புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
107 Posts - 49%
heezulia
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
7 Posts - 3%
prajai
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Barushree
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
234 Posts - 52%
heezulia
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
18 Posts - 4%
prajai
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Barushree
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"


   
   

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 10:59 am

First topic message reminder :

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.

பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?

பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.

சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 09, 2012 12:13 pm

"இறந்தவர்களுடைய ஆவிகளின் நிலை"

இறந்து போனவர்களின் ஆவிகள் சென்று தங்கும் இடங்களைக் குறித்துப் பார்த்தோம். இனி, புதிய உலகத்தை அடையும் இந்த ஆவிகளின் நிலை எத்தகையது என்பதை இங்கு பார்ப்போம்.

இயேசு கிறிஸ்து கூறிய 'ஐசுவரியவான் - லாசரு' சம்பவத்தில் இதைக் குறித்து சில ரசிகரமான தகவல்களை அறிந்து கொள்ள முடியும். மரித்த பின்னர் பாதாளத்துக்குச் சென்ற ஐசுவரியவான் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான் என்றும், அங்கு அவன் வேதனையையும், தாகத்தையும் உணர்ந்தான் என்றும் தன் தாகம் தீர்க்கப்பட ஆபிகாமிடம் கெஞ்சினான் என்றும் வாசிக்கிறோம்.

அத்துடன் பூமியில் தன் சகோதரர்களை நினைவு கூர்ந்தான் என்றும், அவர்கள் தான் இரக்கும் இந்த வேதனை நிறைந்த இடத்துக்கு வராமல் இருக்க வேண்டுமென்றும் வாஞ்சித்தான். இதை வேறு விதமாகக் கூறினால், அங்கிருந்து கொண்டு "ஆத்தும ஆதாயம்" செய்ய விரும்பினான். லூக்கா: 11:23 - 28 வசனம் வரை உள்ள வேத வசனங்களை வாசித்தால், இவைகளைக் குறித்து நீங்கள் அறிய முடியும்.

இதிலிருந்து ஒருவர் பூமியில் மரணமடைந்து, அவரடைய சரீரம் அழிந்து போனாலும் கூட, அவரக்குள் இரக்கும் மெய்யான மனிதன் மரணம் அடைவதில்லை என்ற உண்மை புலனாகிறது. மாமிச சரீரம் இல்லாவிட்டாலும், உள்ளான மனிதனுக்கு உணர்ச்ிகள் இரக்கும் என்றும்; பார்க்கவும், கேட்கவும், விரும்பவும், வேதனை, தாகத்தை உணரவும் முடியும் என்று அறியலாம். சிந்தனா சக்தியும்கூட இவர்களுக்கு உண்டு.

மரணத்திற்கு பின்பு இவர்கள் சரீரத்தில் இல்லாவிட்டாலும் ஒருவரை ஒருவர் அடையாளம் தெரிந்து கொள்ள முடியும் என்று விளங்குகிறது. பாதாளத்தில் கிடந்த ஐசுவரியவானுக்கு, பரதீஸில் இருந்த ஆபிரகாமையும் லாசருவையும் அடையாளம் தெரிந்த கொள்ள முடிந்தது. பூமியில் வசிக்கையில் மனிதருக்கு இருக்கும் அதேஆசைகளும் - உணர்ச்சிகளும், "பாதாள உலகில்" செல்லும் ஆவிகளுக்கும் இருக்கும்.

இதன் காரணமாக, பூமியில் இவர்கள் அனுபவித்த சகல சிற்றின்பங்கள் - வெறிகள் - களியாட்டுகளைத் திரும்பவும் அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையும், உணர்ச்சியும், கட்டுக்கடங்காத அளவுக்கு இவர்களுக்கு ஏற்படுவதால் அவைகளைப் பற்றிய பசியும், தாகமும், வேதனையும் இவர்களுக்கு ஏற்படும். இவர்கள் வாஞ்சையும், தாகமும் தீர்க்கப்பட அங்கு வழி இல்லை!

ஆகையால், பூமியில் தாங்கள் அனுபவித்த அதே இன்பங்களை, இச்சைகளை அனுபவிக்க வேண்டுமென்ற தாகத்தால் வதைக்கப்பட்டு, வேதனையுடன் இவர்கள் புலம்புவார்கள். இவர்கள் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை! ஐசுவரியவானின் ஆவி "வேதனைப்படுகிறேன்" என்று கதறியது. தாகத்தை தீர்க்கும்படி மன்றாடியது. ஆனால், அவனுடைய வேண்டதல்கள் மறுக்கப்பட்டது. மனிதன் இந்த உலகில் வாஞ்சிக்கும்பொழுது, பாவ இன்பங்களின் மீது உள்ள பசியும், தாகமும் தீர்க்கப்பட்டவனாக ஜீவிக்க வேண்டும்.

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 09, 2012 1:45 pm

"...அவர்களுடைய அக்கிரமத்தின்மேல் பசி தாகமாயிருக்கிறார்கள் (ஓசியா: 4:8) என்ற சத்திய வேதம் கூறுவதுபோல, இன்றைய உலகமக்கள் பல்வேறு ஆசை இச்சைகளின் மேல் நாட்டம் கொண்டு, பசி, தாகத்துடன் அலைந்து திரிகின்றனர்.

மனிதருக்கு உண்டாகும் இவ்வித தாகத்தை தீர்க்கும் ஜீவ தண்ணீராக இயேசு பூமியில் தம்மை வெளிப்படுத்தினார்.

"என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்." (யோவான்: 6:35). என்று இயேசு வாக்குப் பண்ணியிருக்கிறார்.

உலக ஆசைகள் - இன்பங்களின் தாகத்தை தீர்க்கும்படி, இயெசு தாமே கல்வாரிச் சிலுவையில் "தாகமானார்". அவரைப் பற்றும் விசுவாசம் உங்களை அசுத்தமான பாவ இன்பங்களைக் குறித்த தாகத்திலிரந்து விடுதலையடையச் செய்யும். இந்த பூமியில் இரக்கும்பொழுது, நீங்கள் இவ்விதம் தாகம் தீர்க்கப்பட்டவர்களாக ஜீவிப்பது மிக மிக அவசியம். இல்லையேல், இவ்வித பசியும் - தாகமும் பாதாள உலகில் வேதனைப்படுத்தும்!

இவ்வுலகில் தாகம் தீர்க்கப்படாதவர்களாக - நிர்விசாரிகளாக சுக ஜீவிகளாக - மறுமையைக் குறித்த கவலையற்றவர்களாக மனம் போல ஜீவித்து பாவ இன்பங்களை அனுபவிப்போரின் ஆவிகள் மரணத்துக்குப் பின் "பாதாள உலகத்தில்" இடம் பெற்று, நிர்வாணிகளாகவும், வேதனை அனுபவிக்கிறவர்களாகவும் தவிக்க நேரிடும்! இந்தப் பாதாள உலகம் வெளிச்சமே இல்லாத காரிருள் நிறைந்த இடமாகும். அங்கிருந்து இவர்கள் முயன்றாலும், பூமிக்கோ அல்லது வேறு ஒரு இடத்துக்கோ செல்ல முடியாது என்பது வேதத்தின் மறுக்க முடியாத உண்மை.

இவ்வுலகில், இயெசு கிறிஸ்துவை அறியும் அறிவினால் கிடைக்கும் பாவ மன்னிப்பையும் - மனம் திரும்புதலையும் அடைந்த பின் மரணமடைவோரின் ஆவிகள், தேவ தூதர்களால் உன்னத்தத்திலுள்ள 'பரதீசுக்கு' எடுத்தச் செல்லப்பட்டு, அங்கே அமரிக்கையுடன் இளைப்பாறும்! இவர்கள் ஒளியின் வஸ்திரம் தரித்தவர்களாய் இரப்பார்கள்.

"ஒருவன் ஐசுவரியவனாகி அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டு போவதில்லை. அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. அவன் உயிரோடிரக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலம், நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுசர் அவனைப் புகழ்ந்தாலும், அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான்" (சங்கீதம்: 49:16-19).

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 09, 2012 2:09 pm

"இறந்தவர்களின் ஆவிகளோடு பேசுதல்"

பூமியில் உயிருடன் வசிப்பவர்கள் தங்களுக்குப் பிரியமான இறந்து போனவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியும் என்றும், இறந்தவர்களின் ஆவிகளை தங்களிடம் வரவழைக்க முடியும் என்றும் நம்புகின்றனர். இவ்வித நம்பிக்கையுடையவர்கள், தங்கள் சொந்த அனுபவத்திலிருந்து பல ஆதாரங்களைச் சுட்டிக் காட்டவும் முன் வரக்கூடும். இவ்வித பழக்கமுடையவர்கள், இந்தியாவில் மட்டுமல்ல, மேல் நாடுகளின் பல பாகங்களிலும் கூட இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களைக் குறித்து பல புத்தகங்களையும் கூட வெளியிட்டிருக்கிறார்கள். அவைகளை வாசிப்போர் நம்பும் அளவுக்கு அவைகளை எழுதப்பட்டிருப்பதால், அவைகளை நம்பி மோசம் போகிறவர்களும் உண்டு.

இவ்விதமாக ஆவிகளுடன் தொடர்பு கொண்டு பேசுகிறவர்களும் (Mediums ) அந்த ஆவிகள் தங்களிடம் தெரிவிக்கும் தகவல்களை உண்மையென நம்பி மோசம் போகின்றனர். பிசாசின் ஆவிகள், இவர்களை வஞ்சித்து, இறந்துபோனவர்களின் பெயர்களைச் சொல்லி ஏமாற்றுவதை இவர்கள் சற்றும் புரிந்து கொள்ளாமலிருப்பது விந்தையே! அகால மரணமடைந்தவர்களின் பெயரைத் தரித்துக் கொண்டு, மக்களை மோசம்போக்கும் பிசாசின் ஆவிகள் உலகில் பல உண்டு! திரும்பவும் வேறு ஒரு பிறவியாக தாங்கள் பூமியில் பிறக்கப் போவதாகவும் இந்த ஆவிகள் சொல்லி, மானிடரை தவறான நம்பிக்கைக்குள் வழிநடத்தி மோசம் போக்குகின்றனர்.

இறந்து போனவர்களின் ஆவிகளுடன் பேச முயற்சிக்கும் செய்கை, தேவனுக்கு முன்பாக, அருவருப்பானதாகும். இவ்வித முயற்சிகளில் ஈடுபடுகிறவர்கள் பிசாசின் உபதேசங்களை நம்பி, தேவனுடைய சத்திய வசனங்களை விட்டு விலகிப் போவார்கள். இவ்வித வழக்கங்களை குறித்து தேவனுடைய வசனம் கூறும் சத்தியங்களை நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 13, 2012 6:25 am

"அவர்கள் உங்களை நோக்கி, அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணு என்று ஓதுகின்ற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் உயிருள்ளவர்களுக்காக செத்தவரிடத்தில் விசாரிக்கலாமோ? தேவனிடத்தில் விசாரிக்க வேண்டியதல்லவோ? வேதத்தையும், சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லா விட்டால் அவர்களுக்கு விடியற் காலத்து வெளிச்சமில்லை" (ஏசாயா: 8:19,20).

"தன் மகனையாவது, மகளையாவது, தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறி சொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும் உங்களிடத்தில் இருக்க வேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்" (உபாகமம்: 18:10-12).

செத்தவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொள்ளவும், பேசவும் முயற்சிப்பவர்கள், குறி சொல்லும் பிசாசின் ஆவிகளால் வஞ்சிக்கப்படுவதோடு, தேவனுக்கு முன்பாக அருவருப்புடையவர்களாக நேரிடும். ஏற்கனவே, நடந்தவைகளையும், இப்பொழுது நடக்கின்ற காரியங்களையும் உரைக்கும் ஆற்றல் படைத்தவைகளை, "குறி சொல்லும் ஆவிகள்" என்று கூறலாம். ஆனால், நடக்கவிருக்கும் எல்லாக் காரியங்களையும் அவைகளால் கூற முடியாது. வரும் காரியங்களை இவ்வித ஆவிகளிடம் கேட்டுத் தெரிந்த கொள்ள முயற்சிப்பது ஆபத்தில் முடியும்! விளையாட்டாக இவ்வித பழக்கங்களில் ஈடுபடுவது விபரீதமாக முடியும்!

மரணமடைந்த மானிடரின் ஆவிகளோடு உலகில் வசிப்பவர்கள் தொடர்பு கொள்ளவும், பேசவும் முடியாது. அவ்விதமே, இறந்தவர்களின் ஆவிகள், உலகில் அலைந்து திரிவதும் கூடாத காரியம்.

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 13, 2012 6:49 am

"நீர் என்றைக்கும் அவனைப் பெலனாய் நெருக்குகிறதினால், அவன் பொய் விடுகின்றான். அவன் முக ரூபத்தை மாறப் பண்ணி அவனை அனுப்பி விடுகிறீர்; அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான். அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்" (யோபு: 14:20,21).

"உயிரொடிருப்பவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களெ, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனும் இல்லை. அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்து போயிற்று. சூரியனுக்கு கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறதெதுவோ அதை உன் பலத்தோடே செய். நீ பொகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே" (பிரசங்கி: 9:10).

மேற்கூறிய வேத வசனங்களிலிருந்து இறந்து போன மானிடரின் ஆவிகள் உலகிலுள்ள தங்கள் உறவினர் - நண்பர்களின் நிலையை அறிந்து கொள்ளுவது கூடாத காரியம் என்று விளங்குகிறது.

போனால் திரும்பி வராத தேசம் (யோபு: 10:21) கூறுவதிலிருந்து, அங்கு சென்றவர்கள் பூமிக்குத் திரும்பி வர முடியாது. மறு பிறவியாக பிறக்கவும் முடியாது. அவர்கள் இருக்கும் இடத்தில் செய்கையும், வித்தையும், கல்வியும், அறிவும், ஞானமும் இல்லை.

இறந்தவர்களுடைய ஆவிகளோடு பேசுவதாக நினைக்கிறார்கள். பிசாசின் ஆவிகளிடமே பேசுகின்றனர். பிசாசின் ஆவிகள் இவர்களை 'மோசம் போக்கி' இறந்தவர்களின் பெயரால் பேசி ஏமாற்றுகின்றன. இந்த உண்மைகளை அறியாமல், மரணமடைந்தோரின் ஆவிகளோடு தாங்கள் பேசுவதாக நினைப்பது எவ்வளவு தவறு!

மரணமடைந்த இயேசு கிறிஸ்துவை மூன்றாம் நாளில் மரியாள் சந்தித்துப் பேசியதையும், பின்னர் இயேசு தமது சீஷர்கள் மத்தியில் தரிசனமாகி பேசியவைகளையும் சிலர் ஒப்பிட்டு மரித்தவர்கள் பூமிக்கு வர முடியும் என்றும், அவர்களோடு பூமியில் உள்ளவர்கள் பேச முடியும் என்றும் சாதிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்து, உயிர்த்தெழுந்த சரீரத்தில் பூமியிலேயே திரும்பவும் தோன்றினார். மரித்துப்போன தீர்க்கதரிசியாகிய சாமுவெலின் ஆவியுடன் சவுல் ராஜா பேசினார் என்பதையும் சிலர் காரணம் காட்டுகின்றனர். இதைப் பற்றி சற்று விரிவாகக் இனி காண்போம்...

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 13, 2012 10:21 am

"சவுல் ராஜாவும், சாமுவேலின் ஆவியும்"

ஒரு அஞ்ஞனம் பார்க்கும் பெண்ணின் உதவியால், சவுல் ராஜா, மரணமடைந்த சாமுவேல் தீர்க்கதரிசியின் ஆவியுடன் பேசியதாக நீங்கள் கூற முன் வரலாம்! இதைக் குறித்து சற்று கூர்ந்து கவனித்து சரியான உண்மைகளைத் தெரிந்து கொள்ளுவது நல்லது.

சவுலை இஸ்ரவேல் ஜனங்களுக்கு ராஜாவாக தேவன் ஏற்படுத்தினார். எளிய நிலையிலிருந்து உயர்த்தப்பட்ட சவுல் ராஜாவின் ஆரம்ப நாட்களில், அஞ்சனம் பார்க்கிறவர்களையும், தேசமெங்கும் இராதபடி, சவுல் நிர்மூலம் பண்ணிரந்தார். (1சாமுவேல்: 28:9).

ராஜாவுக்குத் தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது தெரிவிக்கும்படி, சாமுவேல் தீர்க்கதரிசியும் இருந்தார். தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களை செய்ததால், தேவன் சவுலை விட்டு விலகினார். பின்பு, சாமுவேல் தீர்க்தரிசியும் மரணமடைந்தார். இச்சமயத்தில் சவுலுக்கு விரோதமாக பெலிஸ்தர் யுத்தம் செய்யக் கூடினர்கள். சவுல் பெலிஸ்தரின் பாளையத்தைக் கண்டு பயந்தான். (1சாமுவேல்: 28:5).

"அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக் கொண்டு, அவனும் அவனோடு கூட இரண்டுபேரும், இராத்திரியில் அந்த ஸ்திரியினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள். அவளை அவன் நோக்கி, நீ அஞ்சனம் பர்த்து, எனக்கு குறி சொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பி வரச் சொல் என்றான்" (1சாமுவேல்: 28:8).

"அப்பொழுது அந்த ஸ்திரி, உமக்கு நான் யாரை எழும்பி வரப் பண்ண வேண்டும் என்றதற்கு, அவன் சாமுவேலை எழும்பி வரப் பண்ண வேண்டும் என்றான்" (1சாமுவேல்: 28:11).

"ராஜா அவளைப் பார்த்து, பயப்படாதே, நீ காண்கிறது என்ன? என்று கெட்டான். அதற்கு அந்த ஸ்திரி, தேவர்கள் பூமி க்குள்ளிருந்து ஏறி வருகிறதை காண்கின்றேன் என்று சவுலுக்கு சொன்னாள். அவர௮டய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள், சால்வையைப் போர்த்துக் கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல், அவன் சாமுவெல் என்று அறிந்து கொண்டு, தரை மட்டும் குனிந்து வணங்கினான்." (1சாமுவேல்: 28:13,14).

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 13, 2012 2:07 pm

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேத வசனங்களிலிருந்து, தேவனை விட்டு தூரம் போன சவுல் ராஜாவின் பரிதாபமான நிலையைக் காணலாம். அநேகருக்கு பயங்கரவாதியாக ஆட்சி புரிந்த அதே சவுல் இப்பொழுது பயம் பிடித்தவனாக தானே நேரில் சென்று, அஞ்சனம் பார்த்து, குறி கேட்க ஆரம்பித்தான். தேவனற்றவர்களும், தேவனை விட்டு தூரம் போனவர்களும் கையாளும் முறைகளை சவுல் மேற்கொண்டான்.

சவுலுக்கு குறி சொன்ன ஸ்திரி, தான் காணும் உருவம் இப்படிப்பட்டது என்று கூறிய விளக்கத்தை வைத்து, அது சாமுவேலின் ஆவிதான் என்று சவுல் நினைத்துக் கொண்டானேயன்றி, சவுல் தன் கண்களால் அந்த ஆவியைக் காணவில்லை.

ஆனால், அந்த ஸ்திரியின் மூலம் அந்த ஆவியுடன் பேசவும், அவள் மூலம் அந்த ஆவியின் வார்த்தைகளைக் கேட்கவும் அவனால் முடிந்தது. சாமுவேலின் ஆவியைப் போல் அந்த ஆவி அந்தப் பெண் மூலம் பேசியது. அந்த ஆவியின் வார்த்தைகளைக் கேட்கவும் அவனால் முடிந்தது. இதை வைத்துக் கொண்டு, அது சாமுவேலின் ஆவிதான் என்று நாமும் முடிவு கட்டிவிடக் கூடாது.

ஏனென்றால், இங்கு சில உண்மைகளை வேதத்திலிருந்து நாம் கவனிக்க வேண்டும். அங்கு வந்தது சாமுவேலின் ஆவி அல்ல. குறி சொல்லும் ஆவியே அவ்விதம் தோற்றமளித்தது. இந்த ஆவி சவுலைப் பார்த்துக் கூறிய வார்த்தைகள், நமது கவனத்தக்கும், சிந்தனைக்கும் உரியவை.

"கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக் கொடுப்பார். நாளைக்கு, நீயும், உன் குமாரரும் என்னோடு இருப்பீர்கள்" (1சாமுவேல்: 28:19).

இதில், "நீயும் உன் குமாரரும் என்னோடு இருப்பீர்கள்" - என்ற வார்த்தை பதம் நம் சிந்தனைக்குரியது.

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 13, 2012 2:43 pm

சாமுவேல், தேவனுடைய உத்தமமான தீர்க்கதரிசியாக இருந்து மரித்தார். ஆனால், சவுலோ - தேவனை விட்டு பின் வாங்கிய ஒரு மனிதன், தேவனால் கைவிடப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட ஒருவன். சவுலின் மரணம் குறித்த சரியான காரணங்களை 1நாளாகமம்: 10:13 - ல் தெளிவாக பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.

"அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக் கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்ததன் நிமித்தமும், அவன் துரோகத்தில் கர்த்தரைத் தேடாமல், அஞ்சனம் பார்க்கிறவைகளைக் கேட்கும்படி தேடினதினிமித்தமும் செத்துப் போனான்" (1நாளாகமம்: 10:13).

இந்த வசனத்தின்படி, தேவ துரோகம், கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைத் தேடுதல் ஆகிய இவ்விரண்டு காரணங்களால், சவுல் செத்துப் போனதாக அறிகிறோம். இங்கு, மேலும் சற்று நாம் சிந்திக்க வேண்டும். தேவனுக்குக் கீழ்ப்படியாமல் தேவ துரோகம் செய்து, தேவனைத் தேடாமல் குறி சொல்லுகிறவர்களைத் தேடி அலைந்த சவுலின் ஆவி, தேவனுடைய உத்தமமான தீர்க்கதரிசியாகிய சாமுவேலுடன் போய் தங்குவது எப்படி?

"நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடு இருப்பீர்கள்" என்று கூறியது - சாமுவேல் தீர்க்தரிசியின் ஆவி என்பது உண்மையானால், தேவ துரோகம் செய்து, தேவனைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைத் தேடி குறி கேட்ட சவுலின் ஆவி, பரிசுத்தவானாகிய சாமுவேலின் ஆவி சென்றிருக்கும் இடத்திற்குப் போக மடியுமா? அது ஒரு நாளும் கூடாத காரியம்!

சவுல் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை என்பதைக் கண்ட சாமுவேல், பூமியில் தான் ஜீவித்த காலமெல்லாம், சவுலைக் கண்டு பேசவில்லை என்றும், சவுலுக்காக மிகவும் தக்கப்பட்டான் என்றும், சவுலை ராஜாவாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாப்பட்டார் என்றும் வேதம் கூறுகிறது.

"சவுல் மரணமடையும் நாள் மட்டும், சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை. இஸ்ரவேலின் மேல் சவுலை இராஜாவாக்கினதற்காக, கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காக துக்கித்துக் கொண்டிருந்தான்" (1சாமுவேல்: 15:35).

சவுலுக்கும், சாமுவேலுக்கும் இருந்த ஐக்கியம், தொடர்பு, உறவுகள் அனைத்தும், அவர்கள் இருவரும் பூமியில் உயிருடன் இருக்கும்பொழுதே பிரிக்கப்பட்டுப் போயிற்று!

ஆகவே, அதிக கேடானவைகளில் சிக்கிக் கொண்டிருந்த சவுல், திரும்பவும் சாமுவேலின் ஐக்கியத்தை மரணத்திற்குப் பிறகு பெறுவதென்பது கூடாதது.

மேற் கூறிய சான்றுகளிலிருந்து, அஞ்சனம் பார்க்கும் ஸ்திரியின் மூலமாகப் பேசியது - சாமுவேலின் ஆவியல்ல என்பதும், அது 'குறி சொல்லும் ஆவி' தான் என்பதும் தெளிவாகிறது.

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 13, 2012 9:19 pm

சவுலின் மரணத்துக்கு காரணங்கள் இரண்டு:

1. அவன் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், தேவ துரோகம் செய்தான்.

2. தனக்கு நேரிட்ட இக்கட்டான வேளையில், கர்த்தரையும் அவருடைய தீர்க்கதரிசிகளின் ஆலோசனைகளையும் கேட்க விரும்பாமல், அஞ்சனம் பார்க்கிறவர்களைத் தேடி, குறி கேட்டான்.

இவ்விதமான குறி சொல்லுகிறவர்களை தேடாமல் கர்த்தரை அவன் தேடியிருந்திருந்தால், நிச்சயம் அவனுக்குத் தோல்வியும் மரணமும் சம்பவித்திருக்காது என்ற உண்மையையும் அதே வசனத்திலிருந்து நாம் அறிய வேண்டும்.

அப்படியே, சவுல் கர்த்தருடைய வார்த்தையை கக்க கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்ததன் துரோகத்தினிமித்தமும் அவன் கர்த்தரைத் தேடாமல், அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும், செத்துப் போனான்." (1நாளாகமம்: 10:13).

இதை வாசிக்கும் அன்பானவர்களே! உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பலவித போராட்டங்கள், பிரச்சினைகள், கஷ்டங்கள், எதிர்ப்புகள், வியாதி, கவலை, கடன்தொல்லைகள் மத்தியில் ஆலோசனைக்காக, விடுதலைக்காக நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள்?கைரேகை - பட்சி சாஸ்திரம் - ஜாதகம் - நாடி சோதிடம், மந்திரவாதம், குறிகேட்டல், அஞ்சனம் பார்க்குதல், தகடுகள், தாயத்துகள் ஆகியவைகளைத் தேடுகிறீர்களா? அவ்விதமே, நல்ல காரியங்களை நடத்தும்போது நாள் நட்சத்திரம், நெரம், சமயம், சகுனம் பார்த்து ஆரம்பம் செய்கிறீர்களா? அல்லது தேவ ஆலோசனை கேட்டு, தேவ சித்தம் அறிந்து ஆரம்பிக்கிறீர்களா?

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 13, 2012 9:35 pm

சவுல் இறந்து போவான் என்பதை அந்த ஸ்திரி மூலமாக அந்த ஆவி முன்னறிவித்தது. வாசகர்களுக்கு இங்கு ஒரு சந்தேகம் ஏற்படக் கூடும்.

சவுலின் மரணத்தை முன்னதாகவே அறிவிக்கக்கூடிய சக்தி குறி சொல்லும் ஆவிக்கு இருப்பது உண்மையானால், மனிதரின் வருங் காலம் குறித்த உண்மைகளையும் இவ்வித ஆவிகள் முன்னறிவிக்க முடியும் என்று எண்ணலாம்.

சவுல் தேவனை விட்டு விலகி, தன்னுடைய மீறுதல்களின் உச்ச நிலையை அடைந்தான். இதனால், தேவனுடைய பாதுகாவலில் இருந்து, சவுல் நீங்கலாகி, பிசாசின் அதிகாரத்துக்குள் பூரணமாக சென்று விட்டான் என்பதை வாசகர்கள் அறிய வேண்டும். அவனுக்கு மரணத்தை உண்டாக்கியது சாத்தானே. சவுலின் மரணம் தேவனால் நியமிக்கப்பட்டதல்ல. அது அகால மரணம். சாத்தானின் அதிகாரத்துக்குள் ஒப்புக் கொடுக்கப்பட்டவர்களைக் கொல்ல பிசாசுக்கு அதிகாரம் இருப்பதால், சவுலின் மரணம் பிசாசின் ஒழுங்கின்படி சம்பவித்தது. ஆகையால்தான், சவுலின் மரணத்தை அந்த ஆவியால் முன் அறிவிக்க முடிந்தது.

இறந்தவர்களின் ஆவிகளோடு பேச முயற்சி செய்கிறவர்களும், இறந்தவர்களின் ஆவிகள் பேசுவதைக் கேட்க முயற்சி செய்கிறவர்களும், பிசாசால் மோசம் போக்கப்பட்டு, வஞ்சிக்கப்படுகிறார்கள். இவ்வித முயற்சிகளில் ஈடுபடுகிறவர்களின் அந்தரங்க ஜீவியம் அருவருப்பும், தாறுமாறுகளும் நிறைந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் தங்களை பிசாசுக்கு அடிமைகளாக்கிக் கொள்ளுவதால், பாவத்தில் ஜீவித்து மாண்டு போவார்கள்.

"இஸ்ரவேலின் பரிசுத்தரும், அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வரும் காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்" (ஏசாயா: 45:11).

"அந்தரங்கத்திலுள்ளவைகளை ஆதிமுதற் கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளை பூர்வ காலம் முதற் கொண்டும் அறிவிக்கிறேன். என் ஆலோசனை நிலை நிற்கும்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்..." (ஏசாயா: 46:10).

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 8 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக