்கொள்கிறேன்
நான்
உனக்குப் பிடித்த
விளையாட்டு
பொம்மைகளின்
வரிசையில் என்னையும்
எழுதிக்கொள்கிறாய் நீ......


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
வீணை........
நான்
மீட்டுகிற வீணையின்
கம்பிகள்
என் விரல்களை
அறுத்துவிடுவதை பற்றி
எனக்கு
கவலை இல்லை.
கம்பிகளையே
அறுத்து விடுகிற
உன்னைப் பற்றித்தான்......

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

உன் பார்வையால்
வார்தைகளால்
காயப்படுத்துவாய்.
பார்வைகளால்
மருந்திடுவாய்.
மருந்திற்கு
ஆசைப்பட்டு
காயப்பட்டுக்கொண்டே
இருக்கிறேன் .

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கண்கள்
வாசிக்கிற
உன்
கண்கள்
மலர்கிற அழகில்
காணாமல் போகும்
கவிதை
எழுதிய
என் கர்வம்......


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


நன்றி ......ந.ராம் குமார்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 06, 2012 3:52 pm

ஒரு கணப் பொழுதில்...

இக்கணம்
எங்கேனும் ஒரு மூலையில்
ஏதேனுமொரு எரிநட்சத்திரம்
சமுத்திரத்தில் வீழ்ந்து
சங்கமமாகியிருக்கலாம் !

இக்கணம்
ஒரு பூ உதிர்ந்திருக்கலாம் ,
ஒரு பூ மலர்ந்திருக்கலாம் ,
எறும்பூரக் கற்குழிந்த கணம்
இதுவாகக் கூட இருக்கலாம் !

இக்கணம்
ஏதோவோர் எல்லையில்
மலையொன்று மண்மேடாகியிருக்கலாம்,
மரமொன்று வேருடன்
வீழ்ந்திருக்கலாம் !

இக்கணம்
இதழ் விரிக்கும் - எனதிந்தக்
கவிதையைப் போல
யாரேனும் ஒரு தாய்க்கு
ஒரு அழகிய இளங் கவிதை பிறந்து
'அம்மா' என்றழுதிருக்கலாம் !

இக்கணம்
எங்கேனுமொரு மூச்சு
நின்று போயிருக்கலாம் ,
எங்கேனுமொரு மூக்கு
புதுக் காற்றை சுவாசித்திருக்கலாம் !

புயலடித்து ஓய்ந்த கணம்,
பூகம்பம் வெடித்த கணம்,
முதல் தூறல் விழுந்த கணம்,
மழை நின்று போன கணமென
ஒரு கணத்தில்
எல்லாமும் நிகழ்ந்திருக்கலாம் !

அந்நியனின் ஆக்கிரமிப்பில்
வதைப்பட்டு,
வாழ்விழந்து,
அனாதையாகி , அகதியாகி,
தாயொருத்தி பிள்ளையிழந்து,
தாரமொருத்தி விதவையாகி
விம்மியழும் ஒரு சொட்டுக்
கண்ணீர்த்துளி நிலத்தில் வீழ்ந்த
கணமாகவும் இது இருக்கலாம் !

ஏழு வானங்களையும்
தடைகளெதுவுமின்றி தாண்டிப்போன
ஒரு ஷஹீதின் உயிருக்கு
வானவர்களும் அழகிய தேவதைகளும்
மணம் நிறைந்த
மரணமின்றிய வாழ்வுக்கு
கதவு திறந்த கணம்
இதுவாகக் கூட இருக்கலாம் .......

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இதயங்கள் தேவை !

பூத்திருந்த பூவொன்று
செடிவிட்டுக் கழன்று
புல் மீது விழுந்தென்னெஞ்சில்
தீப்பற்ற வைத்தது !

கூட்டிலிருந்து
காகம் கொத்திச்
சொண்டகன்று
நிலம் வீழ்ந்தென்
கரண்டிப் பால் நக்கிப்
பின்னிறந்த அணில்குஞ்சு
என்னிதயத்தில்
அமிலமள்ளிப் பூசியது !

பாதை கடக்கமுயன்று
கண்முன்னே கணப்பொழுதில்
மோதுண்டு மரணித்த தாயும்

குருதிக்கோடுகளைச்
சிரசில் ஏந்தி,
லேசான புன்னகையை
முகத்தில் கொண்டு
பெற்றவளின்
கரத்திலிருந்திறந்த
கைக்குழந்தையும்
என்னுள்ளத்தைச்
சிலுவையிலறைந்தனர் !

நம்பவைத்து நயவஞ்சகனாகிய
நண்பனும்,
உரிமையெடுத்து உருக்குலைத்த
உறவினரும்
என்மனதைக் கழற்றியெடுத்துக்
கூர்ஈட்டி குத்திக்
கொடூரவதை செய்தனர் !

புராணக்கதைகளில் போல
படைத்தவன் முன் தோன்றி
வரம் தரக்கேட்பானெனின்,
செத்துப்பிழைக்க-எனக்குப் பல
இதயங்கள் வேண்டுமென்பேன்...
இல்லையெனில்-உடம்புக்குப்
பாரமெனினும்,
எதையும் தாங்கும்
பாறாங்கல் இதயங்கேட்பேன்...!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

காதலென்றும் தலைப்பிடலாமிதற்கு !

நெருப்பு விழுங்கும் பறவையொன்றென்
நிழலிலேயே
உட்கார்ந்திருக்கிறது !

உங்கள் கனல்களை
அதன்மேல் கொட்டலாம்,
சாபங்களை அள்ளியெறியலாம் ;
அத்தனையையும் விழுங்கியது - நிலம்
அதிர அதிரச் சிரிக்கும் !

அதன் அருகாமை
வெப்பம் பரவியென் உடலசையுமெனில்
ஒருகணம் உற்றுப்பார்க்கும்,
விழிகளிரண்டும் எரிகற்களென எச்சரிக்கும்
நொடியில் நான் பொசுங்கிப்போவேன் !

சீண்டிப்பார்க்கலாம் - அதனை
சிரிக்கவைக்கவும் முயற்சிக்கலாம்,
தலைகோதித் தடவலாம்,
செல்லமாய்ச் சிறிது தட்டக்கூடச் செய்யலாம்;
அத்தனையையும்
மெதுவாய்ப் பார்த்து வாய்திறந்து
உங்களை முழுதாக உள்வாங்கிக் கொள்ளும் !

நுனிவிரல் தீண்டி
உடல்முழுதும் பொசுங்கிக் கருகும்
வேதனையை சிரிப்பால் உதறுவீர்களாயின்...

இதுவரையில் காதலிக்காதவர் பட்டியலில்
நீங்கள் இருப்பதாக
உறுதிபட உரக்கச் சொல்வேன் !

நெருப்பு விழுங்கும் பறவையது
தொடர்ந்தும் தன் சிறகினை உதறும் !

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

எனது துயரங்களை எழுதவிடு...!

பொன்மஞ்சளின் தீற்றலோடு

இளஞ்சிவப்பு மலருரசிச்செல்லும்

மெல்லிய வாடை சுமந்த காற்று

உன் தேநீர்க்கோப்பையின்

ஆவிகலைத்துச் செல்லும்

இக்கணப்பொழுதில்

எனது கவிதைகளில்

சோகம் அழித்து,

காதலையும்,கனவுகளையும்

அழகாய்ப் பதித்திட

அன்பாய்க் கட்டளையிடுகின்றாய் !


ஐரோப்பாவின் குளிர்ந்த தெருக்களில்

உலாவி நடக்கவும்,

சோம்பிப்போய்ப் படுக்கையில்

குலாவிக்கிடக்கவும்,

தேவதைகளின் தாலாட்டில்

உலகம் மறக்கவும்

உனக்கு வாய்த்திருக்கிறது !

நாளைக்கே

நானும் கொல்லப்படலாம் ;

சோகம் தவித்துக்கனக்குமெனது

மெல்லிய மேனியில்

மரணம் தன் குரூரத்தை - மிக

ஆழமாக வரையவும் கூடுமான

அக்கணத்திலும்...

உனது கோப்பைகளில் திரவங்கள்

ஊற்றி வழிந்திட,

தேவதைகள் இதழ்ரேகை

தீர்க்கமாய்ப் பதிந்திட,

மாலை வேளைகளுனக்குச்

சொர்க்கத்தை நினைவுறுத்தும் !


வாழ்க்கை

வளர்ப்பு நாய்க்குட்டி போல்

வசப்பட்டிருக்கிறதுனக்கு !


உலகச்சோகங்களனைத்தும்

கரைத்தூற்றப்பட்டு

நான் மட்டும் வளர்ந்தேனோ...?

ஒரு கோடித்துயரங்கள்

தீப்பாறைக் குழம்புகளாயென்

உள்ளே கிடக்கையில்

எனது விரல்களிலிருந்து மட்டுமென்ன

செந்தேனா வடியும் ?


எதிர்ப்பார்ப்பு
இனியவளே!
என்னுடன்
நீயில்லாத
ஞாயிறு விடுமுறையே
வேண்டாம் என்றேன்!
நீ
நடைப் பயிலாத
கவிதையே
எழுத மாட்டேன் என்றேன்!
தோல்வி நேரத்தில்
தோள்க் கொடுக்க
நீயில்லை என்றால்
தோள்களே வேண்டாம் என்றேன்!
மடைத் திறந்த வெள்ளமாக
மகிழ்ச்சி வந்தாலும்
நீயில்லை என்றால்
அதுவும் வேண்டாம் என்றேன்
அது சரி!
நீயில்லாத வாழ்க்கை மட்டும் எதற்கு?


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
வெளிச்சம்
இனியவளே!
கண்னில்
வலியிருந்தால்
கண்ணீர்க் காட்டி விடும்!
உன்னில்
காதலிருந்தால்
கண்ணில் காட்டி விடும்!
உன் பேச்சுக் கேட்காமல்
நான் பேச மறந்தேன்!
உலகம் உறங்கினாலும்
உள்ளம் உறங்கவில்லை...
சத்தமின்றி
தினங்கள் பிறப்பதுப் போல
நித்தம் செத்து பிறக்கிறேன்
உன் குரல் கேட்க்காமல்!
வழி தெரிய
விழி உள்ளதுப் போல
வாழ்க்கை வழி தெரிய
உன் விழி வேண்டுமே!
உன்னிதயத்தில்
தொலைந்த
என்னிதயத்தை
பத்திரமாக வைத்து கோள்.....!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

காதல் கட்டுரை

இனியவளே!
காதலில்
ஜெயம் காண,
நான் எழுதிய
ஆராய்ச்சி கட்டுரைகள்
சில இதோ!
கட்டுரைக்கு
முற்றுரை இருக்கும்.
என் காதல் கட்டுரைக்கு
முற்று புள்ளி இல்லை.
தொடர்ப்புள்ளிதான்.
உன்னுடன் கூடிய
தொடர்ப்புள்ளி....
இனியவனின்
காதல் சோலையில்
மலரும்
கவிதை ரோஜாக்கள்
மத்தியில்
இனியவளின்
காதல் பயணங்கள்....

நன்றி எம்.ரிஷான் ஷெரீப்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 06, 2012 3:58 pm

முத்தம்

இன்னும்
உனக்கு தராத
மிச்ச முத்தங்கள்
நிரம்பி இருக்கிறது
என் உதடுகளில்...

எப்பொழுது
வெள்ளப்பெருக்காகும்
தெரியவில்லை!

எச்சரிக்கையாக இரு...

உன் உதடுகள்
தாங்குமா?
என் முத்தத்தை...

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


*
நீ
தனியாக நடந்து போகாதே
ட்ராபிக் ஆகுமென்றேன்!

*
நீ
மெளனமாக இருந்தால்
தாய்மொழியே
தற்கொலை செய்து கொள்ளுமென்றேன்!

*
நீ
பேசும்போது
செவிடனும்
ஒட்டுக்கேட்கிறான் என்றேன்!

*
நீ
ஒருமுறை தும்மிப்பார்
வாசலில் கியூ கணக்குல்
டாக்டர்கள் நிற்பார்கள் என்றேன்!

*
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு
பெரிய நகைச்சுவையை
ரசித்தது போல்
சிரிக்கிறாய்...!

*
புரிந்துகொண்டு சிரிக்கிறாயா...?
புரியாமல் சிரிக்கிறாயா...?

நான் சொல்வது
பொய்யென்று சிரிக்கிறாயா...?

ஏதோ ஒன்று
எப்படியோ
நீ சிரிக்கிறாய்...
அது போதும்

அட!
அதற்கும் சிரிப்பா?

நன்றி டி.ஆர்.தாசன்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Sep 06, 2012 4:47 pm

அனைத்தும் ரசிக்கபடவேண்டிய கவிதைகளே சூப்பருங்க

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 06, 2012 5:09 pm

அனைத்தும் அருமையான கவிதைகள்



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக