புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
56 Posts - 50%
heezulia
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 22, 2012 11:55 am

First topic message reminder :

வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 ImagesCAFV19FA
’வைகோ’’… இந்தப் பேரைக் கேட்டாலே எழுச்சியடையும் இளைஞர் கூட்டம் இருந்தது ஒரு காலம். ம.தி.மு.க.வை நிஜமாகவே தமிழகத்திற்கான மறுமலர்ச்சியாக படித்தவர் முதல் நடுநிலைமையாளர்கள் வரை நம்பியது ஒரு காலம். பம்பரம் என்ற தேர்தல் சின்னம் மிக வேகமாய் மக்களிடம் பரவியது ஒரு காலம்.

ஆனால் இன்றைய நிலை?...

வைகோ என்ற தனிப்பெரும் சக்தி அறிமுகமான அளவுக்கு ம.தி.மு.க. என்ற பேரும், பம்பரம் என்ற சின்னமும் மக்களிடம் நிலைப்படாமல் மறந்தேபோனது. தேர்தல் சின்னம் பலமிழக்கும் போது கட்சி பலமும் கபளீகரமாகிப்போகும். (வேட்பாளரைப் பார்க்காமல் வெறும் சின்னத்துக்காக மட்டுமே வாக்களிக்கும் கூட்டம் இன்னமும் மாறவில்லை நம் நாட்டில்) கட்சி பலம் இல்லாதபோது அரசியல் பலமும் அழிந்து போகக்கூடும். அரசியல் பலமின்றி வெறுமனே ஒரு தனிமனிதரின் செல்வாக்கினால் மட்டும் இங்கே பெரிதாய் மக்களுக்காக எதையும் சாதித்து விடமுடியாது.

ஒரு காலத்தில் தி.மு.க. என்ற மிகப்பெரிய திராவிடக்கட்சியின் போர்வாளாய், பிரச்சாரப்பீரங்கியாய், தளபதியாய், கலைஞரின் அன்புத்தம்பியாய் விளங்கியவர்தான் வை.கோபால்சாமி என்ற ‘’வைகோ’’. எப்படி அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் ராஜதந்திரத்துடன் கலைஞர் கட்சியைக் கைப்பற்றினாரோ, அதே ராஜதந்திரத்துடன் தனக்குப்பிறகு கட்சி தனது வாரிசுகளுக்கே சொந்தம் என்ற நிலையை உருவாக்கியதுதான் தி.மு.க.வை விட்டு வைகோ வெளியேறியதற்கான ஒரே காரணம். தி.மு.க.விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார் என்பதே வைகோவின் வளர்ச்சியைப்பார்த்து மிரண்ட கலைஞரால் வரலாற்றில் பதியப்பட்ட செய்தி. அவர் வெளியேற்றப்பட்டாரோ… இல்லை வெளியேறினாரோ… எப்படியிருந்தாலும் சரி… அந்நேரத்தில் தி.மு.க… இல்லையன்றால் அ.தி.மு.க. என்று சலித்துப் போயிருந்த தமிழக மக்களுக்கு வைகோ ஒரு மாபெரும் மாற்று சக்தியாகத் தோன்றத் தொடங்கியது, காலம் அவருக்கு வழங்கி அவர் சரியாய் உபயோகப்படுத்திக் கொள்ளாத மிகப்பெரிய வாய்ப்பு.

1944ல் பிறந்த வைகோ, 1994ல் ம.தி.மு.க என்ற தனிக்கட்சியின் தலைவரானார். தனிக்கட்சி தொடங்கிய வைகோவின் பின்னால் அப்போது அணி திரளத்தொடங்கிய இளைஞர் கூட்டம் தமிழக வரலாற்றில் மறக்கமுடியாத செய்தி. அவருடைய கட்சியின் கொள்கைகளை விளக்க தமிழகம் முழுவதும் முதன் முதலில் அவர் மேற்கொண்ட நடைப்பயணம் அவருக்கு வழங்கிய அரசியல் வளர்ச்சியை பிற்காலத்தில் அவர் மேற்கொண்ட எந்த நடைப்பயணமும் வழங்கவில்லை. இனிமேலும் அவர் எத்தனை நடைப்பயணம் மேற்கொண்டாலும் எதுவும் நடக்கப்போவதுமில்லை.

அக்காலக்கட்டத்தில் வைகோவின் வளர்ச்சியைப் பார்த்த நடுநிலையாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் அனைவருமே தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டுக்கும் மாற்றாக மக்கள் வைகோவை ஆதரிக்கத்தொடங்கியதால், வெகுவிரைவிலேயே வைகோ தமிழக முதல்வராகும் நிகழ்வு நடக்கும் என்றே நம்பினர். (அவ்வாறு நம்பிய கூட்டத்தில் நானும் ஒருவன். ஆனால் அப்போது எங்களுக்குத்தெரியாது அதை வைகோ இப்படி புஷ்வானமாக்குவாரென்று!)

வைகோ எதிர்கொண்ட அப்போதைய சட்டசபைத் தேர்தலில் அவர் வெளியிட்ட ஓர் அறிக்கைதான் அவருடைய அரசியல் அழிவுக்கான பிள்ளையார் சுழியைப் போட்டது. ‘’ம.தி.மு.க ஜெயித்து ஆட்சியைப் பிடித்தால், ஜெயலலிதா மற்றும் அனைத்து அ.தி.மு.கவினரிடமிருந்தும் அவர்கள் ஊழல் செய்த அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பகிரங்கமாக அறிவித்து தேர்தலை எதிர்கொண்டார். அந்தத்தேர்தலில் ம.தி.மு.க பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை. அ.தி.மு.க.வும் ஜெயலலிதாவின் ஊழலினால் அத்தேர்தலில் படுதோல்வியைத் தழுவியது. அதன் பிறகு வைகோவின் அரசியல் களம் மெள்ள மெள்ள வளர்ச்சியடைந்து கொண்டேயிருந்தது. வைகோ என்ற தனிமனிதர் ஒரு நேர்மையாளராய், புரட்சியாளராய், தமிழினத்திற்காக போராடும் ஒரு தலைவனாய் மக்கள் மனதில் ஆழப்பதிந்து போனார். கறைபடியாத ஒரே அரசியல்வாதியாய் அவருடைய பிம்பம் மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்திருக்கிறது.

மிகச்சிறந்த அரசியல் அடித்தளம் கிடைத்தும், வைகோ அதைச் சரியாக உபயோகப்படுத்தத் தவறிய மனிதராகிப்போனார். 2001ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது. 2002ல் வைகோ தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப்பேசியதாக போடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதன் பிந்தைய நிகழ்வுகள்தான் மெள்ள மெள்ள வைகோவின் அரசியல் வளர்ச்சிக்கு மூடுவிழா நடத்தத்தொடங்கியது.

சிறையிலடைக்கப்பட்ட வைகோவை அரசியல் சாணக்கியர் கலைஞர் ஒருசில அரசியல் ஆதாயத்துக்காக சந்தித்துப்பேசி ஆதரவளித்தார். அதன் பின்னர் வைகோ சிறையிலிருந்து வெளியில் வந்ததும் கலைஞருடனே பல பொது மேடைகளில் தோன்றினார். பாசத்தம்பி… அப்படி இப்படியென்று மேடையிலேயே கண்ணீர் விட்டு பல பச்சோந்தி நாடகங்கள் அரங்கேறின. அப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். ஏற்கனவே கலைஞருடன் மீண்டும் இணைந்து தோன்றியதில் வைகோவின் இமேஜ் மக்கள் மனதில் சரியத்தொடங்கியிருந்தது. வைகோவும் ஒரு சாதாரண சந்தர்ப்ப அரசியல்வாதிதானா என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் முளைத்தது. இது எல்லாவற்றுக்கும் மேலாக தி.மு.க. கூடாரத்திலிருந்த வைகோ கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க கூடாரத்துக்குத் தாவினார். வைகோ தனது அரசியல் வளர்ச்சியை தானே குழி தோண்டி புதைத்துக்கொண்டது அப்போதுதான்.
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Vaiko

தி.மு.க விலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கி, மீண்டும் தி.மு.க.வுடன் ஒரே மேடையில் தோன்றி, இறுதி நிமிடத்தில் அத்தனை நாள் எதிர்த்து வந்த ஜெயலலிதாவின் அ.தி.மு.க கூட்டணிக்குத்தாவி… இப்படி திடீரென்று பைத்தியக்காரத்தனமான பல முடிவுகளை அமல்படுத்தி ம.தி.மு.க. என்ற ஒரு கட்சியை மீட்டெடுக்க முடியாத அதள பாதாளத்துக்குள் தள்ளியது வைகோதான். மக்கள் வைகோ மீது வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் மறைந்து போனது. வைகோ ஒரு மறுமலர்ச்சி மாற்றுசக்தியல்ல என்ற நிலைமை வைகோவாலேயே உருவாக்கிக் கொள்ளப்பட்டது.

இன்று விஜயகாந்த் மக்களால் ஒரு மாற்று சக்தியாய் உணரப்படுகிறார். ஆனால் இந்நேரம் மிகப்பெரிய சக்தியாய் வளர்ந்திருக்கவேண்டிய ம.தி.மு.க அழிவின் விளிம்புக்கு வந்தாகிவிட்டது. அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்துக்கொண்டு தேர்தலில் தோற்றபின்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாய் வைகோவுக்கு தோன்றிய ஞானோதயங்கள் எல்லாம் மக்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது. அரசியல் பல்டிகளால் தானே கெடுத்துக்கொண்ட தனது இமேஜை நிலைநிறுத்த தொடர்ந்து ஒரே கூடாரமாய் அ.தி.மு.க வுடனே இருந்த காலகட்டத்தில்தான் ம.தி.மு.க தனது தனித்துவத்தை சுத்தமாய் இழந்து போனது. கட்சியையே ஜெயலலிதாவின் காலடியில் அடகு வைத்து நசுக்கிய கதையாகிவிட்டது. இன்று இறுதியாய் ஜெயலலிதாவாலும் ம.தி.மு.க கைவிடப்பட்டாகிவிட்டது.

வைகோவின் இன்றைய நிலை என்ன? வைகோ ஒரு சிறந்த பேச்சாற்றல் மிக்க மனிதர். நாடாளுமன்றத்தில் கருத்துப்பூர்வமான விவாதங்களை எடுத்து வைக்கும் திறமைமிக்க மனிதர். இளைஞர்களை இப்போதும் தன்வசமிழுக்கும் நாவன்மை மிகுந்தவர். இவ்வளவும் வைகோ என்ற தனிமனிதனுக்கு மட்டுமே இன்னமும் மீதமிருக்கிறதேயொழிய ம.தி.மு.க.வும், பம்பரமும் காணாமல் போய் வெகு காலமாகிவிட்டதால் அரசியல் பலம் எதுவுமின்றி வெறும் ஈழ ஆதரவு கோஷமிட்டுக்கொண்டிருப்பது மட்டும்தான் இனி வைகோவின் வேலையா?
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 VaikoObama_02_70251_218

வைகோ என்ற தனிப்பெரும் சக்தி நிச்சயமாய் முடிந்து போன சகாப்தமல்ல. ஆனால் ம.தி.மு.கவும் பம்பரமும் சத்தியமாய் மீட்டெடுக்க முடியாத ஒரு முடிந்து போன சகாப்தமே…!
நன்றி_கதம்பமாலை



செந்தில்குமார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 22, 2012 1:17 pm

இரா.பகவதி wrote:குரு வைகோவின் கொள்கை பரப்பு செயலார் நமது ரா ரா அண்ணா , இந்த விடயம் உங்களுக்கு தெரியாதா புன்னகை
தெரியுமே பகவதி.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 22, 2012 1:20 pm

விநாயகாசெந்தில் wrote:
இரா.பகவதி wrote:
விநாயகாசெந்தில் wrote:
இரா.பகவதி wrote:வைகோ பற்றிய தகவலா இங்கு ரா ரா அண்ணா இப்போது இல்லாமல் போயிட்டாரே சிரி


ஏன்னேன்?????? கண்ணடி

ராஜசேகர் அண்ணாவுக்கு வைகோவின் கருத்துகளும் கொள்கைகளும் அதிகம் பிடிக்கும் மேலும் அதை பற்றி அதிகமாக பேசுவார் சிரி
அவரும் நம்மலபோல தானா ஒன்னும் புரியல
சியர்ஸ்


யினியவன் wrote:
இரா.பகவதி wrote:குரு வைகோவின் கொள்கை பரப்பு செயலார் நமது ரா ரா அண்ணா , இந்த விடயம் உங்களுக்கு தெரியாதா புன்னகை
தெரியுமே பகவதி.

சிரி

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 22, 2012 4:53 pm

நல்ல பகிர்வு ... :வணக்கம்:

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 22, 2012 6:33 pm

இரா.பகவதி wrote:
விநாயகாசெந்தில் wrote:
இரா.பகவதி wrote:
விநாயகாசெந்தில் wrote:
இரா.பகவதி wrote:வைகோ பற்றிய தகவலா இங்கு ரா ரா அண்ணா இப்போது இல்லாமல் போயிட்டாரே சிரி


ஏன்னேன்?????? கண்ணடி

ராஜசேகர் அண்ணாவுக்கு வைகோவின் கருத்துகளும் கொள்கைகளும் அதிகம் பிடிக்கும் மேலும் அதை பற்றி அதிகமாக பேசுவார் சிரி
அவரும் நம்மலபோல தானா ஒன்னும் புரியல
சியர்ஸ்


யினியவன் wrote:
இரா.பகவதி wrote:குரு வைகோவின் கொள்கை பரப்பு செயலார் நமது ரா ரா அண்ணா , இந்த விடயம் உங்களுக்கு தெரியாதா புன்னகை
தெரியுமே பகவதி.

சிரி
முரளி அண்ணா, உங்க கருத்தை ஆவலுடன் எதிர்பார்கிறேன் கண்ணடி



செந்தில்குமார்
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Aug 22, 2012 6:36 pm

முடிந்து போனதாக சொன்ன சகாப்தங்கள் தான் பின்னாளில் மிக நீண்ட நாட்கள் மிளுரி உள்ளது . வைகோ ஒரு சகாப்தம் மீண்டும் மீண்டு வரும் பீனிக்ஸ் பறவை

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Sep 20, 2012 8:45 pm

வைக்கோ தனிமனிதனாய் அரசியல் களத்தில் நின்று கூட்டணியில்லாமல் தேர்தலில் போட்டியிட்டவரை அவருக்கு செல்வாக்கு ஏறுமுகத்திலே இருந்தது ! தேர்தலில் ஒரு சீட் கூட பிடிக்காவிட்டாலும் அவர் மீது எதிர்காலத்திற்கான ஒரு நம்பிக்கை ; மக்கள் மத்தியில் குறையாத மதிப்பு இருந்தது ! ஆனால் அதை வைக்கோ தவறாக புரிந்து கொண்டு கூட்டணி மூலமாக ஒரு சில பதவியை கைப்பற்றி கட்சியை வளர்க்கலாம் என நினைத்தது அவரை மக்களிடமிருந்து பின்னோக்கி தள்ளிவிட்டது !

இன்றைய பலனை கருதி எதிர்கால பலனை இழக்கிறார் வைக்கோ ! ஒரு சீட் கூட வராவிட்டாலும் தனித்தே போட்டியிடுவாரானால் கலைஞருக்கு பின்பு ஒரு மாற்று சக்தியாவார் !

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 9:13 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:வைக்கோ தனிமனிதனாய் அரசியல் களத்தில் நின்று கூட்டணியில்லாமல் தேர்தலில் போட்டியிட்டவரை அவருக்கு செல்வாக்கு ஏறுமுகத்திலே இருந்தது ! தேர்தலில் ஒரு சீட் கூட பிடிக்காவிட்டாலும் அவர் மீது எதிர்காலத்திற்கான ஒரு நம்பிக்கை ; மக்கள் மத்தியில் குறையாத மதிப்பு இருந்தது ! ஆனால் அதை வைக்கோ தவறாக புரிந்து கொண்டு கூட்டணி மூலமாக ஒரு சில பதவியை கைப்பற்றி கட்சியை வளர்க்கலாம் என நினைத்தது அவரை மக்களிடமிருந்து பின்னோக்கி தள்ளிவிட்டது !

இன்றைய பலனை கருதி எதிர்கால பலனை இழக்கிறார் வைக்கோ ! ஒரு சீட் கூட வராவிட்டாலும் தனித்தே போட்டியிடுவாரானால் கலைஞருக்கு பின்பு ஒரு மாற்று சக்தியாவார் !
மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா!... வைகோவுக்கு தமிழர்கள் ஆதரவு தரவேன்டும்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 20, 2012 9:25 pm

முடிந்து போகவில்லை என்பது மட்டும் உண்மை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 9:26 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:முடிந்து போகவில்லை என்பது மட்டும் உண்மை

வாலானது தலையாக்கப்படும்.
தலையானது வாலாக்கப்படும்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Oct 02, 2012 8:53 pm

ஒரு நாள் இல்லை ஒரு நாள்...இந்த உலகம் விழிக்காமலா போய்விடும்?...
ஆனாலும் அன்றாவது வைகோ யாருடனும் கூட்டணி போடாமல் இருக்க வேண்டும்...
பார்க்கலாம்...காலம் ஒரு அற்புதமான த்ரில்லர் படம்...



வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 224747944

வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Rவைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Aவைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Emptyவைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 Rவைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக