புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
107 Posts - 49%
heezulia
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
7 Posts - 3%
prajai
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Barushree
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
2 Posts - 1%
sanji
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
234 Posts - 52%
heezulia
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
18 Posts - 4%
prajai
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_m10கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 21, 2012 1:29 am

பகுதி 1

பாடும் கிளி

ஆடுமிலை யழகும் அந்திவான் செம்மைதனைக்
கூடும் முகில்ஓடக் குருவிகளும் ஆர்ப்பரிக்கத்
தேடும் நிலவெழுந்து தேனாய் ஒளி வார்க்க
பேடுதனை மனதெண்ணிப் பேச்சில் துயரெடுத்து

தென்னோலை மீதிருந்து தனியே கிளியொன்று
மின்னும் ஓளிநிலவில் மேதினியை இருள்கவர
தன்மனதின் சோகத்தை தழுவிடும் காற்றிடையே
சொன்னவிதம் கண்டேன் சொல்லியதைக் கேள்மின்!
**************************

(கிளி பாடியது)

சேலைக்குள் மூடிய செங்கரும்பென்றவள்
சேதி யுரைத்திருந்தேன்
மாலையில் பூத்த மலரிவளோ, அல்ல
மஞ்சள் நிலவு என்றேன்
ஆலைக்குள் காணும் அனலிரும்போ எழில்
அள்ளி சிவந்ததென்றேன்
பாலைக்குள் காணும் பசுஞ்சுனையாம் அன்று
பார்த்துளம் காதல் கொண்டேன்

தோலுக்கு பூசிய சந்தனத்தை ஐயோ
திங்கள் எனப்புகழ்ந்தேன்
காலுக்கு வாய்த்த நடையசைவைத் தோகை
கொண்ட நடனம் என்றேன்
மேலுக்கு மின்னிய பொன்னகைகள் விட
புன்னகை போதுமென்றேன்
ஆலுக்கு கீழ்நின்று அற்புதம் இக்கனி
ஆகா சுவைக்கு தென்றேன்

வேலுக்குக் ஒத்தவிழி புகழ்ந்தேன் மதி
விற்று பிழைத்திருந்தேன்
பாலுக்கு ஆவலில் பார்த்திருந்த பூனைப்
பக்குவம் கொண்டழிந்தேன்
காலுக்கு மெட்டி அசைந்தவிதம் கண்டு
கற்பனை ஊற்றெடுத்தேன்
நாலுக்கு ஏதுமில்லாதவள் தன்னையே
நாணமின்றி புகழ்ந்தேன்

மூலைக்குள் வைத்த முழுநிலவோ புவி
மீண்டும் இருள் கொண்டதோ
மாலையிடப் பலிபீட மழைத்தவர்
மாயமென் றானதுவோ
சோலைக்குள் ளேபுயல்சுற்றியதோ உள்ளம்
சோர்ந்து சலித்ததுவே
ஓலையில் கண்டவை கற்பனையோ இவள்
உண்மையில் பெண்ணவளோ?

********************

தூரத்தே நின்று துயர் கூறும்கிளி பார்த்து
வீரக்கிளியே உன் வாழ்வினிலே கண்டதென்ன
நீரைக் குறுவிழிகள் நேர்வீழு மருவியென
தாரையெனக் கொட்டத் தவித்தழுதல் ஏன் என்றேன்

ஆக உயர்வானில் அழகனிவன் பறந்தாலும்
போகா இடமெங்கும் புகுந்த மனத்துயராலே
வேக அனலிடையே வீழ்ந்த்புழுவாய் மனது
நோகச் சிறுமை கொண்டேன் நேர்ந்ததென் னறிவீரோ

(பகுதி 2 கீழே)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 21, 2012 1:30 am


2. காதல் கருவூர்

துக்கம் குரலடைத்துத் தோன்றிடச் சிறுகிளியோ
அக்கம் பக்கம் என அயல் பார்த்துத் துடிப்புடனே
திக்குதிசை தெரியாத் தென்றலென நானலைந்து
சிக்கித்தவித்த கதி சொல்வேன் எனப்பகன்று ,

"பாடிப் பரவசமாய் பார்த்தோரும் கேட்போரும்
நாடி மகிழ்வெய்த நானொன்றும் குயிலல்லத்
தேடிக் கனிதின்று தேகம் வளர்த்தலின்றி
ஆடிக் களிப்புறவும் ஆற்றலுடைத் தல்லேன் யான்

பச்சை நிறம் பார்த்துப் பாடுங் குயிலை விட
இச்சை வடிவமதை எடுத்தான் என இயம்பி
உச்‌சப் புகழுமென் இணை பறவையினம் கண்டு
நச்சுக் கர்வமதில் நானூறிக் கிடந்திட்டேன்

ஊரில் கண்டதெலாம் உள்ளத்தே கொண்டுகதை
நேரில் பசப்பிடுவேன் நீள்மரத்துக் கிளையிருந்து
பாரிற் பலகுரலில் பக்குவமாய்ப் பேசுமிவன்
சேரில் எவரென்று தெரிந்தே யவர்மொழியில்

கூறி நயமுரைத்துக் கொண்டதிலே மகிழ்வாகி
ஆறித் திகழும் ஓர் ஆற்றலுடைத் திருநாளில்
ஏறி வான் பறந்தே எட்டாத் தொலையுள்ள
சீறிக் கொட்டுமெழில் செல்வம் செழித்துள்ள

நல்ல தோரூர் எண்ணி நான்பறந்த வேளையில்
வல்ல விதியும் வாழ்வின் எனை வெறுத்த
கல்லுள் தேரைக்கும் உண்ண உணவீயும
அல்லல் அறுத்தாளும் அரனோ எனை வெறுத்து

போகுமிடம் மாற்றிப் பூக்கள் மலர்வற்ற
ஆகும் பெரு வேம்பும் அடர்ந்த முட்புதருடனே
ஏகமுயர் மூங்கில்கள் எழுத்தோர் காடுமென
தாகம் தணி சுனையும் தாமரையும் இல்லாதோர்

பாயும் நதியோடப் பலமீன்கள் துள்ளிவிழ
காயும் நிலம் அருகே கரும்புவயல், தோட்டமுடன்
சாயும் நாணல்களும் சார்ந்தூரும் அரவமெனப்
போயும் ஒழித்தமரப் பொந்திடையே கருந்தேளும்

ஆன இடமொன்றை அடைந்தேனாம், அண்டமெனும்
வானத் திடை சுழலும் விந்தையாம் உலகினிலே
ஏனத் திசைநோக்கி எனை யிழுத்த தோவிதியும்
மானம் தனையிழக்க மாதவறிழைத் திருந்தேன் "

கேவிக் கதறியக் கிளியும் நடுநடுங்கி
நாவில் எழுந்தகதை நவின்ற கதை தொடராது
கூவிக் கதறும் நிலை கூடிவிடக் கண்டதனால்
ஆவி துடித்தலறி அமைதிவரை அழட்டுமதில்

தண்மை மனம் கொள்ளத் தானாய்த் துயிலுமென
எண்ணி இடம்விட்டு ஏகாந்த மாய் இரவின்
விண்ணும் நிலவொளியும் வீசுமிளங் காற்றிடையே
கண்முன் கிளிஇருக்கக் காலெடுத்து நான் நடந்தேன்

முன்னோர் கால்வைக்க மூடக் கிளியோ உள்
என்னே நினைந்ததனை இசைபடித்த தோஅறியேன்
கன்னம் நீர்வழியக் கரு இருளும் காணுமந்த
முன்னிரவில் கீக் கீ யென் றெண்ணம் இசைத்ததுவாம்


(கிளி பாடியது)

மெல்லிய பஞ்செனும் மேகம் படைத்ததில்
மின்னலை ஏன்கொடுத்தான்
முல்லைசெறி மலர்ப் பந்தலின் மீதிலே
மூடியோர் பாம்பை வைத்தான்
கல்லும் உருகிடும் சேதி கொள்ள எங்கள்
கண்களில் நீர் படைத்தான்
வல்லமை கொண்ட மனங்களிலே கொடும்
வஞ்சனை கோலமிட்டான்

பென்னம் பெரிதென பூமி செய்து அதை
பின்னிச் சுழல வைத்தான்
இன்னுமதில் நடமாடவென மக்கள்
எத்தனையோ படைத்தான்
பொன்னிற் அழகென்னும் மாதர்செய்து ஒரு
போதை விழியில் வைத்தான்
மின்னலென மனம் கொன்றிடக் காதலை
மெல்ல இழையவிட்டான்

சின்னதென பல பூக்கள் செய்து அதில்
தேனை நிரப்பியவன்
தின்னும்சிறு வண்டு தேவை முடிந்ததும்
தென்றலில் ஓடவைத்தான்
இன்னரும் ராகங்கள் தான் படைத்து அதில்
ஏனோ முகாரி வைத்தான்
பொன்னெழில் வண்ணசிலை வடித்து அதைப்
போட்டு உடைக்க வைத்தான்

தண்ணீரில் தாமரை தான்படைத்து மனம்
தாகமெடுக்க வைத்தான்
விண்ணின் கதிருக்கும் வீதி மலருக்கும்
வேடிக்கை காதல் வைத்தான்
மண்ணில் இருப்பது மாயமென்ன? மனம்
மாறும் உணர்வு வைத்தான்
எண்ணி மனங்காவல் கொள்ளவில்லை யெனில்
என்றுமே துன்பம் வைத்தான்

பகுதி 3 ல்தொடரும் ...


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 21, 2012 1:49 am

3. ஆனந்தக் கூத்து

இருள் என்னும் மாயை இகத்தின் அணிகலனோ
பொருள் என்ன பூமி புதைக்கும் படுகுழியோ
வரும் போதும் அழுதே வந்தோம் முதிர்ந்தோடிப்
பெருந்தீ சுவைகொள்ளப் போமட்டும் அழுதழுதே

இருந்தேகும் வாழ்வே இறைவன் எமக்களித்தார்
வருந்தியக் கிளிகொண்ட வாழ்வெண்ணித் துடிதுடித்து
அருங்கிளியைப் பார்க்கவென ஆசை யுடன்விடிந்திடவும்
கருந்திட்டுக் கரைந்திட்டு கண்விட்டுபோகும் வரை

இருந்திட்டு முடிவாக எழுந்தெட்டிக் கால்வைத்து
பரும்திட்டும் மனங்கொள்ளப் பறந்திட்டுப் போகாமல்
வரு மட்டுமெனைக்காத்து வாய் பேசக் கிளிதானும்
குருந்திட்ட தென்னோலை கூத்தாடக் காத்துளதோ

உருளுமா அவனியிடை ஓடிச்சுடர் எறிக்க
தருமொளியின் வீச்சில் தரணிஒளிப் பாய்விரிக்க
வருந்திமனம் கிளிசொன்ன வார்த்தைகளை நம்பியதால்
இருந்த இடம் ஒருகால் ஏகிமுகம் கண்டல்லால்

அதிகாலை வேளையிது அடங்கா துடித்தமனம்
மதிகாண் மயக்கமதும் மாறும் பெருந்துயரம்
விதியென்று விட்டோட விலகிடலாம் என்றெண்ணி
கதிகொண்டு காலைக் கடமைகளை ஆற்றியபின்

நடந்தேன் செல்வழியில் நான் கொண்ட கவலையது
உடன் வான் பறந்துகிளி உயிர்தானும் மாளவென
கடந்தே பொறுமையினை கைவிட்டுக் காட்டாறு
விடங்கொள் தீனிவகை வீச்சருவி நெருப்பென்று

விழுந்தே உயிர்விட்டு வீணாகிப் போய்விடுமோ
எழுந்தே மன அச்சம் என்னுடலில் பதைபதைக்க
அழுந்தி உளைச்சலிட ஆகா வென் அலைந்தோடி
செழுநீர் மலர்ப்பொய்கை சேருமிட மடைந்தேன்

உயர்வளர ஏங்கி உரமெடுத்த சிறுதென்னை
நயமெழுந்து காண நான் திரும்பிப் பார்வையிட
வியந்துள்ளம் விருவிறுக்க வேதனைதான் கிளியில்லை
அயர்ந்தே அறிவழிய ஆவென்று திகைத்தபடி

மொழியின்றி மௌனப் பதுமையென உடல் விறைக்க
வழியின்றி திரும்ப வந்த திசை கால்வைக்க
பழகிக் கொண்டகுரல் பாட்டெழுந்து கீச்சிடவே
அழகு கிளியினது அருந்தோற்றம் ஆ..கண்டேன்

விருந்தோ கண்களுக்கு வேறில்லை மரத்தில்
இருந்து பசுமிறகை எகிறியடித் துள்ளியது
சொரிந்த மர பூக்கள் சொல்லரிய மகிழ்வூட்ட
சரிந்து பறந்தடித்து செய்ததை என்சொல்வேன்!


(கிளி பாடுகிறது)

எந்தன் வாழ்வில் இன்பமான பொங்கி ஓடுதே- அன்பு
சிந்தை வானில் வந்து தென்றலாகி ஆடுதே
வந்து ரூபவண்ண வாழ்வின் சந்தமானதே - இன்பம்
தந்ததான தென்ன `தந்த தந்த தானவே`

மந்தியான துள்ளியாடும் மாமரத்திலே - போலும்
உந்தியாடி உள்ளமிங்கே ஊஞ்சலாடுதே
அந்திவான மேகமென்று ஆடியோடியே - வானம்
சிந்தையான செம்மை கொண்டு சிந்துபாடுதே

கொந்தி உண்ட இன்பழத்தை கொண்ட மாமரம் - அங்கு
வந்திருந்து காணுமின்பம் வாழ்வசந்தமே
அந்தரத்தில் தொங்குமின் கனிக்கு ஏங்கியே - தின்று
சொந்தமாக்க வந்ததன்று அஞ்சுகமொன்றே...

பச்சைமேனி இச்சைகொள்ளப் பார்வை மீதிலே என்னை
அச்சங்கொண்டு உற்று நோக்கி காதல் சொன்னதே
உச்சிகொண்டு கால்வரைக்கும் உள்ளேஓடியே என்ன
கிச்சுகிச்சு பார்வையாலே கூச வைத்ததே

கண்டுநானும் கொண்ட வாழ்வு இன்பமானதே - என்னை
கொண்டுமேக மெங்குலாவும் கொள்ளை யின்பமே
தண்டிலாடும் பங்கயத்தின் தண்மைபோலவே - என்றும்
பண்பிலாடும் உள்ளம் கண்ட பாச உள்ளமே

தொடரும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 21, 2012 1:57 am

4. மாயக் கிளி

கிளியின் பாட்டென்ற கிள்ளைமொழி தான்கேட்டு
உளியோ கூர்பட்ட உருவம்செய் சிற்பியென
மொழியாற் கவலையுற மேதினியிற் பெருஞ்சோகம்
அழுதே எனைக்கலங்க ஆக்கியதக் கிளிநோக்கி

பனியோ படுகுளிரோ பைத்தியமென் றாகியதோ
தனியே ஆடுவதும் தலைமாறிக் குதிப்பதுவும்
இனிதோ இளங்கிளியே இரு, சற்று கேளாயுன்
புனிதத் திருவாயால் பொய்யுரைத்த லாவதுமேன்

நேற்றோர் நாள் நிறுத்தா நீரொழுகும் விழிகொண்டு
கூற்றோ கொடிதென்று குவலயத்து வாழ்வதனை
காற்றோடு சென்றே காட்டிடையே சிக்கிமனம்
சேற்றோடு வாழச் சிதைந்ததெனச் சீற்றமுற்றாய்

இன்றோ குதிபோட்டு இன்பமே உலகென்று
தின்றே ஆடுகிறாய் தெரிவதுமென் முரண்கூறு
நன்றோ பெண்ணவளை நாஇழிந்து பேசுவதும்
இன்றே அவளன்பு ஆகா என் றோதுவதும்

ஒன்றேமெய் ஒன்றில்லை ஒன்றாகும் என்றில்லை
நின்றுலகில் நீயாடும் நிலையும் புரியவில்லை
சென்றேகாண் உள்ளத்தில் சீலம் தவறிவிடல்
நன்றோ மனமழுக்காய் நலிந்து கெடல் ஆவதுமோ

திரும்பித் திசை எனது திருமுகம் பார்த்த கிளி
இரு மனிதா ஏதேதோ எண்ணியதைக் கூறாய் நில்!
வருமுனது வார்த்தையெது வைத்தெல்லை காக்காது
வருந்தியழு தாயென்று வாய்கூசப் பொய்யுரைத்தாய்

எறும்பளவு துயர்தனும் என்மனது பட்டதில்லை
பொறுமையுடன் மன்னித்தேன் பேச்சாம் உனதென்றே
இறுமாப் புடன்பேசும் இளங்கிளியை கண்டயர்ந்தேன்
`வெறும் பச்சைப் பொய்கொண்டு விளையாடும் நாடகமென்

அழகுக் கிளி வாழ்வில் அவலம்தான் பெரிதென்று
அழுத செயல்கண்டேன் அதுவும் பொய்யாமோ
பொழுதான நாளொன்று போகத் தலைகீழாய்
முழுதும் இலையென்று மாயக் கதை சொன்னாய்`

//மாய உலகில்லை மாறுவதோ உன்கூற்று
மாயு முலகுண்மை மரணத்தின் மேடையிது
காயம் உயிர் கொண்டாய் காலந்தான் கொண்டோடக்
காயம் விளைத்துனையே காவு கொள்ளும் புவியாகும்//

”மோசக்கிளியே நீ முன்னொன்று பேசியதென்
பாசப் பலியென்று பாரினிலே பட்டதுயர்
கூசாப் பொய்பேசிக் குலைந்துனது மனமிழிந்தாய்
வேசம் புரியவிலை வீண்பிறப்போ தெரியவிலை”

(அடுத்ததில் முடியும்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 21, 2012 2:00 am

5. கிளியின் பதில்

என்னைப் புரியவில்லை என்றரற்றும் மனிதா
நின்னைப் புரிந்தனையோ நீவந்ததே உலகில்
என்னபயன்? வாழ்ந்து இறுதியிலே போம்வரையும்
உன் வாழ்வில் துன்பங்கள் இன்பங்கள் எண்ணிப்பார்

மண்ணைப் புரிந்தனையோ மாதினைப் புரிந்தனையோ
எண்ணம் புரிந்தனையோ இரவுபகல் தான் ஏனோ
கண்ணால் காணுகின்ற காட்சி புரிந்தனையோ
விண்ணில் சுழல்கோள விந்தையும் புரிந்ததுவோ

பிறப்பும் இறப்புமதன் பெரிதாம் பயன் என்ன
உறவும் பிரிவுமதி லுள்ள துயரின்பங்கள்
மறதி மனஎண்ணம் மற்றுமுள ஞாபகமும்
அறமும்நீதியதில் அந்நியம் இவையெல்லாம்

என்னபயன் வாழ்வை இறைவன் படைத்ததெனில்
அன்னதொரு வாழ்வால் அவனுக்கு என்னபயன்
உன்னதவோர் வாழ்வாம் உயர் வாழ்வு என்றெல்லாம்
என்னபயன் இத்தரையில் இருந்துபோய் என்னபயன்?

எண்ணமே உலகாய் இருந்தும் அதன்வழியே
வண்ணக் கலவையாய் வாழ்ந்தும் இறுதியிலே
மண்ணும் எமைத்தின்ன மண்ணாக போஎன்று
கண்ணைக் குருடாக்கி காண்வாழ்வுச் சூட்சுமமென்

கண்ணில் காணாக் கனவுகளும் கற்பனையும்
எண்ணப் பிசாசாய் இருந்தெம்மை ஆளுவதும்
உண்மையிலா மாயை ஒன்றே வாழ்வென்றான
தன்மைதனைப் புரிந்தபின் தானெனைப் புரிந்திடுவாய்

வேதங்கள் விதிமுறைகள் வினைகள் கிரியைகளும்
ஆகமங்கள் வாழ்வின் அறநெறிகள் சாத்திரங்கள்
யூகங்கள் வாக்குகள் யுக்திகள் வித்தைகளும்
ஆகும் விதியுரைக்க அந்நியமாய் மாவுலகு

மாதங்கள் ஆண்டோடு மதியுரைகள் பொன்மொழிகள்
வாதங்கள் வார்த்தைகள் வாழ்வின் அறநெறிகள்
யாதும் நம்வாழ்வில் நல்வழியை போதிக்க
போதுமெனப் புரண்டு பூமி எதிர் சுற்றுவதேன்

செங்கோல் பிடித்தகரம் செய்வதும் நீதியெனச்
சிங்காசனம் குடையும் சீலமெனக் காணுவையோ
தங்கள் குடிமக்கள் தாம்வாழ எவ்வினமும்
பொங்கக் குருதி விழப் பிணமாக்கும் மற்றினமேன்

பொய்யும் புனைகதையும் புழுகும் புரட்டெழுந்து
வையம்முழுதாழும் வலிமிகுந்த காலமுமேன்
செய்யும் களவுகளும் சீரழித்துப் பெண்ணினத்தை
நையப் புடைத்தழிக்க நாடாளும் உலகமிது

தெய்வம் கண்பார்த்து சிரித்தபடி நிற்பதென்ன
பெய்யும்மழை ஒறுக்கா பூமிவளம் கொடுப்பதென்ன
வெய்யோன் குடையாள விளைபொன் கொழிப்பதென்ன
மெய்யும் அறம்நீதி மிரண்டலறி ஒடலென்ன

கொல்லும்காலமதில் கூத்தாடு மென்மனதை
நில்லும் புரிந்துகொள்ள நெஞ்சங்கள் முடியாது
கல்லும் மண் கொண்டேயிக் காற்றிலா வெளியோடி
செல்லும் பூமிக்கு சிறப்பென்ன சீரழிவைச்

செய்தவரார் ஆதிச் சிறப்பார்ந்த செந் தமிழை
உய்யும்குலம் தன்னை உலகிருந்து சுவடொழிக்க
கையிணைந்து போடும் கயமை விதிமுறைகள்;
செய்ய ஒரு பகுதி திசைமாறிக் கூடலென்ன

என்னை புரிவதென்ன இதயமிதோ காணுலகில்
நின்னை புரிந்தனையோ நிலையற்ற உலகமதில்
சொன்னவிதிமுறைகள் சுடுகாட்டில் போய்மறைய
புன்மை தனைப் புரியாப் பொழுதுவரை கிளியானும்

எண்ணம் பிழைத்திங்கே இழிந்துவிட ஆடுகிறேன்
பெண்ணைப் புகழ்ந்துபின் பேயெனவே சாடுகிறேன்
மண்ணை மாந்தர்தமை மகிழ்வென்று கூறுகிறேன்
வண்ணம் உடன்மாறி வானவில்லு மாகுகிறேன்

உலகே அலைந்தோடி உண்மை தனைச் சீரழித்து
பலமும் பணம் கொண்டார் பக்கம் உருள்கையிலே
வலமும் இடம் தெரியா வாழ்மக்கள் தவித்திருக்க
நலமும் சிதைந்தவெறும் நாடகத்து நடிகன்போல்

கண்டால் சிரிக்கின்றேன் கணம் பின்னே அழுகின்றேன்
கொண்டாட்டம் போடுகிறேன் குணம் மாறித் தவிக்கின்றேன்
மண்ணில் விதியழித்த மாந்தரினை கேட்பதற்கு
கண்ணைத் திறந்து இறை காணும்வரை பைத்தியம் நான்!

மறு கணமோ கிளியை மரத்தைக் கிளைகளதை
குறுகிய தோர் தென்னையும் குளத்தைக் குருவிகளை
கருகலிற் கண்டஇளம் காற்றைக் கடும் வெயிலை
அருகினிலே காணோம் அட என்ன மாயமிதோ ?

(முடிந்தது)

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 21, 2012 12:22 pm

மிக அருமை அண்ணே ...மீண்டும் மீண்டும் படித்தேன் சூப்பருங்க மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக