புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்ப் பாடநூலில் தமிழுக்குத் தட்டுப்பாடா?
Page 1 of 1 •
(நன்றி - தினமணி - தமிழ்ப்பெரியசாமி)
நீதித்துறையும் கல்வித்துறையும் மிகமிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய துறைகளாகும். எந்த நிலையிலும் குற்றம் செய்யாதவனுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிவிடக் கூடாது. அதேபோல, கல்வித்துறையின் தவறான முடிவுகளும் பிழையானவைகளும் கவனிப்பற்ற செயல்பாடுகளும் பள்ளி வளாகத்திற்குள்ளும் வகுப்பறைச் சுவர்களுக்குள்ளும் சென்றுவிடக் கூடாது.
இதனால் சமூகமும் எதிர்காலத் தலைமுறையும் பாதிக்கப்படும். தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறை, பிரச்னைகள் எதுவுமில்லாமல் "அப்பாடா' என்று உட்கார்ந்து மூச்சுவிட்டுப் பல நாள்களாகிவிட்டன. பள்ளிக் கட்டண வழக்கு, ஆசிரியர் கொலை, மாணவர் தற்கொலை, பள்ளிப் பேருந்துப் பிரச்னை என்று மூச்சுமுட்டுகிறவரை பிரச்னைகள் மலையாகக் குவிந்துவிட்டன.
இவையனைத்தும் அவ்வப்போது நிகழும் சமூக நிகழ்வுகள் என்றாலும், இவற்றைக் கட்டுப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் பொதுமக்களுக்கு விளக்கம் தர வேண்டியதும் கல்வித்துறையின் கடமை என்பதை யாரும் மறுக்க முடியாது.
கல்வித்துறை, வல்லுநர்களைக்கொண்டு நன்கு திட்டமிட்டுச் செயல்படுத்தும் நடைமுறைகளுள் பாடநூல் தயாரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். பத்துப்பேர் தயாரிக்கும் ஒரு பாடநூல், பல கோடி மாணவர்கள் கல்வி பயில அடிப்படைக் கருவியாக அமைகிறது. அதனால் அதன் வடிவமைப்பு, உள்ளடக்கம் ஆகியவற்றில் கல்வித்துறை மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்துப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சமச்சீர்க்கல்விப் பாடநூல்களைப் பார்த்தால் நேர்த்தி தெரியவில்லை; நெருடலைத்தான் உணரமுடிகிறது. கிட்டத்தட்ட எல்லாப் பாடநூல்களிலும் பக்கத்துக்குப் பக்கம் இடம்பெற்றுள்ள எழுத்துப்பிழை, கருத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டிக் களைத்துப் போய்விட்டது. இன்னும் பாடநூல்களில் உள்ள பிழைகள் முற்றிலுமாகக் களையப்படவில்லை.
ஒன்று முதல் பத்துவரை இப்போதுள்ள பாடநூல்களுள் தமிழ்ப்பாட நூல்களில்தாம் ஏராளமான பிழைகள் காணப்படுகின்றன. புதிய அரசு பொறுப்பேற்றதும் தமிழ்ப்பாட நூல்களில் இருபத்தேழு பகுதிகள் நீக்கப்பட வேண்டியவை என அறிவித்தது. அதேசமயம் பாடநூல்களில் உள்ள கருத்துப் பிழை, இலக்கணப் பிழை ஆகியவற்றைப் பலரும் சுட்டிக்காட்டினர்.
அதன்பின்னர், மாவட்டந்தோறும் ஆசிரியர்கள் கூடி, நூல்களைப் படித்து ஆய்வு செய்து, பிழைகளைத் தொகுத்தனர். அவ்வாறு தொகுத்தவகையில், தமிழ்ப்பாட நூல்களில் மட்டும் நூற்றுஎழுபத்தேழு பிழைதிருத்தம், சேர்க்கை, நீக்கங்களை மேற்கொள்ளுமாறு கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து திருத்திய பதிப்புகள் வெளிவருவதற்கு முன்பே, ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை முப்பருவத் திட்ட அடிப்படையில் ஒவ்வொரு வகுப்புக்கும் மும்மூன்று இயல்களை மட்டும் நூலாக்கிக் கல்வித்துறை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.
பாடநூல்கள் தயாரிக்கத் தொடங்கிய நிலையிலேயே, ஒரு வகுப்பின் பாடநூலாசிரியர் குழுவுக்கும் பிற குழுவுக்குமிடையே பாடவைப்பு நிலை, பாட வளர்ச்சி தொடர்பான பொதுச்சிந்தனை இல்லாமற் போய்விட்டது. இதன் காரணமாக வகுப்புகளுக்கிடையே பாடப்பகுதிகள் திரும்பத் திரும்ப இடம்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடப்பொருளில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
படைப்பாளர்கள் மீத்திறன் உடையவர்கள், அறிஞர்கள், சமூகநலம் நாடுவோர் என்பதில் ஐயமில்லை. ஆனால், பாட நூல் குழுவினர் ஒருவருடைய படைப்பையே மீண்டும் மீண்டும் இடம்பெறச் செய்து, புதியவர்களையும் புதிய செய்திகளையும் மாணவர்கள் அறிய வாய்ப்பில்லாமல் செய்துவிட்டதை அனைவராலும் உணரமுடிகிறது. தமிழ்மொழி வற்றாத களஞ்சியமாக இருக்க, பாடநூல்களின் கருத்தமைவு செயற்கைப் பற்றாக்குறையை - பொய்யான இலக்கியத் தட்டுப்பாட்டினை - வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
பத்து வகுப்புகளிலும் செய்யுட்பகுதியில் பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஐந்தாம் வகுப்புப் பாடநூலில் பாரதியாரின் இரண்டு பாடல்கள் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளன. அதே பாடநூலில் கவிமணியின் இரண்டு பாடல்கள் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளன. ஒரே பாடப்புத்தகத்தில் இரு கவிஞர்களின் நான்கு பாடல்கள் இடம்பெறச் செய்ய வேண்டியதன் தேவையென்னவென்று தெரியவில்லை.
திருக்குறளில் இன்பத்துப்பால் தவிர, நூற்றெட்டு அதிகாரங்கள் எஞ்சியிருக்க, ஒழுக்கமுடைமை, வாய்மை, சான்றாண்மை, காலமறிதல், கேள்வி ஆகிய ஐந்து அதிகாரக் குறட்பாக்கள்மட்டும் நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் சுற்றிச் சுற்றி வலம் வந்துகொண்டேயுள்ளன. பிற அதிகாரங்களை அறிமுகம்செய்ய குழுவினர் ஏன் தயங்குகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.
சமயக் குரவர்கள் நால்வர், ஆழ்வார்கள் பன்னிருவர், சிவப்பிரகாசர், உமறுப்புலவர், குணங்குடி மஸ்தான், காசிம் புலவர், செய்குத்தம்பி பாவலர், எச்.ஏ.கிருட்டினப் பிள்ளை எனப் பாவலர்களும் அற, சமய நூல்களும் பலவாக இருக்க, குமரகுருபரர் ஒருவரின் பாடல் மட்டும் ஐந்து, ஏழு, எட்டு என மூன்று வகுப்புகளில் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளது. வள்ளலாரைப் பற்றிய பாடப்பகுதியும் அவரது பாடல்களும் ஆறு, எட்டு, பத்து ஆகிய மூன்று வகுப்புகளிலும் இடம் பெற்றள்ளது. இந்நிலை ஏன் ஏற்பட்டது என்பதை யாராலும் உணர முடியவில்லை.
நாட்டு வளம், மழை வளம், வேளாண்மை, வீரம், இயற்கை ஆகியவை பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் கணக்கின்றி இருக்க, தாலாட்டுப் பாடல் ஒன்றே நான்கு, ஏழு ஆகிய இரண்டு வகுப்புகளில் இடம் பெற்றுள்ளது.
கதைபொதி பாடல்கள் என்னும் தொடர்நிலைச் செய்யுட்பகுதி வகுப்பின் நிலைக்கேற்ப பாடநூல்களில் இடம்பெறுவது வழக்கம். செய்யுட்களைப் படித்து, அவற்றின் தொடர்பொருளை அறிந்து, இலக்கியத்தைச் சுவைக்க வழிகோலுவது தொடர்நிலைச் செய்யுட்பகுதி. அத்தகைய இனிய பகுதியை ஐந்தாம் வகுப்பில் அறிமுகம் செய்துவிட்டுத் தொடர்ந்தாற்போல ஆறு, ஏழு வகுப்புகளில் இல்லாமற் செய்திருப்பது எத்தகைய அணுகுமுறை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
செய்யுட்பகுதி இவ்வாறிருக்க, உரைநடைப் பகுதியிலும் இம்மாதிரியான குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆறாம் வகுப்பில் உள்ள "நாடும் நகரமும்' என்னும் பாடமும் ஏழாம் வகுப்பில் உள்ள "ஊரும் பேரும்' என்னும் பாடமும் ஒரே மாதிரியான பாடக் கருத்துடையவை. இவ்விரண்டும் ஊர்ப்பெயர்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பதை விளக்குகின்றன. இவை அடுத்தடுத்து இரு வகுப்புகளில் இடம்பெற்றுள்ளதை என்னவென்று கூறுவது? அதேபோன்று கோவூர்கிழார் பற்றிய பாடம் ஐந்து, ஏழு என இரண்டு வகுப்புகளில் பாடமாக அமைந்துள்ளது.
செம்மொழியின் தகுதிப்பாடுகள் பற்றிய விளக்கம் ஏழாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தெனாலிராமன் கதை ஆறாம் வகுப்பில் மட்டுமே இரண்டு இடங்களில் அமைந்துள்ளது. இராம்கி என்பவரது சிறுகதை ஏழாம் வகுப்பில் இரண்டு இடங்களில் பாடமாக உள்ளது. தமிழில் வேறு எதுவுமே இல்லை என்பதுபோல பாட வைப்பு நிலை அமைந்துள்ளது.
மதுரையைச் சிறப்பிக்கும் உரைநடைப்பகுதி ஐந்து, ஏழு என இரண்டு வகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. அதேபோன்று அகராதிக் கலை, கலைக்களஞ்சியம் என்னும் ஒருதன்மைத்தாய் அமைந்த பாடப்பகுதி நான்கு, ஐந்து, எட்டு என மூன்று வகுப்புகளிலும் உள்ளன. நாடகக்லை, நாடகக் கலைஞர்கள் பற்றிய பாடப்பகுதி ஏழு, எட்டு வகுப்புகளில் இடம்பெற்றள்ளதைக் காணலாம். மேலும் பீர்பால் கதைகளும் இலட்சுமி எழுதிய கதைகளும் இரண்டிரண்டு வகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.
பாடநூல்களை மேலும் ஆழமாகப் பார்த்தால், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல, ஒரு சில செய்திகளையே பாடநூல்குழுவினர் திரும்பத்திரும்ப பாடமாக அமைத்துள்ளது தெளிவாகத் தெரியும். நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர், ""கூறியது கூறல்'' என்பது நூலில் இடம்பெறக் கூடாத குற்றமெனக் கூறுகிறார். அந்த இலக்கண விதிமுறைகளைச் சிறிதும் கருத்தில் கொள்ளாது மனம்போன போக்கில் பாடநூல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழறிஞர்களின் நூல்களிலிருந்து அவர்களது கட்டுரைகளைப் பாடமாக எடுத்தாள்வது பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது. சமச்சீர்க்கல்வி பாடநூல்களில் தமிழறிஞர்களின் கட்டுரைகள் எதுவும் பாடமாக இல்லை. அத்தகைய கட்டுரைகளால் மாணவர்கள் மறைமலையடிகள், திரு.வி.க. மு.வ. போன்றவர்களின் தமிழ்நடையையும் கருத்துகளையும் அறிந்து கொள்ள முடியும். மொழிப் பயிற்சியில் கொடுத்திருப்பது யானைப்பசிக்குப் போடப்பட்ட சோளப்பொரிபோல உள்ளது.
நான்காம் வகுப்பில் இடம்பெற்றுள்ள "சங்கப்பாடல் வர்ணனை' வகுப்பின் தரத்திற்கு ஏற்புடையதன்று. அதேசமயம் ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் இடம்பெற்றுள்ள, ஆசிரியர் குழுவினர் எழுதிய கட்டுரைகள் கருத்துச்செறிவின்றி வறட்சியாகத் தோன்றுகின்றன.
அதியமானைப் பற்றி ஒளவையார் பாடிய புறப்பாடலில் காணப்படும் உவமை, பாடநூல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக உள்ளது. நாளொன்றுக்கு எட்டுத்தேர்களைச் செய்யும் ஒரு தச்சன், ஒரு திங்கள் அரிதின் முயன்று, ஒரு தேருக்குரிய ஒரு சக்கரத்தை மட்டும் செய்வானாகில், அச்சக்கரம் எத்தகைய வனப்பும் உறுதியும் உடையதாக இருக்குமோ, அதுபோல பாடநூல்கள் சிறப்புடையதாக அமைய வேண்டும்.
பலகோடி மாணவர்கள் பயன்படுத்தும் பாட நூலின் உள்ளடக்கம் பிழையற்றதாய், கருத்துவளமுடையதாய், வளர்ச்சிநிலையில் அமைந்ததாய், தமிழின் அனைத்துவகை இலக்கியங்களையும் அறிந்து கொள்ள இடந்தருவதாய் அமைவது அவசியம். என்ன வளம் இல்லை தமிழில், ஏன் இந்தச் செயற்கைத் தட்டுப்பாடு? பாடநூல்களில் பள்ளங்கள் உண்டாக யார் காரணம்? இது அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.
நீதித்துறையும் கல்வித்துறையும் மிகமிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய துறைகளாகும். எந்த நிலையிலும் குற்றம் செய்யாதவனுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிவிடக் கூடாது. அதேபோல, கல்வித்துறையின் தவறான முடிவுகளும் பிழையானவைகளும் கவனிப்பற்ற செயல்பாடுகளும் பள்ளி வளாகத்திற்குள்ளும் வகுப்பறைச் சுவர்களுக்குள்ளும் சென்றுவிடக் கூடாது.
இதனால் சமூகமும் எதிர்காலத் தலைமுறையும் பாதிக்கப்படும். தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறை, பிரச்னைகள் எதுவுமில்லாமல் "அப்பாடா' என்று உட்கார்ந்து மூச்சுவிட்டுப் பல நாள்களாகிவிட்டன. பள்ளிக் கட்டண வழக்கு, ஆசிரியர் கொலை, மாணவர் தற்கொலை, பள்ளிப் பேருந்துப் பிரச்னை என்று மூச்சுமுட்டுகிறவரை பிரச்னைகள் மலையாகக் குவிந்துவிட்டன.
இவையனைத்தும் அவ்வப்போது நிகழும் சமூக நிகழ்வுகள் என்றாலும், இவற்றைக் கட்டுப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் பொதுமக்களுக்கு விளக்கம் தர வேண்டியதும் கல்வித்துறையின் கடமை என்பதை யாரும் மறுக்க முடியாது.
கல்வித்துறை, வல்லுநர்களைக்கொண்டு நன்கு திட்டமிட்டுச் செயல்படுத்தும் நடைமுறைகளுள் பாடநூல் தயாரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். பத்துப்பேர் தயாரிக்கும் ஒரு பாடநூல், பல கோடி மாணவர்கள் கல்வி பயில அடிப்படைக் கருவியாக அமைகிறது. அதனால் அதன் வடிவமைப்பு, உள்ளடக்கம் ஆகியவற்றில் கல்வித்துறை மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்துப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சமச்சீர்க்கல்விப் பாடநூல்களைப் பார்த்தால் நேர்த்தி தெரியவில்லை; நெருடலைத்தான் உணரமுடிகிறது. கிட்டத்தட்ட எல்லாப் பாடநூல்களிலும் பக்கத்துக்குப் பக்கம் இடம்பெற்றுள்ள எழுத்துப்பிழை, கருத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டிக் களைத்துப் போய்விட்டது. இன்னும் பாடநூல்களில் உள்ள பிழைகள் முற்றிலுமாகக் களையப்படவில்லை.
ஒன்று முதல் பத்துவரை இப்போதுள்ள பாடநூல்களுள் தமிழ்ப்பாட நூல்களில்தாம் ஏராளமான பிழைகள் காணப்படுகின்றன. புதிய அரசு பொறுப்பேற்றதும் தமிழ்ப்பாட நூல்களில் இருபத்தேழு பகுதிகள் நீக்கப்பட வேண்டியவை என அறிவித்தது. அதேசமயம் பாடநூல்களில் உள்ள கருத்துப் பிழை, இலக்கணப் பிழை ஆகியவற்றைப் பலரும் சுட்டிக்காட்டினர்.
அதன்பின்னர், மாவட்டந்தோறும் ஆசிரியர்கள் கூடி, நூல்களைப் படித்து ஆய்வு செய்து, பிழைகளைத் தொகுத்தனர். அவ்வாறு தொகுத்தவகையில், தமிழ்ப்பாட நூல்களில் மட்டும் நூற்றுஎழுபத்தேழு பிழைதிருத்தம், சேர்க்கை, நீக்கங்களை மேற்கொள்ளுமாறு கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து திருத்திய பதிப்புகள் வெளிவருவதற்கு முன்பே, ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை முப்பருவத் திட்ட அடிப்படையில் ஒவ்வொரு வகுப்புக்கும் மும்மூன்று இயல்களை மட்டும் நூலாக்கிக் கல்வித்துறை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.
பாடநூல்கள் தயாரிக்கத் தொடங்கிய நிலையிலேயே, ஒரு வகுப்பின் பாடநூலாசிரியர் குழுவுக்கும் பிற குழுவுக்குமிடையே பாடவைப்பு நிலை, பாட வளர்ச்சி தொடர்பான பொதுச்சிந்தனை இல்லாமற் போய்விட்டது. இதன் காரணமாக வகுப்புகளுக்கிடையே பாடப்பகுதிகள் திரும்பத் திரும்ப இடம்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடப்பொருளில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
படைப்பாளர்கள் மீத்திறன் உடையவர்கள், அறிஞர்கள், சமூகநலம் நாடுவோர் என்பதில் ஐயமில்லை. ஆனால், பாட நூல் குழுவினர் ஒருவருடைய படைப்பையே மீண்டும் மீண்டும் இடம்பெறச் செய்து, புதியவர்களையும் புதிய செய்திகளையும் மாணவர்கள் அறிய வாய்ப்பில்லாமல் செய்துவிட்டதை அனைவராலும் உணரமுடிகிறது. தமிழ்மொழி வற்றாத களஞ்சியமாக இருக்க, பாடநூல்களின் கருத்தமைவு செயற்கைப் பற்றாக்குறையை - பொய்யான இலக்கியத் தட்டுப்பாட்டினை - வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
பத்து வகுப்புகளிலும் செய்யுட்பகுதியில் பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஐந்தாம் வகுப்புப் பாடநூலில் பாரதியாரின் இரண்டு பாடல்கள் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளன. அதே பாடநூலில் கவிமணியின் இரண்டு பாடல்கள் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளன. ஒரே பாடப்புத்தகத்தில் இரு கவிஞர்களின் நான்கு பாடல்கள் இடம்பெறச் செய்ய வேண்டியதன் தேவையென்னவென்று தெரியவில்லை.
திருக்குறளில் இன்பத்துப்பால் தவிர, நூற்றெட்டு அதிகாரங்கள் எஞ்சியிருக்க, ஒழுக்கமுடைமை, வாய்மை, சான்றாண்மை, காலமறிதல், கேள்வி ஆகிய ஐந்து அதிகாரக் குறட்பாக்கள்மட்டும் நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் சுற்றிச் சுற்றி வலம் வந்துகொண்டேயுள்ளன. பிற அதிகாரங்களை அறிமுகம்செய்ய குழுவினர் ஏன் தயங்குகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.
சமயக் குரவர்கள் நால்வர், ஆழ்வார்கள் பன்னிருவர், சிவப்பிரகாசர், உமறுப்புலவர், குணங்குடி மஸ்தான், காசிம் புலவர், செய்குத்தம்பி பாவலர், எச்.ஏ.கிருட்டினப் பிள்ளை எனப் பாவலர்களும் அற, சமய நூல்களும் பலவாக இருக்க, குமரகுருபரர் ஒருவரின் பாடல் மட்டும் ஐந்து, ஏழு, எட்டு என மூன்று வகுப்புகளில் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளது. வள்ளலாரைப் பற்றிய பாடப்பகுதியும் அவரது பாடல்களும் ஆறு, எட்டு, பத்து ஆகிய மூன்று வகுப்புகளிலும் இடம் பெற்றள்ளது. இந்நிலை ஏன் ஏற்பட்டது என்பதை யாராலும் உணர முடியவில்லை.
நாட்டு வளம், மழை வளம், வேளாண்மை, வீரம், இயற்கை ஆகியவை பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் கணக்கின்றி இருக்க, தாலாட்டுப் பாடல் ஒன்றே நான்கு, ஏழு ஆகிய இரண்டு வகுப்புகளில் இடம் பெற்றுள்ளது.
கதைபொதி பாடல்கள் என்னும் தொடர்நிலைச் செய்யுட்பகுதி வகுப்பின் நிலைக்கேற்ப பாடநூல்களில் இடம்பெறுவது வழக்கம். செய்யுட்களைப் படித்து, அவற்றின் தொடர்பொருளை அறிந்து, இலக்கியத்தைச் சுவைக்க வழிகோலுவது தொடர்நிலைச் செய்யுட்பகுதி. அத்தகைய இனிய பகுதியை ஐந்தாம் வகுப்பில் அறிமுகம் செய்துவிட்டுத் தொடர்ந்தாற்போல ஆறு, ஏழு வகுப்புகளில் இல்லாமற் செய்திருப்பது எத்தகைய அணுகுமுறை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
செய்யுட்பகுதி இவ்வாறிருக்க, உரைநடைப் பகுதியிலும் இம்மாதிரியான குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆறாம் வகுப்பில் உள்ள "நாடும் நகரமும்' என்னும் பாடமும் ஏழாம் வகுப்பில் உள்ள "ஊரும் பேரும்' என்னும் பாடமும் ஒரே மாதிரியான பாடக் கருத்துடையவை. இவ்விரண்டும் ஊர்ப்பெயர்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பதை விளக்குகின்றன. இவை அடுத்தடுத்து இரு வகுப்புகளில் இடம்பெற்றுள்ளதை என்னவென்று கூறுவது? அதேபோன்று கோவூர்கிழார் பற்றிய பாடம் ஐந்து, ஏழு என இரண்டு வகுப்புகளில் பாடமாக அமைந்துள்ளது.
செம்மொழியின் தகுதிப்பாடுகள் பற்றிய விளக்கம் ஏழாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தெனாலிராமன் கதை ஆறாம் வகுப்பில் மட்டுமே இரண்டு இடங்களில் அமைந்துள்ளது. இராம்கி என்பவரது சிறுகதை ஏழாம் வகுப்பில் இரண்டு இடங்களில் பாடமாக உள்ளது. தமிழில் வேறு எதுவுமே இல்லை என்பதுபோல பாட வைப்பு நிலை அமைந்துள்ளது.
மதுரையைச் சிறப்பிக்கும் உரைநடைப்பகுதி ஐந்து, ஏழு என இரண்டு வகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. அதேபோன்று அகராதிக் கலை, கலைக்களஞ்சியம் என்னும் ஒருதன்மைத்தாய் அமைந்த பாடப்பகுதி நான்கு, ஐந்து, எட்டு என மூன்று வகுப்புகளிலும் உள்ளன. நாடகக்லை, நாடகக் கலைஞர்கள் பற்றிய பாடப்பகுதி ஏழு, எட்டு வகுப்புகளில் இடம்பெற்றள்ளதைக் காணலாம். மேலும் பீர்பால் கதைகளும் இலட்சுமி எழுதிய கதைகளும் இரண்டிரண்டு வகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.
பாடநூல்களை மேலும் ஆழமாகப் பார்த்தால், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல, ஒரு சில செய்திகளையே பாடநூல்குழுவினர் திரும்பத்திரும்ப பாடமாக அமைத்துள்ளது தெளிவாகத் தெரியும். நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர், ""கூறியது கூறல்'' என்பது நூலில் இடம்பெறக் கூடாத குற்றமெனக் கூறுகிறார். அந்த இலக்கண விதிமுறைகளைச் சிறிதும் கருத்தில் கொள்ளாது மனம்போன போக்கில் பாடநூல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழறிஞர்களின் நூல்களிலிருந்து அவர்களது கட்டுரைகளைப் பாடமாக எடுத்தாள்வது பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது. சமச்சீர்க்கல்வி பாடநூல்களில் தமிழறிஞர்களின் கட்டுரைகள் எதுவும் பாடமாக இல்லை. அத்தகைய கட்டுரைகளால் மாணவர்கள் மறைமலையடிகள், திரு.வி.க. மு.வ. போன்றவர்களின் தமிழ்நடையையும் கருத்துகளையும் அறிந்து கொள்ள முடியும். மொழிப் பயிற்சியில் கொடுத்திருப்பது யானைப்பசிக்குப் போடப்பட்ட சோளப்பொரிபோல உள்ளது.
நான்காம் வகுப்பில் இடம்பெற்றுள்ள "சங்கப்பாடல் வர்ணனை' வகுப்பின் தரத்திற்கு ஏற்புடையதன்று. அதேசமயம் ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் இடம்பெற்றுள்ள, ஆசிரியர் குழுவினர் எழுதிய கட்டுரைகள் கருத்துச்செறிவின்றி வறட்சியாகத் தோன்றுகின்றன.
அதியமானைப் பற்றி ஒளவையார் பாடிய புறப்பாடலில் காணப்படும் உவமை, பாடநூல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக உள்ளது. நாளொன்றுக்கு எட்டுத்தேர்களைச் செய்யும் ஒரு தச்சன், ஒரு திங்கள் அரிதின் முயன்று, ஒரு தேருக்குரிய ஒரு சக்கரத்தை மட்டும் செய்வானாகில், அச்சக்கரம் எத்தகைய வனப்பும் உறுதியும் உடையதாக இருக்குமோ, அதுபோல பாடநூல்கள் சிறப்புடையதாக அமைய வேண்டும்.
பலகோடி மாணவர்கள் பயன்படுத்தும் பாட நூலின் உள்ளடக்கம் பிழையற்றதாய், கருத்துவளமுடையதாய், வளர்ச்சிநிலையில் அமைந்ததாய், தமிழின் அனைத்துவகை இலக்கியங்களையும் அறிந்து கொள்ள இடந்தருவதாய் அமைவது அவசியம். என்ன வளம் இல்லை தமிழில், ஏன் இந்தச் செயற்கைத் தட்டுப்பாடு? பாடநூல்களில் பள்ளங்கள் உண்டாக யார் காரணம்? இது அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல தமிழ் தெரிந்தவர்களை விட ஆளும் அரசினை தெரிஞ்சவங்களுக்கு தானே வாய்ப்பு - அதான் இந்த ஏய்ப்பு.
பாதிக்கப்படப் போவது எதிர்கால தமிழ் தெரியா தமிழர்கள் தான்.
பாதிக்கப்படப் போவது எதிர்கால தமிழ் தெரியா தமிழர்கள் தான்.
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|