புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 4:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:50 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 1:43 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:38 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 1:14 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:48 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:34 am

» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:51 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:07 pm

» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Fri Jul 19, 2024 7:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
180 Posts - 60%
heezulia
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
81 Posts - 27%
T.N.Balasubramanian
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
9 Posts - 3%
Dr.S.Soundarapandian
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
6 Posts - 2%
mohamed nizamudeen
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
6 Posts - 2%
kavithasankar
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
6 Posts - 2%
prajai
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
5 Posts - 2%
Jenila
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
3 Posts - 1%
Sathiyarajan
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
2 Posts - 1%
Barushree
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
367 Posts - 49%
heezulia
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
269 Posts - 36%
Dr.S.Soundarapandian
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
24 Posts - 3%
mohamed nizamudeen
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
20 Posts - 3%
T.N.Balasubramanian
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
18 Posts - 2%
i6appar
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
13 Posts - 2%
prajai
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
9 Posts - 1%
kavithasankar
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
6 Posts - 1%
Jenila
பொட்டல் காடு Poll_c10பொட்டல் காடு Poll_m10பொட்டல் காடு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொட்டல் காடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 6:19 am

அது ஒரு திறந்தவெளி. எங்கு நின்று பார்த்தாலும் வானமே தெரிந்தது. பூமித்தாயின் முகமெங்கும் செம்மண் கொட்டப்பட்டு, அவள் முகத்தில் காணப்படும் பருக்கள் போல காணிக் கற்கள் எங்கு பார்த்தாலும் நடப்பட்டிருந்தன. அந்தக் காணிக்கற்களே அங்கு வருவோருக்கு வரவேற்பாளர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருந்தன.

அந்தத் திறந்தவெளியில் இரண்டே இரண்டு மரங்கள் மட்டும் இருந்தன. ஒன்று அரச மரம், இன்னொன்று அப்போதுதான் வளர்ந்து வரும் வேப்பமரம்.

ஒருநாள் அந்த இடத்தைப் பார்க்க இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவர்கள் அந்த மரங்களைச் சுற்றி சுற்றிப் பார்த்துவிட்டு ஏதேதோ பேசினார்கள். சிறிது நேரம் கழித்துச் சென்று விட்டார்கள்.

அவர்கள் போனபிறகு, இளமையாக இருந்த வேப்பமரம் அரசமரத்தைப் பார்த்துக் கேட்டது, "அரச மரமே, நீ இந்த இடத்தில் ரொம்ப நாளாய் இருக்கிறாய்... எவ்வளவோ பேர்களைப் பார்த்திருப்பாய்... இப்போ வந்தாங்களே, இந்த இரண்டு மனிதர்களும் ஏதோ காடு, காடுன்னு பேசிக்கிட்டாங்களே, காடுன்னு ஏதாவது இந்த இடத்திலே இருந்திச்சா, காடுன்னா என்ன? அது எப்படியிருக்கும்?' என்று கேட்டது.

இதைக் கேட்ட அரசமரத்துக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

தன் துன்பம் அந்த வளரும் வேப்பமரத்திற்கும் வரக் கூடாதுன்னு தன் துக்கத்தை அடக்கிக் கொண்டு சொன்னது-

"ஆமாம், இங்கே பச்சைப் பசேல்னு ஓர் அடர்ந்த காடு இருந்தது. காடு என்றால் எங்கு பார்த்தாலும் நிறைய மரங்கள், செடிகொடிகள், மணம் வீசும் பூக்கள் எல்லாம் இருக்கும். இயற்கைச் செல்வங்கள் எழில் தோற்றமாய் காண்போரைக் கவரும் வண்ணமயமாய் இருக்கும்.

பூமித்தாய் பச்சைப் பட்டாடை உடுத்தியது போல அழகாக ஜொலிப்பாள். அதனுள் வன விலங்குகள், பறவையினங்கள், ஊர்வன என எண்ணற்ற உயிரினங்கள் வசித்துக் கொண்டு, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்ந்து வந்தன. அவர்கள் நீர் பருக பக்கத்தில் ஒரு சுனையும் இருந்ததது' என்றது.

"இப்போ, நாம இரண்டு பேருதானே இங்கே இருக்கோம்! அவங்களையெல்லாம் காண முடியவில்லையே... எங்கே போனாங்க?' என்றது வேப்ப மரம் அப்பாவியாக.

'சொல்றேன்... கேளு...' என்று அரச மரம் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தது.

"நிறைய மரங்கள் இருக்கும்னு சொன்னேன் இல்லையா? இந்தக் காட்டிலே சந்தனமரம், புளிய மரம், சவுக்கு மரம், மூங்கில் மரம், புன்னை மரம், ஆலமரம் இன்னும் எனக்குப் பெயர் தெரியாத பல மரங்கள் இருந்தன. அந்த மரங்களின் மீது பறவைகள் எல்லாம் கூடு கட்டி தங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தன.

நாங்கள் தரும் காய்களையும் பழங்களையும் அந்தப் பறவைகள் கொத்திக் கொத்தித் தின்னு பசியாறும். தாயும் சேயும் எங்கள் பாதுகாப்பிலே இருப்பாங்க. அந்தப் பறவைகள் தங்கள் குஞ்சுகளை எல்லாம் எங்கக் கிட்டதான் பாதுகாப்பா விட்டு விட்டு காலையிலே இரை தேடப் போவாங்க. இரை எல்லாம் தேடி எடுத்துக் கொண்டு வந்து அந்தப் பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு ஊட்டும்.

இரவிலே ஏதோ, ஏதோ கதைகளை எல்லாம் சொல்லித் தூங்க வைக்கும். நாங்களும் அந்தக் கதைகளை எல்லாம் கேட்டு மனசுக்குள்ளே சிரித்துக் கொள்வோம். அப்போ, நாங்கள் எங்க இலையை அசைச்சு, அசைச்சுக் காத்து வர வெச்சுத் தாலாட்டி, அந்தக் குஞ்சுகளை எல்லாம் தூங்க வைப்போம்.

காலையிலே சூரிய ஒளிபட்டவுடன் கீச் கீச்சுன்னு கத்திக் கொண்டு இரையைத் தேடி புறப்படும். எங்களுக்கெல்லாம் அற்புத ரீங்காரமான அந்த ஒலி, சுப்ரபாதமாக இருக்கும்.' "காட்டிலே நிறைய நடமாடும் வனவிலங்குகள் எல்லாம் இருந்ததுன்னு சொன்னீங்களே, அவுங்களுக்கு எந்த ஒத்தாசையும் செய்ய மாட்டீங்களா?' என்று கேட்டது வேப்பமரம். "நாங்கள் என்ன மனுசங்களா? அபயம் என்று வந்தவர்களுக்கு அடைக்கலம் தராமல் இருப்பதற்கு?' என்று கோபமாய் கேட்டது அரச மரம்.

"அந்த விலங்குகள் எல்லாம் என்ன பண்ணும்' என்றது வேப்பமரம்.

"அந்த விலங்குகள் எல்லாம் எங்களைச் சுற்றிச் சுற்றி விளையாடும். இரையைத் தேடி அங்குமிங்கும் அலைஞ்சிட்டு, எங்கள் நிழல்லே வந்து இளைப்பாறும். அப்போது நாங்கள் எங்கள் இலையை அசைச்சுக் காற்றை வரவைச்சு அவைகளை ஓய்வெடுக்க வைப்போம். அது மட்டுமா, எங்கள் இலைகளையும் காய்களையும் பழங்களையும் அவைகளுக்கு உணவாகக் கொடுப்போம்' என்றது அரச மரம்.

"இப்போ உங்களைத் தவிர, இங்கே யாருமே இல்லையே! அந்த மரங்களும் பறவையினங்களும் விலங்குகளும் காணவில்லையே? எங்கே போனாங்க?' என்றது வேப்பமரம்.

"அதை ஏன் கேக்கிறே?' என்று மூக்கைச் சிந்தி அழுதவாறே, அரசமரம் மேலே சொல்ல ஆரம்பித்தது.

"ஒருநாள் இந்தக் காட்டை சுற்றிப் பார்க்க மனுசன்கள் எல்லாம் வந்தாங்க... அவங்களுக்குள்ளே ஏதோ பேசிக்கிட்டாங்க. நம்மைப் பார்த்து ஏதோ சந்தோசமா பேசிக்கிறாங்க என்றுதான் நாங்கள் இருந்தோம். ஆனால், கொஞ்ச நாள் கழிச்சி ஒரு பத்து இருபது பேர் கையிலே வாள், கத்தி, கோடாரி, கடப்பாரை போன்ற பயங்கரமான ஆயுதங்களை எல்லாம் கொண்டு வந்தாங்க... நாங்கள் பயந்து போனோம். ஐயோ, நான் எப்படிச் சொல்வேன்? ஈவிரக்கம் இல்லாமல் அந்த மனுசன்கள் இங்கிருந்த மரங்களையெல்லாம் வெட்ட ஆரம்பிச்சாங்க. யாரும் ஒண்ணும் பேசிக்கல. பாவம், அந்தப் பறவையினங்கள்தான் கீச் கீச்சுன்னு கத்தி, அங்குமிங்கும் பறந்தாங்க. விலங்கினங்கள் பயந்து அலறியபடி, போக இடம் தெரியாமல் ஓடின. அவங்களால அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

மற்ற தரைவாழ் உயிரினங்கள் அவைகளின் காலடியில் சிக்கி மாண்டன. எங்கும் மரண ஓலம்! காலையில் பசுமையா இருந்த மரங்கள் எல்லாம் மாலையிலே வாடி வதங்கிப் போய், கட்டாந்தரையிலே படுக்க வச்சிருந்தாங்க.

கொஞ்ச நேரத்திலே அவைகளை எல்லாம் துண்டு துண்டா வெட்டி, பெரிய பெரிய வாகனங்களில் ஏத்தி, எங்கோ அனுப்பி வச்சுட்டாங்க. பறவைகள் கத்தி கத்திப் பார்த்துட்டு எங்கேயோ பறந்து போச்சுக.

நான் கிழமா இருந்ததாலே, என்னை மட்டும் விட்டுட்டாங்க' என்றது அரசமரம்.

"அந்த மனிதர்கள் மரங்களை வெட்டும் போது, காட்டுராஜா சிங்கம், புலி, சிறுத்தை, படையையே நடுங்க வைக்கும் பாம்பு இனங்கள் ஆகியவை சும்மாவா இருந்திச்சி' என்று கேட்டது வேப்பமரம்.

"அவுங்க என்ன செய்வாங்க பாவம். உர்... உர்.. புஸ், புஸ்ன்னு கத்திக்கிட்டு, அந்த மனுசங்க பின்னாலே ஓடினாங்க. ஆனால், அந்த மனுஷங்க கையிலேதான் ஏதோ ஏதோ ஆயுதங்கள் இருந்திச்சே..! அதை வச்சு எல்லாரையும் சுட்டும், வெட்டியும் சாகடிச்சிப்புட்டாங்க. அவங்க தீடீரென நடத்திய தாக்குதலிலே என்ன பண்றதுன்னு தெரியாம விலங்கினங்கள் எல்லாம் மாண்டு போயின.

அப்போது, இங்கிருந்த பூமித்தாயின் முகம் சிவப்பாயிடுச்சி. மற்ற விலங்குகளும், பறவைகளும் பயந்து கத்தியபடி கலைந்து ஓடின. அப்போ போனதுக, இன்னும் திரும்பி வரவேயில்லை. நான் இனி அவர்களை என்று காண்பேனோ? இந்தத் தாத்தவைக் காண அவர்களுக்கு ஆசை இல்லையா..?

நான் சொன்ன இந்த அடர்ந்த காட்டில் நான் மட்டும் இப்போ தனியா இருக்கேன். நீ இப்போதுதான் வளர்ந்து வர. இருந்த காடுகளையும் வனச் செல்வங்களையும் வளர்ச்சி என்ற பெயரில் அழிச்சிட்டு இப்போ புவி வெப்பம்... புவி வெப்பம்... என்று இந்த மனுசன்கள் கூக்குரலிடுகிறார்கள். தன் வினை தன்னைச் சுடும் என்பார்களே அது இதுதான் போலிருக்கிறது.

இப்போ பருவமழையும் முறை தவறிப் பெய்யுது. பூமித்தாயும் பாலைவனமாயிட்டாங்க. காடுகளை அழித்தால் சுற்றுச்சூழல், பறவையினங்கள், வனவிலங்குகள் பாதிக்கப்படும் என்ற கவலை மனிதனுக்கு இல்லை. அதனாலே நமக்கு ஆதரவாக, இப்போ இங்கு யாருமில்லை..." என்றது அரசமரம்.

இதைக் கேட்ட வேப்பமரத்திற்கு அழுகை அழுகையா வந்தது.

அப்போது, முன்னர் இந்த இரண்டு மரங்களையும் இடத்தையும் பார்த்துச் சென்ற இரண்டு பேர் அங்கு வந்தார்கள்.

"பல டன் தேறும்' என்று பேசியபடி அந்த அரசமரத்தையும்,வளர்ந்து வரும் வேப்பமரத்தையும் வெட்ட ஆரம்பித்தார்கள்.

அவைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க அங்கு எந்தப் பறவையினங்களும் இல்லை.

உர் உர் என்று துரத்தியடிக்க விலங்கினங்களும் இல்லை. எல்லாம் வெட்டி முடித்து வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கிய பின் அவைகள் அனாதைப் பிணங்களாக வண்டியில் ஏற்றப்பட்டன.

அந்த அடந்த காடு, இன்று பொட்டல்காடாகி விட்டது. அந்த இடத்தில். பூமித்தாயின் முகத்தில்., இரண்டு புதிய பருக்களாக, புதிய காணிக்கற்கள் நடப்பட்டன.

பா.இராதாகிருஷ்ணன்



பொட்டல் காடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக