புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_m10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_m10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_m10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_m10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_m10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_m10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_m10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_m10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_m10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_m10தமிழ் என்பது பக்தியின் மொழி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் என்பது பக்தியின் மொழி!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 14, 2012 10:12 am

திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில், மூவர் முதலிகளின் பெரும்பணி என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் ஆக. ௧௨ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் தலைமையேற்று, பேசியது: தனிநாயகம் அடிகள் தமிழ் மேல் தணியாத காதல் கொண்ட கிறிஸ்தவப் பாதிரியார். இலங்கையில் பிறந்தவர், இன்று உலகத் தமிழ் மாநாடுகள் நடந்து கொண்டிருக்கின்றனவே, அந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்பதற்காக முனைப்புடன் செயல்பட்டவர் தனிநாயகம் அடிகளார். தனிநாயகம் அடிகளார் செய்திருக்கிற ஒரு பதிவை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆங்கிலம் வணிக மொழி, லத்தீன் சட்டத்தின் மொழி, கிரேக்கம் இசையின் மொழி, ஜெர்மன் தத்துவத்தின் மொழி, பிரெஞ்சு தூது மொழி என்று கூறிச் சென்ற தனிநாயகம் அடிகளார் தமிழைப் பற்றி என்ன கூறினார்? என்று பார்த்தால் ஆச்சரியப்பட்டு போவோம்.

இத்தனைக்கும் அவர் கிறிஸ்தவ பாதிரியார். இலங்கையில் பிறந்தவர், இன்று உலகத்தமிழ் மாநாடுகள் நடந்து கொண்டிருக்கின்றனவே, அந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்பதற்காக முனைப்புடன் செயல்பட்டவர் தனிநாயகம் அடிகளார். இந்த பாதிரியார் குறிப்பிடுகிறார், தமிழ் என்பது பக்தியின் மொழி என்று. தமிழ்தான் பக்தியின் மொழி என்றால், அதற்கு காரணகர்த்தாக்கள் யார்? நதி மூலம் ரிஷி மூலத்தைப் போலவே தமிழ் மொழி பக்தி மொழியானது எங்கிருந்து என்று பார்த்தால், அது எங்கே போய் நிற்கும் என்றால் மூவர் முதலிகளிடம் போய் நிற்கும்.

தமிழும் மதமும் இணைபிரியாத தண்டவாளங்களைப் போல. சமயம் என்று பேசுகிறோமே எது சமயம்? மதம் என்று சொல்கிறோமே எது மதம்? மதம் என்பது கொள்கை, நான் இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்பது கொள்கை. ஆனால், சமயம் கொள்கை அல்ல, சமயம் என்பது நெறி. தொல்காப்பியம் தொடங்கிய பழந்தமிழ் இலக்கிய நூல்கள் எதிலும் மதம் என்கிற சொல்லாட்சி இல்லை. "சமயம்' என்கிற வழக்குதான் காணப்படுகிறது. மதம் என்ற சொல், கொள்கையை மட்டும் குறிக்கும் பொதுச் சொல். சமயம் என்பது கொள்கையை மட்டுமின்றி, அதற்கும் மேலான ஒரு நெறிப்பாட்டைக் காட்டும் சிறப்புடையது.

சைவத்தை கூட சமயம் என்று ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் அது நம்மை நெறிப்படுத்தும் வழி என்பதால். உயிர் காப்பது சமயம், மனதை நெறிப்படுத்துவது சமயம். சமயத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள்தான் சமயக்குரவர்கள் ஆனார்கள், அந்த சமயக்குரவர்கள் பற்றிய கருத்தரங்கம்தான் இங்கே நடைபெற இருக்கிறது.

இதிலே நான் இன்னொரு சிறப்பையும் சொல்ல வேண்டியுள்ளது. சைவநெறியை நிலைநிறுத்திய திருத்தொண்டர்களை, நாயன்மார்களை மூன்று வகையாக அடையாளம் காண்கிறார் சேக்கிழார் பெருமான். மனிதன் பொருட்டு தர்மம் நிலைபெறக் கடவுள் மானுடக்கட்டை தாங்கி அவதரிப்பார் என்பது பொதுவான கருத்து. அதனால்தான் சேக்கிழார் பெருமான்,

திருஞானசம்பந்தரைக் குறிப்பிடும்போது, "சிவம் பெருக்கும் பிள்ளையார் அவதாரம் செய்தார்' என்றும், நாவுக்கரசரைப் பற்றிக் குறிப்பிடும்போது, "இருள் நீக்கி ஒளிவிளக்கு கதிர் --------- கருணீக்கியார் வந்தவதாரம் செய்தார்' என்றும் சுந்தரமூர்த்தி நாயனாரை, "தீதகன்று உலகம் உய்யத் திருஅவதாரம் செய்தார்' என்றும் குறிப்பிடுகிறார்.

ஏனைய திருத்தொண்டர்களை சேக்கிழார் பெருமான் அடையாளம் காட்டும் பாங்கும் சிறப்பானது. வினைவழிப் பிறப்பவர்களைப் பிடித்தார் என்றும், சிறப்புக் கருதி உதயம் செய்தார்' என்றும் பாடியிருப்பார்.

பலருக்கும் களப்பிரர் காலத்தைப்பற்றி இங்கு கருத்து வேறுபாடு உண்டு. களப்பிரர் காலம் சைவ சமயத்துக்கு இருண்ட காலமாக இருந்தாலும், தமிழுக்கும் இருண்ட காலம் அல்ல என்று சிலர் வாதிடுவார்கள். சிலம்பும், மோனையும் பிறத்த காலம் என்று அதைப் போற்றுவார்கள். அவர்களோடு விவாதிக்க நான் தயாராக இல்லை. நிஜமான களப்பிரர் காலம் எது என்று என்னைக் கேட்டால், சமயத்துக்கும், அதனால் தமிழுக்கும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய 20-ம் நூற்றாண்டுதான் களப்பிரர் காலம். சமயம் இல்லாமல் தமிழ் என்று பேசியவர்களின் காலம் கலப்பிரர் காலம் இல்லாமல் வேறென்ன? ------- திருமுறைகளும் இல்லாமல் தமிழ் காப்பாற்றப்பட்டிருக்காது. இன்று தமிழில் நாம் கையாளும் பல அற்புதமான சொல்லாட்சிகள் சமய இலக்கியங்கள் நமக்குத் தந்த கொடை. சமயத்தையும் தமிழையும் பிரிக்கப் பார்த்தார்கள். சைவத்தையும், சமயத்தையும் அழிக்கப் பார்த்தார்கள்.

சமயம் இல்லை என்றும் நெறிகள் இல்லை என்றும் இறைவனே இல்லை என்றும் ஒரு பொய்ப் பிரசாரத்தை அரங்கேற்ற முற்பட்ட 20-ம் நூற்றாண்டுதான் நிஜமான களப்பிரர் காலம். அந்தக் காலத்தில் இருந்து நாம் மீண்டுவிட்டோம் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் காஞ்சி மாநகரத்தில் திருமுறை அருட்பணி அறக்கட்டளை நடத்தும் விழாவில் இத்தனை பேர் சைவத்தின்பால் கூடி நிற்கிறோம் என்பது சைவம் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், நான்மறைகளைப் பற்றியும் சைவ சித்தாந்தத்தைப் பற்றியும் திருமுறைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் திருச்சிற்றம்பலம் என்று உச்சரித்து நாம் கடவுள் வாழ்த்து பாடி நிகழ்ச்சியைத் தொடங்குகிறோம் என்று சொன்னால் நவீன களப்பிரர் காலம் முடிவடைந்துவிட்டது என்பது பொருள்.

சமயம் இல்லாமல் தமிழ் இல்லை, தமிழைக் காப்பாற்றுவது சமயம். சமயத்தைக் காப்பாற்றுவது தமிழ். இவற்றை யாராவது பிரிக்க நினைத்தால் சமயம் இல்லாத தமிழைப்பற்றி யாராவது கூறுவார்களே ஆனால், அல்லது தமிழ் இல்லாமல் சமயத்தைப் பற்றி யாராவது கூறுவார்களே ஆனாலும், ரயில் தடம் புரள்வது போல சமுதாய நெறி தடம் புரண்டுவிடும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார் அவர்.

இக்கருத்தரங்கில் முத்தமிழ் விரகர் என்ற தலைப்பில் முனைவர் அ. அறிவொளியும், தாண்டகவேந்தர் என்ற தலைப்பில் மு. கணபதியும், வன்தொண்டர் என்ற தலைப்பில் முனைவர் திரிபுரசுந்தரியும் பேசினர். முன்னதாக ஓதுவாமூர்த்தி தி. ஆடலரசு இறைவணக்கம் பாடினார். திருமுறை அருட்பணி அறக்கட்டளையின் நிறுவனர் சு. சதாசிவம் வரவேற்றார். அறக்கட்டளைப் புரவலர் வி.கே. தாமோதரன் நன்றி கூறினார்.

(நன்றி - தினமணி)

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Wed Aug 15, 2012 7:39 pm

நாத்திகப் பிரச்சாரம் செய்வதற்காக கம்ப இராமாயணத்தைப் படித்து தீவிர பக்தனாக மாறியதாக கண்ணதாசன் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Aug 15, 2012 10:08 pm

தமிழ் ஆதிமொழி ! அதுவே கடவுளுக்கு உகந்த மொழி என்பதில் சந்தேகமில்லை !

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 12:25 pm

சூப்பருங்க அருமை விளக்கம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக