புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_m10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_m10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_m10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_m10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_m10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_m10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_m10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_m10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_m10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_m10வளர் இளம் பருவம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர் இளம் பருவம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Apr 09, 2012 9:12 pm

First topic message reminder :

மனித வாழ்க்கையின் பருவ அடுக்குகளில் முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வளர்இளம் பருவம். ஒரு நபர் படைப்பாளியாக, அல்லது நல்ல வாசகராக மாறவும், அரசியல் பார்வை பெறுவது, தன் முன்பான சமூகத்தை விமர்சனம் செய்வது, பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும் என எல்லாமும் இந்த வளர்இளம் பருவத்தில்தான் உருவாகின்றன.

இதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அண்மையில் தருமபுரியில் உள்ள சில அரசு மேனிலைப் பள்ளிகளில் நடைபெற்ற சம்பவங்களும், சென்னையில் மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவி கொலை மற்றும் 5 மாணவர்கள் கைது என்கிற செய்தியும், இன்றைய வளர்இளம் பருவத்தினரை பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கவும், வழிநடத்தவும் வேண்டும் என்கிற அவசியத்தை வலியுறுத்துகின்றன.

தருமபுரியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து படிப்பவர்கள். இந்த மாணவர்களில் சிலர் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் நான்கு நாள் விடுப்பில் சென்றபோது, அந்த விடுப்பு நாள்கள் அனைத்தும் முகூர்த்த நாள்களாக இருந்திருக்கின்றன. அதைக் கவனித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இந்த மாணவர்களை அழைத்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது.

இந்த மாணவர்கள் முகூர்த்த நாள்களில் பள்ளிக்கு வருவதுபோல வீட்டிலிருந்து கிளம்பினாலும், பள்ளிக்கு வராமல் கல்யாண மண்டபங்களில் சாப்பாடு பரிமாறுதல் மற்றும் சமையலுக்கு உதவி செய்யும் வேலைக்குச் செல்வதும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்கள் விருப்பம் போல செலவிடுவதையும் ஒப்புக் கொண்டனர்.

இந்த மாணவர்கள் அனைவரும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களைக் குழந்தைத் தொழில் ஒழிப்பு சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்த வழியில்லை. தனியார் பள்ளிகளைப் போல, ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் "அப்பா-அம்மாவை அழைத்து வா' என்று கண்டிப்புக் காட்டவும் முடியாது. ஏனென்றால், இந்த மாணவர்கள் ஒரேயடியாகப் பள்ளிக்கு வராமல் நின்றுவிடுவார்கள். அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை குறையாமல் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் தலைமையாசிரியர்களுக்கு இருக்கிறது.

இந்த மாணவர்கள் உழைப்பது சரிதான். ஆனால், அந்த ஊதியத்தை என்ன செய்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு கல்யாணத்திலும் குறைந்தது ரூ. 200 ஊதியமும் நல்ல உணவும் கிடைக்கிறது. சில பெரிய வீட்டுத் திருமணங்கள் என்றால் டிப்ஸ் என்ற பெயரில் மேலும் சில நூறு ரூபாய்கள் கிடைக்கும்.இவை அனைத்தையும் இவர்கள் சினிமா பார்க்கவும், புகை, மற்றும் மதுபானத்துக்குச் செலவழிப்பது பாதி என்றால், பாதிப் பணம் இவர்களது செல்போன்களுக்கு "டாப்-அப்' செய்வதிலும், தங்கள் சக மாணவிகளுடன் உரையாடுவதற்காக அவர்களது செல்போனுக்கு "டாப்-அப்' செய்வதிலும்தான் செலவாகிறது என்பது மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது ஏதோ அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரச்னை என்றும் கருதிவிட முடியாது. நகர்ப்புறத்தில் உயர்தரக் குடிமக்கள் பயிலும் பள்ளிகளிலும் இதே சிக்கல் வெவ்வேறு பரிமாணத்தில் இருக்கின்றது.

தங்கள் செலவுக்காகத் தாங்களே உழைத்து சம்பாதிக்கும் மனப்போக்கு மிகவும் ஆரோக்கியமானதுதான். ஆனால், அந்த உழைப்பின் வலி தெரியாமல், அதை மதுவுக்கும் வெட்டி பந்தாவுக்கும் செலவழிப்பதென்பது, ஒரு தலைமுறையை வீணடிப்பதாகவும் சமூகவிரோதிகளாக மாற்றுவதாகவும் இருக்குமெனில் அதைத் தடுத்தாக வேண்டும்.

மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் முடியாதவர்களாகப் பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளு மற்றும் வாழ்க்கைச் சுமையால், மனஅழுத்தத்தால் தலை சாய்ந்துக்கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் வளர்இளம் பருவத்து மாணவர்களை வழிநடத்தக்கூடிய இடம் பள்ளியாக மட்டுமே இருக்கின்றது. மேனிலைப் பள்ளிகளில் இந்த வளர்இளம் பருவத்து மாணவர்களைச் சரியாக வழிகாட்டிவிட முடியுமானால், வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்திவிட முடியுமானால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரியான திசையில் அமைந்துவிடும்.

பள்ளி தலைமையாசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் இந்த மாணவர்களின் போக்கு, செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. சக மாணவர்களுடன் பேசினாலே போதுமானது. இதற்கான நேரம் ஒதுக்கவும், இவர்களது மனப்போக்குகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரித்தாலும்கூட போதுமானது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை ஆசிரியர்கள் தங்களது கடமையாகக் கருதிய காலம்போய், மதிப்பெண் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பள்ளியின் கடன் என்று பணியாற்றத் தொடங்கியதுதான் இந்நிலைமைக்கு தலையாய காரணம்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இன்றைய இளம்தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமானால், பள்ளிக்கூடங்கள் மாணவர்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்தும் குருகுலங்களாகவும் மாற்றம் பெற்றாக வேண்டும். கல்வியாளர்களும் அரசும் இதைப்பற்றி சிந்தித்து வழி காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
நன்றி : தினமணி





வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 10, 2012 7:17 pm

இப்ப இருக்குற நிறைய ஆசிரியர்கள் முன்கோபம் அதிகமுள்ளவர்களாக தெரிகிறது. நான் பள்ளியில் படிக்கும் போது இது போன்ற ஆசிரியர்களை பார்த்ததே கிடையாது ஆனால் இப்ப நிறைய பேரை பார்க்கிறேன். இது ஏனென்று தெரியவில்லை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 10, 2012 7:37 pm

ராஜா wrote:இப்ப இருக்குற நிறைய ஆசிரியர்கள் முன்கோபம் அதிகமுள்ளவர்களாக தெரிகிறது. நான் பள்ளியில் படிக்கும் போது இது போன்ற ஆசிரியர்களை பார்த்ததே கிடையாது ஆனால் இப்ப நிறைய பேரை பார்க்கிறேன். இது ஏனென்று தெரியவில்லை
அப்படி இல்ல ராஜா. முன்னால் இருந்த மாணவர்கள் ஆசிரியர்களை ஆசிரியர்களாகப் பார்த்தார்கள். அங்கு அன்பு மட்டும் இருந்திருக்கும். இன்று ஆசிரியர்களை மாணவர்கள் என் ஃபீஸுல நீ சம்பளம் வாங்கர... என்ற பார்வையும் அவசர அழைப்பு எண் இருக்கு ஜாக்கிரதை என்றும் கூறும் பார்வையும் உடையவர்களாக இருக்கிறார்கள். என் பள்ளியில் எல்லாப் பழக்கங்களுடன் பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள். அவர்களைக் கையாளும்போது சில நேரங்களில் கோபம் எல்லையை மீறுவதும் உண்டு... சோகம் இது பற்றி நான் சிவாவிடம் கூட ஒரு முறை பேசி வருந்தியுள்ளேன்.

ஆசிரியர்களும் மனிதர்கள்தானே.... மகாத்மாக்களா என்ன? சில நேரம் அப்படி நடந்து விடுவதும் இருக்கலாம். அதிலும் நிச்சயம் மாணவர் மீது உள்ள அக்கறையே வெளிச்சமிடும். நானெல்லாம் மாணவர் தவ்று செய்யாது இருக்கும் போது தவறாக எண்ணி எதாவது சொல்லி விட்டால் கூட அவரிடம் மன்னிப்பு கேட்பது வழக்கம்..



வளர் இளம் பருவம்  - Page 2 Aவளர் இளம் பருவம்  - Page 2 Aவளர் இளம் பருவம்  - Page 2 Tவளர் இளம் பருவம்  - Page 2 Hவளர் இளம் பருவம்  - Page 2 Iவளர் இளம் பருவம்  - Page 2 Rவளர் இளம் பருவம்  - Page 2 Aவளர் இளம் பருவம்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 10, 2012 7:40 pm

எங்கே பாலா உங்க கருத்தைக் காக்கா தூக்கிட்டுப் போயிடுசசா?



வளர் இளம் பருவம்  - Page 2 Aவளர் இளம் பருவம்  - Page 2 Aவளர் இளம் பருவம்  - Page 2 Tவளர் இளம் பருவம்  - Page 2 Hவளர் இளம் பருவம்  - Page 2 Iவளர் இளம் பருவம்  - Page 2 Rவளர் இளம் பருவம்  - Page 2 Aவளர் இளம் பருவம்  - Page 2 Empty
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 10, 2012 7:54 pm

மிகவும் பிரயோசனமான பதிவு.
நன்றிகள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 10, 2012 8:01 pm

முகூர்த்த நாள்களில் பள்ளிக்கு வருவதுபோல வீட்டிலிருந்து கிளம்பினாலும், பள்ளிக்கு வராமல் கல்யாண மண்டபங்களில் சாப்பாடு பரிமாறுதல் மற்றும் சமையலுக்கு உதவி செய்யும் வேலைக்குச் செல்வதும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்கள் விருப்பம் போல செலவிடுவதையும் ஒப்புக் கொண்டனர்.

மாணவர்களுக்கு இப்ப ஆசிரியரை கண்ட பயம் போய் விட்டதா என்று தெரியவில்லை எப்படி இது போல் செய்ய அவர்களுக்கு மனது வந்தது என்று தெரியவில்லை நான் பள்ளிக்கு ஆசிரியர் அடிப்பார் என்று பயந்து வகுப்பிர்க்கு போவேன்.. இந்த காலத்து மாணவர்கள் ரொம்பவே மாறிவிட்டார்கள்..!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 10, 2012 8:04 pm

அருண் wrote:
முகூர்த்த நாள்களில் பள்ளிக்கு வருவதுபோல வீட்டிலிருந்து கிளம்பினாலும், பள்ளிக்கு வராமல் கல்யாண மண்டபங்களில் சாப்பாடு பரிமாறுதல் மற்றும் சமையலுக்கு உதவி செய்யும் வேலைக்குச் செல்வதும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்கள் விருப்பம் போல செலவிடுவதையும் ஒப்புக் கொண்டனர்.

மாணவர்களுக்கு இப்ப ஆசிரியரை கண்ட பயம் போய் விட்டதா என்று தெரியவில்லை எப்படி இது போல் செய்ய அவர்களுக்கு மனது வந்தது என்று தெரியவில்லை நான் பள்ளிக்கு ஆசிரியர் அடிப்பார் என்று பயந்து வகுப்பிர்க்கு போவேன்.. இந்த காலத்து மாணவர்கள் ரொம்பவே மாறிவிட்டார்கள்..!
என் பள்ளியில் பல மாணவர்கள் இப்பணியில் இருக்கின்றனர். அவர்கள் வெளிப்படையாக இதைக் கூறுவார்கள். கேட்டால் ஏழ்மை என்று கூறுவார்கள். ஆனால் ஒவ்வொருவரும் கைப்பேசி வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கிளப்பில் பணியாற்றுகின்றனர். சோகம்



வளர் இளம் பருவம்  - Page 2 Aவளர் இளம் பருவம்  - Page 2 Aவளர் இளம் பருவம்  - Page 2 Tவளர் இளம் பருவம்  - Page 2 Hவளர் இளம் பருவம்  - Page 2 Iவளர் இளம் பருவம்  - Page 2 Rவளர் இளம் பருவம்  - Page 2 Aவளர் இளம் பருவம்  - Page 2 Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 10, 2012 8:17 pm

Aathira wrote:
என் பள்ளியில் பல மாணவர்கள் இப்பணியில் இருக்கின்றனர். அவர்கள் வெளிப்படையாக இதைக் கூறுவார்கள். கேட்டால் ஏழ்மை என்று கூறுவார்கள். ஆனால் ஒவ்வொருவரும் கைப்பேசி வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கிளப்பில் பணியாற்றுகின்றனர். சோகம்

ஃபேஷன் ஆகிவிட்டது என்று சொல்லுங்கள் மிகவும் வருத்தமாக இருக்கிறது அப்ப கவனம் முழுவதும் வேலை செய்வதிலே குறிக்கோளாக இருக்கும் பணத்தை பார்த்து விட்டால் அதன் பின்னாலே போகசொல்லும் அக்கா அவர்களை திருத்த முயலுங்கள்..! சோகம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 10, 2012 8:25 pm

அருண் wrote:
Aathira wrote:
என் பள்ளியில் பல மாணவர்கள் இப்பணியில் இருக்கின்றனர். அவர்கள் வெளிப்படையாக இதைக் கூறுவார்கள். கேட்டால் ஏழ்மை என்று கூறுவார்கள். ஆனால் ஒவ்வொருவரும் கைப்பேசி வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கிளப்பில் பணியாற்றுகின்றனர். சோகம்

ஃபேஷன் ஆகிவிட்டது என்று சொல்லுங்கள் மிகவும் வருத்தமாக இருக்கிறது அப்ப கவனம் முழுவதும் வேலை செய்வதிலே குறிக்கோளாக இருக்கும் பணத்தை பார்த்து விட்டால் அதன் பின்னாலே போகசொல்லும் அக்கா அவர்களை திருத்த முயலுங்கள்..! சோகம்
இவர்கள் அனைவரும் என் அன்பான மாணவர்கள். திருத்துவதற்காகவே அதிகம் அன்பு அவர்களிடம் காட்டுகிறேன் அருண். முடிந்தவரை முயலுவோம். அவர்களின் பெற்றோர்களிடமும் அடிக்கடி கூறி வருகிறேன்.






வளர் இளம் பருவம்  - Page 2 Aவளர் இளம் பருவம்  - Page 2 Aவளர் இளம் பருவம்  - Page 2 Tவளர் இளம் பருவம்  - Page 2 Hவளர் இளம் பருவம்  - Page 2 Iவளர் இளம் பருவம்  - Page 2 Rவளர் இளம் பருவம்  - Page 2 Aவளர் இளம் பருவம்  - Page 2 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 11, 2012 12:27 am

இன்றைய கால கட்டத்தில் மாணவர்களை சரி படுத்துவது என்பது மிகவும் கடினமானது ... மாணவர்களிடம் எது தவறு எது சரி என்பதே தெரியவில்லை ... பெற்றோர்களும் முழு கவனமும் செலுத்த முடிவதில்லை .. மீடியாக்கள் சினிமா போதை இப்படி பல வழிகளில் அவர்கள் பலிகடாக்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள் பாவம் இளம் பருவம் .. வழி காட்டி இன்றி தடுமாறுகிறது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வளர் இளம் பருவம்  - Page 2 Ila
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக