புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Poll_c10பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Poll_m10பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Poll_c10பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Poll_m10பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Poll_c10பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Poll_m10பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 11:28 am

First topic message reminder :

பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Ms03

தமிழ்நாட்டின் இளம் பெண்களுக்கு பாரம்பரிய உடையான பாவாடை, தாவணி காலாசாரம் மீண்டும் திரும்பியுள்ளது. இப்போது வரும் திரைப்படங்களில்கூட கதாநாயகிகள் அந்தகாலத்தைப்போல பாவாடை, தாவணி அணிந்து காட்சி அளிக்கிறார்கள்.

நவநாகரீக உடைகள்

கடந்த பல ஆண்டுகள் முன்புவரை, தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் இளம் பெண்கள், முதலில் பாவாடை, தாவணி அணிவதும், சற்று வயது கூடியதும் தொடர்ந்து காலமெல்லாம் சேலை அணிவதும்தான் வழக்கமாக இருந்தது.

நாகரீக உலகில் பாவாடை, தாவணிக்கு பதிலாக, ஏன் இளம் பெண்கள் சேலை அணிவதற்கும் பதிலாக, சுடிதார், சல்வார் கமீஸ் என்ற உடைகள் எட்டிப்பார்க்க தொடங்கி, தொடர்ந்து ஜீன்ஸ், டீசர்ட், மிடி போன்ற பல நாகரீக உடைகள் இளம்பெண்கள் அணிவதற்கு வழக்கத்துக்கு வந்தன.

முதலில் நகர்ப்புறங்களில் தொடங்கி, இப்போது மூலைமுடுக்குகளில் உள்ள கிராமங்களில் படித்த, படிக்காத இளம்பெண்கள்கூட, சுடிதார் அணிய தொடங்கி, வீட்டில் இருக்கும்போது நைட்டி அணிவதுதான் நாகரீகம் என்று வந்துகொண்டிருந்தது.

பாவாடை, தாவணி கலாசாரமே கடந்த சில ஆண்டுகளாக இளம்பெண்களுக்கு தெரியாமல் இருந்தநிலையில், எங்கே இந்த உடையே இனிமேல் நமது பெண்களுக்கு தெரியாமல் போய்விடுமோ? என்று எல்லோரும் கவலைபட்டுக்கொண்டிருந்தனர்.

திரைப்படங்களில்

`கோழி முதலில் வந்ததா, அல்லது முட்டை முதலில் வந்ததா' என்ற கேள்விக்கு இன்னும் யாராலும் விடை காணமுடியவில்லை என்பதுபோல, இப்போது தமிழ்நாட்டில் உள்ள திரைப்படங்களில் கதாநாயகிகள் தாவணி அணியத்தொடங்கிவிட்டார்கள். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் படிக்கும் பெண்கள்கூட, கோவில்கள், விழாக்களுக்கு வரும்போது பாவாடை, தாவணி அணிவதை பார்க்க முடிகிறது.

இந்த மாணவிகளை பார்த்து, சினிமாவில் கதாநாயகிகளை தாவணி அணிய வைத்தார்களா? அல்லது கதாநாயகிகள் தாவணி அணிவதை பார்த்து, நமது மாணவிகள் தாவணி அணிய தொடங்கிவிட்டார்களா? என்று புரியவில்லை. இப்போதுள்ள இளம்பெண்கள் மிக ஆசையோடு பாவாடை, தாவணியை அணிய தொடங்கிவிட்டார்கள்.

சல்வார் கமீஸ்

தற்போது பள்ளிக்கூடங்களில் சீருடையாக சல்வார் கமீஸ்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் மாணவிகளுக்கு பாவாடை, தாவணிக்கு பதிலாக, சல்வார் கமீஸ் உடை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். எனவே, பள்ளிக்கூடங்களுக்கு சல்வார் கமீஸ், வீட்டில் இருக்கும்போதும், திருமணம்போன்ற விழாக்களுக்கு செல்லும்போதும் பாவாடை, தாவணி அணிவதுதான் இப்போது பேஷனாகிவிட்டது. அதிலும், விழாக்களுக்கு செல்லும்போது பட்டுப்பாவாடை, ஜாக்கெட், தாவணி அணிவதுதான் இளம்பெண்கள் மத்தியில் நாகரீகமாக கருதப்படுகிறது. இதனால் ஜவுளிக்கடைகளில் இப்போது பாவாடை, தாவணியின் விற்பனை அதிகரித்துவிட்டது.

சமீபத்தில் விஜய் நடித்த `வேலாயுதம்' படத்தில் ஹன்சிகா, ஜெனிலியா, சரண்யா மோகன் ஆகியோருக்கு பாவாடை, தாவணியைத்தான் உடையாக காட்டியிருந்தார்கள். மாதவன், ஆர்யா நடித்த `வேட்டை' படத்திலும் அமலாபால், சமீராரெட்டி ஆகியோர் பாவாடை, தாவணி அணிந்துதான் உலா வந்தனர். பெண் தையற் கலைஞர்களிடம் இளம்பெண்கள் அதேபோல ஸ்டைலில் பாவாடை தைக்க சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

பாவாடை, தாவணி

சென்னை ராமாவரத்தில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு பின்னால் உள்ள ராயலா நகரில் இருக்கும் கோவில்பிள்ளை மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10-ம் வகுப்புக்கு செல்லும் மாணவி பிரியங்கா இந்த பாவாடை, தாவணி பற்றி கூறியதாவது:-

நான், இதுவரையில் சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளையே அணிந்து வந்தேன். எங்கள் பள்ளிக்கூடத்து சீருடையும் சுடிதார்தான். எப்போதும் நவநாகரீக உடைகள் அணிவதில் ஆசைப்படும்நான், இப்போது எங்கள் அம்மா அந்தக்காலத்தில் அணிந்த பாவாடை, தாவணி பேஷனாகிவிட்டது என்பது அறிந்தவுடன் மிகுந்த ஆசைப்பட்டேன். என் தந்தை வடிவேல் முருகனிடம் எனக்கும், பட்டுப்பாவாடை, பட்டுச்சட்டை, தாவணி வேண்டுமென்று கேட்டபோது, அவருக்கு, `என் மகளா இப்படி கேட்கிறாள்' என்று மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது. நான் பள்ளிக்கூடம் விட்டு வந்தபிறகும், வீட்டில் இருக்கும்போதும், என் அம்மாவுடன் கோவிலுக்கு செல்லும்போதும், இப்போது பாவாடை, தாவணியை அணிகிறேன். இதைப்பார்த்து எனது தோழிகளும், இதே உடைக்கு மாறத்தொடங்கிவிட்டனர்.

நான் இப்போது கோடை விடுமுறையில் எனது சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு செல்கிறேன். முன்பெல்லாம் அங்குள்ள எனது உறவினர் பெண்கள் சென்னையில் என்ன பேஷன் இருக்கிறது? என்பதை, என்னுடைய உடைகளை பார்த்துத்தான் தெரிந்துகொள்வார்கள். இப்போது நான் நாகர்கோவிலுக்கு செல்லும்போது பாவாடை, தாவணியைத்தான் கொண்டு செல்வேன். அங்குள்ள தோழிகள் ஆச்சரியப்படுவார்கள். நான் கொண்டுபோகும் பேஷன், நாகர்கோவிலிலும் மலரப்போகிறது. தமிழ்நாட்டு கலாசார உடையான பாவாடை, தாவணி வசதிக்காக இருப்பதுமட்டுமல்ல, பார்ப்பதற்கு ஒரு `மெஜஸ்டிக் லுக்' அதாவது கம்பீர தோற்றத்தை அளிக்கிறது.

மேற்கண்டவாறு பிரியங்கா கூறினார்.

தினதந்தி



பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 4:08 pm

விஜயகுமார் wrote:

நக்கீரனில் வெளி வந்தது நண்பரே ...

சரி நண்பரே! சிரி



பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Apr 20, 2012 4:21 pm

மகா பிரபு wrote:
விஜயகுமார் wrote:
மகா பிரபு wrote:தாவணியின் அழகே தனிதான். சூப்பருங்க

அப்போ மகளிர் அழுகு இல்லை என்று சொல்ல வாரீர் !! மெகா
அப்படி இல்லை. மற்ற நவீன ஆடைகளை விட தாவணி தான் பெண்களுக்கு அழகு உடை.

மகளிர் அணி இல்லையா ??

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 4:23 pm

ஆடையால் பெண்கள் அழகா? அல்லது பெண்கள் அழகாக இருப்பதால் ஆடையும் அழகாகத் தோன்றுகிறதா?

பட்டிமன்ற நடுவர் மகா பிரபு!



பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 20, 2012 4:25 pm

சிவா wrote:ஆடையால் பெண்கள் அழகா? அல்லது பெண்கள் அழகாக இருப்பதால் ஆடையும் அழகாகத் தோன்றுகிறதா?

பட்டிமன்ற நடுவர் மகா பிரபு!
நானா வந்து மாட்டிகிட்டேன்.

சரி சிவா அண்ணா உங்கள் வாதத்தை தொடருங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 4:26 pm

மகா பிரபு wrote:
சிவா wrote:ஆடையால் பெண்கள் அழகா? அல்லது பெண்கள் அழகாக இருப்பதால் ஆடையும் அழகாகத் தோன்றுகிறதா?

பட்டிமன்ற நடுவர் மகா பிரபு!
நானா வந்து மாட்டிகிட்டேன்.

சரி சிவா அண்ணா உங்கள் வாதத்தை தொடருங்கள்.

வாதமா? ஏற்கனவே எனக்கு பக்க வாதம்... அய்யோ, நான் இல்லை



பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 20, 2012 4:28 pm

பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம் - Page 2 Ms03

இந்த இரண்டு படத்தில் எது அழகாக உள்ளது?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 20, 2012 4:29 pm

ஆள் பாதி , ஆடை பாதி இதுதான் நிறுவனர் சிவாவின் தீர்ப்பு ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 20, 2012 4:30 pm

மோக விதை விதைத்து
பார்வைக் கணைகள் ஏவும் ....
தாவணிப் பெண்கள் !

.....கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Apr 20, 2012 4:31 pm

சிவா wrote:ஆடையால் பெண்கள் அழகா? அல்லது பெண்கள் அழகாக இருப்பதால் ஆடையும் அழகாகத் தோன்றுகிறதா?

பட்டிமன்ற நடுவர் மகா பிரபு!


ஆள்பாதி ஆடைபாதி ...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 20, 2012 4:33 pm

வை.பாலாஜி wrote:ஆள் பாதி , ஆடை பாதி இதுதான் நிறுவனர் சிவாவின் தீர்ப்பு ..
சினிமா நடிகைகள் பாதி உடையில் இருப்பதற்கு இது தான் காரணமா பாலாஜி அண்ணன் கொதிப்பு.

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக