புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4


   
   

Page 18 of 19 Previous  1 ... 10 ... 17, 18, 19  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 21 May 2012 - 22:42

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 18 154550


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu 14 Jun 2012 - 19:49

14. 2தெசலோனிக்கேயர்

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: கொரிந்து

எழுதப்பட்ட காலம்: கி.பி.50 - கி.பி.51 (1தெசலோனிக்கேயர் எழுதப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு)

சேருமிடம்: தெசலோனிக்கேய சபை

காலத்தின் தேவை: கிறிஸ்துவின் இரண்டாம் போதனையைக் குறித்த தவறான போதனையை எதிர்த்தல்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “இரண்டாம் வருகையைக் குறித்த திருத்தம்”

கருப்பொருள்: கர்த்தருடைய நாளின் வருகை

நோக்கம்: கர்த்தருட‌ைய நாள் ஏற்கனவே வந்தாயிற்று என்ற தவறான எண்ணத்தைச் சரிசெய்தல்.

குறிப்பு விவரம்: ஊக்கம், திருத்தம் மற்றும் அறிவுரை

1. ஊக்கம் (2தெசலோனிக்கேயர்: 1:3 - 1:12)

2. திருத்தம் (2தெசலோனிக்கேயர்: 2்1 - 2:17)

3. அறிவுரை (2தெசலோனிக்கேயர்: 3:1 - 3:14)

முக்கியவசனம்: 2தெசலோனிக்கேயர்: 2:15 - “ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலை கொண்டு, வார்த்தையினாலாவது, நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபத‌ேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu 14 Jun 2012 - 23:15

போதக நிருபங்களுக்கு ஒரு முன்னுரை


1தீமோத்தேயு முதல் பிலமோன் வரை
I. பெயர்:

தனி நபர்களுக்கு எழுதப்பட்டது.

II. ஆசிரியர்:

அ) மரபு வழியாக - அப்போஸ்தலனாகிய பவுல்.

ஆ) ஆசிரியரின் நிருபணம்:

1. போதக நிருபங்கள் அவை பவுலினால் எழுதப்பட்டவை என வலியுறுத்துகின்றன. (1தீமோத்தேயு: 1:1; 2தீமோத்தேயு: 1:1; தீத்து: 1:1).

2. ஆசிரியரின் நிருபணத்தைக் குறித்த ஆதிசபையின் இந்த நிருபங்கள் பவுலினால் எழுதப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

3. இந்த நிருபங்கள் பவுலினால் எழுதப்பட்டவை என்பதை வெளிப்புறமான சான்றுகள் தொடர்ச்சியாக நிரூப்பிக்கின்றன.

III. அப்போஸ்தலர் 28 ம் அதிகாரத்திற்குப்பின்பு பவுலின் இயக்கங்கள்:

அ) ரோமாபுரியில் 2 வருட சிறை தண்டனை (அப்போஸ்தலர்: 28:30,31; பிலிப்பியர்: 1:19,25-27; 2:24)

ஆ) விடுதலையான பின்பு தொடர்ச்சியான ஊழியப் பயணங்கள் (பிலமோன் 22).

இ) கிழக்கிலுள்ள சபைகளுக்கு பயணம்:

1. எபேசு (1தீமோத்தேயு: 1:5)

2. கொரிந்து, துரோவா, மிலேத்து (2தீமோத்தேயு: 4:13,20)

3. கிரேத்தா (தீத்து: 1:5)

4. மக்கெதோனியா (தீத்து: 3:12)

ஈ) ரோமாபுரியில் மீண்டுமாக சிறை தண்டனை (2தீமோத்தேயு: 1:8,16,17; 2:9; 4:10).

IV. பவுலினுடைய உடன் வேலையாட்கள்:

அ) தீமோத்தேயு:

1. பவுலினுடைய இரண்டாம் ஊழியப் பயணத்தின்போது அவரைச் சோ்ந்து கொண்டவர். (அப்போஸ்தலர்: 16:1-3).

2. பவுலினுடைய மிக நெருங்கிய பயணத்துணைகளில் ஒருவன்.

- பவுலுடன் மக்கெதோனியா, அகாயா, ஆசியா மற்றும் ரோமாபுரியில்.

- பவுலின் 13 கடிதங்களுள், 6 கடிதங்களில் பவுலுடன் சோ்ந்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறான் (2கொரிந்தியர்: 1 :1; பிலிப்பியர்: 1:1; கொலோசெயர்: 1:1; 1தெசலோனிக்கேயர்: 1:1; 2தெசலோனிக்கெயர்: 1:1; பிலமோன்: 1 வசனம்.)

3. வாலிபன் என்றாலும் நம்பகமானவன் (1தீ‌மோத்தேயு: 4:12; 1கொரிந்தியர்: 16:11, 4:17; பிலிப்பியர்: 2:19)

4. எபேசுவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலுமுள்ள சபைகளுக்குப் பொறுப்பாளி (1தீமோத்தேயு: 1:3; 3:14,15)

ஆ) தீத்து:

1. எருசலேமில் எழும்பின வாக்குவாதத்திற்கு ஆளான புறஜாதியான் (கலாத்தியர்: 2:1-5).

2. பத்து வருடங்களுக்குப் பிறகு கொரிந்திய சபையுடன் இணைக்கப்பட்ட குறிப்பிடப்பட்டவன் (2கொரிந்தியர்: 1:23 - 2::18; 7:5 - 15; 8:6,16-23).

3. 8,10 வருடங்களுக்குப் பின்பு, கிர‌ேத்தாவிலுள்ள சபைகளுக்குப் பொறுப்பாளி (தீத்து: 1:5).

4. தல்மாத்தியாவில் ஊழியம் (2தீமோத்தேயு: 4:10)



தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri 15 Jun 2012 - 4:32

15. 1தீமோத்தேயு

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: மக்கெதோனியாவாக இருக்கக்கூடும்.

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.62 - கி.பி.64

சேருமிடம்: எப‌ேசுவிலுள்ள தீமோத்தேயு.

காலத்தின் தேவை: எபேசுவிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலுமுள்ள சபைகளை வழிநடத்துவதற்குத் தேவையான போதனையை தீமோத்தேயுவிற்கு அளித்தல்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “ஒரு இளம் போதகருக்கு அறிவுரை கூறுதல்”

கருப்பொருள்: சபையை வழிநடத்தி, அறிவுறுத்துவதற்கான போதனைகள்.

நோக்கம்: பவுல் வரும்வரை சபையின் வேலையை எவ்வாறு ஒழுங்கு செய்து, நிர்வகிப்பது என்பதைக் குறித்து தீமோத்தேயுவிற்கு போதித்தல்.

குறிப்பு விவரம்: ஒழுங்கு மற்றும் நிர்வாகத்தின் பிரிவுகள்:

1. சபையின் ஒழுங்கு (1தீமோத்தேயு: 1:3 - 3:13)

2. சபையின் நிர்வாகம் (1தீமோத்தேயு: 3:14 - 6:19)

முக்கியவசனம்:

1தீமோத்தேயு: 3:14,15 - “நான் உன்னிடத்தில் சீக்கிரமாய் வருவேனென்று நம்பியிருக்கிறேன். தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்க வேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri 15 Jun 2012 - 4:46

16. 2தீமோத்தேயு

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: ரோமாபுரி

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.65 - கி.பி.67

சேருமிடம்: எபேசுவிலுள்ள தீமோத்தேயு

எப்போது தேவைப்பட்டது: ரோமாபுரியில் பவுல் மரணத்துக்கேதுவாக தண்டனையளிக்கப்படுவதற்கு முன்பாக எழுதிய கடைசி வார்த்தைகள்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “பவுலின் இறுதி அறிவுரை”

கருப்பொருள்: பவுலினுடைய மரண சாசனம்

நோக்கம்: சபையை முறையாக வழிநடத்தி, போதிப்பதில் தீமோத்தேயுவை ஊக்குவித்தலும், மழைகாலத்திற்கு முன்பாக தேவையான சில பொருட்களைக் கொண்டு வரும்படி அவனுக்குக் கூறுவது.

குறிப்பு விவரம்: முறைப்படியற்றது:

1. கடந்த காலம் (2தீமோத்தேயு: 1:3-18)

2. நிகழ்காலம் (2தீமோத்தேயு: 2:1-26)

3. எதிர்காலம் (2தீமோத்தேயு: 3:1-17)

4. பவுலின் பிரியாவிடை (2தீமோத்தேயு: 4:1-18)

முக்கியவசனம்:

2தீமோத்தேயு: 2:2 - “அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri 15 Jun 2012 - 4:59

17. தீத்து

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: நிக்கப்போலி

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.62 - கி.பி.64

சேருமிடம்: கிரேத்தாவிலுள்ள தீத்து.

காலத்தின் தேவை: சபையை வழிநடத்துவதில் தீத்துவிற்குத் தேவையான போதனையை அளித்தல்.

ஆ) உள்ளடக்கம்:


தலைப்பு: “கிரேத்தாவிலுள்ள ஒரு போதகருக்கு அறிவுரை அளித்தல்”

கருப்பொருள்: சபையை வழிநடத்தி, அறிவுறுத்துவதற்கான போதனைகள்.

நோக்கம்: கிரேத்தா தீவிலுள்ள சபைக்கு மேய்ப்பனாக செயல்படுவதில் தீத்துவிற்குப் போதனையளித்தல்.

குறிப்பு விவரம்: ஒழுங்கு மற்றும் நிர்வாகத்தின் பிரிவுகள்:

1. சபையின் ஒழுங்கு (தீத்து: 1:5-19)

2. சபையின் நிர்வாகம் (தீத்து: 1:10 - 3:14)

முக்கியவசனம்: தீத்து: 2:7,8 - “நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, எதிரியானவன் உங்களைக் குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமில்லாதவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri 15 Jun 2012 - 5:11

18. பிலமோன்

அ) பின்னணி:


ஆசிரியர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: ரோம சிறை (பிலமோன்: 19 வசனம்)

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.60 - கி.பி.62

சேருமிடம்: பிலமோனும், சபையும்.

காலத்தின் தேவை: திரும்பி வந்த ஒநேசிமு.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “ஓடிச்சென்ற ஒரு அடிமை திரும்பி வருகிறான்”

கருப்பொருள்: ஓர் அடிமையின் சார்பில் நட்புடன் பேசுவதற்காக எழுதப்பட்ட ஒரு கடிதம்.

நோக்கம்: ஓடிச் சென்ற ஒரு அடிமையை, பவுல் சிறையிலிருக்கும் போது கிறிஸ்துவினிடம் வழிநடத்தினபடியால், அவனை ஒரு சகோதரனாக ஏற்றுக் கொள்ளும்படி, பிலமோனிடம் நட்புடன் பரிந்து பேசி வேண்டிக்கொள்ளுதல் (பிலமோன் 10 வசனம்).

குறிப்பு விவரம்: முறைப்படியற்ற கடிதம். வரையறுக்கப்பட்ட குறிப்பு விவரம் இல்லை.

முக்கியவசனம்:

பிலமோன்: 17 வசனம் - “ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை ஏற்றுக் கொள்வதுபோல அவனையும் ஏற்றுக் கொள்ளும்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri 15 Jun 2012 - 9:53

பொதுவான நிருபங்களுக்கு ஒரு முன்னுரை


எபிரேயு முதல் யூதா வரை
I. பெயர்:

A. பொதுவான நிருபங்கள்:

1. குற‌ைந்த அளவிலான பொது அம்சங்கள்:

a. வேறுபட்ட உள்ளடக்கம்:

நெறிமுறை சார்ந்தது (1யொவான்), இம்மை, மறுமை குறித்த கோட்பாட்டைச் சார்ந்தது (2பேதுரு).

b. வேறுபட்ட அமைப்பு:

1யோவானில் வாழ்த்துக்களும் பிரியாவிடையும் காணப்படவில்லை.

2. பொதுவான செய்தி ஒரு பொதுப்படையான அம்சமாகும்.

a. நிருபங்களின் செய்தி ஒரு உள்ளூ்ர் ஐக்கியத்திற்கு மட்டும் அளிக்கப்படாமல் அனைத்து விசுவாசிகளுக்கும் அளிக்கப்படுகிறது.

b. ஆசிரியரின் பெயர் தலைப்பாக அமைகிறது.


B. எபிரேயர்:

1. பிரத்தியேகமானது: ஆசிரியர் அறியப்படாதவர்.

2. யாருக்காக எழுதப்படுகிறது என்பதைக் குறித்த விவரம் இல்லை.


II. பின்னணி:


A. அடக்குமுறையின் உபத்திரவம்:

1. மதப்பிரகாரமாக (எபிரேயு, யாக்கோபு).

2. அரசியல்ரீதியாக (1பேதுரு).

B. முரண்பாடான சமயக் கருத்துக்கள்:

1. கிறிஸ்து சரீரப்பிரகாரமாக மனித உருவெடுத்தார் என்பதையும், விசுவாசத்தினாலுண்டாகும் இரட்சிப்பையும் சமரச மறையியல் கோட்பாடு மறுக்கிறது. (சமரச மறையியலின் முரண்பாடான சமயக் கருத்துக்களை தவறு என நிருபிப்பதற்காக 1யோவான், 2யோவான், 3யோவான் எழுதப்பட்டது). சமரச மறையியல் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் அறிவினாலுண்டாகும் இரட்சிப்பை விசுவாசிக்கிறார்கள். (கிரேக்க மொழியில் “நாசிஸ்” (Gnosis) என்றால் “அறிவு” என்று பொருள்).

2. நியாயபிரமாண மறுப்பின் கோட்பாடு: கிறிஸ்துவிலுள்ள விசுவாசம் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளிலிருந்து ஒரு மனிதனை முழுமையாக விடுவிக்கிறது என்ற நம்பிக்கை - “நியாயப்பிரமாண மறுப்பின் கோட்பாடு” ஆகும். (இந்த முரண்பாடாண போதனையை மறுப்பதற்காக 2பேதுரு, யூதா, யாக்கோபு ஆகியவை எழுதப்பட்டன)


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri 15 Jun 2012 - 10:16

19. எபிரேயர்

அ) பின்னணி:


ஆசிரியர்: அறியப்படாதவர் (பவுல்? அப்பொல்லோ? பர்னபா?) தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. இப்புத்தகத்தை எழுதியவர் தேவன் ஒருவர் மட்டுமே அறிவார்.

எழுதப்பட்ட இடம்: அறியப்படவில்லை.

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.67 - கி.பி.68.

சேருமிடம்: ரோமாபுரி

எந்நிலையில் எழுதப்பட்டது:

யூதா விசுவாசிகளுக்கு எதிராக அதிகாிக்கும் எதிர்ப்பைக் கையாளும்போது.

ஆ) உள்ளடக்கம்:


தலைப்பு: “கிறிஸ்து என்னும் மேலான வழி”

கருப்பொருள்:

பழைய ஏற்பாட்டின்மீது கிறிஸ்துவின் மேலான தன்மை (“மேலான” என்ற பொருளைக் குறிக்கும் “அதிக, விச‌ேஷித்த” போன்ற வார்த்தைகள் 13 முறை உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன).

நோக்கம்:

கிறிஸ்துவுக்குள்ளான தங்களுடைய விசுவாசத்தின் நிமித்தம் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் யூத விசுவாசிகள் மீண்டுமாக யூத கோட்பாடுகளிடம் திரும்புவதைத் தவிர்ப்பதற்காக கிறிஸ்துவின் மேலான தன்மையை எடுத்துக் காட்டுதல். (எபிரேயர்: 10:32-36; 12:3,4).

குறிப்பு விவரம்: அறிவுரை (“கடவோம்” என்ற வார்த்தை 13 முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது); உபயோக்கிக்கப்பட வேண்டிய ஒரு பிரசங்கம் (எபிரேயர்: 13:22; 10:19-25).

1. அறிவிப்பு: கிறிஸ்துவின் மேலான தன்மை (எபிரெயர்: 1:1 - 10:39).

2. செயல்முறை: விசுவாசத்தின் மேலான தன்மை (எபிரெயர்: 11:1 - 13:17).

முக்கியவசனம்:

எபிரேயர்: 4:14 - “வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இய‌ேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கக்கடவோம்.”



தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri 15 Jun 2012 - 13:43

20. யாக்கோபு

அ) பின்னணி:


ஆசிரியர்: யாக்கோபு

எழுதப்பட்ட இடம்: எருசலேம்

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.48 - கி.பி.62

சேருமிடம்: சிதறடிக்கப்பட்ட யூத விசுவாசிகளின் மத்தியில்

எப்போது தேவைப்பட்டது:

எதிர்ப்பையும் நியாயப்பிரமாண மறுப்பின் கோட்பாட்டையும் எதிர்நோக்கும் யூத விசுவாசிகள்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: உண்மையான மதம்

கருப்பொருள்: கிரியையுள்ள விசுவாசம்

நோக்கம்:

பல்வ‌ேறு உபத்திரவங்களினாலும், சோதனையினாலும் தங்களுடைய விசுவாசத்தில் பரீட்சிக்கப்பட்டுக் கொண்டிருந்த யூத விசுவாசிகளை ஊக்குவிக்கும்படியாக எழுதப்பட்டது. இரட்சிப்புக்குரிய விசுவாசத்தைக் குறித்த பல்வேறு தவறான கருத்துக்களை சரி செய்வதற்காக. இதை வாசிப்பவர்கள் தங்களுடைய நீதியுள்ள விசுவாச வாழ்க்கையோடும், நற்கிரியைகளோடும் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்ற போதனையும் புத்திமதியும் கொடுப்பதற்காக.

குறிப்பு விவரம்: நான்கு பிரசங்கங்கள்:

1. சோதனைகள் (யாக்கோபு: 1:2 - 18)

2. அன்பின் பிரமாணம் (யாக்கோபு: 1:19 - 2:26)

3. தீமையைப் பேசுதல் (யாக்கோபு: 3:1 - 4:12)

4. துன்பத்தைச் சகித்தல் (யாக்கோபு: 4:13 - 5:20)

முக்கியவசனம்:

யாக்கோபு: 1:27 - “திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னை காத்துக்கொள்ளுகிறதும‌ே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat 16 Jun 2012 - 8:32

21. 1பேதுரு

அ) பின்னணி:


ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பேதுரு, சில்வானு (1பேதுரு:5:12)

எழுதப்பட்ட இடம்: ரோமாபுரி.

எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.62 - கி.பி.64

சேருமிடம்: ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள்

காலத்தின் தேவை: ரோமாபுரியில் உபத்திரவத்திற்குட்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள்

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “பாடுகளின் மூலமாக இரட்சிப்பு”

கருப்பொருள்: பாடுகளின் மூலமாக தேவனுடைய கிருபையில் நிலைத்திருத்தல்.

நோக்கம்: உபத்திரவத்திற்குட்ப‌ட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குள்ளான தங்களுடைய விசுவாசத்தில் உறுதியுடன் நிலைநிற்கும்படி அவர்களை ஊக்குவித்தல்.

குறிப்பு விவரம்: மூன்று கோட்பாடு மற்றும் உபயோகப் பகுதிகள்.

1. அறிவிப்பு: இரட்சிப்பு (1பேதுரு: 1:3-12)

அறிவுரை: பரிசுத்தராயிருங்கள் (1பேதுரு: 1:13 - 2:3)

2. அறிவிப்பு: தேவனுடைய மக்கள் (1பேதுரு: 2:4-10)

அறிவுரை: ஒப்புக் கொடுங்கள் (1பேதுரு: 2:11 - 3:17)

3. அறிவிப்பு: பாடு அனுபவித்தல் (1பேதுரு: 3:18-22)

அறிவுரை: களிகூறுங்கள் (1பேதுரு: 1பேதுரு: 4:1 - 5:11)

முக்கியவசனம்:

1பேதுரு: 5:12 - “உங்களுக்குப் புத்தி சொல்லும்படிக்கும், நீங்கள் நிலை கொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும்; நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.”


தொடரும்...


Sponsored content

PostSponsored content



Page 18 of 19 Previous  1 ... 10 ... 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக