புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10 
7 Posts - 64%
heezulia
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10 
8 Posts - 2%
prajai
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10 
4 Posts - 1%
mruthun
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 12:14 am

உறவுகளே வணக்கம்...

முதலில் மன்னியுங்கள் என்னை...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நான் உணர்ச்சிவசப்பட்டவன்தான்...உண்மை...ஒத்துக்கொள்கிறேன்...

ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...

(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)

நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...

ஈழத் தமிழன்-இந்தியத் தமிழன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டே தூண்டுகின்றனர்...
இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...
அதற்கும் இந்தத் தமிழினம் மௌனம் காக்கும் என்று நினைத்துதான் இத்துனை விஷமப் பிரச்சாரம்...

ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...

தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...

உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...

இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...

நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
கருத்துப் பேசுகிறேன் என்ற போர்வையில் எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தினால்......
????????????????????????????????????????????????????????????????????.....


நன்றி.

(இந்தக் கட்டுரை ஏற்போர் மட்டும் ஏற்கலாம்...இதற்கும் ஈகரை நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை...)



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 1:44 am

எதற்கு மன்னிக்க வேண்டும்?

தமிழனை இழிவு படுத்தி சேற்றை வாரி அடிப்பவனே சேற்றில் வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதில் சில தமிழர்களும் சேற்றை வாரி இறைக்க அவர்களுடன் இருப்பதுவே கேவலமான விஷயம்.

சுய லாபங்களுக்காக எந்த ஒரு தனி மனிதன் விலை போகிறானோ அங்கு அன்பு, நட்பு இவை எல்லாம் பேசி பிரயோஜனமில்லை.

சின்ன கல்லு பெத்த லாபம் அடையலாம் என்றெண்ணி சாமரம் வீசித் திரிபவனை குப்பையை விட கேவலமாக தூக்கி எரியும் நாளும் வரும்.

சரி இதற்கெல்லாம் ரொம்ப வருத்தப் படாதீங்க ராரா. நடப்பதைக் காணத்தானே போகிறோம். காத்திருப்போம் நாம் அதுவரை.


யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 1:54 am

கொலவெறி wrote:எதற்கு மன்னிக்க வேண்டும்?

தமிழனை இழிவு படுத்தி சேற்றை வாரி அடிப்பவனே சேற்றில் வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதில் சில தமிழர்களும் சேற்றை வாரி இறைக்க அவர்களுடன் இருப்பதுவே கேவலமான விஷயம்.

சுய லாபங்களுக்காக எந்த ஒரு தனி மனிதன் விலை போகிறானோ அங்கு அன்பு, நட்பு இவை எல்லாம் பேசி பிரயோஜனமில்லை.

சின்ன கல்லு பெத்த லாபம் அடையலாம் என்றெண்ணி சாமரம் வீசித் திரிபவனை குப்பையை விட கேவலமாக தூக்கி எரியும் நாளும் வரும்.

சரி இதற்கெல்லாம் ரொம்ப வருத்தப் படாதீங்க ராரா. நடப்பதைக் காணத்தானே போகிறோம். காத்திருப்போம் நாம் அதுவரை.

கொலவெறி wrote:எதற்கு மன்னிக்க வேண்டும்?

தமிழனை இழிவு படுத்தி சேற்றை வாரி அடிப்பவனே சேற்றில் வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதில் சில தமிழர்களும் சேற்றை வாரி இறைக்க அவர்களுடன் இருப்பதுவே கேவலமான விஷயம்.

சுய லாபங்களுக்காக எந்த ஒரு தனி மனிதன் விலை போகிறானோ அங்கு அன்பு, நட்பு இவை எல்லாம் பேசி பிரயோஜனமில்லை.

சின்ன கல்லு பெத்த லாபம் அடையலாம் என்றெண்ணி சாமரம் வீசித் திரிபவனை குப்பையை விட கேவலமாக தூக்கி எரியும் நாளும் வரும்.

சரி இதற்கெல்லாம் ரொம்ப வருத்தப் படாதீங்க ராரா. நடப்பதைக் காணத்தானே போகிறோம். காத்திருப்போம் நாம் அதுவரை.


நடக்கும் அண்ணா...நம்பிக்கை இருக்கு...



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
zazgopi
zazgopi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 03/01/2012

Postzazgopi Sun May 13, 2012 8:42 am

உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று தான். ஆனால், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களெல்லாம் தமிழகத் தமிழர்களை எவ்வளவு கேவலமாக மதிக்கிறார்கள் எனத் தெரியுமா?

தமிழ் நாட்டில் வாழும் தமிழன் வறுமையானவன், விவரமில்லாதவன், நாகரீகம் என்றால் சிறிதும் அறியாதவன் - இவ்வாறுதான் இன்று வரை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் அறியப்படுகிறோம் என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறீர்களா?

ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பிழைப்புத் தேடிச் சென்ற தமிழர்களை அங்குள்ள தமிழர்கள் எவ்வாறு வார்த்தையாலும், உடலளவிலும் கொடுமைப்படுத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. 1970 க்கு முன் இலங்கையில் யாராவது பணி புரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

ஏன் அத்தனை ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும், தற்பொழுது மலேசியாவில் பணிபுரியும் தமிழகத் தொழிலாளர்களின் நிலையாவது தெரியுமா? அங்குள்ள தமிழர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழகத் தொழிலாளர்கள் ஏராளம். வேலை செய்து சம்பளம் கேட்டதற்காக தாக்கப்பட்ட தமிழர்கள், வேலை முடித்து வீட்டிற்கு நடந்து செல்லும் பொழுது அவர்களை அடித்து காயப்படுத்தி அவர்களிடமுள்ள பணத்தை பறித்துச் செல்லும் மலேசிய வாழ் பெருந்தன்மை வாய்த்த தமிழர்கள் (இப்படிப் பிழைப்பதற்கு தாய், தங்கைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திச் சம்பாதிக்கலாம்), அவர்களின் கடை பெர்மிட்டில் வந்த ஒரே காரணத்திற்காக தமிழகத் தொழிலாளர்களை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்ய வைத்து கொடுமைப்படுத்தும் நாகரீகம் வாய்ந்த தமிழர்கள், இவர்களைப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டதில்லையா? இவர்களுக்கு உலகத் தமிழர்களெல்லாம் சகோதர உறவுகள் என்பது தெரியாதா? ஸாரி, தொப்புள் கொடி உறவு.........! (போங்கடா, நீங்களும் உங்கள் தொப்புள் கொடி உறவும்)

எப்படி ஐயா உலகமெங்கும் வாழும் தமிழனெல்லாம் ஒரே இனம் என்று கூறுகிறீர்கள். பிரச்சனை என்று வந்தால் மட்டும் தமிழகத் தமிழன் வேண்டும், இல்லையென்றால் அவனைப் பற்றி கேவலமாகப் பேச வேண்டும், அவனால் முன்னேறி அவனை மிதிக்க வேண்டும். இது தெரியாத தமிழகத் தமிழன் வீறு கொண்டு எழுந்து இந்தக் கேவலமான தமிழர்களுக்காக போராட வேண்டும். எதையுமே முழுவதுமாக ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள்.

அயல் நாடுகளில் கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் மழைநீரைப்போல் அந்தந்த கலாச்சாரத்துடன் ஒன்றிவிட்டார்களே தவிர, தமிழகக் கலாச்சாரத்துடனோ, சகோதர பாசத்துடனோ யாரும் வாழவில்லை. அவர்கள் பிரச்சனையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள், தீர்த்துக் கொள்வார்கள்.

மலேசியத் தமிழனுக்கு மலேசியக் கொடிதான் தேசியக் கொடி, இலங்கைத் தமிழனுக்கு இலங்கையின் கொடிதான் தேசியக் கொடி, இந்தியக் கொடியைக் காட்டினால் கிழித்தெரிந்துவிடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் அன்புச் சகோதரர்களே.

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sun May 13, 2012 8:56 am

ரா.ரா3275 wrote:
நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...

இது கடந்த 3500 வருடங்களாக இருந்து வருகிறது. இது அறிவுஜிவிதக் குழு அல்ல.சூழ்ச்சிக் குழு. நாம் நம்மை உணருவதில்லை. அடுத்தவரை சொல்லி என்ன பயன் நண்பரே ?


ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun May 13, 2012 9:32 am

முதலில் ஒரு சிறு விளக்கம்

நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது.


முதலில் நான் சொன்னது:

ஆளுங்க wrote:அவர் கூறியுள்ளதில் பல உண்மை தானே?? இவற்றில் எத்தனையை உங்களால் மறுக்க முடியும்?
அப்படி அபாண்டமாக எழுதி இருக்கிறார் என்று கருதினால், அவர் அப்படி தவறாக எழுதியுள்ள கருத்துகளைச் சொல்லுங்களேன்...

நண்பரே...எனது வாதம் உங்கள் மனதைப் புண்படுத்தலாம். ஏனெனில், சில சமயம் உண்மை கசக்கத் தான் செய்யும்!!


அதற்கு உங்கள் பதிலில் பகுதி:
ரா.ரா3275 wrote:இப்படி எங்களிடமும் மறுப்பறிக்கை வாசிக்க உயிரான ஆதாரங்கள் இருக்கின்றன நண்பரே...
சிலரின் பாதுகாப்பு கருதி இன்னும் சில விஷயங்களை இங்கு சொல்ல இயலவில்லை...
நாங்கள் ஒன்றும் தெரியாத மூடர்கள் என்று நினைத்த அந்த நொடியே நீங்கள் வாதிட ஏற்றவர் இல்லை என்று புரிந்துவிட்டது...

அப்புறம்...நீங்கள் எப்போது உண்மை மட்டுமே பேசுபவர் என்பதை உறுதிப் படுத்தியமைக்கு நன்றி...

என்கிற உங்கள் கருத்துக்குத் தான் நான் இப்படி பதில் எழுதினேன்....

ஆளுங்க wrote:அப்படியாங்க???

நீங்க பதில் சொல்லலை என்று தானே சொன்னேன்?? நீங்களா அதற்கு திரைக்கதை, வசனம் என்று எழுதினால் எப்படி??

நீங்கள் சொன்னதற்கு மறுப்பு தெரிவிக்கவும் ஆதாரம் உள்ளது... நானும் சிலரின் பாதுகாப்பு கருதி இங்கு சொல்ல இயலவில்லை..
ஆனால், உங்கள் பதிலைப் பார்த்து திகைத்தேன்..

ரா.ரா3275 wrote:
நண்பரே...நம் தளத்தின் நாகரீகம் கருதி அமைதி காக்க வேண்டி இருக்கிறது...
என் தொழிலை இதில் இழுத்துப் பேசினீர்கள் என்றால்...அது நியாயமாகாது...
உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி என் தொழிலை நான் பயன்படுத்த வேண்டிய
கீழ்த்தரமான செயலில் இறங்கும் ஆள் நான் இல்லை..
.

நீங்கள் மட்டுமே எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று நினைத்து சீண்டாதீர்கள் யாரையும்...
வேண்டாம் நண்பரே...நீங்கள் எல்லை தாண்டி எல்லோரையும் சீண்டி சிண்டு முடிகின்றீர்கள்..
இது நல்லதல்ல...நாகரீகமும் அல்ல...

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றே தெரியாமல் இருக்கும் போது, உங்கள் தொழிலைப் பற்றி பேசியதாக சொல்கிறீர்கள்..

நான் எழுதிய எந்த வரியிலும் மறைமுகமாக எதையும் குறிக்கவில்லை.. நேரடியாக தான் சொன்னேன்.
உங்களைக் காயப்படுத்தும் நோக்கில் அப்படி எழுதவில்லை!!

அப்படி மறைமுகமாகவோ, நேர் முகமாகவோ நீங்களாகவே வேறு பொருள் கொண்டு புண்பட்டதாக நினைத்தால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல!!

இதோ வரேன் அடுத்து!



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 9:42 am

ராரா விடுங்கள். நன்றாக இருக்கும் குட்டையை கிளப்புவது சிலருக்கு வேலையாக போய்விட்டது... என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 13, 2012 9:49 am

மகா பிரபு wrote:ராரா விடுங்கள். நன்றாக இருக்கும் குட்டையை கிளப்புவது சிலருக்கு வேலையாக போய்விட்டது... என்ன கொடுமை சார் இது

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 13, 2012 9:54 am

ஒரு காலத்தில் அவர்கள் அப்படி இருந்திருக்கலாம் அதற்காக இப்போது வாடிகொண்டிருக்கும் தமிழர்களின் வாழ்விற்கு வழி காண முயற்ச்சிக்க வேண்டும். ஏன் உள்ளூரிலே இருக்கும் தமிழன் உள்ளூர் ஏழை தமிழனை வாட்டவில்லையா. அதற்காக ஒரு காலத்தில் அப்படி செய்தார்கள் இப்படி செய்தார்கள் என்று இறந்த காலத்தை பேசி அதில் திருப்தி அடைவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. தாய் செய்த தவறுக்கு குழந்தையை தண்டனை அனுபவிக்க சொல்வது போல் உள்ளது இந்த கூற்று. தமிழன் ரோட்டிலே கிடக்கும் நாயை கூட காப்பாற்றும் குணம் கொண்டவன். தன மக்கள் மாற்றனால் வதை படுவதை எப்படி கல் மனத்துடன் பார்த்து கொண்டு இருப்பான். நார்வே நாட்டு காரனுக்கு உள்ள இரக்கம் கூட நமக்கு இல்லையென்றால் நாம் என்ன மனிதர்கள். இந்த மாதிரி விசயங்களில் கருத்து சொல்லும்போது நமக்குள் ஒற்றுமை வேண்டும்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun May 13, 2012 9:58 am

சரி....இங்கும் நான் நேரடியாகத் தான் எழுதுகிறேன் (வேறு மறைமுக அர்த்தம் கொண்டால் நான் பொறுப்பல்ல!!

ரா.ரா3275 wrote:
நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு
இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து
உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக்
குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...

ஈழத் தமிழன்-இந்தியத் தமிழன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டே தூண்டுகின்றனர்...
இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...
அதற்கும் இந்தத் தமிழினம் மௌனம் காக்கும் என்று நினைத்துதான் இத்துனை விஷமப் பிரச்சாரம்...

என்ன நண்பரே, இப்படி சொல்கிறீர்கள்?
மறந்து விட்டதா முதலில் யார் பிரித்தனர் என்று?


இதோ உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்
சுதந்திரம் பெற்ற சில நாட்களுக்குள்ளேயே இலங்கையில் "குடியுரிமைச் சட்டம்" இயற்றப்பட்டதல்லவா?
அதிலேயே பல அம்சங்கள் தமிழர்களுக்கு எதிராக இருந்தனவே?

அதன் மூலம் இந்திய வம்சாவழி தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது .. பல லட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களை குடியுரிமை சட்டம் போட்டு வெளியேற்றிய போது, எங்கே போனார்கள் அன்றிருந்தவர்கள்?

அப்போது ஈழத்தமிழர்கள் அதனை எதிர்க்கவில்லையே?? ஏன்?

அன்று ஈழம்- இந்தியா என்று பிரித்து பார்த்தது யார்? சொல்லுங்க!!!

சரி.. அதை விடுவோம்!!

இதோ இன்று சிலர்....
பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்வதாக சொல்வதற்கு:

ஈகரையில் பதிவாகி இருக்கும் இந்த திரியைப் படித்துப் பாருங்கள் ( ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா?) http://www.eegarai.net/t56111-topic


ஆளுங்க wrote:
kirikasan wrote:
ஆளுங்க wrote:
kirikasan wrote:
பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேயிலைத் தோட்டங்களை உருவாக்க என அழைத்துச் செல்லப்பட்டவர்களை நினைத்துக் கொண்டு.


இதை நான் கண்டிக்கிறேன்..
தேயிலைத் தோட்டங்களை உருவாக்க அழைத்து செல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் தமிழர்களே..

அப்படியெனில், அவர்களை நீங்கள் எப்படி சேர்க்கிறீர்கள்?

தமிழர் என்று ஒன்றாய் கருதுகிறீர்களா அல்லது ஈழத்தமிழர் அல்லாதவர் என்பதால் ஒதுக்குகிறீர்களா?

நிச்சயமாக..
தங்கள் கருத்தை முழுதாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இது நான் எழுதியதல்ல.
அங்கே குறிப்பிட்ட இணயத்தளத்திலிருந்து எடுத்தேன். அந்த வசனத்தை நீக்குவோமா
என்று எண்ணிவிட்டு அதை எடிட் செய்வதற்கு ஆக்கத்தின் உண்மையான வடிவத்தை
திருத்தும் உரிமை எனக்கில்லை என்பதால் அப்படியே போட்டுவிட்டேன். உங்கள்
கருத்தோடு நான் முழுதாக ஒத்துப்போகிறேன். அந்த ஒரு வசனத்துக்காக மிகுதியை
போடாமல் விட மனம் கேட்கவில்லை ஆனாலும் அதில் மோசமாக ஒன்றும் தெரியவில்லை.
அந்த தமிழரை நினைத்து தவறாக கூறுகிறார்கள் என கொள்ளலாமே

அதற்கு முன்பே பிரிவினைக்கு அடிக்கோலிடப்பட்டு இருக்கிறது!!

kirikasan wrote:
தமிழகத்தவர்களுக்குத் தமிழகம் எப்படிப் பூர்வீகப் பூமியோ, அப்படி ஈழத் தமிழர்களுக்குத் தமிழீழப்பகுதி பூர்வீகப் பூமியாகும்.

இந்த வரியே கட்டுரையாளர் தமிழர்களை நாடுகள் வாரியாக பிரிக்கிறாரோ என்று ஐயப்பட வைக்கிறது..

தமிழர்கள் மொழியால் தான் இணைந்திருக்கிறார்கள்.. நாட்டால் அல்ல!!
இதற்கு சோழ, பாண்டிய அரசுகளே ஒரு உதாரணம்...

தமிழகத்தவர், ஈழத்தமிழர் என்று பிரித்து எழுதி தனி அடையாளம் பெற இந்த கட்டுரை முயற்சி செய்கிறதோ என்று தோன்றுகிறது!!

kirikasan wrote:
நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு வரலாறு எழுதும்போது பிரிவுகளை எடுத்துக்காட்ட வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு எழுத முடியாது
அப்படி பேசக்கூடாது தமிழர் எல்லோரும் ஒன்று என்றுமட்டும்தான் எழுதுவதானால் வரலாறு எழுத முடியாது

இதற்கு உங்கள் பதில் என்ன?

வரலாறு, இடம் என்றால் மட்டும் பிரித்து பார்க்கணும்?
மற்றபடி 'ஒன்றே குலம்' தானா?

உங்களுக்கு வந்தால் அது ரத்தம்; எனக்கு வந்தால் அது தக்காளி சட்னியா?

இன்னும் வரும்............



மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக