புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
89 Posts - 38%
heezulia
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
340 Posts - 48%
heezulia
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
24 Posts - 3%
prajai
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_m10"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கவிதை" என்பது வடமொழியா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Feb 11, 2012 2:51 pm

First topic message reminder :

"கவி" என்றால் 'குரங்கு' என்று
சிலர்
வடமொழியைச் சான்றுக்கு இழுக்கிறார்களே!
'கவி' உடன் 'தை' ஐச் சேர்த்தால்
'குரங்கு'+'தை' = 'குரங்கைத்தை' என்பதா
கவிதை என்றும் கேட்கிறார்களே!
கவிதை என்பது
குரங்கைத்தையும் இல்லை
வடமொழியும் இல்லை
தூய தமிழ் தான் என்பதை
அலசிப் பார்க்கத் தவறியதே
என் தவறு என
நான் நினைக்கின்றேன்!
'கவி' என்ற சொல்
வடமொழியில் இல்லையாமே...
'கபி' என்று தானாம் இருக்கே!
'கபி' இற்குப் பொருள்
வடமொழியில்
'குரங்கு' தானாம் - அதுவும்
நம்ம தமிழ் தானாம் - அதனை
('கபி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததும்
வடமொழியாம்!
அடடே!
நானொரு முட்டாளுங்க...
கவிதை பற்றிச் சொல்லாமலே
இத்தனை வரிகளை நீட்டிப்போட்டேனே...!
இன்னும் நீட்டினால்
நீங்கள்
என்னைச் சாகடிச்சிடுவியளே...
அதுதானுங்க
'கவி' என்பதும் 'தை' என்பதும்
என் தாய்த் தமிழென்றே
தொடருகிறேன் பாரும்...!
தமிழில் 'கவி' என்றால்
கவிந்தபடி - கவிழ்ந்தபடி
நடப்பதென்று பொருளாம்...
அப்படி
நடப்பது குரங்காம்...
அதற்காக
'கவி' என்றால் 'குரங்கு' ஆகுமோ?
தமிழில் 'தை' என்றால்
தைத்தல் - பிணைத்தல் என்று தான்
நான் நினைக்கிறேன்!
தமிழில் 'கவிதை' என்றால்
"கருத்தொடு பல அணிகளும்
கவிந்திருப்பது" என்று தான்
தமிழறிஞர்கள் கூறுகிறார்களே!
'கவி' என்றால் 'கவிஞன்' என்று
வடமொழியில் சொல்கிறார்களே...
அதுகூட
('கவி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததாம்!
'கவிதை' இற்குப் பதிலாக
'பா' என்றழைப்பதில்
தவறேதும் உண்டோ?
தமிழில் 'பா' என்பதும்
கருத்து, உணர்வு, நன்னெறி ஆகியவற்றை
பாவுதல் என்று பொருளாம்!
இதற்கு மேலே இன்னும் நீட்டினால்
எனக்கே
தலை வெடிக்கும் போல இருக்கே...
முடிவாகக் 'கவிதை' என்பது
தமிழென்றே முடிக்கிறேன்!
---------------------------------------------------------------------------------------------
சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.





உங்கள் யாழ்பாவாணன்

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 12, 2012 1:04 pm

எனக்கு ஒரு விடயம் விளங்கவே இல்லை.

கவிதை என்ற சொல்லை அது தூய தமிழ்தான் என்று நிறுவுவதன் மூலம் எதைச்சாதிக்க எண்ணுகிறோம்..?

ஆயிரக்கணக்கான வடமொழிச்சொற்களைத் தமிழ்போலவே பயன்படுத்தி கிட்டத்தட்ட அவற்றைத் தமிழாகவே கருதவும் தொடங்கிவிட்டோம். இதில் இந்த ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு அது தமிழ் தான் என்று நிரூபிப்பதால் என்ன பயன் விளைந்துவிடும் என்பது என் கேள்வி.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 12, 2012 1:08 pm

From Wikipedia, the free encyclopedia
Kavi may refer to:
Kavi (from a root kū "to cry out") is a Sanskrit term for thinker, intelligent man, man of understanding, leader; a wise man, sage, seer, prophet; a singer, bard, poet, and is applied to:
in particular, the primeval poet-seers (rishis) who composed the mantras (Vedas).
an epithet of various gods, including Varuna, Indra, the Ashvins, the Maruts, the Adityas, Soma, the Rbhus
Pushan, the Hindu god of meeting
a son of Brahma
a son of Bhrigus
a son of Shukra
the sons of several Manus
a son of Kaushika, pupil of Garga
a son of Rsabha
name of the gates of the sacrificial enclosure (TS 5.11.1.2)
the soul, in Samkhya philosophy
Apu's cousin who helps Homer in The Simpsons episode Kiss Kiss, Bang Bangalore
In current usage in India, Srilanka or Indian Sub-continent:-
The word Kavi or Kaviraj is in Indian language and literature used to denote a poet or a singer or a person of greatness who could pen or sing a poetry impromptu. The Kavi attached with Royal Durbar for entertainment of Kings were called Kaviraj. Mostly such persons were patronized by kings in India to keep alive the art. The poems or folk-songs etc in India are called Kavita ( a poem), which means words which came out of mouth of Kavi
In Zoroastrianism:-
Kavi, meaning "king", is the general title of the kings (chiefs) in Avesta. The Kavi entered Iranian mythology as Kianids.[சீட்

நன்றி : விக்கிப்பீடியா



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 12, 2012 4:17 pm

நண்பர்களே

கவிதை தமிழ்ச்சொல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

தமிழில் பல நிகண்டுகள் உள்ளன. நிகண்டு என்றால் அகராதி எனப் பெயர். வடமொழி அல்லது ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களுக்கு அவர்கள் மொழியில் சொல்வதானால் DICTIONARY.

தமிழின் முதல் நிகண்டு திவாகரம் ‘கவிதை’ பற்றி சொல்வது :
தூக்கும், யாப்பும், செய்யுளும், கவியும், பாட்டும், கவிதையும் பா எனப்படுமே

மற்றொரு நிகண்டான பிங்கலம் கூறுவது :
குடையும் கொடுத்தலுங் கூறுப கவிதை

நன்றி
சாமி


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Feb 12, 2012 4:26 pm

கபாலி wrote:ஔவையார் பல காலத்தில் வாழ்ந்த பல பெண்கவிகளைக் குறிக்கும் பெயர். சங்ககால ஔவையார் அதியமான் காலத்திய ஔவையார் வேறு. மூதுரை ஆத்திச்சூடி போன்றவை எழுதிய ஔவையார் வேறு.

நீங்கள் குறிப்பிட்ட பாடல் பிற்கால ஔவையார் பாடிய பாடல். கம்பரும் சங்க காலத்திற்கு பிற்பட்ட கவிஞர் தான்.

வட இந்திய மொழிக் கலப்பு தொல்காப்பியத்தின் காலத்திலேயே இருந்தது என்பதற்கு அதில் அவர் நால் வகை வருணங்களாக அந்தணர் அரசர் வணிகர் வேளார் ( உழவர்) எனப் பாகுபாடு தந்திருப்பதையும் அந்த வருணப்பாகுபாடு வடமொழியில் இருந்தே வந்தது எனவும் உணரலாம்.

என்ப நூலோர்... என்ப புலவர் என்று தொல்காப்பிய குறிப்பிடுவதில் அவருக்கும் முன்பு பல நூல்கள் தமிழில் உண்டு என்பதும் அகத்தியம் என்னும் இலக்கண நூலின் எளிமையே தொல்காப்பியம் என்பதும் உரையாசிரியர்கள் கூறி இருக்கிறார்கள்.

நமக்கு கிடைக்கும் தொன்மையான தமிழ் இலக்கண்ம் தொல்காப்பியம். அதில் பாவகைகள் குறிப்பிடும் தொல்காப்பியர் எங்குமே கவிதை என்று குறிக்கவில்லை. மாறாக பாவினங்களைத்தான் கூறி இருக்கிறார்.

தகவலுக்கு நன்றி கபாலி,

முதலில் சதுர் வர்ணக்கலாச்சாரம் வடக்குக்கு மட்டும் சொந்தமா ? இதை குறிப்பிட்டால் வடமொழி தழுவி இது வந்தது என்று எடுத்துக்கொள்ளாமா.

இந்தியாவில் இருந்தது போல் ரோம் நகரிலும் மதகுரு, அரசபரம்பரை, போர்வீரர்கள், குடியானவர்கள், அடிமைகள் என்ற பல பிரிவு இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்து மத மட்டுமல்லாமல் பிற மத புத்தகத்திலும் மனிதர்களில் பல பிரிவுகள் உள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இப்படி கூறும் பிரிவு முறை வடமொழிக்கு மட்டும் சொந்தமில்லை.

அடுத்து வடமொழியில் உள்ள 18 புராணம், மகாபாரதம், பாகவதம் ஆகியவற்றை வியாசர் எழுதியதாகக் கூறப் படுகிறது. இவர் ஒருவர் என்றும் இவர் இறைவன் என்றும் கூறப்படுகிறது. வியாச வியாச ரூபாய விஷ்ணுவே" . இது வடமொழிப் புலவர்களில் கருத்து. ஒரு சிலர் இது தவறு வியாசர் என்பது ஒரு பதவி, அது பல நபர்கள் உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.

ஒரு சில நிலவும் கருத்தை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரக்கூடாது. தொல்காப்பியத்தில் பா என்று குறிப்பிடபடுவதால், பா எழுதுபவரை பாணன், அல்லது பாவன் என்று கூறுவது தானே முறை. ஏன் தமிழில் புலவர் என்று கூறுகிறோம். புலமை என்றால் அறிவு என்ற ஒரு பொருள் தானே வருகிறது. இவர் கணிதத்தில் புலமை பெற்றவர் என்று நாம் கூறுகிறோம். இவர் கணிதத்தில் கவித்துவம் பெற்றவர் என்று கூறுவது சரியா ? கவி என்ற சொல் அறிவு என்ற அர்த்தமும் வடமொழியில் இருக்கும் போது தமிழில் இப்படி ஒரு சொல்லாடல் ஏன் வரவில்லை.
வடமொழியில் அறிவு படைத்தவர்களை பண்டிதர் என்று தானே கூறுகிறோம். கவி காளிதாசன் என்று பாட்டுப் பாடும் புலவனை மட்டும் கூறுகிறோம்.

இவர் தமிழ் பண்டிதர் என்று கூறுகிறோம். பண்டிதர் என்றால் விகீபிடியா கூறும் அனைத்து பொருளுடன் பொருந்தி வரும். கவிஞர் என்று சொன்னால் கவிதை எழுதுபவரை தவிர வேறு எந்த பொருளுடன் பொருந்தி வரவில்லை. அப்படியானால் விகீபிடிய தகவல்கள் உண்மைத்தகவல்களா அல்லது ஒருவரின் கூற்றா.

அது போல் கவி என்ற வடசொல்லுக்கு அறிவு என்ற பொருளிலோ, அல்லது விக்கிபீடியா கூறும் வேறு பொருளிலோ வாக்கியம் அமைத்து பாருங்கள். கவி என்ற ஒரு சொல் poem என்ற சொல்லுடன் மட்டுமே பொருந்தி வருகிறது. பல இணைய தளங்களில் நீங்கள் கொடுத்திருக்கும் ஆங்கில விளக்கம் கவி என்ற வார்த்தைக்கு அச்சு மாறாமல் இருக்கிறது. ஒருவர் எழுதி, அதை பலர் கோடிட்டு காட்டி இருக்கிறார்களோ என்று தோணுகிறது.

கவி என்ற வார்த்தைக்கு கூறும் வேர் சொல் "கூ" இது கூவும் சத்தம் என்று விகீபிடிய கூறுகிறது, இதில் இருந்து தான் அனைத்து பொருளும் உள்ளது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது.

தொல்காப்பியத்தில் ஒரு சொல் இல்லை என்றால் அது தமிழ்சொல் இல்லை என்ற முடிவுக்கு வரலாமா? தொல்காப்பியத்தில் இல்லாத தமிழ் சொற்கள் வேறு எங்கும் இல்லை என்று எண்ணுகிறீர்களா?



சதாசிவம்
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Feb 12, 2012 4:44 pm

கபாலி wrote:எனக்கு ஒரு விடயம் விளங்கவே இல்லை.

கவிதை என்ற சொல்லை அது தூய தமிழ்தான் என்று நிறுவுவதன் மூலம் எதைச்சாதிக்க எண்ணுகிறோம்..?

ஆயிரக்கணக்கான வடமொழிச்சொற்களைத் தமிழ்போலவே பயன்படுத்தி கிட்டத்தட்ட அவற்றைத் தமிழாகவே கருதவும் தொடங்கிவிட்டோம். இதில் இந்த ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு அது தமிழ் தான் என்று நிரூபிப்பதால் என்ன பயன் விளைந்துவிடும் என்பது என் கேள்வி.
கபாலி wrote:எனக்கு ஒரு விடயம் விளங்கவே இல்லை.

கவிதை என்ற சொல்லை அது தூய தமிழ்தான் என்று நிறுவுவதன் மூலம் எதைச்சாதிக்க எண்ணுகிறோம்..?

ஆயிரக்கணக்கான வடமொழிச்சொற்களைத் தமிழ்போலவே பயன்படுத்தி கிட்டத்தட்ட அவற்றைத் தமிழாகவே கருதவும் தொடங்கிவிட்டோம். இதில் இந்த ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு அது தமிழ் தான் என்று நிரூபிப்பதால் என்ன பயன் விளைந்துவிடும் என்பது என் கேள்வி.

தமிழில் பல பிறமொழிச் சொற்கள் உள்ளது. இதை மறுக்கவில்லை. ஆனால் சிலநேரங்களில் இது போன்ற கூக்குரல்கள் இடவேண்டிய சூழல் அவசியம். இப்படி கூக்குரல் இடாமல் போனதால் தான் இறைவன் தன் திருக்கரங்களால் எழுதியதாகக் கூறப்படும் திருவாசகம் படிக்க, மற்றும் தேவாரம் படிக்க தமிழ்நாட்டு கோவிலில் தடை விதித்து இருக்க மாட்டார்கள். இறைவனுக்கு வடமொழி அர்ச்சை செய்தால் தான் புரியும் என்று கூறியதை நம்பியுருக்க மாட்டார்கள். இப்படி ஒரு கேவல நிலை தமிழனுக்கு வந்து இருக்காது.

ஒருவர் அவர் தாயை தொடலாம், பேசலாம் என்று அவர் வீட்டில் எழுதி வைத்தால் அது எப்படி கேவலமாக இருக்குமோ அப்படி தான் இருக்கிறது இன்றைய கோவிகளில் இங்கு தமிழிலும் அர்ச்சை செய்யப்படும் என்ற வாக்கியம். வடமொழியிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று தானே எழுத வேண்டும்.
நமக்கு பொங்கல் கிடைத்தால் போதும் என்று பெரும்பாலான நபர்கள் வந்து விடுவது போல் ஒரு சிலரால் வர இயலவில்லை.

கவி என்ற வார்த்தைக்கு குரங்கு என்ற பொருள் கூறப்பட்டு இருந்தது தான் இந்த எழுத்துக்கு காரணம். கபி என்றால் குரங்கு மட்டுமல்ல பல பொருள்கள் உள்ளது. ஹரி என்ற வட சொல்லுக்கும் குரங்கு என்று ஒரு பொருள் உண்டு. அப்படியானால் ஹரியை குரங்கு என்று கூப்பிடலாமா ?






சதாசிவம்
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Feb 12, 2012 4:50 pm

சாமி wrote:நண்பர்களே

கவிதை தமிழ்ச்சொல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

தமிழில் பல நிகண்டுகள் உள்ளன. நிகண்டு என்றால் அகராதி எனப் பெயர். வடமொழி அல்லது ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களுக்கு அவர்கள் மொழியில் சொல்வதானால் DICTIONARY.

தமிழின் முதல் நிகண்டு திவாகரம் ‘கவிதை’ பற்றி சொல்வது :
தூக்கும், யாப்பும், செய்யுளும், கவியும், பாட்டும், கவிதையும் பா எனப்படுமே

மற்றொரு நிகண்டான பிங்கலம் கூறுவது :
குடையும் கொடுத்தலுங் கூறுப கவிதை

நன்றி
சாமி

தகவலுக்கு நன்றி
சூப்பருங்க



சதாசிவம்
"கவிதை" என்பது வடமொழியா?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 12, 2012 5:38 pm

நல்லது நண்பர்களே.. நான் முன்பே நினைத்தது தான். இந்த விவாதம் உண்மை அறியும் நோக்கில் இருக்கும் என எண்ணி விளக்கம் கூறத்தலைப்பட்டேன்..

முன்பே நான் சொன்னது போல தமிழை அளவுக்கதிகமாக வெறிகொண்டு நேசித்தால் பல உண்மைகள் காலடிக்குள் தான் செல்லும்.

நீங்கள் எண்னுவது போல் கவிதை தூய தமிழாகவே இருந்து போகட்டும். எனக்கொரு நட்டமும் இல்லை.

நன்றி.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Feb 13, 2012 8:36 pm

கபாலி wrote:தமிழ்மீது பற்று இருக்கலாம். ஆனால் உண்மைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு பெருமை கொள்ளல் ஆகாது,

கவிதா என்னும் சமஸ்கிருத சொல்லே தமிழில் கவிதை என்று வழங்கப்பட்டது.

தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் கூட கையாண்டிரப்படாத சொல்லே கவிதை.

தமிழில் செய்யுள் பா விருத்தம் நூல் என்ற பெயர்களே பண்டு வழங்கப்பட்டது,

சரி நமக்கேன் வம்பு. ஆமாம் என்று சொல்லிப்போனால் முடிந்தது.


கபாலி wrote:அப்படி இல்லை சார்லஸ். நாம் எத்தனை ஆதாரம் வைத்தாலும் நம்மை தமிழுக்கு எதிரி என்று சொல்லி ஒதுக்கிவிடுவார்கள்.

நான்சொன்னது முற்றிலும் சரியானது, அத்தோடு என் பங்கு முடிந்தது,

மதிப்புக்குரிய கபாலி அவர்களே!
எனது கவிதையின் கீழ் என் கருத்துக்கான சான்று தந்துள்ளேன். மொழி மோதல் எமக்குள் வேண்டாம். தமிழில் எத்தனை மொழி உள்ளே நுழைந்ததோ, அதேபோல அவ்வவ் மொழிகளில் தமிழும் நுழைந்திருக்கிறதே!
தங்கள் கருத்தை உறுதிப்படுத்த தொல்காப்பியமும் நன்னூலும் போதாது. அகத்தியர் அருளிய அகத்தியம் தொட்டு பல இலக்கண நூல்கள் இவற்றிற்கு முன் வெளிவந்து விட்டதே!
கவிந்திருப்பதைப் பொருளாகக் கொண்டு கவிதை பற்றிப் பரிபாடலில் குறிபிடப்பட்டுள்ளது.
தங்கள் கருத்துக்கு நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Feb 13, 2012 8:48 pm

கபாலி wrote:எனக்கு ஒரு விடயம் விளங்கவே இல்லை.

கவிதை என்ற சொல்லை அது தூய தமிழ்தான் என்று நிறுவுவதன் மூலம் எதைச்சாதிக்க எண்ணுகிறோம்..?

ஆயிரக்கணக்கான வடமொழிச்சொற்களைத் தமிழ்போலவே பயன்படுத்தி கிட்டத்தட்ட அவற்றைத் தமிழாகவே கருதவும் தொடங்கிவிட்டோம். இதில் இந்த ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு அது தமிழ் தான் என்று நிரூபிப்பதால் என்ன பயன் விளைந்துவிடும் என்பது என் கேள்வி.

தமிழ் உலகின் முதல் மொழியே! தமிழ் சொல்கள் பிற மொழிகளில் கையாளப்படுவது அதற்குச் சான்றே! ஆங்கிலத்திலும் தமிழ் சொல் இருக்கிறதே!



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக