புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
62 Posts - 63%
heezulia
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
254 Posts - 44%
heezulia
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
15 Posts - 3%
prajai
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"


   
   

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 10:59 am

First topic message reminder :

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.

பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?

பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.

சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 06, 2012 5:52 pm

3. "குறி சொல்லும் ஆவிகள்" (அப்போஸ்தலர்: 16:16):

உலகமுழுவதும் இவ்வித குறி சொல்லும் ஆவிகள் இன்றும் பலமாக கிரியை செய்து வருகின்றன. தங்கள் வருங்கால விவரங்களையும், எதிர்காலத்தில் தங்களுக்கு நடக்கப்போகும் விஷயங்களையும், கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களையும் அறிந்து கொள்வதற்காக அநேக வழிகளை மனிதர் கடைபிடிக்கின்றனர். தங்கள் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற கேள்வி பலருக்குள் இருப்பதால் ஏதோ ஒரு முறையில் அதைத் தெரிந்து கொள்ள மக்கள் விரும்புகின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல, மேல் நாடுகளிலும்கூட இவ்வித பழக்கங்கள் பெருகி வருகின்றன.

கைரேகை - சாமுத்திரிகா லட்சணம் - லக்கனம் - ராசி பலன் - ஜாதகம் - நாடி ஜோதிடம் - பட்சி சாஸ்திரம் - குறி கேட்குதல் - அஞ்ஞனம் பார்க்குதல் - இறந்தவர்களின் ஆவிகளோடு பேசுதல், பேச விரும்புதல் - சகுனம், நிமித்தம் பர்க்குதல் இவை போன்ற அநேக முறைகளை உபயோகித்து வருங்காரியங்களை அறிய விரும்புகின்றனர்.

இவைகள் அனைத்துமே தேவனால் வெறுக்கப்படும் காரியங்கள். இவைகளை தேவன் அருவருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. இவைகள் மூலம் குறி சொல்லும் ஆவிகள் கிரியை செய்ய இடமுண்டாகிறது. இந்த முறைகளைப் பின்பற்றி தங்கள் எதிர்காலத்தை அறிய விரும்புவோரும் சாத்தானால் மோசம் போக்கப்படுகிறார்கள். இதைக்குறித்து பிற்பாடு விவரமாக பார்ப்போம்.

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 06, 2012 6:25 pm

4. "வஞ்சிக்கும் ஆவிகள்"

தேவனுடைய வழிகளையும் வார்த்தைகளையும், கற்பனைகளையும், சந்தேகிக்கச் செய்வதும், வேதவசனங்களைப் புரட்டுவதும், வேத வசனங்களை தவறாக வியாக்கியானம் செய்வதும், மக்களுக்குள் அவிசுவாசத்தை உருவாக்கி அவர்களை வழி தவறி நடக்கும்படி செய்வதும், இவ் வஞ்சிக்கும் அவிகளின் வேலையாகும்.

இவ்வேலையை திறம்படச் செய்ய சாத்தானின் பலவகை ஆவிகள் ஒன்று சேர்ந்து செயல்படும். குறிப்பாக, வஞ்சிக்கும் ஆவிகளோடு பொய்யின் ஆவி, குறி சொல்லும் ஆவி, பொய்யான அற்புதங்களைச் செய்யும் பிசாசின் ஆவி, கள்ளத்தீர்க்தரிசியின் ஆவி ஆகிய பற்பல ஆவிகள் ஒன்று சேர்ந்து கிரியை செய்யும்.

தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற இவைகள் அநேக வழிகளையும் கடைப்பிடிக்கும். ஆதியில் தேவனுடைய கட்டளைகளை மீறும்படி ஏவாளை தன் தந்திர பேச்சுகளால் ஏமாற்றி வஞ்சித்தது போலவே, இன்றும் வேத வசனங்களையும் தேவனுடைய ஒழுங்குகளையும் பலவிதமாக திரித்து, பொய்ப் போதகம் செய்வதும், பொய்யான தீர்க்கதரிசனம் (False Prophecy ) உரைப்பதும், பொய்த் தரிசனங்களை (False Visions ) காட்டுவதும், பொய்யான அற்புதங்களை (Counterfeit Miracles ) செய்வதும் வஞ்சிக்கும் ஆவிகளின் வேலையாகும்.

தேவனுடைய பிள்ளைகள் பரிசுத்தமாக வாழ்க்கை நடத்துவதற்கு அவர்கள் விவாகம் செய்யக் கூடாதென்றும், மாமிசம் - முட்டை - மீன் உணவுகளை கண்டிப்பாக விலக்க வேண்டும் என்றும் இந்த வஞ்சிக்கும் ஆவிகள் போதனை செய்யும். (1தீமோத்தேயு: 4:1,5).

வேறு சிலருக்குள் இந்த ஆவி புகுந்து பரிசுத்த ஆவி போல நடித்து அந்நிய பாஷை பேசி பொய்த் தீர்க்கதரிசனங்களை சொல்லும் (2கொரிந்தியர்: 11:14).

மரணத்திற்கு பின்பும் மனந்திரும்ப இடம் உண்டு என்று கற்பிப்பதும் இந்த வஞ்சக அவியின் உபதேசமே.

"கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாமற் போனபடியால் அப்படி நடக்கும்."

"ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்." (2தெசலோனிக்கேயர்: 2:10-12).

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 06, 2012 9:57 pm

தேவனுடைய ஆவியானவர் மூலமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் செய்யப்படும் அற்புதங்கள், அடையாளங்கள் யாவும் தேவ நாம மகிமைக்காக நடப்பிக்கப்படுகின்றன. அவ்விதமின்றி, சுயமகிமைக்காவும், சுய பிரயோஜனத்திற்காகவும், பேர் புகழுக்காகவும், பணத்திற்காகவும் செய்யப்படும் அற்புதங்கள் மூலம் வஞ்சிக்கும் ஆவிகள் கிரியை செய்யக் கூடும். ஆகையால், வரங்களை தேவனிடமிருந்து பெற்று இதை செய்யும் போது இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும்.

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களைக் கண்ட ஜனங்கள் 'தேவனை மகிமைப்படுத்தினார்கள்' என்ற பதத்தை மாற்கு: 7:14,16; லூக்கா: 13:13; 18:42,43 ஆகிய வேதவசனங்களில் காணலாம்.

தேவ நாம மகிமைக்கென்று தேவனால் ஏற்ப்படுத்தப்பட்டிருக்கும் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், போதகர்கள், மேய்ப்பர்களுக்கு பதிலாக, சாத்தானால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கள்ள மேய்ப்பர்கள் உலகில் உண்டு. வஞ்சக ஆவிகள் இவர்கள் மூலமாகவும் கிரியை செய்து ஜனங்களை வஞ்சிக்கின்றன.

ஆகவே, அந்நிய பாஷையும், தீர்க்கதரிசனங்களும் அற்புதங்களை நடப்பித்தலும் மட்டும் இருந்து விட்டால் போதாது. அவர்கள் ஜீவியத்தில் ஆவியின் கனிகள் இருக்கிறதா என்பதை நாம் சோதித்து அறிவது அவசியம் (1யோவான்: 4:1).

பரிசுத்த ஆவியின் கனியற்ற வரங்களால் பயன் இல்லை. வரங்களல்ல - கனியே பிரதானம். (மத்தேயு: 7:15,16).

கிறிஸ்தவர்கள் ஆரோக்கியமான தேவ வசனத்திலும் உபதேசத்திலும் நிலைத்திருப்பது மிகவும் அவசியம். (2தீமோத்தேயு: 4:3; 1தீமோத்தேயு: 6:3-5).

வேத வசனங்களை ஜெபத்துடன் வாசித்து, தியானித்து, கீழ்படிந்து அனுபவமாக்க வேண்டும். பிறர் மூலம் வரும் செய்திகளையும் தீர்க்கதரிசனங்களையும் வேத வசனத்துடன் ஒப்பிட்டு பார்த்து சோதித்து அறிய வேண்டும். அது சத்தியம் என்று அறிந்தவுடன் அவ் வசனங்களுக்கு கீழ்படியவும் வேண்டும். கீழ்படியாவிட்டால் வஞ்சிக்கும் உபதேசங்களில் சிக்கிக்கொள்ளவும் நேரிடும். (2தெசலோனிக்கேயர்: 2:9-12).

வரும் நாட்களில் இந்த வஞ்சிக்கும் ஆவிகள் உலகில் வல்லமையாகக் கிரியை செய்யும் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து முன்னதாகவே எச்சரித்திருக்கிறார்.

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 07, 2012 4:41 am

5. "பெலவீனப்படுத்தும் ஆவி"

இந்த ஆவிகள் சரீரத்தையும், மனதையும், விசுவாசத்தையும் பலவீனமடையச் செய்கின்றன. நம்பிக்கையற்ற சிந்தனைகளை மனதில் உருவாக்கி சரீரத்தையும் விசுவாசத்தையும் பலவீனமடையும் படி செய்யும். இவ்வித ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையற்றவர்களாகவும், சந்தேகம் - கவலை - சோர்வு - அசதி ஆகியவைகளால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் வெறுப்புற்றவர்களாகவும், வாழ மனமற்றவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். தங்கள் மனதின் சிந்தனை சக்தியைக் கட்டுப்படுத்தி சரியாக உபயோகிக்கும் வல்லமையை இவர்கள் இழந்து விடுவதால் மிகச் சிறிய அற்பமான மனநிலையை அடைகிறார்கள். எந்த ஒரு காரியத்தையும் யோசித்து, நிதானித்து, சரியான முடிவெடுக்கக் கூடாதவர்களாகி விடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் பிறருடன் ஒத்துப் போகும் நிலையை அடையாததால் வாழ்க்கையில் வெறுப்பையும் தனிமையையும் தேடிக் கொள்கிறார்கள்.

தன்னை ஒருவரும் நேசிக்கவில்லை, அனைவரும் தன்னை தவறாக நினைக்கிறார்கள். பிறர் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை. அனைவரும் தன்னை வெறுக்கிறார்கள் என்பது போன்ற பல கேடான சிந்தனைகளை பெலவீனப்படுத்தும் ஆவிகள் உண்டாக்குவதால் இவர்கள் மனக் குழப்பமடைந்து வியாதிப்படுகிறார்கள். இதன் காரணமாக தங்கள் சரீரத்தில் பெலத்தை இழந்து ஒடுங்கிப் போகிறார்கள். இவர்களைப் பலப்படுத்த கொடுக்கப்படும் சத்துணவுகள் - ஆகாரங்கள் மருந்துகள் அனைத்துமே பயனற்றுப் போகின்றன.

இதே பெலவீனப்படுத்தும் ஆவிகள் வேறு சிலரில் வித்தியாசமான முறையில் கிரியை செய்யும். தங்கள் வாழ்க்கையிலும் சரீரத்திலும் ஏற்படும் மிகச்சிறிய விஷயங்களையும், வியாதிகளையும் அற்பமான பிரச்சினைகளையும் மிகவும் பெரிதாக மிகைப்படுத்தி நண்பர்களையும் மற்றவர்களையும் தேடிச் சென்று விவரித்துச் சொல்லி வருந்துகிறவர்கள் உண்டு. அதுமட்டுமல்ல, இவர்கள் அடிக்கடி பல மருத்துவ நிபுணர்களையும் டாக்டர்களையும் அணுகி, தேவையில்லாத காரியங்களுக்கும் சிகிச்சை பெற்றுக் கொள்ளுவார்கள். எக்ஸ்ரே எடுப்பார்கள். ஸ்கேன் பண்ணுவார்கள். அது வந்து விடுமோ இது வந்து விடுமோ என்று கவலைப்படுவார்கள். தங்கள் வாழ்க்கையை அதிக பாரமாக்கிக் கொண்டு சுமந்து திரிவார்கள். நண்பர்கள் - தெரிந்தவர்கள் - தெரியாதவர்கள் - வைத்தியர்கள் - மந்திரவாதிகள் - சோதிடர்கள் - தேவ ஊழியர்கள் ஆக அத்தனை பேரையும் தேடி ஓடி தங்கள் விஷயங்களை முறையிடுவார்கள். கண்ணீர் சிந்துவார்கள். ஆனால், முடிவில் ஒருவர் சொல்வதையும் நம்ப மாட்டார்கள்.

சரீரப் பிரகாரமாகவும், ஆவிக்குரியப் பிரகாரமாகவும் இவர்கள் தெம்பை (தைரியம்) இழந்து, பெலன் குறைந்து, என்னால் அது கூடாது, ஜெபிக்க முடியாது, சாட்சி சொல்ல முடியாது, சாட்சி சொல்ல தெரியாது, அதற்கான கிருபை எனக்கில்லை எனச் சொல்லிக் கொள்வார்கள். எதையும் தங்களால் செய்ய முடியாது என்ற நிலைக்கு பலவீனப்படுத்தும் ஆவிகள் இவர்களைக் கொண்டு வருவதால் இவர்கள் மற்றவர்களுக்கும் பாரமாகவே இருப்பார்கள்.

தெய்வீக வல்லமையின் மூலமாக இயேசுவின் நாமத்தினாலன்றி இப்படிப்பட்டவர்கள் விடுதலை பெறுவது கூடாத காரியம்.

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 07, 2012 5:09 am

6. "பயத்தின் ஆவிகள்" (2தீமோத்தேயு: 1:7; 1யோவான்: 4:18):

மனிதரின் மனதில் பயத்தை உண்டாக்குவது இந்த ஆவிகளின் வேலையாகும் அநேகவிதமான பயங்களை இந்த ஆவிகள் மனிதரின் மனதில் உண்டாக்கக்கூடும். பயம் தேவனிடமிருந்து வந்ததல்ல. ஏதேன் தோட்டத்தில் தேவனுடைய கட்டளையை ஆதாம் மீறியதால், முதன்முதலாக அவனுக்குள் பயம் உண்டாயிற்று. நன்மை தீமையை அறியும் கனியைப் புசியுங்கள்; அப்பொழுது தேவனுக்கு ஒப்பாக மாறுவீர்கள் என்று சொன்ன அதே பிசாசு அவர்கள் அந்த கனியைப் புசித்த பின்பு ஆதாமிடம் 'நீ நிர்வாணியாகி விட்டாய். தேவன் வருவதற்குள் ஓடி ஒளிந்து கொள்' என்று போதித்தான்.

அதன் காரணமாக ஆதாமின் மனதில் பயம் ஏற்பட்டு, அவன் ஓடி ஒளிந்து கொண்டான். தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் பிசாசின் ஆலோசனைக்கு செவி சாய்த்து அதன்படி நடந்தபொழுது, ஆதாமுக்குள் பயம் உண்டாயிற்று. அன்று முதல் உலகம் சாபத்துக்குள்ளாயிற்று.

பயத்திற்கு இடமளிக்கும் பொழுதெல்லாம் மனிதன் தேவனுடைய வார்த்தையை புறக்கணித்து பிசாசிற்கு இணங்கி நடப்பதாகவே கொள்ள வேண்டும். தெய்வீக ஆசீர்வாதங்களை மனிதன் பெற்று அனுபவிக்க விடாதபடி பயத்தின் ஆவிகள் கிரியை செய்யும். தேவையற்ற முறையில் பயப்படும் அநேகர் உண்டு.

பரிசுத்தவானாகிய யோபுவை நஷ்டப்படுத்துவதற்கும், சிறுமைப்படுத்துவதற்கும் அவனில் கிரியை செய்தது பயத்தின் ஆவியே ஆகும். சீரும் சிறப்புமாக தன் பிள்ளைகளோடு இன்பமாக வாழ்க்கையை நடத்திய யோபு தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு வித பயத்திற்கு தன் மனதில் இடம் கொடுத்தான். தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை குறித்த ஒரு வித பயம் அவன் மனதை ஆட்கொண்டது. அதன் பலனாக அவன் பயந்த பிரகாரம் அவனுக்கு சம்பவித்தது.

"நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது." (யோபு: 3:25).

இந்த பயத்தின் ஆவிக்கு யோபு இடம் கொடுக்காமலிருந்திருந்தால், அவன் வாழ்க்கையில் சாத்தான் நஷ்டத்தையும் சிறுமையையும் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஏனென்றால், யோபுவையும் அவன் வீட்டையும் அவனுக்குண்டான எல்லாவற்றையும் தேவன் வேலி அடைத்து பாதுகாத்து வந்தார். இந்த உண்மையை பிசாசு அறிந்திருந்தான். (யோபு: 1:10).

பிசாசுக்கு தெரிந்திருந்த இந்த உண்மை யோபுவுக்கு தெரியவில்லை. யோபுவின் வாழ்க்கையில் எந்த தீமையும் பிரவேசிக்க முடியாதபடி தேவனுடைய வேலி சுழ்ந்திருந்தது. ஆனால், யோபுவின் மனம் பயத்தின் ஆவியால் தாக்கப்பட்டபொழுது அவன் அந்த பயத்திற்கு தன் மனதில் இடங் கொடுத்தான். அதன் காரணமாக தேவன் அடைத்திருந்த வேலியில் திறப்புண்டாயிற்று. அந்த திறப்பின் மூலம் சாத்தான் யோபுவின் வாழ்க்கைக்குள் பிரவேசித்து அவனைப் பாடாய்படுத்தினான்.

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 07, 2012 5:31 am

எந்தச் சூழ்நிலையிலும் தேவன் தன்னோடு இருக்கிறார் என்பதையும், தன்னையும் தன் வீட்டைச் சுற்றிலும் தனக்குண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைத்து தேவன் பாதுகாத்து வருகிறார் என்பதையும் தன் மனதில் தேவனுடைய பிள்ளைகள் உறுதியாக விசுவாசித்து பயத்தின் ஆவிக்கு இடம் கொடாமல் ஜீவிக்கப் பழக வேண்டும் எந்தச் சூழ்நிலைகள் மத்தியிலும் மனதில் பயம் உருவாக கொஞ்சமும் இடம் கொடுக்கக் கூடாது.

மனதில் பயம் உண்டாகக் கூடிய எண்ணங்கள் உருவாகும் பொழுதே அவைகளை மனதிலிருந்து அப்புறப்படுத்தும்படி நமக்குள் இருக்கும் சர்வ வல்லமையுள்ள தேவனையும், அவருடைய பிரசன்னத்தையும் உணர்ந்து, அறிக்கை செய்து தேவனைத் துதிக்க வேண்டும். இதை நீங்கள் அனுபவமாக்கினால் பயத்தின் ஆவிகள் ஒருபோதும் உங்களை மேற் கொள்ள முடியாது.

பயத்தின் ஆவிகள் அநேக விதமான பயங்களை மனிதருக்குள் உண்டு பண்ண, எதிர்கால கரியங்களைக் குறித்துள்ள பயம், ஆபத்துக்கள், விபத்துக்கள் வந்த விடுமோ என்ற பயம் - வியாதியைக் குறித்த பயம் - பிசாசைக் குறித்துள்ள பயம் - எதிரிகளைக் குறித்துள்ள பயம் - இரவின் பயம் - மரண பயம் இவ்வித அநேக பயங்களில் ஏதேனும் ஒன்று உங்கள் மனதை ஆட்கொண்டிருக்கிறதா என்பதை இன்று நீங்கள் கண்டறிவது அவசியம்.

பயம் வேதனையுள்ளது. அந்த பயத்தினுள்ளே, பயப்படுத்தும் ஆவி ஒன்று மறைந்து நின்று செயல்படுகிறது. இந்த உண்மைகளை நீங்கள் அறியத் தவறினால் ஆத்துமா சேதமடையும்.

இன்றைய உலகத்தில் பயத்தின் ஆவியால் பீடிக்கப்பட்ட மக்கள் மிகவும் அதிகம். பிரச்சினைகள், வறுமை, வியாதி, கடன், நஷ்டம், தோல்வி போன்ற பல காரியங்களைக் குறித்த பலவித பயங்களை பயத்தின் ஆவிகள் மக்களுக்கு உண்டு பண்ணுவதால், மக்கள் மன நிம்மதியும் சந்தோஷமற்றவர்களாகவும், கவலை, திகில், பயம், கலக்கம், உடையவர்களாகவும் மாறி விடுகிறார்கள். இதன் காரணமாக பலருக்கு மனக் கோளாறுகள் (Histeria ), பைத்தியம் (Lunaey ) போன்ற பயங்கர நிலைகள் பயத்தின் ஆவிகளால் ஏற்படுகின்றன.

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 07, 2012 5:48 am

தேவையற்ற அநேக பயங்களை உங்கள் மனதில் பயத்தின் ஆவிகள் உண்டாக்கக் கூடும்.

என் வருங்காலம் எப்படியிருக்குமோ?
என் மனைவி பிள்ளைகள் எப்படி இருப்பார்களோ?
நான் மரித்து விடுவேனோ?
என் பொருட்களை யாராவது திருடி விடுவார்களோ?
என் புருஷன் அல்லத மனைவி தவறி விடுவார்களோ?
வெளியில் சென்றவர்களுக்கு ஆபத்து நேரிட்டு விட்டதோ?
என்னை எல்லோரும் நிந்திக்கிறார்கள்?!
இனி உலகில் நான் வாழ முடியாது
எல்லோரும் என்னை விரோதிக்கிறார்கள்
என் மரியாதையையும் கௌரவமும் பாதிக்கப்பட்டு விட்டது
என்னை நேசிக்க எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை
இந்த பாவத்தை என்னால் ஜெயிக்க முடியாது
தேவன் என் ஜெபத்தைக் கேட்க மாட்டார்

இவை போன்ற பலவிதமான பயங்களை உண்டாக்கும் சிந்தைகளை உங்கள் மனதில் நீங்கள் அனுமதிக்கும் பொழுது தேவனுடைய பாதுகாப்பிலிருந்து நீங்கள் விலக நேரிடும். ஆகையால், சாத்தான் உங்கள் சிந்தைகளின் மூலம் கொண்டு வரும் உணர்ச்சிகளை உதறித் தள்ளுங்கள். பயத்திற்கு நீங்கள் உங்கள் மனதில் இடம் கொடுத்தால் மட்டுமே பிசாசு உங்களுக்கெதிராக கிரியை செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இயேசு கிறிஸ்து எல்லா பயங்களிலிருந்தும் மக்களை விடுதலையாக்கும்படிக்கு உலகில் மனிதனாக அவதரித்து, மரணத்திற்கு அதிகாரியான பிசாசானவனை தமது மரணத்தினால் அழித்து, எல்லாவிதமான பயங்களிலிருந்தும் மக்களை விடுதலையாக்கி, சிலுவையின் மேல் வெற்றி சிறந்திருக்கிறார். இந்த உண்மைகளை (லூக்கா: 1:71; எபிரேயர்: 2:15) நீங்கள் பலமாக விசுவாசிக்க வேண்டும்

தாவீது ராஜா அறிக்கையிட்டது போல, "என்னுடைய எல்லா பயத்திற்கும் தேவன் என்னை நீங்கலாக்கி விட்டார்." (சங்கீதம்: 34:4) என்று நீங்களும் அடிக்கடி அறிக்கை செய்யுங்கள்.

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 07, 2012 9:51 am

"பொய்யான அற்புதங்கள்"

"ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனசாட்சியில் சூடுண்டபொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவி கொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள்." (1தீமோத்தேயு: 4:1).

"இயேசு அவர்களுக்கு பிரதியுத்திரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்" (மத்தேயு: 24:5).

"அநேக கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்" (மத்தேயு: 24:11).

"ஏனெனில், கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும், வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள்" (மத்தேயு: 24:24).

தேவனுடைய வழிகளையும், வார்த்தைகளையும், கற்பனைகளையும் புரட்டி, தவறாக வியாக்கியானம் செய்வதும், சந்தேகம், அவிசுவாசத்தை உருவாக்குவதும், வஞ்சிக்கிற ஆவிகளின் வேலையாகும்.

இவ்வேலையை திறம்படச் செய்ய , பலவகை ஆவிகள் ஒன்று சேர்ந்து செயல்படும். குறிப்பாக, வஞ்சிக்கும் ஆவிகளோடு, பொய்யின் ஆவி, குறி சொல்லும் ஆவி, பொய்யான அற்புதங்களின் ஆவி, அந்திக்கிறிஸ்துவின் ஆவி போன்ற ஆவிகளும் ஒருமித்து செயல்படும்.

தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, இந்த ஆவிகள் அநெக வழிகளைக் கடைபிடிக்கும். ஆதியில் தேவனுடைய கட்டளைகளை மீறும்படி, தந்திரமான பேச்சுக்களால் ஏவாளை வஞ்சித்தது போலவே இன்றும் சத்திய வேத வசனங்களையும் தேவ ஒழுங்குகளையும் திரித்து, புரட்டிப் பேசும்படி செய்யும். பொய்யான தீர்க்கதரிசனங்களை உரைக்கும். பொய்த்தீர்க்கதரிசிகளை எழுப்பி விடும். பொய்யான தரிசனங்களைக் காண்பிக்கும். பொய்யான அற்புதங்களையும் செய்யும்.

தொடரும்...





"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 07, 2012 10:23 am

"பொய்யான அற்புதங்கள்" என்றால் என்ன?

இதைக் குறித்த தெளிவான அறிவு, கடைசி நாட்களில் வந்திருக்கும் நமக்கு அவசியம் தேவை.

எகிப்து தேசத்தில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்களை விடுதலை செய்யும்படி, தேவனால் அதிகாரம் பெற்ற மோசேயும், ஆரோனும், எகிப்தின் அரசனாகிய பார்வோன் முன்னிலையில் தெய்வீக அற்புதங்களை நடப்பித்தார்கள். பாம்பையும், தவளைகளையும் பிறப்பித்தார்கள். தண்ணீரை இரத்தமாக மாறும்படி செய்தார்கள். ஆனால், இவைகளைக் கண்டு முதலில் பார்வோன் பயப்படவில்லை.

காரணம்? பார்வோனின் மந்திரவாதிகளும் கூட தங்கள் மந்திரசக்தியால் பாம்புகளையும், தவளைகளையும் வரும்படி செய்தார்கள். அப்படியானால், தேவனுடைய மெய்யான அற்புதங்களுக்கும் பிசாசின் பொய்யான அற்புதங்களுக்கும் வித்தியாசம் என்ன?

மோசேயின் மூலம் பிறப்பிக்கப்பட்ட பாம்பையோ, தவளைகளையோ அழிக்க மந்திரவாதிகளால் கூடவில்லை. எகிப்து தேசத்தின் மேல் வந்த வாதைகள் ஒன்றையும் நிவர்த்தி செய்யவோ, போக்கிடவோ, இந்த வாதைகளிலிருந்து மக்களுக்கு விடுதலை அளிக்கவோ, மந்திரவாதிகளால் முடியாது போயிற்று.

மெய்யான விடுதலையைப் பெற எகிப்தின் அரசனாகிய பார்வோன் தன் மந்திரவாதிகளை விட்டு, தேவனுடைய ஊழியர்களான மோசே, ஆரோன் என்பவர்களிடம் வந்த விண்ணப்பம் பண்ண வேண்டியதாயிருந்தது. எகிப்து தேசத்தில் தவளைகளை அகற்றவும், இரத்தமாக மாறிப்போன தண்ணீரை சுத்த ஜலமாக மாற்றவும், எகிப்தின் மந்திரவாதிகளால் முயன்றும் முடியாமல் போயிற்று என்ற உண்மையை நாம் உற்று நோக்க வேண்டும்.

குறிப்பாகக் கூறினால் விடுதலை அளிக்க தேவனால் மட்டுமே கூடும். அது தேவன் ஒருவருக்கே சொந்தமானது. சாத்தான் மூலம் ஜனங்கள் ஒரு போதும் மெய்யான விடுதலையைப் பெறுவது கூடாத காரியம்.

ஆகையால், "விடுதலை தராத எந்த அற்புதமும் பொய்யான அற்புதமே."

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 07, 2012 10:42 am

பிசாசு பிடித்தவர்கள் தலைவிரித்து ஆடுவது மட்டும் அற்புதமாகி விடாது. அவ்விதம் ஆடுகிறவர்கள் அந்தப் பிசாசின் பிடியிலிருந்து விடுதலையடைவதே அற்புதம். திரள் கூட்டத்தில் ஒருவருடைய பெயரையும் அவருடைய வியாதி அல்லது பிரச்சினைகளையும் கூறும் பொழுது, அந்த நபர் எழும்பி தன்னை அறிமுகம் செய்தால், அதை மட்டும் வைத்துக் கொண்டு அற்புதம் என்று கூறக் கூடாது. பெயர் சொல்லி அழைக்கப்பட்ட நபர் அதே வேளையில் விடுதலை பெறுவாரானால், அதுவே தெய்வீகமான, மெய்யான அற்புதமாகும். வேதத்தில் இதற்கு பல உதாரணங்கள் உண்டு.

பெயர் சொல்லி அழைக்கப்ட்டவர்கள் அனைவரும் உடனடியான விடுதலையைப் பெற்றவர்களாக மாற்றம் அடைந்தனர்.

"சகேயுவே, சீக்கிரமாக நீ கீழே இறங்கி வா" என்று இயேசு பேர் சொல்லி அழைத்தவுடன், லஞ்சப் பேர்வழியாக மரத்தில் ஏறி ஒளிந்திருந்த சகேயு ஆபிரகாமின் குமாரனாக கீழே இறங்கினான்! (லூக்கா: 19:1-9).

கிறிஸ்தவர்களை துன்புறுத்தவும், அழிக்கவும் சென்று கொண்டிருந்த சவுலை இயேசு பேர் சொல்லி அழைத்துவுடன், தன் குதிரையிலிருந்து கீழே விழுந்த சவுல் எழும்பியவுடன் மனமாற்றமடைந்த பவுலாக மாறினான்! (அப்போஸ்தலர்: 9:1-20).

பெத்தானியா என்ற கிராமத்தில் மரித்து அடக்கம் பண்ணப்பட்ட நான்கு நாட்களான லாசரவின் கல்லறை முன்பு இயேசு நின்று, அவனைப் பேர் சொல்லி அழைத்தவுடன் தானே, லாசுரு உயிர் பெற்றவனாகி எழுந்து வந்தான்.

யோப்பா பட்டணத்தில் மரித்துக் கிடந்த பெண்ணைப் பார்த்து "தபீத்தாளே எழுந்திரு" என்று பேதுரு அப்போஸ்தலன் பேர் சொல்லி அழைத்த மாத்திரத்திலேயே, மரித்து பிரேதமாக கிடந்த அந்தப் பெண் ஜீவன் பெற்று, கண்களைத் திறந்து உட்கார்ந்தாள். (அப்போஸ்தலர்: 9:36-41).

லித்தா என்ற ஊருக்கு பேதுரு அப்போஸ்தலன் வந்த பொழுது அங்கு எட்டு வருடங்களாக திமிர்வாதமாக கிந்த ஒருவனைப் பார்த்து: "ஐனேயாவே இயேசு கிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்" என்று சொன்ன உடனே அவன் குணமடைந்து எழுந்தான். (அப்போஸ்தலர்: 9:32-34).

மேற் கூறிய எடுத்துக் காட்டுக்கள் தேவனுடைய மெய்யான அற்புதங்களைக் காண்பிக்கின்றன.

தொடரும்...



"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 5 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக