புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10 
285 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10 
20 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 31 of 76 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 53 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 15, 2012 7:23 am

பிஜிராமன் wrote:
படங்களால் பாவமிந்த பையன்கள் பண்ணும்
மடமைகள் மாறினால் நன்று

நல்ல கருவை ஏந்திய குறள் ஐயா.....எனக்கு தெரிந்தே நிறையா பசங்க இப்டி எழுதிருக்காங்க, அதுக்கும் நம் ஆசிரியர்கள் மதிப்பெண் போட்ட கதையும் உண்டு ஐயா.
இதை முதலில் படிக்கும் போது,

சிரிப்புதான் முன்வருது சிந்தனைபின் நிற்க
தரித்திரம் தான்சினிமா இங்கு

நன்றிகள் ஐயா, தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன். நல்ல குறள்கள். தொடர்ந்து எழுதுங்கள். பின்னுட்டத்தில் குறள்களை குறைத்துக் கொண்டு , இங்கு பதிவதற்காக நல்ல குறள்களை தாருங்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 15, 2012 7:39 am

[quote="சதாசிவம்"]அருமையான குறளும் அதற்கு படமும் பதிந்தமைக்கு நன்றி அய்யா,
உழவில் முதலில் ஓட்டும் ஏரின் வழியில், பின்னால் வரும் ஏர்கள் செல்லும். அதுபோல் பிள்ளைக்கு திருப்புகழும், தேவாரமும், தாலாட்டுப் பாடி சோறு ஊட்டிய பெற்றோர், இன்று சினிமாப் பாடல் பாடி சோறு ஊட்டுகிறார்கள். ஆசிரியரும் "கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" என்பதை போல் உள்ள பாடல்களை ரிங்டோன் வைத்துள்ளார்கள். அவர்களின் வழியில் வந்தவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.
முன்னேரு வந்தவழி பின்னேரு போகுமாம்
சொன்னோர் வழியின் பலன்

முன்னேரு வந்தவழி பின்னேரு போகுமாம்
சொன்னோர் மொழியின் பலன்

மிகவும் நன்றி தம்பி சதாசிவம். வாருங்கள் தொடர்ந்து, பாருங்கள் இத்திரியை, தாருங்கள் நற்குறள்கள், சேருங்கள் தமிழ்ப்பெருமை. நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 15, 2012 7:43 am

[quote="அருண்"]
பிஜிராமன் wrote:
மிக அருமை அய்யா! பொருளுடன் பொருள் சேர்த்தால் தான் அதை பொருளாக உணர முடியும் அதே போல் தான் இதுவும் இசை யுடன் கலந்த வார்த்தையில் உச்சரித்தால் தான் இசையாக உணர முடியும்.!
குறளின் விளக்கம் சூப்பர்.!
மிகவும் நன்றி அருண் அவர்களே, தொடர்ந்து வாருங்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 15, 2012 8:02 am

சந்திரகி wrote:நயம்பட கருத்தை நறுக்குதெரித்தாற்போல் இரு வரிகளில் சொல்லும் விதம் வெகு அழகு ஐயா.
ரசித்தேன் உங்கள் குறளை. சூப்பருங்க
அதுதானே குறளின் பெருமை சந்திரகி அவர்களே. இங்கும் நான் ஒரு குறையை உணர்கிறேன். அதாவது படம் இல்லாமல், வெறும் குறளை மட்டும் படித்துப்பார்த்தால் அவைகளின் பொருள் விளங்காது. ஒரு சில குறள்களைத் தவிர. அதைக் குறித்துத்தான் நான் யோசித்துக்கொண்டு உள்ளேன். படத்தைப் பார்த்து அதற்கு தகுந்தாற்போல் குறள் எழுதுவதால் இவ்வாறு இருக்கும் என்பதே உண்மை. என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 15, 2012 8:04 am

தமிழ்நேசன்1981 wrote:
அகரம் அமுதனின் நண்பர் நீங்கள் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவரின் அருமையான குறள்கள், வெண்பாக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை ஈகரை நண்பர்களும் படித்து ரசிக்க வேண்டும் என்பதுதான் எனது அவா.. மேலும் அகரம் அமுதனும் நானும் ஓர் ஊர்க்காரர்கள். நெருங்கிய நண்பரும் கூட..
கவனப்படுத்தியமைக்கு நன்றி. . நானும் எழுத முயற்சிக்கிறேன்.
மிகவும் நன்று தமிழ்நேசன்...எழுதுங்கள். இந்தத் திரியில் உங்களின் குறளைப் பதியுங்கள். அகரம் அமுதனும் தாங்களும் ஒரு ஊர்க்கார்கள் என்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. மகிழ்ச்சி நீங்கள் நிச்சயம் நல்ல குறள்களைத் தருவீர்கள் என்பது திண்ணம். காரணம் ஒரே ஊரின் மண் வாசனைதான் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 15, 2012 8:32 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Ammamummy

குறள் வெண்பா : ௦௪௫ (045)

மம்மியைநீ ஹைமம்மி மைலவ்யூ என்றாலும்
அம்மாவின் நல்அன்பே அன்பு


மம்/மியை/நீ - ஹை/மம்/மி – மை/லவ்/யூ - என்/றா/லும்
அம்/மா/வின் - நல்/அன்/பே - அன்/பு

நேர்/நிரை/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் – நேர்/பு

கூவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – தேமாங்காய் – காசு

எதுகை : ம்மியைநீ; ம்மாவின்

மோனை ; ம்மியைநீ – மைலவ்யூ; ம்மாவின் – ன்பு

ஈற்றுச்சீர் : அன்பு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
படத்துக்காக வேண்டி சில ஆங்கிலச் சொற்களை சேர்க்க வேண்டியதாகி விட்டது. ஆயினும் அசை தளை கெடவில்லை. இக்குறள் சொல்லும் கருத்தையே நாம் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jul 15, 2012 11:36 am

பாடம் புகட்டும் படம் அய்யா, ஆங்கிலம் வந்திங்கு நம்மை மாற்றிவிட்டது. பிள்ளைகள் மனம் ஏங்குவதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் இஷ்டமாய் நடக்கும் அம்மாக்கள், மன்னிக்கவும் மம்மீக்கள் - இறந்த மனம் உடையவர்கள் இவர்கள் ஆதலால் தான் எகிப்திய மம்மீ

ஆங்கிலம் வந்திங்கு அம்மாவை மாற்றியாச்சு
ஏங்கியே தொங்குது பிஞ்சு



தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 1245199642-mother%20of%20the%20yearWEBSITE





சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 15, 2012 2:24 pm

உண்மைதான் அய்யா! ஆங்கிலம் வந்தாலும் பொருளும் கருத்தும் தான் முக்கியம்.!
தாயின் அன்பு என்றுமே வற்றிபோகாது.!

குறளின் விளக்கமும் படமும் அருமை அய்யா! மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jul 15, 2012 7:25 pm

தயாளன் அய்யா மற்றும் சதாசிவம் அய்யா உங்கள் இருவரின் இன்றைய குறளும் அருமை சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jul 15, 2012 8:41 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 31 Ammamummy

குறள் வெண்பா : ௦௪௫ (045)

மம்மியைநீ ஹைமம்மி மைலவ்யூ என்றாலும்
அம்மாவின் நல்அன்பே அன்பு


மம்/மியை/நீ - ஹை/மம்/மி – மை/லவ்/யூ - என்/றா/லும்
அம்/மா/வின் - நல்/அன்/பே - அன்/பு

நேர்/நிரை/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் - நேர்/நேர்/நேர் – நேர்/பு

கூவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – தேமாங்காய் – காசு

எதுகை : ம்மியைநீ; ம்மாவின்

மோனை ; ம்மியைநீ – மைலவ்யூ; ம்மாவின் – ன்பு

ஈற்றுச்சீர் : அன்பு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
படத்துக்காக வேண்டி சில ஆங்கிலச் சொற்களை சேர்க்க வேண்டியதாகி விட்டது. ஆயினும் அசை தளை கெடவில்லை. இக்குறள் சொல்லும் கருத்தையே நாம் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:


அருமையான கருத்து ஐயா...மம்மி என்று அழைத்தால் தான் மதிப்பு என இன்றைய பெற்றோர்கள் நினைத்துக்கொண்டு இது போன்ற அழைக்க பிள்ளையை பழக்குகின்றனர்.

அம்மாவை மம்மியாய் ஆக்கும் மழலைகள்
டம்மியாக தாயிடம் காண்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 31 of 76 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 53 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக