புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்!
Page 1 of 1 •
நூல்... இந்த ஒற்றைச் சொல்லுக்குள் நுணுக்கமான பல கருத்துகள் அடங்கியிருக்கின்றன.
மனைக் கோட்டம் நீக்கவும், மரத்தின் கோட்டம் நீக்கவும் நூல் உதவும். அதுபோல் மனக் கோட்டம் நீக்கவும் புத்தகம் என்ற நூல் உதவும்.
`ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை. ஆம்! ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும். பாடப் புத்தகங்களை மட்டுமல்ல, பயனுள்ள புத்தகங்களையும் தேடிப் படிக்க வேண்டும்.
தேடலில் உள்ள சுகம்... சுமையானதல்ல, சுகமானது!
புத்தகங்கள் காலமெனும் கடலில் கட்டப்பட்டிருக்கின்றன கலங்கரை விளக்கங்கள். இவை திசைகளைக் காட்டும். திசைகளைத் தெரிந்துகொண்டால் தேடுவது கிடைத்துவிடும்.
அந்தத் தேடல் இன்றைக்கு எங்கே போனது?
சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள் என்றால் நம்மில் பலர் இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காமல் தடுமாறுகிறோம். ஏன் இந்தத் தடுமாற்றம்?
சினிமாவைப் பற்றி, கிரிக்கெட்டைப் பற்றி மணிக் கணக்காக, நாள்கணக்காகப் பேச நேரமிருக்கிறது. வாசித்த புத்தகங்களைப் பற்றி எத்தனை பேரிடம் பேசியிருப்போம்?
`ஒரு மனிதன் எத்தனை புத்தகங்கள் படித்தான் என்பதை வைத்துத்தான் அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும்' என்றார் ஹென்றி டேவிட் தாரோ. வாழ்தலின் அடையாளம் புத்தகங்கள்.
வாசிக்காத நாட்களெல்லாம் சுவாசிக்காத நாட்கள்
உயிர் வாழ்வதற்கு காற்றைச் சுவாசிக்கிறோம். அதைப் போல முறையாக வாழ்வதற்கு நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும்.
அறிவை விரிவு செய்வதற்கும், புரட்டிப் போடுகின்ற வாழ்க்கையின் ராட்சதச் சுழற்சியில் உலர்ந்து போகின்ற மனசை ஈரப்படுத்திக்கொள்வதற்கும், வற்றிப் போய்க்கொண்டிருக்கிற இதயத்தில் அன்பு, ஈகை, கருணை, பாசம், பரிவு போன்ற நல்லுணர்வுகளை மெல்லுணர்வுகளாக மாற்றிக்கொள்வதற்கும் புத்தக வாசிப்பு பயன்படுகிறது.
வாசிப்பின் மூலம் பல சாதனைகள் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. அதனால்தான் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் புத்தகம் படிக்கும் மாதம் ஒன்றை அறிவிக்கிறார்கள். அமெரிக்காவில் வருடந்தோறும் பத்து சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை இலவசமாகக் கொடுக்கிறார்கள். ஆஸ்திரேலிய அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளையில் புத்தக வாசிப்பு நேரம் ஒன்றைக் கடைப்பிடிக்கிறார்கள்.
சினிமா வந்தது, இன்டர்நெட் வந்தது, இனிமேல் புத்தகங்களின் காலம் முடிந்தது என்று யாரும் புலம்பத் தேவையில்லை. அவை இரண்டும் புத்தகத்தின் இடத்தைப் பிடிக்க முடியாது.
புத்தகம்தான் கற்பனை செய்ய அனுமதிக்கிறது. இணையம் வெறும் தகவல் தரும் சாதனமாக மட்டுமே இருக்கிறது. மனதை ஊடுருவும் வல்லமையை அது இன்னமும் அடையவில்லை. காரணம், புத்தகத்தை நாம் தொட்டு உணர்கிறோம்.
தோழனே இது
புத்தகம் அல்ல
இதைத் தொடுபவன்
மனிதனைத் தொடுகிறான்
நீயும் நானும்
நெருக்கமாகிறோம்
இதோ!
இதன் பக்கங்களிலிருந்து நான் உன்
கைகளுக்குத் தாவுகிறேன்
என்கிறான், புதுக்கவிதையின் பிதாமகன் வால்ட் விட்மன். ஆம்! எல்லைகளையும் காலங்களையும் கடந்து இதயங்களை ஒன்றிணைக்கும் நட்புப் பாலம் புத்தகங்கள்.
மழை பொழிகையில் மண் வாசத்தை நுகர்வதைப் போல வாசிப்பின் மூலம் புத்தக மணத்தையும் நுகரலாம். அதன் மணம் எழுத்துக்கு ஏற்ப, எழுத்தாளனுக்கு ஏற்ப இதயத்தை வருடும். நல்ல வாசிப்பின் மூலம் அதை உணரலாம்.
மனைக் கோட்டம் நீக்கவும், மரத்தின் கோட்டம் நீக்கவும் நூல் உதவும். அதுபோல் மனக் கோட்டம் நீக்கவும் புத்தகம் என்ற நூல் உதவும்.
`ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை. ஆம்! ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும். பாடப் புத்தகங்களை மட்டுமல்ல, பயனுள்ள புத்தகங்களையும் தேடிப் படிக்க வேண்டும்.
தேடலில் உள்ள சுகம்... சுமையானதல்ல, சுகமானது!
புத்தகங்கள் காலமெனும் கடலில் கட்டப்பட்டிருக்கின்றன கலங்கரை விளக்கங்கள். இவை திசைகளைக் காட்டும். திசைகளைத் தெரிந்துகொண்டால் தேடுவது கிடைத்துவிடும்.
அந்தத் தேடல் இன்றைக்கு எங்கே போனது?
சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள் என்றால் நம்மில் பலர் இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காமல் தடுமாறுகிறோம். ஏன் இந்தத் தடுமாற்றம்?
சினிமாவைப் பற்றி, கிரிக்கெட்டைப் பற்றி மணிக் கணக்காக, நாள்கணக்காகப் பேச நேரமிருக்கிறது. வாசித்த புத்தகங்களைப் பற்றி எத்தனை பேரிடம் பேசியிருப்போம்?
`ஒரு மனிதன் எத்தனை புத்தகங்கள் படித்தான் என்பதை வைத்துத்தான் அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும்' என்றார் ஹென்றி டேவிட் தாரோ. வாழ்தலின் அடையாளம் புத்தகங்கள்.
வாசிக்காத நாட்களெல்லாம் சுவாசிக்காத நாட்கள்
உயிர் வாழ்வதற்கு காற்றைச் சுவாசிக்கிறோம். அதைப் போல முறையாக வாழ்வதற்கு நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும்.
அறிவை விரிவு செய்வதற்கும், புரட்டிப் போடுகின்ற வாழ்க்கையின் ராட்சதச் சுழற்சியில் உலர்ந்து போகின்ற மனசை ஈரப்படுத்திக்கொள்வதற்கும், வற்றிப் போய்க்கொண்டிருக்கிற இதயத்தில் அன்பு, ஈகை, கருணை, பாசம், பரிவு போன்ற நல்லுணர்வுகளை மெல்லுணர்வுகளாக மாற்றிக்கொள்வதற்கும் புத்தக வாசிப்பு பயன்படுகிறது.
வாசிப்பின் மூலம் பல சாதனைகள் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. அதனால்தான் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் புத்தகம் படிக்கும் மாதம் ஒன்றை அறிவிக்கிறார்கள். அமெரிக்காவில் வருடந்தோறும் பத்து சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை இலவசமாகக் கொடுக்கிறார்கள். ஆஸ்திரேலிய அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளையில் புத்தக வாசிப்பு நேரம் ஒன்றைக் கடைப்பிடிக்கிறார்கள்.
சினிமா வந்தது, இன்டர்நெட் வந்தது, இனிமேல் புத்தகங்களின் காலம் முடிந்தது என்று யாரும் புலம்பத் தேவையில்லை. அவை இரண்டும் புத்தகத்தின் இடத்தைப் பிடிக்க முடியாது.
புத்தகம்தான் கற்பனை செய்ய அனுமதிக்கிறது. இணையம் வெறும் தகவல் தரும் சாதனமாக மட்டுமே இருக்கிறது. மனதை ஊடுருவும் வல்லமையை அது இன்னமும் அடையவில்லை. காரணம், புத்தகத்தை நாம் தொட்டு உணர்கிறோம்.
தோழனே இது
புத்தகம் அல்ல
இதைத் தொடுபவன்
மனிதனைத் தொடுகிறான்
நீயும் நானும்
நெருக்கமாகிறோம்
இதோ!
இதன் பக்கங்களிலிருந்து நான் உன்
கைகளுக்குத் தாவுகிறேன்
என்கிறான், புதுக்கவிதையின் பிதாமகன் வால்ட் விட்மன். ஆம்! எல்லைகளையும் காலங்களையும் கடந்து இதயங்களை ஒன்றிணைக்கும் நட்புப் பாலம் புத்தகங்கள்.
மழை பொழிகையில் மண் வாசத்தை நுகர்வதைப் போல வாசிப்பின் மூலம் புத்தக மணத்தையும் நுகரலாம். அதன் மணம் எழுத்துக்கு ஏற்ப, எழுத்தாளனுக்கு ஏற்ப இதயத்தை வருடும். நல்ல வாசிப்பின் மூலம் அதை உணரலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புத்தகங்கள் கலங்கரை விளக்கங்கள்
புத்தகங்கள் ஞானம் தரும் போதிமரங்கள். கருத்துகள் பிறக்கும் பிரசவ அறை. வரலாறு உயிர்த்தெழும் உன்னத இடம். இவற்றோடு புத்தகங்கள் கலங்கரை விளக்கங்கள். ஆம்! இருட்டில் பயணிப்பவர்களுக்கு வெளிச்சம் காட்டும், வெளிச்சத்தின் வழி திசை காட்டும்.
அறிவு என்ற வார்த்தைக்கு இணையான சொல் புத்தகம் மட்டுமே. புத்தகம் புதுமையையும் படைக்கும், புரட்சியையும் படைக்கும். உலகில் பெரிய மாறுதல்களைப் போர்க்களங்கள் மட்டும் செய்யவில்லை. புத்தகங்களும் செய்திருக்கின்றன.
18-ம் நூற்றாண்டு புத்தகங்களின் பொற்கால நூற்றாண்டு. ரூசோவும், வால்டேரும், போமர்சேவும் தங்களின் கருத்துகளால் பிரான்சிலும், ஐரோப்பாவிலும், ஏன், உலக அளவிலும் மாற்றங்களை ஏற்படுத்தினர்.
கோபர்நிக்கஸ், கலிலியோ, ஐசக் நிïட்டன் ஆகியோரின் புத்தகங்கள் வந்திருக்காவிட்டால் இன்று நாம் காட்டுமிராண்டிகளாகத் திரிந்திருப்போம். மனிதர்களை மனிதம் நிறைந்தவர்களாக, புனிதம் நிறைந்தவர்களாக மாற்றுபவை புத்தகங்கள்தான்.
மாற்றங்கள் தந்த புத்தகங்கள்
வெள்ளைத்தாளுக்கு இரண்டு இடங்களில் மதிப்பு கூடுதலாகிறது. ஒன்று, பணமாகிறபோது. மற்றொரு இடம், புத்தகமாக மாறுகிறபோது. வாழ்க்கையை நேசிப்பவர்கள் புத்தகங்களை நேசிப்பவர்கள். புத்தகங்களில் புதையல்கள் புதைந்து கிடக்கின்றன. கடலுக்குள் மூழ்கி மூச்சடக்கி முத்தெடுப்பதைப் போல புத்தகங்களிலும் முத்தெடுக்கலாம். அப்படி எடுத்த சிலர் மகான்களாகவும், மகாத்மாக்களாகவும், ஞானிகளாகவும் மாறியிருக்கிறார்கள். சமூக வரலாற்றை மாற்றியிருக்கிறார்கள்.
காரல் மார்க்ஸின் 33 ஆண்டு கால உழைப்பில் உருவான `மூலதனம்', உழைக்கும் வர்க்கத்தை உயர்த்திப் பிடித்தது.
ரூசோவின் புத்தகங்கள்தான் லியோ டால்ஸ்டாயின் உள்ளத்தில் ஞானியாகும் எண்ணங்களை உருவாக்கின.
டால்ஸ்டாயின் `போரும் அமைதியும்', சமூக மாற்றத்தின் சாட்சியாகத் திகழ்கிறது.
`அங்கிள் டாம்' என்ற புத்தகம்தான் கருப்பின மக்களுக்கு விடியலைப் பெற்றுத் தந்தது.
`கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்ற புத்தகம்தான் மோகன்தாஸ் காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது.
சேக்கிழார் எழுதிய `பெரிய புராணம்' தான் திருச்சுழியில் பிறந்த வெங்கட்ராமனை மகான் ஸ்ரீ ரமண மகரிஷியாக மாற்றியது.
ஏப்ரல் 23 உலகப் புத்தக நாள்
`உங்களுக்குள் உறைந்திருக்கும் புனிதத்தைப் புத்தக வாசிப்பு மட்டுமே உருக வைக்கும்' என்றார் சிந்தனையாளர் பிரான்சிஸ் காப்கா.
வரலாறு நெடுகிலும், மாபெரும் தலைவர்கள் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்வதிலும் மாபெரும் மனிதர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். தியோடர் ரூஸ்வெல்ட் இறந்தபிறகு பார்த்தால் அவரது தலையணையின் அடியில் ஒரு புத்தகம் இருந்தது. கடைசிவரை பிறரது கருத்துகளை உள்வாங்கியவாறே அவர் இறந்துள்ளார்.
மாவீரன் நெப்போலியன் ஒருமுறை, `என் வாளின் வலிமையாலும் ஹோமர் காவியத்தின் துணையாலும் இந்த உலகத்தை வெல்வேன்' என்று கூறினான். அதைப் போல் வென்றான்.
இப்போது வாளின் வலிமை இல்லை. ஆனால் ஹோமரின் காவியம் நிலைபெற்று நிற்கிறது.
கம்பரும் வள்ளுவரும் இன்று இல்லை, ஆனால் அவர்கள் எழுதிய படைப்புகளில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இறந்த காலத்தை நிகழ்காலமாக மாற்றும் சக்தி புத்தகங்களுக்கே உண்டு.
அறிவுப் புதையலாக இருக்கின்ற புத்தகத்துக்கான தினம்தான் ஏப்ரல் 23, உலக புத்தக தினம்.
முன்பெல்லாம் இளைஞர்களின் கைகளில் புத்தகங்கள் இருக்கும். ஆளுமை சம்பந்தப்பட்ட அடையாளமாக அது இருக்கும். இன்றைக்கு எங்கே அந்த இளைஞர்கள்?
மோசம் செய்யாத நல்ல நண்பன் புத்தகம் என்பதை மறந்துவிடாதீர்கள். புத்தகங்கள் உங்கள் வழிகாட்டியாக, நண்பனாக இருக்கட்டும். அறிவுப்போட்டி நிகழ்ந்துகொண்டிருக்கிற காலம் இது. படிக்கும் வழக்கம் இல்லாதவர்கள் பின்தங்கிப் போகிறார்கள்.
வாசிப்பு என்பது ஓடும் நதியைப் போல. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு அழைத்துச் செல்லும். அது இன்னொரு புத்தகத்துக்கு அழைத்துச் செல்லும். முடிவில்லா அந்த நதியில் மூழ்கி சுகங்களை அனுபவிக்கலாம். நல்ல புத்தகங்களை நாளும் வாசிப்போம், வாழ்க்கையை நேசிப்போம்!
பேராசிரியர் க.ராமச்சந்திரன்
புத்தகங்கள் ஞானம் தரும் போதிமரங்கள். கருத்துகள் பிறக்கும் பிரசவ அறை. வரலாறு உயிர்த்தெழும் உன்னத இடம். இவற்றோடு புத்தகங்கள் கலங்கரை விளக்கங்கள். ஆம்! இருட்டில் பயணிப்பவர்களுக்கு வெளிச்சம் காட்டும், வெளிச்சத்தின் வழி திசை காட்டும்.
அறிவு என்ற வார்த்தைக்கு இணையான சொல் புத்தகம் மட்டுமே. புத்தகம் புதுமையையும் படைக்கும், புரட்சியையும் படைக்கும். உலகில் பெரிய மாறுதல்களைப் போர்க்களங்கள் மட்டும் செய்யவில்லை. புத்தகங்களும் செய்திருக்கின்றன.
18-ம் நூற்றாண்டு புத்தகங்களின் பொற்கால நூற்றாண்டு. ரூசோவும், வால்டேரும், போமர்சேவும் தங்களின் கருத்துகளால் பிரான்சிலும், ஐரோப்பாவிலும், ஏன், உலக அளவிலும் மாற்றங்களை ஏற்படுத்தினர்.
கோபர்நிக்கஸ், கலிலியோ, ஐசக் நிïட்டன் ஆகியோரின் புத்தகங்கள் வந்திருக்காவிட்டால் இன்று நாம் காட்டுமிராண்டிகளாகத் திரிந்திருப்போம். மனிதர்களை மனிதம் நிறைந்தவர்களாக, புனிதம் நிறைந்தவர்களாக மாற்றுபவை புத்தகங்கள்தான்.
மாற்றங்கள் தந்த புத்தகங்கள்
வெள்ளைத்தாளுக்கு இரண்டு இடங்களில் மதிப்பு கூடுதலாகிறது. ஒன்று, பணமாகிறபோது. மற்றொரு இடம், புத்தகமாக மாறுகிறபோது. வாழ்க்கையை நேசிப்பவர்கள் புத்தகங்களை நேசிப்பவர்கள். புத்தகங்களில் புதையல்கள் புதைந்து கிடக்கின்றன. கடலுக்குள் மூழ்கி மூச்சடக்கி முத்தெடுப்பதைப் போல புத்தகங்களிலும் முத்தெடுக்கலாம். அப்படி எடுத்த சிலர் மகான்களாகவும், மகாத்மாக்களாகவும், ஞானிகளாகவும் மாறியிருக்கிறார்கள். சமூக வரலாற்றை மாற்றியிருக்கிறார்கள்.
காரல் மார்க்ஸின் 33 ஆண்டு கால உழைப்பில் உருவான `மூலதனம்', உழைக்கும் வர்க்கத்தை உயர்த்திப் பிடித்தது.
ரூசோவின் புத்தகங்கள்தான் லியோ டால்ஸ்டாயின் உள்ளத்தில் ஞானியாகும் எண்ணங்களை உருவாக்கின.
டால்ஸ்டாயின் `போரும் அமைதியும்', சமூக மாற்றத்தின் சாட்சியாகத் திகழ்கிறது.
`அங்கிள் டாம்' என்ற புத்தகம்தான் கருப்பின மக்களுக்கு விடியலைப் பெற்றுத் தந்தது.
`கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்ற புத்தகம்தான் மோகன்தாஸ் காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது.
சேக்கிழார் எழுதிய `பெரிய புராணம்' தான் திருச்சுழியில் பிறந்த வெங்கட்ராமனை மகான் ஸ்ரீ ரமண மகரிஷியாக மாற்றியது.
ஏப்ரல் 23 உலகப் புத்தக நாள்
`உங்களுக்குள் உறைந்திருக்கும் புனிதத்தைப் புத்தக வாசிப்பு மட்டுமே உருக வைக்கும்' என்றார் சிந்தனையாளர் பிரான்சிஸ் காப்கா.
வரலாறு நெடுகிலும், மாபெரும் தலைவர்கள் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்வதிலும் மாபெரும் மனிதர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். தியோடர் ரூஸ்வெல்ட் இறந்தபிறகு பார்த்தால் அவரது தலையணையின் அடியில் ஒரு புத்தகம் இருந்தது. கடைசிவரை பிறரது கருத்துகளை உள்வாங்கியவாறே அவர் இறந்துள்ளார்.
மாவீரன் நெப்போலியன் ஒருமுறை, `என் வாளின் வலிமையாலும் ஹோமர் காவியத்தின் துணையாலும் இந்த உலகத்தை வெல்வேன்' என்று கூறினான். அதைப் போல் வென்றான்.
இப்போது வாளின் வலிமை இல்லை. ஆனால் ஹோமரின் காவியம் நிலைபெற்று நிற்கிறது.
கம்பரும் வள்ளுவரும் இன்று இல்லை, ஆனால் அவர்கள் எழுதிய படைப்புகளில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இறந்த காலத்தை நிகழ்காலமாக மாற்றும் சக்தி புத்தகங்களுக்கே உண்டு.
அறிவுப் புதையலாக இருக்கின்ற புத்தகத்துக்கான தினம்தான் ஏப்ரல் 23, உலக புத்தக தினம்.
முன்பெல்லாம் இளைஞர்களின் கைகளில் புத்தகங்கள் இருக்கும். ஆளுமை சம்பந்தப்பட்ட அடையாளமாக அது இருக்கும். இன்றைக்கு எங்கே அந்த இளைஞர்கள்?
மோசம் செய்யாத நல்ல நண்பன் புத்தகம் என்பதை மறந்துவிடாதீர்கள். புத்தகங்கள் உங்கள் வழிகாட்டியாக, நண்பனாக இருக்கட்டும். அறிவுப்போட்டி நிகழ்ந்துகொண்டிருக்கிற காலம் இது. படிக்கும் வழக்கம் இல்லாதவர்கள் பின்தங்கிப் போகிறார்கள்.
வாசிப்பு என்பது ஓடும் நதியைப் போல. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு அழைத்துச் செல்லும். அது இன்னொரு புத்தகத்துக்கு அழைத்துச் செல்லும். முடிவில்லா அந்த நதியில் மூழ்கி சுகங்களை அனுபவிக்கலாம். நல்ல புத்தகங்களை நாளும் வாசிப்போம், வாழ்க்கையை நேசிப்போம்!
பேராசிரியர் க.ராமச்சந்திரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நல்ல ஒரு புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்...... இணையம் புத்தகத்தின் இடத்தை எடுத்துக்கொள்ளவில்லை தான், ஆனாலும் புத்தகங்கள் மென்நூல் வடிவில் உள்ளதே? நல்ல பதிவு இது. சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்ல ஒரு புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.....
நல்ல தகவல்கள்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
புத்தகங்களை பற்றிய விரிவான கருத்து பகிர்வுக்கு நன்றி சிவா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|