Latest topics
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:by ayyasamy ram Today at 14:39
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
+5
ரேவதி
ஜாஹீதாபானு
பானு ஜெகன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
9 posters
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
First topic message reminder :
தோழி சசிகலாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி
சர்க்கரை நோயாளிகள, BP மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் ...... நம்ப இருக்கும் நேரத்தில், அவருக்கென தனியாய் சமைப்பதும் கஷ்டம், அவருக்கு த்தரும் பத்திய சாப்பாட்டை குழந்தைகளுக்கு தருவதும் கஷ்டம் சமையல் செய்வதே பெரும் பாடாக ஆகிவிடுகிறது அல்லவா? அதிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க த்தான் இந்த திரி இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், பெரியவர்களும் மட்டுமல்ல நாமும் நாம் குழந்தைகளும் சாப்பிடலாம். பத்திய சாப்பாடு என்ற நினைப்பே வராது. 'வெரைட்டியாக', 'வித்தியாஸ்மாக' இருக்கும் அவ்வளவ்தான் . என்ஜாய்!
தோழி சசிகலாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி
சர்க்கரை நோயாளிகள, BP மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் ...... நம்ப இருக்கும் நேரத்தில், அவருக்கென தனியாய் சமைப்பதும் கஷ்டம், அவருக்கு த்தரும் பத்திய சாப்பாட்டை குழந்தைகளுக்கு தருவதும் கஷ்டம் சமையல் செய்வதே பெரும் பாடாக ஆகிவிடுகிறது அல்லவா? அதிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க த்தான் இந்த திரி இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், பெரியவர்களும் மட்டுமல்ல நாமும் நாம் குழந்தைகளும் சாப்பிடலாம். பத்திய சாப்பாடு என்ற நினைப்பே வராது. 'வெரைட்டியாக', 'வித்தியாஸ்மாக' இருக்கும் அவ்வளவ்தான் . என்ஜாய்!
Last edited by krishnaamma on Thu 10 Mar 2022 - 23:57; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
நேற்று தான் செய்தேன் ஐயா, இப்பொழுது தான் படம் போட்டேன் ...பாருங்கள்...........சுவையாக இருந்ததுபழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1283686krishnaamma wrote:பச்சை பயறு இட்லி !
தேவையானவை:
பச்சை பயறு ஒரு கப்
உளுத்தம் பருப்பு அரை கப்
பிளைன் ENO Fruit சால்ட் 1 /4 ஸ்பூன் (தேவையானால் )
செய்முறை :
பயறை எட்டு மணிநேரமும், உளுந்தை நான்கு மணிநேரமும் ஊறவைத்து , தனித்தனியே அரைக்கவும்.
அரைத்த இரண்டையும் உப்பு போட்டு கலக்கவும்.
அதை அப்படியே ஒரு நான்கு மணிநேரம் வைக்கவும்.
பிறகு வழக்கம் போல இட்லி வார்க்கவும்.
சுவையான, புரதம் நிறைந்த பயறு இட்லி தயார்.
சர்க்கரை நோயாளிகளுக்கான இதை எல்லோரும் சாப்பிடலாம்.
வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்
எந்த சாம்பாருடனும் சாப்பிடலாம்
சுவையான பயத்தம்பருப்பு
இட்லி அருமை அம்மா
நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேழ்வரகு முருங்கை இலை அடை!
கேழ்வரகு முருங்கை இலை அடை!
தேவையானவை:
கேழ்வரகு மாவு 1 கப்
உருவிய முருங்கை இலை அல்லது காய்ந்த முருங்கை இலை ஒரு கைப்பிடி
உப்பு
பச்சை மிளகாய் 2
செய்முறை :
ஒரு பேசினில் கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ளுங்கள்.
அதில் முருங்கை இலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள்.
கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையுங்கள்.
அதை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் துளி எண்ணெய் தடவிக்கொண்டு இந்த உருண்டை ஒன்றை எடுத்து அடை போல தட்டுங்கள்.
தோசைக்கல்லை அடுப்பில் போட்டு, அது சூடானதும் அதில் இந்த அடையை போட்டு,
துளி எண்ணெய் விட்டு, இரண்டு புறமும் வெந்ததும் எடுத்துவிடுங்கள்.
மொத்த மாவையும் இதே போல் செய்யுங்கள்.
அருமையான 'கேழ்வரகு முருங்கை இலை அடை ' தயார்.
எதுவும் தொட்டுக்கொள்ளத்தேவை இருக்காது.
அப்படியே நன்றாக இருக்கும்.
தேவையானவை:
கேழ்வரகு மாவு 1 கப்
உருவிய முருங்கை இலை அல்லது காய்ந்த முருங்கை இலை ஒரு கைப்பிடி
உப்பு
பச்சை மிளகாய் 2
செய்முறை :
ஒரு பேசினில் கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ளுங்கள்.
அதில் முருங்கை இலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள்.
கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையுங்கள்.
அதை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் துளி எண்ணெய் தடவிக்கொண்டு இந்த உருண்டை ஒன்றை எடுத்து அடை போல தட்டுங்கள்.
தோசைக்கல்லை அடுப்பில் போட்டு, அது சூடானதும் அதில் இந்த அடையை போட்டு,
துளி எண்ணெய் விட்டு, இரண்டு புறமும் வெந்ததும் எடுத்துவிடுங்கள்.
மொத்த மாவையும் இதே போல் செய்யுங்கள்.
அருமையான 'கேழ்வரகு முருங்கை இலை அடை ' தயார்.
எதுவும் தொட்டுக்கொள்ளத்தேவை இருக்காது.
அப்படியே நன்றாக இருக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
கேழ்வரகு முருங்கை இலை தோசை!
தேவையானவை:
கேழ்வரகு மாவு 1 கப்
மைதா 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு 2 - 3 டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு 2 - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது 2 - 3 டீ ஸ்பூன்
முருங்கை இலை புதியது அல்லது காயவைத்தது 2 - 3 கைப்பிடி
உப்பு
தோசை வார்க்க எண்ணெய்
செய்முறை :
ஒரு பேசினில் கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ளுங்கள்.
அதில் முருங்கை இலை, மைதா, அரிசி மாவு, கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள்.
கொஞ்சம் சூடான தண்ணீர் விட்டு கரண்டியால் நன்கு கலக்குங்கள்.
தோசை மாவு பதம் வரும்வரை தண்ணீர் சேர்க்கலாம்.
கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்ததும், தோசைக்கல்லை அடுப்பில் போடுங்கள்.
கலந்த மாவை எடுத்து தோசைகளாக வார்த்து எடுங்கள்.
அருமையான 'கேழ்வரகு முருங்கை தோசை ' தயார்.
வெறும் தயிர் போதும் இதற்கு தொட்டுக்கொள்ள.
சர்க்கரை நோயாளிகளுக்கு இது வரப்பிரசாதம்.
மாவு கரைத்ததுமே வார்க்கலாம், மெத் என்று இருக்கும்.
தேவையானவை:
கேழ்வரகு மாவு 1 கப்
மைதா 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு 2 - 3 டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு 2 - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது 2 - 3 டீ ஸ்பூன்
முருங்கை இலை புதியது அல்லது காயவைத்தது 2 - 3 கைப்பிடி
உப்பு
தோசை வார்க்க எண்ணெய்
செய்முறை :
ஒரு பேசினில் கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ளுங்கள்.
அதில் முருங்கை இலை, மைதா, அரிசி மாவு, கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள்.
கொஞ்சம் சூடான தண்ணீர் விட்டு கரண்டியால் நன்கு கலக்குங்கள்.
தோசை மாவு பதம் வரும்வரை தண்ணீர் சேர்க்கலாம்.
கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்ததும், தோசைக்கல்லை அடுப்பில் போடுங்கள்.
கலந்த மாவை எடுத்து தோசைகளாக வார்த்து எடுங்கள்.
அருமையான 'கேழ்வரகு முருங்கை தோசை ' தயார்.
வெறும் தயிர் போதும் இதற்கு தொட்டுக்கொள்ள.
சர்க்கரை நோயாளிகளுக்கு இது வரப்பிரசாதம்.
மாவு கரைத்ததுமே வார்க்கலாம், மெத் என்று இருக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
நல்ல தகவல் மிக்க நன்றி அக்கா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
மேற்கோள் செய்த பதிவு: 1306339மாணிக்கம் நடேசன் wrote:நல்ல தகவல் மிக்க நன்றி அக்கா.
நன்றி மாமா, நலமா நீங்கள்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பேல் பூரி !
பேல் பூரி: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம். நல்ல balancedfood . இதற்க்கு முக்கியத் தேவை அரிசிப் பொரிதான். அதோடு வேக வைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த பட்டாணி , வீட்டில் செய்த அல்லது கடையில் வாங்கிய ஓமப்பொடி, வறுத்துக் காரம் போட்ட கடலைப்பருப்பு அல்லது வேர்க்கடலை, மாதுளை முத்துக்கள் அல்லது பொடியாக நறுக்கிய தக்காளி , பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைக்கொத்துமல்லி,எலுமிச்சைச் சாறு போன்றவை. மற்றபடி பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னி, சின்னச் சின்ன பூரிகள் பேல் பூரியில் கலக்க வைத்த்குக்கொண்டால் "பேல்" அருமையாக இருக்கும் புன்னகை
சட்னி வகைகளை முன் கூட்டியே தயாரித்து வைத்துக்கொள்ளுதல் நல்லது. பேல்பூரியில் கலக்கவேண்டிச் சின்னச் சின்ன பூரிக ளையும் செய்து வைத்துக கொள்ள வேண்டும் .
முதலில் பூரி செய்யும் விதம்:
ரவை ஒரு கப்
மைதா ஒரு கப்
கோதுமை மாவு ஒரு கப்
தேவையான அளவுக்கு உப்பு
பொரிக்க எண்ணெய்
மூன்று மாவையும் நன்கு உப்பைப் போட்டுக் கலந்துகொண்டு தேவையான நீரைச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மறுபடி நன்கு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொண்டு மெல்லிய பூரிகளாக இடவும்.
இட்ட பூரியில் ஒரு ஃபோர்க் அல்லது முள் கரண்டியால் குத்திவிடவும்.
இப்படிக் குத்தாமல் பொரித்தால் பூரி உப்பிவிடும்.
தட்டையான பூரிகளே இதற்குத் தேவை.
ஆகையால் குத்திவிட்டுப் பூரிகளைப் பொரித்தெடுக்கவும்.
அடுத்து காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.
தேவையான பொருட்கள்:
கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு
பச்சை மிளகாய்10 -12
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 2 -4
2 டீஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு
செய்முறை :
கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும்.
கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம்.
கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கனும் .
அடுத்து இனிப்புச் சட்னி:
தேவையானவை:
பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கணும் .
புளிச்சட்னி(இனிப்புச் சட்னி இரண்டாம் வகை)
100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும்.
இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு.
ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்)
ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும்.
இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும்.
இது பல நாட்கள் பயன்படுத்தலாம்.
பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.
இப்போ பேல் பூரிக்கு வேண்டிய சாமான்கள் தயார். இவை எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொண்டால் நேரே பேல்பூரியைக் கலக்க ஆரம்பிக்கலாம்.
அரிசிப் பொரி கைகளால் போட்டால் இரண்டு கை அளவு அல்லது இரண்டு பெரிய கிண்ணம் அளவு, அதே அளவு ஓமப்பொடி, நொறுக்கிய பூரிகள், (நம் விருப்பத்திற்கேற்ப பூரிகளைச் சேர்க்கலாம்) இதன் மேல் நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை சேர்க்கவும். இதன் மேலே இரண்டு டீஸ்பூன் காரச் சட்னியை ஊற்றி, இரண்டு டீஸ்பூன் இனிப்புச் சட்னியையும் ஊற்றவும். அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளவும். எல்லாவற்றையும் கலக்கும் முன்னர் நறுக்கி வைத்த கொத்துமல்லிக்கீரையைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். உடனே சாப்பிடவும். பேல்பூரியை முதலிலேயே கலந்து வைத்தால் சொத சொதவென ஆகிவிடும். ஆகவே அவ்வப்போது சாப்பிடும் நபர்களுக்கு ஏற்பக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலக்கவேண்டும்.
குறிப்பு: பேல் பூரி பண்ணப் போகும் நாளின் முந்தைய தினம் கூட இதைப் பண்ணி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கலாம்.
இந்த ஜீரகப் பொடி ரசம், சாட், தயிர்வடை போன்றவற்றிலும் கலக்கத் தேவைப்படும். ஆகவே நூறு கிராம் ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
சட்னி வகைகளை முன் கூட்டியே தயாரித்து வைத்துக்கொள்ளுதல் நல்லது. பேல்பூரியில் கலக்கவேண்டிச் சின்னச் சின்ன பூரிக ளையும் செய்து வைத்துக கொள்ள வேண்டும் .
முதலில் பூரி செய்யும் விதம்:
ரவை ஒரு கப்
மைதா ஒரு கப்
கோதுமை மாவு ஒரு கப்
தேவையான அளவுக்கு உப்பு
பொரிக்க எண்ணெய்
மூன்று மாவையும் நன்கு உப்பைப் போட்டுக் கலந்துகொண்டு தேவையான நீரைச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மறுபடி நன்கு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொண்டு மெல்லிய பூரிகளாக இடவும்.
இட்ட பூரியில் ஒரு ஃபோர்க் அல்லது முள் கரண்டியால் குத்திவிடவும்.
இப்படிக் குத்தாமல் பொரித்தால் பூரி உப்பிவிடும்.
தட்டையான பூரிகளே இதற்குத் தேவை.
ஆகையால் குத்திவிட்டுப் பூரிகளைப் பொரித்தெடுக்கவும்.
அடுத்து காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.
தேவையான பொருட்கள்:
கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு
பச்சை மிளகாய்10 -12
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 2 -4
2 டீஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு
செய்முறை :
கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும்.
கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம்.
கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கனும் .
அடுத்து இனிப்புச் சட்னி:
தேவையானவை:
பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கணும் .
புளிச்சட்னி(இனிப்புச் சட்னி இரண்டாம் வகை)
100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும்.
இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு.
ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்)
ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும்.
இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும்.
இது பல நாட்கள் பயன்படுத்தலாம்.
பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.
இப்போ பேல் பூரிக்கு வேண்டிய சாமான்கள் தயார். இவை எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொண்டால் நேரே பேல்பூரியைக் கலக்க ஆரம்பிக்கலாம்.
அரிசிப் பொரி கைகளால் போட்டால் இரண்டு கை அளவு அல்லது இரண்டு பெரிய கிண்ணம் அளவு, அதே அளவு ஓமப்பொடி, நொறுக்கிய பூரிகள், (நம் விருப்பத்திற்கேற்ப பூரிகளைச் சேர்க்கலாம்) இதன் மேல் நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை சேர்க்கவும். இதன் மேலே இரண்டு டீஸ்பூன் காரச் சட்னியை ஊற்றி, இரண்டு டீஸ்பூன் இனிப்புச் சட்னியையும் ஊற்றவும். அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளவும். எல்லாவற்றையும் கலக்கும் முன்னர் நறுக்கி வைத்த கொத்துமல்லிக்கீரையைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். உடனே சாப்பிடவும். பேல்பூரியை முதலிலேயே கலந்து வைத்தால் சொத சொதவென ஆகிவிடும். ஆகவே அவ்வப்போது சாப்பிடும் நபர்களுக்கு ஏற்பக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலக்கவேண்டும்.
குறிப்பு: பேல் பூரி பண்ணப் போகும் நாளின் முந்தைய தினம் கூட இதைப் பண்ணி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கலாம்.
இந்த ஜீரகப் பொடி ரசம், சாட், தயிர்வடை போன்றவற்றிலும் கலக்கத் தேவைப்படும். ஆகவே நூறு கிராம் ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
'அவல் இட்லி' -நிமிடங்களில்....
'அவல் இட்லி' -நிமிடங்களில்....
தேவையானவை :
கெட்டி அவல் 2 கப் (சிவப்பு அவல் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் )
மோர் அல்லது தண்ணீர் கொஞ்சம்
கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்
தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்
செய்முறை:
அவலை 2 -3 முறை நன்கு களைந்து பிழிந்து மோரில் ஊற வைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊறிய அவல் மீது கொட்டவும்.
உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
அவ்வளவு தான் எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'அவல் இட்லி' தயார்.
தேவையானவை :
கெட்டி அவல் 2 கப் (சிவப்பு அவல் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் )
மோர் அல்லது தண்ணீர் கொஞ்சம்
கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்
தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்
செய்முறை:
அவலை 2 -3 முறை நன்கு களைந்து பிழிந்து மோரில் ஊற வைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊறிய அவல் மீது கொட்டவும்.
உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
அவ்வளவு தான் எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'அவல் இட்லி' தயார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி
» எளிய சமையல் குறிப்புகள்- மீனா
» சர்க்கரை நோயாளிகளுக்கான 10 டிப்ஸ்
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !
» எளிய சமையல் குறிப்புகள்- மீனா
» சர்க்கரை நோயாளிகளுக்கான 10 டிப்ஸ்
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|