புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
81 Posts - 64%
heezulia
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
5 Posts - 4%
eraeravi
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
1 Post - 1%
viyasan
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
273 Posts - 45%
heezulia
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
19 Posts - 3%
prajai
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
7 Posts - 1%
mruthun
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_m10சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 11:53 am

சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Astrology_aniசனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Astro_header_sani_a




சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை SaniHead
கணித்தவர்:-

`எண்கலை வித்தகர்' `ஜோதிடக் கலைமாமணி' சிவல்புரி சிங்காரம்



சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Aries சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Taurus சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Gemini சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Cancer சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Leo சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Virgo
சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Libra சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Scorpio சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Sagittarius சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Capricorn சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Aquarius சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Pisces




சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 11:55 am

மேஷம்

அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

ஏழாம் இடத்தில் சனி! இனிக்கும் வாழ்க்கைதான் இனி!

எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென்று எண்ணும் மேஷ ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் செயலில் வேகம் இருக்கும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயலாற்றி வெற்றிக்கனியை விரைவில் எட்டிப்பிடிக்க விரும்பு வீர்கள். தவறு நடந்தால் தட்டிக் கேட்பதற்கும் தயங்க மாட்டீர்கள்.

உங்கள் ராசிக்குள் தேவ கணம், மனித கணம், அசுர கணம் ஆகிய மூன்றும் அடங்கி யிருப்பதால், அவற்றில் உங்கள் நட்சத்திரத்திற்குரிய கணம் எது என்பதை ஆராய்ந்து, அதற்குரிய விதத்தில் தெய்வ வழிபாட்டை தேர்ந்தெடுத்து மேற்கொண்டால், செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

கூட்டு யோகத்தைக் காட்டிலும், வீட்டு யோகம் உங்களுக்கு உண்டு. `பூமிகாரகன்' செவ்வாயின் ஆதிக்கத்திற்குரிய ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால் சொத்துக்களால் உங்களுக்கு லாபம் உண்டு.

அந்தச் செவ்வாய், உங்கள் சுய ஜாதகத்தில் இருக்கும் சாரபலத்தை அறிந்து, நவாம் சத்திலும் அது இருக்கும் நிலை அறிந்து, அதைப் பார்க்கும் கிரகத்தின் பலமும், அதோடு சேர்ந்திருக்கும் கிரகத்தின் பலமும் பார்த்து, எடைபோட்டு அதற்குரிய எண் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும் அமைத்து கொண்டால், பொன்னான எதிர்காலம் இப்பூவுலகில் உங்களுக்கு வந்து சேரும்.

படிப்பு, தொழில் போன்றவற்றை நீங்கள் தேர்ந்து எடுக்கும் பொழுது, செவ்வாய்க்குரிய தொழிலை தேர்ந்தெடுத்தால் தான் ஜெயித்துக் காட்ட இயலும்.

வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது கூட, தங்கு தடைகள் அகலவும், தக்க விதத்தில் ஒற்றுமை ஏற்படவும், உங்களது மனம் போல உங்கள் வாழ்க்கைத் துணை செயல்பட்டு, ஒத்துழைப்பு தரவும், அவர்கள் ஜாதகத்திலும் செவ்வாயின் நிலை அறிந்து பொருத்தம் பார்த்து தேர்ந்தெடுப்பது வருத்தத்தை தவிர்க்கும்.

இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

மறக்க முடியாத மார்கழி ஐந்து!

மார்கழி மாதம் 5-ந்தேதி முதல் துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கப்போகிறார். அங்கிருந்து கொண்டு ஜென்ம ராசியையும், நான்காமிடம், ஒன்பதாமிடம் (1, 4, 9) ஆகிய இடங்களை யும் பார்த்து புனிதப்படுத்தப் போகிறார். இதன் விளைவாக, உடல் ஆரோக்கியம், அறி வாற்றல், தாய், தந்தை, சுகம், பூர்வீகம், கால்நடைகள், வாகன யோகம் ஆகிய அனைத்து ஆதிபத்தியங்களிலும் அற்புதமான மாற்றங்களை உருவாக்கப்போகிறார்.

`கண்டகச்சனி' என்பதால் கவனம் தேவை என்று எல்லோரும் சொல்வார்கள். நீங்கள் செய்த புண்ணியம், பெயர்ச்சியாகும் சனியை குரு பார்க்கிறார். `குரு பார்க்க கோடி நன்மை அல்லவா?' அது மட்டுமல்லாமல், உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானம், லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்கும் சனி உச்சம் பெறுகிறார்.

சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் அடிக்கடி உடல் நலத்தில் மட்டும் தொல்லை களைக் கொடுத்து குணமடைய வைப்பார். எனவே, தொடர்ந்து நீங்கள் சந்தோஷத்தை மட்டும் சந்திக்க வேண்டுமானால், சனி பகவான் கவசத்தைப்பாடி, சனீஸ்வரர் சந்நிதியில் எள் தீபம் ஏற்ற வேண்டும்.

மந்தன் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு ஏழில் சனிபகவானின் பார்வை 1, 4, 9 ஆகிய இடங் களைப் பார்ப்பதால் உன்னதமான மாற்றங்கள் வந்து சேரப்போகின்றன. திடீர் முடிவெடுத்து திக்குமுக்காடாமல் யோசித்து முடிவெடுத்தால் யோகங்கள் தேடிவரும்.

ஜென்ம ராசியை சனி பார்ப்பதால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் பொழுதே, மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முட்டுக்கட்டைகள் அகலும்.

சனியின் பார்வை நான்காமிடத்தில் பதிவதால், குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்து கொள்வது நல்லது. வீடு வாங்கும் முயற்சி அல்லது கட்டும் முயற்சியில் ஆர்வம் கூடும். குடும்ப உறுப்பினர்களில் யார் பெயரில் சொத்துக்கள் வாங்கினால் அது நிலைக்கும் என்பதை ஜாதக ரீதியாக கண்டறிந்து, உங்கள் ராசிக்கு ஏற்ற கோவில்களை தேர்ந் தெடுத்து வழிபட்டு வருவதும், வாங்கிய சொத்தை நிலைக்க வைக்கும் ஆற்றலைக் கொடுக்கும்.

சனியின் பார்வை ஒன்பதாமிடத்தில் பதிவதால் பயணங்களால் பலன் கிடைக்கும். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். மாற்று இனத்தவர் களுடன் கூட்டாக தொழில்புரியும் வாய்ப்புகள் உருவாகும். கணவன்- மனைவிக்கு இடையே கனிவு கூடும்.

குருப்பெயர்ச்சி காலம்!

சுமார் 2 1/2 ஆண்டுகள் துலாம் ராசியில் சஞ்சரிக்க வேண்டிய சனிபகவான் கூடுதலாகவே சில மாதங்கள் அந்த ராசியில் சஞ்சரிக்கிறார். இக்காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. 17.5.2012-ல் ரிஷப ராசியிலும், 28.5.2013-ல் மிதுன ராசியிலும், 13.6.2014-ல் கடக ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை பலத்தால் 6, 8, 10 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே, எதிர்ப்புகள் அகலும். இல்லத்தில் நல்ல சம்பவம் நடைபெறும். தொய்வு விழுந்த தொழிலை விட்டு விட்டு, சுய தொழில் ஈடுபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

மிதுன குருவின் சஞ்சாரத்தின் பொழுது 7, 9, 11 ஆகிய இடங்கள் புனிதமடைவதால், வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் வாய்ப்பு உருவாகும். பிள்ளைச் செல்வம் இல்லாதவர் களுக்கு குருவருளால் கரு உருவாகும்.

கடக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை பலத்தால் 8, 10, 12 ஆகிய இடங்கள் புனிதமடைவதால், தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும் வாய்ப்பு கிட்டும். புதிய பங்குதாரர்கள் சேருவர். வெளிநாட்டு பயணம் விருத்தியடையும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

2.12.2012 ல் துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ் சரிக்கப்போகிறார். 21.6.2014-ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலா வரப்போகிறார்கள். முதல் ராகு - கேது பெயர்ச்சி காலத்தில் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெற்றோர்களால் நன்மை ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அனுசரிப்பு தேவை.

அடுத்து வரும் ராகு - கேது பெயர்ச்சியால் பொருளாதார நிலை உயரும். அஷ்ட லட்சுமி யோகம் செயல்படும். அள்ளிக் கொடுக்கும் வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற...

துலாம் ராசியில் உச்சம் பெறும் சனி ஐந்து முறை வக்ரம் அடைந்து நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 10, 11-க்கு அதிபதியாக விளங்கி, தொழில் மற்றும் லாப ஸ்தானத்தை ஆதிபத்தியமாக கொண்ட ஒரு கிரகம் வக்ரம் பெறும் பொழுது, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல், எதிரிகளால் ஏமாற்றம்காண நேரிடும். தொழிலில் வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கும். தேவையில்லாத கடன்சுமை கூடும்.

இந்த வக்ர காலம் பொற்காலமாக அமைய வேண்டுமானால், ஆனை முகப்பெருமான் வழிபாட்டிலும். அனுமன் வழிபாட்டிலும், சனி பகவான் வழிபாட்டிலும் ஆர்வம் காட்டுங்கள்.

சனியின் சஞ்சாரப் பலன்கள்!

ஏழாமிடத்துச் சனியால் இனிய பலன் ஏற்படுமா?

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்பொழுது ஏழாமிடத்திற்கு வரப்போகிறார். கண்டகச்சனியாக வருகிறதே என்று கவலைப்பட வேண்டாம்.

சனிக்கிழமை தோறும் சனீஸ்வரர் சந்நிதியில் நீங்கள் அடியெடுத்து வைத்தால், இனிக்கும் வாழ்க்கை எந்நாளும் மலரும்.

`ஏழில் சனி வந்தால்
எண்ணற்ற மாற்றம் வரும்!
சூழும் பகை விலக,
துணிவோடு செயல் புரிய,
நாளும் பொழுதுமினி,
நல்லதே நடப்பதற்கு,
வாழ்வில் ஈஸ்வரனை
வழிபட்டால் பலன் கிட்டும்!'

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் உச்ச சனியின் பார்வை உங்கள் ராசியில் பதியும் இந்த நேரத்தில் அச்சமில்லாத வாழ்க்கைக்கு அடித்தளமிட்டுக் கொடுப்பது, அருகில் இருப்பவர் களை அனுசரித்து செல்வதோடு, ஆண்டவனை வழிபடுவதும் தான்.

உங்கள் ராசிக்கு 10, 11 -க்கு அதிபதியாக சனி விளங்குகிறார். தொழில் ஸ்தானத் திற்கும், லாப ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்கும் சனி உச்சம் பெறும் பொழுது, தொழிலையும் உருவாக்க வேண்டும். லாபத்தையும் கொடுக்க வேண்டும் அல்லவா? எனவே, அப்படி நற்பலன்களைக் கொடுக்கும் பொழுது, கண்டகச்சனியின் ஆதிபத்தியத் தையும் அது செய்ய வேண்டும்.

எனவே, வந்த பணம் மறுநிமிடமே செலவாகலாம். எனவே, கையில் காசு தங்க நெய்யில் தீபமேற்றி ஈஸ்வரனை வழிபடுவதோடு, எள் தீபம் ஏற்றி சனிபகவானையும் வழிபடுவது நல்லது.

தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!

காக வாகனத்தான் சனியை நம்பினால் தேக நலனும் சீராகும். செல்வ வளமும் பெருகும். எனவே, சிவகங்கை மாவட்டம் அருகில் உள்ள பெரிச்சிக் கோவிலுக்குச் சென்று தனஆகர்ஷன சனியையும், நவபாஷான வைரவரையும் வழிபட்டு வாருங்கள். சோகங்கள் மாறி, சுகங்கள் கூடுவதற்கு சனி பகவான் சந்நிதியில் சனிகவசம் பாடுங்கள்.

`காகத்தில் ஏறி நின்று,
கனிவோடு வரத்தை நல்கி,
தேகத்தைக் காக்கும் ஈசா,
செல்வத்தை வழங்கு வாயே!'

என்று பாடினால், வாழ்க்கை வளமாக அமையும். வார வழிபாடாக, செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டு முன்னேற்றத்தை வரவழைத்து கொள்ளுங்கள்.



சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 12:00 pm

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ, உள்ளவர்களுக்கும்)

ஆறாமிடத்தில் சனி! ஆதரவு கூடும் இனி!

காளையை சின்னமாக்கிக் கொண்டு களைப்பின்றி உழைக்கும் ரிஷப ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால், இனிமையாகப் பேசி எல்லாக் காரியங்களையும் முடித்துக் கொள்வீர்கள். தனிமை உங்களுக்கு பிடிக்காது. தன்னைச் சுற்றி நாலுபேர் எப்பொழுதும் இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். தலைமைப் பதவி உங்களுக்கு பொருந்தும்.

நந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராசி உங்கள் ராசியாகும். `அந்த நந்தி சிவனுக்கு முந்தி' இருப்பதை ஆலயங்களில் பார்த்திருப்பீர்கள். அதைப்போல, எந்தச் செயலிலும் நீங்கள் `முந்தி' இருப்பீர்கள். கலைத்துறையில் பிரகாசிப்பவர்களும் நீங்கள்தான்.

நன்றி மறக்காத தன்மை உங்களுக்கு உண்டு. சுற்றி வரும் சனி உங்களை தூக்கி நிறுத்தப் போகிறதா? அல்லது தாக்குதலை தரப்போகிறதா? என்பதை உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்.

குறிப்பாக, உங்கள் ராசிநாதன் சுக்ரன் இருக்கும் சார பலமறிந்து பரிகாரங்களைச் செய் தால் பணவரவும் கூடும். அதே சுக்ரன் நவாம்சத்தில் இருக்கும் நிலை அறிந்து, அதைப் பார்க்கும் கிரகத்தையும், அதோடு இணைந்த கிரகத்தையும் சேர்த்து ஆராய்ந்து, அந்த கிரகத்திற்குரிய எண் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும் அமைத்துக் கொண்டால், பொன்னான எதிர்காலம் உருவாகும்.

திருமண பொருத்தத்திலும் முக்கிய நான்கு பொருத்தங்கள் இருந்தால் தான் சிக்கல் இல்லாத வாழ்க்கை அமையும். இப்படிப்பட்ட குணங்களையும் பெற்ற உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதை பற்றி பார்ப்போம்.

ஆனந்தம் வழங்கும் ஆறாமிடத்துச் சனி!

மார்கழி 5-ம் தேதி முதல் துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசிக்கு மூன்றாமிடம், எட்டாமிடம், பனிரெண்டாமிடம் ஆகிய (3, 8, 12) இடங்களைப் பார்த்து புனிதப்படுத்துகிறார். இதன் விளைவாக, சகோதரர்கள், சகோதரிகள் ஸ்தானம், சகாயங்களும், வழக்கில் வெற்றிகளும் நிர்ணயமாகும் நேரம்.

ஆயுள், ஆரோக்ய பலமறிதல், கடன் சுமைகளிலிருந்து விடுபடும் நிலை. இழப்புகளை ஈடுசெய்ய எடுக்கும் முயற்சி, பயணங்களால் கிடைக்கும் பயன்கள். கூடுதல் விரயம், வீட்டில் நடைபெறும் சுபகாரியங்கள் போன்றவற்றில் எடுக்கும் முடிவுகளை இந்தச் சனி நிர்ணயிக்கப்போகிறது.

சனி என்றால் எல்லோருமே பயப்படு கிறார்கள். அந்தச்சனி உங்கள் ராசிக்கு யோகம் செய்பவன். அது உச்ச வீட்டில் அடியெடுத்து வைக்கும்பொழுது, மிச்சம் வைக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும். மேதினி போற்ற புகழும் கிடைக்கும்.

மந்தன் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு ஆறில் சஞ்சரிக்கும் சனி பகவான் பார்வை 3, 8, 12 ஆகிய இடங்களில் பதிவதால் வேண்டும் அளவு சுகங்களும், சந்தோஷங் களும் வந்து சேரும்.

மூன்றாமிடத்தை சனி பார்ப்பதால் உடன்பிறப்புகளின் முன்னேற்றம் கருதி ஒரு பெரும் தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு உடன்பிறப்புகள் கைகொடுத்து உதவுவார்கள்.

எட்டாமிடத்தை சனி பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் சீராகும். பாயில் படுத்திருந்தவர்கள் பம்பரமாக சுழலுவார்கள். மூடிக்கிடந்த தொழில் நிலையங்களில் இனி திறப்பு விழா நடத்தி கலகலப்பாகச் செயல்படுவீர்கள்.

சனியின் பார்வை பனிரெண்டாமிடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகைகள் மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். அந்நிய தேச வாய்ப்புகள் எண்ணியபடியே கைகூடும். பொது வாழ்வில் பொறுப்புகளும், புதிய பதவிகளும் ஒரு சிலருக்கு வந்து சேரலாம். பெண் குழந்தை களின் சுபச் சடங்கு கள் மற்றும் கல்யாண வாய்ப்புகள் கைகூடி வரும்.

குருப்பெயர்ச்சி காலம்!

சுமார் 2 1/2 ஆண்டுகள் துலாம் ராசியில் சஞ்சரிக்க வேண்டிய சனி பகவான் கூடுதலாகவே சில மாதங்கள் அந்த ராசியில் சஞ்சரிக்கிறார். இக்காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. 17.5.2012-ல் ரிஷப ராசியிலும், 28.5.2013-ல் மிதுன ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை பலத்தால் 5, 7, 9 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றனர். எனவே, பிள்ளைகள் வழியில் கல்வி முன்னேற்றம் கருதி யும், கல்யாண வாய்ப்புகள் கருதியும் நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வழக்குகளில் புதிய திருப்பம் ஏற்படும். கல்யாண தடை அகன்று, வாழ்க்கைத் துணை எதிர்பார்த்தபடியே ஒரு சிலருக்கு அமையும். தந்தை வழியில் இருந்த தகராறுகள் மாறும். பங்காளிப் பகை மாறி பாசம் கூடும்.

மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது 6, 8, 10 ஆகிய இடங்களை குரு பார்ப்பதால் உத்யோக உயர்வு கிட்டும். வாங்கல் - கொடுக்கல்களில் வளர்ச்சி கூடும். வராத பாக்கி கள் வசூலாகும். தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கி விட்டு, புதிய பங்கு தாரர்களை சேர்த்துக் கொள்ளும் எண்ணம் மேலோங்கும்.

கடக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, குருச்சந்திர யோகம் தரும் பலனைக் கொடுக்கப்போகிறார். அதன் பார்வை பலத்தால் 7, 8, 11 ஆகிய இடங்கள் புனித மடைகின்றன. இவை அனைத்துமே நல்ல இடங்கள்தான். எனவே, மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். மறக்க முடியாத சம்பவங்களும் இடைஇடையே வந்து சேரும். விலகிச் சென்ற வரன்கள் வீடு தேடி கூடி வரும். வெளிநாட்டு தொடர்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!


2.12.2012-ல் துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 21.6.2014-ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலா வரப்போகிறார்கள்.

முதல் ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் பயணங்கள் அதிகரிக்கும். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். அஷ்டலெட்சுமி யோகம் செயல்படப் போவதால் பொருளாதார நிலை உயரும். வளமான வாழ்க்கை அமையும்.

அடுத்த ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் மனை கட்டி குடியேறும் யோகம் உண்டாகும். மாசற்றப் பொன்னும், வைரமும், ரத்தினமும் வந்து சேரும். ஈசன் துணையோடு எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கூட்டு முயற்சிகளில் இருந்து விடுபட்டு ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்போடு ஆதாயத்தை முழுமை யாகப் பெறும் சூழ்நிலை உருவாகும்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற...


துலாம் ராசியில் உச்சம் பெறும் சனி ஐந்து முறை வக்ரமடைந்து, வக்ரமடைந்து நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியாக விளங்கும் சனி வக்ரம் பெறும் பொழுது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்ல வேண்டியது அவசியமாகும். தொழிலில் மூலதனம் போடுபவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஆதாயம் ஏட்டில் இருக்குமே தவிர எதிரில் இருக்காது. பெண் குழந்தைகளின் வளர்ப்பில் கூடுதல் கவனம் தேவை.

பிள்ளைகள் தன்னிச்சையாக செயல்படத் தொடங்கி மனக்கவலையை அதிகரிக்க வைக்க லாம். ஷேர் பிசினஸ் மற்றும் வாகனத் துறை, கலைத்துறைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் விழிப்புணர்ச்சியோடு இருப்பது அவசியம். பத்திரப்பதிவில் கவனம் தேவை. நந்தி வழிபாடும், அனுமன் வழிபாடும் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும்.

சனியின் சஞ்சாரப் பலன்கள்!

ஆறாமிடத்துச் சனி சீரான வாழ்க்கையை ஏற்படுத்துமா?

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்பொழுது, ஆறாமிடத்தில் அடியெடுத்து வைக்கிறார். எதிர்ப்பு, வியாதி, கடன் என்று வர்ணிக்கப்படும் இடத்தில் சனி உச்சம் பெறுவதால் மதிப்பும், மரியாதையும் உயரும். மறக்க முடியாத சம்பவங்களும் நடைபெறும்.

`ஆறில் சனிவந்தால்,
ஆதாய வரவுண்டு!
சீரும் சிறப்பும் வரும்!
செல்வாக்கும் கூடி வரும்!
போராட்டம் வெற்றிபெறும்!
புது வீடுமனை வாய்க்கும்!
கூர்மதியால் செல்வம் வரும்!
குடும்பத்தில் மதிப்பு உயரும்!'

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் உச்ச சனி உங்கள் ராசிக்கு ஆறில் உலா வரும்பொழுது, மிச்சம் வைக்கும் அளவிற்கு பொருளாதார நிலை உயரப்போகிறது. உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சனி பகவான் ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குபவராக விளங்குகிறார்.

மனதில் பதித்து வைத்துக் கொண்டு, வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு கவலை களை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இனி நல்ல மாற்றம் வந்து சேரப் போகின்றன. உத்யோகத்தில் முன்னேற்றம், ஊதிய உயர்வு, நண்பர்களின் நல்லாதரவு, மேலதிகாரிகளின் நட்பு, தொழில் வளர்ச்சிக்கு தேவையான தொகை அனைத்தும் கிடைக்கும்.

தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!

சனியை வழிபட்டால் சந்தோஷங்கள் வந்து சேரும். இனிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க இதுதான் உத்தரவாதம் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

`நாள் செய்வதை நல்லவன் செய்யமாட்டான்', `கோள் செய்வதை கொடுப்பவன் செய்யமாட்டான்' என்பது பழமொழி. எனவே, யோக பலம் பெற்ற நாளில் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டிக்கு வந்து, அங்குள்ள நினைத்ததை நிறைவேற்றும் நெய் நந்தீஸ்வரரை வழிபட்டு, அருகில் நவக்கிரகத்திலுள்ள சனி பகவானையும் வழிபட்டு வாருங்கள்.

`எள்ளினில் தீபம் ஏற்றி,
எதிரினில் வைத்தேன் ஈசா!
சொல்லையே செயலாய் மாற்ற,
துணை நின்று அருளுவாயே!'

என்று காக வாகனத்தான் சந்நிதியில் கைகூப்பி தொழுது பாடுங் கள். கவலைகள் நீங்கும்.



சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 12:03 pm

மிதுனம்

மிருக சீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)

பஞ்சம ஸ்தானத்தில் சனி! பணவரவு இனி!!

சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தங்களது இயல்புகளை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் என்பதால், அனுபவ ஞானம் அதிகம் பெற்றவர்களாக விளங்குவீர்கள். எவரிடமும் எளிதாக பழகிவிடுவீர்கள். மனதில் திடீர் திடீரென நட்பு பகையாகும். பகை நட்பாகும். பலதரப்பட்ட நண்பர்கள் உங்களை நாடி வருவார்கள்.

குடும்ப பொறுப்புகளை அதிகம் கவனிக்காமல், கூட இருப்பவர்களுக் காகவே பாடுபடும் குணம் உங்களுக்கு உண்டு. உயரதிகாரிகள் முதல் உடன்பிறப்புகள் வரை உங்கள் வலையில் விழ காரணமாக இருப்பது, மற்றவர் களின் ரகசியங்கள் எல்லாம் உங்களுக்கு தெரிவதால் தான்.

படிப்பு, தொழில் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் பொழுதும், வாழ்க்கைத் துணையை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுதும் ராசிநாதன் புதனின் சார பலமறிந்து செயல்படுவது தான் நல்லது. எளிய வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற ரகசியத்தை அறிந்து வைத்திருக்கும் நீங்கள் புகழ் ஏணியில் உச்சிக்குச் செல்லவும், பொன்னான பதவி வாய்ப்பு களைப் பெறவும், பொருளாதாரத்தில் முதன்மை நிலையை அடையவும், நவாம்சத்தில் புதன் இருக்கும் நிலையறிந்து, அதைப் பார்க்கும் கிரகத்தையும், அதோடு இணைந்த கிரகத்தை யும் சேர்த்து ஆராய்ந்து, அந்த கிரகத்திற்குரிய எண் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும் அமைத்துக் கொள்வது உத்தமம்.

இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதை பற்றிப் பார்ப்போம்.

மறக்க முடியாத மார்கழி ஐந்து!

மார்கழி 5-ம் தேதி முதல் துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசிக்கு 2, 7, 11 ஆகிய இடங்களைப் பார்க்கப்போகிறார். இதன் விளைவாக, வாக்கு, தனம், குடும்பம், களத்திரம், புதல்வர்கள், பொருளாதாரம், உடன் பிறப்பு, இளைய சகோதரம், விலகிச் சென்ற சொந்தங்கள், தொழிலில் வரும் லாபம், இடமாற்றங்கள், எதிர்பாராத பயணங்கள் ஆகியவற்றில் எல்லாம் நல்ல மாற்றங்களையும், திடீர் திருப்பங்களையும் கொடுக்கப்போகிறது.

மந்தன் என்றாலே மந்த கதியில் இயங்குபவன் என்று பொருள். அவன் உங்கள் ராசியைப் பொறுத்த வரை 8, 9-க்கு அதிபதியாக விளங்குகிறார். இப்பொழுது உச்ச வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். 8-க்கு அதிபதி உச்சம் பெற்றால், எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்பார்கள்.

அதே நேரத்தில் ஒன்பதுக்கு அதிபதியாகவும் விளங்கி உச்சம் பெறுவதால், பொன், பொருள்கள் வந்து குவியப்போகிறது. புகழும் வந்து சேரப்போகிறது. இரண்டுவிதமான ஆதிபத்தியங்களை இந்த சனி பெற்றிருப்பதால், எதையும் நீங்கள் யோசித்தும், இறை வனை பூஜித்தும் செய்வது நல்லது.

சனியின் பார்வை சஞ்சலம் தரும் பார்வை என்பார்கள். பணியில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும், பணப்புழக்கம் அதிகரிக்கவும், உத்யோகத்தில் உயர்வு கிடைக்கவும், உள்ளத் தில் நினைத்த காரியங்கள் நல்லவிதமாக நடப்பதற்கும், சனிப் பெயர்ச்சிக்கு முன்னதாகவே நீங்கள் சனீஸ்வரரை சந்திப்பது நல்லது. திருநள்ளாறு சென்று தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரர், அவரது துணைவி அம்பிகை மற்றும் சனீஸ்வர பகவானையும் வழிபட்டு வாருங்கள். வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும்.

மந்தன் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை 2, 7, 11 ஆகிய இடங்களில் பதிவதால் அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றன. அதிலும் 8, 9-க்கு அதிபதியாக சனி விளங்குகிறார். 9-க்கு அதிபதியான சனி பகவான் 2, 11 ஆகிய இடங்களை பார்க்கும் பொழுது, வள்ளலாக மாறி அள்ளிக் கொடுக்கப் போகிறார்.

குறிப்பாக, வாக்கு, தனம், குடும்பம் ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால் அதாவது, இரண்டாமிடத்தை சனி பார்ப்பதால், வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளுக்கு வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்திலுள்ள குழப்பங்கள் அகல முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவர்.

சப்தம ஸ்தானத்தை சனி பார்ப்பதால், வீட்டில் கெட்டிமேளம் கொட்டுகிற வாய்ப்பு உருவாகப் போகிறது. சனி பார்த்தால் எப்படி கல்யாணம் நடக்கும்? என்று நீங்கள் நினைக்கலாம். அஷ்டமாதிபதியான சனி சப்தம ஸ்தானத்தைப் பார்க்கும்பொழுது குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்பட வேண்டும் அல்லவா?

லாப ஸ்தானத்தைப் பார்க்கும் சனியால் லாபம் பெருகும். உதிரி வருமானங்கள் வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்ட சலுகைகள் தானாகவே கிடைக்கும். கடல் பயண வாய்ப்புகள் கைகூடலாம்.

குருப் பெயர்ச்சி காலம்!

சுமார் 21/2 ஆண்டுகள் துலாம் ராசியில் சஞ்சரிக்க வேண்டிய சனி பகவான் கூடுதலாகவே சில மாதங்கள் அந்த ராசியில் சஞ்சரிக்கிறார். இக்காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. 17.5.2012-ல் ரிஷப ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். 28.5.2013-ல் மிதுன ராசியில் குரு உலா வரப்போகிறார். 13.6.2014-ல் கடக ராசியில் குரு சஞ்சாரம் செய்யப் போகிறார்.

ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை பலத்தால் 4, 6, 8 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே, குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் ஏராள மாக நடைபெறும். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பழைய வாகனங் களைக் கொடுத்து விட்டு, புதிய வாகனங்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது ஜென்ம குருவாக வருகிறார். எனவே, சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம். அதன் பார்வை பலத்தால் 5, 7, 9 ஆகிய இடங்கள் புனித மடைவதால் பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்குவீர்கள்.

கடக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால் உத்யோகத்தில் மாற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கடன் சுமை குறைந்து கவலைகள் தீர புதிய வழி பிறக்கும். இக்காலத்தில் குரு வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், குதூகலம் அதிகரிக்கும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

2.12.2012-ல் துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 21.6.2014-ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலா வரப்போகிறார்கள்.

முதல் ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் வெளிநாட்டு யோகம் விரும்பியபடியே அமையலாம். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். பஞ்சம ராகுவும், பதினொன்றாமிடத்து கேதுவும், கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்து வைக்க வழிகாட்டும்.

அடுத்த ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் இடமாற்றம், ஊர்மாற்றம், தொழில் மாற்றங்கள் உருவாகும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்களின் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சர்ப்ப சாந்தியை முறைப்படி செய்வது நல்லது.

சனியின் வக்ரகாலம் பொற்காலமாக மாற...

துலாம் ராசியில் உச்சம்பெறும் சனி, ஐந்து முறை வக்ரமடைந்து, வக்ரமடைந்து நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கும் 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் வக்ரம் பெறும்போது, எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உடல் நலத்திற்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகலாம். நண்பர்களை நம்பி ஏமாற்றமடையாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவதே நல்லது.

தக்கவிதம் அனுசரித்து செல்வதோடு சுய ஜாதகத்தில் தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழி பாட்டையும் மேற்கொள்வது உத்தமம். இல்லத்து பூஜை அறையில் சாப விமோசன படங்கள் வைத்து வழிபடுவதும் நல்லது. காரிய வெற்றி ஏற்படும்.

சனியின் சஞ்சாரப் பலன்கள்!

பஞ்சம ஸ்தானம் வரும் சனி பண வரவை பெருக்குமா?

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சனி சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனியாக இருந்து அல்லல்களை அதிகம் கொடுத்திருக்கலாம். இப்பொழுது அந்த நிலை மாறி உச்ச வீட்டில் உலா வரப்போகிறது. எனவே, உங்கள் காட்டில் இனி பண மழைதான். உச்ச சனியின் ஆதிக்கமாக இப்பொழுது வருவதால், அச்சமில்லாத வாழ்க்கை உங்களுக்கு அமையும் அல்லவா?

`பாக்கியத்தில் சனி வந்தால்
பல விதத்தில் மாற்றம் வரும்!
தாக்குதல்கள் அகன்று விடும்!
தனவரவு கூடிவரும்!
கூக்குரல்கள் இனிமாறும்!
குடும்பத்தில் மகிழ்ச்சி வரும்!
தேக்கநிலை இனி அகலும்!
தெய்வ அருள் இனி
கிடைக்கும்!'

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் உச்ச சனி உங்கள் ராசிக்கு ஐந்தில் உலா வரும்பொழுது, இதுவரை தேக்க நிலையில் இருந்த காரியங்கள் எல்லாம் மளமளவென்று நடைபெறத் தொடங்கும்.

தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!

வழிபாடுகளால் வாழ்க்கையில் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ள இயலும். அர்த்தாஷ்டமச் சனி விலகும் இந்த நேரத்தில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று, சனி விலகும் நாளில், விலகும் நேரத்தில் எள் தீபமேற்றி வழிபட்டால் இனி வரும் காலங்கள் இனிய காலங்களாக மாறும்.

சிறப்பு வழிபாடாக, மதுரை தேனி அருகில் உள்ள குச்சானூர் சென்று சுயம்பு சனீஸ்வர பகவானை வழிபட்டால், சொல்லை செயலாக்கி காட்டலாம்.

`காகத்தில் ஏறி நின்று,
கனிவோடு வரத்தை நல்கி,
தேகத்தைக் காக்கும் ஈசா!
செல்வத்தை வழங்கு வாயே!'

என்று சனியின் சந்நிதியில் பாடுங்கள். சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம்.



சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 12:05 pm

கடகம்

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

நான்காமிடத்தில் சனி! நல்ல மாற்றம் வரும் இனி!!

உதவிகள் செய்வதன் மூலம் நல்ல பதவிகளை வரவழைத்துக் கொள்ளும் கடக ராசி நேயர்களே!

எதிர்ப்பைக் கண்டு எள் அளவும் அஞ்சாதவர்கள் நீங்கள். கோடீஸ்வரராக இருந்தாலும் சரி, கூலித் தொழிலாளியாக இருந்தாலும் சரி, நாடி வந்தால் நன்மைகளைச் செய்து கொடுப்பீர்கள். தேடிச் சென்றும் வலிய உதவி செய்வீர்கள். உதவும் குணம் ஒன்றால் தான் நீங்கள் உயர்ந்தவர்களாக காட்சியளிக்கிறீர்கள்.

உங்கள் ராசிநாதன் சந்திரன் இருக்கும் சார பலம் அறிந்து, யோக பலம் பெற்ற நாளில் அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் நினைக்க இயலாத ராஜயோகம் உங்களுக்கு வந்து சேரும்.

திருமண வயதுடைய கடக ராசிக்காரர்களுக்கு பொருத்தம் மிகவும் தேவை. குறிப்பாக, முக்கியமான பொருத்தங்கள் ஆறு இருப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல், தெசா சந்திப்பு இல்லாமல், சஷ்டாஷ்டம தோஷமில்லாமல், வாழ்க்கைத் துணைÛயை தேர்ந்தெடுத்தால் தான் சுகமான வாழ்க்கையை எதிர்கொள்ளலாம்.

சுபிட்சத்தை வழங்கும் சுக ஸ்தான சனி!

மார்கழி 5-ம் தேதி முதல் துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கப் போகிறார். அங்கு உச்சம் பெறும் சனி உங்கள் ராசியையும், உங்கள் ராசிக்கு ஒன்று, ஆறு மற்றும் பத்து (1, 6, 10) ஆகிய இடங்களையும் பார்க்கப் போகிறார். இதன் விளைவாக, உங்கள் பணிகளில் மாற்றம் ஏற்படலாம். கூட்டு முயற்சிகளில் ஆற்றல்மிக்கவர்கள் பிரிந்தாலும், வீட்டு உறுப்பினர்களையோ, வேற்று மனிதர்களையோ சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தருமா? மாற்றம் தருமா? அல்லது ஏமாற்றம் தருமா? என்பதை உங்கள் சுய ஜாதகத்தின் தெசாபுத்தி வலிமையைக் கொண்டே அறியலாம். உங்கள் ராசிக்கு சனி பகவான் 7, 8-க்கு அதிபதியாக விளங்குகிறார். அவர் உச்சம் பெறும்பொழுது, கேந்திராதிபத்ய தோஷம் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், நீங்கள் செய்த ஒரு பாக்கியம் உச்சம் பெற்று சனி உலாவரும் பொழுது, அதை குரு பார்ப்பது தான்.

குரு பார்க்க கோடி நன்மை அல்லவா? எனவே, குருவின் பார்வையால், சனியின் கடுமை குறைந்து, கொடுமை விலகி, இனிமை உங்கள் வாழ்வில் சேரப்போகிறது. அர்த்தாஷ்ட மச்சனி ஆரோக்கியத்தில் சிறு சிறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்பதாலும், அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி அடுத்தவர்களோடு பிரச்சினைகளை உருவாக்கும் என்பதாலும், எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லதுதான். எனவே, தொல்லைகள் அகல சனிக்கவச பாராயணம் படியுங்கள். சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியிலுள்ள கற்பக விநாய கரை, இதுபோன்ற சனி ஆதிக்க காலத்தில் கைகூப்பி தொழுது வழிபட்டால், அற்புத பலன் கிடைக்கும்.

மந்தன் பார்வையில் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 1, 6, 10 ஆகிய இடங்களில் பதிவதால் அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றன. 7, 8-ன் அதிபதியான சனி ராசியைப் பார்ப்பது அவ்வளவு நல்லதல்ல என்பது சந்தேகம் தான். ஆனால், ஆறாம் இடத்தை பார்ப்பது அற்புதமான பலன்களை அள்ளித் தரும். விபரீத ராஜ யோகத்தைக் கொடுத்து, வியக்கும் விதத்தில் வாழ்க்கையையும் அமைத்துக் கொடுக்கும்.

ஜென்ம ராசியை சனி பார்ப்பதால், ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளைக் கொடுக்க லாம். `வரும் முன் காப்போம்' திட்டத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. வாகனங்களில் செல்லும் பொழுதும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அரசியல்வாதி களுக்கு பொறுப்புகள் மாறலாம்.

எட்டுக்கு அதிபதி சனி ஆறாமிடத்தைப் பார்ப்பதால், நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த உத்யோக உயர்வு இப்பொழுது வந்து சேரும். கடன் பாக்கிகள் வசூலாகும். பகையான நட்பு உறவாகும்.

பத்தாமிடத்தைப் பார்க்கும் சனியால், உங்கள் பெயரில் உள்ள தொழில்களையும், சொத்துக்களையும் மனைவி, மக்கள் மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் பெயருக்கு மாற்றலாமா? என்று நினைப்பீர்கள். திடீர் இடமாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படும். பங்குதாரர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

குருப்பெயர்ச்சி காலம்!

சுமார் 2 1/2 ஆண்டுகள் துலாம் ராசியில் சஞ்சரிக்க வேண்டிய சனி பகவான் கூடுத லாகவே சில மாதங்கள் அந்த ராசியில் சஞ்சரிக்கிறார். இக்காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. 17.5.2012-ல் ரிஷப ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். 28.5.2013-ல் மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். 13.6.2014-ல் கடக ராசியில் குரு உலா வரப்போகிறார்.

ரிஷப ராசியில் குரு சஞ்சரிக்கும்பொழுது, அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவதால் முன்னேற்றங்கள் கூடும். முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும்.

மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால், தாயின் உடல் நலம் சீராகும். புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு கிட்டும். உத்யோக முயற்சி வெற்றி தரும்.

கடக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அது உங்கள் ஜென்ம ராசியாகவே இருப்பதால், குருச்சந்திர யோகம் செயல்படப் போகிறது. எனவே, பம்பரமாய் சுழன்று பணிபுரிவீர்கள். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

பிள்ளை பிறக்காத தம்பதியருக்கு அந்த கவலை தீரும். வரன்களுக்காக காத்திருந்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் மணமாலை சூடுகிற வாய்ப்பு கிட்டும். தொழில் வளம் மேலோங்கும். இது ஒரு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். குருபலம் இழக்கும் காலங்களில் முறையான வழிபாடுகளையும், பரிகாரங்களையும் செய்வது நல்லது.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

2.12.2012-ல் துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 21.6.2014-ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலா வரப்போகிறார்கள்.

முதல் ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் இடம், பூமிக்குரிய இடத்தில் ராகு-கேதுக்கள் சஞ்சரிப்பதால் இந்த 4-ம் இடத்து ராகுவால் வீடு கட்டி குடியேற வேண்டுமென்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் குடிகொள்ளும்.

அடுத்த ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் எதிர்பாராத தனலாபம் வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிட்டும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படும். சர்ப்ப சாந்தி செய்து கொள்வதன் மூலம் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..

துலாம் ராசியில் உச்சம் பெறும் சனி ஐந்து முறை வக்ரமடைந்து, வக்ரமடைந்து நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் வக்ரம் பெறும்போது, கூடுதல் கவனம் செலுத்தினால் தான் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். உடல் ஆரோக்கியத்தில் திடீர் தாக்குதல்கள் ஏற்பட்டு மற்றவர்களை நம்பிச் செய்த காரியங்கள் பாதியிலேயே நின்று போகக்கூடும். உத்யோக மாற்றம் எதிர்பார்த்தபடி அமையாது. வீண்பழிகளில் இருந்து விடுபட, முÛறான பரிகாரங்களை சுய ஜாதக ரீதியாக பார்த்து செய்து கொள்வது நல்லது.

சனியின் சஞ்சாரப் பலன்கள்!

நான்காமிடத்துச் சனியால் நல்ல மாற்றங்கள் வருமா?

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சனி சஞ்சரித்து வந்தார். இப்பொழுது, நான்காமிடத்தில் சனி சஞ்சரிக்கப் போகிறார். ஆஹா? அர்த்தாஷ்டமச் சனியாக அல்லவா வருகிறது. அஷ்டமத்துச் சனியில் பாதிப்பங்கு வலிமை இதற்கு ஏற்படுமே, நமது நிலைமை என்ன ஆகும்? என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், உச்சம் பெற்ற சனி உங்களுக்கு ஒருபோதும் தீமையைக் கொடுக்க மாட்டார். உள்ளத்தில் அவரை நினைத்து பூஜிப்பதன் மூலமும், ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்னே யோசிப்பதன் மூலமும் ஒளிமயமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார்.

`நாலில் சனி வந்தால்,
நலம் வருமா? எனக் கேட்பீர்!
கோள்களிலே சனியதனை,
கும்பிட்ட மாந்தர்க்கு,
நாளும் வளம் கிடைக்கும்!
நட்பெல்லாம் கைகொடுக்கும்!
ஊர்மாற்றம், இடமாற்றம்
உடன்வந்தே மகிழ்ச்சி தரும்!'

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் உலா வரும் சனி நாலில் வரும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லாம் தேடி வரலாம். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்பட்டால், ஆபத்தில் இருந்து தப்பிக்க இயலும். மொத்தத்தில் கேள்விக்குறியாக இருந்த உங்கள் வாழ்க்கை இந்த சனிப்பெயர்ச்சியால், ஆச்சரியக்குறியாகப் போகிறது.

தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!

`ஒலி கொடுத்தால் வழி கிடைக் கும்' என்று வாகனங்களில் எழுதியிருப்பதை பார்த்திருப்பீர்கள். காகத்தை வாகனமாகக் கொண்ட சனி பகவானுக்கோ, நாம் ஒளி கொடுத்தால் நமக்கு நல்ல வழி கிடைக்கும். சிறப்பு வழிபாடாக, எள்தீபம் எண்ணிக்கையின் அடிப்படையில் ஏற்றி, ஒற்றைச் சனீஸ்வரரை வழிபாடு செய்யுங்கள்.

குறிப்பாக, சேலம் அருகில் உள்ள நாமக்கல் சென்று அங்குள்ள வரம் தரும் விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். அவரது சந்நிதியில், பாட வேண்டிய பாடல்.

`அர்த்தாஷ்ட மத்தில் நானும்
அனுமனே உனைதுதித்தேன்!
வெற்றியை எனக்கு தந்தே,
வேந்தனாய் வாழ வைப்பாய்!'.



சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 12:18 pm

சிம்மம்

மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

மூன்றாம் இடத்தில் சனி! முயற்சிகளில் வெற்றி இனி!!


எடுத்ததை முடிக்காமல் விடமாட்டேன், எவர் வந்து எதிர்த்தாலும் அஞ்சமாட்டேன் என்று சொல்லும் சிம்ம ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் என்பதால், பேருக்கும், புகழுக்கும் சொந்தக்காரர்களாக இருப்பீர்கள். எவருக்கும் அடிபணிய மாட்டீர்கள்.

பொது இடங்களில் நீங்கள் வரும்பொழுது, கூப்பிட்டு பேசுபவர்களாக இருக்காமல், கும்பிட்டும் பேசுபவர்களாக இருப்பது தான் உங்கள் ராசியின் சிறப்பம்சம். ராஜ தந்திரம் மிக்க நீங்கள் பிறருக்கு யோசனை சொல்வதிலும் கெட்டிக்காரர்கள்.

பூஜை புனஸ்காரங்கள் மூலம் புதிய திருப்பங்களை வாழ்வில் வரவழைத்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு அதிகம் உண்டு. `பூமிகாரகன்' செவ்வாய், யோகாதிபதியாக விளங்குவதால் சொத்துக்களால் ஆதாயம் அடைபவர்களும் நீங்கள்தான். ஆனால் சொந்தங்களால் ஆதாயம் கிடைப்பது அரிது.

உங்கள் ராசிநாதன் சூரியன் இருக்கும் சார பலமறிந்து பரிகாரங்களைச் செய்தால் வழக்குகளில் வெற்றியும், எடுத்த முயற்சிகளில் அனுகூலமும் கிடைக்கும்.

அதே சூரியன் நவாம்சத்தில் இருக்கும் நிலை அறிந்து, அதைப் பார்க்கும் கிரகத்தையும், அதோடு இணைந்திருக்கும் கிரகத்தையும் சேர்த்து ஆராய்ந்து அதற்குரிய எண்ணின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும் அமைத்துக் கொண்டால், எந்நாளும் இன்பங்களையே வரவழைத்துக் கொள்ளலாம். திருமணப் பொருத்தத்திலும் சப்தமாதிபதி சனியாக இருப்ப தால் நல்லவிதமாக பொருத்தம் பார்த்து செய்து கொண்டால்தான் வருத்தமில்லாத வாழ்க்கை அமையும். வரலாற்றிலும் இடம்பெற முடியும்.

இப்படிப்பட்ட, குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

முயற்சிகளில் வெற்றியைத் தரும் மூன்றாமிடத்துச் சனி!


மார்கழி 5-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கப் போகிறார். அந்த வீடு சனிக்கு உச்ச வீடாகும். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசிக்கு 5, 9, 12 ஆகிய இடங்களைப் பார்த்து புனிதப்படுத்துகிறார். எனவே, புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணியத்தால் கிடைக்கும் யோகம், நிலம், பூமி வகையில் ஏற்படும் பஞ்சாயத்துக்கள், தந்தை வழி உறவு, பங்காளிப் பகை, நண்பர்கள் சேர்க்கை, கூட்டாளி களின் ஒத்துழைப்பு, பயணங்கள், இடமாற்றம், ஊர்மாற்றம், வீடுமாற்றங்கள், அரசு வழி அனுகூலங்கள், நீண்ட தூர பயணங்கள், சுப விரயங்கள் ஆகியவற்றிற்கான ஆதிபத்தியங் களில் எல்லாம் நல்ல மாற்றங்களை வழங்கப்போகிறார்.

இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் முதன்மையான பலன் அடையும் ராசி உங்கள் ராசிதான். ஏனென்றால், ஏழரைச்சனி உங்களுக்கு விலகப்போகிறது. வெற்றி மீது வெற்றி குவியவும், விரும்பியபடியே பணத் தேவைகள் பூர்த்தியாகவும், சுற்றியிருப்பவர்களின் ஆதரவு கிடைக் கவும், திருநள்ளாறு சென்று சனீஸ்வர பகவானை வழிபட்டு, சனிக்கவசம் பாடி வழிபட்டு, அன்னதானம், வஸ்திர தானம் செய்து வருவது நல்லது.

அதன்பிறகு, சிவகங்கை மாவட்டம் கீழச்சீவல்பட்டிக்கு அருகில் உள்ள இரணிïர் ஆட்கொண்ட நாதர், சிவபுரந்தேவியை பூக்கொண்டும், பாக்கொண்டும் வழிபட்டு, வருவது மூலம் வளர்ச்சி மீது வளர்ச்சி காணலாம்.

மந்தன் பார்வையால் ஏற்படும் மகத்தான மற்றங்கள்

உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப்போகும் சனிபகவானின் பார்வை 5, 9, 12 ஆகிய இடங்களைப் பார்த்து புனிதமடைய வைக்கிறது. 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பார்ப்பதால் எண்ணற்ற மாற்றங்கள் திடீர் திடீரென்று வந்து சேரலாம். பொதுவாக, 6 க்கு அதிபதி ஐந்தாமிடத்தைப்பார்த்தால் பிள்ளைகள் வழியில் கல்யாணம் செய்வதற்கோ, கடல் தாண்டிச் செல்வதற்கோ கடன் வாங்கும் சூழ்நிலைகள் உருவாகலாம்.

ஒன்பதாம் இடத்தைச் சனி பார்ப்பதால் முன்னோர் சொத்துகள் முறையாக கைக்கு வந்து சேரும். இதுவரை பாசம் செலுத்தாத பெற்றோர்கள் இனி ஆசையோடு பேச முன்வருவர்.

சனியின் பார்வை பனிரெண்டாம் இடத்தில் பதிவதால் விரயங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டினால் சேமிக்க இயலும். வீடு, இடம் வாங்குவதாக இருந்தால் ஜாதகத்தில் பூமிகாரகன் பலம் பெறும் நேரம் எது என்பதை ஆராய்ந்து வாங்குவது நல்லது.

குருப்பெயர்ச்சி காலம்


சுமார் 2 1/2 ஆண்டுகள் துலாம் ராசியில் சஞ்சரிக்க வேண்டிய சனிபகவான் கூடுதலாகவே சில மாதங்கள் அந்த ராசியில் சஞ்சரிக்கிறார். இக்காலத்தில் மூன்று முறை குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. 17-5-2012 ல் ரிஷப ராசியிலும், 28-5-2013 ல் மிதுன ராசியிலும், 13-6-2012 ல் கடக ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். தாய்வழி ஆதரவு கூடும். நிலம் வாங்குவதில் முதலீடு செய்வீர்கள். எதிரிகள் சரணடைந்து இயல்பான வாழ்க்கைக்கு ஒத்துழைப்புச் செய்வர்.

மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே, உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் எண்ணம் ஒரு சிலருக்கு உருவாகலாம். வெளிïர் அல்லது வெளிநாட்டு பயணங்கள் விரும்பும் விதத்தில் அமையும்.

கடக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவாகிறது. இக்காலத்தில் வரவும், செலவும் சமமாகும். கடிதம் கனிந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் எதிர்பார்த்தபடி அமையும். வீண்பழி சுமத்தியவர்கள் விலகுவார்கள்.

அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இழப்புகளை ஈடுசெய்ய வாய்ப்புகள் கைகூடி வரும். இதுவரை தொழில், தொழில் என்று அலைந்து, பலருடன் கூட்டுச் சேர்ந்து ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு இனி நல்ல நிலை உருவாகப் போகிறது.

ராகு-கேது பெயர்ச்சி காலம்!

2.12.2012-ல் துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 21.6.2014-ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலா வரப்போகிறார்கள்.

முதல் ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு சிகரத்தை எட்டுவீர்கள். கோவில் திருப்பணிகளில் ஆர்வம் கூடும். வழக்குகளில் வெற்றி கிட்டும். வாய்தாக்கள் ஓயும்.

அடுத்து ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஆயினும், ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்க சர்ப்ப சாந்தியை யோக பலம் பெற்ற நாளில் செய்வது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் பிரிந்தாலும், புதியவர்கள் வந்திணைவர்.

சனியின் வக்ரகாலம் பொற்காலமாக மாற!

துலாம் ராசியில் உச்சம் பெறும் சனி ஐந்து முறை வக்ரமடைந்து, வக்ரமடைந்து நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 6, 7-க்கு அதிபதியாக சனி விளங்குவதால், இந்த வக்ரம் நன்மையே கொடுக்கும் என்றாலும், குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்கலாம். எதிரிகள் குணம் மாறிச் செயல்படுவர். ஏற்றுள்ள தொழில், உத்யோகத்தில் நல்ல மாற்றங் கள் வந்து சேரும். அருகில் இருப்பவரை அனுசரித்துச் செல்வது சச்சரவை தவிர்க்கும். ஆலய வழிபாட்டில் ஆனைமுகப் பெருமானுக்கு வெற்றி (வாகை) மாலை சூட்டுங்கள். கட்டாயம் உங்கள் கனவுகள் நனவாகும்.

சனியின் சஞ்சாரப் பலன்கள்!

முன்னேற்றத்தை வழங்குமா? மூன்றாமிடத்துச் சனி!

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், இப்பொழுது மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதுவும் உச்சம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிக்கு 6, 7-க்கு அதிபதியான சனி பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்பொழுது, எதிர்ப்புகளை தூளாக்குவார். பொறுப்புகளை கைகளில் கொடுத்து பொன்னான எதிர்காலத்தையும் வழங்குவார்.

`மூன்றில் சனி வந்தால்
முன்னேற்றம் கூடுமென்பார்!
வேண்டுகிற விதத்தினிலே,
வீடு, மனை சுகம் வாய்க்கும்!
தோன்றும் புதிய தொழில்,
தொகை-வரவும் அதிகரிக்கும்!
காண்பவர்கள் போற்றும் விதம்,
காசினியில் பதவி வரும்!'

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் உங்களுக்கு எல்லாக்குறைகளும் இனி தீர்ந்து, இதயம் மகிழும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறப் போகின்றன. வீடு, மனை வாய்க்கும், வியக்கும் விதம் பதவி வரும். தேடும் தெய்வ தரிசனத்தை மட்டும் விடாது வழிபாடு செய்யுங்கள்.

தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!

ஏழரைச் சனியின் ஆதிக்கம் விலகும் நேரமிது. எனவே, சனி விலகி சந்தோஷத்தை நளனுக்கு வழங்கிய இடமான திருநள்ளாறு மற்றும் திருக்கொள்ளிக்காடு ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வருவது நல்லது. பிரதோஷ வழிபாடு செய்வதன் மூலமும் பெருமைகளைக் காணலாம். சிறப்பு வழிபாடாக, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியை நோக்கி வாருங்கள். அவரது சந்நதியில்,

`தும்பிக்கை கொண்டவனே!
தூதாகச் சென்றவனே!
நம்பிக்கை கொண்டு
நானுன்னைத் தொழுகின்றேன்
அம்புவியில் எனக்கு வரும்
அன்றாடப் பிரச்சினையை,
இன்பமுடன் தீர்த்து வைக்க
எழுந்து வா கற்பகமே!'

என்று பாடினால், நம்பிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.



சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 12:20 pm

கன்னி

உத்ரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

இரண்டாமிடத்தில் சனி! இலாபம் குவியும் இனி!!

சகலகலா வல்லவர்களாக இருந்தாலும், சாதுவைப் போல காட்சியளிக்கும் கன்னி ராசி நேயர்களே!

நீங்கள் புதனின் ஆதிக்கத்தைப் பெற்றவர்கள். எனவே, புத்திசாலித்தனத்திற்கு சொந்தக்காரர்கள். மற்றவர்கள் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே எடை போடுவதில் பலே கெட்டிக்காரர்களாக நீங்கள் விளங்கினாலும், சில சமயங்களில் ஏமாற்றங்களையும் பெரிய அளவில் சந்தித்து விடு வீர்கள். வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, அதிகபட்சமான பொருத்தம் இருப்பதோடு, திருமண நாள் குறிக்கும் பொழுதும், பொருத்தமான நாளாக அமைந்தால் தான் வருத்தமில்லாத வாழ்க்கை அமையும்.

குறிப்பாக, உங்கள் ராசிநாதன் புதன் இருக்கும் சார பலமறிந்து பரிகாரங்களைச் செய்தால் தொழில் வளம் மேலோங்கும். உங்கள் ராசிநாதன் புதன் நவாம்சத்தில் இருக்கும் நிலையறிந்து, அதைப் பார்க்கும் கிரகத்தையும், அதோடு இணைந்திருக்கும் கிரகத்தையும் சேர்த்து ஆராய்ந்து, அதற்குரிய எண்ணின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும் அமைத்துக் கொண்டால், வாழ்க்கை வளமாக அமையும்.

இப்படிப்பட்ட, குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

லாபத்தைக் குவிக்குமா? இரண்டாமிடத்துச் சனி!

மார்கழி 5-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சனி சஞ்சரிக்கப் போகிறார். இதுவரை ஜென்ம ராசியில் சஞ்சரித்து சிரமங்களையும், சிக்கல்களையும் கொடுத்திருக் கலாம். சிந்திக்காது செய்த காரியங்களால் மனநிம்மதி குறைந்திருக்கலாம். இனி இந்த நிலைமை மாறி பொருளாதார வளர்ச்சி கூடும்.

இரண்டாமிடம் சனிக்கு உச்ச வீடாகும். எனவே, உச்சம் பெற்ற சனி, இனி ஒப்பற்ற வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். லட்சம் லட்சமாக சம்பாதிக்க கூட்டாளிகள் வந்திணைவர். அங்கிருந்து கொண்டு, 4, 8, 11 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப் படுத்துகிறார். எனவே, தாய், வாகனம், சுகங்கள், இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்பு, உடல்நிலை, வியாபாரம், வீடு மாற்றங்கள், பயணங்கள், இளைய சகோதரம் ஆகியவற்றிற் குரிய ஆதிபத்யங்களில் எல்லாம் நல்ல மாற்றங்களை வழங்கப்போகிறார்.

இந்த இரண்டாமிடத்துச் சனிப் பெயர்ச்சியால் எல்லாவிதத்திலும் நன்மை கிடைத்தாலும், ஒரு சில வழிகளில் மன அமைதி குறையலாம். குறிப்பாக வாக்கு ஸ்தானம் இரண்டாமிடம் என்பதால், பிறருக்கு வாக்குக் கொடுக்கும் முன் யோசித்துச் செய்வது நல்லது.

இதுபோன்ற காலங்களில் வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரை வழிபட்டு வருவது நல்லது. வாழைப்பழ விளக்கேற்றியும், வெற்றிலை மாலை சூட்டியும் வழிபாடு செய்யலாம். சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் உள்ள கூடலழகிய சுந்தரராஜப் பெருமாள், சுந்தரவல்லித் தாயார் சந்நிதிக்குச் சென்று வழிபட்டு அங்குள்ள வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள்.

மந்தன் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனியின் பார்வை 4, 8, 11 ஆகிய இடங்களில் பதிவதால் வீடு வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை போதும் என்று சொல்லி விருப்ப ஓய்வு பெற்று, வீட்டிற்கு வந்து நல்லதோர் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வாகன மாற்றம் செய்து மகிழும் நேரமிது. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். கட்டிய வீட்டை பழுதுபார்ப்பதும், கெட்டிமேளம் கொட்டுவதும் இந்த நேரத்தில் தான்.

எட்டாமிடத்தைச் சனி பார்ப்பதால் ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள், நாடு மாற்றங்கள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் உத்யோக வாய்ப்பு உருவாகி, வாயில் கதவைத் தட்டும். உச்ச சனியின் பார்வை அஷ்டமத்தில் பதிவது நன்மைதான். ஆறுக்கு அதிபதி எட்டாமிடத்தைப் பார்ப்பதால் விபரீத ராஜயோகம் செயல் படும் அல்லவா? எனவே, திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

குருப்பெயர்ச்சி காலம்!

சுமார் 2 1/2 ஆண்டுகள் துலாம் ராசியில் சஞ்சரிக்க வேண்டிய சனி பகவான் கூடுதலாகவே சில மாதங்கள் அந்த ராசியில் சஞ்சரிக்கிறார். இக்காலத்தில் மூன்று முறை குருபெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. 17.5.2012-ல் ரிஷப ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். 28.5.2013-ல் மிதுன ராசியில் குரு உலாவரப் போகிறார். 13.6.2014-ல் குரு கடக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.

ரிஷப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே, உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சகோதர உறவு பலப்படும்.

மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதாரம் பெருகும், பூமியோகம் கிட்டும். அருளாளர்களின் தொடர்பால் அனைத்து காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். அதன் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால் உத்யோகத்தில் முன்னேற்றங்கள் வந்து சேரலாம். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

இக்காலத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பட்டமங்கலத்திற்குச் சென்று அங்கு உள்ள திசைமாறிய தென்முக கடவுளை வழிபட்டு வருவது நல்லது.

கடக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும் நேரமிது. திருமண மானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் நேரம் இது.

ராகு-கேது பெயர்ச்சி காலம்!

2.12.2012-ல் துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 21.6.2014-ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலாவரப் போகிறார்கள்.

முதல் ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் இரண்டாமிடத்து கேதுவால் உங்கள் முன்னேற்றங் கள் பிறர் கண்படும் விதத்தில் அமையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அஷ்டமத்து கேதுவால் அலைச்சல் ஏற்பட்டாலும், ஆதாயங்கள் கிடைக்கும். உரிமையோடு பழகியவர்கள் உங்களை விட்டு விலகினாலும், மீண்டும் வந்து இணைவர்.

அடுத்த ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் எதிர்பார்த்தபடியே இடமாற்றங்கள் உருவாகும். கூட்டாளிகள் விலகுவர். தனித்தியங்கி செயல்பட்டு, தனக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்துக் காட்டுவீர்கள். கேதுவின் பலத்தால் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதும், குழந்தைகளின் நலன் கருதி தங்கம், வெள்ளிகளை வாங்கும் சூழ்நிலையும் உருவாகும்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற!

துலாம் ராசியில் உச்சம் பெறும் சனி ஐந்து முறை வக்ரமடைந்து நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவதால் பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையானவற்றில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்யோக மாற்றம் திடீரென ஏற்படும். இலாகா மாற்றம், இடமாற்றம் எதிர் பார்த்தபடி அமைய இக்காலத்தில் முறையான பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. யோக பலம் பெற்ற நாளில், யோக எண்களின் அடிப்படையில் `ஸ்ரீ ராமஜெயம்' மாலை கட்டி அனுமனுக்கு அணிவிக்கலாம். நவக்கிரக விநாயகர் படம் மற்றும் சாப விமோசனம் படங்களை பூஜை அறையில் வைத்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

சனியின் சஞ்சாரப் பலன்கள்!

தனவரவில் தடைகளை நீக்குமா இந்தச்சனி!

இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த சனி பகவான், இப்பொழுது தன ஸ்தானம் எனப்படும் இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இது நல்ல இடம்தான். அதுவும் பொருளாதாரத்தை அதிகரிக்கச் செய்யும் இடம். பொருளாதாரத்தை வளர்ச்சி யடைய வைக்கும் இடத்தில் சனி சஞ்சரித்தால், அதனால் பண பலம் அதிகரிக்குமா, அல்லது குறையுமா என்ற சிந்தனை மேலோங்கியிருக்கலாம்.

உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடத்திற்கு அதிபதியானவர் சனி, பஞ்சமாதிபதி 2-ல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம் இல்லாத வாழ்க்கை அமையும் என்பது நியதி.

இரண்டில் சனி நின்றால்
எண்ணற்ற லாபம் வரும்!
வறண்ட பாறையிலும்
வற்றாத நீர் ஊறும்!
திரண்ட செல்வமுடன்
தித்திக்கும் வாழ்வமையும்!
பரந்த உலகத்தில்
பதவிகளும் வந்திடுமாம்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் தொழிலில் லாபத்தை அள்ளி வழங்கி எழிலான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறது இந்தச் சனிப் பெயர்ச்சி. காகத்திற்கு சோறிட்டுக் கனிவான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு, கவசம் பாடி, கைகூப்பி தொழுவ தால் நினைத்த காரியமெல்லாம் நிறைவேறும்.

தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!

ஏழரைச்சனியில் ஜென்மச்சனி விலகி குடும்பச் சனி தொடங்கும் நேரமிது. இந்த நேரத்தில் சனிக் கிழமைதோறும் விரதமிருந்து சனி கவசம் பாடி, சந்நிதியில் ஜோடி தீபம் ஏற்றினால் மணியான வாழ்க்கை மலரும். சனியின் சந்நிதியில்,

கலியுகம் தன்னில்
கவலைகள் போக்க,
வழியைக் காட்டும்
வல்லவன் சனியே!
இனிமேல் துயரம் இல்லாதிருக்க,
உனையே துதித்தேன்!
உயர்வினைத் தருக!

என்று பாடுங்கள்.

சிறப்பு வழிபாடாக, புதுக்கோட்டை மாவட்டம் பில்லமங்கலத்தில் உள்ள மகிஷாசுர மர்த்தனியின் அவதாரமான பொன்னழகி அம்மனை யோக பலம் பெற்ற நாளில் வழிபட்டு வாருங்கள். எந்நாளும் இனிமை காணலாம்.



சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 12:23 pm

துலாம்

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)

ஜென்ம ராசியில் சனி! சிந்தித்துச் செயல்பட வேண்டும் இனி!

எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் ஆற்றலைப் பெற்ற துலாம் ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதனாக சுக்ரன் விளங்குவதால், எல்லாவிதமான சுகங்களையும் நீங்கள் அனுபவிக்க ஆசைப்படுவீர்கள். அறிமுகமானவர்கள் மட்டுமல்லாமல், அறிமுகமில்லாதவர் கள் கூட உங்களிடம் நெருங்கிப் பழக துடிப்பார்கள். காரணம், உங்கள் அணுகுமுறை மற்றவர்களை கவருவது தான்.

சுக்ர பலம் பெற்ற மனைவி உங்களுக்கு வாய்க்கும் பொழுது தான், வாழ்க்கையில் சந்தோஷங்களை மட்டுமே நீங்கள் சந்திக்க முடிகிறது.

நீதிக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் பாதிக்கும் பொழுது மட்டுமே பயபக்தியோடு சாமி கும்பிடுவீர்கள். அந்த வழிபாட்டில் அதிக கவனம் செலுத்தினால் தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.

குறிப்பாக உங்கள் ராசிநாதன் சுக்ரன் இருக்கும் சாரபலமறிந்து, சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்திக் கேற்ப பரிகாரங்களைச் செய்தால் ஏழரைச் சனி காலத்தில் கூட நீங்கள் இன்பங்களை வரவழைத்துக் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஏழரைச் சனியில் இது ஜென்மச்சனி!

மார்கழி 5-ம் தேதி முதல் உங்கள் ராசியான துலாம் ராசியிலேயே சனி சஞ்சரித்து உச்சம் பெறுகிறார். இதன் விளைவாக அதன் பார்வை 3, 7, 10 ஆகிய இடங்களில் பதிவதால் சகோதரர், சகாயம், களத்திரம், பயணம், தொழில், உத்யோகம், செயல்பாடுகள் ஆகியவற் றிற்குரிய ஆதிபத்யங்களில் எல்லாம் எண்ணற்ற மாற்றங்களை வழங்கப் போகிறார்.

உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக இருப்பதால், சனி உங்கள் ராசியில் உச்சம் பெறும் பொழுது குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலத் தொல்லைகள் உருவாகலாம். இருப்பினும் உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்குச் சனி நட்புக் கிரகம் என்பதால், முறையான சில வழிபாடுகளை வைத்துக் கொண்டால் உங்கள் முன்னேற்றத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

இதுபோன்ற சனியின் ஆதிக்கக் காலங்களில் ஆதியந்தப்பிரபு இருக்கும் ஆலயங்களில் நீங்கள் அடியெடுத்து வைக்கலாம். இல்லத்து பூஜையறையில் அந்தப் படத்தை வைத்து வெற்றிலையும், அருகம்புல்லும் இணைந்த மாலையை அதற்குச் சூட்டினால் வெற்றிகள் வந்து சேரும்.

சிறப்பு வழிபாடாக காரைக்குடி அருகில் உள்ள கண்டரமாணிக்கம் என்ற ஊருக்கு மிக அருகில் அமைந்துள்ள கொக்கரத்தி என்ற ஊரில் இருந்து அருள் வழங்கும் வன்புகழ் நாராயணசாமியை வழிபாடு செய்து வாருங்கள். தங்கு தடைகள் அகலும். தன லாபமும் குவியும்.

பொதுவாக உச்ச சனியை குரு பார்ப்பதால் குருப் பெயர்ச்சி வரை மலை போல் வந்து கொண்டிருந்த துயர் பனிபோல் விலகும். அதற்குப் பிறகு மகிழ்ச்சியை மட்டுமே நிரந்தரமாக்கிக் கொள்ள இதுபோன்ற வழிபாடுகள் தான் உங்களுக்குத் தேவை.

மந்தன் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்

உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை 3, 7, 10 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே, உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்க அதிக அளவில் பிரயாசை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்னும் 2 1/2 ஆண்டுகட்கும் மேலாக தங்கி யிருந்து அங்கு ஆட்சி செய்யப் போகிறார். எனவே, அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே அல்லல்களிலிருந்து விடுபட இயலும்.

பொதுவாக உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள் அடுத்தவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவி செய்து அவர்களது வாழ்த்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

7-ம் இடத்தைச் சனி பார்ப்பதால் இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். இருந்தாலும் மணம் முடிக்கும் இடம் நல்ல இடம் தானா என்று ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். இல்லையேல் மறுபடி, மறுபடி பிரச்சினைகள் எழலாம். தொழில் புரிபவர்கள் பணியாளர்களை மாற்றும் எண்ணம் மேலோங்கும். அதுமட்டுமல்ல பங்கு தாரர்களையும் மாற்றுவீர்கள். சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் வேலைப்பளு கூடும். குடும்பச் சுமையும் அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலுமா என்பது சந்தேகம் தான்.

குருப்பெயர்ச்சிக் காலம்!


சனி துலாம் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது மூன்று முறை குருப்பெயர்ச்சி நடை பெறுகிறது. 17.5.2012-ல் ரிஷப ராசியிலும், 28.5.2013-ல் மிதுன ராசியிலும், 13.6.2014-ல் கடக ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

ரிஷப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் திருப்தி ஏற்படும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது, துரிதமாக நடைபெறும். பூமி வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். புதிய இல்லம் கட்டி குடியேறும் வாய்ப்பு கிட்டும்.

மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப் படுத்தும். பேரும், புகழும், பெருமையும் சேரும். அரசியல் அனுகூலம் உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் ஆதாயம் கிடைக்கும்.

கடக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால் கல்யாண கனவுகள் நனவாகும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பகல்-இரவாக பாடுபட்டதற்கேற்ற பலன்களும் வந்து சேரும்.

இதுபோன்ற காலங்களில் நந்தீஸ்வரர் வழிபாட்டை முறையாக மேற்கொள்வது நல்லது. புதுக்கோட்டை மாவட்டம் மலையக் கோவிலுக்குச் சென்று, அங்கு ஒரே இடத்தில் வீற்றிருக்கும் ஐந்து ஈஸ்வரர்களுக்கான விக்னேஷ்வரர், நந்தீஸ்வரர், சர்வேஸ்வரர், முனீஷ் வரர், சனீஸ்வரர் ஆகியோரையும், அறம் வளர்த்த நாயகியையும், முருகப் பெருமானையும் வழிபட்டு வந்தால் முன்னேற்றங்கள் தடையின்றி வந்து சேரும்!

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

2.12.2012-ல் துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 21.6.2014-ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலா வரப்போகிறார்கள்.

முதல் ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் திடீர் திடீரென முடிவுகளை மாற்றிக் கொள்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிப் போகலாம். சர்ப்ப தோஷம் அதிகமாக இருப்பதால் முறையாக சர்ப்ப சாந்தியைச் செய்து கொண்டால் தான் முன்னேற்றத்திற்கு வழிபிறக்கும்.

அடுத்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தெய்வ திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். கைநிறைய குவித்த பொருளைக் கொண்டு, கட்டிடப் பணியைத் தொடர ஆர்வம் காட்டுவீர்கள். உத்யோகஸ்தர்கள் வி.ஆர்.எஸ். வாங் கும் வாய்ப்பு உருவாகும். திசை மாறிய தெய்வங்களை வழிபட்டால், தித்திக்கும் வாழ்க்கை அமையும்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற!

உங்கள் ராசியில் உச்சமடையும் சனி ஐந்துமுறை வக்ரமடைந்து நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான சனி வக்ரமடைவதால், ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்பட்டு அகலும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படா மலிருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் எடுக்கும் திடீர் முடிவுகள் உங்களுக்கு பிரச்சினைகளை உருவாக்கலாம். பூமிகாரகனின் ஆலயத்திற்குச் செல்வதன் மூலமும், பூமிநாத சுவாமியை வழிபடுவதன் மூலமும் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள இயலும்.

சனியின் சஞ்சாரப் பலன்கள்!

சிக்கல்களை நீக்குமா? இல்லை வரவழைக்குமா?

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்பொழுது ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். இது உடல்நலம், அறிவாற்றல், புகழ், கீர்த்தி, பொறுப்புகள் ஆகியவற்றைக் குறிக்கும் இடமாகும். அங்கிருந்து கொண்டு 3, 7, 10 ஆகிய இடங்களையும் பார்த்துப் புனிதமடைய வைக்கிறார்.

ஜென்மத்தில் சனி வந்தால்
சிக்கல்களே வரும் என்பார்!
மன்பதையில் துலாத்தினிலே
மந்தனவன் வந்தாலோ
உச்சம் பெறுவதனால்
ஒரு குறையும் வராது!
எச்சரிக்கை யோடிருந்தால்
எந்நாளும் இன்பம் வரும்!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. எனவே, 24 மணி நேரமும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரமே இந்நேரமாகும். கல்வி கற்பவர்கள் கவனக் குறைவாக இருந்தால் தேர்வில் வெற்றிபெற இயலாது.

எனவே, எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செய்யுங் கள். அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று விநாயகப் பெருமானையும், அனுமானையும், சனீஸ்வரரையும் அர்ச்சித்து வழிபட்டு வாருங்கள். அர்ச்சனைகள் செய் தால் பிரச்சினைகள் தீரும்.

தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!

சனியை வழிபட்டால் சந்தோஷங்கள் வந்து சேரும். இனிய வாழ்க்கைக்கு இது உத்தரவாதமென்று முன்னேற்றங்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படை யில் வார வழிபாடாக, வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தால் இன்பங்கள் வந்து சேரும்.

சிறப்பு வழிபாடாக, மதுரை அருகிலுள்ள திருமோகூர் சென்று சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வருவதோடு, காரைக்குடி அருகில் உள்ள அரியக்குடிக்கும் சென்று
திருமாலையும், இலக்குமியையும் வழிபட்டு வந்தால், தித்திக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும். அங்குள்ள அனுமன் சந்நிதியில்,

`அஞ்சனை பெற்ற திருமகனே!
அருகில் வந்தே துதித்திட்டேன்!
நெஞ்சில் கவலை போக்கிடுவாய்!
நிலையாய்ச் செல்வம் அளித்திடுவாய்!'

என்று பாடுங்கள். எண்ணங்கள் நிறைவேறும்.



சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 12:26 pm

விருச்சிகம்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந. நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)

ஏழரை சனியின் தொடக்கம் இனி!
எதிர்பார்த்தது எல்லாம் நடக்கும் இனி!


விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால், முருகப்பெருமானின் அருளுக்கும், அம்பிகை யின் அருளுக்கும் முழுமையாக பாத்திரமானவர்களாக விளங்குவீர்கள். வாக்கு பலிதமும், கனவு பலிதமும் உங்கள் வாழ்க்கையை வழி நடத்தி செல்கிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொள்வீர்கள்.

ஆண்டவனை பற்றியும், ஆண்டு கொண்டிருப்பவர்களை பற்றியும் அடிக்கடி சிந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் நீங்கள் தான். உங்கள் யோசனைகளை கேட்டு நடந்தவர்கள் வாழ்க்கையின் வெற்றி படிக்கட்டின் விளிம்பில் ஏறி நிற்பதால், உங்களைச் சுற்றி ஒரு பெரும் கூட்டமே இருக்கும்.

உங்களுக்கு இப்பொழுது, ஏழரைச்சனி தொடங்கி விட்டது. மற்ற ராசிக் காரர்களை போல, நீங்கள் பயப்படத்தேவையில்லை. உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக சனி விளங்குகிறார். சகாய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்கும் சனி விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சுகமாக வாழ வழி வகுப்பார். அதற்கு தேவையான செலவுகளுக்கு ஏற்ப வரவுகளையும் வரவழைத்து கொடுப்பார்.

இப்படிப்பட்ட குணங்களை பெற்ற உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதை பற்றி பார்ப்போம்.

பண வரவைப்பெருக்கும் 12-ம் இடத்து சனி!

மார்கழி 5-ம் தேதி முதல் துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கப் போகிறார். அது உங்கள் ராசிக்கு 12-வது இடமாகும். அந்த இடத்தில் சனி உச்சம் பெறுவதால் யோகம் தான். அங்கிருந்து கொண்டு 2, 6, 9 ஆகிய இடங்களை பார்த்து புனிதப்படுத்துகிறார்.

எனவே குடும்பம், வாக்கு, தனம், எதிர்ப்பு, கடன், பூர்வ புண்ணியம், தந்தை, ஜீவன வகை, வாகன யோகம், உத்யோக அனுகூலம், தொழில் விருத்தி, ஆரோக்கியம் ஆகிய இடங் களுக்குரிய ஆதிபத்தியங்களை நல்ல முறையில் செயல்படுத்தப்போகிறார்.

பொதுவாக இதுபோன்று ஏழரைச்சனி தொடங்கும் நேரத்தில் தெய்வ வழிபாடு தான் உங்களுக்கு தித்திக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்து கொடுக்கும். ஆனைமுக பெருமானையும், அனுமனையும், சனீஸ்வரரையும் விடாது வழிபடுவதோடு, பிரதோஷம் அன்று நந்தீஸ்வரர் வழிபாட்டையும், பவுர்ணமி அன்று கிரிவல வழிபாட்டையும் மேற் கொள்ளுங்கள்.

மந்தன் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!

உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 2, 6, 9 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே குடும்பச்சுமை கூடும். கொள்கை பிடிப்பை சில சமயங்களில் தளர்த்தி கொள்ளும் சூழ்நிலை உருவாகும். அனுசரித்து சென்றால் இந்த காலத்தில் உங்களுக்கு ஆதாயங்கள் அதிகமாக இருக்கும். திருமணத்தடை அகலும். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவுக்கு வரும். நீண்ட நாளாக பேசி விலகிப்போன கல்யாண காரியம் மீண்டும் வந்து முடிவாவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

ஆறாம் இடத்தை பார்க்கும் சனியால் அற்புத யோகம் உங்களுக்கு காத்திருக்கிறது. 3-க்கு அதிபதி ஆறாமிடத்தை பார்க்கும் போது விபரீத ராஜயோக அடிப்படையில் எதிர்பாராத விதத்தில் நல்ல காரியங்கள் பல நடைபெற போகின்றன. அதே நேரத்தில் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் உறவினர் பகைகள் உருவாகலாம்.

இரக்க குணத்தை கடைப்பிடிக்கும் நீங்கள் இந்த பிரச்சினைகளை தீர்க்க, அரக்க குணத்தை கைக்கொள்ளாமல், ஆலய வழிபாட்டை கைக்கொள்ளுங்கள். தன பஞ்சமாதி பதி குரு என்பதால் முல்லைப்பூ மாலை சூட்டி, மஞ்சள் வண்ண வஸ்திரம் அணிவித்து குருவை வழிபட்டால் குழப்பங்களில் இருந்து நீங்கள் விடுபட இயலும். சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், தந்தை வழி உறவில் சில மாற்றங்களை காண்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேர புதிய வழி பிறக்கும். விலை உயர்ந்த பொருட்களையும், வீடு, இடம் வாங்கும் சூழ்நிலையையும் சனி உருவாக்குவார்.

குருப்பெயர்ச்சிக் காலம்

சனிப்பெயர்ச்சி காலத்தில் சுமார் 3 முறை குருப்பெயர்ச்சி ஆகிறது. 17-5-2012-ல் ரிஷப ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். 28-5-2013-ல் மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். 13-6-2014-ல் கடக ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் போது அதன் பார்வை பலத்தால் உடல் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். பணவரவு திருப்தி தரும். ஊர் மாற்றச் சிந்தனை கள் நல்ல முடிவிற்கு வரும். வெளிநாட்டுப் பயணத்திற்கான அறிகுறிகள் தோன்றும்.

மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை பலம் 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்ப ஒற்றுமை கூடும். செல்வாக்கு மேலோங்கும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதிக பொறுப்புகள் வந்து சேரும். வீடு கட்டிக் குடியேற வேண்டும் என்ற எண்ணம் பூர்த்தியாகும். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களால் வியக்கும் செய்தி ஒன்று வந்து சேரும். வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

கடக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை பலம் 1, 3, 7 ஆகிய இடங் களில் பதிவதால் எடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறும். இல்லத்தில் இருப்பவர்கள் உங்கள் உள்ளத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவர். வரன்கள் வாயில் தேடி வந்து நிற்கும். குரு பார்வையால் குதூகலங்கள் அதிகரிக்க தென்முகக் கடவுளை இன்முகத் தோடு வரவேற்பது நல்லது. எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கருகாவூர் சென்று அங்குள்ள முல்லை வனநாதர், கர்ப்ப ரட்சகாம்பிகை, அனுகூலம் தரும் நவக் கிரகம் மற்றும் யோக தட்சிணாமூர்த்தியை முறையாக வழிபட்டு வருவது நல்லது.

ராகு-கேது பெயர்ச்சிக்காலம்

2-12-2012-ல் துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார். 21-6-2014-ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலா வர போகிறார்கள். முதல் ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில் இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றங்கள் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். புகழ், கீர்த்தி மேலோங்கும். அருளாளர்களின் ஆலோசனைகளின் பெயரில் சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். தங்கம், வெள்ளி போன்றவற்றை தாராளமாக வாங்கி சேர்க்க உகந்த நேரமிது. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண் குழந்தைகளின் திருமணத்தை முன்னிட்டு, அதற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்தபடியே ஊதிய உயர்வு, பதவி உயர்வுகள் கிடைக்கலாம். வெளிநாட்டு பயணம் விரும்பியபடியே அமையும்.

அடுத்த ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் லாப ஸ்தானமும், புத்திர ஸ்தானமும் வலுவடை வதால் பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் கிடைக்கும். தொழிலில் பெரிய அளவில் லாபங்கள் வந்து சேரும். லட்சியத்தோடு வாழ்ந்த உங்கள் கரங்களில் லட்ச, லட்சமாக புரள இப்பொழுது புதிய தொழில் உருவாகும். வாகன மாற்றம் செய்ய முன் வருவீர்கள். சர்ப்ப சாந்தியை முறையாக செய்தால் சந்தோஷம் தானாகவே வந்து சேரும்.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற...

துலாம் ராசியில் உச்சம் பெறும் சனி 5 முறை வக்ரமடைந்து நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 3, 4-க்கு அதிபதியான சனி வக்ரம் பெறுவதால், ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது. பிறருக்கு வாக்கு கொடுக்கும் முன் யோசிப்பதும், பிரச்சினைகளை தீர வழி வகுக்கும் தெய்வங்களை இந்த காலங்களில் பூஜிப்பது யோகம் தரும். குறிப்பாக, குடும்ப பெரியவர்களை ஆலோசித்து எந்த முடிவெடுத்தாலும் வெற்றி தரும். ஒரு சொத்தை விற்றால் உடனடியாக மற்றொரு சொத்தை வாங்குவது நல்லது. திருநள்ளாறு, குச்சானூர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சிக் கோவில் ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று வாய்ப்பு இருக்கும் பொழுதெல்லாம் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

சனியின் சஞ்சாரப் பலன்கள்!

எண்ணியதை நிறைவேற்றும் 12-ம் இடத்து சனி!

இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், இப்பொழுது 12-ம் இடத்தில் சஞ்சரிக்க போகிறார். அதன் பார்வை பலம் உங்களுக்கு பக்கபலமாக அமையும். அதன் ஆதிபத்தியம் உங்களுக்கு போதிய அளவு வளர்ச்சியைக் கொடுக்கும்.

`பனிரெண்டில் சனி வந்தால்,
பயணத்தால் பலன் கிடைக்கும்!
இனி அமையும் புதிய தொழில்
லாபத்தை உருவாக்கும்!
அணி திகழும் ஈஸ்வரனை
அன்றாடம் வழிபட்டு,
துணிவோடு செயல்பட்டால்
தொடர்ந்து வரும் நலம் யாவும்!'

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, நிறைய வாய்ப்புகள் வந்து சேரப்போகிறது. புதிய ஒப்பந்தங் களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!

எண்ணங்களை எளிதில் செயலாக்குவது இறைவழிபாடு தான். நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் பார்த்து நாம் வழிபாடு செய்தால் உடனடியாக நமக்கு நற்பலன்கள் கிடைக்கும். அந்த அடிப்படையில், சிவகங்கை மாவட்டம் வைரன்பட்டிக்கு வாருங்கள். அங்குள்ள வளரொளி நாதர், வடிவுடையம்மன், வைரவர் ஆகியவற்றை வழிபடுவதோடு நர்த்தன விநாயகரையும், நந்தீஸ்வரரையும் பதிகம் பாடி வழிபாடு செய்யுங்கள். சனீஸ்வரர் சன்னிதியில்,

`சூரியன் மகனாய் வந்து,
சுகத்தினை வழங்கும் ஈசா!
காரிய வெற்றி காண,
கனிவுடன் அருளுவாயே!'

என்று பாடுங்கள். வெற்றி நிச்சயம் வந்து சேரும்.

செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபடுவதோடு, பவுர்ணமி அன்று நிலவு வழிபாடும் பண வரவை பெருக்கும்.



சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 12:29 pm

தனுசு

மூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள் யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)

பதினொராமிடத்தில் சனி!
பணத்தேவைகள் பூர்த்தியாகும் இனி!!


விருந்தினர்களை வரவேற்பால் திணறடிக்கும் தனுசு ராசி நேயர்களே!

நீங்கள் குருவின் ஆதிக்கம் பெற்றவர்கள். எனவே, எப்பொழுதும் உங்கள் சொல்லுக்கு ஒரு தனி மதிப்பிருக்கும். வாழ்க்கையின் நடுப்பகுதி தான் உங்களுக்கு வசந்தகாலம். உறவு பகையாவதும், பகை நட்பாவதும் உங்களுக்கு வாடிக்கை.

அசுர குரு சுக்ரன் உங்கள் ஆறாமிடத்துக்கு அதிபதியாக இருப்பதால், இணையும் வாழ்க்கைத் துணை இனியதாக அமைந்தால் தான் பணியில் தொய்வு இருக்காது. பார்போற்றும் வாழ்க்கை அமையும்.

முன்கோபத்தை நீங்கள் குறைத்துக் கொள்ளும்பொழுது தான், உங்களுக்கு முன்னேற் றங்கள் வந்துசேருகின்றன. நண்பர்களை நம்பி ஏமாறு வதில் நாற்பது சதவீதம் பேர் தனுசு ராசிக்காரர்களாகவே இருக்கிறார்கள். எனவே, பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கின்ற பொழுது, யோசித்து செய்வதே நல்லது.

குறிப்பாக, உங்கள் ராசிநாதன் குரு இருக்கும் சார பலமறிந்து, அதற்குரிய பரிகாரங்களை முறையாகச் செய்தால் முன்னேற்றங்களைநீங்கள் முறையாக வரவழைத்து கொள்ளலாம். அதே குரு நவாம்சத்தில் இருக்கும் நிலை அறிந்து, அதைப் பார்க்கும் கிரகத்தையும், அதோடு இணைந்த கிரகத்தையும் சேர்ந்து ஆராய்ந்து அந்த கிரகத்திற்குரிய எண்ணின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும் அமைத்துக் கொண்டால் புகழும் பெருகும். பொருளா தார விருத்தியும் அதிகரிக்கும். பதவி யோகங்களும் பெற்று பார்போற்றும் நிலை உருவாகும்.

இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி, சாதகமான பெயர்ச்சி தானா என்பதை பற்றிப் பார்ப்போம்.

நல்ல நிலையை உருவாக்கும் லாப ஸ்தானச் சனி

மார்கழி 5-ம் தேதி முதல் துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசியையும், ஐந்து, எட்டு ஆகிய (1, 5, 8) இடங்களையும் பார்க்கப் போகிறார். இதன் விளைவாக உடல்நலம், உற்சாகம், மாமன், மைத்துனர் வழி உதவி. பிள்ளைகளால் ஏற்பட்ட முன்னேற்றங்கள், பூர்வீக சொத்துக்களில் வரும் ஆதாயம், மறை முக நோய்கள், குடும்ப ஒற்றுமை, தொழில் மாற்றச் சிந்தனைகள், விரயங்கள் போன்ற ஆதிபத்தியங்களை சனி நிர்ணயிக்கப் போகிறார்.

ஆரோக்ய தொல்லைகளை சனி கொடுத்தாலும் கூட அன்றாட வரவு, செலவுகளை திருப்தியாக வைப்பார். வரவு வந்து கொண்டே இருக்கும். ஆயினும் வீண் விரயங்கள், தவிர்க்க முடியாததாக அமையும். பிள்ளைகளின் வழியில் ஏற்படும் பிரச்சனைகளை நாசுக்காக தீர்த்துக் கொள்வது நல்லது.

சனியின் லாப ஸ்தான சஞ்சாரம் ஒரு சிலருக்கு நீண்டதூர பயணங்களைக் கொடுக்க லாம். உத்யோகத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருப்பவர்கள், வி.ஆர்.எஸ். வாங்கலாமா? என்று யோசிக்கும் நேரமிது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஜாதகத்தையும் அலசி, ஆராய்ந்து, அதில் அஷ்டமாதிபதி, விரயாதிபதி ஆதிக்க திசை நடப்பவர்கள் அதிகம் பேர் இருந்தால் தொழில் செய்யும் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். லாபாதிபதி திசை நடப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தால் துணிந்து தொழில் தொடங்கலாம்.

கனிந்த மனத்திற்கு சொந்தக்காரரான நீங்கள் காக வாகனத்தானை கைகூப்பித் தொழ, சிறப்பு ஆலயங்களுக்குச் செல்வது நல்லது. திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர் பொங்கு சனிக்குரிய பலன்களை தங்கு தடையின்றி தருவதால், அவரை வழிபட்டு வருவது நல்லது.

மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்

ஜென்ம ராசியைப் பார்க்கும் சனி உடல் ஆரோக்கியத்திற்கு சில பாதிப்புகளைக் கொடுத்து அகற்றுவார். 1, 5, 8 ஆகிய மூன்று இடங்களிலும் சனியின் பார்வை பதிக்கின்றது. தனாதிபதியாகவும், சகாய ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் சனி தனவரவையும் கொடுத்து, வந்த மறுநிமிடமே செலவாகவும் வைப்பார். எனவே இக்காலத்தில் பெருந் தொகைகள் வரும்பொழுது உடனடியாக ஒரு நல்ல காரியத்திற்கு செலவிட வேண்டும்.

சனியின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வீக சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். புத்திர ஸ்தானம் வலுவடையாமல் இருக்கும் ஜாதகர்களுக்கு இக்காலத்தில் பிள்ளைகளால் சில பிரச்சினைகளை ஏற்கும் சூழ்நிலை உருவாகும். முறையாக வழிபாடுகளைச் செய்தால் மன அமைதி கிடைக்கும். திசை மாறிய தெய்வங்களை வழிபடுவதும் நல்லது.

அஷ்டம ஸ்தானத்தைச் சனி பார்ப்பதால் தொழில் கூட்டாளிகள் உங்களை விட்டு விலகலாம். வீடு மாற்றங்கள், உத்யோகத்தில் இலாகா மாற்றங்கள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். நோய்க்கான அறிகுறிகள் தோன்றும் பொழுதே மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

குருப்பெயர்ச்சிக் காலம்

சுமார் 2 1/2 ஆண்டுகளுக்கும் மேலாக துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். அப்பொழுது மூன்று முறை குருப் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.

17.5.2012-ல் ரிஷப ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். 28.5.2013-ல் மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். 13.6.2014-ல் கடக ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார்.

ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 2,10,12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே குடும்ப ஒற்றுமை கூடும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

பத்தாமிடத்தில் பார்வை பதிவதால் தொழில் வளம் சிறப்பாக நடக்கும். புதிய திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு பற்றிய செய்தி வந்து சேரும். அரசு வழியில் தடைபட்ட காரியங்கள் மளமளவென்று நடைபெறத் தொடங்கும்.

மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 1, 3, 11 ஆகிய இடங்களில் பதிவதால் உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர் பகை மாறும். வெளியில் சொல்ல முடியாமல் இருந்த நோய்கள் வேகம் குறைந்து வியப்பை உருவாக்கும். சகோதர ஒற்றுமை பலப்படும். கடல் பயணங்கள் கைகூடுவதற்கான வாய்ப்பு உண்டு.

கடக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது 2, 4, 12 ஆகிய இடங்களைப் பார்த்து புனிதப்படுத்துவதால் தாய்வழி ஆதரவு பெருகும். கட்டிய வீட்டில் மேல் மாடிகட்டி வாடகைக்கு விடலாம் என்ற எண்ணம் மேலோக்கும்.

இதுபோன்ற காலங்களில் வியாழக் கிழமை தோறும் விரதமிருந்து குரு தெட்சிணா மூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது. அது மட்டுமல்லாமல், அம்பிகை வழிபாட்டிலும் ஆர்வம் காட்டினால், இன்பங்களை மட்டுமே சந்திக்கலாம். காரைக்குடி அருகில் உள்ள கோவிலூர் கொற்றவாலீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று, அங்குள்ள உமாமகேஸ்வரரை உள்ளன்போடு வழிபட்டு வாருங்கள்.

ராகு-கேது பெயர்ச்சிக்காலம்

2.12.2012-ல் துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ் சரிக்கப் போகிறார்கள். 21.6.2014-ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலா வரப்போகிறார்கள்.

முதல் ராகு - கேது பெயர்ச்சி காலத்தில் முன்னேற்றங்கள் அதிகரிக்கும். வெளி நாட்டிலிருந்து வியக்கும் செய்தி வந்து சேரும். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்க முன் வருவீர்கள்.

அடுத்த ராகு, கேது பெயர்ச்சி காலத்தில் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும். வாகனம் வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். தாய்வழி ஆதாயம் உண்டு.

சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற...

துலாம் ராசியில் உச்சம் பெறும் சனி 5 முறை வக்ரமடைந்து, வக்ரமடைந்து நிவர்த்தி யாகிறார். உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியாகிறார். எனவே, இக்காலத்தில் பணப்புழக்கம் சரளமாக இருக்குமா? என்பது சந்தேகம் தான். ஒரு தொகை செலவழிந்தால் தான் மற்றொரு தொகை வந்து சேரும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கலாம். உடன் பிறப்புகள் உங்களை விட்டு விலகாதிருக்க அனுசரிப்புத் தேவை. பாகப் பிரிவினைகள் இழுபறி நிலையில் இருக்கலாம்.

சனியின் சஞ்சாரப் பலன்கள்!

லாப ஸ்தான சனி சேமிப்பை உயர்த்துமா?

இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இப்பொழுது, பதினொராமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். லாப ஸ்தானத்தில் உச்சம் பெறப்போவதால், பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பலாம். ஆதாயம் கூடும்.

`பதினொன்றில் சனி வந்தால்
பண வரவு அதிகரிக்கும்.
மதிப்பு மிகும், சமூகத்தில்
மரியாதை மிகக்கூடும்.
நதிபோல துயர் ஓடும்.
நலம் யாவும் தேடிவரும்,
விதிப் பயனால் எதிர்பார்க்கும்
வெளிநாட்டு யோகம் வரும்'

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில், வரவு அதிகரித்து வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் போகிறீர்கள். உறவு, பகை பாராமல் உதவி செய்யும் உங்களுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை ஏற்படுத்தும்.

தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!

லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் லாபம் பெருகவும், நலம் யாவும் வீடு வந்து சேரவும், தேக நலன் சிறப்பாக இருக்கவும் சிறப்பு வழிபாடாக, புதுக்கோட்டை மாவட்டம் குருவிக் கொண்டான்பட்டிக்கு அருகில் உள்ள சீரணிப்பட்டிக்குச் சென்று அங்குள்ள முத்துமாரி அம்மனை வழிபட்டு முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

வார வழிபாடாக, சனிக்கிழமை தோறும் சனீஸ்வரர் சந்நிதியில்,

நீலத்தில் பிரியம் வைத்த,
நிகரில்லாச் சனியே- என்றன்
வாழ்விற்கு வழியைக் காட்டு
வளர்ச்சியை நாளும் கூட்டு

என்று பாடி எள் தீபம் ஏற்றுங்கள். எண்ணங்கள் எளிதில் நிறை வேறும்.



சனிப்பெயர்ச்சி பலன்கள் - கணிப்பு: சிவல்புரி சிங்காரம் 16-12-2014 வரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக